புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 68 of 84 •
Page 68 of 84 • 1 ... 35 ... 67, 68, 69 ... 76 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
" ஊர் சிரித்தது "
இதில் " ஊர் " என்னும் சொல் மக்களைக் குறித்தது . " மக்கள் " என்னும் சொல் உயர்திணையைக் குறித்தாலும் " சிரித்தது " என்ற அஃறிணை வினை ஏற்றது . தொல்காப்பியர் கூறிய பட்டியலில் ஊர் ,உலகம் என்ற சொற்கள் இடம்பெறவில்லையே ! விளக்கவும் .
" ஊர் சிரித்தது "
இதில் " ஊர் " என்னும் சொல் மக்களைக் குறித்தது . " மக்கள் " என்னும் சொல் உயர்திணையைக் குறித்தாலும் " சிரித்தது " என்ற அஃறிணை வினை ஏற்றது . தொல்காப்பியர் கூறிய பட்டியலில் ஊர் ,உலகம் என்ற சொற்கள் இடம்பெறவில்லையே ! விளக்கவும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நன்றி ஜெகதீசன் அவர்களே !
‘அன்ன பிறவும்’ என்ற நூற்பாச் சொற்களில் ‘ஊர்’ அடங்கும் !
‘அன்ன பிறவும்’ என்ற நூற்பாச் சொற்களில் ‘ஊர்’ அடங்கும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (444)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சென்ற நூற்பாவில் (கிளவி. 56) , பேசுவான் குறிப்பால் உயர்திணையாய் நிற்கும் 18 சொற்களையும், அவை அஃறிணை முடிபு கொள்ளும் வகையையும் கண்டோம் !
அடுத்த நூற்பாவில் நேரடியான உயர்திணைப் பொருளில் வழங்கும் சொற்களைக் கூறி இவையும் அஃறிணை முடிபே கொள்ளும் என்கிறார் தொகாப்பியர் ! –
“காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா உயர்திணை மேன ” (கிளவி. 57)
அஃதவது , கீழ்வரும் 10 சொற்களும் , இவை போன்ற பிற சொற்களும் , உயர்திணைச் சொற்களானாலும் , அஃறிணை முடிவே , தொடரில் , கொள்ளும் ! :-
1 . காலம்
2 . உலகம்
3 . உயிர்
4 . உடம்பு
5 . பால்வரை தெய்வம்
6 . வினை
7 . பூதம்
8 . ஞாயிறு
9 . திங்கள்
10 . சொல்
இவற்றை, உரையாசிரியர்தம் எடுத்துக்காட்டுகளுடன் , பார்ப்போம் !
1 . ‘காலம்’ என்பது காலக் கடவுளை; அஃதாவது கூற்றுவனை (கூற்றுவன் - எமன்)
எனவே , ‘காலம்’ என்பது உயர்திணைச் சொல் ஆகிறது ! ‘எமன்’ , உயர்திணைதானே?
ஆனால் உயர்திணைச் சொல் ஆனாலும், அஃறிணை முடிவு கொடுத்துக் கூறவேண்டும் என்ற மேல் விதிப்படி , ‘இவற்குக் காலம் ஆயிற்று’ எனக் கூறவேண்டும் !
‘அந்த மருந்தே இவனுக்கு எமனாயிற்று’ , என்று இந்நாளில் கூறுவதை ஒப்பிட்டால் , , ‘இவற்குக் காலம் ஆயிற்று’ என்பது உங்களுக்கு விளங்கும் ; இல்லையேல் விளங்காது !
2 . ‘உலகு பசித்தது’ - ‘உலகு’ , என்பது இங்கு உலக உருண்டையை அல்ல! உலகத்து மக்களை ! எனவே , இங்கு ‘உலகு’ என்பது உயர்திணை !
ஆனாலும் , அஃறிணை முடிபு கொடுத்து , ‘உலகு பசித்தது’ எனவேண்டும் !
உலகு பசித்தார் ×
உலகு பசித்தது √
3. ‘உயிர் போயிற்று’ – இங்கே ‘உயிர்’ என்பது மனித உயிர் ! மனிதன் , எப்படி உயர்திணையோ அதுபோல , மனித உயிரும் உயர்திணைதான் !
இங்கே , ‘உயிர்’ , உயர்திணையாக இருந்தலும் , அஃறிணை முடிபு கொடுத்துக் கூறவேண்டும் !
உயிர் போனார் ×
உயிர் போயிற்று √
4 . ‘உடம்பு நன்று’ - இங்கே ‘உடம்பு ’ என்பது , மனித உடம்பை ! மேலே சொன்னதுபோல , ’மனிதன்’ உயர்திணைச் சொல்லாதலால், மனித ’உடம்பு’ம் உயர்திணைச் சொல்தான் !
ஆனாலும் , அஃறிணை முடிவைக் கொடுத்தே சொல்லவேண்டும் !
உடம்பு நல்லன் ×
உடம்பு நன்று √
5 . ‘இவற்குத் தெய்வம் ஆயிற்று’ - ‘தெய்வம்’ என்பது உயர்திணைச் சொல் !
ஆனால் , அஃறிணை முடிவு கொடுத்து , ‘ஆயிற்று’ என முடிக்கவேண்டும் !
இவற்குத் தெய்வம் ஆனார் ×
இவற்குத் தெய்வம் ஆயிற்று √
‘தெய்வம் ஆனார்’ எனச் சொன்னால், ‘இறந்தார்’ என்ற பிழைப் பொருள் கிடைக்கும் என்பதைக் கவனிக்க !
6 . ‘இவற்கு வினை நன்று’ - இங்கே ‘வினை’ , அறத் தெய்வத்தைக் குறிக்கும் ! ( Verb என்ற பொருளை இங்கே எண்ணித் தடுமாறக் கூடாது !)
அறத் தெய்வத்தைக் குறிப்பதால் , ‘வினை’ , உயர்திணை !
ஆனாலும் , அஃறிணை முடிபைக் கொடுத்துத் தொடரை எழுதுக என்பதே தொல்காப்பியர் விதி !
இவற்கு வினை நல்லவர் ×
இவற்கு வினை நன்று √
7 . ‘இவனைப் பூதம் புடைத்தது’ – இங்கே ‘பூதம்’ , ’தெய்வம்’ ஆகும் ! இதனால் , ‘பூதம்’ , உயர்திணை !
ஆனால் , அஃறிணை கொடுத்துத் தொடரைக் கூறவேண்டும் !
பூதம் அடித்தார் ×
பூதம் அடித்தாள்×
பூதம் அடித்தது √
(புடைத்தல் - அடித்தல்)
8 . ‘ஞாயிறு எழுந்தது’ – இங்கே ‘ஞாயிறு’ , ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்கும் !
ஆயினும் , அஃறிணை முடிவு கொடுத்துத் தொடரை அமைக்கவேண்டும் !
ஞாயிறு எழுந்தார் ×
ஞாயிறு எழுந்தாள் ×
ஞயிறு எழுந்தது √
9 . ‘திங்கள் எழுந்தது’ – திங்கள் – திங்கட் கடவுள் !
திங்கள் எழுந்தார் ×
திங்கள் எழுந்தாள் ×
திங்கள் எழுந்தது √
10. ‘சொல் நன்று’ – இங்கே ‘சொல்’ – சொல் மடந்தை (கல்லாடனார் இப்படித்தன் உரை எழுதுகிறார்; சொல் மடந்தை - சரசுவதி).
‘சொல்’ என்ற உயர்திணைச் சொல்லை, அஃறிணை முடிவு கொடுத்துக் கூறும்போது ,
சொல் நல்லவர் ×
சொல் நல்லவள்×
சொல் நன்று√
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சென்ற நூற்பாவில் (கிளவி. 56) , பேசுவான் குறிப்பால் உயர்திணையாய் நிற்கும் 18 சொற்களையும், அவை அஃறிணை முடிபு கொள்ளும் வகையையும் கண்டோம் !
அடுத்த நூற்பாவில் நேரடியான உயர்திணைப் பொருளில் வழங்கும் சொற்களைக் கூறி இவையும் அஃறிணை முடிபே கொள்ளும் என்கிறார் தொகாப்பியர் ! –
“காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா உயர்திணை மேன ” (கிளவி. 57)
அஃதவது , கீழ்வரும் 10 சொற்களும் , இவை போன்ற பிற சொற்களும் , உயர்திணைச் சொற்களானாலும் , அஃறிணை முடிவே , தொடரில் , கொள்ளும் ! :-
1 . காலம்
2 . உலகம்
3 . உயிர்
4 . உடம்பு
5 . பால்வரை தெய்வம்
6 . வினை
7 . பூதம்
8 . ஞாயிறு
9 . திங்கள்
10 . சொல்
இவற்றை, உரையாசிரியர்தம் எடுத்துக்காட்டுகளுடன் , பார்ப்போம் !
1 . ‘காலம்’ என்பது காலக் கடவுளை; அஃதாவது கூற்றுவனை (கூற்றுவன் - எமன்)
எனவே , ‘காலம்’ என்பது உயர்திணைச் சொல் ஆகிறது ! ‘எமன்’ , உயர்திணைதானே?
ஆனால் உயர்திணைச் சொல் ஆனாலும், அஃறிணை முடிவு கொடுத்துக் கூறவேண்டும் என்ற மேல் விதிப்படி , ‘இவற்குக் காலம் ஆயிற்று’ எனக் கூறவேண்டும் !
‘அந்த மருந்தே இவனுக்கு எமனாயிற்று’ , என்று இந்நாளில் கூறுவதை ஒப்பிட்டால் , , ‘இவற்குக் காலம் ஆயிற்று’ என்பது உங்களுக்கு விளங்கும் ; இல்லையேல் விளங்காது !
2 . ‘உலகு பசித்தது’ - ‘உலகு’ , என்பது இங்கு உலக உருண்டையை அல்ல! உலகத்து மக்களை ! எனவே , இங்கு ‘உலகு’ என்பது உயர்திணை !
ஆனாலும் , அஃறிணை முடிபு கொடுத்து , ‘உலகு பசித்தது’ எனவேண்டும் !
உலகு பசித்தார் ×
உலகு பசித்தது √
3. ‘உயிர் போயிற்று’ – இங்கே ‘உயிர்’ என்பது மனித உயிர் ! மனிதன் , எப்படி உயர்திணையோ அதுபோல , மனித உயிரும் உயர்திணைதான் !
இங்கே , ‘உயிர்’ , உயர்திணையாக இருந்தலும் , அஃறிணை முடிபு கொடுத்துக் கூறவேண்டும் !
உயிர் போனார் ×
உயிர் போயிற்று √
4 . ‘உடம்பு நன்று’ - இங்கே ‘உடம்பு ’ என்பது , மனித உடம்பை ! மேலே சொன்னதுபோல , ’மனிதன்’ உயர்திணைச் சொல்லாதலால், மனித ’உடம்பு’ம் உயர்திணைச் சொல்தான் !
ஆனாலும் , அஃறிணை முடிவைக் கொடுத்தே சொல்லவேண்டும் !
உடம்பு நல்லன் ×
உடம்பு நன்று √
5 . ‘இவற்குத் தெய்வம் ஆயிற்று’ - ‘தெய்வம்’ என்பது உயர்திணைச் சொல் !
ஆனால் , அஃறிணை முடிவு கொடுத்து , ‘ஆயிற்று’ என முடிக்கவேண்டும் !
இவற்குத் தெய்வம் ஆனார் ×
இவற்குத் தெய்வம் ஆயிற்று √
‘தெய்வம் ஆனார்’ எனச் சொன்னால், ‘இறந்தார்’ என்ற பிழைப் பொருள் கிடைக்கும் என்பதைக் கவனிக்க !
6 . ‘இவற்கு வினை நன்று’ - இங்கே ‘வினை’ , அறத் தெய்வத்தைக் குறிக்கும் ! ( Verb என்ற பொருளை இங்கே எண்ணித் தடுமாறக் கூடாது !)
அறத் தெய்வத்தைக் குறிப்பதால் , ‘வினை’ , உயர்திணை !
ஆனாலும் , அஃறிணை முடிபைக் கொடுத்துத் தொடரை எழுதுக என்பதே தொல்காப்பியர் விதி !
இவற்கு வினை நல்லவர் ×
இவற்கு வினை நன்று √
7 . ‘இவனைப் பூதம் புடைத்தது’ – இங்கே ‘பூதம்’ , ’தெய்வம்’ ஆகும் ! இதனால் , ‘பூதம்’ , உயர்திணை !
ஆனால் , அஃறிணை கொடுத்துத் தொடரைக் கூறவேண்டும் !
பூதம் அடித்தார் ×
பூதம் அடித்தாள்×
பூதம் அடித்தது √
(புடைத்தல் - அடித்தல்)
8 . ‘ஞாயிறு எழுந்தது’ – இங்கே ‘ஞாயிறு’ , ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்கும் !
ஆயினும் , அஃறிணை முடிவு கொடுத்துத் தொடரை அமைக்கவேண்டும் !
ஞாயிறு எழுந்தார் ×
ஞாயிறு எழுந்தாள் ×
ஞயிறு எழுந்தது √
9 . ‘திங்கள் எழுந்தது’ – திங்கள் – திங்கட் கடவுள் !
திங்கள் எழுந்தார் ×
திங்கள் எழுந்தாள் ×
திங்கள் எழுந்தது √
10. ‘சொல் நன்று’ – இங்கே ‘சொல்’ – சொல் மடந்தை (கல்லாடனார் இப்படித்தன் உரை எழுதுகிறார்; சொல் மடந்தை - சரசுவதி).
‘சொல்’ என்ற உயர்திணைச் சொல்லை, அஃறிணை முடிவு கொடுத்துக் கூறும்போது ,
சொல் நல்லவர் ×
சொல் நல்லவள்×
சொல் நன்று√
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (445)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சென்ற ஆய்வில் , ‘காலம்’ முதலிய 10 சொற்களும் , உயர்திணைச் சொற்களாக இருப்பினும் , அவை , தொடரில் , அஃறிணையாக வரும் எனத் தொல்காப்பியர் கூறியதைப் பார்த்தோம் !
இதற்கு அடுத்த இரு நூற்பாக்களில் (கிளவி. 58 ,59), நமது ஐயப்பாடு ஒன்றைக் களைகிறார் தொல்காப்பியர் !
ஐயப்பாடு என்னவெனில் , ‘காலம்’ எனபது , ‘உயர்திணைச்சொல்’ ; சரி ! இது , அஃறிணை முடிபு கொள்ளும் ( ‘காலம் ஆயிர்று’) , சரி ! ஆனால் , ‘காலன்’ என்று வந்தால் ?
இதுதான் நம் ஐயம் !
தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் - ’காலம்’ என்பது , ஈறு திரியாது , அப்படியே ‘காலம்’ என்று நின்றால்தான் ‘அஃறிணை முடிவு’ சரியாகும் ! ஈறு திரிந்து , ‘காலன்’ என்று வந்தால் , அப்போது , அஃறிணை முடிவு வராது ; உயர்திணை முடிவுதான் வரும் !
1 . காலன் வந்தது ×
காலன் வந்தான் √
2 . உலகம் பசித்தார் ×
உலகர் பசித்தார் √
3 . உயிர்க்கிழவன் போயிற்று×
உயிர்க்கிழவன் போயினான்√
4. நாமகள் நன்று ×
நாமகள் நல்லள் √ (நாமகள் - சொல்)
முன் நூற்பாவில் (கிளவி.56) , ‘குடிமை’ முதலிய சொற்கள் , பேசுவோன் மனத்தில் உயர்திணைக் குறிப்பு இருந்தாலும் , தொடரில் , அஃறிணையாகத்தான் வரும் எனக் கூறியிருந்தார் தொல்காப்பியர் !
அதன்படி , ‘குடிமை நன்று’ என்றுதான் வரும் , ‘குடிமை நல்லர்’ என வராது எனப் பார்த்தோம் !
ஆனால் , ‘குடிமை’ என்ற சொல் , இதே வடிவில் நிற்கும்போதுதான் அஃறிணை முடிவு கொள்ளுமே தவிர , சொல் திரிந்து வந்தால் , அஃறிணை முடிபு கொள்ளாது, உயர்திணை முடிவுதான் கொள்ளும் என்று அடுத்துச் சொல்கிறார் !
‘குடிமை’ என்பது ‘குடிமையன்’ என வந்தால் இதுதான் ‘திரிபு’ ! ‘திரிபு’ என்றால் என்னமோ ஏதோ என நினைக்கவேண்டாம் !
5 . குடிமை வந்தான் ×
குடிமையன் வந்தான் √
6 . குடிமை நன்று √
குடிமை நல்லன் ×
7 . குடிமையன் நல்லன் √
குடிமையன் நன்று ×
‘உலகம்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் !
இது உயர்திணைச் சொல் ! இருந்தாலும் தொல்காப்பியர் விதிப்படி (கிளவி . 57), தொடரில் வரும்போது , அஃறிணை முடிவுதான் கொள்ளும் இச் சொல் ! எடுத்துக்காட்டு –
உலகம் கலகலத்தார் ×
உலகம் கலகலத்தது √
ஆனால் இதே , ‘உலகம்’ என்ற சொல் திரிந்து , ‘உலகார்’ என ஆகிறது என வைத்துக்கொள்வோம் ! அப்போது –
உலகார் வாடியது ×
உலகார் வாடினர் √ (இங்கு உயர்திணை முடிவு வந்துள்ளதைக் காண்க !)
இப்போது பார்த்த இக் கருத்துகளைச் சொல்பவைதாம் கீழ் வரும் இரு நூற்பாக்கள் !-
“நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே” (கிளவி. 58)
“இசைத்தலு முரிய வேறிடத் தான” (கிளவி .59)
இங்கே ,
‘நின்றாங்கு’ – இயல்பாக ; திரிபு இலாது
‘வேறிடத்தான’ - திரிபு பெற்ற இடங்களில்
இசைத்தல் – உயர்திணை முடிவு கொள்ளல்
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சென்ற ஆய்வில் , ‘காலம்’ முதலிய 10 சொற்களும் , உயர்திணைச் சொற்களாக இருப்பினும் , அவை , தொடரில் , அஃறிணையாக வரும் எனத் தொல்காப்பியர் கூறியதைப் பார்த்தோம் !
இதற்கு அடுத்த இரு நூற்பாக்களில் (கிளவி. 58 ,59), நமது ஐயப்பாடு ஒன்றைக் களைகிறார் தொல்காப்பியர் !
ஐயப்பாடு என்னவெனில் , ‘காலம்’ எனபது , ‘உயர்திணைச்சொல்’ ; சரி ! இது , அஃறிணை முடிபு கொள்ளும் ( ‘காலம் ஆயிர்று’) , சரி ! ஆனால் , ‘காலன்’ என்று வந்தால் ?
இதுதான் நம் ஐயம் !
தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் - ’காலம்’ என்பது , ஈறு திரியாது , அப்படியே ‘காலம்’ என்று நின்றால்தான் ‘அஃறிணை முடிவு’ சரியாகும் ! ஈறு திரிந்து , ‘காலன்’ என்று வந்தால் , அப்போது , அஃறிணை முடிவு வராது ; உயர்திணை முடிவுதான் வரும் !
1 . காலன் வந்தது ×
காலன் வந்தான் √
2 . உலகம் பசித்தார் ×
உலகர் பசித்தார் √
3 . உயிர்க்கிழவன் போயிற்று×
உயிர்க்கிழவன் போயினான்√
4. நாமகள் நன்று ×
நாமகள் நல்லள் √ (நாமகள் - சொல்)
முன் நூற்பாவில் (கிளவி.56) , ‘குடிமை’ முதலிய சொற்கள் , பேசுவோன் மனத்தில் உயர்திணைக் குறிப்பு இருந்தாலும் , தொடரில் , அஃறிணையாகத்தான் வரும் எனக் கூறியிருந்தார் தொல்காப்பியர் !
அதன்படி , ‘குடிமை நன்று’ என்றுதான் வரும் , ‘குடிமை நல்லர்’ என வராது எனப் பார்த்தோம் !
ஆனால் , ‘குடிமை’ என்ற சொல் , இதே வடிவில் நிற்கும்போதுதான் அஃறிணை முடிவு கொள்ளுமே தவிர , சொல் திரிந்து வந்தால் , அஃறிணை முடிபு கொள்ளாது, உயர்திணை முடிவுதான் கொள்ளும் என்று அடுத்துச் சொல்கிறார் !
‘குடிமை’ என்பது ‘குடிமையன்’ என வந்தால் இதுதான் ‘திரிபு’ ! ‘திரிபு’ என்றால் என்னமோ ஏதோ என நினைக்கவேண்டாம் !
5 . குடிமை வந்தான் ×
குடிமையன் வந்தான் √
6 . குடிமை நன்று √
குடிமை நல்லன் ×
7 . குடிமையன் நல்லன் √
குடிமையன் நன்று ×
‘உலகம்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் !
இது உயர்திணைச் சொல் ! இருந்தாலும் தொல்காப்பியர் விதிப்படி (கிளவி . 57), தொடரில் வரும்போது , அஃறிணை முடிவுதான் கொள்ளும் இச் சொல் ! எடுத்துக்காட்டு –
உலகம் கலகலத்தார் ×
உலகம் கலகலத்தது √
ஆனால் இதே , ‘உலகம்’ என்ற சொல் திரிந்து , ‘உலகார்’ என ஆகிறது என வைத்துக்கொள்வோம் ! அப்போது –
உலகார் வாடியது ×
உலகார் வாடினர் √ (இங்கு உயர்திணை முடிவு வந்துள்ளதைக் காண்க !)
இப்போது பார்த்த இக் கருத்துகளைச் சொல்பவைதாம் கீழ் வரும் இரு நூற்பாக்கள் !-
“நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே” (கிளவி. 58)
“இசைத்தலு முரிய வேறிடத் தான” (கிளவி .59)
இங்கே ,
‘நின்றாங்கு’ – இயல்பாக ; திரிபு இலாது
‘வேறிடத்தான’ - திரிபு பெற்ற இடங்களில்
இசைத்தல் – உயர்திணை முடிவு கொள்ளல்
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (446)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நடைபோடுகிறோம் !
கிளவியாக்கம் தொடர் இலக்கணம் (Grammar of Syntax ) கூறுவது என்பதை நான் இங்கே குறிக்கவேண்டும் !
‘அவன் கண்களால் அழகுள்ளவன்’ என்பதைத் தொல்காப்பியர் கால எழுத்து உரைநடையில் , ‘அவன் கண் நல்லன்’ என்றனர் !
இங்கே , கண்கள்’ என்றுதானே வரவேண்டும்? ‘கண்’ என ஒருமையில் வரலாமா?
இந்த நம் ஐயத்திற்கு விடையாகத் தொல்காப்பியர் , ‘கண்’ என ஒருமைச் சொல் வந்தால் போதும்; ‘கண்கள்’ என்ற பன்மைச் சொல் கட்டாயமில்லை என்கிறார் !:-
“கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறுங் கடப்பா டிலவே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே” (கிளவி. 61)
‘கண்’ , ‘தோள்’ , ‘முலை’ – இவை பன்மைப் பொருளில்தான் வரும் ! இவை ‘இருகண்கள்’ , ‘இருதோள்கள்’ , ‘இருமுலைகள்’ என்றுதான் பொருள்படும் !
- இதுவே ‘பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி’ என்பதன் பொருள் !
தொடரில் இவை பயிலும்போது ‘கண்’ என்பதுபோல ஒருமைச் சொல் ஆளப்பட்டுப் பயிலலாம் !
அவன் கண் நல்லன் √
- இங்கே , ’அவன்’ என்பது , ‘முதல்’ !
இந்த முதலுக்கு உரிய வினை ‘நல்லன்’!
அஃதாவது ‘நல்லன்’ என்ற வினை , ‘கண்’ எனும் சினைக்கு உரியதல்ல! ‘கண்’ எனும் சினைக்கு உரிய வினையாயின் , தொடர் ‘கண் நல்லது’என்றுதான் வரவேண்டும் !
இந்த நுணுக்கம்தான் , ‘தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே’ என்ற அடியில் சுட்டப்படுகிறது !
‘தம் வினைக்கு’ – ‘கண்’ போன்ற உறுப்பின் வினைக்கு,
‘இயலும் எழுத்து அலங்கடையே’ – ஏற்ற வினை கொண்ட ஈற்றெழுத்து வராத போது !
கண் நல்லன் – இத் தொடரில் ‘அவன்’ , தோன்றா எழுவாய் ! ‘அவன்’ என்பதற்கு ஏற்பவே , பயனிலையாக , ‘நல்லன்’ என்ற ‘ன்’ ஈறு வந்துள்ளது !
கண் நல்லர் - இத் தொடரில் ‘அவர்’ , தோன்றா எழுவாய் ! ‘அவர்’ என்பதற்கு ஏற்பவே , ‘நல்லர்’ என்ற பலர்பால் ஈறாகிய ‘ர்’ வந்துள்ளது !
‘ன்’ , ‘ர்’ எழுத்துகள், ‘கண்’ போன்ற சினைகளுக்கான வினைச்சொற்கள் பெறும் ஈறுகள் அல்ல!
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிளவியாக்கத்தில் நடைபோடுகிறோம் !
கிளவியாக்கம் தொடர் இலக்கணம் (Grammar of Syntax ) கூறுவது என்பதை நான் இங்கே குறிக்கவேண்டும் !
‘அவன் கண்களால் அழகுள்ளவன்’ என்பதைத் தொல்காப்பியர் கால எழுத்து உரைநடையில் , ‘அவன் கண் நல்லன்’ என்றனர் !
இங்கே , கண்கள்’ என்றுதானே வரவேண்டும்? ‘கண்’ என ஒருமையில் வரலாமா?
இந்த நம் ஐயத்திற்கு விடையாகத் தொல்காப்பியர் , ‘கண்’ என ஒருமைச் சொல் வந்தால் போதும்; ‘கண்கள்’ என்ற பன்மைச் சொல் கட்டாயமில்லை என்கிறார் !:-
“கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறுங் கடப்பா டிலவே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே” (கிளவி. 61)
‘கண்’ , ‘தோள்’ , ‘முலை’ – இவை பன்மைப் பொருளில்தான் வரும் ! இவை ‘இருகண்கள்’ , ‘இருதோள்கள்’ , ‘இருமுலைகள்’ என்றுதான் பொருள்படும் !
- இதுவே ‘பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி’ என்பதன் பொருள் !
தொடரில் இவை பயிலும்போது ‘கண்’ என்பதுபோல ஒருமைச் சொல் ஆளப்பட்டுப் பயிலலாம் !
அவன் கண் நல்லன் √
- இங்கே , ’அவன்’ என்பது , ‘முதல்’ !
இந்த முதலுக்கு உரிய வினை ‘நல்லன்’!
அஃதாவது ‘நல்லன்’ என்ற வினை , ‘கண்’ எனும் சினைக்கு உரியதல்ல! ‘கண்’ எனும் சினைக்கு உரிய வினையாயின் , தொடர் ‘கண் நல்லது’என்றுதான் வரவேண்டும் !
இந்த நுணுக்கம்தான் , ‘தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே’ என்ற அடியில் சுட்டப்படுகிறது !
‘தம் வினைக்கு’ – ‘கண்’ போன்ற உறுப்பின் வினைக்கு,
‘இயலும் எழுத்து அலங்கடையே’ – ஏற்ற வினை கொண்ட ஈற்றெழுத்து வராத போது !
கண் நல்லன் – இத் தொடரில் ‘அவன்’ , தோன்றா எழுவாய் ! ‘அவன்’ என்பதற்கு ஏற்பவே , பயனிலையாக , ‘நல்லன்’ என்ற ‘ன்’ ஈறு வந்துள்ளது !
கண் நல்லர் - இத் தொடரில் ‘அவர்’ , தோன்றா எழுவாய் ! ‘அவர்’ என்பதற்கு ஏற்பவே , ‘நல்லர்’ என்ற பலர்பால் ஈறாகிய ‘ர்’ வந்துள்ளது !
‘ன்’ , ‘ர்’ எழுத்துகள், ‘கண்’ போன்ற சினைகளுக்கான வினைச்சொற்கள் பெறும் ஈறுகள் அல்ல!
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (447)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலே ஆய்ந்த கிளவியாக்கம் நூற்பா 61, அவ்வியலின் கடைசி நூற்பா!
இப்போது சொல்லதிகாரத்தின் இரண்டாவது இயல் – வேற்றுமை இயல் !
பெயர்ச் சொல்லானது , வேற்றுமை உருபை ஏற்றுப் பொருள் வேற்றுமை காட்டும் இயல்தான் ‘வேற்றுமை இயல்’!
வேற்றுமை இயலின் முதல் நூற்பா இது ! -
“வேற்றுமை தாமே ஏழென மொழிப” (வேற். 1)
‘வேற்றுமையின் தொகை ஏழு என்று சொல்வார்கள் ’ – இதுவே நூற்பாவின் பொருள் !
இதற்கு அடுத்த நூற்பா ! -
“விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே” (வேற். 2)
‘பெயர்கள் விளியை ஏற்பதால், அந்த விளியை ஒரு வேற்றுமையாகக் கருதி , வேற்றுமை மொத்தம் எட்டு ஆகும் !’- இதுவே இந் நூற்பாவின் பொருள் !
இந்த இரு நூற்பாக்களின் நடைகளையும் பார்க்கும்போது , நமக்கு இரு கருத்துகள் தோன்றுகின்றன! –
1 . விளி வேற்றுமை சிறப்பில்லாதது
2 . தொல்காப்பியருக்கு முந்தைய இலக்கணப் புலவர்கள் , வேற்றுமை மொத்தம் ஏழு என்றே கூறிவந்தனர் !
இந்த நமது கருத்துக்கு ஆதரவாக நிற்கிறது இளம்பூரணர் உரை !
1 . இளம்பூரணர் – “ வேற்றுமை தாமே ஏழென மொழிப எனப் பிறர் மதம் கூறி இச் சூத்திரத்தால் தந் துணிபு உரைத்தார்” என்கிறார் ! (வேற். 2 இளம். உரை)
பிறர் மதம் – பிறர் கொள்கை (Opinion)
தந்துணிபு = தம் + துணிபு; தம்முடைய முடிவு.
2 . இளம்பூரணர் – “விளிவேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய … விளி யென்னு மீற்ற எனப் பிரித்துக் கூறினார்” (வேற். 3 இளம். உரை).
இளம்பூரணர் வாய் மொழியில் தொல்காப்பியருக்கு முந்தைய தமிழ் இலக்கண ஆசிரியர் பற்றிய குறிப்பைப் பெறும்போது நமக்கு மெய்ச் சிலிர்ப்பு ஏற்படுகிறது !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மேலே ஆய்ந்த கிளவியாக்கம் நூற்பா 61, அவ்வியலின் கடைசி நூற்பா!
இப்போது சொல்லதிகாரத்தின் இரண்டாவது இயல் – வேற்றுமை இயல் !
பெயர்ச் சொல்லானது , வேற்றுமை உருபை ஏற்றுப் பொருள் வேற்றுமை காட்டும் இயல்தான் ‘வேற்றுமை இயல்’!
வேற்றுமை இயலின் முதல் நூற்பா இது ! -
“வேற்றுமை தாமே ஏழென மொழிப” (வேற். 1)
‘வேற்றுமையின் தொகை ஏழு என்று சொல்வார்கள் ’ – இதுவே நூற்பாவின் பொருள் !
இதற்கு அடுத்த நூற்பா ! -
“விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே” (வேற். 2)
‘பெயர்கள் விளியை ஏற்பதால், அந்த விளியை ஒரு வேற்றுமையாகக் கருதி , வேற்றுமை மொத்தம் எட்டு ஆகும் !’- இதுவே இந் நூற்பாவின் பொருள் !
இந்த இரு நூற்பாக்களின் நடைகளையும் பார்க்கும்போது , நமக்கு இரு கருத்துகள் தோன்றுகின்றன! –
1 . விளி வேற்றுமை சிறப்பில்லாதது
2 . தொல்காப்பியருக்கு முந்தைய இலக்கணப் புலவர்கள் , வேற்றுமை மொத்தம் ஏழு என்றே கூறிவந்தனர் !
இந்த நமது கருத்துக்கு ஆதரவாக நிற்கிறது இளம்பூரணர் உரை !
1 . இளம்பூரணர் – “ வேற்றுமை தாமே ஏழென மொழிப எனப் பிறர் மதம் கூறி இச் சூத்திரத்தால் தந் துணிபு உரைத்தார்” என்கிறார் ! (வேற். 2 இளம். உரை)
பிறர் மதம் – பிறர் கொள்கை (Opinion)
தந்துணிபு = தம் + துணிபு; தம்முடைய முடிவு.
2 . இளம்பூரணர் – “விளிவேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய … விளி யென்னு மீற்ற எனப் பிரித்துக் கூறினார்” (வேற். 3 இளம். உரை).
இளம்பூரணர் வாய் மொழியில் தொல்காப்பியருக்கு முந்தைய தமிழ் இலக்கண ஆசிரியர் பற்றிய குறிப்பைப் பெறும்போது நமக்கு மெய்ச் சிலிர்ப்பு ஏற்படுகிறது !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M. Jagadeesanபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 26/11/2016
தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இலக்கண நூல்கள் நமக்குக் கிடைக்காமல் போனது ,தமிழ்நாடு செய்த தவக்குறைவே ஆகும்.
நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (448)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘விளி’யோடு சேர்த்து , வேற்றுமை உருபுகள் எட்டு என்றார் தொல்காப்பியர் !
அந்த எட்டு எவை என்று அடுத்துக் கூறுகிறார் !:-
“அவைதாம்
பெயர்ஐ ஒடுகு”
இன்அது கண்விளி என்னும் ஈற்ற “ (வேற். 3)
இந் நூற்பாவில் தொல்காப்பியர் அந்த எட்டு வேற்றுமை உருபுகளைப் பட்டியலிடுகிறார் :-
1. பெயர்
2. ஐ
3. ஒடு
4. கு
5. இன்
6. அது
7 . கண்
8.விளி
நூற்பாவில் உள்ள ‘ஈற்ற’ என்பதற்குப் பொருள் என்ன?
சேனாவரையர் விளக்குகிறார் - “விளி வேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னாது ‘விளியென்னு மீற்ற’ எனப் பிரித்துக் கூறினார்.
”
விளக்கிய – விளக்க
‘உம்மைத் தொகை’ என்றால் உங்களுக்குத் தெரியும் !
‘பலபெயர் உம்மைத் தொகை’ என்றால் ?
சேனாவரையர் இந்த நூற்பாவின் உரையில் விளக்குகிறார் !
அவர் விளக்கப்படி - ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ என நிறுத்தினால் , இதுதான் ‘பலபெயர் உம்மைத் தொகை’!
இச் சொற்றொடரை விரித்தால் எப்படி விரிப்போம்?
‘பெயரும் ஐயும் ஒடுவும் குவும் இன்னும் அதுவும் கண்ணும்’ என்றுதானே விரிக்கமுடியும்?
எனவே, ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ என்ற தொடரில், ‘உம்’ மறைந்து (தொகைந்து) வந்துள்ளதாலும் , ‘பெயர்’ முதலிய பல பெயர்கள் வந்துள்ளதாலும்தான் இது ‘பலபெயர் உம்மைத் தொகை’!
1. மேற் பட்டியலில் , ‘பெயர்’ என்பது வேறு ஒன்றுமில்லை ; எழுவாய்தான் !
‘பெயர் வேற்றுமை’ என்றாலும் , ‘எழுவாய் வேற்றுமை’ என்றாலும் , ‘முதல் வேற்றுமை’ என்றாலும் ஒன்றுதான் !
’சாந்தி வந்தாள்’ – இதில் ‘சாந்தி’ , எழுவாய்; இதுவே ‘பெயர் வேற்றுமை’ என்றும் அறியப்படும் !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘விளி’யோடு சேர்த்து , வேற்றுமை உருபுகள் எட்டு என்றார் தொல்காப்பியர் !
அந்த எட்டு எவை என்று அடுத்துக் கூறுகிறார் !:-
“அவைதாம்
பெயர்ஐ ஒடுகு”
இன்அது கண்விளி என்னும் ஈற்ற “ (வேற். 3)
இந் நூற்பாவில் தொல்காப்பியர் அந்த எட்டு வேற்றுமை உருபுகளைப் பட்டியலிடுகிறார் :-
1. பெயர்
2. ஐ
3. ஒடு
4. கு
5. இன்
6. அது
7 . கண்
8.விளி
நூற்பாவில் உள்ள ‘ஈற்ற’ என்பதற்குப் பொருள் என்ன?
சேனாவரையர் விளக்குகிறார் - “விளி வேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னாது ‘விளியென்னு மீற்ற’ எனப் பிரித்துக் கூறினார்.
”
விளக்கிய – விளக்க
‘உம்மைத் தொகை’ என்றால் உங்களுக்குத் தெரியும் !
‘பலபெயர் உம்மைத் தொகை’ என்றால் ?
சேனாவரையர் இந்த நூற்பாவின் உரையில் விளக்குகிறார் !
அவர் விளக்கப்படி - ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ என நிறுத்தினால் , இதுதான் ‘பலபெயர் உம்மைத் தொகை’!
இச் சொற்றொடரை விரித்தால் எப்படி விரிப்போம்?
‘பெயரும் ஐயும் ஒடுவும் குவும் இன்னும் அதுவும் கண்ணும்’ என்றுதானே விரிக்கமுடியும்?
எனவே, ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ என்ற தொடரில், ‘உம்’ மறைந்து (தொகைந்து) வந்துள்ளதாலும் , ‘பெயர்’ முதலிய பல பெயர்கள் வந்துள்ளதாலும்தான் இது ‘பலபெயர் உம்மைத் தொகை’!
1. மேற் பட்டியலில் , ‘பெயர்’ என்பது வேறு ஒன்றுமில்லை ; எழுவாய்தான் !
‘பெயர் வேற்றுமை’ என்றாலும் , ‘எழுவாய் வேற்றுமை’ என்றாலும் , ‘முதல் வேற்றுமை’ என்றாலும் ஒன்றுதான் !
’சாந்தி வந்தாள்’ – இதில் ‘சாந்தி’ , எழுவாய்; இதுவே ‘பெயர் வேற்றுமை’ என்றும் அறியப்படும் !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (449)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமைகள் எட்டில் , முதற்கண் எழுவாய் வேற்றுமை பற்றிக் கூறுகிறார் –
“அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே” (வேற்.4)
இதற்குச் சேனாவரையர் தரும் விளக்கம் –
“…உருபும் விளியும் ஏலாது , பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலைமை;எனவே , உருபும் விளியு மேற்றும் பிறிதொன்றனோடு தொக்கும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமை யாகா தென்றவாறாம்.”
அஃதாவது , எழுவாய் வேற்றுமைச் சொல்லில் வேற்றுமை உருபு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது!
இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில் , எழுவாய் , வேற்றுமை உருபு எதனையும் ஏற்கும் நிலைமையில் இருக்கக் கூடாது !
குமணன் வந்தான் – இத் தொடரில் ‘குமணன்’ எழுவாய் வேற்றுமைச் சொல் !
‘குமணன்’ என்ற பெயர்ச் சொல்லில் , வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பாருங்கள் ; பொருள் திரளாது ! -
குமணனை வந்தான் ×
குமணனால் வந்தான் ×
குமணனுக்கு வந்தான் ×
குமணனின் வந்தான்×
குமணனது வந்தான் ×
குமணனின்கண் வந்தான்×
குமணா வந்தான்×
ஒரு தொடரின் முதலில் உள்ள பெயர்ச் சொல்லை ‘எழுவாய்’ என்று சொல்ல முடியுமா?
முடியாது!
நல்ல எடுத்துக்காட்டோடு இதனை விளக்குகிறார் இளம்பூரணர் –
“ ‘ஆயன் சாத்தன் வந்தான்’ என்புழி , ஆயன் என்பதூஉம் பெயர்; சாத்தன் என்பதூஉம் பெயர் ; ஆயினும் , இரண்டிற்கும் இரண்டு பயனிலை தோன்ற நில்லாமையாற் , சாத்தன் என்பதூஉம் , வந்தான் என்பதூஉம், ஆயன் என்பதற்கே பயனிலை; அதனால் ‘சாத்தன்’ என்பது ஆண்டு எழுவாய் வேற்றுமை யாயிற்று”!
அஃதாவது , ‘ஆயனாகிய சாத்தன்’ எனக் கொண்டால் , ‘சாத்தன்’ என்பதே எழுவாய் என்பது உங்களுக்குப் புரியும் !
‘சாத்தன்’ என்பதற்கு ‘;ஆயன்’ , அடை (Adjective) !
***
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேற்றுமைகள் எட்டில் , முதற்கண் எழுவாய் வேற்றுமை பற்றிக் கூறுகிறார் –
“அவற்றுள்
எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே” (வேற்.4)
இதற்குச் சேனாவரையர் தரும் விளக்கம் –
“…உருபும் விளியும் ஏலாது , பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலைமை;எனவே , உருபும் விளியு மேற்றும் பிறிதொன்றனோடு தொக்கும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமை யாகா தென்றவாறாம்.”
அஃதாவது , எழுவாய் வேற்றுமைச் சொல்லில் வேற்றுமை உருபு எதுவும் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடாது!
இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில் , எழுவாய் , வேற்றுமை உருபு எதனையும் ஏற்கும் நிலைமையில் இருக்கக் கூடாது !
குமணன் வந்தான் – இத் தொடரில் ‘குமணன்’ எழுவாய் வேற்றுமைச் சொல் !
‘குமணன்’ என்ற பெயர்ச் சொல்லில் , வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பாருங்கள் ; பொருள் திரளாது ! -
குமணனை வந்தான் ×
குமணனால் வந்தான் ×
குமணனுக்கு வந்தான் ×
குமணனின் வந்தான்×
குமணனது வந்தான் ×
குமணனின்கண் வந்தான்×
குமணா வந்தான்×
ஒரு தொடரின் முதலில் உள்ள பெயர்ச் சொல்லை ‘எழுவாய்’ என்று சொல்ல முடியுமா?
முடியாது!
நல்ல எடுத்துக்காட்டோடு இதனை விளக்குகிறார் இளம்பூரணர் –
“ ‘ஆயன் சாத்தன் வந்தான்’ என்புழி , ஆயன் என்பதூஉம் பெயர்; சாத்தன் என்பதூஉம் பெயர் ; ஆயினும் , இரண்டிற்கும் இரண்டு பயனிலை தோன்ற நில்லாமையாற் , சாத்தன் என்பதூஉம் , வந்தான் என்பதூஉம், ஆயன் என்பதற்கே பயனிலை; அதனால் ‘சாத்தன்’ என்பது ஆண்டு எழுவாய் வேற்றுமை யாயிற்று”!
அஃதாவது , ‘ஆயனாகிய சாத்தன்’ எனக் கொண்டால் , ‘சாத்தன்’ என்பதே எழுவாய் என்பது உங்களுக்குப் புரியும் !
‘சாத்தன்’ என்பதற்கு ‘;ஆயன்’ , அடை (Adjective) !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 68 of 84 • 1 ... 35 ... 67, 68, 69 ... 76 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 68 of 84
|
|