புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினி மினி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
"விஸ்வரூபம்' படத்தில் கமலை தவிர மற்ற வேடங்களுக்கு இமேஜ் உள்ள நடிகர்கள் கிடையாது. இந்த வேடங்களுக்கு பிரபல நடிகர்களைப் பயன்படுத்தாதது ஏன் என்பதற்கு பதிலளித்தார் கமல்ஹாசன்: "" இமேஜ் உள்ள நடிகர்கள் எப்போதாவதுதான் என் படங்களுக்கு தேவைப்படுகிறார்கள். இந்தப் படத்தை பொறுத்தவரை இமேஜ் உள்ள நடிகர்கள் தேவைப்படவில்லை. கதையை நம்பி மட்டுமே நான் களம் இறங்கியிருக்கிறேன். படம் பார்த்தவர்கள் பலர் என்னை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்கள். அந்த உணர்வு ரசிகர்களுக்கும் ஏற்பட வேண்டும். நிச்சயம் ஏற்படும். குறித்த நேரத்தில் ஷூட்டிங் நடத்தி, முடிப்பது என் படங்களில் இயல்பாக நடக்கும் வேலையாக இருக்கும். அதை இமேஜ் உள்ள நடிகர்கள் செய்துக் கொடுப்பார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது'' என்றார் கமல்ஹாசன்.
நடிகர்கள் விஜய், ஜீவா உள்ளிட்டோருக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் பி.டி.செல்வகுமார் எழுதி, இயக்கும் படம் "ஒன்பதுல குரு'. விநய், லட்சுமிராய், சத்யன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "யுத்தம் செய்', "ஆரோகணம்' படத்துக்கு இசையமைத்த கே இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹாலிவுட்டில் வெளிவந்த "ஹேங் ஓவர்' படக் கதையின் தழுவலில் இப்படம் உருவாகி வருவதாக தகவல்....""இப்படியான செய்திகளை தொடர்ந்து இன்டர்நெட்டில் பரப்பி வருகிறார்கள். அதில் உண்மையில்லை. சிலவற்றின் தாக்கத்தால் சில கதைகள் உருவாகும். இந்த கதைக்கும் ஒரு தாக்கம் இருக்கிறது. அது என்ன என்பதை இப்போது சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். நீண்ட நாள்களுக்குப் பின் ஒன்றாக சந்திக்கும் நண்பர்கள், பாண்டிச்சேரிக்கு டூர் போகிறார்கள். அங்கு நடக்கும் நகைச்சுவை சம்பவங்கள்தான் கதை'' என்கிறார் பி.டி.செல்வகுமார்.
"விஸ்வரூபம்' படத்தில் கமலை தவிர மற்ற வேடங்களுக்கு இமேஜ் உள்ள நடிகர்கள் கிடையாது. இந்த வேடங்களுக்கு பிரபல நடிகர்களைப் பயன்படுத்தாதது ஏன் என்பதற்கு பதிலளித்தார் கமல்ஹாசன்: "" இமேஜ் உள்ள நடிகர்கள் எப்போதாவதுதான் என் படங்களுக்கு தேவைப்படுகிறார்கள். இந்தப் படத்தை பொறுத்தவரை இமேஜ் உள்ள நடிகர்கள் தேவைப்படவில்லை. கதையை நம்பி மட்டுமே நான் களம் இறங்கியிருக்கிறேன். படம் பார்த்தவர்கள் பலர் என்னை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்கள். அந்த உணர்வு ரசிகர்களுக்கும் ஏற்பட வேண்டும். நிச்சயம் ஏற்படும். குறித்த நேரத்தில் ஷூட்டிங் நடத்தி, முடிப்பது என் படங்களில் இயல்பாக நடக்கும் வேலையாக இருக்கும். அதை இமேஜ் உள்ள நடிகர்கள் செய்துக் கொடுப்பார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது'' என்றார் கமல்ஹாசன்.
நடிகர்கள் விஜய், ஜீவா உள்ளிட்டோருக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றி வரும் பி.டி.செல்வகுமார் எழுதி, இயக்கும் படம் "ஒன்பதுல குரு'. விநய், லட்சுமிராய், சத்யன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "யுத்தம் செய்', "ஆரோகணம்' படத்துக்கு இசையமைத்த கே இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹாலிவுட்டில் வெளிவந்த "ஹேங் ஓவர்' படக் கதையின் தழுவலில் இப்படம் உருவாகி வருவதாக தகவல்....""இப்படியான செய்திகளை தொடர்ந்து இன்டர்நெட்டில் பரப்பி வருகிறார்கள். அதில் உண்மையில்லை. சிலவற்றின் தாக்கத்தால் சில கதைகள் உருவாகும். இந்த கதைக்கும் ஒரு தாக்கம் இருக்கிறது. அது என்ன என்பதை இப்போது சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். நீண்ட நாள்களுக்குப் பின் ஒன்றாக சந்திக்கும் நண்பர்கள், பாண்டிச்சேரிக்கு டூர் போகிறார்கள். அங்கு நடக்கும் நகைச்சுவை சம்பவங்கள்தான் கதை'' என்கிறார் பி.டி.செல்வகுமார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் கின்ஸ்லின் இயக்கும் படம் "வத்திக்குச்சி'. சென்னை புறநகர் மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸின் சகோதரர் திலீபன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். சினிமாவில் நடிக்கும் அனுபவம் பற்றி திலீபனிடம் பேசுகையில், ""ஷேர் ஆட்டோ டிரைவராக இயக்குநர் நடிக்க அழைத்ததும் ஏற்றுக் கொண்டேன். உடனடியாக கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். ஒரு வருடம் ஷேர் ஆட்டோ டிரைவர்களுடன் பழகினேன். தினமும் இரண்டு மணி நேரம் ஆட்டோ ஓட்டக் கற்றேன். அது நல்ல அனுபவத்தை கொடுத்தது. என் அண்ணன் தயாரிக்கும் படம் என்பதால், எந்தச் சலுகையும் எனக்கு இல்லை. சினிமாவில் எல்லாமும் கிடைக்கும். ஆனால் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என அண்ணன் எனக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். நடிப்பில் அனுபவம் நிறைந்த அஞ்சலி, படப்பிடிப்பின் போது நிறைய டிப்ஸ் கொடுத்தார். சில காட்சிகளில் ரீடேக் போகும் போது, அஞ்சலி துணையாக இருந்தார். அது பயனுள்ளதாக இருந்தது'' என்றார் திலீபன்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
த்ரிஷாவை போல் பாவனாவும் சினிமாவில் பத்து வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பாவனா,
2002-இல் வெளிவந்த "நம்மள்' என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த பாவனா, 2006-இல் மிஷ்கின் இயக்கிய "சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். "தீபாவளி', "கூடல் நகர்' உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்த பாவனா, கன்னட, மலையாள சினிமாக்களுக்கே தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மலையாளத்தில் "எல்லோ', "ஹனிபி', "ஆங்கிரி பேர்டு' ஆகிய படங்களில் நடித்து வரும் பாவனாவிடம் பேசுகையில், ""பத்து வருடங்களை சினிமாவில் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. நான் நடிகையானதே வித்தியாசமான அனுபவம். எனக்கு கறுப்பு மேக்-அப் போட்டு டெஸ்ட் வைத்தார் இயக்குநர். அவருக்கு பிடித்து விட்டது. நடிக்க வைக்க ஒப்புக் கொண்டார். திருமணம் பற்றிதான் எல்லோரும் கேட்கிறார்கள். மணம் முடிந்தாலும் சினிமாவில் நடிப்பேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். காதல் பற்றி இப்போது பேச முடியாது'' என்றார்.
2002-இல் வெளிவந்த "நம்மள்' என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த பாவனா, 2006-இல் மிஷ்கின் இயக்கிய "சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். "தீபாவளி', "கூடல் நகர்' உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்த பாவனா, கன்னட, மலையாள சினிமாக்களுக்கே தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மலையாளத்தில் "எல்லோ', "ஹனிபி', "ஆங்கிரி பேர்டு' ஆகிய படங்களில் நடித்து வரும் பாவனாவிடம் பேசுகையில், ""பத்து வருடங்களை சினிமாவில் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. நான் நடிகையானதே வித்தியாசமான அனுபவம். எனக்கு கறுப்பு மேக்-அப் போட்டு டெஸ்ட் வைத்தார் இயக்குநர். அவருக்கு பிடித்து விட்டது. நடிக்க வைக்க ஒப்புக் கொண்டார். திருமணம் பற்றிதான் எல்லோரும் கேட்கிறார்கள். மணம் முடிந்தாலும் சினிமாவில் நடிப்பேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன். காதல் பற்றி இப்போது பேச முடியாது'' என்றார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வீரா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் "என் காதல் புதிது'. கதாநாயகனாக ராம் சத்யா நடிக்கிறார். உமாஸ்ரீ, நமீதா பிரமோத் ஹீரோயின்கள். ஜி.எம்.குமார், பாண்டியராஜன், "லொள்ளு சபா' ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரமேற்று நடிக்கின்றனர். "புன்னகை' வெங்கடேஷ் ஒளிப்பதிவில், புதுமுகம் சத்யதேவ் இசையமைக்கிறார். இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த, மாரீஷ்குமார் இக்கதையை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். அதென்ன "என் காதல் புதிது?' என்று கேட்டால், ""80 வருட தமிழ் சினிமாக்கள் எல்லாமும், ஆண்களின் பக்கத்தில் இருந்துதான் காதலைச் சொல்லியிருக்கிறது. காதல் தோல்விக்குப் பின் தாடி வளர்த்து, சோகமாக திரியும் காதலனைத்தான் படம் பிடித்திருக்கிறது. பெண்களின் பக்கம் போய், அவர்களின் நிலைமையை சொன்னதே இல்லை. காதலால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் எனஓர் ஆய்வறிக்கை சொன்ன செய்திதான் இந்த திரைக்கதைக்கான முதல் படி. காதல் தோல்வி பற்றி சோகம் காட்ட கூட, இந்த சமுதாயம் அவர்களை அனுமதிப்பதில்லை. அந்த விஷயத்தைதான் இதில் சொல்லியிருக்கிறேன். நிச்சயம் மாறுபட்ட சினிமாவாக இருக்கும்'' என்றார் இயக்குநர் மாரீஷ்குமார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"டெல்லி பெல்லி' ரீமேக் படத்தில் நடிக்க அழைத்ததும் அதை ஆபாச படம் என கூறி நடிக்க மறுத்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப கதை மாற்றப்பட்டிருக்கிறது என்று இயக்குநர் கண்ணன் சொன்னதையும் நம்பாமல், கதை கேட்டுதான் "சேட்டை' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ""ஹிந்தி "டெல்லி பெல்லி'யை தமிழில் எடுக்க போகிறேன். நீங்க நடிக்கிறீங்க'' என கண்ணன் சொன்னதும், ""இப்படியொரு படத்தில் பிளாஸ்டிக் கவரால் என் முகத்தை மூடி நடிக்க வைக்க போகிறீர்களா?'' என்று கேட்டேன். அந்த அளவுக்கு "சேட்டை' படத்தில் நடிக்க தயக்கம் காட்டினேன். ஹிந்தியில் ஆபாச வசனங்கள், காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. அப்படியொரு படம் தமிழ் சினிமாவுக்கு பொருந்துமா? என்று கேட்டேன். அதனால் நடிக்கவும் மறுத்தேன். தமிழ் கலாசாரத்துக்கு ஏற்ப கதையில் மாற்றம் இருக்கிறது என்று சொன்னார். அப்போதும் நம்பவில்லை. புதுக்கதையை கேட்ட பின்னர்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கான படமாக இது இருக்கும். ஆர்யா, அஞ்சலி, சந்தானம், பிரேம்ஜி ஆகியோரால் படம் வேறொரு இடத்துக்கு சென்றிருக்கிறது'' என தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஹன்சிகா.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்ட, மீனாவுக்கு மலையாளப் பட வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. மோகன்லால் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து இருக்கிறார். இது குறித்து மீனாவிடம் பேசுகையில், ""தமிழ் மற்றும் மலையாளப் பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நடிப்பில் பெரிய திருப்தி எற்பட்டவுடன்தான் திருமண வாழ்க்கைக்குள் புகுந்தேன். திருமணத்துக்கு பின் சினிமா வாய்ப்புகளை நான் பெரிதும் விரும்பவில்லை. குடும்ப வாழ்க்கையில் ஆர்வமாக இருக்கிறேன். இரண்டு வயது மகள் நைனிகாவை கவனித்து வருகிறேன். இது தவிர மற்ற வேலைகளுக்கும் நேரம் சரியாக இருக்கிறது. லால் மனைவியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் கதைப்படி அதில் நிறைய ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கூட்டமாக வந்து போவதில் விருப்பமில்லை. எனக்கு மட்டும் முக்கியத்துவம் இருந்தால், சினிமாவில் நடிப்பது பற்றி யோசிப்பேன்'' என்றார் மீனா.
ஞாயிறு கொண்டாட்டம்
ஞாயிறு கொண்டாட்டம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் போலி அரசியல்வாதிகளிடம் பணம் கொடுத்து எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகி வரும் படம் "சுவாசமே'. சத்யா, பிரதிஷ்டா ஜோடி. இயக்குநர் பிரவீண் காந்திடம் உதவி இயக்குநராக இருந்த வினோத் இப்படத்தை எழுதி இயக்கி அறிமுகமாகிறார். இப்படத்தின் ஒரு பாடல் காட்சியை நடத்துவதற்கு தாஜ்மாஹாலின் உள்ளே சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங் நடத்தியுள்ளார்கள். "" ஷூட்டிங் நடத்துவதற்கான மொத்தத் தொகையை செலுத்தி அனுமதி பெற்ற பின்னரும் தாஜ்மாஹாலுக்குள் ஷூட்டிங் நடத்த சிரமம் இருந்தது. எந்த இடத்தில் கேமிராவை வைத்தாலும், ""இது சுற்றுலா தலம். ஷூட்டிங் ஸ்பாட் கிடையாது'' என சுற்றுலா பயணிகள் கேமிராவை வைக்க அனுமதிக்கவில்லை. அந்த சிரமங்களையெல்லாம் சந்தித்து ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் செலுத்தி அந்த பாடல் காட்சியை ஆறு நாள்கள் படமாக்கினோம். உள்ளே தண்ணீர் பாட்டில் தவிர, எந்த சாப்பாட்டு பொருளையும் எடுத்து போக கூடாது. படக்குழு சாப்பிட வெளியே வந்தாலும், மீண்டும் டிக்கெட் பெற்றுக் கொண்டுதான் உள்ளே போக முடியும். தாஜ் நூர் இசையில் மாபோ ஆனந்த் ஒளிப்பதிவில் அந்த பாடலை ஒரு வழியாக முடித்து வந்து விட்டோம்'' என்றார் இயக்குநர் வினோத்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"கடல்' படத்துக்கு பின் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவாவின் ஜோடியாக "யான்' படத்தில் நடிக்கிறார் துளசி. "கடல்' படப்பிடிப்பின்போது, தன் அம்மா ராதாவை துணையாக அழைத்து வந்தவர், இப்போது "யான்' படப்பிடிப்புக்கு தனியாளாக வருகிறார். என்ன காரணம்? துளசியிடமே கேட்போம்... ""என் குடும்பத்தில் என் அக்கா வரை எல்லோருமே நடிகைகள். அதனால் என்னை பார்ப்பவர்கள் ""நீ எப்போது நடிகையாக போகிறாய்'' என்று கேட்பார்கள். ""அதற்கு சான்ஸ் இல்லை''யென்று கூறி வந்தேன். மணிரத்னம் பட வாய்ப்பு வந்தால் அதை யார்தான் மறுக்க முடியும். "கடல்' படத்துக்கான நடிப்பு பயிற்சிக்காக சென்னையில்தான் இரண்டு மாதங்கள் இருந்தேன். அப்போதும் என் துணைக்கு என் அம்மாவோ, என் பெரியம்மாவோ வரவில்லை. மணிரத்னம் பார்வையில் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு ஒன்றுதான் இதற்குக் காரணம். ஒரிரு நாள்கள் மட்டுமே அந்தப் படப்பிடிப்பின் போது அம்மா துணைக்கு வந்தார். அதை அப்படியே இனி வரும் சினிமா காலத்துக்கும் பின்பற்றலாம் என நினைத்தேன். அதை அம்மாவிடம் சொன்னதும், ரொம்பவே சந்தோஷப்பட்டார். கதைகள் கேட்பதை மட்டும் அம்மா எனக்காக செய்கிறார். மற்றபடி இனி படப்பிடிப்புக்கு தனியாளாகத்தான் வருவேன்'' என்றார் துளசி.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கோலிவுட், டோலிவுட்டில் அனுஷ்கா நடித்த "அருந்ததி' பட வெற்றிக்குப் பின் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அதிகமாக உருவெடுக்கின்றன. "அருந்ததி' படத்தையடுத்து "ருத்ரம்மாதேவி' என்ற வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் அனுஷ்கா. அவருக்காகவே நீண்ட காலமாக "ருத்ரம்மாதேவி" கதையை தயார் செய்து வருவதாக தெரிவித்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் குணசேகர். இப்படத்தில் இளவரசி வேடம் ஏற்கும் அனுஷ்கா, இரண்டு மாத காலமாக வாள் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார். சரித்திர கால படம் என்பதால், அது சம்மந்தப்பட்ட வரலாற்று நூல்களையும் படித்து வருகிறார். அதேபோல் பிரியாமணியும் "சாண்டி' என்ற வரலாற்று படத்தில் வீராங்கனையாக நடிக்கிறார். இவரும் வாள் சண்டை பயிற்சியுடன், குதிரை ஏற்ற பயிற்சியும் பெறுகிறார். அதேபோல் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் நடிக்கும் அமலாபாலும் வாள் சண்டை பயிற்சி பெறுகிறார். சில நிமிடங்களே வரும் வரலாற்றுப் பின்னணி காட்சிக்காக அமலாபால் இப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வரலாற்றுப் பின்னணிப் படங்கள் வெற்றி பெறுவதால், தமிழில் சில முன்னணி இயக்குநர்களும் ஹீரோயின்களுக்கு கதை தயார் செய்யும் பாணியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வின்னர் புல்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் க்ரோல் குரூப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் "நேரம்'. மலையாள திரையுலகின் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கும் நிவின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நஸ்ரியா நாசிம் நடிக்கிறார். தம்பி ராமையா, ஜான் விஜய், நாசர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். கலைஞர் டி.வி.யின் "நாளைய இயக்குநர்' புகழ் அல்ஃபோன்ஸ் புத்திரன், கதை எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். படம் குறித்து அவரிடம் பேசுகையில், ""ஒட்டு மொத்த மனித இனத்துக்கே நேரத்தின் மேல் நம்பிக்கை உண்டு. நல்லது நடந்தால், இதற்கெல்லாம் நேரம்தான் காரணம் என்பதும், கெட்டது நடந்தால் நேரம் சரியில்லை என்பதும் மனித இனத்தில் தினந்தோறும் நடக்கும் நம்பிக்கையாகவே மாறிவிட்டது. நல்ல நேரம், கெட்ட நேரம் என நேரம் இரண்டு வகைப்படும். நல்ல நேரம் வந்தால் ஆண்டியும் அரசனாகி விடுவான். கெட்ட நேரம் வந்தால் அரசனும் ஆண்டியாகி விடுவான் என்கிற பழமொழிதான் இந்த திரைக்கதைக்கான முதல் அடி. காமெடி மற்றும் திரில்லர் கலந்த இந்த திரைக்கதையில் காதலும் உண்டு. அனைத்து தரப்பினருக்குமான ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. நான் ஏற்கெனவே இயக்கிய மியூசிக் ஆல்பத்தில் நடித்த நஸ்ரியா நாசிமை, இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு கொண்டு வருகிறேன். தனுஷ் ஜோடியாக "நய்யாண்டி' படத்தில் நடித்துவந்தாலும், நஸ்ரியாவுக்கு இதுதான் முதல் படம்'' என்றார் இயக்குநர்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"தேநீர் விடுதி' படத்துக்குப் பின் எஸ்.எஸ்.குமரன் இயக்கும் படம் "கேரள நாட்டிளம் பெண்களுடனே'. அபி, காயத்ரி, தீட்சிதா, அபிராமி ஆகிய புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கு.ஞானசம்பந்தன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ்.எஸ்.குமரன் பேசுகையில், ""தேநீர் விடுதி' படத்தின் மூலம் நல்ல அனுபவம் கிடைத்தது. நல்ல விஷயங்கள் ஒன்று கூடி வரும் போதுதான் வெற்றி சொந்தமாகும். அதற்கான திட்டமிடலோடு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ஒவ்வொரு அப்பாவுக்கும் ஒரு லட்சியம். தன்னால் அடைய முடியாத ஒரு விஷயத்தை தன் மகனை வைத்து அடைந்து விடுவது என்பதுதான் அது. அந்த விஷயம்தான் இந்தப் படத்தின் கதை ஏரியா. முழுக்க முழுக்க கேரளப் பின்னணியில் வரும் தமிழ்ப் படமாக இது இருக்கும். திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா உள்ளிட்ட கேரள மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. வைரமுத்துவின் பாடல்கள் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன'' என்றார்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|