புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
26 Posts - 39%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
2 Posts - 3%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
1 Post - 2%
M. Priya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
6 Posts - 5%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
5 Posts - 4%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
3 Posts - 2%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
1 Post - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 66 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 65 of 84 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 74 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 23, 2016 12:25 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (432)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கம் தொடர்கிறது !-
“ஒருபொருள் குறித்த வேறுபெயர்க்  கிளவி
தொழில்வேறு  கிளப்பின்  ஒன்றிட  னிலவே”  (கிளவி. 42)

‘ஒருபொருள் குறித்த வேறுபெயர்க்  கிளவி’ – ஒரே பொருளைச் சொல்லவந்த பல பெயர்ச் சொற்கள்,
‘தொழில்வேறு  கிளப்பின்  ’ – ஒரே பொருளைச் சொல்லாது , வேறு வேறு தொழில்களைத் தெரிவித்து முடிந்தால்,
‘ஒன்றிடன்  இலவே’ -  ஒருபொருளாக ஒன்றாமல் பிழையாகும் !

சேனாவரையர் எடுத்துக்காட்டின்படி –
1. ஆசிரியன் பேரூர்க் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் √
          ஆசிரியன் வந்தான் பேரூர்க் கிழான் உண்டான் செயிற்றியன் சென்றான் ×

2. எந்தை எம்பெருமான் மைந்தன் மணாளன்  வருக √
எந்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக மணாளன்  வருக √

முதல் எடுத்துக்காட்டில் , ‘வந்தான்’ , ‘உண்டான்’ , ’சென்றான்’ – மூன்றும்  வேறு வேறு  தொழில்கள் !

இரண்டாம் எடுத்துக்காட்டில் , ‘வருக’ என்ற ஒரு தொழிலே தொடர் முழுதும் வருகிறது !

இங்கே ‘தொழில்’ என்றதும் , அதற்கு வரி கட்டுகிறார்களா? எனக் கேட்காதீர்கள் !

தொழில் = வினை ; செயல் .

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 23, 2016 12:26 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (432)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கம் தொடர்கிறது !-
“ஒருபொருள் குறித்த வேறுபெயர்க்  கிளவி
தொழில்வேறு  கிளப்பின்  ஒன்றிட  னிலவே”  (கிளவி. 42)

‘ஒருபொருள் குறித்த வேறுபெயர்க்  கிளவி’ – ஒரே பொருளைச் சொல்லவந்த பல பெயர்ச் சொற்கள்,
‘தொழில்வேறு  கிளப்பின்  ’ – ஒரே பொருளைச் சொல்லாது , வேறு வேறு தொழில்களைத் தெரிவித்து முடிந்தால்,
‘ஒன்றிடன்  இலவே’ -  ஒருபொருளாக ஒன்றாமல் பிழையாகும் !

சேனாவரையர் எடுத்துக்காட்டின்படி –
1. ஆசிரியன் பேரூர்க் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் √
          ஆசிரியன் வந்தான் பேரூர்க் கிழான் உண்டான் செயிற்றியன் சென்றான் ×

2. எந்தை எம்பெருமான் மைந்தன் மணாளன்  வருக √
எந்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக மணாளன்  வருக √

முதல் எடுத்துக்காட்டில் , ‘வந்தான்’ , ‘உண்டான்’ , ’சென்றான்’ – மூன்றும்  வேறு வேறு  தொழில்கள் !

இரண்டாம் எடுத்துக்காட்டில் , ‘வருக’ என்ற ஒரு தொழிலே தொடர் முழுதும் வருகிறது !

இங்கே ‘தொழில்’ என்றதும் , அதற்கு வரி கட்டுகிறார்களா? எனக் கேட்காதீர்கள் !

தொழில் = வினை ; செயல் .

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 02, 2016 6:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (433)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நானும் என் ஆடும் செல்வோம் !
- இந்தத் தொடர் சரியா?

சரிதான் என்கிறார் தொல்காப்பியர் ! :-
“தன்மைச்  சொல்லே யஃறிணைக் கிளவியென்று
எண்ணுவழி  மருங்கின் விரவுதல் வரையார் ”  (கிளவி. 43)

தன்மைச்  சொல்லே  -  தன்மை இடத்தில் வரும் தன்மைச் சொல்லும்,
அஃறிணைக் கிளவி என்று – அஃறிணைச் சொல்லும்,
எண்ணுவழி மருங்கின் -  அடுத்தடுத்து எண்ணிக் கூறி ,
விரவுதல் வரையார் – வருவதை நீக்கார் !

சேனாவரையரின் உரைப்படி –
‘யானும் என் எஃகமும் சாறும்’ √
(எஃகம் – படைக் கருவிகள் ; சாறும் - செல்வோம்)

இதே முறையில் நாம் கூறலாம் –
நானும் எனது ஆடும் போவோம் √
நானும் என் குதிரையும் சென்றோம் √

அடுத்த நூற்பா –
“ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
 ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது” (கிளவி. 44)

அஃதாவது-
‘ஒருவன்’ – இதன் எண் ‘ஒருமை’  

‘ஒருவன்’ – இதன் பால் ‘பொதுப்பிரிபால்’ ( ‘அவன்’ என்றோ , ‘மகன்’ என்றோ குறிப்பிட்டு வராது  

‘ஒருவன்’ எனப் பொதுவாய் , பெண்பாலிலிருந்து வேறுபட்டு வந்ததைக் கவனிக்க!)  

‘ஒருத்தி’ – இதன் எண் ‘ஒருமை’  

‘ஒருத்தி’ – இதன் பால் ‘பொதுப்பிரிபால்’ ( ‘அவள்’ என்றோ , ‘மகள்’ என்றோ குறிப்பிட்டு வராது  

‘ஒருத்தி’ எனப் பொதுவாய் , ஆண்பாலிலிருந்து வேறுபட்டு வந்ததைக் கவனிக்க!)  

ஒருவன் , ஒருத்தி – என்று குறிப்பதோடு நிற்கவேண்டுமே அல்லாமல் , ‘இருவன்’ , ‘இருத்தி’ என்று சொல்லக்கூடாது !

இதற்கான தொல்காப்பியர் ஆணை ! –
“ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
 ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது”  (கிளவி. 44)

‘ஒருவர்’ , ‘இருவர்’ – என வரிசையாக எண்ணுகிறோமல்லவா?

இதுதான் ‘எண்ணுமுறை’ !

‘இருவன்’ , ‘இருத்தி’ , வரக்கூடாது என்கிறீர்கள் , ஆனால் ‘ஒருவர்’ , ‘இருவர்’ என்றுமட்டும் வரலாமா?

வரலாம் !

ஏனெனில், ’ஒருவர்’ , ‘இருவர்’ என எண்ணும்போது , பாலானது ஆண்பால் , பெண்பால் என்று பிரிந்து நிற்கவில்லை ! இந்த நுட்பத்தைச் சொன்னவர் இளம்பூரணர் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 05, 2016 7:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (434)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குமரனும்  மாடும் செல்க !
- இத் தொடர் சரியா ?

‘சரி’ என்கிறார் தொல்காப்பியர் ! –

“வியங்கோ  ளெண்ணுப்பெயர்  திணைவிரவு வரையார் ” (கிளவி. 45)

செல்க -  வியங்கோள் வினைமுற்று .

மேலைத் தொடரில் , வியங்கோள்  வினைமுற்று வந்துள்ளதால், அதற்கு முன் ’குமரன்’ எனும் உயர்திணைச் சொல்லும் , ‘மாடு’  எனும் அஃறிணைச் சொல்லும் கலந்து வரலாம் என்பது இச் சூத்திரத்தின் பொருள் !

நச்சினார்க்கினியர் , இதே தொல்காப்பியச் சூத்திரத்தை வைத்துக்  கீழ் வரும் தொடர்களையும் நாம் கொள்ளலாம் என்கிறார்! –

1. ஆவும் ஆயனும் சென்ற  கானம் √
2. ஆவும் ஆயனும் செல்லும் கானம் √

 (கானம் - காடு)

இந்த எடுத்துக்காட்டுகளில் ,  ‘சென்ற’ , ‘செல்லும்’  ஆகியன விரவுத் திணைச் சொற்கள் !

அஃதாவது இவை இரண்டும்  உயர்திணைக்கும் வரும் , அஃறிணைக்கும் வரும் !

காட்டாக –
வேலன் சென்ற வீடு √
வேலன் செல்லும் வீடு √

குதிரை சென்ற வீடு √
குதிரை செல்லும் வீடு √

இங்கே ‘வேலன்’ –  உயர்திணைப்  பெயர்ச்  சொல் .
‘குதிரை’ –  அஃறிணைப்  பெயர்ச்  சொல்.

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 09, 2016 6:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (435)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

1 . உணவு கிண்டினாள்
2. அணிகலனைக் கட்டிக்கொண்டாள்
3. இசைக் கருவியை அடித்தார்

-  இத் தொடர்கள் சரியா?

அல்ல!

தொல்காப்பியத்திற்கு முரணான தொடர்கள் இவை !

இதுதான் தொல்காப்பிய விதி –
“வேறுவினைப்  பொதுச்சொல்  ஒருவினை  கிளவார்”  (கிளவி. 46)

‘வேறுவினைப்  பொதுச்சொல்  ’ – சில வினைகளை உள்ளடக்கிக் கூறத்தக்க பொதுவான சொல்லை வைத்து,
’ ஒருவினை  கிளவார்’ – ஒரு குறிப்பிட்ட வினைக்குப் பொருத்திக் கூறக்கூடாது !

மேலை நம் எடுத்துக்காட்டுகளுக்கு வருவோம் ! –

1 .  ‘உணவு’  என்பது சொல் பொதுச் சொல் !  காய்ச்சித் தயாரிப்பதற்கும், அவித்துத் தயாரிப்பதற்கும், பொரித்துத் தயாரிப்பதற்கும் என்று பல  செயல்கள் (வினைகள்) செய்து தயாரிக்கக் கூடிய பொருளுக்கான பொதுச் சொல் உணவு ! இத்தகைய சொல்லான ‘உணவு’ என்ற சொல்லை , ஒரு வினைக்கு மட்டும் பொருத்திக் ‘கிண்டினார்’ என்றால் அது பிழை !

உணவு சமைத்தாள் √

சமைத்தல் – பொதுவினை

2. அணிகலன்களை அணிந்தாள் √

அணிதல் – பொதுவினை

தொங்கவிடுதல் , மாட்டுதல் , செருகுதல் , குத்துதல் – சிறப்பு வினைகள்(தனி வினைகள்)

3.  இசைக் கருவியை  இசைத்தார் √

இசைத்தல் – பொதுவினை

ஊதுதல் , அடித்தல் , தட்டுதல் , கொட்டுதல்  - சிறப்பு வினைகள் .

சரி !

உணவு , அணிகலன், இசைக்கருவி – இவை தனிச் சொற்கள் !

இப்படி இல்லாமல் , சொற்கள் அடுக்கி வந்தால்?

எடுத்துக்காட்டாகச் , சேனாவரையர் உரைப்படி,

‘சோறும் கறியும்’ என அடுக்கி வந்தால் , எப்படிப்பட்ட வினை கொடுத்து முடிக்கவேண்டும் ?

சோறும் கறியும் வேக வைத்தாள் ×
சோறும் கறியும் சமைத்தாள் √

சேனாவரையர் தந்தபடி –
யாழுங் குழலும் ஊதினாள் ×
யாழுங் குழலும் இசைத்தாள் √

இதே பாங்கில் –

1. வீடும் கட்டிலும் துணியும்  வெளுக்கப்பட்டன ×
வீடும் கட்டிலும் துணியும் தூய்மை செய்யப்பட்டன √

2. கடையும் மருத்துவ மனையும் கல்லூரியும் போடப்பட்டன ×
கடையும் மருத்துவ மனையும் கல்லூரியும் போடப்பட்டன √

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 21, 2016 12:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (436)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்


கிளவியாக்கத்தில்  நிற்கிறோம் !

இப்போது  இரட்டைக்  கிளவி !

இரட்டைக்  கிளவிக்குத் தொல்காப்பியர் விதி ! –
“இரட்டைக்  கிளவி  இரட்டிற்பிரிந்  திசையா”  (கிளவி. 48)

‘செய்தி கேட்டு அவள் படபடத்தாள் !’
- இதில் வந்துள்ள  ‘படபட ’  , இரட்டைக் கிளவி !

ஏனெனில் ,  ‘செய்தி கேட்டு அவள் படத்தாள் !’ எனக் கூறமுடியாது !

எனவே , இவ்வாறு இரண்டாக வந்து , தனியாகப் பிரிய இயலாது உள்ளதல்லவா? இதுதான் ‘இரட்டைகிளவி’ க்கு இலக்கணம் !  ‘இரட்டிற்பிரிந்  திசையா”  எனத் தொல்காப்பியர் சொன்னது இதைத்தான் !

இதற்குமேல் தொல்காப்பியர் இலக்கணம் சொல்லவில்லை !

ஆனால் , சேனாவரையர் , மேலும் இலக்கணம் வரைகிறார் !

இசை பற்றியும் , குறிப்பு பற்றியும் , பண்பு பற்றியும் இரட்டித்து வருவதே ‘இரட்டைக் கிளவி’ என்பது சேனாவரையர் இலக்கணம் !

சேனாவரையர் காட்டிய எடுத்துக்காட்டுகளின்படி –

இசை பற்றி வந்த இரட்டைக்கிளவி –
1 . மொடுமொடுத்தது   ( ‘மொடுமொடு’ன்னு  ஏதோ உடையும் ஓசை கேட்கிறதா? இதுதான்  ‘இசை’ பற்றி வந்த இரட்டைக் கிளவி !)

குறிப்புப்  பற்றி வந்த இரட்டைக்கிளவி –
2 . மொறுமொறுத்தார்   ( ‘மொறுமொறு’  என்பதில்  அவரின் சினக் குறிப்புத் தெரிகிறதல்லவா?  இதுதான்  ‘குறிப்பு’ பற்றி வந்த இரட்டைக் கிளவி !)

பண்பு பற்றி வந்த இரட்டைக்கிளவி –

3 . கறுகறுத்தது   ( ‘கறுகறுத்தது’ என்பதில் மேகம் போன்ற ஒன்றின் கரிய பண்பு புலனாகிறதல்லவா?   இதுதான்  ‘பண்பு’ பற்றி வந்த இரட்டைக் கிளவி !)

‘கடகட’  - இஃது இரட்டைக் கிளவிதான் !

ஆனால் , இஃது ஏதாவது ஒரு தொடரில் வரவேண்டும் !

‘கடகட என்று பேசினான்’ ! – இங்கு தொடரில் வந்துள்ளது ! இபோதுதான் ‘கடகட’ என்பதை இரட்டைக் கிளவி எனக்  கூறமுடியும் !

ஏதாவது சொற்கள் இரட்டித்து வந்தால் அது இரட்டைக் கிளவி ஆகாது ! -
1. துன்துன் ×
2 . சூள்சூள் ×
   3 . பணபண ×

மேலு சில எடுத்துக்காட்டுகளை இரட்டைக்கிளவியை விளக்கத் தரலாம் ! –

1 . மிதிவண்டி கடகடக்கிறது √  (இங்கே  ‘இசை’ பற்றி வந்த இரட்டைக் கிளவி      
பயின்றுள்ளது !)
2. ஓலை சலசலக்கிறது √  (இங்கேயும்  ‘இசை’ பற்றி வந்த இரட்டைக் கிளவி      
பயின்றுள்ளது !)

3 . மாலதி சிடுசிடுத்தாள் √  (இங்கே  ‘குறிப்பு’ப்  பற்றி வந்த இரட்டைக் கிளவி      
பயின்றுள்ளது !)
4 . பூங்கொடிக்கு  சில்லுச் சில்லுன்னு  கோபம் வருது √  (இங்கேயும்  ‘குறிப்பு’ப்  பற்றி      
வந்த இரட்டைக் கிளவி  பயின்றுள்ளது !)

5 . மனசு அவளுக்குக்  குறுகுறுக்கிறது √  (இங்கே  ‘பண்பு’ பற்றி வந்த இரட்டைக் கிளவி      
பயின்றுள்ளது !)
6 . கருகரு  என்று கூந்தல் அவளுக்கு  √  (இங்கேயும்  ‘பண்பு’ பற்றி வந்த இரட்டைக்      
கிளவி பயின்றுள்ளது !)

ச.பாலசுந்தரனார் இரு எடுத்துக்காட்டுகளைத் தந்தார் அவரது ஆய்வில் !
1 . வரிவரியாக எழுதினான்
2 . படிப்படியாக முன்னேறினான்  

ஆனால் இவற்றில் இசையோ , குறிப்போ, பண்போ இல்லை என்பது அவரது வாதம் !

  ‘வரிவரி’ – இதை ஏன் இரட்டைக் கிளவி என்கிறோம் ?
‘வரியாக  எழுதினான் ’ எனக் கூறமுடியாது ! ‘வரிவரியாக  எழுதினான் ’ எனக் கூறமுடியும் ! – இதுதான் அளவுகோல் !

‘படியாக முன்னேறினான்’ – கூற முடியாது !
‘படிப்படியாக முன்னேறினான்’ – கூற முடியும் !

எனவே,
படிப்படி – இரட்டைக் கிளவி !

ச.பாலசுந்தரனாரின் இந்த ஆய்வைக் கொண்டு , பிற்கால  இரட்டைக் கிளவிகளில்  , ‘இசை , குறிப்பு, பண்பு  ஆகியவற்றின் அடிப்படையிலேதான் இரட்டைக் கிளவி வரமுடியும்’ என்ற வரையறையைக் கொள்ளமுடியாது என மதிப்பிடுகின்றனர் !

இரட்டைக் கிளவி பற்றி மேலும் சில சிந்திக்கலாம் !
 ‘விழுந்து விழுந்து படித்தான்’ -  இங்கே இரட்டைக் கிளவி வந்துள்ளதா?
ஆம் ! வந்துள்ளது !
‘விழுந்து படித்தான்’ என வர முடியாதல்லவா?

 ‘கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்’ - இங்கே இரட்டைக் கிளவி வந்துள்ளதா?
இல்லை ! வரவில்லை !
‘கேட்டு  வாங்கிச் சாப்பிட்டாள் ’ என வர முடியுமல்லவா?
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 21, 2016 2:25 pm

"இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா " என்கிறது தொல்காப்பியம்.

• மள மளன்னு வேகமாக வேலையை முடி.
• இதில் மள மள என்பது இரட்டைக்கிளவி ஆகும்.
• மள என்பது தனித்துப் பார்த்தால், அச்சொல் பொருள் தராது.


நீர் சலசலவென்று ஓடியது.
இதில் " சலசல " என்பது இரட்டைக்கிளவி . "சலசல " என்பதைப் பிரித்தால் " சல " , " சல " என்று பிரியும்.
" சல " என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை .

ஆனால்

வரிவரியாக எழுதினான் என்ற தொடரில் " வரிவரி " என்பது இரட்டைக்கிளவி என்கிறார் ச. பாலசுந்தரனார் .
" வரிவரி " என்பதை " வரி ", " வரி " என்று பிரிக்கலாம் . இதில் " வரி " என்ற சொல் தனித்துநின்று பொருள் தருகிறது.எனவே இது இரட்டைக்கிளவி ஆகுமா ?

இதேபோல

" படிப்படி " என்ற சொல்லைப் பிரித்தாலும் " படி " என்ற சொல் தனித்து நின்று பொருள் தருகிறது .எனவே இது இரட்டைக்கிளவி ஆகுமா ?

"விழுந்து விழுந்து படித்தான் " என்பது கொச்சையான வழக்கு . பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது . அதற்கு இலக்கணம் பார்க்க முடியுமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 21, 2016 5:59 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே !

‘வரி’ என்பது தனித்து நின்று பொருள் தரும்தான் : ஆனால் ‘வரியாகப் படித்தான்’ என்று தனித்து வராதே? இதுதான் நான் விளக்கியது ! ‘படி’க்கும் இதே விளக்கம் கொள்க. பேச்சு வழக்குத் தமிழும் இலக்கணத்திற்கு உட்பட்டதுதான் ! ‘எழுத்தும் வழக்கும் நாடி’ இலக்கணம் செல்வது நல்லதுதானே?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 21, 2016 6:23 pm

ஐயா !

நீங்கள் "வரி " என்ற சொல்லை வாக்கியத்தில் வைத்துப் பார்த்து ( வரியாகப் படித்தான் ) பொருள் தரவில்லை என்று சொல்கிறீர்கள் .இரட்டைக்கிளவி இலக்கணம் அப்படிச் சொல்லவில்லையே !

" இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா " என்பதுதானே இலக்கணம் . " வரி " என்று தனியாகப் பிரித்தால் பொருள் தருவதால் அது இரட்டைக்கிளவி அல்ல என்பது என் கருத்து.

அடிஅடியென்று அடித்தான்.
பிட்டுபிட்டு வைத்தான் .

இவையெல்லாம் இரட்டைக்கிளவி ஆகுமா ?

" விழுந்து விழுந்து " படித்தான் என்பதும் இரட்டைக்கிளவி ஆகாது என்பதே என் கருத்து. ஏனெனில்
" விழுந்து " என்ற சொல் தனித்துப் பொருள் தருவது காண்க .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 25, 2016 1:12 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (437)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரு தோப்பில்  தென்னை மரங்கள் நிறைய  உள்ளன ; ஆனால் இடையிடையே வேறு சில மரங்களும் இருக்கின்றன !

- இப்போது , அத் தோப்பை  எப்படி அழைப்பது ?

  ‘தென்னந் தோப்பு’ என அழைக்கலாமா?

   ‘தென்னந் தோப்பு’ என்றுதான் சுட்டவேண்டும் என்கிகிறார் தொல்காப்பியர் !

     இடையிடையே வேறு சில மரங்கள் இருந்தால் அதுபற்றிக் கவலைப்படாதீர்கள் ! – இது தொல்காப்பியர் வாதம் !

   ஆம் !  ‘பெரும்பான்மை’ (Majority)  என்ற தத்துவத்தை முதலில்  தந்தது அரசியல் அல்ல ! மொழிதான் !

 இதற்குத் தொல்காப்பியத்தின் இந்த இடமே  சான்று!

  ஆகவே , இலக்கண ஆய்வு என்பது சமுதாயத்தைவிட்டு விலகி நிற்பது என்று எவரும் எண்ணவேண்டாம் !  இலக்கண ஆய்வும் சமுதாய ஆய்வே !

சென்னையியில் ஒரு  வட்டாரத்தில்  அதிகாரிகள்  வீடுகள் நிறைய உள்ளன ; அந்தப் பகுதியைத்   தானிக்காரர்கள் (Automen )  , ‘ இது விஐபி  ஏரியாங்க !’ என்கிறார்கள் ! அப்
பகுதியில்  ஏழை எளிய மக்களும் வாழ்கிறார்கள் ! இது அவர்களுக்கும் தெரியும் ! ஆனாலும்  ‘ இது விஐபி  ஏரியாங்க !’ என்கிறார்கள் !

தொல்காப்பியர் கூறும் தமிழ் மரபைத்தான் அவர்கள் பின்பற்றியுள்ளனர் !

இங்கே , அதிகாரிகள் வீடுகள் எண்ணிக்கையில் மற்ற வீடுகளைவிடக் குறைவாகக்கூட இருக்கலாம் ! ஆனாலும் அப்பகுதி ‘விஐபி ஏரியா’தான் !

ஏன்?

மக்களில் தலைமையானவர்கள் அதிகாரிகள் ! (இது சரியா தவறா என்பது வேறு வாதம் !)

   ஆகவே , ‘தலைமைப் பண்பு’ பற்றிப் பார்க்கும்போது ‘விஐபி ஏரியா’ எனக் குறிப்பதுதான் , தொல்காப்பியர் இலக்கணப்படி சரியாகும் !

    தாவரங்களாலும் மக்களானாலும் ஒரு வட்டாரத்தில் உள்ள பெரும்பான்மை அல்லது தலைமைப் பண்பு பற்றித்தான் அப் பகுதி அழைக்கப்பட வேண்டும் !

    இதுதான் தொல்காப்பியர் ஆணை !-
“ஒருபெயர்ப் பொதுச்சொ  லுள்பொரு ளொழியத்
தெரிபுவேறு  கிளத்தல் தலைமையும்  பன்மையும்
உயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும்”  (கிளவி. 49)

‘உயர்திணை மருங்கினும்  அஃறிணை மருங்கினும்’ -  உயர்திணையாக இருந்தாலும் அஃறிணையாக இருந்தாலும் ,
‘தலைமையும்  பன்மையும்’ – தலைமைப் பண்பையும் பெரும்பான்மைப்  பண்பையும் நோக்கி,
‘உள்பொருள் ஒழிய’  - இடையே வேறு வகையின இருப்பினும், அவற்றைக் கருத்திற் கொள்ளாது,
‘ஒருபெயர்ப் பொதுச்சொல்  ’ – ஒரு சொல்லைக்  கொண்டு,
‘கிளத்தல்’ – சொல்லுக!

     இங்கு சேனாவரையர் எழுதிய எடுத்துக்காட்டுகளையும் பார்க்கலாம் ! –
1 .  ‘பிறரும் வாழ்வா ருளரேனும்  பார்ப்பனச் சேரி யென்றல் உயர்திணைக்கண் தலைமை பற்றிய வழக்கு!’

சேனாவரையர் உரைப்படி , பார்ப்பன மக்கள் , பிற இனத்தவரைவிடத் தலைமையானர்கள் அந்நாளில் !

2. ‘எயினர் நாடென்பது  அத் திணைக்கண்  பன்மைபற்றிய வழக்கு’ !

3. ‘பிற புல்லும் மரனும் உளவேனும்  கமுகந் தோட்டம் என்றல் அஃறிணைக்கண் தலைமை பற்றிய வழக்கு’ !
(மரன் - மரம்)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 65 of 84 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 74 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக