புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 49 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 49 of 84 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 66 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 17, 2015 4:04 am

ஈகரைக்குள் வந்ததிலிருந்து நான் தொடத் தொட தொல்காப்பியம் படித்துவருகிறேன்.மிகவும் புரியும்
படியான விளக்கம் அய்யா!இவை போன்று நீங்கள் பிற இலக்கணங்களுக்கும் எழுத வேண்டும்
என்பது எங்களின்  அவா!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 18, 2015 12:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (367)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முன் ஆய்வில் ‘தார்’ , ‘தாழ்’ என்றாங்கு ,நெடிலை அடுத்து  ‘ர்’, ‘ழ்’ ஒற்றுகள்  வருதலையும் , ‘பொய்’ எனக் குறிலை அடுத்து ’ய்’ஒற்று வருதலையும் கண்டோம் !

இங்கே ஒரு கேள்வி எழுகிறது !

அப்படியானால் , தொடர்மொழி ஈற்றில் , இந்த மெய்கள் வந்தால் ?

இதற்கு விதியை இப்போது கூறுகிறார் தொல்காப்பியர்! -
 “குறுமையு  நெடுமையு மளவிற்  கோடலிற்
 றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல” (மொழி. 17)

‘குறுமையும்   நெடுமையும்  அளவிற்  கோடலின்’ – உயிர் எழுத்துகளில் குற்றெழுத்துக்கு ஒரு மாத்திரை , நெட்டெழுத்துக்கு இரு மாத்திரைகள்  என்று மாத்திரைக் கணக்குகள் உள்ளதால் ,
‘தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து  இயல’ –  குறில்களின் பின்னே நிற்கும் ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் , ஒரு நெடிலின் அருகே நிற்கும் மெய் போலச் செயற்படும் !

இளம்பூரணரின் எடுத்துக் காட்டுச் சொற்கள் –
1 . அகர்
2 .புகர்
3 .அகழ்
4 . புகழ்
5 . புலவர்

இவற்றின் ஈறுகளான ‘ர்’ , ‘ழ்’ மெய்கள் , நெடில் எழுத்து ஒன்றின்பின்னே நிற்பதுபோலவே கொள்ளப்படும் !

எங்கே கொள்ளப்படும் ?

புணர்ச்சிகளில்  கொள்ளப்படும் !

இன்னொரு ஐயம் !

அஃதாவது , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரு மெய்களுக்கு மட்டும்தான் இந்த விதி பொருந்துமா ?

இதற்கு இளம்பூரணரின் விடை – “ரகார ழகாரங்களே யன்றிப் பிற ஒற்றுக்களும் நெடிற் கீழ் ஒற்று எனப்படும் !”

இந்தக் கருத்துக்கு விளக்கமாக மேலும் இளம்பூரணர் – “இதனானே , விரல் தீது என்புழி லகரம் நெடில்கீழ் ஒற்று என்று கெடுக்கப்படும் !”

இளம்பூரணரின் இந்த விளக்கத்திற்கு மேலும் ஒரு விளக்கம் தேவப்படுகிறது !

அஃதாவது-
விரல் + தீது = விரற்றீது ×
விரல் + தீது = விரறீது √
இந்தப் புணர்ச்சிக்கு விதி சொல்வதுதான் நாம் பார்த்த இந் நுற்பா !

‘வி , ர’ ஆகிய இரு குறில்கள் இணைந்து ஒரு நெடிலாகிறது ! (வி = 1 மாத்திரை ; ர = 1 மாத்திரை; மொத்தம் 2 மாத்திரை); பின்னர் ஒரு நெடிலருகே இருக்கும் ஒற்று என்ற நிலையில் புணர்ச்சி நடக்கிறது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 18, 2015 10:28 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (368)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , இரு மெய்கள் அடுத்தடுத்து இடம்பெறுதல் பற்றிப் பார்த்துவருகிறோம் !

பாட்டின் இறுதியில் ‘போலும்’ என்ற சொல்  , ‘போன்ம்’ என்று அடுத்தடுத்து இரு மெய்களைப் பெறும் என்பதை இப்போது சொல்கிறார் தொல்காப்பியர் ! –

“செய்யு ளிறுதிப் போலு மொழிவயின்
  னகார மகார மீரொற்  றாகும்  ” (மொழி. 18)

‘செய்யுள் இறுதி ’ – பாடலின் இறுதியில்,
‘போலு மொழிவயின்’ – ‘போலும்’ என்ற சொல்லிடத்து .
‘னகாரம்  மகாரம்  ஈரொற்று   ஆகும்  ’ – ‘ன்’னும் ‘ம்’மும் அடுத்தடுத்து  ஈரொற்று மெய்களாக  நிற்கும் !

சரி!

‘ன்’ அருகே ‘ம்’ வந்தாயிற்று !

இப்போது அதன் மாத்திரை ? அரையா? காலா?

விடைகூறுகிறார் தொல்காப்பியர் !-
“னகார  முன்னர்  மகாரங்  குறுகும்” (மொழி. 19)

அஃதாவது – ‘ன்’ அருகே உள்ள ‘ம்’மின் மாத்திரை , குறுகி ஒலிக்கும் !

‘போன்ம் ’ என்பதில் ‘ம்’மின் மாத்திரை கால் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 04, 2015 7:50 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (369)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் அடுத்த நூற்பா-
“மொழிப்படுத்  திசைப்பினும் தெரிந்துவே  றிசைப்பினும்
 எழுத்திய  றிரியா  வென்மனார் புலவர்”  (மொழி. 20)    

‘மொழிப்படுத்து   இசைப்பினும்’ –  உயிர் எழுத்து , ஒரு சொல்லில் , அதன் வடிவு மாறாமல்  வந்தாலும்,
‘தெரிந்துவேறு   இசைப்பினும்’ – அந்த உயிரனாது பிற மெய்களுடன் சேர்ந்து வேறு வடிவில் வந்தாலும் ,
‘எழுத்தியல்  திரியா  என்மனார் புலவர்’ – அப்போதும் அதற்கென்று இருக்கும் மாத்திரை மாறாது !

இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு தரலாம் ! –

1 . அஃகல்
இதிலுள்ள ‘அ’வுக்கு மாத்திரை – 1

2 . கடல்
இதிலுள்ள ‘அ’ , ‘க்’ மீது ஏறி நிற்கிறது ; வெறும் ‘அ’வுக்குத்தானே மாத்திரை ஒன்று, இது ‘க்’ மீது ஏறிக்  ‘க’ எனன நிற்கிறதே , அப்போது அதன் (க வின்) மாத்திரை ஒன்றுதானா ? வேறா?

அப்போதும் ‘க’வின் மாத்திரை ஒன்றுதான் என்பதே தொல்காப்பியர் இங்கு கூறும்  விடை !

3 . ஆல்
இதிலுள்ள ‘ஆ’வுக்கு மாத்திரை – 2

4 . கால்
இதிலுள்ள ‘ஆ’ , ‘க்’ மீது ஏறி நிற்கிறது ; வெறும் ‘ஆ’வுக்குத்தானே மாத்திரை  இரண்டு, இது ‘க்’ மீது ஏறிநிற்கிறதே , அப்போது ‘கா’வின்  மாத்திரை இரண்டுதானா ? வேறா?

அப்போதும் ‘கா’வின் மாத்திரை இரண்டுதான் என்பதே தொல்காப்பியர் இங்கு கூறும்  விடை !

‘அஃகல்’ – இதிலுள்ள ‘அ’ = மொழிப்படுத் திசைத்தல்

அஃதாவது , சொல்லில்  வைத்து (படுத்து) உச்சரித்தல்.
‘கடல்’ – இதிலுள்ள ‘க்’ மீது உள்ள  ‘அ’ = தெரிந்து வேறு இசைத்தல்

அஃதாவது , வேறு எழுத்தோடு சேர்த்து   வைத்துக் ‘க’ என  உச்சரித்தல்.

இளம்பூரணர் கூறும் இன்னொரு நுட்பம் !

‘அன்பு’ – என எவ்வளவு மெதுவாக உச்சரித்தாலும் அதன் மாத்திரை ஒன்றுதான் !

 ‘அது’ – என எவ்வளவு கத்தி உச்சரித்தாலும் அதன் மாத்திரை ஒன்றுதான் !

‘ஆடு’ – என எவ்வளவு மெதுவாக உச்சரித்தாலும் ‘ஆ’வின் மாத்திரை இரண்டுதான் !

‘ஆடி’ – என எவ்வளவு கத்தி உச்சரித்தாலும் ‘ஆ’வின் மாத்திரை இரண்டுதான் !

கீழ்வரும் இளம்பூரணர் உரைக்கு இதுவே பொருள் !-
 “வேறு என்றதனான் , எடுத்தல் , படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக்  கண்ணும் எழுத்தியல் திரியா வென்பது கொள்க .”

இங்கே தமிழர் இசை நுணுக்கம் உள்ளது !

அஃதாவது –
கீழ் தாயி , மத்திமத் தாயி , உச்சத் தாயி என மூன்று தாயிகளில்  ‘அ’ வை உச்சரித்தாலும்  அதன் மாத்திரை ஒன்றுதான் !

இசை நூற்களுக்கு ஏற்புடைய  கருத்துதான் இது !

இந்த இடம், ‘கர்நாடக’ இசை தமிழர் கண்டது எனக் கூறப் போதுமானது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 08, 2015 9:05 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (370)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் இப்போது நாம் காணப்போகும் இரு நூற்பாக்கள் இன்றியமையாதன !

ஏனெனில் பலரும் தவறான பொருளையே  இந் நூற்பாக்களுக்குப்  பொருளாக  விளக்கியுள்ளனர் !:-

1 .  “அகர  இகர  மைகார  மாகும்” (மொழி.21 )

‘அகரம்  இகரம்’ -  அ , இ என்ற இரு எழுத்துகளும் அருகருகே நின்றால்,
‘ஐகாரம் ஆகும்’ – ‘ஐ’ போல ஒலிக்கும் !

இளம்பூரணர் – “இது போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று ” என்றார் !

நம் காலத்து இலக்கண அறிஞர் எவரும் இந்த உரையை விளங்கிக் கொள்ளவில்லை !

‘போலி’ என இளம்பூரணர் சொன்னது இலக்கணப் போலியை அல்ல !

‘போல’ ஒலிப்பதால் ‘போலி’ என்றார் இளம்பூரணர் !

ஓலைச் சுவடியில் ஊறியவன் நான் ஆதலால் தொல்காப்பியமும் இளம்பூரணர் உரையும் எனக்கு நன்கு விளங்கியது !

அஃதாவது –
அந்தக் காலத்தில் ,  ஆசான் நூற்பாவைச் சொல்ல மாணாக்கன் அதனை ஓலையில் எழுத்தாணியால் எழுதிக்கொள்வான் ! அப்படி எழுதும்போது அவன் காதில் எப்படி ஒரு சொல்லானது விழுகிறதோ அப்படித்தான் அவன் எழுதிக்கொளவான் ! இதனால் பல சுவடிப்பிழைகள் ஏற்படும் ! எண்ணற்ற சுவடிப்பிழைகளை நான் பார்த்தவன் !

இப்படிப்பட்ட சூழலில்தான் தொல்காப்பியருக்கு மேற்கண்ட நூற்பாவை எழுதும் தேவை ஏற்பட்டது !

தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் -  ‘அ’வையும் , ‘இ’யையும் அருகருகே நிறுத்தி ,  ‘அ இ ’ என்று உச்சரித்தால் , காதில் ‘ஐ’ என்றுகேட்கும் !  இதனை உணர்ந்துகொண்டு , ‘ஐ’ என நான் உச்சரித்தால்   நீ சுவடியில்  ‘அ இ’ என எழுதிக்கொள்ளாதே ; ‘ஐவனம்’ என நான் உச்சரித்தால் ‘அ இவனம்’ என நீ எழுதிக்கொள்ளாதே !

இதுதான் ‘அகரம் இகரம் ஐகரம் ஆகும்’ என்பதன் பொருள் !

2 . இதே பொருளைத்தான் அடுத்த  நூற்பாவுக்கும்  கொள்ளவேண்டும் !

 “அகர உகரம் ஔகார மாகும் ” (மொழி . 22)

அஃதாவது , தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் -  ‘அ’வையும் , ‘உ’வையும் அருகருகே நிறுத்தி ,  ‘அ உ ’ என்று உச்சரித்தால் , காதில் ‘ஔ’ என்றுகேட்கும் !  இதனை உணர்ந்துகொண்டு , ‘ஔ’ என  நான் உச்சரித்தால்   நீ சுவடியில்  ‘அ உ’ என எழுதிக்கொள்ளாதே ; ‘ஔவியம்’ என  நான் உச்சரித்தால் ‘அஉவியம்’ என நீ எழுதிக்கொள்ளாதே !

சுவடியியல் (MANUSCRIPTOLOGY) நோக்கில் எனது தீர்மானமான உரை இதுதான் !

இந்த நூற்பாவின் உரையில் இளம்பூரணர் ‘அது கொள்ளற்க’ என்ற தொடரை எழுதியுள்ளது நம் கருத்துக்கு அரணாகும் !

அஃதாவது ‘ போல ஒலிக்கும் போலியைச் சுவடி எழுதும்போது எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்பதே  இளம்பூரணரின் ‘அது  கொள்ளற்க’ என்ர தொடரின் பொருளாகும் ! வேறு எப்பொருள் கொண்டாலும் அது பொருந்தாது !
வேறு பல உண்மைகள் இந்த நமது ஆய்வில் வெளிப்படுகின்றன !
தொல்காப்பியம் அவருடைய மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல் என்ற உண்மை அவற்றில் ஒன்று !


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 13, 2015 8:48 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (371)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது நாம் பார்க்கப்போகும் நூற்பாவும் முன் இரு நூற்பாக்களின் தொடர்ச்சியே !

ஆனால் ஆய்வாளர்கள் எவரும் இதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை !

ஓலைச் சுவடித் துறையில் அனுபவமின்மை இதற்குக் காரணமாக இருக்கலாம் !

‘ஐ’ என்று உச்சரித்தால் அது ‘அய்’ எனக் காதில் விழலாம் ! ஆனால் ஏமாந்துவிடாதே !

இதுபோன்றே ‘ ஔ’ என உச்சரித்தால் ‘அவ்’ என அதை எழுதிவிடாதே ! –

இதுதான் தொல்காப்பியர் கூறவந்தது !

 நூற்பாவைப் பாருங்கள் !-
 “அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
 ஐயெ  னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”  (மொழி.23 )

நூற்பவை அடுத்து இளம்பூரணர் ‘இதுவுமது’ என்று எழுதியிருப்பதை ஒருவரும் கவனிக்கவில்லை !

‘இதுவும் அது’ என்றால் , இந்த நூற்பாவும் முன்னிரு நூற்பாக்களைப் போன்றே ‘போல உச்சரிக்கப்படும் ’ எழுத்துகளைப் பற்றியது என்பது பொருள் !

‘அகரத்து  இம்பர் யகரப் புள்ளியும்’ –  ‘அ’ வும் , அதன் பக்கத்தே  ‘ய்’ என்ற எழுத்தும்  ‘ஐயென்  நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’  - சேர்ந்து ஒலிக்கும்போது ‘ஐ’ என்ற ஒலி எழலாம் !

இந்தக்கருத்தை முன் நூற்பாக்களோடு சேர்த்து எண்ணினால் , ‘ஐ’ , வேறு , ‘அய்’ வேறு இரண்டு ஒன்றல்ல என்பது புலப்படும் !

மாத்திரைக் கணக்கை வைத்தே இந்த நமது ஆய்வுதான் சரி என்பதை நீங்கள் உணரலாம் !
ஐ = 2 மாத்திரை
அய் = 1½  மாத்திரை

இரண்டும் எப்படி ஒன்றாகும் ?

இந்த நூற்பா உரையில் இளம்பூரணர் ‘வகரப் புள்ளியும் ஔகாரம் போல வரும் எனக் கொள்க’ என்றார் !

இதற்குப் பொருள் – ‘ஔ என்பதைச் சரியாகக் காதில் வாங்கி எழுத வேண்டும் ! ‘ஔ’ என்ற உச்சரிப்பைக் கேட்டு , அது ‘அவ்’ போலக் காதில் விழுமாதலால் ‘அவ்’ என எழுதிவிடாதே  ’ என்பதுதான் !

மேலே சொன்னது போன்றே, மாத்திரைக் கணக்கை வைத்தே இந்த நமது ஆய்வும் சரிதான் என்பதை நீங்கள் உணரலாம் !
ஔ = 2 மாத்திரை
அவ் = 1½  மாத்திரை

இரண்டும் எப்படி ஒன்றாகும் ?

தொல்காப்பிய நூற்பாவில் ‘மெய்பெறத் தோன்றும்’ என்பதற்கு , ‘உண்மை போலத் தோன்றும் ; அது தோற்றந்தான் ; உண்மையல்ல’ என எடுத்துக்கொள்ள வேண்டும் !

தொல்காப்பிய நடை என்பது இன்றியமையாதது !

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஒன்று ; இலக்கணச் சூத்திர நடை என்பது மற்றொன்று !இந்த இரண்டும் நமக்கு அவ்வளவாகப் பிடிபடாததே சிக்கலுக்குக் காரணம் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 17, 2015 2:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (372)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது மாத்திரை பற்றியது !

‘ஐ’ – இதற்கு இரண்டு மாத்திரை !

’ஆனால்  எல்லா இடத்தும் இரண்டு மாத்திரைதான் என எண்ணாதீர் ’  - தம் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார் தொல்காப்பியர் !-
“ஓரள  பாகு மிடனுமா ருண்டே
தேருங் காலை  மொழிவயி  னான”  (மொழி. 24)

 ‘ஓரளபு  ஆகும் இடனுமார்  உண்டே’ – ஒரு மாத்திரை என்ற கால அளவில் ஒலிக்கும் இடமும் உண்டே,
‘தேரும் காலை  மொழிவயின்  ஆன’ – ஆராயும்போது  சில சொற்களில் இவ்வாறு
நடக்கும் !

எந்த இரண்டு மாத்திரை  எழுத்துக்கு இலக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர் என்ற விவரம் நூற்பாவில் இல்லை ! ஆனால் இளம்பூரணர் , அதனை வெளிப்படுத்துகிறார் ! அந்த எழுத்து ‘ஐ’தான் என்று தெளிவாக்குகிறார் இளம்பூரணர் !

தொல்காப்பியம் படிக்கும் முறை இதுதான் !

இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் , சிலர் கரட்டுவாதமாக ‘அப்படி எங்கே தொல்காப்பியத்தில் உள்ளது ? உரையாசிரியர்கள் சொல்வதை யெல்லாம் நாம் ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும் ?’  என வாதிடுகின்றனர் ! அவர்களுக்காகச் சொன்னேன் !

‘ஐ’க்கு ஒரு மாத்திரையாக வரும் இரண்டு இடங்களைக் காட்டுகிறார் இளம்பூரணர் !
1 . இடையன்
இதில் ‘டை’க்கு ஒரு மாத்திரைதான் !

அஃதாவது, இந்தச் சொல் ‘இடயன்’ என்றுதான் ஒலிக்கிறது ! உச்சரித்துப் பார்த்தால் தொல்காப்பியர் சொன்னதும் , இளம்பூரணர் விளக்கியதும் சரிதான் என்பது உங்களுக்கு விளங்கும் !

2 . மடையன்
இதிலும் ‘டை’க்கு ஒரு மாத்திரைதான் !
அஃதாவது, இந்தச் சொல் ‘மடயன்’ என்றுதான் ஒலிக்கிறது ! உச்சரித்துப் பார்த்தால் உங்களுக்கு விளங்கும் !

இன்னொன்றும் உரைக்கிறார் இளம்பூரணர் ! – “தேருங்காலை என்றதனான் முதற்கண் சுருங்கா தென்பது கொள்க”.

அஃதாவது , சொல்லின் முதலில் வரும்  ‘ஐ’க்கு எப்போதும் மாத்திரை இரண்டுதான் ! அது ஒன்று ஆவதில்லை !
 ‘கைச்செலவு’ , ‘பைய’ , ‘வைப்பு’ – இவை போன்ற சொற்களில் எல்லாம் ‘ஐ’க்கு மாத்திரை இரண்டுதான் !

இவற்றை உச்சரித்துப் பார்த்தாலே உங்களுக்குத் தொல்காப்பியர் குறித்த – இளம்பூரணர் விளக்கிய - உண்மை விளங்கும் !

தொல்காப்பியரும் இளம்பூரணரும் ‘ஔ’ பற்றி இந்த இடத்தில் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

இந்த நூற்பாவிற்குப் பிற்கால ஆய்வாளர்கள் உரை கூறுவதில் தடுமாறியுள்ளனர் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 9:26 pm

ஐயா !

முள் + தீது = முட்டீது என்று எழுதலாமா ? புணர்ச்சி விதியை விளக்கவும் .

கம்ப ராமாயணத்தில்

கடல் தாவுபடலம் என்பதைக் கடறாவு படலம் என்று சில புத்தகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன . அது சரியா என்பதை விளக்கவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 20, 2015 7:18 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (373)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது நாம் காணப்போவதும் சுவையான நூற்பாதான் ! –

“இகர  யகர  மிறுதி விரவும்” (மொழி . 25)

‘இகரம் யகரம் இறுதி விரவும்’ – சொல்லின் ஈற்றில் ‘இ’யும் ‘ய்’யும் இடம்பெறுவதில் தடுமாற்றம் ஏற்படும் !

‘இறுதி விரவும்’ என்பதற்குப் பலரும் ,‘  ‘இ’ வரலாம் அல்லது ‘ய்’ வரலாம்’ என்பதுபோலப் பொருள் எழுதியுள்ளனர் !

இப்படிப்பொருள் சொன்னவர்கள் , ஒரே ஒரு கல்வெட்டைச் சான்றாகக் காட்டுகின்றனர் ! அக்கல்வெட்டில் , ‘நாய்’ என்பது ‘நாஇ’ என எழுதப்பட்டுள்ளது !

கல்வெட்டில் உள்ளது பிழை வடிவம் ! கல்வெட்டானது எழுத்துப் பிழைகள் நிறைந்தது ! ‘சமுதாய நோக்கில் கல்வெட்டுகள்’ என்று நானே ஒரு நூல் எழுதியுள்ளேன் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டிலும் இதே  ‘நாய் – நாஇ ’ எடுத்துக்காட்டுகள்தாம் வந்துள்ளன !  ‘இவற்றைக் கொள்ளற்க’ என்பதே இளம்பூரணர் சொல்லவந்தது !

நச்சினார்க்கினியர் உரையால் இது தெளிவாகிறது !

நச்சினார்க்கினியர் , “ இகரமும் யகரமும் ஒரு மொழியின் இறுதிக்கண் ஓசை விரவி வரும் ! அவ்விகரம் கொள்ளற்க ! ” என்று மிகத் தெளிவாக அறைந்துள்ளார் !

‘நாய்’ என்பது ‘நாஇ’ என வரலாம் எனில் , ‘தாய்’ எனப்து ‘தாஇ’ என்றல்லவா வரவேண்டும் ? ‘காய்’ என்பது ‘காஇ’ என்றல்லவா வரவேண்டும் ? ‘தாஇ’ , ‘காஇ’ என்றெல்லாம் வருவதை இவர்கள் ஒத்துக்கொள்வார்களாமா?

நூற்பாவின் கீழே இளம்பூரணர் மிகத் தெளிவாக  “இதுவும் ஓர் போலி யெழுத்து உணர்த்துதல்  நுதலிற்று” என்கிறார் !

அஃதாவது – ‘ய்’ யும் ,  ‘இ’யும் ஒன்றுக்கொன்று உச்சரிப்பில் தடுமாறி வரும் என்பதே  அவர் கூறிய கருத்து !

முன் ஓர் ஆய்வில் நான் கூறியவாறு,  சொல்லின் ஈற்றில் ,  ‘ய்’ யை உச்சரித்தாலும் ‘இ’யை உச்சரித்தாலும் ’ , இரண்டும் ஒன்றுபோலவே காதில் கேட்கும் ! ஆகவே ஒருவர் சொல்ல மற்றவர் சுவடி எழுதுகையில் இதைக் கவனிக்கவேண்டும் ! – இதுவே தொல்காப்பியர் சொல்ல வந்தது !

‘வாய்’ , ‘சேய்’ , ‘பேய்’ , ‘தூய்’ – இற்றையெல்லாம் உச்சரித்துப் பார்த்தால் நமது கருத்து தெளிவாகும் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 20, 2015 7:20 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (373)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இப்போது நாம் காணப்போவதும் சுவையான நூற்பாதான் ! –

“இகர  யகர  மிறுதி விரவும்” (மொழி . 25)

‘இகரம் யகரம் இறுதி விரவும்’ – சொல்லின் ஈற்றில் ‘இ’யும் ‘ய்’யும் இடம்பெறுவதில் தடுமாற்றம் ஏற்படும் !

‘இறுதி விரவும்’ என்பதற்குப் பலரும் ,‘  ‘இ’ வரலாம் அல்லது ‘ய்’ வரலாம்’ என்பதுபோலப் பொருள் எழுதியுள்ளனர் !

இப்படிப்பொருள் சொன்னவர்கள் , ஒரே ஒரு கல்வெட்டைச் சான்றாகக் காட்டுகின்றனர் ! அக்கல்வெட்டில் , ‘நாய்’ என்பது ‘நாஇ’ என எழுதப்பட்டுள்ளது !

கல்வெட்டில் உள்ளது பிழை வடிவம் ! கல்வெட்டானது எழுத்துப் பிழைகள் நிறைந்தது ! ‘சமுதாய நோக்கில் கல்வெட்டுகள்’ என்று நானே ஒரு நூல் எழுதியுள்ளேன் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டிலும் இதே  ‘நாய் – நாஇ ’ எடுத்துக்காட்டுகள்தாம் வந்துள்ளன !  ‘இவற்றைக் கொள்ளற்க’ என்பதே இளம்பூரணர் சொல்லவந்தது !

நச்சினார்க்கினியர் உரையால் இது தெளிவாகிறது !

நச்சினார்க்கினியர் , “ இகரமும் யகரமும் ஒரு மொழியின் இறுதிக்கண் ஓசை விரவி வரும் ! அவ்விகரம் கொள்ளற்க ! ” என்று மிகத் தெளிவாக அறைந்துள்ளார் !

‘நாய்’ என்பது ‘நாஇ’ என வரலாம் எனில் , ‘தாய்’ எனப்து ‘தாஇ’ என்றல்லவா வரவேண்டும் ? ‘காய்’ என்பது ‘காஇ’ என்றல்லவா வரவேண்டும் ? ‘தாஇ’ , ‘காஇ’ என்றெல்லாம் வருவதை இவர்கள் ஒத்துக்கொள்வார்களாமா?

நூற்பாவின் கீழே இளம்பூரணர் மிகத் தெளிவாக  “இதுவும் ஓர் போலி யெழுத்து உணர்த்துதல்  நுதலிற்று” என்கிறார் !

அஃதாவது – ‘ய்’ யும் ,  ‘இ’யும் ஒன்றுக்கொன்று உச்சரிப்பில் தடுமாறி வரும் என்பதே  அவர் கூறிய கருத்து !

முன் ஓர் ஆய்வில் நான் கூறியவாறு,  சொல்லின் ஈற்றில் ,  ‘ய்’ யை உச்சரித்தாலும் ‘இ’யை உச்சரித்தாலும் ’ , இரண்டும் ஒன்றுபோலவே காதில் கேட்கும் ! ஆகவே ஒருவர் சொல்ல மற்றவர் சுவடி எழுதுகையில் இதைக் கவனிக்கவேண்டும் ! – இதுவே தொல்காப்பியர் சொல்ல வந்தது !

‘வாய்’ , ‘சேய்’ , ‘பேய்’ , ‘தூய்’ – இற்றையெல்லாம் உச்சரித்துப் பார்த்தால் நமது கருத்து தெளிவாகும் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 49 of 84 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 66 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக