புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 45 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 45 of 84 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 64 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 25, 2015 7:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (345)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன்மரபில் அடுத்து நாம் காணப்போவது-

“ஞநமவ  வென்னும் புள்ளி முன்னர்
 யஃகா  னிற்றன் மெய்பெற்  றன்றே”  (நூன் . 27)

‘ஞநமவ  என்னும் புள்ளி முன்னர்’ – ஞ் , ந் , ம் ,வ்  ஆகிய மெய்களை அடுத்து,
‘யஃகான்  நிற்றல் மெய்பெற்றன்றே’ – யகரம் வருவது உண்மையாகும்தானே ?

இளம்பூரணர் காட்டுகளை வருமாறு அமைக்கலாம் !-

1. உரிஞ்யாது -  ‘ஞ்’ அருகே ‘யா’ வந்தது .

2. பொருந்யாது -  ‘ந்’ அருகே ‘யா’ வந்தது.

3. திரும்யாது -  ‘ம்’ அருகே ‘யா’ வந்தது.

4. தெவ்யாது -  ‘வ்’ அருகே ‘யா’ வந்தது.

இங்கே ஓர் ஐயம் !

கிளப்பியவர் நச்சினார்க்கினியர் !

தொல்காப்பியர் புணர்ச்சி இலக்கணம் தனியாக ஓதியுள்ளார் ! ஆகவே ‘மயக்கம்’ என்பதை ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் கொள்ளவேண்டும் ! இளம்பூரணர் எப்படி ‘உரிஞ் - யாது’ , ‘பொருந் - யாது’ என்று இருசொல் புணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம் ?

- இதுதான் நச்சர் வினா!

ஆனால் , இளம்பூரணர் காட்டியது மயக்கம்தானே தவிரப் புணர்ச்சிக்காண எடுத்துக்காட்டுகளை அல்ல !

தவிரவும் எந்த இடத்திலும் தொல்காப்பியர் ‘மயக்கம்’ என்பது ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் வரவேண்டும் எனக் கூறவில்லை !

எனவே இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளில் தவறேதும் இல்லை !
                                             ***
-------------------------------------------------------------------------------------------------



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 25, 2015 7:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (345)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன்மரபில் அடுத்து நாம் காணப்போவது-

“ஞநமவ  வென்னும் புள்ளி முன்னர்
 யஃகா  னிற்றன் மெய்பெற்  றன்றே”  (நூன் . 27)

‘ஞநமவ  என்னும் புள்ளி முன்னர்’ – ஞ் , ந் , ம் ,வ்  ஆகிய மெய்களை அடுத்து,
‘யஃகான்  நிற்றல் மெய்பெற்றன்றே’ – யகரம் வருவது உண்மையாகும்தானே ?

இளம்பூரணர் காட்டுகளை வருமாறு அமைக்கலாம் !-

1. உரிஞ்யாது -  ‘ஞ்’ அருகே ‘யா’ வந்தது .

2. பொருந்யாது -  ‘ந்’ அருகே ‘யா’ வந்தது.

3. திரும்யாது -  ‘ம்’ அருகே ‘யா’ வந்தது.

4. தெவ்யாது -  ‘வ்’ அருகே ‘யா’ வந்தது.

இங்கே ஓர் ஐயம் !

கிளப்பியவர் நச்சினார்க்கினியர் !

தொல்காப்பியர் புணர்ச்சி இலக்கணம் தனியாக ஓதியுள்ளார் ! ஆகவே ‘மயக்கம்’ என்பதை ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் கொள்ளவேண்டும் ! இளம்பூரணர் எப்படி ‘உரிஞ் - யாது’ , ‘பொருந் - யாது’ என்று இருசொல் புணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம் ?

- இதுதான் நச்சர் வினா!

ஆனால் , இளம்பூரணர் காட்டியது மயக்கம்தானே தவிரப் புணர்ச்சிக்காண எடுத்துக்காட்டுகளை அல்ல !

தவிரவும் எந்த இடத்திலும் தொல்காப்பியர் ‘மயக்கம்’ என்பது ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் வரவேண்டும் எனக் கூறவில்லை !

எனவே இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளில் தவறேதும் இல்லை !
                                             ***
-------------------------------------------------------------------------------------------------



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 25, 2015 7:47 pm

நன்றி செந்தமிழன் அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 28, 2015 2:56 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (346)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன்மரபில், எழுத்துகள் அடுத்தடுத்து வருவதற்கான மயக்க விதிகளைப் பார்த்துவருகிறோம் !

இப்போது –
“மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் ” (நூன் . 28)

அஃதாவது, ‘ம்’ முன்பாக  வகரம் தோன்றும் !

எடுத்துக்காட்டுகள் –

1. நிலம் வலிது  :  இதில் ‘ம்’ முன்பாக ‘வ’ வந்துள்ளது.

இதனை அடுத்துத் தொல்காப்பியர் –

“யரழ  வென்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து  ஙகரமொடு தோன்றும்” (நூன். 29)

‘யரழ  வென்னும் புள்ளி முன்னர்’ – ய் , ர் , ழ் ஆகிய மூன்று மெய்களின் முன்னே,
‘முதலாகு  எழுத்து  ஙகரமொடு தோன்றும்’ – சொல்லுக்கு முதலில் வரக்கூடிய ஒன்பது உயிர்மெய் எழுத்துகளும் , ‘ங’ வும் வரும் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு குறிக்கலாம் ! –

1. வேய்கடிது
இதில் , ‘ய்’ முன்பு ‘க’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

2. வேர்கடிது
இதில் , ‘ர்’ முன்பு ‘க’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

3. வீழ்கடிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘க’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

4. வேய்சிறிது
இதில் , ‘ய்’ முன்பு ‘சி’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

5. வேர்சிறிது
இதில் , ‘ர்’ முன்பு ‘சி’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

6. வீழ்சிறிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘சி’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

7. வேய்தீது
இதில் , ‘ய்’ முன்பு ‘தீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

8. வேர்தீது
இதில் , ‘ர்’ முன்பு ‘தீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

9. வீழ்தீது
இதில் , ‘ழ்’ முன்பு ‘தீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

10. வேய்பெரிது
இதில் , ‘ய்’ முன்பு ‘பெ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

11. வேர்பெரிது
இதில் , ‘ர்’ முன்பு ‘பெ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

12. வீழ்பெரிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘பெ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

13. வேய்ஞான்றது
இதில் , ‘ய்’ முன்பு ‘ஞா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

14. வேர்ஞான்றது
இதில் , ‘ர்’ முன்பு ‘ஞா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

15. வீழ்ஞான்றது
இதில் , ‘ழ்’ முன்பு ‘ஞா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

16. வேய்நீண்டது
இதில் , ‘ய்’ முன்பு ‘நீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

17. வேர்நீண்டது
இதில் , ‘ர்’ முன்பு ‘நீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

18. வீழ்நீண்டது
இதில் , ‘ழ்’ முன்பு ‘நீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

19. வேய்மாண்டது
இதில் , ‘ய்’ முன்பு ‘மா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

20. வேர்மாண்டது
இதில் , ’ர்’ முன்பு ‘மா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

21. வீழ்மாண்டது
இதில் , ‘ழ்’ முன்பு ‘மா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

22. வேய்+யாது  = வேயாது
இதில் , ‘ய்’ முன்பு ‘யா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

23. வேர்யாது
இதில் , ‘ர்’ முன்பு ‘யா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

24. வீழ்யாது
இதில் , ‘ழ்’ முன்பு ‘யா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

25. வேய்வலிது
இதில் , ‘ய்’ முன்பு ‘வ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

26. வேர்வலிது
இதில் , ‘ர்’ முன்பு ‘வ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

27. வீழ்வலிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘வ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

28. வேய்ஙனம்
இதில் , ‘ய்’ முன்பு ‘ங’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

29. வேர்ஙனம்
இதில் , ‘ர்’ முன்பு ‘ங’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

30. வீழ்ஙனம்
இதில் , ‘ழ்’ முன்பு ‘ங’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)

இவற்றில் ‘வேய்ஙனம்’, ‘வேர்ஙனம்’ , ‘வீழ்ஙனம்’ என்ற எடுத்துக்காட்டுகளை நச்சர் , ‘வேய்ங்ஙனம்’, ‘வேர்ங்ஙனம்’ , ‘வீழ்ங்ஙனம்’ என்றே காட்டுகிறார் !

எடுத்துக்காட்டிவிட்டு , இவையெல்லாம் ‘வேர் + ஙனம்’ என்பதுபோன்று புணர்ந்து வந்தவையல்ல ; இவை அக்காலத்தில் மரபுவழியாக  முழுச் சொற்களாக வந்தவையே என்கிறார் !

மேலும் நச்சர், மேலே இளம்பூரணர் காட்டிய சான்றுகளை (1 - 27) ஒத்துக்கொள்ளவில்லை !
ஏன் ?
அவை, ஒரு சொல்லுக்குள்ளே வராத மயக்கம் பற்றியவை  என்கிறார் !
ஒத்துக்கொள்ளாமல் , ஒரு சொல்லுக்குள்ளே அடங்கும் மயக்கங்களை வருமாறு
தருகிறார் !-

1. ஆய்க
இதில், ‘ய்’ அருகே ‘க’ வந்தது .

2. ஆர்க
இதில், ‘ர்’ அருகே ‘க’ வந்தது .

3. ஆழ்க
இதில், ‘ழ்’ அருகே ‘க’ வந்தது .

4. ஆய்தல்
இதில், ‘ய்’ அருகே ‘த’ வந்தது .

5. ஆர்தல்
இதில், ‘ர்’ அருகே ‘த’ வந்தது .

6. ஆழ்தல்
இதில், ‘ழ்’ அருகே ‘த’ வந்தது .

7. ஆய்நர்
இதில், ‘ய்’ அருகே ‘ந’ வந்தது .

8. ஆர்நர்
இதில், ‘ர்’ அருகே ‘ந’ வந்தது .

9. ஆழ்நர்
இதில், ‘ழ்’ அருகே ‘ந’ வந்தது .

10. ஆய்பவை
இதில், ‘ய்’ அருகே ‘ப’ வந்தது .

11. ஆர்பவை
இதில், ‘ர்’ அருகே ‘ப’ வந்தது .

12. ஆழ்பவை
இதில், ‘ழ்’ அருகே ‘ப’ வந்தது .

13. வாய்மை
இதில், ‘ய்’ அருகே ‘மை’ வந்தது .

14. நேர்மை
இதில், ‘ர்’ அருகே ‘மை’ வந்தது .

15. கீழ்மை
இதில், ‘ழ்’ அருகே ‘மை’ வந்தது .

16. எய்சிலை
இதில், ‘ய்’ அருகே ‘சி’ வந்தது .

17. வார்சிலை
இதில், ‘ர்’ அருகே ‘சி’ வந்தது .

18. வாழ்சேரி
இதில், ‘ழ்’ அருகே ‘சே’ வந்தது .

19. தெய்வம்
இதில், ‘ய்’ அருகே ‘வ’ வந்தது .

20. சேர்வது
இதில், ‘ர்’ அருகே ‘வ’ வந்தது .

21. வாழ்வது
இதில், ‘ழ்’ அருகே ‘வ’ வந்தது .

22. பாய்ஞெகிழி
இதில், ‘ய்’ அருகே ‘ஞெ’ வந்தது .

23. நேர்ஞெகிழி
இதில், ‘ர்’ அருகே ‘ஞெ’ வந்தது .

24. வாழ்ஞெண்டு
இதில், ‘ழ்’ அருகே ‘ஞெ’ வந்தது .

25. செய்யாறு
இதில், ‘ய்’ அருகே ‘யா’ வந்தது .

26. பேர்யானை
இதில், ‘ர்’ அருகே ‘யா’ வந்தது .

27. வீழ்யானை
இதில், ‘ழ்’ அருகே ‘யா’ வந்தது .

நச்சர் மேலே கூறிய எடுத்துக்காட்டுகளில் (1 - 27) மொழிக்கு முதலாக வரும் எழுத்துகள் – க , த , ந , ப , ம , சி , வ , ஞெ , யா என்ற ஒன்பது !

மேலும் மொழிக்கு முதல் ஆகாத   வு , வோ , ஞ   ஆகிய எழுத்துகளோடும்  ய் , ர் , ழ் ஆகிய மூன்று எழுத்துகளும் மயங்குதல் உண்டு என்று காட்டுகிறார் ! அவை –

1. ஓய்வு
இதில், ‘ய்’ அருகே ‘வு’ வந்தது .

2. சோர்வு
இதில், ‘ர்’ அருகே ‘வு’ வந்தது .

3. வாழ்வு
இதில், ‘ழ்’ அருகே ‘வு’ வந்தது .

4. ஓய்வோர்
இதில், ‘ய்’ அருகே ‘வோ’ வந்தது .

5. சோர்வோர்
இதில், ‘ர்’ அருகே ‘வோ’ வந்தது .

6. வாழ்வோர்
இதில், ‘ழ்’ அருகே ‘வோ’ வந்தது .

7. ஆய்ஞர்
இதில், ‘ய்’ அருகே ‘ஞ’ வந்தது .

8. சேர்ஞர்
இதில், ‘ர்’ அருகே ‘ஞ’ வந்தது .

9. ஆழ்ஞர்
இதில், ‘ழ்’ அருகே ‘ஞ’ வந்தது .

எழுத்துகளுக்கு மயக்கம் உண்டோ இல்லையோ நமக்கு மயக்கம் உண்டு !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Mar 03, 2015 7:38 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (347)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன்மரபில் அடுத்த நூற்பா –

“மெய்ந்நிலை சுட்டி  னெல்லா வெழுத்துந்
தம்முன் தாம்வரூஉம் ரழவலங் கடையே” (நூன். 30)

என்ன சொல்கிறார் தொல்காப்பியர் ?

எல்லா மெய்யெழுத்துகளுமே தனக்கு அருகே அதே மெய்யெழுத்தை வர அனுமதிக்கும் ! ஆனால் , ர் , ழ்  ஆகிய இரு மெய்கள் மட்டும் தம்மருகே அதே மெய்களை வர அனுமதியா !

இளம்பூரணரின் எடுத்துகாட்டுகளை வருமாறு நல்கலாம் ! –

      1.காக்கை
          இதில்,  ‘க்’ முன் ‘கை’ வந்தது. (க் , கை இரண்டும் ஒரே இனம்தான் ! )

      2. எங்ஙனம்
         இதில்,  ‘ங்’ முன் ‘ங’ வந்தது.

      3. எங்ஙனம்
        இதில்,  ‘ங்’ முன் ‘ங’ வந்தது.

      4. பச்சை
       இதில்,  ‘ச்’ முன் ‘சை’ வந்தது.

      5. மஞ்ஞை
        இதில்,  ‘ஞ்’ முன் ‘ஞை’ வந்தது.

      6. பட்டை
         இதில்,  ‘ட்’ முன் ‘டை’ வந்தது.

    7. மண்ணை
      இதில்,  ‘ண்’ முன் ‘ணை’ வந்தது.

    8. தத்தை
       இதில்,  ‘த்’ முன் ‘தை’ வந்தது.

   9. வெந்நோய்
      இதில்,  ‘ந்’ முன் ‘நோ’ வந்தது.

   10. அப்பை
      இதில்,  ‘ப்’ முன் ‘பை’ வந்தது.

    11. அம்மி
      இதில்,  ‘ம்’ முன் ‘மி’ வந்தது.

    12.வெய்யர்
         இதில்,  ‘ய்’ முன் ‘ய’ வந்தது.

     13. எல்லி
              இதில்,  ‘ல்’ முன் ‘லி’ வந்தது.

      14. எவ்வீ
            இதில்,  ‘வ்’ முன் ‘வீ’ வந்தது.

      15. கொள்ளி
           இதில்,  ‘ள்’ முன் ‘ளி’ வந்தது.

        16. கொற்றி
           இதில்,  ‘ற்’ முன் ‘றி’ வந்தது.

       17. கன்னி
             இதில்,  ‘ன்’ முன் ‘னி’ வந்தது.

இந்தப் பட்டியல் இன்றியமையாதது !

பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களைக் கையாளும்போது , ‘இப்படி வருமா? அப்படி வருமா?’ என்றெல்லாம் வினாக்கள் வரும்! அப்போதெல்லாம் இந்த விதியை நாடவேண்டிவரும் !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 06, 2015 8:13 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (348)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன்மரபில் அடுத்தது –

“அ இ உ  அம்மூன்றுஞ் சுட்டு” (நூன் . 31)

அஃதாவது-
குறில்களான  அ  ,  இ  , உ  மூன்றும் சுட்டு எழுத்துகள் எனப்படும் !

சுட்டு எழுத்துகள் எனில் வேறொன்றுமில்லை !  இப்போது ‘அதோ ’ என்று கூறி ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கிறோமல்லவா? இந்த ‘அதோ’ ஒரு சுட்டுதான் ! அந்தக் காலத்தில் ‘அ’ என்றாலே ‘அதோ அந்த’ என்ற சுட்டுப் பொருண்மை வந்துவிடும் !

நம்புவது கடினமாக உள்ளதா?

‘அவ்வீடு’ – என்கிறோம் ! ‘அந்த வீடு’ என்று சுட்டும் பொருள் வந்துள்ளதல்லவா? இதில் சுட்டுப் பொருளைத் தந்தது  எது ? ‘அ’  அல்லவா? இதனால்தான் ‘அ’ வைச் சுட்டெழுத்து என்கிறோம் !

அவ்வீடு  போல ‘இவ்வீடு’ !

‘இ’ ஒரு சுட்டெழுத்து என்பது தெளிவாகிறதல்லவா?

‘உ’ ?

இந்த உகரச் சுட்டு இலங்கைத் தமிழில் இன்றும் இருக்கிறது !

சங்க இலக்கியத்தில் வருகிறது உகரச் சுட்டு ! ; ‘உதுக்காண்’ என்று ஐங்குறுநூற்றில் வருகிறது !

திருக்குறளில் ‘உப்பக்கம்’ என வருகிறது ! இதிலுள்ள ‘உ’ ,சுட்டுதான் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 06, 2015 8:17 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (348)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன்மரபில் அடுத்தது –

“அ இ உ  அம்மூன்றுஞ் சுட்டு” (நூன் . 31)

அஃதாவது-
குறில்களான  அ  ,  இ  , உ  மூன்றும் சுட்டு எழுத்துகள் எனப்படும் !

சுட்டு எழுத்துகள் எனில் வேறொன்றுமில்லை !  இப்போது ‘அதோ ’ என்று கூறி ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கிறோமல்லவா? இந்த ‘அதோ’ ஒரு சுட்டுதான் ! அந்தக் காலத்தில் ‘அ’ என்றாலே ‘அதோ அந்த’ என்ற சுட்டுப் பொருண்மை வந்துவிடும் !

நம்புவது கடினமாக உள்ளதா?

‘அவ்வீடு’ – என்கிறோம் ! ‘அந்த வீடு’ என்று சுட்டும் பொருள் வந்துள்ளதல்லவா? இதில் சுட்டுப் பொருளைத் தந்தது  எது ? ‘அ’  அல்லவா? இதனால்தான் ‘அ’ வைச் சுட்டெழுத்து என்கிறோம் !

அவ்வீடு  போல ‘இவ்வீடு’ !

‘இ’ ஒரு சுட்டெழுத்து என்பது தெளிவாகிறதல்லவா?

‘உ’ ?

இந்த உகரச் சுட்டு இலங்கைத் தமிழில் இன்றும் இருக்கிறது !

சங்க இலக்கியத்தில் வருகிறது உகரச் சுட்டு ! ; ‘உதுக்காண்’ என்று ஐங்குறுநூற்றில் வருகிறது !

திருக்குறளில் ‘உப்பக்கம்’ என வருகிறது ! இதிலுள்ள ‘உ’ ,சுட்டுதான் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 06, 2015 8:17 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (348)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நூன்மரபில் அடுத்தது –

“அ இ உ  அம்மூன்றுஞ் சுட்டு” (நூன் . 31)

அஃதாவது-
குறில்களான  அ  ,  இ  , உ  மூன்றும் சுட்டு எழுத்துகள் எனப்படும் !

சுட்டு எழுத்துகள் எனில் வேறொன்றுமில்லை !  இப்போது ‘அதோ ’ என்று கூறி ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கிறோமல்லவா? இந்த ‘அதோ’ ஒரு சுட்டுதான் ! அந்தக் காலத்தில் ‘அ’ என்றாலே ‘அதோ அந்த’ என்ற சுட்டுப் பொருண்மை வந்துவிடும் !

நம்புவது கடினமாக உள்ளதா?

‘அவ்வீடு’ – என்கிறோம் ! ‘அந்த வீடு’ என்று சுட்டும் பொருள் வந்துள்ளதல்லவா? இதில் சுட்டுப் பொருளைத் தந்தது  எது ? ‘அ’  அல்லவா? இதனால்தான் ‘அ’ வைச் சுட்டெழுத்து என்கிறோம் !

அவ்வீடு  போல ‘இவ்வீடு’ !

‘இ’ ஒரு சுட்டெழுத்து என்பது தெளிவாகிறதல்லவா?

‘உ’ ?

இந்த உகரச் சுட்டு இலங்கைத் தமிழில் இன்றும் இருக்கிறது !

சங்க இலக்கியத்தில் வருகிறது உகரச் சுட்டு ! ; ‘உதுக்காண்’ என்று ஐங்குறுநூற்றில் வருகிறது !

திருக்குறளில் ‘உப்பக்கம்’ என வருகிறது ! இதிலுள்ள ‘உ’ ,சுட்டுதான் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 08, 2015 1:04 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (349)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அ , இ , உ – என்ற மூன்று சுட்டு எழுத்துகளைப் பார்த்தோம் !

அங்ஙனம் , இங்ஙனம்  , உங்ஙனம் என்ற மூன்று எடுத்துக்காட்டுகளைக் கூறியவர் இளம்பூரணர் !

அக்கொற்றன் , இக்கொற்றன்  , உக்கொற்றன் என்ற மூன்று எடுத்துக்காட்டுகளைக் கூறியவர்  நச்சினார்க்கினியர் !

இந்த 6 எடுத்துக்காட்டுகளிலும் வந்துள்ள சுட்டெழுத்துகளை ‘இடைச்சொல்’ என்பவர் நச்சர் !

அடுத்த நூற்பா ! –

“ஆஏஓ  அம்மூன்றும் வினா”

அஃதாவது-
சொற்களின் ஈற்றிலே ஆ , ஏ , ஓ  என்பன நின்று வினாப்பொருளை நல்கும் !

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் !-
1. உண்கா ?
உண்கா வந்தான் ? – என்ற தொடரில்தான் பொருள் நன்கு விளங்கும் !
உண்கா வந்தான் ? – உண்பதற்கா வந்தான் ?

‘ஆ’ ஈறு வினாப்பொருளில் வந்தது தொல்காப்பியர் காலத்தில் ! இப்போது இது வழக்கில் இல்லை ! தொல்காப்பியத்தின் பழமை இதனாலும் விளங்கும் !

2. உண்கே வந்தான் ?
உண்கே வந்தான்? – உண்பதற்கே வந்தான் ?

3. உண்கோ வந்தான் ?
உண்கோ வந்தான் ? – உண்ணுவதற்கோ வந்தான் ?

நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள் !-
1. நீயே
நீயே வந்தாய் ? – நீதானே வந்தாய் ?

2. நீயோ
நீயோ வந்தாய் ? – நீதானோ வந்தாய் ?

‘ஆ’ ஈறு இக்காலத்தில் வினாப்பொருளில் வருதலில்லை என்று நச்சினர்க்கினியர், தம் உரையில் தெளிவாக்கியதால் அதற்கு எடுத்துக்காட்டை   அவர் தரவில்லை !

ஆ , ஏ, ஓ -  ஈற்றில்  நிற்கும் இடைச் சொற்கள் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 09, 2015 12:41 am

இளம்பூரணர் மற்றும் நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள் அருமை ஐயா. மிக, மிக விளக்கமான நடை. மறுபடியும் தமிழையா வகுப்பில் அமர்ந்து விட்ட உணர்வு. நன்றி.



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 45 of 84 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 64 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக