புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
1 Post - 1%
சிவா
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
1 Post - 1%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
296 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
6 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 58 of 84 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 71 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:22 pm

Dr.S.Soundarapandian wrote:
பிறப்பியலில் இப்போது ‘ப்’ , ‘ம்’ ஆகிய ஒலிகள் பிறப்பதைக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-
“இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்” (பிறப். 15)
‘இதழ் இயைந்து’ – கீழ் உதடும் மேல் உதடும் சேர்ந்து ,
‘பிறக்கும் பகாரம் மகாரம்’ -  ‘ப்’ , ‘ம்’ ஆகியன பிறக்கும் !
‘ப்’ ஆனது இரு உதடுகள் சேரப் பிறக்கிறது என்று தொல்காப்பியர் சொல்லியதைத்தான் ‘Bilabial’ என்கிறார்கள்!
***
[You must be registered and logged in to see this link.]
அற்புத விளக்கம் அருமை ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 20, 2015 12:57 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 1:49 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே !
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 21, 2015 8:06 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (405)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

 'ய்' – பிறப்பதைத் தொல்காப்பியர் உரைக்கிறார் !:-

“அண்ணஞ்  சேர்ந்த மிடற்றெழு வளியிசை
 கண்ணுற்  றடைய யகாரம் பிறக்கும்” (பிறப். 17)

‘அண்ணம்  சேர்ந்த’ – அண்ணத்தைசேர்ந்து ,
‘மிடற்று எழு வளி  இசை’ – தொண்டையின் காற்றானது,
‘கண்ணுற்று அடைய’ – சென்று அடையும்போது,
‘யகாரம் பிறக்கும்’ -  ‘ய்’பிறக்கும் !

இப்போதைய மொழியியலின்படி , தொல்காப்பியர் கூறிய ‘அண்ணம்’ என்பது , உச்சி நடு அண்ணத்திற்கும் , முன் அண்ணத்திற்கும் இடைப்பட்ட  அண்ணப் பகுதியாகும் ! ‘Palate’ என்று குறிப்பர் !

எனவே , ‘ய்’யை அண்ண ஒலி (Palatal sound) என்பர் !

‘ய்’யை உச்சரிக்கும்போது , குரல்வளை அதிர்கிறது !

எனவே , ‘ய்’யை ஒலிப்புடை (Voiced) ஒலி என்பர் !

‘ய்’யானது ஒலிக்கும்போது , அண்ணத்தைத் தொடாமல் , சிறிது இடைவெளி விட்டு  நாக்கின் பகுதி தொட்டும் தொடாமலும் இருக்கிறது !

இதனால் , ‘ய்’யைத்  ‘தொடாநெருங்கொலி’ (Approximant) என்பர் !

‘ய்’யானது ஒலிக்கும்போது சிறிது நேரம் , ‘ய்ய்’என்றபடி,  ஒலித்தொடர்ச்சி கேட்கிறது !

இதனால் , ‘ய்’யைத் தொடரொலி (Continuant) என்பர் !

‘ய்’யைக் குறில் என்றும் , ‘ய்ய்’யை நெடில் என்றும் கூறுப!

வயல் – இதிலுள்ள ‘ய்’ குறில் .

நொய்யல் – இதிலுள்ள ‘ய்ய்’நெடில்.

ஆதலால் , ‘ய்’யின் பிறப்பை , ‘அண்ண ஒலிப்புடைக்  குறில் தொடரொலி’ (Palatal voiced short continuant) எனலாம் !

‘ய்ய்’யின் பிறப்பை , ‘அண்ண ஒலிப்புடை  நெடில் தொடரொலி’ (Palatal voiced long continuant) எனலாம் !

‘ய்’யின் பிறப்பை , ‘அண்ண ஒலிப்புடைக்  குறில்  தொடாநெருங்கொலி’ (Palatal voiced short approximant) எனவும் கூறலாம் !

‘ய்ய்’யின் பிறப்பை , ‘அண்ண ஒலிப்புடை  நெடில்  தொடாநெருங்கொலி’ (Palatal voiced long approximant) எனவும் கூறலாம் !

ய் , ய , யா , யி , யீ , யு ,யூ , யெ , யே ,யை , யொ ,யோ , யௌ – 13  எழுத்துகளுமே , ‘அண்ண ஒலிப்புடைத்  தொடரொலி’ (Palatal voiced  continuant) எனலாம் !

‘ஐ’ உச்சரிப்பில் பாதியாக ‘ய்’ ஒலிப்பதால் , ‘ய்’யை ‘அரை உயிர்’ (Half vowel) என்பர் !

மொழியியலார்  ‘Approximant’ என்பதை அன்றே  ’ வளியிசை
 கண்ணுற்  றடைய’என்று மிகத் துல்லியமாகத் தொல்காப்பியர் கூறியுள்ளது வியப்பளிக்கிறது ! அஃதாவது , நாக்கு அண்ணத்தைத் தொடவேண்டும் என்று தொல்காப்பியர் கூறவில்லை ! வளி (=காற்று) அண்ணத்தைத் தொடவேண்டும் என்கிறார்!

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Dec 21, 2015 8:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 58 3838410834
அருமை ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 21, 2015 8:21 pm

நன்றி சசி அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 6:37 pm

Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (405)
‘ஐ’ உச்சரிப்பில் பாதியாக ‘ய்’ ஒலிப்பதால் , ‘ய்’யை ‘அரை உயிர்’ (Half vowel) என்பர் !
மொழியியலார்  ‘Approximant’ என்பதை அன்றே  ’ வளியிசை
 கண்ணுற்  றடைய’என்று மிகத் துல்லியமாகத் தொல்காப்பியர் கூறியுள்ளது வியப்பளிக்கிறது ! அஃதாவது , நாக்கு அண்ணத்தைத் தொடவேண்டும் என்று தொல்காப்பியர் கூறவில்லை ! வளி (=காற்று) அண்ணத்தைத் தொடவேண்டும் என்கிறார்!
***
[You must be registered and logged in to see this link.]
அருமையான படைப்பு ஐயா படிக்க படிக்க பிரமிப்பு,நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 24, 2015 12:01 pm

நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே ! நீங்கள் நன்றாக ஊன்றிப் படிக்கிறீர்கள் !வாழ்க!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 24, 2015 12:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (406)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ய்’யை அடுத்துத் தொல்காப்பியர் ,பிறப்பியலில் , மெல்லின எழுத்துகளின் பிறப்புப் பற்றி ஒரு நுணுக்கம் கூறுகிறார் ! –

“மெல்லெழுத் தாறும் பிறப்பி  னாக்கஞ்
 சொல்லிய பள்ளி நிலையின வாயினும்
 மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்” (பிறப். 18)

அஃதாவது , ங,  ஞ, ண, ந, ம, ன என்ற ஆறு மெல்லெழுத்துகளின் பிறப்பைத் தொல்காப்பியர் கூற முன்பே (பிறப். 7,8,9,12, 15) பார்த்தோம் !

இப்போது என்ன சொல்ல வருகிறார் என்றால் , ‘நான் கூறியபடி ஆறு மெல்லெழுத்துகளும் பிறக்கும்; ஆனால் ஆறுமே மூக்கொலிகள்தாம் என்கிறார் !

‘மெல்லெழுத்து  ஆறும்’ – மெல்லெழுத்துகளாகிய ங,  ஞ, ண, ந, ம, ன என்ற ஆறின்,
’ பிறப்பின் ஆக்கஞ்’ – பிறப்பின் செயலானது,
‘  சொல்லிய பள்ளி’ – நான் சொல்லிய இடங்களில்,
‘நிலையின ஆயினும்’ – நின்று பிறப்பன ஆயினும்,
‘மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்’ – அவை மூக்குக் காற்றாகவே வெளிப்படும் !

பள்ளி – இடம்.

சமணப் பள்ளி – சமணர் வாழ்விடம்.

தொல்காப்பியர் ‘மூக்கின் வளியிசை’ என்றதைத்தான் இன்றைய மொழியியலார் ‘Nasal’(‘மூக்கொலி’) என்கின்றனர்.

மெல்லெழுத்திற்கு மூக்குக் காற்று !

இடையெழுத்துக்கு?

வல்லெழுத்துக்கு?

இவ் வினாக்களுக்கு விடை கூறுகிறார் இளம்பூரணர் –

“யாப்புற என்றதனான், இடையெழுத்திற்கு மிடற்று வளியும், வல்லெழுத்திற்குத் தலைவளியும் கொள்க!”

அஃதாவது , ய, ர , ல ,வ, ழ , ள என்ற ஆறு இடையின எழுத்துக்களும் தொண்டைக் காற்றால் ஏற்படுகின்றன!
க , ச , ட , த , ப, ற என்ற ஆறு வல்லின எழுத்துக்களும் தலைக் காற்றால் ஏற்படுகின்றன!

 ‘தலைக் காற்று’ என்பது தொண்டைக்கு மேலே, மூக்குக்குக் கீழே உள்ள வாய்ப் பகுதி எனலாம் !

                                                                                              ***





***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 12:10 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி பழ.முத்துராமலிங்கம் அவர்களே ! நீங்கள் நன்றாக ஊன்றிப் படிக்கிறீர்கள் !வாழ்க!
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா,நீங்கள் இதை பதிவு செய்ய எவ்வளவு சிரத்தை எடுத்திருப்பீர்கள்
என்ற போது நான் அதற்கு சில நிமிடங்கள் செலவழிப்பதில் தப்பில்லை.

Sponsored content

PostSponsored content



Page 58 of 84 Previous  1 ... 30 ... 57, 58, 59 ... 71 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக