புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
75 Posts - 55%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
70 Posts - 54%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 53 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 53 of 84 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 68 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 07, 2015 8:37 am

M.Jagadeesan wrote:உசு ,முசு இவற்றுடன் " பசு " என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாமா ?
[You must be registered and logged in to see this link.]

"திசு " உம் சேருமோ இதில் முனைவர் அய்யா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2015 9:19 am

" கொசுவை " ஏன் விட்டுவிட்டீர் ரமணியன் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 07, 2015 1:52 pm

M.Jagadeesan wrote:" கொசுவை " ஏன் விட்டுவிட்டீர் ரமணியன் ?
[You must be registered and logged in to see this link.]

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 17, 2015 11:28 am

எம். ஜகதீசன், ரமணீயன் ஆகியோர்க்கு நன்றி !
‘பசு’ , ‘திசு’ , ‘கொசு’ ஆகிய மூன்று பெயர்ச் சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ! தவறில்லை !
ஆனால் பழைய இலக்கணங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது ! நம் ஆய்வாகக் கொல்ளவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 1:18 pm

மிகவும் நன்றி ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 17, 2015 3:33 pm

Dr.S.Soundarapandian wrote:எம். ஜகதீசன், ரமணீயன் ஆகியோர்க்கு நன்றி !
‘பசு’ , ‘திசு’ , ‘கொசு’ ஆகிய மூன்று பெயர்ச் சொற்களையும் சேர்த்துக்கொள்ளலாம் ! தவறில்லை !
ஆனால் பழைய இலக்கணங்களோடு இணைத்துக்கொள்ளக் கூடாது ! நம் ஆய்வாகக் கொல்ளவேண்டும் !
[You must be registered and logged in to see this link.]

நன்றி முனைவர் அவர்களே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 27, 2015 8:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (390)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , சொற்களின் ஈறுகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !

இப்போது நாம் பார்க்கவேண்டியது –
“உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான” (மொழி. 47)

‘உப்ப காரமொடு’ – முன்பு இதே மொழிமரபு நூற்பா 43இல் ’தபு’ என்ற ஒரு சொல்லில் மட்டும்தான் ‘பு’ வானது சொல்லீறாக வரும் எனப் பார்த்தோமல்லவா? அதைப் போல,
‘ஞகாரையும்  அற்றே’ – ‘ஞ்’ என்ற எழுத்தும் அப்படியே ஒரே ஒரு சொல்லில்தான் வரும் !
‘அப்பொருள் இரட்டாது  இவணை யான’ – ’தபு’ என்ற சொல்லைப் பொறுத்தவரையில் , எடுத்துச் சொன்னால்
ஒரு பொருளும் படுத்துச் சொன்னால் வேறுபொருளுமாக  இரண்டு பொருள்கள் இருப்பது போல ‘ஞ்’ ஈற்றுச் சொல்லுக்கு இருபொருள் இல்லை !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டு – ‘உரிஞ்’

அஃதாவது , ‘உரிஞ்’ என்ற இந்த ஒரு சொல்தான் தமிழில் ‘ஞ்’ஞை ஈற்றிலே கொண்டு வரும் !

மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘இவணை’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !

இவணை = இவண் + ஐ

இவண் – சுட்டுப் பெயர்

ஐ – அசை (Expletive)

இவணை - இவ்விடத்து

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 27, 2015 8:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (390)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , சொற்களின் ஈறுகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !

இப்போது நாம் பார்க்கவேண்டியது –
“உப்ப காரமொடு ஞகாரையு மற்றே
அப்பொரு ளிரட்டா திவணை யான” (மொழி. 47)

‘உப்ப காரமொடு’ – முன்பு இதே மொழிமரபு நூற்பா 43இல் ’தபு’ என்ற ஒரு சொல்லில் மட்டும்தான் ‘பு’ வானது சொல்லீறாக வரும் எனப் பார்த்தோமல்லவா? அதைப் போல,
‘ஞகாரையும்  அற்றே’ – ‘ஞ்’ என்ற எழுத்தும் அப்படியே ஒரே ஒரு சொல்லில்தான் வரும் !
‘அப்பொருள் இரட்டாது  இவணை யான’ – ’தபு’ என்ற சொல்லைப் பொறுத்தவரையில் , எடுத்துச் சொன்னால்
ஒரு பொருளும் படுத்துச் சொன்னால் வேறுபொருளுமாக  இரண்டு பொருள்கள் இருப்பது போல ‘ஞ்’ ஈற்றுச் சொல்லுக்கு இருபொருள் இல்லை !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டு – ‘உரிஞ்’

அஃதாவது , ‘உரிஞ்’ என்ற இந்த ஒரு சொல்தான் தமிழில் ‘ஞ்’ஞை ஈற்றிலே கொண்டு வரும் !

மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘இவணை’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !

இவணை = இவண் + ஐ

இவண் – சுட்டுப் பெயர்

ஐ – அசை (Expletive)

இவணை - இவ்விடத்து

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 03, 2015 2:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (391)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது –
“வகரக் கிளவி நான்மொழி யீற்றது” (மொழி. 48)

‘வகரக் கிளவி’ – ‘வ்’ எனும் சொல்,
‘நான்மொழி  ஈற்றது’ – நான்கு சொற்களுக்கு மட்டும் ஈறாக வரும் !

‘வகரக் கிளவி’ -  இப்படித் தமிழ் இலக்கணங்களில் வந்தால் , இடத்தைப் பொறுத்து , ‘வ்’ அல்லது ‘வ’ எனக் கொள்ள வேண்டும் !

‘நான் மொழி’ என்பதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் –

1 . அவ்

2 . இவ்

3 . உவ்

4 . தெவ்
இவை நான்கும் பெயர்ச் சொற்களே (Nouns) !

‘வ்’ ஈறு  தொடர்பாக , முன்பே நாம் புள்ளிமயங்கியல் நூற்பாக்கள் 83 , 87 ஆகியவற்றில் விரிவாகப் பார்த்துள்ளோம்! ஆகவே அவற்றை மீண்டும் இங்கே இணைக்கவில்லை !

இறுதியாக மொழிமரபின் கடைசி நூற்பா ! –

“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப
புகரக் கிளந்த வஃறிணை யான ”               (மொழி 49)

‘மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த , னகரத் தொடர்மொழி ஒன்பஃது  என்ப’ -  இரண்டு எழுத்துகளைக் கொண்ட சொற்களின் ஈறு ‘ன்’ ஆக இருந்தால் , அந்த ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வருவது ஒன்பது சொற்களில் மட்டும் நடவாது என்பார்கள்!
‘புகரக் கிளந்த அஃறிணை யான’ -  குற்றம் அற்ற அப்படிப்பட்ட ஒன்பது சொற்களும் அஃறிணைச் சொற்களாம் !

அந்த ஒன்பது சொற்கள் யாவை ?

இளம்பூரணர் எழுதுகிறார் !-
1 . எகின்
2 . செகின்
3 . விழன்
4 . பயின்
5. அழன்
6 . புழன்
7 . குயின்
8 . கடான்
9 . வயான்

இச் சொற்களின் பொருளைப் பற்றி நமக்கு முன்பு  கவலைப் பட்டவர் நச்சினார்க்கினியர்! அவர் ,
1. எகின் = புளி
2. பயின் = பிசின்
3. குயின் = மேகம்
4. அழன் = பிணம்
5. வயான் = காரிப் பறவை
- என்று பொருள்கள் எழுதிவிட்டு , “செகின் முதலிய பிறவற்றுக்குப் பொருள் புலப்பட்டில”
எனக் குறித்துளார் !

ஒன்பது சொற்களுக்கு மட்டும்தானே தடைபோட்டது தொல்காப்பியம் ?
அப்படியானால் மீதி ‘ன்’ ஈற்றுச் சொற்களின் ஈற்றில் , ‘ன்’னுக்குப் பதிலாக ‘ம்’ வரும் என்பதுதானே பொருள் ?
ஆமாம் என்ற இளம்பூரணர் , அப்படி வரக்கூடிய ‘ன்’ஈற்றுச் சொற்கள் சிலவற்றை எழுதுகிறார் !-

1 . நிலன்
இது ‘நிலம்’ என்ற பொருளையே தரும் !

2 . பிலன்
இது ‘பிலம்’ என்ற பொருளையே தரும்!

‘வயான்’ எனும் காரிப் பறவையைப் பார்க்க ஆசையா?

இதோ -
1 .
[You must be registered and logged in to see this image.] Courtesy – blog.chaukhat.com

2.
[You must be registered and logged in to see this image.] Courtesy – orientalbirdimages.org

3.
[You must be registered and logged in to see this image.] Courtesy – tulaoer.org


இதன் விலங்கியல் பெயர் - Dicrurus மச்ரோசெர்கிஸ்

இதன் வேறு பெயர் - கரிக் குருவி

இதன் தாயகம் – இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள்

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 17, 2015 3:53 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (392)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எழுத்ததிகாரத்தில் நாம் இதுவரை நூற்பாவாரியாக ஆய்ந்தவை :-

1.நூன் மரபு
2.மொழி மரபு
3.புணரியல்
4.தொகை மரபு
5.உருபியல்
6. உயிர் மயங்கியல்
7. புள்ளி மயங்கியல்
8.குற்றியலுகரப் புணரியல்

இப்போது மீதி இருப்பது ‘பிறப்பியல்’ ஒன்று மட்டுமே !

‘பிறப்பியல்’ , எழுத்ததிகாரத்தின் மூன்றாவது இயல்.

இதனை இப்போது பார்ப்போம் !

முதல் நூற்பா ! –

“உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப்
பல்லு மிதழு நாவு மூக்கும்
அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான”  (பிறப்.1)

தமிழ் எழுத்தொலிகள் பிறக்கும் முறைகளைத் தொகுத்துச் சுருக்கமாக ஒரு நூற்பாவில் கூறிவிட்டார் தொல்காபியர் !

‘உந்தி முதலா முந்துவளி தோன்றி’ – வயிற்றின் தொப்புள் பகுதியிலிருந்து காற்றானது கிளம்பி,
‘தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ’ – தலை , தொண்டை, நெஞ்சு ஆகிய பகுதிகளில் நிலைபெற்று ,
‘பல்லும்  இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான
உறுப்புற்று அமைய’ – பல் , இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய ஐந்து உறுப்புகளில் சேர,
‘எல்லா வெழுத்தும் சொல்லுங் காலைப்,பிறப்பின்  ஆக்கம் வேறுவேறு  இயல
திறப்படத் தெரியும் காட்சி ஆன’ – தமிழ் எழுத்து ஒலிப்புகள் எல்லாம் , ஆராய்ந்து பார்க்குமிடத்து ,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாகப் பிறக்கும் !

இவ்வாறு தொல்காப்பியர் கூறியதைத்தான் இன்றைய மொழியியலார் (Linguists)  ஆங்கிலத்தில் ஓதுகின்றனர் !  ‘பிறப்பியல்’ என்பதை Articulation of letters என்கின்றனர்; ‘மிடறு ’ என்பதை அவர்கள் Larynx என்கின்றனர் .

தலை – இது மூளையைக் குறிக்கும் என்று ச.பாலசுந்தரம் எழுதியுள்ளார்!அவரே , மொழியியலார் மூக்குத் துளையின் அடிப்பாகத்தைக் குறிக்கும் என மொழிநூலார் கருதுவர் என்ற குறிப்பையும் தருகிறார் !

தலை , நெஞ்சு ஆகியவை கூடத் தமிழ் எழுத்து உச்சரிப்பில் பங்கு வகிக்கின்றன என்று அந்தக் காலத்திலேயே தொல்காப்பியர் கூறியுள்ளது நமக்கு வியப்பை அளிக்கிறது !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 53 of 84 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 68 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக