புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 63 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 63 of 84 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 73 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 12, 2016 5:30 pm

ஐயா !

நாடு + யாது = நாடியாது ? என்பது புணர்ச்சி விதிப்படி சரியா ? புணர்ச்சி விதி என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 16, 2016 8:34 pm

நன்றி ச. சந்திரசேகரன் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 16, 2016 8:53 pm

நன்றி எம்.ஜெகதீசன் அவர்களே !
இதே வரிசையில் ,தொடத் தொடத் தொல்காப்பியம் (121)இல் விடை எடுத்துக்காட்டுகளுடன் உள்ளது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 16, 2016 8:57 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (425)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீங்கள் மூன்றுபேர்கள் சென்று ஒருவரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வந்தீர்கள் !

இதை எப்படிச் சொல்லவேண்டுமாம்?
‘நாங்கள் மூன்று பேர்கள் அவரிடம் அதைச் சொல்லிவிட்டு வந்தோம்’ ×
‘நாங்கள் மூன்று பேர்களும் அவரிடம் அதைச் சொல்லிவிட்டு வந்தோம்’ √

ஏனெனில் , சென்றது மூன்றுபேர்கள்தாம் என்பது கூறுவானுக்கும் கேட்பானுக்கும் தெரியும் ! அப்படித் தெரிந்த பிறகு , ‘உம்’ கொடுத்துக் கூறுவதுதான் சரியான உரைநடை! அழுத்தமான உரைநடை !

தொல்காப்பியர் இலக்கணம் இதற்கு உள்ளது !:-
“இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
 வினைப்படு தொகையின் உம்மை வேண்டும்” (கிளவி. 33)

‘இனைத்து என அறிந்த’ – ‘இத்தனை’ என்று அறிந்த,
‘சினை , முதல் கிளவிக்கு ’ -  சினைக்கிளவி , முதற்கிளவிகளுக்கு,
‘  வினைப்படு தொகையின்’- அவை பெயர்கொண்டு,வினைகொண்டு முடிவதற்கு முன்பு,
‘உம்மை வேண்டும்’ – ‘உம்’ கொடுத்துக் கூறவேண்டும் !

முதற் கிளவி என்றால்? சினைக் கிளவி என்றால்?

ஆளைக் குறிப்பிட்டால் அது ‘முதற் கிளவி’ !
ஆளின் உறுப்பைக் குறிப்பிட்டால் அது ‘சினைக்கிளவி’ !
(கிளவி - சொல்)

மரத்தைச்சொன்னால் அது ‘முதற் கிளவி’ !
பழத்தைச்சொன்னால் அது ‘சினைக் கிளவி’ !

கிளியைச் சொன்னால் அது ‘முதற் கிளவி’ !
கிளிமூக்கைச் சொன்னால் அது ‘சினைக் கிளவி’ !

தோப்பில் நான்கு மரங்கள் மட்டுமே இருக்கின்றன என்று கேட்போனுக்குத் தெரிந்திருந்தால் , தோப்புக்காரன் கூறவேண்டியது –
‘நான்கு மரங்கள் பூத்துக் குலுங்கின்றன’ ×
‘நான்கு மரங்களும் பூத்துக் குலுங்கின்றன’ √  (‘மரங்களும்’என வந்துள்ளதைக் காண்க)

மேலை உரையில் , - ‘  வினைப்படு தொகையின்’- அவை பெயர்கொண்டு,வினைகொண்டு முடிவதற்கு முன்பு, -  எனப் பார்த்தோமல்லவா?

இதை முதன் முதலில் சொன்னவர் சேனாவரையர்தான் ! சேனாவரையர் உரை இதுதான் –
“கண்ணிரண்டும் குருடு …எனப் பெயர்கொண்டவழி,உம்மை பெறுமாறு என்னையெனின்,பெயராக வினையாக முடிக்குஞ் சொல்லொடு படுதலை ஈண்டு வினைப்படுதல் என்றாராகலின், அவையும் வினைப்படு தொகுதியாம் என்க ! ”

சேனாவரையர் தனது உரைக்கு ஓர் எடுத்துக்காட்டும் தருகிறார் -

‘கண்ணிரண்டும் குருடு’!

மனிதனுக்கு இரண்டு கண்கள்தாம் என்பது கேட்போனுக்குத் தெரியும் ! ஆகவே ‘உம்’ கொடுத்து ‘இரண்டும்’ என்று கூறவேண்டும் !-

கண்ணிரண்டு குருடு×
கண்ணிரண்டும் குருடு√

- இங்கே ‘குருடு’ , பெயர்ச் சொல் என்பதைக் கவனிக்க!

இன்னொரு தெளிவையும் சேனாவரையர் நமக்குத் தருகிறார் !

அஃதாவது , ‘இருதோள் தோழர் பற்ற ’ என்று பாடலில் வருகிறதே, இங்கே ‘இருதோளும்’ என்றல்லவா வரவேண்டும் ? என ஐயம் வந்தால் அதற்கு விடை சேனாவரையர் உரையில்தான் உள்ளது !-

பாட்டில் இப்படி வந்தால் ,  ‘உம்மை’யானது செய்யுள் விகாரத்தால் தொக்கது என எடுத்துக்கொள்ள வேண்டுமாம் !

தொக்கது – மறைந்துநின்றது.

தொல்காப்பிய இலக்கணம் செய்யுளுக்கு மட்டும்தான் என யாராவது தவறாக நினைத்திருந்தால், அவர்   உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) விதி கூறியிருப்பதிலிருந்து தம் கருத்தை மாற்றிகொள்ளவேண்டும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 16, 2016 8:58 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (425)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீங்கள் மூன்றுபேர்கள் சென்று ஒருவரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டு வந்தீர்கள் !

இதை எப்படிச் சொல்லவேண்டுமாம்?
‘நாங்கள் மூன்று பேர்கள் அவரிடம் அதைச் சொல்லிவிட்டு வந்தோம்’ ×
‘நாங்கள் மூன்று பேர்களும் அவரிடம் அதைச் சொல்லிவிட்டு வந்தோம்’ √

ஏனெனில் , சென்றது மூன்றுபேர்கள்தாம் என்பது கூறுவானுக்கும் கேட்பானுக்கும் தெரியும் ! அப்படித் தெரிந்த பிறகு , ‘உம்’ கொடுத்துக் கூறுவதுதான் சரியான உரைநடை! அழுத்தமான உரைநடை !

தொல்காப்பியர் இலக்கணம் இதற்கு உள்ளது !:-
“இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
 வினைப்படு தொகையின் உம்மை வேண்டும்” (கிளவி. 33)

‘இனைத்து என அறிந்த’ – ‘இத்தனை’ என்று அறிந்த,
‘சினை , முதல் கிளவிக்கு ’ -  சினைக்கிளவி , முதற்கிளவிகளுக்கு,
‘  வினைப்படு தொகையின்’- அவை பெயர்கொண்டு,வினைகொண்டு முடிவதற்கு முன்பு,
‘உம்மை வேண்டும்’ – ‘உம்’ கொடுத்துக் கூறவேண்டும் !

முதற் கிளவி என்றால்? சினைக் கிளவி என்றால்?

ஆளைக் குறிப்பிட்டால் அது ‘முதற் கிளவி’ !
ஆளின் உறுப்பைக் குறிப்பிட்டால் அது ‘சினைக்கிளவி’ !
(கிளவி - சொல்)

மரத்தைச்சொன்னால் அது ‘முதற் கிளவி’ !
பழத்தைச்சொன்னால் அது ‘சினைக் கிளவி’ !

கிளியைச் சொன்னால் அது ‘முதற் கிளவி’ !
கிளிமூக்கைச் சொன்னால் அது ‘சினைக் கிளவி’ !

தோப்பில் நான்கு மரங்கள் மட்டுமே இருக்கின்றன என்று கேட்போனுக்குத் தெரிந்திருந்தால் , தோப்புக்காரன் கூறவேண்டியது –
‘நான்கு மரங்கள் பூத்துக் குலுங்கின்றன’ ×
‘நான்கு மரங்களும் பூத்துக் குலுங்கின்றன’ √  (‘மரங்களும்’என வந்துள்ளதைக் காண்க)

மேலை உரையில் , - ‘  வினைப்படு தொகையின்’- அவை பெயர்கொண்டு,வினைகொண்டு முடிவதற்கு முன்பு, -  எனப் பார்த்தோமல்லவா?

இதை முதன் முதலில் சொன்னவர் சேனாவரையர்தான் ! சேனாவரையர் உரை இதுதான் –
“கண்ணிரண்டும் குருடு …எனப் பெயர்கொண்டவழி,உம்மை பெறுமாறு என்னையெனின்,பெயராக வினையாக முடிக்குஞ் சொல்லொடு படுதலை ஈண்டு வினைப்படுதல் என்றாராகலின், அவையும் வினைப்படு தொகுதியாம் என்க ! ”

சேனாவரையர் தனது உரைக்கு ஓர் எடுத்துக்காட்டும் தருகிறார் -

‘கண்ணிரண்டும் குருடு’!

மனிதனுக்கு இரண்டு கண்கள்தாம் என்பது கேட்போனுக்குத் தெரியும் ! ஆகவே ‘உம்’ கொடுத்து ‘இரண்டும்’ என்று கூறவேண்டும் !-

கண்ணிரண்டு குருடு×
கண்ணிரண்டும் குருடு√

- இங்கே ‘குருடு’ , பெயர்ச் சொல் என்பதைக் கவனிக்க!

இன்னொரு தெளிவையும் சேனாவரையர் நமக்குத் தருகிறார் !

அஃதாவது , ‘இருதோள் தோழர் பற்ற ’ என்று பாடலில் வருகிறதே, இங்கே ‘இருதோளும்’ என்றல்லவா வரவேண்டும் ? என ஐயம் வந்தால் அதற்கு விடை சேனாவரையர் உரையில்தான் உள்ளது !-

பாட்டில் இப்படி வந்தால் ,  ‘உம்மை’யானது செய்யுள் விகாரத்தால் தொக்கது என எடுத்துக்கொள்ள வேண்டுமாம் !

தொக்கது – மறைந்துநின்றது.

தொல்காப்பிய இலக்கணம் செய்யுளுக்கு மட்டும்தான் என யாராவது தவறாக நினைத்திருந்தால், அவர்   உரைநடைத் தொடர் இலக்கணம் (Grammar for Tamil Syntax) விதி கூறியிருப்பதிலிருந்து தம் கருத்தை மாற்றிகொள்ளவேண்டும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Apr 16, 2016 9:53 pm

ஐயா மிகவும் அருமையாக உள்ளது. ஆசையாக இருக்கிறது உங்கள் பதிவை படிப்பதற்கு. நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 16, 2016 11:17 pm

கொஞ்சம் கொஞ்சமாய் படித்துக் கொண்டு வருகிறேன் ஐயா உங்களின் இந்த திரியை..மிகவும் அருமையாக இருக்கு !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 14, 2016 10:34 am

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 14, 2016 10:35 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (426)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !

பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !

இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?

நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !

1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
   பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)

2 . பவளத் தந்த யானை இல்லை ×
    பவளத் தந்த யானை எங்கும் இல்லை √

3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √

4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √

5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √

தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-

“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்

‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 14, 2016 10:36 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (426)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிளவியாக்கத்தில் நிற்கிறோம் !

பார்வையற்றோர் பார்ப்பது , நடவாதது !

இரவிலும் பார்க்கமுடியாது ! பகலிலும் பார்க்கமுடியாது ! பகலில் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காகப் பார்வையில்லாதவர் பார்க்கமுடியுமா?

நடவாத ஒன்றை அல்லது இல்லாத ஒன்றைத் தொடரில் (Tamil syntax) எழுதுவதானால் எப்படி எழுதவேண்டும்?
ஓர் ‘உம்’ கொடுத்து எழுதவேண்டும் !

1. பார்வையற்றோர் பார்ப்பது பகலில் நடக்காது ×
   பார்வையற்றோர் பார்ப்பது பகலிலும் நடக்காது √ (தொல். விதி, கிளவி.34)

2 . பவளத் தந்த யானை இல்லை ×
    பவளத் தந்த யானை எங்கும் இல்லை √

3. உடம்பு வாடியபோது பிச்சை எடுக்கமாட்டான் ×
உடம்பு வாடியபோதும் பிச்சை எடுக்கமாட்டான் √

4. நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளில் இல்லை ×
நீல வண்ண யானை சாத்தன் கோயில் பொம்மைகளிலும் இல்லை √

5. ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது ×
ஒரு மரமும் ஆயிரம் ஆண்டுகள் நிற்காது √

தொல். விதி, கிளவி.34 என்பது இதுதான் !-

“மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” (கிளவி.34)
‘மன்னாப் பொருள் ’ – இல்லாத பொருள்

‘அன்ன இயற்று’ – முன் நூற்பாவில் கூறியதுபோல ‘உம்’ கொடுத்துச் சொல்லவேண்டும் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 63 of 84 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 73 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக