புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
48 Posts - 51%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
48 Posts - 51%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 48 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 48 of 84 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 66 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 07, 2015 6:16 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (362)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தொல்காப்பியர் தமிழ்ச் சொற்களை  ‘மொழி’ நோக்கில் 3  வகைகளாகப் பகுக்கிறார் ! –

1 . ஓரெழுத்து  ஒருமொழி
2 . ஈரெழுத்து ஒருமொழி
3 . இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகளால் ஆன தொடர்மொழி

இவற்றுக்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் வருமாறு –

1 .  ஓரெழுத்து  ஒருமொழி : ‘ஆ’ போல்வன ;  ஆ = பசு

2. ஈரெழுத்து ஒருமொழி : ‘மணி’ போல்வன; மணி = ‘டாண்’ணு பொருள் சொல்லிவிடுவீர்கள்!

3. தொடர்மொழி :
i.  ‘வரகு ’ போல்வன ; வரகு = தானியங்களில் ஒன்று (Common millet)
ii. ‘கொற்றன்’ போல்வன ; கொற்றன் – இயற்பெயர்

‘கொற்றன்’ என்ற சொல்லில் ஒற்றெழுத்துகளை நீக்கிவிட்டால் நிற்பவை இரு எழுத்துகளே ! சொற்களில் எழுத்தை எண்ணும்போது மெய்யெழுத்துகளைக் கணக்கில் சேர்க்கக் கூடாது எனில் , ’ஈரெழுத்து ஒருமொழிக்கு அல்லவா எடுத்துக்காட்டாக  அமையும் ? ஆனால் இளம்பூரணர் ‘இரண்டு எழுத்துகளைவிடக் கூடுதலான எழுத்துக்களல் அமைந்த தொடர்மொழி’க்கு  அல்லவா  ‘கொற்றனை’ நிறுத்தியுள்ளார் !  

எனவே இளம்பூரணர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் !

ஆனால் நச்சர் இதில் மாறுபடுகிறார் !

நச்சர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் குற்றியலுகரத்தையும்   கணக்கில் கொள்ளக்கூடாது !

நச்சினார்க்கினியரின் உரைப்படி-
1 . ஆ , கா , நா – ஓரெழுத்து ஒருமொழிகள்.

2 .மணி , வரகு , கொற்றன் – ஈரெழுத்து ஒருமொழிகள்.
(வரகு என்பதன் ஈற்றெழுத்துக் குற்றியலுகரமாக இருப்பதால் நச்சர் ‘கு’வைக் கணக்கில் கொள்ளவில்லை ! )

3. குரவு , அரவு – மூவெழுத்து ஒருமொழிகள் !
( ‘வு’ , குற்றியலுகரமல்ல என்பதால் நச்சர் அதனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டார் !)

4. கணவிரி – நாலெழுத்து ஒருமொழி .
(கணவிரி =- செவ்வலரி)

5 . அகத்தியனார் – ஐந்தெழுத்து ஒரு மொழி.

(இரு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)

6 . திருச்சிற்றம்பலம் – ஆறெழுத்து ஒரு மொழி.

(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)

6 . பெரும்பற்றப் புலியூர் – ஏழெழுத்து ஒரு மொழி.

(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)

நச்சர் கூறிய  ‘ஒற்றைக் கணக்கில் எடுக்கவேண்டாம்’ என்பது யாப்பில் பொருந்துவது !

எனவே,
நாம் மேலே பார்த்த இளம்பூரணர் உரையே சிறந்ததாகக் காணப்படுகிறது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 10, 2015 6:57 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (363)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் அடுத்தது-

“மெய்யி  னியக்க  மகரமொடு  சிவணும்” (மொழி. 13)

மெய்யெழுத்தானது இயங்வேண்டும் என்றால்  ‘அ’ தேவை! – இப்படித்தானே பொருள் வருகிறது ?

அப்படியானால் ‘இ’யுடன் சேர்ந்து ‘கி’ ஆகிறதே அது? அதுவும் இயக்கம் தானே ?

எனவே நாம் பொருள் கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது !

இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம் ! –

“ ட  ற  ல  ள என்னும் புள்ளி முன்னர் என வரும் ” .

இதுதான் இளம்பூரணர் சொன்னது !

‘ட   ற  ல  ள’ போன்ற மெய்களைச்  சுட்டிக்காட்டத்தான் நமக்கு ‘அ’ தேவைப் படுகிறது ! இளம்பூரணர் உரை இதைத்தன் கூறுகிறது !

அஃதாவது ‘ட் எனும் புள்ளி எழுத்து ’ என்று கூறுவது அந்நாளில் மரபில்லை !
‘ட  எனும் புள்ளி’ என்றுதான் கூறுவர் !

இன்றுகூட , ‘டகர  மெய்’ என்று நாம் எழுதுவதைக் கவனிக்க ! ‘ட’ என வந்துவிட்டாலே , ‘ட்’டுடன் ‘அ’ சேர்கிறது என்பதைத்தானே குறிக்கிறது?

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 10, 2015 7:53 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் அருமை!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 13, 2015 8:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (364)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழி மரபில் அடுத்த நூற்பா !: -

“தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம்  மானம் இல்லை” (மொழி. 14)

’ எல்லா எழுத்தும்’ – எல்லா மெய்யெழுத்துகளையும்,

‘தம்மியல் கிளப்பின்’ – குறிப்பிட வேண்டுமாயின்,

‘மெய்ந்நிலை மயக்கம்  ’ – மெய்யாகவோ உயிர் மெய்யாகவோ குறிப்பிடலாம் ;

‘மானம் இல்லை’ – அதில் ஒன்றும் தவறில்லை !

‘இடையெழுத் தென்ப  யரல வழள’ – இஃது இலக்கணம் .
இவை,   ய் ர் ல் வ் ழ் ள் ஆகிய  மெய்களைத்தான் குறிக்கின்றன ; ஆனாலும் ’ யரல வழள’ என்ற உயிர் மெய்களால்  அந்த மெய்கள் சுட்டப்படுகின்றன !

இவ்வாறு சொல்லலாம் என்பதுதான்  தொல்காப்பியரின் மேலை விதி !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 14, 2015 3:59 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (365)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை  நூன்மரபில் பார்த்தோம் !

அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –

“யரழ  வென்னு  மூன்றுமுன்  னொற்றக்
கசதப  ஙஞநம  வீரொற்  றாகும்” (மொழி. 15)

‘யரழ  என்னும்   மூன்றும் முன்  ஒற்றக்’- ய்  , ர் , ழ்  ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப  ஙஞநம  ஈரொற்று   ஆகும்’ – க்  ச்  த்  ப், இவைகளில்  ஒன்று அல்லது  ங் ஞ்  ந்  ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
    ’ய்’யை அடுத்து  ‘க்’ வந்தது !

2 . வேய்ச்சிறை
    ’ய்’யை அடுத்து  ‘ச்’ வந்தது !

3 .வேய்த்தலை
    ’ய்’யை அடுத்து  ‘த்’ வந்தது !

4 . வேய்ப்புறம்
    ’ய்’யை அடுத்து  ‘ப்’ வந்தது !

5 . வேய்ங்குறை
    ’ய்’யை அடுத்து  ‘ங்’ வந்தது !

6 . வேய்ஞ்சிறை
       ‘ய்’யை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

7 . வேய்ந்தலை
   ’ய்’யை அடுத்து  ‘ந்’ வந்தது !

8 . வேய்ம்புறம்
   ’ய்’யை அடுத்து  ‘ம்’ வந்தது !

9 . வேர்க்குறை
    ’ர்’ரை அடுத்து  ‘க்’ வந்தது !

10 . வேர்ச்சிறை
       ‘ர்’ரை  அடுத்து ‘ச்’ வந்தது!

11 . வேர்த்தலை
   ’ர்’ரை அடுத்து  ‘த்’ வந்தது !

12 . வேர்ப்புறம்
   ’ர்’ரை அடுத்து  ‘ப்’ வந்தது !

13 . வேர்ங்குறை
    ’ர்’ரை அடுத்து  ‘ங்’ வந்தது !

14 . வேர்ஞ்சிறை
       ‘ர்’ரை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

15 . வேர்ந்தலை
   ’ர்’ரை அடுத்து  ‘ந்’ வந்தது !

16 . வேர்ம்புறம்
   ’ர்’ரை அடுத்து  ‘ம்’ வந்தது !

17 . வீழ்க்குறை
    ’ழ்’ழை அடுத்து  ‘க்’ வந்தது !

18 . வீழ்ச்சிறை
       ‘ழ்’ழை  அடுத்து ‘ச்’ வந்தது!

19 . வீழ்த்தலை
   ’ழ்’ழை அடுத்து  ‘த்’ வந்தது !

20 .வீழ்ப்புறம்
   ’ழ்’ழை அடுத்து  ‘ப்’ வந்தது !

21 . வீழ்ங்குறை
    ’ழ்’ழை அடுத்து  ‘ங்’ வந்தது !

22 . வீழ்ஞ்சிறை
       ‘ழ்’ழை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

23 . வீழ்ந்தலை
   ’ழ்’ழை அடுத்து  ‘ந்’ வந்தது !

24 . வீழ்ம்புறம்
   ’ழ்’ழை அடுத்து  ‘ம்’ வந்தது !

இனி இதே  நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
    ‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !

2 . வாய்ச்சி
    ‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !

3 . பாய்த்தல்
    ‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !

4 .வாய்ப்பு
    ‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !

5 . பீர்க்கு
    ‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !

6 . தேர்ச்சி
    ‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !

7 . வார்த்தல்
    ‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !

8 . ஆர்ப்பு
    ‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !

9 . வாழ்க்கை
    ‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !

10 .தாழ்ச்சி
    ‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !

11 . தாழ்த்தல்
    ‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !

12 . தாழ்ப்பு
    ‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !

13 . காய்ங்கனி
    ‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !

14 .தேய்ஞ்சது
    ‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !

15 .காய்ந்தனம்
    ‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !

16 . காய்ம்புறம்
    ‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !

17 .நேர்ங்கல்
        ‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !

18 . நேர்ஞ்சிலை
        ‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !

19 .நேர்ந்திலை
        ‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !

20 . நேர்ம்புறம்
        ‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !

21 . வாழ்ந்தனம்
        ‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !

22 . தாழ்ங்குலை
        ‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !

23 . தாழ்ஞ்சினை
        ‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !

24 . தாழ்ந்திரள்
        ‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !

25 . வீழ்ம்படை
        ‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !

மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல்  ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !

மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து  இரு மெய்கள் மயங்கிய  சொற்கள் !

அப்படியானால்  சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?

இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
     இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !

2 .  அன்னாய்க்கு
     இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !

ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 14, 2015 4:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (365)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை  நூன்மரபில் பார்த்தோம் !

அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –

“யரழ  வென்னு  மூன்றுமுன்  னொற்றக்
கசதப  ஙஞநம  வீரொற்  றாகும்” (மொழி. 15)

‘யரழ  என்னும்   மூன்றும் முன்  ஒற்றக்’- ய்  , ர் , ழ்  ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப  ஙஞநம  ஈரொற்று   ஆகும்’ – க்  ச்  த்  ப், இவைகளில்  ஒன்று அல்லது  ங் ஞ்  ந்  ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !

இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
    ’ய்’யை அடுத்து  ‘க்’ வந்தது !

2 . வேய்ச்சிறை
    ’ய்’யை அடுத்து  ‘ச்’ வந்தது !

3 .வேய்த்தலை
    ’ய்’யை அடுத்து  ‘த்’ வந்தது !

4 . வேய்ப்புறம்
    ’ய்’யை அடுத்து  ‘ப்’ வந்தது !

5 . வேய்ங்குறை
    ’ய்’யை அடுத்து  ‘ங்’ வந்தது !

6 . வேய்ஞ்சிறை
       ‘ய்’யை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

7 . வேய்ந்தலை
   ’ய்’யை அடுத்து  ‘ந்’ வந்தது !

8 . வேய்ம்புறம்
   ’ய்’யை அடுத்து  ‘ம்’ வந்தது !

9 . வேர்க்குறை
    ’ர்’ரை அடுத்து  ‘க்’ வந்தது !

10 . வேர்ச்சிறை
       ‘ர்’ரை  அடுத்து ‘ச்’ வந்தது!

11 . வேர்த்தலை
   ’ர்’ரை அடுத்து  ‘த்’ வந்தது !

12 . வேர்ப்புறம்
   ’ர்’ரை அடுத்து  ‘ப்’ வந்தது !

13 . வேர்ங்குறை
    ’ர்’ரை அடுத்து  ‘ங்’ வந்தது !

14 . வேர்ஞ்சிறை
       ‘ர்’ரை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

15 . வேர்ந்தலை
   ’ர்’ரை அடுத்து  ‘ந்’ வந்தது !

16 . வேர்ம்புறம்
   ’ர்’ரை அடுத்து  ‘ம்’ வந்தது !

17 . வீழ்க்குறை
    ’ழ்’ழை அடுத்து  ‘க்’ வந்தது !

18 . வீழ்ச்சிறை
       ‘ழ்’ழை  அடுத்து ‘ச்’ வந்தது!

19 . வீழ்த்தலை
   ’ழ்’ழை அடுத்து  ‘த்’ வந்தது !

20 .வீழ்ப்புறம்
   ’ழ்’ழை அடுத்து  ‘ப்’ வந்தது !

21 . வீழ்ங்குறை
    ’ழ்’ழை அடுத்து  ‘ங்’ வந்தது !

22 . வீழ்ஞ்சிறை
       ‘ழ்’ழை  அடுத்து ‘ஞ்’ வந்தது!

23 . வீழ்ந்தலை
   ’ழ்’ழை அடுத்து  ‘ந்’ வந்தது !

24 . வீழ்ம்புறம்
   ’ழ்’ழை அடுத்து  ‘ம்’ வந்தது !

இனி இதே  நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
    ‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !

2 . வாய்ச்சி
    ‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !

3 . பாய்த்தல்
    ‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !

4 .வாய்ப்பு
    ‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !

5 . பீர்க்கு
    ‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !

6 . தேர்ச்சி
    ‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !

7 . வார்த்தல்
    ‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !

8 . ஆர்ப்பு
    ‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !

9 . வாழ்க்கை
    ‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !

10 .தாழ்ச்சி
    ‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !

11 . தாழ்த்தல்
    ‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !

12 . தாழ்ப்பு
    ‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !

13 . காய்ங்கனி
    ‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !

14 .தேய்ஞ்சது
    ‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !

15 .காய்ந்தனம்
    ‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !

16 . காய்ம்புறம்
    ‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !

17 .நேர்ங்கல்
        ‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !

18 . நேர்ஞ்சிலை
        ‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !

19 .நேர்ந்திலை
        ‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !

20 . நேர்ம்புறம்
        ‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !

21 . வாழ்ந்தனம்
        ‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !

22 . தாழ்ங்குலை
        ‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !

23 . தாழ்ஞ்சினை
        ‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !

24 . தாழ்ந்திரள்
        ‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !

25 . வீழ்ம்படை
        ‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !

மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல்  ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !

மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து  இரு மெய்கள் மயங்கிய  சொற்கள் !

அப்படியானால்  சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?

இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
     இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !

2 .  அன்னாய்க்கு
     இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !

ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Tue Apr 14, 2015 5:15 pm

தொட தொடத் தொல்க்காப்பியம் அருமை அய்யா!இது போன்று நன்னூலுக்கு விளக்கம்

எழுதி உள்ளீர்களாஅய்யா?-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 16, 2015 8:18 pm

நன்றி மோனிகா ஸ்ரீ !
நன்னூலுக்கு விளக்கம் எழுதவில்லை.



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 16, 2015 8:30 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (366)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேலை நூற்பாவில்  ‘ய்’ , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் எப்படிப் பிற மெய்களுடன் வரும் என்றூ ஓதினார் தொல்காப்பியர் !

இப்போது அவற்றிலிருந்து ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றைப் பிரித்து இவற்றுக்கு உரிய சில பண்புகளை எழுதுகிறார் !-

“அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொற் றாகா” (மொழி. 16)

‘அவற்றுள்’ – ய , ர , ழ ஆகியவற்றுள்,
‘ரகார ழகாரம்’ -  ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரண்டும்,
 ‘குற்றொற்று  ஆகா ’ – குறில் எழுத்துக்கு அருகிலே மெய்யெழுத்தாக நிற்கமாட்டா !

இந்த உண்மையை முன் ஆய்வில் நாம் கண்ட எடுத்துக்காட்டுகளிலும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் !

இளம்பூரணர் தரும் எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் !-
1 . தார்
 ‘ர்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !  

2 . தாழ்
 ‘ழ்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

3 . கரு
 ‘ரு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(க), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

4 . மழு
 ‘ழு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(ம), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளால், தொல்காப்பியர் சொன்னது , ‘ர்’, ‘ழ்’ஆகிய மெய்கள் பற்றியது மட்டுமல்ல , ரகர ழகர உயிர்மெய்கள் (ரு , ழு போல) பற்றியதும் ஆகும் என்பது புலனாகிறது !

தொல்காப்பியரின் இந்த நூற்பாவைக் கொண்டு இன்னொரு இலக்கணத்தையும் எடுக்கிறார் இளம்பூரணர் ! அதன்படி –

1. பொய்
‘ய்’ஆனது ஒரு குறிலின்  (பொ) அருகேயும் நிற்கும் !

2. நோய்
‘ய்’ஆனது ஒரு நெடிலின்  (பொ) அருகேயும் நிற்கும் !

முன்னே, ‘ர்’, ‘ழ்’ ஆகியன குறிலின் அருகே நிற்கமாட்டா என்று பார்த்ததை இங்கு ஒப்பிட்டுக்கொள்க !
                                             ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Apr 16, 2015 8:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (366)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மேலை நூற்பாவில்  ‘ய்’ , ‘ர்’ , ‘ழ்’ ஆகிய மெய்கள் எப்படிப் பிற மெய்களுடன் வரும் என்று ஓதினார் தொல்காப்பியர் !

இப்போது அவற்றிலிருந்து ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றைப் பிரித்து இவற்றுக்கு உரிய சில பண்புகளை எழுதுகிறார் !-

“அவற்றுள்
ரகார ழகாரங் குற்றொற் றாகா” (மொழி. 16)

‘அவற்றுள்’ – ய , ர , ழ ஆகியவற்றுள்,
‘ரகார ழகாரம்’ -  ‘ர்’ , ‘ழ்’ ஆகிய இரண்டும்,
 ‘குற்றொற்று  ஆகா ’ – குறில் எழுத்துக்கு அருகிலே மெய்யெழுத்தாக நிற்கமாட்டா !

இந்த உண்மையை முன் ஆய்வில் நாம் கண்ட எடுத்துக்காட்டுகளிலும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் !

இளம்பூரணர் தரும் எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம் !-
1 . தார்
 ‘ர்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !  

2 . தாழ்
 ‘ழ்’ ஆனது ஒரு நெடில் எழுத்தின்(தா), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

3 . கரு
 ‘ரு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(க), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

4 . மழு
 ‘ழு’ ஆனது ஒரு குறில் எழுத்தின்(ம), அருகே வந்துள்ளதைக் கவனிக்க !

இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளால், தொல்காப்பியர் சொன்னது , ‘ர்’, ‘ழ்’ஆகிய மெய்கள் பற்றியது மட்டுமல்ல , ரகர ழகர உயிர்மெய்கள் (ரு , ழு போல) பற்றியதும் ஆகும் என்பது புலனாகிறது !

தொல்காப்பியரின் இந்த நூற்பாவைக் கொண்டு இன்னொரு இலக்க
ணத்தையும் எடுக்கிறார் இளம்பூரணர் ! அதன்படி –

1. பொய்
‘ய்’ஆனது ஒரு குறிலின்  (பொ) அருகேயும் நிற்கும் !

2. நோய்
‘ய்’ஆனது ஒரு நெடிலின்  (பொ) அருகேயும் நிற்கும் !

முன்னே, ‘ர்’, ‘ழ்’ ஆகியன குறிலின் அருகே நிற்கமாட்டா என்று பார்த்ததை இங்கு ஒப்பிட்டுக்கொள்க !
                                             ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 48 of 84 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 66 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக