புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 7 of 84 Previous  1 ... 6, 7, 8 ... 45 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 17, 2013 5:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (40)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘வினைத் தொகை’ என்றால் நமக்குத் தெரியும் !

பள்ளி நாட்களிலிருந்து இதைச் சொல்லித் தந்திருக்கிறார்கள் ! எடுத்துக்காட்டுக்கு ‘ஊறுகாய்’ என்பதைத்தான் தொட்டுக்கொள்வார்கள் !

ஆனால் ‘பெயர்த் தொகை’ எனவும் ஒன்று இருப்பதை இப்போது காணலாம்!

தொல்காப்பியர் , ‘பெயரினாகிய தொகை’ என்று ‘பெயர்த் தொகை’ பற்றிக் கூறியுள்ளார்! :-

“பெயரி னாகிய தொகையுமா ருளவே
அவ்வும் உரிய அப்பா லான ” (வேற்றுமையியல் 6)

அஃதாவது , தனிப் பெயர்ச் சொல்லைப் போலவே ,கூட்டுப் பெயர்ச் சொற்களும் வேற்றுமை ஏற்கும் என்பதே இதன் கருத்து !

1.‘யானையை விரட்டினர்’ ; ‘யானை’ – தனிப் பெயர் .
‘யானைத் தந்தத்தை அறுத்தனர்’ ; ‘யானைத் தந்தம்’ –பெயர்த் தொகை !


2. ‘கையால் தடவினாள்’ ; ‘கை’ – தனிப் பெயர் .
‘கை விரலால் தடவினாள்’ ; ‘கை விரல்’ – பெயர்த் தொகை !

3.‘வீட்டுக்குத் தந்தான்’ ; ‘வீடு’ – தனிப் பெயர் .
‘வீட்டுச் செலவுக்குத் தந்தான்’ ; ‘வீட்டுச் செலவு’- பெயர்த் தொகை !

4.‘நாட்டின் பாதுகாப்பு’ ; ‘நாடு’ – தனிப் பெயர் .
‘நாட்டு மக்களின் பாதுகாப்பு’ ; ‘நாட்டு மக்கள்’ – பெயர்த் தொகை !

இவ்வாறு எட்டு வேற்றுமைகளுக்கும் ‘பெயர்த் தொகை ’ பொருந்திவரக் காணலாம் !

பெயர்த் தொகையையும் பிற இலக்கணக் கூறுகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது !

காட்டாக ,

‘முகப் பளிங்கு’ – உருவகம் .

இச் சொல்லைப் ‘பெயர்த் தொகை’ எனவும் கூறலாம் !

“என்ன சார் ? உருவகம் என்கிறீர்கள் ; பெயர்த் தொகை என்கிறீர்கள் ; ஏதாவது ஒன்றைச் சொல்லுங்கள்!” – என்னாதீர் !

ஒரு சொல்லுக்கு ஓர் இலக்கணக் குறிப்புதான் இருக்கும் என எண்ண வேண்டாம் ! ஒன்றுக்கு மேற்பட்டும் இலக்கணக் குறிப்புகளும் இருக்கலாம் !

மேல் நூற்பாவில் , ‘அவ்வும் உரிய ’ என்று தொல்காப்பியர் எழுதியுள்ளார் !

அவ்வும் = அவையும்

‘அ’ என்ற ‘ஓரெழுத்து ஒரு மொழி’யை ‘அவை’ என்ற பொருள் தோன்ற ஆண்டுள்ளமை நோக்கத் தக்கது !

அ + மூன்றும் = அம்மூன்றும் =அவை மூன்றும் ; இங்கு ‘அ’ என்பதற்கு ‘அவை’ என்ற பொருள் வந்துள்ளது காண்க !

‘ஓரெழுத்து ஒரு மொழி’கள்தான் தமிழின் தோற்றச் சொற்கள் (The very ancient Tamil words)!

......................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 17, 2013 5:52 pm

ச.சந்திரசேகரன் , ஆதிரா ஆகியோர்க்கு என் மனமார்ந்த நன்றி !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 18, 2013 8:21 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (41)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘எழுவாய் ஏற்கும் பயனிலைகள் ’ என்று தொல்காப்பியர் ஒரு பட்டியலைத் தருகிறார் ! :-

“பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று
அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே” (வேற்றுமையியல் 5)

‘பயனிலை’ (Predicate) என்பது வேறு ஒன்றும் இல்லை ! ‘பெயர் பற்றியது’தான் ! பெயரின் செயற்பாட்டை அறியப் பயன்படுவதால் அது ‘பயனிலை’ !

பயன் + நிலை = பயனிலை

மேலை நூற்பாவில் தொல்காப்பியர் தந்த பட்டியல் :-

1. பொருண்மை சுட்டல் = ‘நகை உள்ளது’

2. வியங்கொள வருதல் = ‘பெண்ணே வருக’

3. வினைநிலை உரைத்தல் = ‘குதிரை ஓடுகிறது’

4. வினாவிற்கு ஏற்றல் = ‘அங்கே யார் ?’

5. பண்புகொள வருதல் = ‘முகம் சிவப்பு’

6. பெயர்கொள வருதல் = ‘அவள் மைதிலி ’

‘பெயர்ப் பயனிலையே’ என்று தொல்காப்பியர் பெயரின் ஆறுவகைப் பயனிலைகளைக் கூறப், பின் வந்த இலக்கணிகள் ‘பெயர்ப் பயனிலை’ என்று ‘பெயர்கொள வரும் ’பயனிலையை மட்டும் குறிக்கலாயினர் !

மேலை எடுத்துக் காட்டுகளில் ‘மைதிலி’, ‘ பெயர்ப் பயனிலை ’ ஆகும் !

தொல்காப்பியர் வரைந்த இப் பட்டியலின் மகத்துவம் யாதெனில் , இந்த ஆறைத் தவிர நம்மால் வேறு ஒரு பயனிலை வகையைக் கூற முடியாது !

அது மட்டுமல்ல !

உலகத்தில் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் அதன் ‘பயனிலை’ மேல் ஆறு வகைகளுக்குள்தான் அடங்கிவரும் !



......................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Feb 18, 2013 9:59 pm

40. பெயர்த் தொகை -
41. பயனிலை
என் தமிழாசிரியர் என் நினைவில் வந்ததுபோல்.
மிக உபயோகமான பாடம்.
நன்றிகள் ஐயா.
தொடருங்கள். தொடர்கிறோம்.




[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 20, 2013 10:47 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (42)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

மலைக்கும் ,அதனைச் சுற்றியுள்ள மேட்டுப் பாங்கான பகுதிக்கும் ‘குறிஞ்சி’ என்று பெயர் !

இக் குறிஞ்சி நிலத்தில் உள்ள செழிப்பான புல்லைத் தின்று பசுக்கள் கொழுகொழு என்று வளர்ந்தன !

அப் பசுக்கள் ,குறிஞ்சியை அடுத்த மருத நிலத்து அரசன் கண்ணை உறுத்தின !

விடுவானா?

அந்த வேற்றரசன், குறிஞ்சி சென்று பசுக்களைக் கவர்ந்து செல்வதைக் காட்சிவாரியாகத் (Scene by scene) தொல்காப்பியர் தீட்டுகிறார் ! :-

1. ‘படை இயங்கு அரவம்’ – பசுக்களைக் கவர்ந்து வருவதற்காகப் படை ஒன்று புறப்படுகிறது ;அதன் சத்தம் (‘அரவம்’) மட்டும் ஆங்காங்கே கேட்கிறது ; ஆனால் ஆட்கள் யாரும் பேசவில்லை !

இங்கே ‘படை’ என்பது 4000,5000 பேர்கள் கொண்ட போர்ப் படை என எண்ணக் கூடாது ! இருபது பேர்கள் சேர்ந்தாலும் அது ‘படை’தான் !

‘அரவம்’ என்பதற்கு ஆரவாரம் எனப் பொருள் எழுதியுள்ளனர் ; அது தவறு ! பசுக்களை யாரும் அறியாமல் கவர்ந்துசெல்லச் செல்பவர்கள் ஆரவாரிக்க மாட்டார்கள்! மேலும் ‘அர ’ என்ற அடிக்கு ‘மெல்லோசை’ எனும் பொருள் இருப்பதை ‘அரசல் புரசலாக’ என்ற தொடர் காட்டும் !

2. ‘பாக்கத்து விரிச்சி’ – படை புறப்பட்டுச் செல்லும்போதும் , இடையில் தங்கும்போதும் ஆங்காங்கே நற்சொல் (‘விரிச்சி’) கேட்பதைக் கவனித்துக்கொண்டு ,அதனால் ஊக்கம் பெறுகிறார்கள் !

‘பாக்கம்’ – இங்கே கடற்கரைப் பட்டினம் அல்ல ! ‘பக்கம்’ என்பதே ‘பாக்கம்’ ஆனது ! இலக்கணத்தில் இதனை ‘ஆதி நீழல்’ என்பார்கள்.

‘விரிச்சி’ ஆள் முகம் தெரியாமல் பக்கத்திலிருந்து சொல் மட்டும் காதில் படல் !

அரிய சொல் இது! சிலர், ‘குயில்’ என்று பொருள் கூறியுளர் ! அது பொருந்தாது !

‘வி’ என்ற தமிழ் வேருக்குக் ‘கேள்வி’ (Hearing) என்ற பொருள் உண்டு ! மிகப் பழைய இத் தமிழ் வேர், தெலுங்கு சென்று அங்கு காப்பாற்றப்படுகிறது ! ‘வினிக்கிடி’ என்றால் தெலுங்கில் ‘கேள்வி’ என்பதே பொருள் !

3. ‘புடை கெடப் போகி’ – பகைவர் எவரும் அறியாவாறு மெல்லச் செல்கிறார்கள் !

4. ‘புடை கெட ஒற்றினாகிய வேயே’ – பகைவர்கள் ஒற்றர்கள் மூலம் அறிந்தால் அதனை முறியடிக்கும் வகையில் தம் ஒற்றர் மூலம் அறிந்து அதற்கேற்பச் செல்கின்றனர் !

புடை கெட = ஆரவார மின்றி

‘புடை’க்கு ஆரவாரம் என்ற பொருள் இருப்பதைக் கலித்தொகையில் (98) காணலாம் !

வேய் = ஒற்றரால் செய்தி அறிதல் ; மதுரைக் காஞ்சியில் (642) இப் பொருள் உள்ளது !

5. ‘வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை’ – ஒற்றரால் அனைத்தையும் அறிந்தபின், பகைவர் நாட்டு எல்லையில் தங்குகின்றனர் !

புறத்திறை – ஊர் எல்லையில் தங்குதல் .

இறை = இறு + ஐ ; இறுதல் – இறங்குதல் = முகாமிடுதல் .

6. ‘முற்றிய ஊர் கொலை’ – பசுக்களைச் சுற்றி நின்றுகொண்டு மாட்டுக் காவலர்களை விரட்டி அடித்தும் ,கொல்லவும் செய்கிறார்கள் !

7. ‘ஆகோள்’ – பசுக்களைக் கைப்பற்றுகிறார்கள்! .

கொள்’ என்ற வினையே ‘கோள்’ எனப் பெயர்ச்சொல் ஆயிற்று ! மொழியியலில் (Linguistics) , இதனை ‘Transformation of verb into noun’ என்பார்கள் .

8. ‘பூசன் மாற்றே’ – பசுக்களைக் கவரும்போது எதிரிகள் வாளா இருப்பரா ? பதிலுக்கு அவர்கள் அடித்து விரட்டும்போது அவர்களோடு இவர்கள் மோதுகிறார்கள் !

பூசல் + மாற்று = பூசன் மாற்று ; மாற்று = பதிலடி கொடுத்தல்.

9. ‘நோயின்றி உய்த்தல்’ – ஒருவழியாகப் பசுக்களைக் கவர்ந்தாயிற்று ! பிறகு , அப் பசுக்களுக்குத் துன்பம் வராமல் ஓட்டிக்கொண்டு ஊர் திரும்புகிறார்கள் !

உய்த்தல் = சேர்த்தல்

10. ‘நுவலுழித் தோற்றம்’ – ஏராளமான பசுக்களைத் தம் ஊருக்கு ஓட்டி வருகையில் ஊர் மக்கள் திரண்டு அவர்களை வரவேற்கின்றனர் ! அந்த வரவேற்பை மாடுகளைக் கொணர்ந்தோர் பெறுகிறார்கள் !

நுவலுதல் = பாராட்டிக் கூறுதல் .

தோற்றம் = தோன்றுதல் – காணப்படுதல்- சென்று நிற்றல்.

11. ‘தந்து நிறை’ – பிடித்து வந்த பசுக்களை ஓரிடத்தில் அடைத்து வைக்கிறார்கள்!.

நிறை = நிறுத்துதல் .

12. ‘பாதீடு’ – கவர்ந்த பசுக்களை வீரர்கள் மற்றும் படை தொடர்பானவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார்கள் !

பா =பகுப்பு ; கீரைப் ‘பாத்தி’யில் இச் சொல் முளைக்கக் காணலாம் !

பா + த் + ஈடு = பாதீடு ; பா- வேர்ச் சொல் , த்- எழுத்துப் பேறு , ஈடு – சாரியை ; ‘குறுக்கீடு’ என்பதில் இவ்வீற்றைக் காணலாம் !

13. ‘உண்டாட்டு’ – நினைத்தது முடிந்தது ! பிறகென்ன ? வயிறார உண்டு ,கள் குடித்து, ஆடத் தொடங்குகிறார்கள்!

உண்டு + ஆட்டு = உண்டாட்டு.

‘ஆடு’ எனும் வினை ,‘ஆட்டு’ என்ற பெயராயிற்று ! ‘ஆட்டு’ என்பது இங்கு ஏவல் வினை அல்ல ; பெயர்ச் சொல்லாக நிற்கிறது !

14. ‘கொடை’ – இறுதியில் , ஊர் மக்களுக்கு ஆக்களைத் தானமாக அரசன் அளிக்கிறான் !

இவ்வாறு 14 காட்சிகளை நம் மனக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் தொல்காப்பியர் !

ஏன் அவர் இவ்வாறு விளக்கவேண்டும் ?

ஏனென்றால் ‘ஊர்’என்பது இப்போதைய நகரம் (Town) என்பது போல அன்று இல்லை ! வட்டம் மிகக் குறுகியது ! எனவே, ஊர் முழுவதுமே பசுக்கள் கவர்ந்ததில் மகிழ்ச்சி கொள்ளும்! அதைப் போலவே பசுக்களை இழந்த ஊர் முழுவதுமே ஆத்திரத்தில் குமுறும் ! எனவே , ‘ஆநிரை கோடல் ’ என்பது ஒரு சமுதாயப் பதிவாகிவிடுகிறது ! தொல்காப்பியர் பழந்தமிழ்ச் சமுதாயத்தை அணு அணுவாகக் காட்டுதலை நோக்கமாகக் கொண்டவர் !இதுவே அவரது மேலை ஓவியத்திற்குக் காரணம் !

தொல்காப்பியரின் இந்த ஓவியத்தை அவர் மொழியிலேயே காண வேண்டுமா? :-
“படைஇயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகிய செலவே புடைகெட
ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்
முற்றி னாகிய புறத்திறை முற்றிய
ஊர்கொலை ஆகோள் பூசன் மாற்றே
நோயின்று உய்த்தல் நுவலுழித் தோற்றம்
தந்துநிறை பாதீடு உண்டாட்டுக் கொடையென
வந்த ஈரேழ் வகையிற் றாகும்” (புறத்திணையியல் 3)
......................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 21, 2013 9:54 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (43)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘வீரம் செறிந்த இனம் தமிழினம் ’ என்று அடிக்கடி சொல்கிறோமே அதற்கு ஆதாரமான தொல்காப்பிய நூற்பாவை (புறத்திணையியல் 17) வருமாறு விளக்கலாம் ! :-

1.வேற் படையுடன் போரிட்டான் ஒரு வேந்தன் ! அவனைச் சூழ்ந்துகொண்டன எதிரியின் காலாட்படை (‘தானை’) ,யானைப் படை , குதிரைப் படை மூன்றும் !ஆனால் அவர்களிடமிருந்து தப்பித்துக்கொண்டு ஒரே ஒரு வீரன் மட்டும் வெளியில் வந்து முப்படை வீரர்களையும் வெட்டிச் சாய்ப்பான் !

இதுவே ‘தார் நிலை’ !

2. இரண்டு பக்கத்துப் போர்த் தலைவர்களும் மாண்டுபோயினர்!

இது ‘தபுதிப் பக்கம்’ !

3. தாக்குப் பிடிக்க முடியாமல் சிதறிப் பின்வாங்குகிறது தன் படை ! அந்த நிலையில் ஒரே ஒரு வீரன் மட்டும் பின்வாங்கும் படை நடுவே புகுந்துபோய் எதிரிகளை வெட்டித் தள்ளினான் ! அவனைப் பதிலுக்கு வெட்ட வந்தது எதிரிப் படை ! அந்த எதிரிப் படைக்குப் பெயர் ‘கூழைப் படை’! அக் கூழைப் படையையும் சாய்த்தான் அந்த வீரன் !

இதுதான் ‘எருமை நிலை’!

4. ஒருவனின் உடலில் வேல் பாய்ந்துவிட்டது ! ஆனால் என்ன செய்தான் ? அந்த வேலைத் தானே பிடுங்கிவிட்டுத் தன் உடல் வலிமையால் போரிட்டான் !

இதுதான் ‘பாழி நிலை’!

5. பிளிறிக்கொண்டு ஓடிவரும் ஆண் யானைகளை (களிறுகளை) வெட்டி வீழ்த்தினர் வீரர்கள் !

இதுதான் ‘களிறு எதிர்ந்தோர் பாடு’!

6. போர்க்களத்தில் தனது யானையுடன் தானும் சாய்ந்தான் ஒரு வேந்தன்!அப்போது அவனை வீழ்த்திய வாள் வீரர்கள் ஆடிப் பாடினர் !

இதுதான் ‘அமலை ஆட்டம்’ !

7.போரில் இவனை அவன் வெட்ட , அவனை இவன் வெட்ட என்று தொடர்ந்து போரிட்டதில் கடைசியில் ஒருவருமே மிஞ்சவில்லை !

இதுதான் ‘தொகை நிலை’!

8. போரில் தனது மன்னன் இறந்துவிட்டான் ! அதனைப் பார்த்த ஒரு வீரன் பொங்கினான் ! எதிரிப் படைக்குள் புகுந்து போரிட்டான் ஆவேசத்துடன் !

இதுதான் ‘புகழ்மிகு நிலை’ !

9. ஒரு வீரனின் உக்கிரப் போரால் , எதிரிப் படை முழுவதுமே பின்வாங்கி ஓடியது ! அப்பொது , அவ் வெற்றி வீரன் தன் வாளைச் சுழற்றி ஆடலானான் !

இதுவே நூழிலாட்டு !

இவை தும்பைத் திணைப் போர்க் காட்சிகள் !

ஏன் இவ்வளவு கொடூரம் ?

பிறரது பொருளைக் கைப்பற்றுவதற்கான போரல்ல தும்பைப் போர் !

“நீ பெரியவனா ? நான் பெரியவனா?” என்று வீரம் பேசும் போர் !

இங்கே நாம் ஒன்றைக் காணவேண்டும் ! ‘எதிரிப் படை’ என்று நாம் பேசுகிறோமே ,அவர்களும் தமிழர்கள்தான் ! அவர்கள் சீனர்கள் அல்லர் ! நாம் வசதியாக வெற்றிப் பக்கத்தை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் உணர்ந்தால் நல்லது !



......................




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Feb 23, 2013 3:55 pm

தங்களின் சிறந்த தமிழ்பணிக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் அய்யா, தமிழர்கள் அறிய வேண்டிய அற்புத நூலை எளிமையாக தொடர்ந்து வழங்குவதற்கு மிக்க நன்றி...

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
தொடருங்கள்,,,,

தெள்தமிழ் பேசும் தொல்காவியத்தை
நல்வடிவில் வழங்கும் நாவலரை
பல்முறை பாராட்டும் பாருலகம்
கல்வடிவும் கறையும் காவியத்தமிழும்
வில்லும் துள்ளும்மீனும் வீர்புலியும்
நல்லாட்சி செய்த நல்லோர் நாடிது
சொல்லாட்சி செந்தமிழில் சோர்விலா
வல்லமை பெருக வழங்கும் வான்புகழ்
தொல்காப்பியச் சோலையில் தெள்ளமுத
நற்சுவையை நாளும் பருகுவோம்
சொற்சுவை நாவலர் வாழ்க பல்லாண்டு


















சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 23, 2013 4:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (44)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் வஞ்சிப் போர்க்களக் காட்சிகளைப் பதின்மூன்று துறைகளாகத் தருகிறார் ! (துறை - பிரிவு)

1. ‘இயங்கு படை அரவம்’ – வலுவான பெரும் படை புறப்படலும் அதனால் எழும் ஓசையும் !

இயங்கு படை – ‘முன் பின்னாக மாறித் தொக்கது’ ; ‘படை இயங்கு’ என்று படிக்க வேண்டும் !

2. ‘எரி பரந்து எடுத்தல் ’ – பகைவரின் ஊர்களைத் தீ வைத்து எரித்தல் !

3.‘வயங்கல் எய்திய பெருமை’ – தனக்குத் துணையாக வரும் வேறு அரசர்களால் போரிடும் அரசன் பெருமை கொள்ளல் !

4.‘கொடுத்தல் எய்திய கொடைமை’ – வீரர்களுக்கு அரசன் பலவிதமான கொடைகளைத் தரல் !

5. ‘அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம்’ – பகைவரை வென்று அழித்த வெற்றியில் மகிழ்தல் !

6. ‘மாராயம் பெற்ற நெடுமொழி’ – அரசன் வீரர்களுக்குப் பட்டங்கள் தந்து சிறப்புச் செய்தல் !

நெடு மொழி – புகழ் மொழி (இதுவே ‘மீக்கூற்று’ )

மாராயம் – சிறப்பு

இத் தொல்காப்பியச் சொல்தான் இன்றும் ‘சாராயம் குடிக்கும்போது மாராயமா ?’ என்ற பழமொழியில் வழங்குகிறது !

7. ‘ பொருளின்று உய்த்த பேராண் பக்கம் ’ – பகைவரை ஒரு பொருட்டாக நினையாது அவர்களை அடக்கிய பேராண்மை பேசப்படுதல் !

8. வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை – வெள்ளத்தைத் தடுக்கும் கல்லணை போல தனி ஒருவனாக நின்று பகைப் படையைத் தடுத்தல் !

9. ‘பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை’ - படைஞர்களுக்குப் பேருணவு வழங்குதல் !
மகா பாரதப் போரில் வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தவன் ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் தமிழ் மன்னன்’ என்று எழுதியுள்ளார்கள் !

இதனைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்; மிகப் பெரிய ஆய்வுகளுக்கு இஃது அடித்தளமாகும் !

10 . ‘வென்றோர் விளக்கம் ’- வெற்றி பெற்ற வீரர்கள் ஒளியுடன் கொண்டாடுதல் !

இதுவே வாண வேடிக்கை , ‘பட்டாசு’ வெடித்தலுக்கு தொன்மைச் சான்று !

11. ‘தோற்றோர் தேய்வு ’- தோற்றவர்கள் களையிழந்து சோர்தல் !

12. ‘குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளை ’ – போர் வெற்றியைக் கொண்டாடும் ‘வள்ளைப் பாட்டு’ப் பாடுதல் !

வள்ளைப் பாட்டு – உலக்கைப் பாட்டு ; உரல் பாட்டு .

13. ‘அழிபடை தட்டோர் தழிஞ்சி’ – பகைவர் ஏவிய ஆயுதங்களைத் தடுத்ததால் புண்பட்டுப்போன வீரர்களைப் பார்த்து நலம் கேட்டல் !

தொல்காப்பியர் கூறிய வரிசையில் மேலைத் துறைகள் தரப்பட்டுள்ளன !

இவற்றைக் கொண்டு வஞ்சிப்போர் எப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று நாம்தான் ஊகித்துக் கொள்ளவேண்டும் ; ‘நூற்பா’ என்பதே சுருக்கமாகக் கூறுவதுதான் ! :-

“இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தல்
வயங்கல் எய்திய பெருமை யானும்
கொடுத்தல் எய்திய கொடைமை யானும்
அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும்
மாராயம் பெற்ற நெடுமொழி யானும்
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும்
பிண்டம் மேய பெருஞ் சோற்று நிலையும்
வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும்
குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்
அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக்
கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே ”!
(புறத்திணையியல் 7)

சரி ! எதற்காக வஞ்சிப் போராம் ?

இதற்கு முந்தைய நூற்பாவில் (புறத்திணையியல் 6) காரணம் கூறுகிறார் !

வேறு ஒன்றுமில்லையாம் ! மண்ணாசைதானாம் ! ( ‘எஞ்சா மண்ணசை’ ; மண் + நசை = மண்ணசை ; நசை – விருப்பம்; இச் சொல்தான் தெலுங்கில் ‘நச்சினாடு’, ‘நச்சிந்தி’ என்றெல்லாம் வழங்குகிறது !)

சரி! ஏன் மண்ணாசை ?

வரலாற்று முறையில் ஆராய வேண்டும் !

அரசனின் தனிப்பட்ட பேராசை ஒரு காரணம் !

மற்றொரு காரணம் – அவனது பெருகிவரும் மக்களுக்குக் கூடுதல் நிலப்பரப்பு தேவைப் படுவது !

ஏற்கனவே ஒரு குட்டையில் மீன் பிடித்துவந்தால் ,குடும்பம் பல பெருகும்போது , அந்தக் குட்டை போதாது ! எனவே பக்கத்து ஊர் மீது கண் போகிறது !

எது காரணமோ, போரில் அடிபட்டவனுக்கல்லவா தெரியும் ,அவனுக்கு வலிக்கும் வலி !

> > >




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 23, 2013 4:52 pm

சதாசிவம் அவர்களுக்கு என் நன்றி ! தொல்காப்பியம் உங்களைத் தொட அது ஒரு கவிதையைத் தொட்டிருக்கிறது ! மிக்க மகிழ்ச்சி,தங்களின் கவிதைப் பரிசிற்கு !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 24, 2013 5:38 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (45)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

இது தொல்காப்பியர் காட்டும் கோட்டை மதிற் போர் ! எட்டு நிலைகளை அவர் சுட்டுகிறார் ! :-

1. ‘கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம்’ – பகைவர் நாட்டைக் கவர உறுதி பூணும் செருக்கு !

கொள்ளார் – பகைவர் ; ‘கேளார்’ என்பதுபோல இச் சொல் அமைந்துள்ளது.

‘அவர்கள் இருவருக்கும் கொள்ளாது’ எனில் , ‘அவர்கள் இருவருக்கும் ஆகாது’ என்பது பொருள் !

‘தேஎம்’ –என்ற சொல் நோக்கற் பாலது. ‘தேயம்’ , ‘தேசம்’ முதலிய சொற்களுக்கு எல்லாம் ‘தே’ என்பதே வேர் (Root) என்று நமக்கு அறிவிக்கும் இடம் இது !

‘ குறித்த கொற்றம்’ – என்பதை நம் நடையில் கூறுவதானால் , ‘கங்கணம் கட்டுதல்’ எனலாம்!

‘கங்கணம் கட்டுதல்’ என்பதே ‘சங்கல்பம்’ என்று வடமொழிக்குப் போனது ! மூலம் , தமிழே !

2. ‘உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு’ – நினைத்ததை நினைத்தவாறு செய்து முடிக்கும் அரசனது பெருமை கூறுதல் !


3. ‘தொல்லெயிற்று இவர்தல்’ – பழைமையான சுவற்றின் மீது ஏறுதல்!

4. ‘தோலின் பெருக்கம்’ – சுவர் மீதிருந்து வீரர்கள் எய்யும் அம்புகள் முதலியவற்றைத் தடுக்கும் தோற்படை !

தோல் - கேடயம்

5. ‘அகத்தோன் செல்வம்’ – கோட்டைக்குள் இருக்கும் அரசனது செல்வ வளம் !

இதனைக் கேள்விப்பட்டுத்தான் போருக்கு வேற்றரசன் வருவான் ! இந்தியாவின் செல்வ வளத்தைக் கேள்விப்பட்டுத்தான் வெளிநாட்டவர்கள் இந்தியா மீது பலமுறை படையெடுத்தனர் என்பது வரலாறு !

6. ‘ முரணிய புறத்தோன் அணங்கிய பக்கம் ’ – போருக்கு வந்த புற அரசனைக், கோட்டைக்குள் இருக்கும் அரசன் எதிர்த்துத் தாக்குதல் !

அணங்கிய - வருத்திய

7. ‘ஒரு தான் மண்டிய குறுமை’ - புற அரசன் தன்னந் தனியாகத் தான் ஒருவனே சென்று போரிடல் !

8. ‘உடன்றோர் வருபகை பேணார் ஆர் எயில்’- போருக்கு வந்துள்ள புற அரசனை எதிர்கொள்ளத் தக்க மதிலின் சிறப்பு !

உடன்றோர் – பகை கொண்டோர்.

ஆர் எயில் –அரிய மதிற் சுவர்.

எட்டுதல் இன்மையைத் தருதலால் ‘எயில் ’ஆயிற்று !

எ + ய் +இல் = எயில் ; எ – இவ்வேர்ச் சொல் ‘எட்டுதல்’ எனும் பொருள் கொண்டது ! இதனைக் கொண்டு பிறந்ததே ‘ஏணி’ !
ய் – உடம்படு மெய் ; இல் – பண்பு விகுதி .

தொல்காப்பியர் மேலே பேசிய மதிலானது ‘கற்கோட்டைச் சுவர்தான்’ என எண்ண முடியாது ! மண் கோட்டைச் சுவராகவே இருக்கவேண்டும் ! கி.மு.ஆயிரத்தில் மண் கோட்டைகளே இருந்திருக்கும் என எண்ணலாம் ! கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையே மண் கோட்டைதானே ?

மேலே பார்த்த உழிஞைப் போர் மருத நிலத்தில் நடப்பது ! ஏனெனில் மருத நிலத்தில்தான் கோட்டை கட்டிச் , செல்வங்களை உள் வைத்துப் போற்றி வாழும் நகர் அமையும் ! உழிஞைப் போர் விளக்கும் தரும் நூற்பா :-

“கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
தொல்லெயிற்கு இவர்தலும் தோலின் பெருக்கமும்
அகத்தோன் செல்வமும் அன்றி முரணிய
புரத்தோன் அணங்கிய பக்கமும் திறப்பட
ஒருதான் மண்டிய குறுமையும் உடன்றோர்
வருபகை பேணார் ஆரெயில் உளப்படச்
சொல்லப் பட்ட நாலிரு துறைத்தே ” ! (புறத்திணையியல் 7)

உலகத்துப் போர்க் கலை (Warfare techniques) வரலாற்றில் , தொல்காப்பியரின் போர்ப் பதிவுகள் காலத்தால் முந்தியதாயும் ஆழத்தால் சிறந்ததாயும் இருக்கக் காணலாம் !

 > >




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 7 of 84 Previous  1 ... 6, 7, 8 ... 45 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக