புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 45 of 84 •
Page 45 of 84 • 1 ... 24 ... 44, 45, 46 ... 64 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (345)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்து நாம் காணப்போவது-
“ஞநமவ வென்னும் புள்ளி முன்னர்
யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே” (நூன் . 27)
‘ஞநமவ என்னும் புள்ளி முன்னர்’ – ஞ் , ந் , ம் ,வ் ஆகிய மெய்களை அடுத்து,
‘யஃகான் நிற்றல் மெய்பெற்றன்றே’ – யகரம் வருவது உண்மையாகும்தானே ?
இளம்பூரணர் காட்டுகளை வருமாறு அமைக்கலாம் !-
1. உரிஞ்யாது - ‘ஞ்’ அருகே ‘யா’ வந்தது .
2. பொருந்யாது - ‘ந்’ அருகே ‘யா’ வந்தது.
3. திரும்யாது - ‘ம்’ அருகே ‘யா’ வந்தது.
4. தெவ்யாது - ‘வ்’ அருகே ‘யா’ வந்தது.
இங்கே ஓர் ஐயம் !
கிளப்பியவர் நச்சினார்க்கினியர் !
தொல்காப்பியர் புணர்ச்சி இலக்கணம் தனியாக ஓதியுள்ளார் ! ஆகவே ‘மயக்கம்’ என்பதை ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் கொள்ளவேண்டும் ! இளம்பூரணர் எப்படி ‘உரிஞ் - யாது’ , ‘பொருந் - யாது’ என்று இருசொல் புணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம் ?
- இதுதான் நச்சர் வினா!
ஆனால் , இளம்பூரணர் காட்டியது மயக்கம்தானே தவிரப் புணர்ச்சிக்காண எடுத்துக்காட்டுகளை அல்ல !
தவிரவும் எந்த இடத்திலும் தொல்காப்பியர் ‘மயக்கம்’ என்பது ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் வரவேண்டும் எனக் கூறவில்லை !
எனவே இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளில் தவறேதும் இல்லை !
***
-------------------------------------------------------------------------------------------------
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்து நாம் காணப்போவது-
“ஞநமவ வென்னும் புள்ளி முன்னர்
யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே” (நூன் . 27)
‘ஞநமவ என்னும் புள்ளி முன்னர்’ – ஞ் , ந் , ம் ,வ் ஆகிய மெய்களை அடுத்து,
‘யஃகான் நிற்றல் மெய்பெற்றன்றே’ – யகரம் வருவது உண்மையாகும்தானே ?
இளம்பூரணர் காட்டுகளை வருமாறு அமைக்கலாம் !-
1. உரிஞ்யாது - ‘ஞ்’ அருகே ‘யா’ வந்தது .
2. பொருந்யாது - ‘ந்’ அருகே ‘யா’ வந்தது.
3. திரும்யாது - ‘ம்’ அருகே ‘யா’ வந்தது.
4. தெவ்யாது - ‘வ்’ அருகே ‘யா’ வந்தது.
இங்கே ஓர் ஐயம் !
கிளப்பியவர் நச்சினார்க்கினியர் !
தொல்காப்பியர் புணர்ச்சி இலக்கணம் தனியாக ஓதியுள்ளார் ! ஆகவே ‘மயக்கம்’ என்பதை ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் கொள்ளவேண்டும் ! இளம்பூரணர் எப்படி ‘உரிஞ் - யாது’ , ‘பொருந் - யாது’ என்று இருசொல் புணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம் ?
- இதுதான் நச்சர் வினா!
ஆனால் , இளம்பூரணர் காட்டியது மயக்கம்தானே தவிரப் புணர்ச்சிக்காண எடுத்துக்காட்டுகளை அல்ல !
தவிரவும் எந்த இடத்திலும் தொல்காப்பியர் ‘மயக்கம்’ என்பது ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் வரவேண்டும் எனக் கூறவில்லை !
எனவே இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளில் தவறேதும் இல்லை !
***
-------------------------------------------------------------------------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (345)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்து நாம் காணப்போவது-
“ஞநமவ வென்னும் புள்ளி முன்னர்
யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே” (நூன் . 27)
‘ஞநமவ என்னும் புள்ளி முன்னர்’ – ஞ் , ந் , ம் ,வ் ஆகிய மெய்களை அடுத்து,
‘யஃகான் நிற்றல் மெய்பெற்றன்றே’ – யகரம் வருவது உண்மையாகும்தானே ?
இளம்பூரணர் காட்டுகளை வருமாறு அமைக்கலாம் !-
1. உரிஞ்யாது - ‘ஞ்’ அருகே ‘யா’ வந்தது .
2. பொருந்யாது - ‘ந்’ அருகே ‘யா’ வந்தது.
3. திரும்யாது - ‘ம்’ அருகே ‘யா’ வந்தது.
4. தெவ்யாது - ‘வ்’ அருகே ‘யா’ வந்தது.
இங்கே ஓர் ஐயம் !
கிளப்பியவர் நச்சினார்க்கினியர் !
தொல்காப்பியர் புணர்ச்சி இலக்கணம் தனியாக ஓதியுள்ளார் ! ஆகவே ‘மயக்கம்’ என்பதை ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் கொள்ளவேண்டும் ! இளம்பூரணர் எப்படி ‘உரிஞ் - யாது’ , ‘பொருந் - யாது’ என்று இருசொல் புணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம் ?
- இதுதான் நச்சர் வினா!
ஆனால் , இளம்பூரணர் காட்டியது மயக்கம்தானே தவிரப் புணர்ச்சிக்காண எடுத்துக்காட்டுகளை அல்ல !
தவிரவும் எந்த இடத்திலும் தொல்காப்பியர் ‘மயக்கம்’ என்பது ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் வரவேண்டும் எனக் கூறவில்லை !
எனவே இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளில் தவறேதும் இல்லை !
***
-------------------------------------------------------------------------------------------------
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்து நாம் காணப்போவது-
“ஞநமவ வென்னும் புள்ளி முன்னர்
யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே” (நூன் . 27)
‘ஞநமவ என்னும் புள்ளி முன்னர்’ – ஞ் , ந் , ம் ,வ் ஆகிய மெய்களை அடுத்து,
‘யஃகான் நிற்றல் மெய்பெற்றன்றே’ – யகரம் வருவது உண்மையாகும்தானே ?
இளம்பூரணர் காட்டுகளை வருமாறு அமைக்கலாம் !-
1. உரிஞ்யாது - ‘ஞ்’ அருகே ‘யா’ வந்தது .
2. பொருந்யாது - ‘ந்’ அருகே ‘யா’ வந்தது.
3. திரும்யாது - ‘ம்’ அருகே ‘யா’ வந்தது.
4. தெவ்யாது - ‘வ்’ அருகே ‘யா’ வந்தது.
இங்கே ஓர் ஐயம் !
கிளப்பியவர் நச்சினார்க்கினியர் !
தொல்காப்பியர் புணர்ச்சி இலக்கணம் தனியாக ஓதியுள்ளார் ! ஆகவே ‘மயக்கம்’ என்பதை ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் கொள்ளவேண்டும் ! இளம்பூரணர் எப்படி ‘உரிஞ் - யாது’ , ‘பொருந் - யாது’ என்று இருசொல் புணர்ச்சிகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம் ?
- இதுதான் நச்சர் வினா!
ஆனால் , இளம்பூரணர் காட்டியது மயக்கம்தானே தவிரப் புணர்ச்சிக்காண எடுத்துக்காட்டுகளை அல்ல !
தவிரவும் எந்த இடத்திலும் தொல்காப்பியர் ‘மயக்கம்’ என்பது ஒரு தனிச் சொல்லுக்குள்ளேதான் வரவேண்டும் எனக் கூறவில்லை !
எனவே இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளில் தவறேதும் இல்லை !
***
-------------------------------------------------------------------------------------------------
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
நன்றி செந்தமிழன் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (346)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில், எழுத்துகள் அடுத்தடுத்து வருவதற்கான மயக்க விதிகளைப் பார்த்துவருகிறோம் !
இப்போது –
“மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் ” (நூன் . 28)
அஃதாவது, ‘ம்’ முன்பாக வகரம் தோன்றும் !
எடுத்துக்காட்டுகள் –
1. நிலம் வலிது : இதில் ‘ம்’ முன்பாக ‘வ’ வந்துள்ளது.
இதனை அடுத்துத் தொல்காப்பியர் –
“யரழ வென்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்” (நூன். 29)
‘யரழ வென்னும் புள்ளி முன்னர்’ – ய் , ர் , ழ் ஆகிய மூன்று மெய்களின் முன்னே,
‘முதலாகு எழுத்து ஙகரமொடு தோன்றும்’ – சொல்லுக்கு முதலில் வரக்கூடிய ஒன்பது உயிர்மெய் எழுத்துகளும் , ‘ங’ வும் வரும் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு குறிக்கலாம் ! –
1. வேய்கடிது
இதில் , ‘ய்’ முன்பு ‘க’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
2. வேர்கடிது
இதில் , ‘ர்’ முன்பு ‘க’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
3. வீழ்கடிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘க’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
4. வேய்சிறிது
இதில் , ‘ய்’ முன்பு ‘சி’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
5. வேர்சிறிது
இதில் , ‘ர்’ முன்பு ‘சி’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
6. வீழ்சிறிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘சி’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
7. வேய்தீது
இதில் , ‘ய்’ முன்பு ‘தீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
8. வேர்தீது
இதில் , ‘ர்’ முன்பு ‘தீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
9. வீழ்தீது
இதில் , ‘ழ்’ முன்பு ‘தீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
10. வேய்பெரிது
இதில் , ‘ய்’ முன்பு ‘பெ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
11. வேர்பெரிது
இதில் , ‘ர்’ முன்பு ‘பெ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
12. வீழ்பெரிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘பெ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
13. வேய்ஞான்றது
இதில் , ‘ய்’ முன்பு ‘ஞா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
14. வேர்ஞான்றது
இதில் , ‘ர்’ முன்பு ‘ஞா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
15. வீழ்ஞான்றது
இதில் , ‘ழ்’ முன்பு ‘ஞா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
16. வேய்நீண்டது
இதில் , ‘ய்’ முன்பு ‘நீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
17. வேர்நீண்டது
இதில் , ‘ர்’ முன்பு ‘நீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
18. வீழ்நீண்டது
இதில் , ‘ழ்’ முன்பு ‘நீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
19. வேய்மாண்டது
இதில் , ‘ய்’ முன்பு ‘மா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
20. வேர்மாண்டது
இதில் , ’ர்’ முன்பு ‘மா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
21. வீழ்மாண்டது
இதில் , ‘ழ்’ முன்பு ‘மா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
22. வேய்+யாது = வேயாது
இதில் , ‘ய்’ முன்பு ‘யா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
23. வேர்யாது
இதில் , ‘ர்’ முன்பு ‘யா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
24. வீழ்யாது
இதில் , ‘ழ்’ முன்பு ‘யா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
25. வேய்வலிது
இதில் , ‘ய்’ முன்பு ‘வ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
26. வேர்வலிது
இதில் , ‘ர்’ முன்பு ‘வ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
27. வீழ்வலிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘வ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
28. வேய்ஙனம்
இதில் , ‘ய்’ முன்பு ‘ங’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
29. வேர்ஙனம்
இதில் , ‘ர்’ முன்பு ‘ங’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
30. வீழ்ஙனம்
இதில் , ‘ழ்’ முன்பு ‘ங’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
இவற்றில் ‘வேய்ஙனம்’, ‘வேர்ஙனம்’ , ‘வீழ்ஙனம்’ என்ற எடுத்துக்காட்டுகளை நச்சர் , ‘வேய்ங்ஙனம்’, ‘வேர்ங்ஙனம்’ , ‘வீழ்ங்ஙனம்’ என்றே காட்டுகிறார் !
எடுத்துக்காட்டிவிட்டு , இவையெல்லாம் ‘வேர் + ஙனம்’ என்பதுபோன்று புணர்ந்து வந்தவையல்ல ; இவை அக்காலத்தில் மரபுவழியாக முழுச் சொற்களாக வந்தவையே என்கிறார் !
மேலும் நச்சர், மேலே இளம்பூரணர் காட்டிய சான்றுகளை (1 - 27) ஒத்துக்கொள்ளவில்லை !
ஏன் ?
அவை, ஒரு சொல்லுக்குள்ளே வராத மயக்கம் பற்றியவை என்கிறார் !
ஒத்துக்கொள்ளாமல் , ஒரு சொல்லுக்குள்ளே அடங்கும் மயக்கங்களை வருமாறு
தருகிறார் !-
1. ஆய்க
இதில், ‘ய்’ அருகே ‘க’ வந்தது .
2. ஆர்க
இதில், ‘ர்’ அருகே ‘க’ வந்தது .
3. ஆழ்க
இதில், ‘ழ்’ அருகே ‘க’ வந்தது .
4. ஆய்தல்
இதில், ‘ய்’ அருகே ‘த’ வந்தது .
5. ஆர்தல்
இதில், ‘ர்’ அருகே ‘த’ வந்தது .
6. ஆழ்தல்
இதில், ‘ழ்’ அருகே ‘த’ வந்தது .
7. ஆய்நர்
இதில், ‘ய்’ அருகே ‘ந’ வந்தது .
8. ஆர்நர்
இதில், ‘ர்’ அருகே ‘ந’ வந்தது .
9. ஆழ்நர்
இதில், ‘ழ்’ அருகே ‘ந’ வந்தது .
10. ஆய்பவை
இதில், ‘ய்’ அருகே ‘ப’ வந்தது .
11. ஆர்பவை
இதில், ‘ர்’ அருகே ‘ப’ வந்தது .
12. ஆழ்பவை
இதில், ‘ழ்’ அருகே ‘ப’ வந்தது .
13. வாய்மை
இதில், ‘ய்’ அருகே ‘மை’ வந்தது .
14. நேர்மை
இதில், ‘ர்’ அருகே ‘மை’ வந்தது .
15. கீழ்மை
இதில், ‘ழ்’ அருகே ‘மை’ வந்தது .
16. எய்சிலை
இதில், ‘ய்’ அருகே ‘சி’ வந்தது .
17. வார்சிலை
இதில், ‘ர்’ அருகே ‘சி’ வந்தது .
18. வாழ்சேரி
இதில், ‘ழ்’ அருகே ‘சே’ வந்தது .
19. தெய்வம்
இதில், ‘ய்’ அருகே ‘வ’ வந்தது .
20. சேர்வது
இதில், ‘ர்’ அருகே ‘வ’ வந்தது .
21. வாழ்வது
இதில், ‘ழ்’ அருகே ‘வ’ வந்தது .
22. பாய்ஞெகிழி
இதில், ‘ய்’ அருகே ‘ஞெ’ வந்தது .
23. நேர்ஞெகிழி
இதில், ‘ர்’ அருகே ‘ஞெ’ வந்தது .
24. வாழ்ஞெண்டு
இதில், ‘ழ்’ அருகே ‘ஞெ’ வந்தது .
25. செய்யாறு
இதில், ‘ய்’ அருகே ‘யா’ வந்தது .
26. பேர்யானை
இதில், ‘ர்’ அருகே ‘யா’ வந்தது .
27. வீழ்யானை
இதில், ‘ழ்’ அருகே ‘யா’ வந்தது .
நச்சர் மேலே கூறிய எடுத்துக்காட்டுகளில் (1 - 27) மொழிக்கு முதலாக வரும் எழுத்துகள் – க , த , ந , ப , ம , சி , வ , ஞெ , யா என்ற ஒன்பது !
மேலும் மொழிக்கு முதல் ஆகாத வு , வோ , ஞ ஆகிய எழுத்துகளோடும் ய் , ர் , ழ் ஆகிய மூன்று எழுத்துகளும் மயங்குதல் உண்டு என்று காட்டுகிறார் ! அவை –
1. ஓய்வு
இதில், ‘ய்’ அருகே ‘வு’ வந்தது .
2. சோர்வு
இதில், ‘ர்’ அருகே ‘வு’ வந்தது .
3. வாழ்வு
இதில், ‘ழ்’ அருகே ‘வு’ வந்தது .
4. ஓய்வோர்
இதில், ‘ய்’ அருகே ‘வோ’ வந்தது .
5. சோர்வோர்
இதில், ‘ர்’ அருகே ‘வோ’ வந்தது .
6. வாழ்வோர்
இதில், ‘ழ்’ அருகே ‘வோ’ வந்தது .
7. ஆய்ஞர்
இதில், ‘ய்’ அருகே ‘ஞ’ வந்தது .
8. சேர்ஞர்
இதில், ‘ர்’ அருகே ‘ஞ’ வந்தது .
9. ஆழ்ஞர்
இதில், ‘ழ்’ அருகே ‘ஞ’ வந்தது .
எழுத்துகளுக்கு மயக்கம் உண்டோ இல்லையோ நமக்கு மயக்கம் உண்டு !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில், எழுத்துகள் அடுத்தடுத்து வருவதற்கான மயக்க விதிகளைப் பார்த்துவருகிறோம் !
இப்போது –
“மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் ” (நூன் . 28)
அஃதாவது, ‘ம்’ முன்பாக வகரம் தோன்றும் !
எடுத்துக்காட்டுகள் –
1. நிலம் வலிது : இதில் ‘ம்’ முன்பாக ‘வ’ வந்துள்ளது.
இதனை அடுத்துத் தொல்காப்பியர் –
“யரழ வென்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்” (நூன். 29)
‘யரழ வென்னும் புள்ளி முன்னர்’ – ய் , ர் , ழ் ஆகிய மூன்று மெய்களின் முன்னே,
‘முதலாகு எழுத்து ஙகரமொடு தோன்றும்’ – சொல்லுக்கு முதலில் வரக்கூடிய ஒன்பது உயிர்மெய் எழுத்துகளும் , ‘ங’ வும் வரும் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டுகளை வருமாறு குறிக்கலாம் ! –
1. வேய்கடிது
இதில் , ‘ய்’ முன்பு ‘க’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
2. வேர்கடிது
இதில் , ‘ர்’ முன்பு ‘க’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
3. வீழ்கடிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘க’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
4. வேய்சிறிது
இதில் , ‘ய்’ முன்பு ‘சி’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
5. வேர்சிறிது
இதில் , ‘ர்’ முன்பு ‘சி’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
6. வீழ்சிறிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘சி’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
7. வேய்தீது
இதில் , ‘ய்’ முன்பு ‘தீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
8. வேர்தீது
இதில் , ‘ர்’ முன்பு ‘தீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
9. வீழ்தீது
இதில் , ‘ழ்’ முன்பு ‘தீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
10. வேய்பெரிது
இதில் , ‘ய்’ முன்பு ‘பெ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
11. வேர்பெரிது
இதில் , ‘ர்’ முன்பு ‘பெ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
12. வீழ்பெரிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘பெ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
13. வேய்ஞான்றது
இதில் , ‘ய்’ முன்பு ‘ஞா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
14. வேர்ஞான்றது
இதில் , ‘ர்’ முன்பு ‘ஞா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
15. வீழ்ஞான்றது
இதில் , ‘ழ்’ முன்பு ‘ஞா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
16. வேய்நீண்டது
இதில் , ‘ய்’ முன்பு ‘நீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
17. வேர்நீண்டது
இதில் , ‘ர்’ முன்பு ‘நீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
18. வீழ்நீண்டது
இதில் , ‘ழ்’ முன்பு ‘நீ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
19. வேய்மாண்டது
இதில் , ‘ய்’ முன்பு ‘மா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
20. வேர்மாண்டது
இதில் , ’ர்’ முன்பு ‘மா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
21. வீழ்மாண்டது
இதில் , ‘ழ்’ முன்பு ‘மா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
22. வேய்+யாது = வேயாது
இதில் , ‘ய்’ முன்பு ‘யா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
23. வேர்யாது
இதில் , ‘ர்’ முன்பு ‘யா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
24. வீழ்யாது
இதில் , ‘ழ்’ முன்பு ‘யா’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
25. வேய்வலிது
இதில் , ‘ய்’ முன்பு ‘வ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
26. வேர்வலிது
இதில் , ‘ர்’ முன்பு ‘வ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
27. வீழ்வலிது
இதில் , ‘ழ்’ முன்பு ‘வ’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
28. வேய்ஙனம்
இதில் , ‘ய்’ முன்பு ‘ங’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
29. வேர்ஙனம்
இதில் , ‘ர்’ முன்பு ‘ங’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
30. வீழ்ஙனம்
இதில் , ‘ழ்’ முன்பு ‘ங’ வந்துள்ளது ; (அல்வழிப் புணர்ச்சி)
இவற்றில் ‘வேய்ஙனம்’, ‘வேர்ஙனம்’ , ‘வீழ்ஙனம்’ என்ற எடுத்துக்காட்டுகளை நச்சர் , ‘வேய்ங்ஙனம்’, ‘வேர்ங்ஙனம்’ , ‘வீழ்ங்ஙனம்’ என்றே காட்டுகிறார் !
எடுத்துக்காட்டிவிட்டு , இவையெல்லாம் ‘வேர் + ஙனம்’ என்பதுபோன்று புணர்ந்து வந்தவையல்ல ; இவை அக்காலத்தில் மரபுவழியாக முழுச் சொற்களாக வந்தவையே என்கிறார் !
மேலும் நச்சர், மேலே இளம்பூரணர் காட்டிய சான்றுகளை (1 - 27) ஒத்துக்கொள்ளவில்லை !
ஏன் ?
அவை, ஒரு சொல்லுக்குள்ளே வராத மயக்கம் பற்றியவை என்கிறார் !
ஒத்துக்கொள்ளாமல் , ஒரு சொல்லுக்குள்ளே அடங்கும் மயக்கங்களை வருமாறு
தருகிறார் !-
1. ஆய்க
இதில், ‘ய்’ அருகே ‘க’ வந்தது .
2. ஆர்க
இதில், ‘ர்’ அருகே ‘க’ வந்தது .
3. ஆழ்க
இதில், ‘ழ்’ அருகே ‘க’ வந்தது .
4. ஆய்தல்
இதில், ‘ய்’ அருகே ‘த’ வந்தது .
5. ஆர்தல்
இதில், ‘ர்’ அருகே ‘த’ வந்தது .
6. ஆழ்தல்
இதில், ‘ழ்’ அருகே ‘த’ வந்தது .
7. ஆய்நர்
இதில், ‘ய்’ அருகே ‘ந’ வந்தது .
8. ஆர்நர்
இதில், ‘ர்’ அருகே ‘ந’ வந்தது .
9. ஆழ்நர்
இதில், ‘ழ்’ அருகே ‘ந’ வந்தது .
10. ஆய்பவை
இதில், ‘ய்’ அருகே ‘ப’ வந்தது .
11. ஆர்பவை
இதில், ‘ர்’ அருகே ‘ப’ வந்தது .
12. ஆழ்பவை
இதில், ‘ழ்’ அருகே ‘ப’ வந்தது .
13. வாய்மை
இதில், ‘ய்’ அருகே ‘மை’ வந்தது .
14. நேர்மை
இதில், ‘ர்’ அருகே ‘மை’ வந்தது .
15. கீழ்மை
இதில், ‘ழ்’ அருகே ‘மை’ வந்தது .
16. எய்சிலை
இதில், ‘ய்’ அருகே ‘சி’ வந்தது .
17. வார்சிலை
இதில், ‘ர்’ அருகே ‘சி’ வந்தது .
18. வாழ்சேரி
இதில், ‘ழ்’ அருகே ‘சே’ வந்தது .
19. தெய்வம்
இதில், ‘ய்’ அருகே ‘வ’ வந்தது .
20. சேர்வது
இதில், ‘ர்’ அருகே ‘வ’ வந்தது .
21. வாழ்வது
இதில், ‘ழ்’ அருகே ‘வ’ வந்தது .
22. பாய்ஞெகிழி
இதில், ‘ய்’ அருகே ‘ஞெ’ வந்தது .
23. நேர்ஞெகிழி
இதில், ‘ர்’ அருகே ‘ஞெ’ வந்தது .
24. வாழ்ஞெண்டு
இதில், ‘ழ்’ அருகே ‘ஞெ’ வந்தது .
25. செய்யாறு
இதில், ‘ய்’ அருகே ‘யா’ வந்தது .
26. பேர்யானை
இதில், ‘ர்’ அருகே ‘யா’ வந்தது .
27. வீழ்யானை
இதில், ‘ழ்’ அருகே ‘யா’ வந்தது .
நச்சர் மேலே கூறிய எடுத்துக்காட்டுகளில் (1 - 27) மொழிக்கு முதலாக வரும் எழுத்துகள் – க , த , ந , ப , ம , சி , வ , ஞெ , யா என்ற ஒன்பது !
மேலும் மொழிக்கு முதல் ஆகாத வு , வோ , ஞ ஆகிய எழுத்துகளோடும் ய் , ர் , ழ் ஆகிய மூன்று எழுத்துகளும் மயங்குதல் உண்டு என்று காட்டுகிறார் ! அவை –
1. ஓய்வு
இதில், ‘ய்’ அருகே ‘வு’ வந்தது .
2. சோர்வு
இதில், ‘ர்’ அருகே ‘வு’ வந்தது .
3. வாழ்வு
இதில், ‘ழ்’ அருகே ‘வு’ வந்தது .
4. ஓய்வோர்
இதில், ‘ய்’ அருகே ‘வோ’ வந்தது .
5. சோர்வோர்
இதில், ‘ர்’ அருகே ‘வோ’ வந்தது .
6. வாழ்வோர்
இதில், ‘ழ்’ அருகே ‘வோ’ வந்தது .
7. ஆய்ஞர்
இதில், ‘ய்’ அருகே ‘ஞ’ வந்தது .
8. சேர்ஞர்
இதில், ‘ர்’ அருகே ‘ஞ’ வந்தது .
9. ஆழ்ஞர்
இதில், ‘ழ்’ அருகே ‘ஞ’ வந்தது .
எழுத்துகளுக்கு மயக்கம் உண்டோ இல்லையோ நமக்கு மயக்கம் உண்டு !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (347)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்த நூற்பா –
“மெய்ந்நிலை சுட்டி னெல்லா வெழுத்துந்
தம்முன் தாம்வரூஉம் ரழவலங் கடையே” (நூன். 30)
என்ன சொல்கிறார் தொல்காப்பியர் ?
எல்லா மெய்யெழுத்துகளுமே தனக்கு அருகே அதே மெய்யெழுத்தை வர அனுமதிக்கும் ! ஆனால் , ர் , ழ் ஆகிய இரு மெய்கள் மட்டும் தம்மருகே அதே மெய்களை வர அனுமதியா !
இளம்பூரணரின் எடுத்துகாட்டுகளை வருமாறு நல்கலாம் ! –
1.காக்கை
இதில், ‘க்’ முன் ‘கை’ வந்தது. (க் , கை இரண்டும் ஒரே இனம்தான் ! )
2. எங்ஙனம்
இதில், ‘ங்’ முன் ‘ங’ வந்தது.
3. எங்ஙனம்
இதில், ‘ங்’ முன் ‘ங’ வந்தது.
4. பச்சை
இதில், ‘ச்’ முன் ‘சை’ வந்தது.
5. மஞ்ஞை
இதில், ‘ஞ்’ முன் ‘ஞை’ வந்தது.
6. பட்டை
இதில், ‘ட்’ முன் ‘டை’ வந்தது.
7. மண்ணை
இதில், ‘ண்’ முன் ‘ணை’ வந்தது.
8. தத்தை
இதில், ‘த்’ முன் ‘தை’ வந்தது.
9. வெந்நோய்
இதில், ‘ந்’ முன் ‘நோ’ வந்தது.
10. அப்பை
இதில், ‘ப்’ முன் ‘பை’ வந்தது.
11. அம்மி
இதில், ‘ம்’ முன் ‘மி’ வந்தது.
12.வெய்யர்
இதில், ‘ய்’ முன் ‘ய’ வந்தது.
13. எல்லி
இதில், ‘ல்’ முன் ‘லி’ வந்தது.
14. எவ்வீ
இதில், ‘வ்’ முன் ‘வீ’ வந்தது.
15. கொள்ளி
இதில், ‘ள்’ முன் ‘ளி’ வந்தது.
16. கொற்றி
இதில், ‘ற்’ முன் ‘றி’ வந்தது.
17. கன்னி
இதில், ‘ன்’ முன் ‘னி’ வந்தது.
இந்தப் பட்டியல் இன்றியமையாதது !
பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களைக் கையாளும்போது , ‘இப்படி வருமா? அப்படி வருமா?’ என்றெல்லாம் வினாக்கள் வரும்! அப்போதெல்லாம் இந்த விதியை நாடவேண்டிவரும் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்த நூற்பா –
“மெய்ந்நிலை சுட்டி னெல்லா வெழுத்துந்
தம்முன் தாம்வரூஉம் ரழவலங் கடையே” (நூன். 30)
என்ன சொல்கிறார் தொல்காப்பியர் ?
எல்லா மெய்யெழுத்துகளுமே தனக்கு அருகே அதே மெய்யெழுத்தை வர அனுமதிக்கும் ! ஆனால் , ர் , ழ் ஆகிய இரு மெய்கள் மட்டும் தம்மருகே அதே மெய்களை வர அனுமதியா !
இளம்பூரணரின் எடுத்துகாட்டுகளை வருமாறு நல்கலாம் ! –
1.காக்கை
இதில், ‘க்’ முன் ‘கை’ வந்தது. (க் , கை இரண்டும் ஒரே இனம்தான் ! )
2. எங்ஙனம்
இதில், ‘ங்’ முன் ‘ங’ வந்தது.
3. எங்ஙனம்
இதில், ‘ங்’ முன் ‘ங’ வந்தது.
4. பச்சை
இதில், ‘ச்’ முன் ‘சை’ வந்தது.
5. மஞ்ஞை
இதில், ‘ஞ்’ முன் ‘ஞை’ வந்தது.
6. பட்டை
இதில், ‘ட்’ முன் ‘டை’ வந்தது.
7. மண்ணை
இதில், ‘ண்’ முன் ‘ணை’ வந்தது.
8. தத்தை
இதில், ‘த்’ முன் ‘தை’ வந்தது.
9. வெந்நோய்
இதில், ‘ந்’ முன் ‘நோ’ வந்தது.
10. அப்பை
இதில், ‘ப்’ முன் ‘பை’ வந்தது.
11. அம்மி
இதில், ‘ம்’ முன் ‘மி’ வந்தது.
12.வெய்யர்
இதில், ‘ய்’ முன் ‘ய’ வந்தது.
13. எல்லி
இதில், ‘ல்’ முன் ‘லி’ வந்தது.
14. எவ்வீ
இதில், ‘வ்’ முன் ‘வீ’ வந்தது.
15. கொள்ளி
இதில், ‘ள்’ முன் ‘ளி’ வந்தது.
16. கொற்றி
இதில், ‘ற்’ முன் ‘றி’ வந்தது.
17. கன்னி
இதில், ‘ன்’ முன் ‘னி’ வந்தது.
இந்தப் பட்டியல் இன்றியமையாதது !
பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களைக் கையாளும்போது , ‘இப்படி வருமா? அப்படி வருமா?’ என்றெல்லாம் வினாக்கள் வரும்! அப்போதெல்லாம் இந்த விதியை நாடவேண்டிவரும் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (348)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்தது –
“அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு” (நூன் . 31)
அஃதாவது-
குறில்களான அ , இ , உ மூன்றும் சுட்டு எழுத்துகள் எனப்படும் !
சுட்டு எழுத்துகள் எனில் வேறொன்றுமில்லை ! இப்போது ‘அதோ ’ என்று கூறி ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கிறோமல்லவா? இந்த ‘அதோ’ ஒரு சுட்டுதான் ! அந்தக் காலத்தில் ‘அ’ என்றாலே ‘அதோ அந்த’ என்ற சுட்டுப் பொருண்மை வந்துவிடும் !
நம்புவது கடினமாக உள்ளதா?
‘அவ்வீடு’ – என்கிறோம் ! ‘அந்த வீடு’ என்று சுட்டும் பொருள் வந்துள்ளதல்லவா? இதில் சுட்டுப் பொருளைத் தந்தது எது ? ‘அ’ அல்லவா? இதனால்தான் ‘அ’ வைச் சுட்டெழுத்து என்கிறோம் !
அவ்வீடு போல ‘இவ்வீடு’ !
‘இ’ ஒரு சுட்டெழுத்து என்பது தெளிவாகிறதல்லவா?
‘உ’ ?
இந்த உகரச் சுட்டு இலங்கைத் தமிழில் இன்றும் இருக்கிறது !
சங்க இலக்கியத்தில் வருகிறது உகரச் சுட்டு ! ; ‘உதுக்காண்’ என்று ஐங்குறுநூற்றில் வருகிறது !
திருக்குறளில் ‘உப்பக்கம்’ என வருகிறது ! இதிலுள்ள ‘உ’ ,சுட்டுதான் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்தது –
“அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு” (நூன் . 31)
அஃதாவது-
குறில்களான அ , இ , உ மூன்றும் சுட்டு எழுத்துகள் எனப்படும் !
சுட்டு எழுத்துகள் எனில் வேறொன்றுமில்லை ! இப்போது ‘அதோ ’ என்று கூறி ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கிறோமல்லவா? இந்த ‘அதோ’ ஒரு சுட்டுதான் ! அந்தக் காலத்தில் ‘அ’ என்றாலே ‘அதோ அந்த’ என்ற சுட்டுப் பொருண்மை வந்துவிடும் !
நம்புவது கடினமாக உள்ளதா?
‘அவ்வீடு’ – என்கிறோம் ! ‘அந்த வீடு’ என்று சுட்டும் பொருள் வந்துள்ளதல்லவா? இதில் சுட்டுப் பொருளைத் தந்தது எது ? ‘அ’ அல்லவா? இதனால்தான் ‘அ’ வைச் சுட்டெழுத்து என்கிறோம் !
அவ்வீடு போல ‘இவ்வீடு’ !
‘இ’ ஒரு சுட்டெழுத்து என்பது தெளிவாகிறதல்லவா?
‘உ’ ?
இந்த உகரச் சுட்டு இலங்கைத் தமிழில் இன்றும் இருக்கிறது !
சங்க இலக்கியத்தில் வருகிறது உகரச் சுட்டு ! ; ‘உதுக்காண்’ என்று ஐங்குறுநூற்றில் வருகிறது !
திருக்குறளில் ‘உப்பக்கம்’ என வருகிறது ! இதிலுள்ள ‘உ’ ,சுட்டுதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (348)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்தது –
“அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு” (நூன் . 31)
அஃதாவது-
குறில்களான அ , இ , உ மூன்றும் சுட்டு எழுத்துகள் எனப்படும் !
சுட்டு எழுத்துகள் எனில் வேறொன்றுமில்லை ! இப்போது ‘அதோ ’ என்று கூறி ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கிறோமல்லவா? இந்த ‘அதோ’ ஒரு சுட்டுதான் ! அந்தக் காலத்தில் ‘அ’ என்றாலே ‘அதோ அந்த’ என்ற சுட்டுப் பொருண்மை வந்துவிடும் !
நம்புவது கடினமாக உள்ளதா?
‘அவ்வீடு’ – என்கிறோம் ! ‘அந்த வீடு’ என்று சுட்டும் பொருள் வந்துள்ளதல்லவா? இதில் சுட்டுப் பொருளைத் தந்தது எது ? ‘அ’ அல்லவா? இதனால்தான் ‘அ’ வைச் சுட்டெழுத்து என்கிறோம் !
அவ்வீடு போல ‘இவ்வீடு’ !
‘இ’ ஒரு சுட்டெழுத்து என்பது தெளிவாகிறதல்லவா?
‘உ’ ?
இந்த உகரச் சுட்டு இலங்கைத் தமிழில் இன்றும் இருக்கிறது !
சங்க இலக்கியத்தில் வருகிறது உகரச் சுட்டு ! ; ‘உதுக்காண்’ என்று ஐங்குறுநூற்றில் வருகிறது !
திருக்குறளில் ‘உப்பக்கம்’ என வருகிறது ! இதிலுள்ள ‘உ’ ,சுட்டுதான் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்தது –
“அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு” (நூன் . 31)
அஃதாவது-
குறில்களான அ , இ , உ மூன்றும் சுட்டு எழுத்துகள் எனப்படும் !
சுட்டு எழுத்துகள் எனில் வேறொன்றுமில்லை ! இப்போது ‘அதோ ’ என்று கூறி ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கிறோமல்லவா? இந்த ‘அதோ’ ஒரு சுட்டுதான் ! அந்தக் காலத்தில் ‘அ’ என்றாலே ‘அதோ அந்த’ என்ற சுட்டுப் பொருண்மை வந்துவிடும் !
நம்புவது கடினமாக உள்ளதா?
‘அவ்வீடு’ – என்கிறோம் ! ‘அந்த வீடு’ என்று சுட்டும் பொருள் வந்துள்ளதல்லவா? இதில் சுட்டுப் பொருளைத் தந்தது எது ? ‘அ’ அல்லவா? இதனால்தான் ‘அ’ வைச் சுட்டெழுத்து என்கிறோம் !
அவ்வீடு போல ‘இவ்வீடு’ !
‘இ’ ஒரு சுட்டெழுத்து என்பது தெளிவாகிறதல்லவா?
‘உ’ ?
இந்த உகரச் சுட்டு இலங்கைத் தமிழில் இன்றும் இருக்கிறது !
சங்க இலக்கியத்தில் வருகிறது உகரச் சுட்டு ! ; ‘உதுக்காண்’ என்று ஐங்குறுநூற்றில் வருகிறது !
திருக்குறளில் ‘உப்பக்கம்’ என வருகிறது ! இதிலுள்ள ‘உ’ ,சுட்டுதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (348)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்தது –
“அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு” (நூன் . 31)
அஃதாவது-
குறில்களான அ , இ , உ மூன்றும் சுட்டு எழுத்துகள் எனப்படும் !
சுட்டு எழுத்துகள் எனில் வேறொன்றுமில்லை ! இப்போது ‘அதோ ’ என்று கூறி ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கிறோமல்லவா? இந்த ‘அதோ’ ஒரு சுட்டுதான் ! அந்தக் காலத்தில் ‘அ’ என்றாலே ‘அதோ அந்த’ என்ற சுட்டுப் பொருண்மை வந்துவிடும் !
நம்புவது கடினமாக உள்ளதா?
‘அவ்வீடு’ – என்கிறோம் ! ‘அந்த வீடு’ என்று சுட்டும் பொருள் வந்துள்ளதல்லவா? இதில் சுட்டுப் பொருளைத் தந்தது எது ? ‘அ’ அல்லவா? இதனால்தான் ‘அ’ வைச் சுட்டெழுத்து என்கிறோம் !
அவ்வீடு போல ‘இவ்வீடு’ !
‘இ’ ஒரு சுட்டெழுத்து என்பது தெளிவாகிறதல்லவா?
‘உ’ ?
இந்த உகரச் சுட்டு இலங்கைத் தமிழில் இன்றும் இருக்கிறது !
சங்க இலக்கியத்தில் வருகிறது உகரச் சுட்டு ! ; ‘உதுக்காண்’ என்று ஐங்குறுநூற்றில் வருகிறது !
திருக்குறளில் ‘உப்பக்கம்’ என வருகிறது ! இதிலுள்ள ‘உ’ ,சுட்டுதான் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நூன்மரபில் அடுத்தது –
“அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு” (நூன் . 31)
அஃதாவது-
குறில்களான அ , இ , உ மூன்றும் சுட்டு எழுத்துகள் எனப்படும் !
சுட்டு எழுத்துகள் எனில் வேறொன்றுமில்லை ! இப்போது ‘அதோ ’ என்று கூறி ஒரு பொருளைச் சுட்டிக் காண்பிக்கிறோமல்லவா? இந்த ‘அதோ’ ஒரு சுட்டுதான் ! அந்தக் காலத்தில் ‘அ’ என்றாலே ‘அதோ அந்த’ என்ற சுட்டுப் பொருண்மை வந்துவிடும் !
நம்புவது கடினமாக உள்ளதா?
‘அவ்வீடு’ – என்கிறோம் ! ‘அந்த வீடு’ என்று சுட்டும் பொருள் வந்துள்ளதல்லவா? இதில் சுட்டுப் பொருளைத் தந்தது எது ? ‘அ’ அல்லவா? இதனால்தான் ‘அ’ வைச் சுட்டெழுத்து என்கிறோம் !
அவ்வீடு போல ‘இவ்வீடு’ !
‘இ’ ஒரு சுட்டெழுத்து என்பது தெளிவாகிறதல்லவா?
‘உ’ ?
இந்த உகரச் சுட்டு இலங்கைத் தமிழில் இன்றும் இருக்கிறது !
சங்க இலக்கியத்தில் வருகிறது உகரச் சுட்டு ! ; ‘உதுக்காண்’ என்று ஐங்குறுநூற்றில் வருகிறது !
திருக்குறளில் ‘உப்பக்கம்’ என வருகிறது ! இதிலுள்ள ‘உ’ ,சுட்டுதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (349)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அ , இ , உ – என்ற மூன்று சுட்டு எழுத்துகளைப் பார்த்தோம் !
அங்ஙனம் , இங்ஙனம் , உங்ஙனம் என்ற மூன்று எடுத்துக்காட்டுகளைக் கூறியவர் இளம்பூரணர் !
அக்கொற்றன் , இக்கொற்றன் , உக்கொற்றன் என்ற மூன்று எடுத்துக்காட்டுகளைக் கூறியவர் நச்சினார்க்கினியர் !
இந்த 6 எடுத்துக்காட்டுகளிலும் வந்துள்ள சுட்டெழுத்துகளை ‘இடைச்சொல்’ என்பவர் நச்சர் !
அடுத்த நூற்பா ! –
“ஆஏஓ அம்மூன்றும் வினா”
அஃதாவது-
சொற்களின் ஈற்றிலே ஆ , ஏ , ஓ என்பன நின்று வினாப்பொருளை நல்கும் !
இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் !-
1. உண்கா ?
உண்கா வந்தான் ? – என்ற தொடரில்தான் பொருள் நன்கு விளங்கும் !
உண்கா வந்தான் ? – உண்பதற்கா வந்தான் ?
‘ஆ’ ஈறு வினாப்பொருளில் வந்தது தொல்காப்பியர் காலத்தில் ! இப்போது இது வழக்கில் இல்லை ! தொல்காப்பியத்தின் பழமை இதனாலும் விளங்கும் !
2. உண்கே வந்தான் ?
உண்கே வந்தான்? – உண்பதற்கே வந்தான் ?
3. உண்கோ வந்தான் ?
உண்கோ வந்தான் ? – உண்ணுவதற்கோ வந்தான் ?
நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள் !-
1. நீயே
நீயே வந்தாய் ? – நீதானே வந்தாய் ?
2. நீயோ
நீயோ வந்தாய் ? – நீதானோ வந்தாய் ?
‘ஆ’ ஈறு இக்காலத்தில் வினாப்பொருளில் வருதலில்லை என்று நச்சினர்க்கினியர், தம் உரையில் தெளிவாக்கியதால் அதற்கு எடுத்துக்காட்டை அவர் தரவில்லை !
ஆ , ஏ, ஓ - ஈற்றில் நிற்கும் இடைச் சொற்கள் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அ , இ , உ – என்ற மூன்று சுட்டு எழுத்துகளைப் பார்த்தோம் !
அங்ஙனம் , இங்ஙனம் , உங்ஙனம் என்ற மூன்று எடுத்துக்காட்டுகளைக் கூறியவர் இளம்பூரணர் !
அக்கொற்றன் , இக்கொற்றன் , உக்கொற்றன் என்ற மூன்று எடுத்துக்காட்டுகளைக் கூறியவர் நச்சினார்க்கினியர் !
இந்த 6 எடுத்துக்காட்டுகளிலும் வந்துள்ள சுட்டெழுத்துகளை ‘இடைச்சொல்’ என்பவர் நச்சர் !
அடுத்த நூற்பா ! –
“ஆஏஓ அம்மூன்றும் வினா”
அஃதாவது-
சொற்களின் ஈற்றிலே ஆ , ஏ , ஓ என்பன நின்று வினாப்பொருளை நல்கும் !
இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் !-
1. உண்கா ?
உண்கா வந்தான் ? – என்ற தொடரில்தான் பொருள் நன்கு விளங்கும் !
உண்கா வந்தான் ? – உண்பதற்கா வந்தான் ?
‘ஆ’ ஈறு வினாப்பொருளில் வந்தது தொல்காப்பியர் காலத்தில் ! இப்போது இது வழக்கில் இல்லை ! தொல்காப்பியத்தின் பழமை இதனாலும் விளங்கும் !
2. உண்கே வந்தான் ?
உண்கே வந்தான்? – உண்பதற்கே வந்தான் ?
3. உண்கோ வந்தான் ?
உண்கோ வந்தான் ? – உண்ணுவதற்கோ வந்தான் ?
நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள் !-
1. நீயே
நீயே வந்தாய் ? – நீதானே வந்தாய் ?
2. நீயோ
நீயோ வந்தாய் ? – நீதானோ வந்தாய் ?
‘ஆ’ ஈறு இக்காலத்தில் வினாப்பொருளில் வருதலில்லை என்று நச்சினர்க்கினியர், தம் உரையில் தெளிவாக்கியதால் அதற்கு எடுத்துக்காட்டை அவர் தரவில்லை !
ஆ , ஏ, ஓ - ஈற்றில் நிற்கும் இடைச் சொற்கள் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இளம்பூரணர் மற்றும் நச்சர் தந்த எடுத்துக்காட்டுகள் அருமை ஐயா. மிக, மிக விளக்கமான நடை. மறுபடியும் தமிழையா வகுப்பில் அமர்ந்து விட்ட உணர்வு. நன்றி.
- Sponsored content
Page 45 of 84 • 1 ... 24 ... 44, 45, 46 ... 64 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 45 of 84
|
|