புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
2 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
429 Posts - 48%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
29 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 40 of 84 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 62 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 23, 2014 2:44 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (316)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உயிர்மயங்கியலில் தொல்காப்பியர் இப்போது , ‘பனை’ , ‘அரை’ , ‘ஆவிரை’ எனும் மூன்று ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச் சொற்களை அறிமுகப் படுத்துகிறார் ! –

“பனையு மரையு மாவிரைக் கிளவியும்
 நினையுங் காலை யம்மொடு சிவணும்
ஐயெ  னிறுதி யரைவரைந்து கெடுமே
மெய்யவ ணொழிய வென்மனார் புலவர் ”  (உயிர்மயங். 81)

 ‘பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்’ – ‘பனை ’ , ‘அரை’ , ‘ஆவிரை’ எனும் மூன்று பெயர்ச்சொற்களும் ,

‘நினையும் காலை அம்மொடு சிவணும் ’ – புணர்ச்சியில் , ‘அம்’ சாரியை பெறும் !

‘ஐயென்  இறுதி அரைவரைந்து கெடுமே’ –  ‘ஆவிரை’யின்  ‘ஐ’ ஈறானது , கெடும் !

‘மெய் அவண்  ஒழிய என்மனார் புலவர்’ -  அப்படி ‘ஐ’ கெடும்போது , அது ஏறிநின்ற மெய்யான ‘ர்’ , கெடாது நிற்கும் !

1. பனை + காய் = பனைக் காய் ×
  பனை + காய் = பனங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனங் காய் – பனை மரத்தின் காய்)

2. பனை + செதிள் = பனைச் செதிள் ×
  பனை + செதிள் = பனஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனஞ் செதிள் – பனை மரத்தின் வெட்டுத் துண்டு )

3. பனை + தோல் = பனைத் தோல் ×
  பனை + தோல் = பனந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனந் தோல் – பனை மரத்தின் பட்டை )

4. பனை + பூ = பனைப் பூ ×
  பனை + பூ = பனம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனம் பூ – பனை மரத்தின் பூ )

5. அரை + கோடு = அரைக் கோடு ×
  அரை + கோடு = அரையங் கோடு √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அரையங் கோடு – அரச மரத்தின் கிளை)

6. அரை + செதிள் = அரைச் செதிள் ×
 அரை + செதிள் = அரையஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அரையஞ் செதிள் – அரச மரத்தின் வெட்டுத் துண்டு )

7. அரை + தோல் = அரைத் தோல் ×
 அரை + தோல் = அரையந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அரையந் தோல் – அரச மரத்தின் பட்டை )

8. அரை + பூ = அரைப் பூ ×
  அரை + பூ = அரையம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அரையம் பூ – அரச மரத்தின் பூ )

9. ஆவிரை + கோடு = ஆவிரைக் கோடு ×
  ஆவிரை + கோடு = ஆவிரங் கோடு √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆவிரங் கோடு  - ஆவிரைச் செடியின் கிளை)

10. ஆவிரை + செதிள் = ஆவிரைச் செதிள் ×
  ஆவிரை + செதிள் = ஆவிரஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆவிரஞ் செதிள் – ஆவிரைச் செடியின் வெட்டுத் துண்டு )

11. ஆவிரை + தோல் = ஆவிரைத் தோல் ×
  ஆவிரை + தோல் = ஆவிரந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆவிரந் தோல் – ஆவிரைச் செடியின் பட்டை )

12. ஆவிரை + பூ = ஆவிரைப் பூ ×
  ஆவிரை + பூ = ஆவிரம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆவிரம் பூ – ஆவிரச் செடியின் பூ )

இளம்பூரணர் , தம் உரையில் ,  ‘தூதுணை’ , ‘வழுதுணை’ , ‘தில்லை’ , ‘ஓலை’
ஆகிய சில ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களைத் தந்து இவையும் மேலனபோன்றே புணரும்  என்றார் ! –

13. தூதுணை + காய் = தூதுணைக் காய் ×
  தூதுணை + காய் = தூதுணங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணங் காய் – தூதுவளைச் செடியின் காய்)

14. தூதுணை + செதிள் = தூதுணைச் செதிள் ×
  தூதுணை + செதிள் = தூதுணஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணஞ் செதிள் – தூதுவளைச் செடியின் வெட்டுத் துண்டு)

15. தூதுணை + தோல் = தூதுணைத் தோல் ×
  தூதுணை + தோல் = தூதுணந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணந் தோல் – தூதுவளைச் செடியின் பட்டை)

16. தூதுணை + பூ = தூதுணைப் பூ ×
   தூதுணை + பூ = தூதுணம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதுணம் பூ – தூதுவளைச் செடியின் பூ)

17. வழுதுணை + காய் = வழுதுணைக் காய் ×
    வழுதுணை + காய் = வழுதுணங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வழுதுணங் காய்  – கத்தரிக் காய் )

18. வழுதுணை + செதிள் = வழுதுணைச் செதிள் ×
   வழுதுணை + செதிள் = வழுதுணஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வழுதுணஞ் செதிள்  – கத்தரிச் செடியின் வெட்டுத் துண்டு )

19. வழுதுணை + தோல் = வழுதுணைத் தோல் ×
வழுதுணை + தோல் = வழுதுணந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வழுதுணந் தோல்  – கத்தரிச் செடியின் பட்டை )


20. வழுதுணை + பூ = வழுதுணைப் பூ ×
   வழுதுணை + பூ = வழுதுணம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வழுதுணம் பூ  – கத்தரிப் பூ )

21. தில்லை + காய் = தில்லைக் காய் ×
   தில்லை + காய் = தில்லங் காய் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தில்லங் காய் – தில்லை மரத்தின் காய் )

22. தில்லை + செதிள் = தில்லைச் செதிள் ×
   தில்லை + செதிள் = தில்லஞ் செதிள் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தில்லஞ் செதிள் – தில்லை மரத்தின் வெட்டுத் துண்டு )

23. தில்லை + தோல் = தில்லைத் தோல் ×
   தில்லை + தோல் = தில்லந் தோல் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தில்லந் தோல் – தில்லை மரத்தின் பட்டை)

24. தில்லை + பூ = தில்லைப் பூ ×
    தில்லை + பூ = தில்லம் பூ √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தில்லம் பூ – தில்லை மரத்தின் பூ )

25. ஓலை + போழ் = ஓலைப் போழ் ×
ஓலை + போழ் = ஓலம் போழ் √   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓலம் போழ் – ஓலை நறுக்கு )

இளம்பூரணர் குறித்த ‘தில்லை’ மரத்தைப் பார்க்க ஆவலாக உள்ளீர்களா?

(1)
[You must be registered and logged in to see this image.]
Courtesy - wiki.trin.org.au

(2)
[You must be registered and logged in to see this image.]
Courtesy -  [You must be registered and logged in to see this link.]

(3)

[You must be registered and logged in to see this image.]
Courtesy -  wiki.trin.org.au

இம் மூன்றும் தில்லை மரப் படங்கள் !

தில்லை மரத்தின் தாவரவியல் பெயர் – Excoecaria agallocha

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 23, 2014 3:33 pm

அற்புதம் ஐயா



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Sep 23, 2014 3:38 pm

அற்புதம் ஐயா



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Sep 24, 2014 10:54 am

நன்றி எம்.சரண்யா !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 26, 2014 1:32 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (317)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பனங்காய் பற்றிச் சற்றுமுன் பார்த்தோம் !

‘பனாட்டு’ என்றால் தெரியுமா?

பனம் பழத்தின் தோலை நீக்கிவிட்டுச் சதையையெடுத்து அதில் நீர்  விட்டுக் கூழாக்கி , அக்கூழை , ஓலைப் பாயில் ஆறவிட்டுப் பிறகு , ஆறிவந்த கட்டிகளைக் கட்டி அடுப்புப் புகை எழும்பும் இடத்தில் தொங்க விடுவார்களாம் ! மழைக்காலங்களில் இப் பனாட்டுகளை உண்பார்களாம் ! நான் பார்த்ததில்லை !
இதுதான் ‘பனாட்டு’ !

தொல்காப்பியர் காலத்தில் ‘பனாஅட்டு’ என்று எழுதப்பட்டது ! (இடையிலே ஓர் ‘அ’ வந்துள்ளதைக் கவனிக்க !)
இதற்குச் சான்று ?

இதோ ! :-

“பனையின் முன்ன ரட்டுவரு காலை
 நிலையின் றாகு மையெ னுயிரே
ஆகாரம் வருத லாவயி னான” (உயிர்மயங். 82)

‘பனையின் முன் அட்டு வருகாலை’ – ‘பனை’ என்ற பெயர்ச் சொல்லை அடுத்து ‘அட்டு’என்ற சொல் வரும்போது,

‘நிலையின்று  ஆகும் ஐயென்  உயிரே’ – ‘பனை’ என்ற சொல்லின் ஈற்று ‘ஐ’ ஓடிவிடும் !

‘ஆகாரம் வருதல் ஆவயின் ஆன’ – ‘ஐ’ இருந்த அந்த இடத்தில் , ‘ஆ’ வந்து உட்காரும் !

1. பனை + அட்டு = பனையட்டு ×
 பனை + அட்டு = பனாட்டு ×
 பனை + அட்டு = பனாஅட்டு √  (வேற்றுமைப் புணர்ச்சி)

நச்சர் , தம் உரையில் சில எடுத்துக்காட்டுகளைக் காட்டுகிறார்! அவற்றை வருமாறு பட்டியலாகத்
தரலாம் ! –

2. ஓரை + நயம் = ஓரை நயம் ×
  ஓரை + நயம் = ஓரா நயம் √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஓரா நயம் – ஓரை எனும் இராசியின் நன்மை )

3. விச்சை + வாதி = விச்சை வாதி ×
 விச்சை + வாதி = விச்சா வாதி √  (வேற்றுமைப் புணர்ச்சி)
(விச்சா வாதி – வித்தை வாதி – வித்தையால் வாது செய்வோன் ; வித்தை – கல்வி ;வாது - argument )

4. கேட்டை + மூலம் = கேட்டை  மூலம் ×
  கேட்டை + மூலம் = கேட்டா மூலம் √  (அல்வழிப்  புணர்ச்சி)
(கேட்டா மூலம் – கேட்டை நட்சத்திரமும் மூல நட்சத்திரமும் )

5. பாறை + கல் = பாறைக் கல் ×
   பாறை + கல் = பாறாங் கல்  √  (அல்வழிப்  புணர்ச்சி)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Sep 26, 2014 1:49 pm

அருமை ஐயா!!!

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 40 3838410834



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 26, 2014 1:59 pm

நன்றி சரண்யா !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 30, 2014 12:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (318)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘பனங்காய்’ , ‘பனாஅட்டு’ ஆகியவற்றைக் காட்டிய தொல்காப்பியர் இப்போது ‘பனைக்கொடி’யைத் தூக்கிப் பிடிக்கிறார் ! –

“கொடிமுன் வரினே யையவ ணிற்பக்
  கடிநிலை  யின்றே வல்லெழுத்து மிகுதி”  (உயிர்மயங். 83)

‘கொடிமுன் வரினே’ -  ‘கொடி’ என்பதற்கு முன்னே ‘பனை’ என்ற சொல் வருமானால்,

‘ஐ அவண் நிற்பக்’ -    ‘பனை’ என்பதன் ஈற்று ‘ஐ’ கெடாது நிற்க,

‘கடிநிலை  இன்றே வல்லெழுத்து மிகுதி’ – வேற்றுமைப் புணர்ச்சியில் , சந்தியாக, வல்லொற்று வரும் !

1. பனை + கொடி = பனங் கொடி×
பனை + கொடி = பனைக் கொடி √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இளம்பூரணர் , இங்கே உரை எழுதும்போது, வேறு சில நுணுக்கமான புணர்ச்சிகளை இயைக்கிறார் ! அவற்றை வருமாறு பிரித்துக் காட்டலாம் !–

2. பனை + காய் = பனங் காய் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
பனை + காய் = பனையின் காய் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

3. பனை + செதிள் = பனஞ் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
பனை + செதிள் = பனையின் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

4. பனை + தோல் = பனந் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
பனை + தோல் = பனையின் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

5. பனை + பூ = பனம் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
பனை + பூ = பனையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

6. அரை + கோடு = அரையங் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
அரை + கோடு = அரையின் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

7. அரை + செதிள் = அரையஞ் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
அரை + செதிள் = அரையின் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

8. அரை + தோல் = அரையந் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
அரை + தோல் = அரையின் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

9. அரை + பூ = அரையம் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
அரை + பூ = அரையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

10. ஆவிரை + கோடு = ஆவிரங் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
ஆவிரை + கோடு = ஆவிரையின் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

11. ஆவிரை + செதிள் = ஆவிரஞ் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
ஆவிரை + செதிள் = ஆவிரையின் செதிள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

12. ஆவிரை + தோல் = ஆவிரந் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
ஆவிரை + தோல் = ஆவிரையின் தோல் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

13. ஆவிரை + பூ = ஆவிரம் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
ஆவிரை + பூ = ஆவிரையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

14. வழை + கோடு = வழையின் கோடு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)

15.வழை + பூ = வழையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

    16.ஆவிரை + பூ = ஆவிரம் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 81)
        ஆவிரை + பூ = ஆவிரையின் பூ √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)

17.பனை + திரள் = பனைத் திரள் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 83 இளம். உரை)
(பனைத் திரள் – பனை மரங்களின் கூட்டம்)

மேல் ‘வழை’ என்பது சுரபுன்னைதான் ! கபிலர் தம் குறிஞ்சிப்பட்டில் குறித்துள்ளார் !

இளம் பூரணர் சுட்டிய ‘வழை’ மரத்தைப் பார்க்க ஆசையா?

(1)

[You must be registered and logged in to see this image.]
Courtesy – flowerspicture.org
(2)
[You must be registered and logged in to see this image.]
Courtesy – flora nellore .org

இவையே வழை மரத் தோற்றங்கள் !

‘வழை’ மரம் தாவரவியலில் Ochrocarpos longifolius எனக் குறிக்கப்படுகிறது !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 06, 2014 12:49 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (319)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஐ’ ஈற்றுச் சொல் தொடர்கிறது !

இப்போது தொல்காப்பியர் , மாதத்தைக் குறிக்கும் ’சித்திரை’ முதலான சொற்களையும் , நாளைக் குறிக்கும் ‘கேட்டை’ முதலான சொற்களையும் எடுத்துக்கொள்கிறார்  !
-

       “திங்களு நாளு  முந்துகிளந் தன்ன” (உயிர்மயங். 84)

     அஃதாவது –

‘ஐ’யை  ஈற்றிலே கொண்ட திங்களைக் குறிக்கும் சொல் , ‘ஐ’யை ஈற்றிலே கொண்ட நாளைக் குறிக்கும் சொல் ஆகியன  முன்னே கூறியது போலப் புணரும் !

முன்னே கூறியதுதான் என்ன ?

உயிர்மயங்கியல் நூற்பா 45, 46 ஆகியவற்றில் ‘பரணியாற் கொண்டான்’ , ‘ஆடிக்குக் கொண்டான்’ என முறையே ‘ஆன்’ சாரியையும் , ‘இக்கு’ச் சாரியையும் வந்ததல்லவா? அதுபோல இங்கும் வரும் !

1. சித்திரை + கொண்டான் = சித்திரைக் கொண்டான் ×  
சித்திரை + கொண்டான் = சித்திரைக்குக்  கொண்டான் √   (இக்கு - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(சித்திரைக்குக்  கொண்டான் – சித்திரை மாதத்தில் பெற்றான்)

2. சித்திரை + சென்றான் = சித்திரைச் சென்றான் ×  
சித்திரை + சென்றான் = சித்திரைக்குச்  சென்றான் √   (இக்கு - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(சித்திரைக்குச்  சென்றான் – சித்திரை மாதத்தில் போனான்)

3. சித்திரை + தந்தான் = சித்திரைத் தந்தான் ×  
சித்திரை + தந்தான் = சித்திரைக்குத்  தந்தான் √   (இக்கு - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(சித்திரைக்குத்  தந்தான் – சித்திரை மாதத்தில் கொடுத்தான் )

4. சித்திரை + போயினான் = சித்திரைப் போயினான் ×  
சித்திரை + போயினான் = சித்திரைக்குப்  போயினான் √   (இக்கு - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(சித்திரைக்குப்  போயினான் – சித்திரை மாதத்தில் போனான் )

5. கேட்டை + கொண்டான் = கேட்டைக் கொண்டான்  ×  
கேட்டை + கொண்டான் = கேட்டையாற் கொண்டான் √   (ஆன் - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேட்டையாற் கொண்டான் – கேட்டை நாளில் பெற்றான் )

6. கேட்டை + சென்றான் = கேட்டைச் சென்றான்  ×  
கேட்டை + சென்றான் = கேட்டையாற் சென்றான் √   (ஆன் - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேட்டையாற் சென்றான் – கேட்டை நாளில் போனான் )

7. கேட்டை + தந்தான் = கேட்டைத் தந்தான்  ×  
கேட்டை + தந்தான் = கேட்டையாற் றந்தான் √   (ஆன் - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேட்டையாற் றந்தான் – கேட்டை நாளில் கொடுத்தான் )

8. கேட்டை + போயினான் = கேட்டைப் போயினான்  ×  
கேட்டை + போயினான் = கேட்டையாற் போயினான் √   (ஆன் - சாரியை)  (வேற்றுமைப் புணர்ச்சி)
(கேட்டையாற் போயினான் – கேட்டை நாளில் போனான் )

நச்சர் இவ்விடத்தில் ,  ‘இதே தொல்காப்பியர் சூத்திரத்தில் அடக்கிக் கொள்க ’ எனக் கூறிச் சில ‘ஐ’
ஈற்றுச் சொற்புணர்ச்சிகளை நமக்கு அள்ளித் தருகிறார் ! -

9. உழை + கோடு = உழைங் கோடு √  (மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உழைங் கோடு – மான் கொம்பு; உழை - மான்)

10. அமை + கோடு = அமைங் கோடு √  (மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அமைங் கோடு – மூங்கில் மரக் கிளை; அமை - மூங்கில்)

11. உடை + கோடு = உடைங் கோடு √  (மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடைங் கோடு – உடைமரக் கிளை; உடைமரம் – குடைவேல் மரம்)

12. கலை + கோடு = கலைக் கோடு √  (வல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கலைக் கோடு – மான் கொம்பு; கலை - மான்)
கலை + கோடு = கலைங் கோடு √  (மெல்லெழுத்துச் சந்தி) (வேற்றுமைப் புணர்ச்சி)
(கலைங் கோடு – மான் கொம்பு)

13 .கரியவை + கோடு = கரியவற்றுக் கோடு √  (வற்று – சாரியையும் வல்லெழுத்துச்  சந்தியும்)
                                                                                                            (வேற்றுமைப்  புணர்ச்சி)
(கரியவற்றுக் கோடு – கரிய பொருள்களின் தண்டு)

14 .நெடியவை + கோடு = நெடியவற்றுக் கோடு √  (வற்று – சாரியையும் வல்லெழுத்துச்  சந்தியும்)
                                                                                                            (வேற்றுமைப்  புணர்ச்சி)
(நெடியவற்றுக் கோடு – நெடிய பொருள்களின் தண்டு)

15 .அவை + கொண்டான் = அவையத்துக் கொண்டான் √  (அத்து – சாரியையும் வல்லெழுத்துச்  சந்தியும்)
                                                                                                            (வேற்றுமைப்  புணர்ச்சி)
(அவையத்துக் கொண்டான் – சபையிடத்துப் பெற்றான்)

அவை + கொண்டான் = அவையிற் கொண்டான் √  (இன் – சாரியை)
                                                                                                            (வேற்றுமைப்  புணர்ச்சி)
(அவையிற் கொண்டான் – சபையில் பெற்றான்)

15. பனை + மாண்பு = பனையின் மாண்பு  (இன் – சாரியை (வேற்றுமைப் புணர்ச்சி)
(பனையின் மாண்பு  - பனை மரத்தின் மேன்மை)

நச்சினார்க்கினியர் கூறிய ‘உடை’ மரத்தைப் பார்க்க ஆசையா?
(1)
[You must be registered and logged in to see this image.]
Courtesy – alibaba.com

(2)
[You must be registered and logged in to see this image.]
Courtesy - agritech.tnau.ac.in

இவையே ‘உடை’ மரத் தோற்றங்கள் !

இதன் தாவரவியல் பெயர்- Acacia planifrons .

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 06, 2014 12:54 pm

அருமை அருமை !!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 40 of 84 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 62 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக