புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
48 Posts - 43%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
5 Posts - 5%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
48 Posts - 43%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
5 Posts - 5%
Anthony raj
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 55 of 84 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 69 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 10:14 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 13, 2015 7:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (396)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

       தமிழ் ஒலிகளின் பிறப்பை அற்புதமாகச் சொல்லிவருகிறார் தொல்காப்பியர் !

இப்போது ,  ‘க்’ , ‘ங்’ ஆகிய இரண்டு ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன எனக் காட்டுகிறார்  அவர் :-
“ககார  ஙகார முதனா வண்ணம்”  (பிறப் . 7)

அஃதாவது , ‘க்’ , ‘ங்’ ஆகிய இரு மெய் (Consonant) ஒலிகளும் , நாக்கின் அடிப்பகுதியானது பின் அண்ணத்தைத் தொடுவதால் உருவாகிறது !

நாக்கின் அடிப்பகுதியைத்தான் தொல்காப்பியர் ‘முதல் நா’ என்று குறிப்பிடுகிறார் !

‘பின் அண்ணம்’ , சிலரால்  ‘கடை அண்ணம்’ எனவும் எழுதப்படும் !

பின் அண்ணம் – மொழியியலில் Velar எனப்படும்.

‘க்’ – மொழியியலில் தடை ஒலி (Stop) எனப்படுகிறது.
‘ங்’ – மொழியியலில்  மூக்கு ஒலி (Nasal) எனப்படுகிறது.

இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் !

‘க்’கும் , ‘ங்’கும் ஒரே இடத்தில் பிறப்பதாகத் தொல்காப்பியர் எழுதியுள்ளார் !

இஃது எப்படி ?

‘க்’கும் ‘ங்’கும் ஒரே இடத்தில்தான் பிறக்கின்றன! ஒலித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும் !

ஆனால் , ‘க்’கை உச்சரிக்கும் போது அந்த ஒலி வாய் வழியாகவும் , ‘ங்’ கை உச்சரிக்கும்போது அந்த ஒலி மூக்கு வழியாகவும் வெளிவரும்!

இதனால்தான் ‘க்’கை நிறுத்தொலி என்றும் , ‘ங்’கை மூக்கொலி என்று கூறுகின்றனர் !

‘க்’ – என உச்சரித்தால் , அடி நாக்கு, அடி அண்ணத்துடன் போய் ஒட்டி நிற்கிறது ! இவ்வாறு     நிற்பதால்தான் அது நிறுத்தொலி !

தொல்காப்பியர் உரைத்தது , ‘க்’கின் பிறப்பு பற்றியே !
அப்படியானால் ‘க’ ?

‘க்’ பிறக்கும் இடத்தில் தொடங்கி வேறு வழியில் முடிகிறது ! அவ்வளவுதான் ! இதைத்தான் மொழியியலில் Velar plosive என்கின்றனர் !

Plosive – வெடிப்பொலி

அஃதாவது , ‘க்’ ஆனது , ‘க’ வாக ஒலிக்கும்போது , வாய்க்காற்றில் ,ஒரு விடுதல் (Release) ஏற்படுகிறது ! இதுதான் ‘வெடிப்பு’ ! ‘வெடிப்பு’ என்றதும் ஏதோ பட்டாசு வெடி என்பதாகக் கருதக் கூடாது !

சிலர், ‘க’வை Fricative என்றும் குறித்துளர் !
Fricative – உரசொலி

நாக்கை உரசிக்கொண்டு செல்வதால் அது ‘உரசொலி’ !

‘ங’ வைப் பொறுத்தவரை , ’ங’வும் மூக்கொலிதான் , ‘ங்’கும் மூக்கொலிதான் ! இரண்டையுமே   பின்னண்ண மூக்கொலி (Velar nasal) என்றுதான் குறிப்பர்.

க் ,க , ங் , ங -  ஆகிய நான்கையும் உச்சரித்தால்  நா வளை (Vocal cord) அதிராது !
அதே நேரத்தில்   ‘ga ’ என்று உச்சரித்துப் பாருங்கள் ! நா வளை சற்று அதிரும் !

இவ்வாறு எந்த எழுத்தை உச்சரிக்கும்போது நாவளை அதிர்கிறதோ அந்த எழுத்தொலியை ‘Voiced’ என்பர் மொழியியலார் ! அதிராதவற்றை ‘Voiceless ’என்பர் !

ஆகவேதான் , க் ,க , ங் , ங -  ஆகிய நான்கையும்   ‘Voiceless sounds’ எனக் குறிக்கின்றனர் !

Voiceless consonants  - அதிர்விலா மெய்யொலிகள் .

Voiceless  consonant-vowels  - அதிர்விலா  உயிர்மெய்யொலிகள் .

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 8:18 pm

க்,க,ங,ங் பற்றி பல அறிய அற்பு தகவல்கள் நன்றி ஐயா.
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 103459460 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 1571444738

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 13, 2015 8:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Nov 13, 2015 11:27 pm

அருமையான பதிவு ஐயா நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 12:23 am

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 3838410834 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 55 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 14, 2015 12:27 am

இந்தத் திரியைத் தொடர்ந்து படிக்கிறேன் என்பதையும் பயனுடைய பதிவாக எனக்கு உள்ளது என்பதையும் தெரிவிப்பதில் மகிழ்வு அடைகிறேன். இம்முயற்சிக்கு மிக்க நன்றி குறிப்பாக
Voiceless consonants - அதிர்விலா மெய்யொலிகள் .

Voiceless consonant-vowels - அதிர்விலா உயிர்மெய்யொலிகள் இது போன்ற சொல்லாட்சிகளைக் கற்கிறோம்
மீண்டும் நன்றி



[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 14, 2015 1:37 am

நன்றி சசி அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 14, 2015 1:37 am

நன்றி கே.செந்தில்குமார் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 14, 2015 1:38 am

நன்றி ஆதிரா முல்லை அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 14, 2015 3:50 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (397)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிறப்பியலில் இப்போது ச் , ஞ்  ஆகிய மெய்களின் பிறப்புப் பற்றி உரைக்கிறார் தொல்காப்பியர் !:-
“சகார ஞகார மிடைநா வண்ணம்” (பிறப் . 8)

அஃதாவது -  ச் , ஞ்  ஆகிய இரு மெய்களும் இடை நாக்கு இடை அண்ணத்தைத் தொடப் பிறக்கும் !

‘இடை அண்ணம்’ என்று தொல்காப்பியர் துல்லியமாகக் கூறியதைத்தான் இன்றைய மொழியியலார் ‘ Mid palate’ என்று  கூறுகின்றனர் !

ச் , ஞ் – இரண்டு மெய்களையும் ‘Mid palatal consonants’ என எழுதுகின்றனர் !

இவற்றில் , ‘ச்’சை ,   ‘நடு அண்ண  நிறுத்தொலி ’ (‘Mid palatal stop ’) என்பர்!

‘ச’ வை ‘நடு அண்ண வெடிப்பொலி’ (‘Mid palatal plosive’) என்பர்!

‘ச்’சைக் குறில் (Short) எனவும் , ‘ச்ச்’ சை நெடில் (Long) எனவும் எழுதுவர் !

‘பசி’ என்பதில் , ஒரு ‘ச்’ வருவதையும் , ‘குச்சி’ என்பதில் இரு ‘ச்ச்’சுகள் வருவதையும் காணலாம் !

இவ்வாறே , ‘வலைஞர்’ என்பதில் ஒரு குறில் ‘ஞ்’ நிற்பதையும் , ‘மெய்ஞ்ஞானம்’ என்பதில் இரு ‘ஞ்ஞ்’ வந்து நெடில் ஆவதையும்  பார்க்கலாம் !

ச் , ஞ் – ஆகிய இரு மெய்களின் பிறப்பிடத்தையும் ஒரே இடத்தில் (Position) வைத்துத் தொல்காப்பியர் நவின்றிருப்பதையும் நோக்குக !

இப்படி ஒரே இடத்தில் இவை இரண்டும் பிறந்தாலும் , ‘ச்’ ஆனது  நிறுத்தொலியாகவும் , ‘ஞ்’ஆனது மூக்கொலியாகவும் (Nasal) வெளிவருகின்றன!

‘ஞ்’ என்று உச்சரித்தாலும் , ‘ஞ’ என்று உச்சரித்தாலும் இவை இரண்டுமே  மூக்கொலிகளாகவே வெளிவருகின்றன! எனவே இவை இரண்டுமே ‘Nasal’ என்றே குறிக்கப்பெறும் !

ச் , ஞ் – இரண்டில் , ‘ச்’ சை ஒலிக்கும்போது , குரல்நாண் அதிர்வதில்லை !  ‘ஞ்’ஞை ஒலிக்கும்போது , குரல்நாண் அதிர்கிறது !

எனவே , ‘ச்’ சை அதிர்விலா ஒலி (Voiceless sound) எனவும் , ‘ஞ்’ஞை அதிர்வுடை ஒலி (Voiced sound) எனவும் உரைக்கின்றனர் !

‘மூக்கொலி’ என்று பார்த்தோமல்லவா?

இந்த மூக்கொலி நுட்பம்தான் தமிழிலிருந்து மலையாளத்தைப் பிரித்தது !

எழுத்தொலி வாய்வழியாகப் பிறப்பதுபோன்ற ஒலிப்பு உறுப்புகள் அமையப் பெற்றவர்கள் தமிழர்கள் !
தமிழ் நாட்டிலிருந்து செல்லச் செல்ல , மலைச் சூழல்கள் காரணமாக ,மலையாள நாட்டில்  பிறந்து வளர்ந்தோர்க்கு ஒலிப்பு உறுப்புகள் சற்று வேறு வகையாக மாறுகின்றன ! இந்தக் காரணத்தால் , தமிழர்கள் ‘தேங்காய்’ என்று உச்சரித்தால் , மலையாளிகள் ‘தேங்ஙாய்’ என்று உச்சரித்தனர் !
       
        அவ்வளவுதான் மலையாள மொழி பிறந்துவிட்டது !

        தமிழிலிருந்து திராவிட மொழிகள் அனைத்தும் பிறந்த இரகசியம் (Secret of branching off Dravidian languages from Tamil) இதுதான்!

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 55 of 84 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 69 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக