புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 59 of 84 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 71 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 12:17 pm

Dr.S.Soundarapandian wrote:
‘மெல்லெழுத்து  ஆறும்’ – மெல்லெழுத்துகளாகிய ங,  ஞ, ண, ந, ம, ன என்ற ஆறின்,
’ பிறப்பின் ஆக்கஞ்’ – பிறப்பின் செயலானது,
‘  சொல்லிய பள்ளி’ – நான் சொல்லிய இடங்களில்,
‘நிலையின ஆயினும்’ – நின்று பிறப்பன ஆயினும்,
‘மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்’ – அவை மூக்குக் காற்றாகவே வெளிப்படும் !
தொல்காப்பியர் ‘மூக்கின் வளியிசை’ என்றதைத்தான் இன்றைய மொழியியலார் ‘Nasal’(‘மூக்கொலி’) என்கின்றனர்.மெல்லெழுத்திற்கு மூக்குக் காற்று !
[You must be registered and logged in to see this link.]
தொல்காப்பியர் மூக்கின் வளியிசையும்-மூக்கொலியும் ஒன்றே,நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 24, 2015 12:46 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 25, 2015 9:15 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (407)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிரெழுத்துகள் எப்படிப் பிறக்கின்றன எனத் தொல்காப்பியர் காட்டினார் !

மெய்யெழுத்துகள் எப்படிப் பிறக்கின்றன என அவர் காட்டினார் !

ஆனால் சார்பெழுத்துகள்?

சார்பெழுத்துகளின் பிறப்பைப் பற்றித் தொல்காப்பியர் ஏதேனும் கூறியுள்ளாரா?

கூறியுள்ளார் !:-
“சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றுந்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும்” (பிறப். 19)

 ‘சார்ந்துவரின் அல்லது தமக்கியல்பு இல எனத்
தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும்’ – தமக்கு எனத் தனி இடம் இன்றிப் பிற எழுத்துகளை ஒட்டிக்கொண்டு வரக்கூடிய மூன்று சார்பெழுத்துகளும்,
‘தத்தம்  சார்பில் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியில்  தம்மியல்பு  இயலும்’ – தாம் எந்த எழுத்தைச் சார்ந்து பிறக்கிறதோ அந்த எழுத்தின் பிறப்பிடத்தையே தமது பிறப்பிடமாகக் கொள்ளும் !

நாகு – இங்கே குற்றியல் உகரம் ‘க்’மீது ஏறிக்கொண்டு வருகிறது ! எனவே இக் குற்றியலுகரத்தின் பிறப்பிடம் ‘க்’குக் குரிய பிறப்பிடமே !

நுந்தை – இங்கே குற்றியல் உகரம் ‘ந்’மீது ஏறிக்கொண்டு நிற்கிறது ! எனவே இக் குற்றியலுகரத்தின் பிறப்பிடம் ‘ந்’துக் குரிய பிறப்பிடமே !

கேண்மியா – இங்கே குற்றியல் இகரம், ‘ம்’மீது நிற்கிறது ! எனவே இக் குற்றியலிகரத்தின் பிறப்பிடம் ‘ம்’முக் குரிய பிறப்பிடமே !

இங்கு கூறப்படுவது பிறப்பிடம் பற்றியே தவிர , உச்சரிப்புப் பற்றியது அல்ல! குற்றியலுகரம் , குற்றியலிகரம் ஆகியவற்றைக் குறைந்த ஓசை கொடுத்துக் குறுகிய ‘உ’வாகவும் ,  குறுகிய ‘இ’யாகவுமே உச்சரிக்கவேண்டும் !

எஃகு – இங்குள்ள சார்பெழுத்தாகிய ‘ஃ’ , இதனை அடுத்துள்ள ‘க்’கைச் சார்ந்துள்ளது ! எனவே இந்த ஆய்தத்தின்  பிறப்பிடம் ‘க்’குக் குரிய பிறப்பிடமே !

கஃசு – இங்குள்ள சார்பெழுத்தாகிய ‘ஃ’ , இதனை அடுத்துள்ள ‘ச்’சைச் சார்ந்துள்ளது ! எனவே இந்த ஆய்தத்தின்  பிறப்பிடம் ‘ச்’சுக் குரிய பிறப்பிடமே ! அஃதாவது , ஆய்தத்தின் ஒலி , தனியாக  ‘ஹ்’ எனப் பிறப்பதில்லை என்பதே தொல்காப்பியர் கருத்து ! ஏறத்தாழக் ‘கச்சு’ என்பதுபோலத்தான் இந்த ஆய்தப் பிறப்பைக் கொள்கிறார் அவர் !

அது சரி , ‘அளபெடை’ என்கிறோமே , அதன் பிறப்பு ?

அளபெடைப் பிறப்பு நுணுக்கத்தைப் பற்றி இளம்பூரணர் கூறுகிறார் ! –
“அளபெடையும் உயிர்மெய்யும் தமக்கு அடியாகிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்பது கொள்க !”.

மகாஅர் – இதிலுள்ள அளபெடையாகிய ‘அ’ , தனியாக , உயிரெழுத்துப் பிறக்கும் இடத்தில் பிறக்காது! அதற்கு முன்னே உள்ள ‘க்’பிறக்கும் இடத்தில்தான் பிறக்கும் !ஏனென்றால் , ‘காஅ’ என்றுதான்  இந்த அளபெடையை உச்சரிக்கிறோம் !

இளம்பூரணர் , தம் உரையில் இன்னொன்றையும் சொல்கிறார் ! – “ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பே யெனினும் தலை வளியாற் பிறத்தலின் …”.

அஃதாவது , ஆய்த ஒலிப் பிறப்பிற்குக் காற்று தலைக் காற்று!

‘தலைக் காற்று’ப் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 11:07 am

Dr.S.Soundarapandian wrote:
இங்கு கூறப்படுவது பிறப்பிடம் பற்றியே தவிர , உச்சரிப்புப் பற்றியது அல்ல! குற்றியலுகரம் , குற்றியலிகரம் ஆகியவற்றைக் குறைந்த ஓசை கொடுத்துக் குறுகிய ‘உ’வாகவும் ,  குறுகிய ‘இ’யாகவுமே உச்சரிக்கவேண்டும் !
எஃகு – இங்குள்ள சார்பெழுத்தாகிய ‘ஃ’ , இதனை அடுத்துள்ள ‘க்’கைச் சார்ந்துள்ளது ! எனவே இந்த ஆய்தத்தின்  பிறப்பிடம் ‘க்’குக் குரிய பிறப்பிடமே !
மகாஅர் – இதிலுள்ள அளபெடையாகிய ‘அ’ , தனியாக , உயிரெழுத்துப் பிறக்கும் இடத்தில் பிறக்காது! அதற்கு முன்னே உள்ள ‘க்’பிறக்கும் இடத்தில்தான் பிறக்கும் !ஏனென்றால் , ‘காஅ’ என்றுதான்  இந்த அளபெடையை உச்சரிக்கிறோம் !
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 103459460 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 1571444738

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2015 2:34 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 26, 2015 7:53 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (408)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் , இதற்கு முன் , மூக்குக் காற்று , நெஞ்சுக் காற்று என்றெல்லாம் பார்த்துள்ளோம் !

ஆனால்,காற்றானது உந்தியிலிருந்து வருவதாகத்தானே பிறப்பியல் முதல் நூற்பாவில் சொன்னார் ? ஒரு குழப்பம் உள்ளதே?

இக் குழப்பத்தைப் போக்குகிறார் இந்த நூற்பாவில் !:-
“எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரிறப நாடி
யளபிற் கோட லந்தணர் மறைத்தே” (பிறப். 20)

‘எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி’ – எழுத்துப் பிறப்பதற்கு என்று வெளிப்படையாக இலக்கணத்தில் சொல்லப்பட்ட உறுப்புகளின் இடத்தே,
‘ எழுதரு வளியின்’ – எழுகின்ற காற்றாலே,
‘பிறப்பொடு விடுவழி’ – அந்த எழுத்தானது பிறப்பதற்குரிய செய்கைகள் கொண்டு உச்சரிக்கும்போது,
‘உறழ்ச்சி வாரத்து அகத்து எழு வளி இசை’ – ’அகம்’என்று சொல்லக்கூடிய உந்தியிலிருந்து மேலே எழும்பி வாய்க்குச் சென்று , மீண்டும் நெஞ்சுக்கு வந்து தங்கும் காற்றை,
‘அரில்தப நாடி’- பிணக்கு இல்லாமல் ஆய்ந்து,
‘அளபிற் கோடல்’ – மாத்திரை அளவு எல்லாம் சரியாகப் பார்த்தல்,
‘அந்தணர் மறைத்தே’ – முனிவர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது !

‘அந்தணர்’ -  முனிவர் (பிங்கல நிகண்டு)

அஃதாவது , காற்றின் தோற்றம் – உந்தி

அது உலாவும் இடங்கள் – தொண்டை ; தொண்டைக்கு மேலுள்ள வாய்ப்பகுதி; மூக்கு எல்லாம் உலாவிவிட்டு மீண்டும் வந்து தங்கும் இடம் – நெஞ்சு ; தங்குவதற்கு முன்புவரை அந்தக் காற்றுக்குப் பெயர் ‘வளி’!

நெஞ்சிலிருந்து எழுத்தை உச்சரிப்பதற்காக எழும்போது -  ‘எழுத்தொலி’ என்ற பெயரை அதே வளி பெறுகிறது !

அஃதாவது , ‘மூக்கொலி’ , ‘மிடற்றொலி’ முதலியனவெல்லாம் நெஞ்சில் தங்கிய ‘வளி’யானது கொள்ளும் மாற்றங்களே !

இளம்பூரணர் இந்தத் தெளிவை எழுதாவிட்டால் , ஒவ்வொரு முறையும் எழுத்தை உச்சரிக்கும்போது உந்தியிலிருந்தா காற்றுப் போகிறது ? என்ற ஐயம் எழும் !

இளம்பூரணர் விளக்கத்தால் ஐயம் தீர்ந்தது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2016 9:11 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (409)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது பிறப்பியலின் இறுதி நூற்பா! –
“அஃதிவ  ணுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
  மெய்தெரி  வளியிசை யளபுநுவன் றிசினே” (பிறப். 21)

‘அஃது’ – உடம்பில் எழக்கூடிய காற்றால் சில ஓசைகளின் மாத்திரை பற்றி,
‘ இவண் நுவலாது’ – இங்கே சொல்லாது,
‘எழுந்துபுறத்து இசைக்கும்’ – வெளியே வந்து ஒலிக்கும்,
மெய்தெரி  வளியிசை யளபு நுவன் றிசினே – எழுத்தொலிகளுக்கு மட்டுமே  மாத்திரை அமையும் என்றேன்!

அஃதாவது, உடம்பில் உள்ள காற்றால் முக்கல் , முணகல் ஏற்படும் ஒலிகளுக்கு மாத்திரை கூறுவது தொல்காப்பியர் நோக்கமன்று !  ‘வளி’யானது , எழுத்துக்குரிய ஒலியாக வெளிவரும்போதுதான் தொல்காப்பியர் மாத்திரைக் கணக்குக் கூறியுள்ளார் ! இதைத்தான் இந்த நூற்பாவில் ஓதுகிறார் அவர் !
இதைத்தான் இளம்பூரணர் தம் உரையில் – “ மெய்தெரி என்றதனான் , முற்கு முதலியன முயற்சியாற் பிறக்குமெனினும் பொருள் தெரியா நிலைமைய வாகலின் அவற்றிற்கு அளபு கூறாராயினா ரென்பது பெறப்பட்டது.”என்றார்.

இளம்பூரணர் உரையில் உள்ள ‘முற்கு’ என்பது ‘முக்கு’தான் !

அளபு - மாத்திரை

‘கல்லைத் தூக்க இந்த முக்கு முக்குறானானே?’- சொல்கிறார்கள் அல்லவா? அந்த ‘முக்கு’தான் ‘முற்கு !’

தொல்காப்பியர் , ‘என்ப’ , ‘என்மனார்’ , ‘படுமே’ என்றெல்லாம் எழுதி,  ‘என்று கூறுவார்கள்’ , ‘என்று சொல்வார்கள்’ , ‘என்று கூறப்படும்’ என்பதுபோலத்தான் பல சூத்திரங்களை எழுதியுள்ளார் ! ஆனால் இந்த இடத்தில் ’சொன்னேன்’ ( ‘நுவன்றிசின்’) என்று கூறியுள்ளது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது !

இத்துடன் நமது எழுத்ததிகார ஆய்வு நிறைவடைகிறது !

அடுத்த ஆய்வு சொல்லதிகாரம் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 9:04 pm

Dr.S.Soundarapandian wrote:
தொல்காப்பியர் , ‘என்ப’ , ‘என்மனார்’ , ‘படுமே’ என்றெல்லாம் எழுதி,  ‘என்று கூறுவார்கள்’ , ‘என்று சொல்வார்கள்’ , ‘என்று கூறப்படும்’ என்பதுபோலத்தான் பல சூத்திரங்களை எழுதியுள்ளார் ! ஆனால் இந்த இடத்தில் ’சொன்னேன்’ ( ‘நுவன்றிசின்’) என்று கூறியுள்ளது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது !
[You must be registered and logged in to see this link.]
நல்ல பதிவுகளை இதில் தாங்கள் வழங்கியுள்ளீர்கள்,நன்றி ஐயா
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 1571444738 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 1571444738 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 59 1571444738

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 09, 2016 5:44 pm

நன்றி பழ. முத்துராமலிங்கம் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 09, 2016 5:46 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (410)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது சொல்லதிகாரம் !

தமிழ்ச் சொற்கள் , உயர்திணை ,அஃறிணை ,பெயர்ச்சொல் , வினைச்சொல் , இடைச்சொல் , உரிச்சொல் என்றெல்லாம் பகுக்கப்பட்டுள்ளன அல்லவா?;  ‘அவளை’ , ‘அவளுக்கு’ என்றெல்லாம் வரும் வேற்றுமைகளும் சொல்லமைப்பில் காணப்படுகின்றன அல்லவா? இவற்றைக் கூறும் அதிகாரம்தான் சொல்லதிகாரம் !

நாம் எழுத்ததிகார ஆய்வுக்கு நாம் பயன்படுத்தியது இளம்பூரணர் உரை நூல் !

இப்போது சொல்லதிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப்போகும் நூல் சேனாவரையர் உரையுடன் கூடிய நூல் !

சொல்லதிகாரத்தின் முதல் இயல் கிளவியாக்கம் !
கிளவி – சொல்
ஆக்கம் – ஆகும் தன்மை
கிளவியாக்கம் – கிளவி ஆகும் தன்மை

சொல்லானது எப்படிப்பட்ட தன்மைகளிலெல்லாம் உள்ளன என்பதைக் கூறும் இயல் !

அஃறிணை , உயர்திணை , ஒன்றன்பால் , தன்மை இடம் , முன்னிலை இடம் என்றெல்லாம் தமிழ்ச் சொற்கள் பிரிந்து கிடக்கின்றன அல்லவா? இவற்றை இலக்கணப்படுத்துவதே இந்தக் கிளவியாக்கம் !

கிளவியாக்கம் என்ற இயலில் திணை பற்றிய நூற்பாவே முதல் நூற்பா ! –
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
 அஃறிணை என்மனார் அவரல  பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே”  (கிளவி. 1)

‘உயர்திணை என்மனார்’ – உயர்திணைச் சொற்கள்  என்று கூறுவார்கள் ,
‘மக்கள் சுட்டே’ – மக்களைச் சுட்டுகின்ற சொற்களை!
‘அஃறிணை என்மனார்’ – அஃறிணைச் சொற்கள் என்று கூறுவார்கள் ,
‘அவர் அல பிறவே’ – மக்களைத் தவிர்த்த பிறவற்றைக் குறிக்கும் சொற்களை !
‘ஆ இரு திணையின்’ – அந்த இரு திணைகளில் ,
‘இசைக்குமன சொல்லே’ – சொற்கள் வழங்கப்படும் !

குமணன் , நக்கீரன் , தொழிலாளி, முதலாளி , வேலைக்காரர் , மரம்வெட்டி, தச்சர் , கொல்லர் , ஆண் , பெண் , தாய், மனைவி, ஆசிரியர் ,மாணவன், நடிகை – எல்லாம் உயர்திணைச் சொற்களே !
ஏன்?
இவை மக்களைச் சுட்டுகின்றன !

கல் , மண் , செங்கல் , மீன் , கொக்கு , ஆகாயம் , காற்று , ஆடை , சேலை , துணி , மணி – எல்லாம் அஃறிணைச் சொற்களே !
ஏன்?
இவை மக்க ளல்லாதவற்றைச் சுட்டுகின்றன !

உயர்திணை – உயர் + திணை; உயர்ந்த திணை.
காலம் கரந்த பெரெச்சமாக- காலத்தைத் தெரிவிக்காத பெயரெச்சமாக , ‘உயர்’ எனும் சொல்  நிற்பதைக் காணுங்கள் ; அந்தப் பெயரெச்சம் ‘திணை’ என்ற பெயர் கொண்டு முடிவதையும் நோக்குக!
எனவே , ‘உயர்திணை’ – வினைத் தொகை (Verb compound)
உயர்திணை – Rational class

அஃறிணை – அல் + திணை
அல்திணை -  அல்லாததாகிய  திணை; உயர்திணை அல்லாததாகிய திணை.
எனவே , அஃறிணை -  பண்புத் தொகை (Qualitative compound)
அஃறிணை – Non rational class

சேனாவரையர் விளக்கியுள்ளபடி –
என்மனார் = என்ப + மன் + ஆர்
‘என்ப’ என்பது , ‘என்’ எனக் குறுகிற்று !
என்ப – வினை முற்று
மன் – இடைச்சொல்
ஆர் - இடைச்சொல்
என்மனார் – எதிர்கால வினை முற்று.
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 59 of 84 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 71 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக