புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 58 of 84 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 71 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:22 pm

Dr.S.Soundarapandian wrote:
பிறப்பியலில் இப்போது ‘ப்’ , ‘ம்’ ஆகிய ஒலிகள் பிறப்பதைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-
“இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்” (பிறப். 15)
‘இதழ் இயைந்து’ – கீழ் உதடும் மேல் உதடும் சேர்ந்து ,
‘பிறக்கும் பகாரம் மகாரம்’ -  ‘ப்’ , ‘ம்’ ஆகியன பிறக்கும் !
‘ப்’ ஆனது இரு உதடுகள் சேரப் பிறக்கிறது என்று தொல்காப்பியர் சொல்லியதைத்தான் ‘Bilabial’ என்கிறார்கள்!
***
[You must be registered and logged in to see this link.]
அற்புத விளக்கம் அருமை ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 20, 2015 12:57 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 1:49 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 21, 2015 8:06 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (405)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 'ய்' – பிறப்பதைத் தொல்காப்பியர் உரைக்கிறார் !:-

“அண்ணஞ்  சேர்ந்த மிடற்றெழு வளியிசை
 கண்ணுற்  றடைய யகாரம் பிறக்கும்” (பிறப். 17)

‘அண்ணம்  சேர்ந்த’ – அண்ணத்தைசேர்ந்து ,
‘மிடற்று எழு வளி  இசை’ – தொண்டையின் காற்றானது,
‘கண்ணுற்று அடைய’ – சென்று அடையும்போது,
‘யகாரம் பிறக்கும்’ -  ‘ய்’பிறக்கும் !

இப்போதைய மொழியியலின்படி , தொல்காப்பியர் கூறிய ‘அண்ணம்’ என்பது , உச்சி நடு அண்ணத்திற்கும் , முன் அண்ணத்திற்கும் இடைப்பட்ட  அண்ணப் பகுதியாகும் ! ‘Palate’ என்று குறிப்பர் !

எனவே , ‘ய்’யை அண்ண ஒலி (Palatal sound) என்பர் !

‘ய்’யை உச்சரிக்கும்போது , குரல்வளை அதிர்கிறது !

எனவே , ‘ய்’யை ஒலிப்புடை (Voiced) ஒலி என்பர் !

‘ய்’யானது ஒலிக்கும்போது , அண்ணத்தைத் தொடாமல் , சிறிது இடைவெளி விட்டு  நாக்கின் பகுதி தொட்டும் தொடாமலும் இருக்கிறது !

இதனால் , ‘ய்’யைத்  ‘தொடாநெருங்கொலி’ (Approximant) என்பர் !

‘ய்’யானது ஒலிக்கும்போது சிறிது நேரம் , ‘ய்ய்’என்றபடி,  ஒலித்தொடர்ச்சி கேட்கிறது !

இதனால் , ‘ய்’யைத் தொடரொலி (Continuant) என்பர் !

‘ய்’யைக் குறில் என்றும் , ‘ய்ய்’யை நெடில் என்றும் கூறுப!

வயல் – இதிலுள்ள ‘ய்’ குறில் .

நொய்யல் – இதிலுள்ள ‘ய்ய்’நெடில்.

ஆதலால் , ‘ய்’யின் பிறப்பை , ‘அண்ண ஒலிப்புடைக்  குறில் தொடரொலி’ (Palatal voiced short continuant) எனலாம் !

‘ய்ய்’யின் பிறப்பை , ‘அண்ண ஒலிப்புடை  நெடில் தொடரொலி’ (Palatal voiced long continuant) எனலாம் !

‘ய்’யின் பிறப்பை , ‘அண்ண ஒலிப்புடைக்  குறில்  தொடாநெருங்கொலி’ (Palatal voiced short approximant) எனவும் கூறலாம் !

‘ய்ய்’யின் பிறப்பை , ‘அண்ண ஒலிப்புடை  நெடில்  தொடாநெருங்கொலி’ (Palatal voiced long approximant) எனவும் கூறலாம் !

ய் , ய , யா , யி , யீ , யு ,யூ , யெ , யே ,யை , யொ ,யோ , யௌ – 13  எழுத்துகளுமே , ‘அண்ண ஒலிப்புடைத்  தொடரொலி’ (Palatal voiced  continuant) எனலாம் !

‘ஐ’ உச்சரிப்பில் பாதியாக ‘ய்’ ஒலிப்பதால் , ‘ய்’யை ‘அரை உயிர்’ (Half vowel) என்பர் !

மொழியியலார்  ‘Approximant’ என்பதை அன்றே  ’ வளியிசை
 கண்ணுற்  றடைய’என்று மிகத் துல்லியமாகத் தொல்காப்பியர் கூறியுள்ளது வியப்பளிக்கிறது ! அஃதாவது , நாக்கு அண்ணத்தைத் தொடவேண்டும் என்று தொல்காப்பியர் கூறவில்லை ! வளி (=காற்று) அண்ணத்தைத் தொடவேண்டும் என்கிறார்!

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Dec 21, 2015 8:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 3838410834
அருமை ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 21, 2015 8:21 pm

நன்றி சசி அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 6:37 pm

Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (405)
‘ஐ’ உச்சரிப்பில் பாதியாக ‘ய்’ ஒலிப்பதால் , ‘ய்’யை ‘அரை உயிர்’ (Half vowel) என்பர் !
மொழியியலார்  ‘Approximant’ என்பதை அன்றே  ’ வளியிசை
 கண்ணுற்  றடைய’என்று மிகத் துல்லியமாகத் தொல்காப்பியர் கூறியுள்ளது வியப்பளிக்கிறது ! அஃதாவது , நாக்கு அண்ணத்தைத் தொடவேண்டும் என்று தொல்காப்பியர் கூறவில்லை ! வளி (=காற்று) அண்ணத்தைத் தொடவேண்டும் என்கிறார்!
***
[You must be registered and logged in to see this link.]
அருமையான படைப்பு ஐயா படிக்க படிக்க பிரமிப்பு,நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 24, 2015 12:01 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே ! நீங்கள் நன்றாக ஊன்றிப் படிக்கிறீர்கள் !வாழ்க!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 24, 2015 12:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (406)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ய்’யை அடுத்துத் தொல்காப்பியர் ,பிறப்பியலில் , மெல்லின எழுத்துகளின் பிறப்புப் பற்றி ஒரு நுணுக்கம் கூறுகிறார் ! –

“மெல்லெழுத் தாறும் பிறப்பி  னாக்கஞ்
 சொல்லிய பள்ளி நிலையின வாயினும்
 மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்” (பிறப். 18)

அஃதாவது , ங,  ஞ, ண, ந, ம, ன என்ற ஆறு மெல்லெழுத்துகளின் பிறப்பைத் தொல்காப்பியர் கூற முன்பே (பிறப். 7,8,9,12, 15) பார்த்தோம் !

இப்போது என்ன சொல்ல வருகிறார் என்றால் , ‘நான் கூறியபடி ஆறு மெல்லெழுத்துகளும் பிறக்கும்; ஆனால் ஆறுமே மூக்கொலிகள்தாம் என்கிறார் !

‘மெல்லெழுத்து  ஆறும்’ – மெல்லெழுத்துகளாகிய ங,  ஞ, ண, ந, ம, ன என்ற ஆறின்,
’ பிறப்பின் ஆக்கஞ்’ – பிறப்பின் செயலானது,
‘  சொல்லிய பள்ளி’ – நான் சொல்லிய இடங்களில்,
‘நிலையின ஆயினும்’ – நின்று பிறப்பன ஆயினும்,
‘மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்’ – அவை மூக்குக் காற்றாகவே வெளிப்படும் !

பள்ளி – இடம்.

சமணப் பள்ளி – சமணர் வாழ்விடம்.

தொல்காப்பியர் ‘மூக்கின் வளியிசை’ என்றதைத்தான் இன்றைய மொழியியலார் ‘Nasal’(‘மூக்கொலி’) என்கின்றனர்.

மெல்லெழுத்திற்கு மூக்குக் காற்று !

இடையெழுத்துக்கு?

வல்லெழுத்துக்கு?

இவ் வினாக்களுக்கு விடை கூறுகிறார் இளம்பூரணர் –

“யாப்புற என்றதனான், இடையெழுத்திற்கு மிடற்று வளியும், வல்லெழுத்திற்குத் தலைவளியும் கொள்க!”

அஃதாவது , ய, ர , ல ,வ, ழ , ள என்ற ஆறு இடையின எழுத்துக்களும் தொண்டைக் காற்றால் ஏற்படுகின்றன!
க , ச , ட , த , ப, ற என்ற ஆறு வல்லின எழுத்துக்களும் தலைக் காற்றால் ஏற்படுகின்றன!

 ‘தலைக் காற்று’ என்பது தொண்டைக்கு மேலே, மூக்குக்குக் கீழே உள்ள வாய்ப் பகுதி எனலாம் !

                                                                                              ***





***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 12:10 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே ! நீங்கள் நன்றாக ஊன்றிப் படிக்கிறீர்கள் !வாழ்க!
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா,நீங்கள் இதை பதிவு செய்ய எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பீர்கள்
என்ற போது நான் அதற்கு சில நிமிடங்கள் செலவழிப்பதில் தப்பில்லை.

Sponsored content

PostSponsored content



Page 58 of 84 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 71 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக