புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 75 of 84 Previous  1 ... 39 ... 74, 75, 76 ... 79 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 01, 2020 6:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (494)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
விளி மரபில், ‘ன்’ ஈறு முடித்து, ‘ர்’ ஈற்றுக்கு வந்துளார் தொல்காப்பியர்!:

ஆரும் அருவும் ஈரொடு சிவணும் (விளி மரபு 21)

அஃதாவது – ‘ஆர்’ ஈற்று உயர்திணைச் சொற்களும் ‘அர்’ ஈற்று உயர்திணைச் சொற்களும் ‘ஈர்’ ஈறு பெற்று விளிப் பெயர்களாக ஆகும்!
1 . பார்ப்பார் = பார்ப்பீர் (பார்ப்பு +ஆர் = பார்ப்பார்; பார்ப்பு +ஈர்= பார்ப்பீர்; ‘ஆர்’ என்பது ‘ஈர்’ ஆனதைக் கவனிக்க)
2 . கூத்தர் = கூத்தீர் (கூத்து +அர் = கூத்தர்; கூத்து +ஈர்= கூத்தீர்; ‘அர்’ என்பது ‘ஈர்’ ஆனதைக் கவனிக்க)

இதனைத் தொடர்ந்து, ‘ஆர்’ , ‘அர்’ ஈறுகள் கொண்ட உயர்திணை வினையாலணையும் பெயர்கள் விளியேற்கும் வகையைக் கூறுகிறார்!:

தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே (விளி மரபு 22)

மேலே பேசப்பட்ட ‘ஆர்’ , ‘அர்’ ஈறுகள் கொண்ட உயர்திணைப் பெயர்கள், வினையாலணையும் பெயர்களாக இருந்தால், ‘ஈர்’ பெறுவதோடு, ‘ஏ’ பெற்றும் விளியாகும் !
1 . வந்தார் – வந்தீரே (வந்து +ஈர் + ஏ= வந்தீரே)
2 . சென்றார் – சென்றீரே (சென்று +ஈர் + ஏ= சென்றீரே)
3 . உண்டார் – உண்டீரே (உண்டு + ஈர் + ஏ = உண்டீரே)

‘ஆர்’ ஈற்று வினையாலணையும் பெயர்களுக்கெ எடுத்துக்காட்டுகளைக் கண்டோம்!
‘அர்’ ஈற்று வினையாலணையும் பெயர்களுக்கு?
சேனாவரையர் , ‘வந்தவழிக் கண்டுகொள்க!’ என்று பொறுப்பை நம்மிடம் விட்டுவிட்டார்!
நச்சர் இதுபற்றிப் பேசலுற்றார்!

நச்சர், ‘வந்தவர்’ , ‘சென்றவர்’ ஆகிய ‘அர்’ ஈற்று உயர்திணை வினையாலணையும் பெயர்களைக் காட்டி, இவை ‘வந்தவரே’ , ‘சென்றவரே’ என ‘ஈர்’ ஈறு பெறாமல், ‘ஏ’ ஈறு மட்டும் பெற்று விளியாவதை நமக்குக் காட்டுகிறார்! ஆனால் ‘இது சிறுபான்மை’
என்றும் எச்சரிக்கையாக எழுதியுள்ளார்!

‘அர்’ , ‘ஆர்’ ஈறுகள் கொண்ட உயர்திணைப் பெயர்களில் , அடுத்து, பண்புப் பெயர்களை எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர்! :

பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே (விளி மரபு 23)

அஃதாவது, ‘அர்’ , ‘ஆர்’ ஈறுகள் கொண்ட உயர்திணைப் பெயர்கள், ‘ஈர்’ பெற்றும் சிறுபான்மை ஈரோடு ஆகாரமும் பெற்று விளி ஏற்கும்!

எடுத்துக்காட்டுகள்:

1 . இளையர் – இளையீர் ; இளையீரே (இளை+ய்+ அர்= இளையர்; இளை+ய்+ஈர்= இளையீர்; இளை + ய்+ ஈர்+ ஏ= இளையீரே)
2 . கரியார் – கரியீர் ; கரியீரே (கரி+ய்+ ஆர்= கரியார்; கரி+ய்+ஈர்= கரியீர்; கரி + ய்+ ஈர்+ ஏ= கரியீரே)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 01, 2020 6:12 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (495)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விளி மரபில் இனி, ‘ர்’ ஈற்று உயர்திணைப் பெயர்களில், அளபெடை பெற்ற பெயர்களை மட்டும் எடுத்துக்கொள்கிறார்!:

அளபெடைப் பெயரே அளபெடை இயல (விளி மரபு 24)

முன்பு நாம் பார்த்த விளி மரபு நூற்பா 18ஐச் சற்றுப் பாருங்கள்!
இரண்டும் ஒன்றாகவே இருக்கும்!
இது தொல்காப்பியத்திற்குச் சுவை சேர்ப்பதாகும்! படிப்பாரின் அயற்சி போக்குவதாகும்!

அஃதாவது- ‘சிறாஅர்’ , ‘மகாஅர்’ என்ற அளபெடை பெற்ற உயர்திணைப் பெயர்கள், ‘சிறாஅரே’ , ‘மகாஅரே’ என்று விளி கொள்ளா!
எப்படி விளி கொள்ளுமாம்?
1 . சிறாஅர் – சிறாஅஅர் (அளபெடை ‘அ’ சேர்ந்துள்ளது)
2 . மகாஅர் – மகாஅஅஅர்(இரு ‘அ’க்கள் அளபெடையாகச் சேர்ந்துள)

அடுத்துத் தொல்காப்பியர், சுட்டுமுதற் பெயர்களுக்குச் செல்கிறார்!
முன்னர், ’ன்’ ஈற்றுச் சுட்டு முதலாகிய உயர்திணைப் பெயர்கள் விளி ஏலா(வி.ம. 20) எனப் பார்த்தோமல்லவா? அதைப் போன்றே ‘ர்’ ஈற்றுச் சுட்டு முதலாகிய உயர்திணைப் பெயர்களும் விளி கொள்ளா என்கிறார்:

சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன (விளி மரபு 25)

இதன்படிக், கீழ்வரும் ‘ர்’ ஈற்றுச் சுட்டு முதல் உயர்திணைப் பெயர்கள் விளி கொள்ளா!:

1 . அவர் (ஒருவரைப் பார்த்து, ‘அவரே’ என்று கூப்பிட முடியாது)
2 . இவர் (ஒருவரைப் பார்த்து, ‘இவரே’ என்று கூப்பிட முடியாது)
3 .உவர் (ஒருவரைப் பார்த்து, ‘உவரே’ என்று கூப்பிட முடியாது)

‘ர்’ ஈற்று உயர்திணைப் பெயர்களில் , ‘நீயிர்’ , ‘யாவர்’ என்பனவும் விளியேற்கமாட்டா என்று அடுத்ததாகச் செப்புகிறார்!:

நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்று
அம்முறை யிரண்டும் அவற்றியல் பியலும் (விளி மரபு 26)

நும்மின் திரிபெயர் – நீயிர் (புள்ளிமயங்கியல் 31இல் விதி உள்ளது)
வினாவின் பெயர்கள் – யார்; எவர்;யாவர்

இந்தப் பெயர்கள் , நீயிர், யார்,எவர், யாவர் என்பன விளியை ஏற்கமாட்டா!

நீயிரே இங்கே வாரீர்×
யாரே இங்கே வாரீர்×
எவரே இங்கே வாரீர்×
யாவரே இங்கே வாரீர்×
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 02, 2020 12:15 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (496)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

விளி மரபில் நாம் இப்போது ‘ல்’ , ‘ள்’ ஈறுகள் பெற்ற உயர்திணைப் பெயர்ச் சொற்கள் எவ்வாறு விளியேற்கும் என்பதைக் காணப் போகிறோம் ! :

எஞ்சிய விரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும் (விளி மரபு 27)

‘ல்’ ஈற்றையும் ‘ள்’ ஈற்றையும் ஏன் ‘எஞ்சிய’ என்றார்?

விளியேற்கும் மெய்யீறுகளாக விளிமரபில் (நூ. 11) நாம் ன்-ர்-ல்-ள் ஆகிய நான்கு ஈறுகளைப் பார்த்தோமல்லவா? அவற்றில் ‘ன்’, ‘ர்’ ஆகியன பற்றி விளக்கமாகப் பார்த்துவிட்டோம் ! மீதி ‘ல்’ , ‘ள்’ ஆகியனவே எஞ்சியிருப்பதால் ‘எஞ்சிய’ என்றார்!

‘ல்’ , ‘ள்’ ஆகிய ஈறுகள் கொண்ட உயர்திணைப் பெயர்ச்சொற்கள் , ஈற்றயல் நீட்சி மூலம் விளி கொள்ளும் என்பது மேலை நூற்பாவின் (வி.ம. 27) கருத்து!

இதன்படி,
1 . குரிசில் – குரிசீல் (குரி + சி + ல்= குரிசில்; குரி+ சீ + ல் = குரிசீல்; ‘சி’ என்பது ‘சீ’ஆனது)
2 . மக்கள் – மக்காள் (மக் + க+ ள்= மக்கள் ; மக்+ கா+ள் = மக்காள்; ‘க’ என்பது ‘கா’ஆகியுள்ளது)
3 . தோன்றல் – தோன்றால் (தோன் + ற + ல்= தோன்றல்; தோன் +றா +ல்= தோன்றால்; ‘ற’ என்பது ‘றா’ ஆனது)
4 . ஏந்தல்- ஏந்தால் (ஏந்+த+ல் = ஏந்தல்; ஏந்+ தா + ல்= ஏந்தால்; ‘த’என்பது ‘தா’வாக ஆயிற்று)
5 . குழையள் – குழையாள் (குழை+ ய+ள் = குழையள் ; குழை+ யா+ள்= குழையாள் ; ‘ய’ ,என்பது ‘யா’வாக ஆகியுள்ளது)
அயலெழுத்து நீண்டு விளியை உருவாக்குகிறது !

சரி! அயலெழுத்தே நெடிலாக இருந்தால்?

அதற்குத் தொல்காப்பியர் ,
அயல்நெடி தாயின் இயற்கை யாகும் (விளி மரபு 28)

1 பெண்பால் - பெண்பால் (ஈற்றயல் ‘பா’வில் மாற்றமில்லை)
2 . கோமான் – கோமான் (ஈற்றயல் ‘மா’வில் மாற்றமில்லை)
3 . கடியாள் – கடியாள் (ஈற்றயல் ‘யா’வில் மாற்றமில்லை)
4 . பெரியாள் – பெரியாள் (ஈற்றயல் ‘யா’வில் மாற்றமில்லை)

அடுத்தாற்போல், வினைச்சொல், பண்புப் பெயர் ஆகிய வடிவில் வரும் ‘ஆன்’ ஈற்று உயர்திணைப் பெயர்கள் விளியேற்பது பற்றி உரைக்கிறார் தொல்காப்பியர்! :

வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் ஆளென் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான (விளி மரபு 29)

அஃதாவது , வினை, பண்பு ஆகிய உயர்திணைப் பெயர்கள் விளியாக வேண்டுமானால் , ஈற்று ‘ஆள்’ , ‘ஆய்’ ஆக மாற்றவேண்டும்!

1 . நின்றாள் – நின்றாய்( ஈற்று ‘ஆள்’ , ‘ஆய்’ ஆகியுள்ளது)
2 . கரியாள் – கரியாய் (ஈற்று ‘ஆள்’ , ‘ஆய்’ ஆனது)

3 . உண்டாள் – உண்டாய் (ஈற்று ‘ஆள்’ , ‘ஆய்’ ஆகியுள்ளது)

o உண்டாள் பேச வருவாள் - இதில் ‘உண்டாள்’ , வினையாலணையும் பெயர் (Verbal noun);உண்டவள் என்பது பொருள்.
o உண்டாய் நன்கு பேசுவியோ? – இதில் ‘உண்டாய்’ , உண்டவளை விளிக்கும் விளி (Vocative)!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 05, 2020 2:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (497)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
விளி மரபு நூற்பா 19இல் , ‘மகன்’ என்ற னகர ஈற்று முறைப்பெயர் (Noun of relation), ‘மகனே’ என்று விளியாகும் எனப் பார்த்தோம்!
அதே முறைப்பெயர் முறையில்தான் ‘ள்’ ஈற்று முறைப்பெயர்களும் விளியேற்கும் என்பது அடுத்த நூற்பா!:
முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல (விளி மரபு 30)

இதற்கிணங்க,
1 . மகள் – மகளே (மகள் +ஏ)
2 . மருமகள் – மருமகளே (மருமகள் +ஏ)
என வரும்.

இப்போது, ‘ள்’ ஈற்றுச் சுட்டுப் பெயரும் , வினாப்பெயரும் விளிகொள் முறையைத் தெரிவிக்கிறார்!:
சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர் (விளி மரபு 31)

அஃதாவது, முன் விளி மரபு நூற்பா 29இல், ‘ன்’ ஈற்றுச் சுட்டுப் பெயர்களும், வினாப்பெயர்களும் விளி ஏற்கமாட்டா என்றாரல்லவா? அதே முறையில், ‘ள்’ ஈற்றுச் சுட்டுப் பெயர்களும், வினாப் பெயர்களும் விளியை ஏலா!
1 . அவள் – அவள் ( ‘ஏ அவளே’ என்று கூப்பிட முடியாது)
2 . இவள் - இவள் ( ‘ஏ இவளே’ என்று கூப்பிட முடியாது)
3 . உவள் – உவள் ( ‘ஏ உவளே’ என்று கூப்பிட முடியாது)
4 . யாவள் – யாவள் ( ‘ஏ யாவளே’ என்று கூப்பிட முடியாது)

இனி, ‘ல்’, ‘ள்’ ஈற்று அளபெடைப் பெயர்கள் (Noun of prolongation) விளியேற்பது பற்றி உரைக்கிறார்!:
அளபெடைப் பெயரே அளபெடை இயல (விளி மரபு 32)

என்ன? இந்த நூற்பாவைப் முன்பே பார்த்தது போல இருக்கிறதா?

ஆம்! இதே விளி மரபில், நூற்பா 18, 24 ஆக வந்ததும் இதே நூற்பாவே!

விளிமரபில் மட்டும் மொத்தம் மூன்று இடங்களில் (நூ. 18,24,32) இதே நூற்பாவை எழுத்து மாற்றமின்றி வரைந்துள்ளார் தொல்காப்பியர்!
மாணவர்களுக்கு எந்தக் குழப்பமும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார் தொல்காப்பியர்!
இவ்வகையில் தற்கால ஆசிரியர்களுக்குத் தொல்காப்பியர் ஒரு முன் மாதிரியாகவும், முன்னோடியாகவும் (Pioneer in teaching teachniques ) திகழ்கிறார்!
மேல் நூற்பாவை விளக்கச் சேனாவரையர் எடுத்துக்கொண்ட காட்டுகள் – மாஅல் ; கோஒள்.
1 . மாஅல் (அளபெடை பெற்ற உயர்திணைப் பெயர்ச்சொல்) – மாஅஅல் (விளியாக வந்த வடிவம்)
2 . கோஒள் (அளபெடை பெற்ற உயர்திணைப் பெயர்ச்சொல்) – கோஒஒள் (விளியாக வந்த வடிவம்)

தொல்காப்பியர் , விளி மரபில், நூற்பா 3 முதல் 32 வரை உயர்திணைப் பெயர்கள் மட்டும் விளியேற்பதைப் பேசினார்!
இப்போது நூற்பா 33இல் , விரவுப் பெயர் விளியேற்பதை வரைகிறார்!;

கிளந்த இறுதி அஃறிணை விரவுப் பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை (விளி மரபு 33)

‘விரவுப் பெயர்’ பற்றி முன்பும் கண்டுள்ளோம்!
அஃதாவது- உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொருந்தி வருவதெல்லாம் விரவுப் பெயர்களே!
சாத்தன் – இப் பெயர் ஓர் ஆளின் பெயராகவும் வரும்;ஒரு மாட்டுக்கு இடப்பட்ட பெயராகவும் வரும்!இதனால் இது விரவுப் பெயர்!
முடவன் – இப் பெயர் முடமுற்ற ஆளையும் குறிக்கும் ; முடமுற்ற ஒரு மாட்டையும் குறிக்கும் !இதனால் இது விரவுப் பெயர்!

இப்போது நூற்பா-

கிளந்த இறுதி – முன் நூற்பாக்களில் சொன்ன ஈறுகள்,
விளம்பிய நெறிய - எப்படி விளி கொள்ளவேண்டு எனக் கூறப்பட்டனவோ,
அஃறிணை விரவுப் பெயர் – அஃறிணை விரவுப் பெயர்களும்
விளிக்கும் காலை – அப்படியே விளி கொள்ளும்!

யாவை அந்த முன் நூற்பாக்களில் சொன்ன ஈறுகள் ?
இ, உ,ஐ, ஓ,ன், ர்,ல்,ள் - ஆகிய எட்டே! (வி.ம. 3 ,11)

சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம்!:
1 . சாத்தி – சாத்தீ (இகர ஈற்று விரவுப் பெயர் விளி ஏற்றது )
2 . பூண்டு – பூண்டே (உகர ஈற்று விரவுப் பெயர் விளி ஏற்றது )
3 . தந்தை – தந்தாய் (ஐகார ஈற்று விரவுப் பெயர் விளி ஏற்றது )
4 . சாத்தன் – சாத்தா (னகர ஈற்று விரவுப் பெயர் விளி ஏற்றது )
5 . கூந்தல் – கூந்தால்(லகர ஈற்று விரவுப் பெயர்,ஈற்றயல் எழுத்து நீட்சி மூலம் விளி ஏற்றது)
6 . மக்கள் – மக்காள் (ளகர ஈற்று விரவுப் பெயர்,ஈற்றயல் எழுத்து நீட்சி மூலம் விளி ஏற்றது)
7 . சாத்தி – சாத்தி (அண்மை விளியாதலின் மாற்றமில்லை)
8 . பூண்டு – பூண்டு (அண்மை விளியாதலின் மாற்றமில்லை)
9 . தந்தை – தந்தை (அண்மை விளியாதலின் மாற்றமில்லை)
10 . சாத்தன் – சாத்த (அண்மை விளி; ஈறு போனது)

இங்கு பட்டியலிடப்பட்ட 10 பெயர்களுமே விரவுப் பெயர்கள் (Common nouns of non-class) என்பதைக் காண வேண்டும்!
‘கூந்தல்’ என்பது, ஒரு பெண்ணின் பெயராகவும் ,மயிர்க் கூந்தலின் பெயராகவும் வருவதால் அது விரவுப்பெயராயிற்று என்ற விளக்கம் தந்தவர் ஆ.சிவலிங்கனார்.

இப்போது , தொல்காப்பியர் அஃறிணைப் பெயர்களைக் கையில் எடுக்கிறார்!:

புள்ளியு முயிரும் இறுதி யாகிய
அஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின்
தெளிநிலை யுடைய ஏகாரம் வரலே (விளி மரபு 34)

புள்ளியும் உயிரும் இறுதி யாகிய – மெய்யெழுத்தாலும் உயிரெழுத்தாலும் இறும் ,
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் – அனைத்து அஃறிணைப் பெயர்ச் சொற்களும்,
விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின் – விளியாக அமையும் போழ்து,
தெளிநிலை யுடைய ஏகாரம் வரலே - ஈற்றேகாரம் பெற்று விளிப்பெயர்களாக ஆகும்!

உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டுகள்!:
1 . மரம் – மரமே ( ‘ஏ’ பெற்று விளியானது)
2 .அணில் – அணிலே (’’)
3 . நரி – நரியே (’’)
4 . புலி – புலியே (’’)
5 . வண்டு – வண்டே (’’)
6 . மரை – மரையே (’’) (மரை= மான்)
7 . மா- மாவே (’’) (மா = குதிரை)
8 . குயில் – குயிலே ( ‘ஏ’ பெற்று விளியானது)

மேலுள்ள 8 பெயர்ச் சொற்களும் அஃறிணைப் பெயர்ச் சொற்களே என்பதைக் காண வேண்டும்.

இங்கு , கல்லாடனார் ஓர் அரிய குறிப்பைத்தைத் தருகிறார்!

‘ஓடும் குறுமுயால்’ என்ற தொடரை எடுத்துக்காட்டி, ‘இங்கே முயல் என்பது முயால்’
என விளி பெற்றுள்ளதே?’ என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறார்!
நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவரே விடையையும் கூறுகிறார்!
‘அது செய்யுள் விகாரம்!’ என்பதே அவரின் விடை!
பொருத்தமான விடை!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 05, 2020 2:25 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (498)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
விளி மரபில், தொல்காப்பியர் இதுவரை கூறியவற்றுள் அடங்காக் கருத்துகளைப் புறனடையாகத் தருகிறார்!

விளி மரபில், தொல்காப்பியர் 37நூற்பாக்களை வகுத்த வகையை வருமாறு எழுதலாம்!:
1 . விளியின் இயல்பு .... நூற்பாக்கள் 1 -2
2 . உயர்திணைப் பெயர் விளியேற்கும் முறை …. நூற்பாக்கள் 3- 32
3 . விரவுப் பெயர் விளியேற்கும் முறை …. நூற்பா 33
4 . அஃறிணைப் பெயர் விளியேற்கும் முறை …. நூற்பா 34
5 . புறனடை …. நூற்பாக்கள் 35 -37

இவற்றில் , புறனடையை இப்போது காண்போம்!

உளவெனப் பட்ட எல்லாப் பெயரும்
அளபிறந் தனவே விளிக்குங் காலைச்
சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான (விளி மரபு 35)

உள எனப் பட்ட எல்லாப் பெயரும் – இருக்கக்கூடிய உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என்ற மூன்று பெயர்களுமே,
அளபு இறந் தனவே விளிக்குங் காலை - மாத்திரையில் அதிக அளவில் ஒலிக்கும் விளியில்,
சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான - தொலைவில் இருந்து விளிக்கும்போது!

சேனாவரையர் தந்த எடுத்துக்காட்டுகள்:
1 . நம்பீஇ
2 . சாத்தாஅ

விளி மரபு நூற்பா4இல், ‘இ ஈ ஆகும்’ எனக் கண்டோம்! அதன்படி, ‘நம்பி’
என்ற உயர்திணைப் பெயர் ‘நம்பீ’ என விளியில் வரும்.
பிறகு ‘நம்பீஇ’ எப்படி வந்தது சேனாவரையருக்கு?
மேல் நூற்பாவை நன்கு பாருங்கள்!
‘சேய்மையின் இசைக்கும்’ என்றுள்ளதா?

இந்த இடத்தில் நான் விளிகளின் மூன்று பண்புகளை உங்களுக்குச் சொல்லவேண்டும்!

விளிகளில் மூன்று வகைகள்:
1 . அண்மை விளி
2 . இடைநிலை விளி
3 . சேய்மை விளி

இந்த மூன்று வகை விளிகளையும் தொல்காப்பியர் நவின்றுள்ளார்!

விளி மரபில் மொத்தம் 37 நூற்பாக்கள் உள; இவற்றில் ஒரே ஒரு நூற்பாவில் மட்டுமே அவர் ‘அண்மைச் சொல்’ (வி.ம.நூ.10) என அண்மை விளியைக் குறிக்கிறார்!

ஒரே ஒரு நூற்பாவில் மட்டுமே ‘சேய்மையின் இசைக்கும்’ (வி.ம.நூ. 35) எனச் சேய்மை விளியைக் குறிக்கிறார்!

சரி!
‘இடை நிலை விளி’ ?
இப்படி ஒரு விளியை அவர் வெளிப்படையாகக் குறிக்கவில்லை!
ஆம்! தொல்காப்பியர் , பொதுவாக ‘விளி’ என்று கூறுவதெல்லாம் இடைநிலை விளிகளே!

‘இடை நிலை விளி’ என்ற தொடரை முதன் முதலில் ஆண்டவர் தெய்வச்சிலையாரே!

இதனைத் தெய்வச்சிலையாரின் உரையில் வரும் ‘நெட்டெழுத்துப் பெற்றன இடைநிலைப் பொருட்கண் என்று கொள்ளப்படும்’ (வி.ம.நூ.35) எனும் தொடரால் தெளியலாம்!

அஃதாவது –
1 . சாத்தன் அண்மையில் நின்றால் அவனைக் கூப்பிடச் ‘சாத்த’ எனல் வேண்டும்! (அண்மை விளி)
2 . சாத்தன் சற்றுத் தொலைவில் நின்றால் அவனைக் கூப்பிடச் ‘சாத்தா’ எனல் வேண்டும்! (இடைநிலை விளி)
3 . சாத்தன் இன்னும் தொலைவான இடத்தில் நின்றால் அவனைக் கூப்பிடச் ‘சாத்தாஅ’ எனல் வேண்டும்! ;இவ் விளி ‘சாத்தாஅஅ’ எனவும் வரலாம்! (சேய்மை விளி)

‘சேரமான்’ என்ற உயர்திணைப் பெயர்ச்சொல், அண்மை விளியிலும் இடைநிலை விளியிலும் ‘சேரமான்’ என்றே வரும்! சேய்மை விளியில், ‘சேரமாஅன்’ என வரும் !

இதனை நச்சர் உரை (வி.ம.நூ.35)நமக்குக் காட்டுகிறது!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 05, 2020 2:34 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (499)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
விளிமரபுப் புறனடையில் அடுத்ததாக, ‘அம்ம’ என்பது இடைச் சொல்லாக (Particle) இருந்தாலும் , அசைச் சொல்லாக (Expletive) வரும்போது, ‘அம்மா’ என விளி ஏற்கும் என்கிறார்! :
அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும்
விளியொடு கொள்ப தெளியு மோரே (விளி மரபு 36)

அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் - ‘அம்ம’ எனும் அசைச் சொல்லானது, ‘அம்மா’ என நீள்வதை,
அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் – இந்த அசைச் சொல்லானது ஒரு முறைப்பெயர் அல்ல என்றாலும்,
விளியொடு கொள்ப தெளியு மோரே - விளியாகவே கொள்வார்கள் தெளிவானவர்கள்!

‘அம்மா’ என்ற விளியேற்ற வடிவம் தாயைக் குறிக்காது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்!
இங்கு, தெய்வச்சிலையார் மேலும் இரு எடுத்துக்கட்டுகளைக் காட்டுகிறார்!:
1 . ஏட – ஏடா ( ‘ஏட’ என்ற இடைச்சொல், விளி ஏற்றது )
2 . ஏடி – ஏடீ ( ‘ஏடி’ என்ற இடைச்சொல், விளி ஏற்றது )

தொல்கப்பியம்தான் எவ்வளவு நுட்பமான இலக்கணத்தை கி.மு.600இலேயே தமிழர்களுக்குத் தந்துள்ளது!

விளிமரபுப் புறனடையில் இறுதி நூற்பா!:

தநநு எஎன அவைமுத லாகித்
தன்மை குறித்த னரளஎன் இறுதியும்
அன்ன பிறவும் பெயர்நிலை வரினே
இன்மை வேண்டும் விளியொடு கொளலே (விளி மரபு 37)

தநநு எஎன அவைமுத லாகி – த, ந, நு , எ எனும் இந்த நான்கு எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்டு,
தன்மை குறித்த னரளஎன் இறுதியும் – கிழமைப் பொருள் குறிக்கும் ன் , ர் , ள் எனுமிந்த மூன்று மெய்களையும் ஈற்றிலே கொண்டு,
அன்ன பிறவும் பெயர்நிலை வரினே – வரக்கூடிய சொற்களும் இவற்றைப் போன்ற மற்ற சொற்களும் பெயர்ச் சொற்களாக இருப்பின்,
இன்மை வேண்டும் விளியொடு கொளலே - அவை விளியாக வருதல் இல்லை!

மேல் உரையில் ‘கிழமைப் பொருள்’ என வந்ததா?
இதன் பொருள்?
கிழமைப் பொருள் = உரிமைப் பொருள்
அஃதாவது - ‘நமர்’ என்றால் ‘நம்மவர்கள்’ என்பது பொருள்; ‘எமர்’ என்றால் ‘எம்மவர்கள்’ என்று பொருள். இங்கெல்லாம் ‘நமக்கு’ என்ற ஓர் உரிமை உள்ளதை நோக்கலாம்! இதனால்தான் ‘கிழமைப் பொருள்’! இதைத்தான் ‘தன்மை குறித்த’ என்றது தொல்காப்பியம்!

தொல்காப்பியரின் இந்த வரையறைக்கு உட்பட்டுச் சேனாவரையர் மொத்தம் 24 விளி ஏலாப் பெயர்ச் சொற்களைத் தருகிறார்!:

1 . தமன் (முதல் எழுத்து ‘த’ , ஈற்றெழுத்து ‘ன்’)
2 . தமர் (முதல் எழுத்து ‘த’ , ஈற்றெழுத்து ‘ர்’)
3 . தமள் (முதல் எழுத்து ‘த’ , ஈற்றெழுத்து ‘ள்’)
4 . நமன் (முதல் எழுத்து ‘ந’ , ஈற்றெழுத்து ‘ன்’)
5 . நமர் (முதல் எழுத்து ‘ந’ , ஈற்றெழுத்து ‘ர்’)
6 . நமள்(முதல் எழுத்து ‘ந’ , ஈற்றெழுத்து ‘ள்’)
7 . நுமன் (முதல் எழுத்து ‘நு’ , ஈற்றெழுத்து ‘ன்’)
8 . நுமர் (முதல் எழுத்து ‘நு’ , ஈற்றெழுத்து ‘ர்’)
9 . நுமள் (முதல் எழுத்து ‘நு’ , ஈற்றெழுத்து ‘ள்’)
10 . எமன் (முதல் எழுத்து ‘எ’ , ஈற்றெழுத்து ‘ன்’)
11 . எமர் (முதல் எழுத்து ‘எ’ , ஈற்றெழுத்து ‘ர்’)
12 . எமள் (முதல் எழுத்து ‘எ’ , ஈற்றெழுத்து ‘ள்’)
13 . தம்மான் (முதல் எழுத்து ‘த’ , ஈற்றெழுத்து ‘ன்’)
14 . தம்மார் (முதல் எழுத்து ‘த’ , ஈற்றெழுத்து ‘ர்’)
15 . தம்மாள் (முதல் எழுத்து ‘த’ , ஈற்றெழுத்து ‘ள்’)
16 . நம்மான் (முதல் எழுத்து ‘ந’ , ஈற்றெழுத்து ‘ன்’)
17 . நம்மார் (முதல் எழுத்து ‘ந’ , ஈற்றெழுத்து ‘ர்’)
18 . நம்மாள் (முதல் எழுத்து ‘ந’ , ஈற்றெழுத்து ‘ள்’)
19 . நும்மான் (முதல் எழுத்து ‘நு’ , ஈற்றெழுத்து ‘ன்’)
20 . நும்மார் (முதல் எழுத்து ‘நு’ , ஈற்றெழுத்து ‘ர்’)
21 . நும்மாள் (முதல் எழுத்து ‘நு’ , ஈற்றெழுத்து ‘ள்’)
22 . எம்மான் (முதல் எழுத்து ‘எ’ , ஈற்றெழுத்து ‘ன்’)
23 . எம்மார் (முதல் எழுத்து ‘எ’ , ஈற்றெழுத்து ‘ர்’)
24 . எம்மாள் (முதல் எழுத்து ‘எ’ , ஈற்றெழுத்து ‘ள்’)

‘அன்ன பிறவும்’ என்று தொல்காப்பியர் சொல்லிவிட்டாரல்லவா?
அதற்காக சில எடுத்துக்காட்டுகளை நமக்காகத் தேடித் தருகிறார் சேனாவரையர்!:
1 . மற்றையான்
2 . மற்றையார்
3 . மற்றையாள்
4 . பிறன்
5 . பிறர்
6 .பிறள்
அஃதாவது, இந்த ஆறு பெயர்ச் சொற்களும் விளியை ஏற்கமாட்டா!

‘நமரே வாருங்கள்’ , ’நம்மானே போங்கள்’ , ‘நும்மானே சொல்லாதே’ ,’மற்றையாரே இது வேண்டாம்’ , ‘பிறளே போய்விடு’ என்றெல்லாம் விளியோடு தொடர்கள் வாரா!
இத்துடன், சொல்லதிகாரத்து நான்காவது இயலான விளி மரபு முடிகிறது!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 16, 2020 7:11 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (500)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது, தொல்காப்பியச் சொல்லதிகாரத்து ஐந்தாவது இயலான பெயரியலை ஆய்வோம்!
முதல் ஐந்து நூற்பாக்களில் (பெய.நூ.1-5) , சொற்களின் இயல்பை நமக்கு விவரிக்கிறார்!
முதலாவதாக-
எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (பெயரியல் 1)

எல்லாச் சொல்லும் – பெயர், வினை, இடை, உரி என்று சொல்லப்படும் நால்வகைச் சொற்கள் உட்பட எல்லாச் சொற்களுமே,
பொருள் குறித்தனவே – ஏதேனும் ஒரு பொருளைக் குறித்தே வரும்!

அப்படியானால், அசைச் சொற்கள்(Expletives) ? அவையும் பொருள் குறித்தே வருகின்றனவா?

ஆம் என்கிறார் சேனாவரையர்!

“அசைநிலை முதலாயினவும் பொருள் குறித்து நிற்குமென ஐயமறுத்தற்கு இச் சூத்திரம் வேண்டுமென்பது” – என்பது சேனாவரையர் உரை.

‘ஆய பயனென்கொல்’ என்ற திருக்குறள் தொடரில் வரும் ‘கொல்’ அசைச் சொல்தான்; ஆனால் இது, வள்ளுவரின் கருத்தை ஆணித்தரமாக்கப் பயன்படும் பொருள்தாங்கியது.இதனால் ,சேனாவரையரின் கருத்துச் சரியானதே!

இதனைப் போன்றே இசைநிறையும் பொருள் குறித்ததே என்றார் தெய்வச்சிலையார்!

‘ஓஒதல் வேண்டும்’ என்பதில் வரும் ‘ஒ’வை இசைநிறை என்கிறோம்; இதற்கும் ஒரு பொருள் நோக்கம் உள்ளது!

‘அதுமன்’ என்பதில் வரும் ‘மன்’ ஓர் இடைச்சொல்தான்; ‘தவச் சேய்நாட்டார்’ என்பதிலுள்ள ‘தவ’ ஓர் உரிச்சொல்தான்; இவைபோன்ற பிற இடைச்சொற்களும் உரிச்சொற்களும் பொருள்தரும் நோக்குப்பெற்றவையே என விளக்குபவர் கல்லாடனார்.

இவ்வளவு ஏன்?

‘சூ’ என்று ஒரு நாயை விரட்டினாலும் , இந்தச் ‘சூ’வும் ஒரு பொருளைக் குறித்ததே! ‘இங்கு நில்லாதே போய்த்தொலை’ என்ற குறிப்புப் பொருள் (Suggestive meaning)இருக்கிறதல்லவா?

அடுத்துச், சொல்லின் தன்மையையும் , அது உணர்த்தும் பொருள்பற்றியும் பேசுகிறார் தொல்காப்பியர்:
பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லி னாகும் என்மனார் புலவர் (பெயரியல் 2)

பொருண்மை தெரிதலும் – ஒரு சொல்லுக்குரிய பொருளைத் தெரிந்துகொள்ளலும்,
சொன்மை தெரிதலும் - அந்தச் சொல்லின் நிலையைத் தெரிந்துகொள்ளலும்,
சொல்லி னாகும் - சொல்லால் நடைபெறும்
என்மனார் புலவர் - என்பார்கள் புலவோர்!

இதில், ‘சொன்மை தெரிதல்’ என்ற தொடர் உரையாசிரியர்களைக் குழப்பிவிட்ட தொடர்!
தெய்வச்சிலையார், ‘சொன்மை தெரிதல்’ என்றால், அந்தச் சொல், பெயர்ச்சொல்லா? வினைச்சொலா? என்பன போன்ற ‘இலக்கணம்’ அறிதல் என விளக்குகிறார்!


கல்லாடனார், ஆதித்தர் ஆகியோரும் ஏறத்தாழ இதே கருத்தையே கொண்டனர்!

ஆனால் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், வெள்ளைவாரணர் ஆகியோர் வேறு ஒரு கருத்தைக் கொண்டுள்ளனர்!
அஃதாவது-
‘சொன்மை தெரிதல்’ என்றால், ‘அச் சொல் தானே அறியப்படுதல்’ என்பதே இந் நால்வர்தம் கருத்து.
இந் நால்வர் கருத்தே சரியாகக் காணப்படுகிறது!
எப்படி?

ஒரு புத்தகத்தைப் புரட்டுகிறீர்கள்; ‘மாம்பழம்’ என்ற சொல் உங்கள் கண்ணில் படுகிறது; அச் சொல்லால் , மாம்பழமும் (mango fruit) சுட்டப்படலாம்; அப்படி இல்லாமல், பழம் பற்றி எல்லாம் பேசும் இடம் அது அல்லாமல் , வெறும் ‘மாம்பழம்’ என்ற சொல் மட்டும் (only the bare word ‘mango’) எதற்காகவோ அங்கு சுட்டப்படலாம் அல்லவா?

இதிலிருந்து என்ன தெரிகிறது?

ஒரு சொல் என்று எடுத்துக்கொண்டால், முதலில் நமக்கு அக்கறை அதன் பொருள்தான்! இதனால்தான் நூற்பாவில், ‘பொருண்மை தெரிதல்’ என்ற தொடரை முதலில் வைத்தார் தொல்காப்பியர்! பொருளைப்பற்றிய அக்கறை இல்லையாயின் வேறு என்ன அக்கறை? அந்தச் சொல் மட்டும், பொருளைப்பற்றிக் கவலைப்படாது, அங்கு சுட்டிக் காட்டுப்பட்டுள்ளது என்று உணரவேண்டியது இரண்டாவது அக்கறை!
‘பொருளைப்பற்றிக் கவலைப்படாது அங்கு சுட்டிக் காட்டுப்பட்டுள்ளது’ என்று பார்த்தோமல்லவா? இதுதான் ‘சொன்மை தெரிதல்’!
சேனாவரையரின் எடுத்துக்காட்டைக் கணலாம்:
‘நீ என் கிளவி’ என்ற தொல்காப்பியத் தொடரைக் காட்டுகிறார் ; இத் தொடரில் வந்துள்ள ‘நீ’ சுட்டுப் பெயரா இல்லையா என்பது பற்றியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை; ‘நீ’ எனும் சொல் (கிளவி) மட்டுமே சுட்டப்படுவது! பொருளைப்பற்றிக் கவலைப்படாமல் , வெறுமனே சொல் மட்டும் சுட்டப்படுதலே ‘சொன்மை தெரிதல்!’

சொன்மை தெரிதல் – சொல் மட்டும் சுட்டப்படலை அறிதல்.

எந்த ஒரு தமிழ்ச் சொல்லுக்கும் இந்த இரு பணிகளே உள என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் விளங்கும்!

தொல்காப்பியத்தின் இன்றியமையாமையும் தெளிவாகும்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 17, 2020 3:02 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (501)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது பெயரியலில் மூன்றாவது நூற்பா:
தெரிபுவேறு நிலையலுங் குறிப்பில் தோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே (பெயரியல் 3)

தெரிபுவேறு நிலையலும் – ஒரு சொல் வெளிப்படையாகப் பொருளைத் தெரிவித்தலும்,
குறிப்பில் தோன்றலும் – அந்தச் சொல்லின் பொருளானது குறிப்பாக உணர்த்தப்படுவதும்,
இருபாற்று என்ப பொருண்மை நிலையே – ஆகிய இரு வகைகள் உள்ளன ‘பொருண்மை’ நிலையில்.

அஃதாவது, ஒரு தமிழ்ச் சொல்லுக்குரிய பொருளானது, ஒன்று வெளிப்படையாக இருக்கும்; இல்லாவிட்டால் மறைமுகமாக (குறிப்பாக) இருக்கும்!

அவன், அவள், அவை, வந்தாள், புளியங்காய் – இப்படிப்பட்ட சொற்களின் பொருள் நமக்கு வெளிப்படையாகத் தெரிகிறது; இவற்றில் ‘குறிப்பு’ எதுவும் இல்லை!
ஆனால், வேறு பல சொற்களில் இந்த வெளிப்படைத் தன்மை இராது!

‘ஒருவர் வந்தார்’ – என்றால், வந்தது ஆணா ? பெண்ணா? என்ற தெளிவு இல்லையாயினும், சொல்லப்பட்ட இடம் நோக்கிக் குறிப்பால் அதன் பொருளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்; இதுதான் ‘குறிப்பில் தோன்றல்’!

ஒருவரின் செயல் நமக்குப் பிடிக்கவில்லை எனில் ‘நல்லா இருக்குடா நீ செய்தது!’ என்கிறோம்! இதில் ‘நல்லா’ என்பதற்குள்ள வெளிப்படைப் பொருளை நாம் கொள்ளக்கூடாது! ‘தீயது’ என்ற பொருளை நாம் கொள்கிறோமல்லவா? இதுதான் ‘குறிப்பில் தோன்றல்!’

ஆகுபெயர், உருவகம் , பிறிது மொழிதல் எல்லாம் ‘குறிப்பில் தோன்றல்’
என்பதில்தான் அடங்கும்!

அடுத்துச் சொற்களின் பாகுபாடுகளை – பிரிவுகளைக் கூறுகிறார்!:

சொல்லெனப் படுப பெயரே வினையென்
றாயிரண் டென்ப அறிந்திசி னோரே (பெயரியல் 4)

அஃதாவது-
‘சொல்’ என முதன்மையாக எடுத்துக்கொண்டால், ஒன்று அது பெயர்ச் சொல்லாக இருக்கவேண்டும்; இல்லையாயின் வினைச் சொல்லாக இருக்கவேண்டும்!

அப்படியானால் , இடை, உரி எல்லாம்?
அவசரப் படாதீர்கள்!
அடுத்த நூற்பாவில் விடை வருகிறது!:

இடைச்சொற் கிளவியும் உரிச்சொல் கிளவியும்
அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப (பெயரியல் 5)

நீங்கள் கேட்ட இடைச் சொல்லும் , உரிச்சொல்லும் மேலே குறிப்பிட்ட பெயர், வினைச் சொற்களைச் சார்ந்தே வரும் !

அதுமன் – என்பதில் உள்ள ‘மன்’ ஓர் இடைச் சொல்தான்; ஆனால் இது தனியாக ‘மன்’ என நின்று இங்கே பொருள் தராது!

அவர்கள் – என்பதில் உள்ள ‘கள்’ளும் ஓர் இடைச் சொல்தான்; ‘கள்’ என்பது மட்டும் இங்கே தனியாக நிற்காது; ‘கள்’ என்பது வேறு இடத்தில் தனியாக நிற்குமே என்றால் , அங்கு அது பெயர்ச் சொல்லாகவே நிற்கும்; இடைச் சொல்லாக நிற்காது!

கல்லாடனார் இங்கே இரு இலக்கண நுணுக்கங்களைத் தெரிவிக்கிறார்!

1 . ‘அதுமன், உறுகால் என்பன தம்மருங்கில் தோன்றின’ என்பது கல்லாடனாரின் முதல் நுணுக்கம்! இதனை வருமாறு விளக்கலாம் சிவலிங்கனாரின் உரைத் துணையுடன்.

‘அதுமன்’ என்பதில் உள்ள ‘மன்’ ஓர் இடைச்சொல் என முன்பே கண்டோம்; இந்த இடைச்சொல்லை நீக்கினாலும் ‘அது’ என்பதற்குப் பொருள் நிற்கும்; தவிர ‘மன்’ எனும் இடைசொல்லுக்கே ‘அதுவே’ முதலிய தனிப் பொருள்களும் உள்ளன. ஆகவே , இடைச்சொல் ‘மன்’ என்பது தனது சொந்தப் பொருளில் நின்று தோன்றுவதால் , இங்கே இந்த இடைச்சொல்லுக்குத் ‘தன்மருங்கு இடைச்சொல்’ எனப் பெயரிடுகிறார் கல்லாடனார்!

‘உறுகால்’ என்பதில் உள்ள ‘உறு’ ஓர் உரிச்சொல்; இந்த ‘உறு’வை நீக்கினால் , ‘கால்’ என்பது தனியே நின்றும் பொருளைத் தரும்; ‘உறு’வுக்கு ‘மிகுதி’ முதலிய பொருள்கள் உண்டு. ‘உறு’வுக்குத் தனித்த பொருள் தன்மை உள்ளதால், இந்த உரிச்சொல் , இங்கே ‘தன் மருங்கில் தோன்றிய உரிச்சொல்’ ஆகிறது!

2 . கல்லாடனாரின் அடுத்த எடுத்துக்காட்டு ‘அவன் உண்டான்’.

‘அவன்’ என்பதில் உள்ள ஈற்று ‘அன்’ , ஓர் இடைச்சொல்; இந்த ‘அன்’னை எடுத்துவிட்டால் , எஞ்சி நிற்கும் பகுதியான ‘அ’வுக்கு இங்கே பொருள் இல்லை! தனித்த பொருள் இந்த இடைச்சொல்லுக்கு இல்லாத காரணத்தால், இதனை நாம் ‘பெயர் மருங்கில் தோன்றும் இடைச் சொல்’ என அழைக்கலாம் என்பவர் கல்லாடனார்!
‘உண்டான்’ என்பதில் உள்ள ஈற்று ‘ஆன்’ , ஓர் இடைச்சொல்; இந்த ‘ஆன்’ என்பதை எடுத்துவிட்டால் , எஞ்சி நிற்கும் பகுதியான ‘உண்’ணுக்கு ஏவல் பொருள் மட்டுமே இருக்கும்; ‘உண்டான்’ என்பதிலுள்ள தொழில் தன்மை இராது! தனித்த பொருள் இல்லாத காரணத்தால், இந்த இடைச்சொல் ‘ஆன்’, ‘வினை மருங்கில் தோன்றும் இடைச் சொல்’ ! ( ‘உண்’ , வினையைக் குறித்தல் காண்க)

பெயர் மருங்கு , வினை மருங்கு ஆகிய இரண்டையும் பொதுவாகக் குறிக்கவே , பன்மையில் ‘அவற்று மருங்கு’ என்றார் கல்லாடனார்!
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 17, 2020 4:33 pm

அருமையான ஆராய்ச்சி கட்டுரைகள்.
மகத்தான 500 பதிவுகள்.

ஈகரையின் + எந்தன் தனிப்பட்ட வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 18, 2020 10:33 am

இரமணியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 1571444738 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 1571444738 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 75 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 75 of 84 Previous  1 ... 39 ... 74, 75, 76 ... 79 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக