புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 39 of 84 •
Page 39 of 84 • 1 ... 21 ... 38, 39, 40 ... 61 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (307)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘எ’ ஈறு முடிந்து , இப்போது ‘ஏ’ ஈறு !-
“ஏகார விறுதி யூகார வியற்றே” (உயிர்மயங். 72)
‘ஏகார இறுதி’ – ‘ஏ’ ஈற்றுச் சொல்,
‘ஊகார இயற்றே’ - ‘ஊ’ ஈற்றுச் சொல்போலப் புணரும் !
அஃதாவது –
முன்பு உயிர்மயங்கியல் சூத்திரம் 62இல் , ‘கொண்மூ + கடிது = கொண்மூக் கடிது’ என அல்வழிப் புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்ததைப் பர்த்தோமல்லவா ? அதுபோல , அல்வழிப்புணர்ச்சியில் , இங்கும் வல்லெழுத்துச் சந்தி வரும் !-
1. சே + கடிது = சே கடிது ×
சே + கடிது = சேக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !
2. சே + சிறிது = சே சிறிது ×
சே + சிறிது = சேச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)
3. சே + தீது = சே தீது ×
சே + தீது = சேத் தீது √ (அல்வழிப் புணச்சி)
4. சே + பெரிது = சே பெரிது ×
சே + பெரிது = சேப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !
5 . ஏ + கடிது = ஏ கடிது ×
ஏ + கடிது = ஏக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏ – அம்பு ; ஏக் கடிது – அம்பானது கடுமையானது)
6 . ஏ + சிறிது = ஏ சிறிது ×
ஏ + சிறிது = ஏச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏச் சிறிது – அம்பானது சிறியது)
7 . ஏ + தீது = ஏ தீது ×
ஏ + தீது = ஏத் தீது √ (அல்வழிப் புணச்சி)
(ஏத் தீது – அம்பானது தீயது)
8 . ஏ + பெரிது = ஏ பெரிது ×
ஏ + பெரிது = ஏப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏப் பெரிது – அம்பானது பெரியது)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘எ’ ஈறு முடிந்து , இப்போது ‘ஏ’ ஈறு !-
“ஏகார விறுதி யூகார வியற்றே” (உயிர்மயங். 72)
‘ஏகார இறுதி’ – ‘ஏ’ ஈற்றுச் சொல்,
‘ஊகார இயற்றே’ - ‘ஊ’ ஈற்றுச் சொல்போலப் புணரும் !
அஃதாவது –
முன்பு உயிர்மயங்கியல் சூத்திரம் 62இல் , ‘கொண்மூ + கடிது = கொண்மூக் கடிது’ என அல்வழிப் புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்ததைப் பர்த்தோமல்லவா ? அதுபோல , அல்வழிப்புணர்ச்சியில் , இங்கும் வல்லெழுத்துச் சந்தி வரும் !-
1. சே + கடிது = சே கடிது ×
சே + கடிது = சேக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !
2. சே + சிறிது = சே சிறிது ×
சே + சிறிது = சேச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)
3. சே + தீது = சே தீது ×
சே + தீது = சேத் தீது √ (அல்வழிப் புணச்சி)
4. சே + பெரிது = சே பெரிது ×
சே + பெரிது = சேப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !
5 . ஏ + கடிது = ஏ கடிது ×
ஏ + கடிது = ஏக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏ – அம்பு ; ஏக் கடிது – அம்பானது கடுமையானது)
6 . ஏ + சிறிது = ஏ சிறிது ×
ஏ + சிறிது = ஏச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏச் சிறிது – அம்பானது சிறியது)
7 . ஏ + தீது = ஏ தீது ×
ஏ + தீது = ஏத் தீது √ (அல்வழிப் புணச்சி)
(ஏத் தீது – அம்பானது தீயது)
8 . ஏ + பெரிது = ஏ பெரிது ×
ஏ + பெரிது = ஏப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏப் பெரிது – அம்பானது பெரியது)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
சிறந்த பதிவு ஐயா
பொது தேர்விற்கு முக்கியமானது
நிதானமாக படித்து புரிந்து கொள்வேன்
சந்தேகம் எழுந்தால் நான் கேட்பதற்கு பதிலளியுங்கள் ஐயா
பொது தேர்விற்கு முக்கியமானது
நிதானமாக படித்து புரிந்து கொள்வேன்
சந்தேகம் எழுந்தால் நான் கேட்பதற்கு பதிலளியுங்கள் ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
[You must be registered and logged in to see this image.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (308)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ – இந்த இடைச் சொல் புணரும் வகை தொடர்கிறது ! –
“மாறுகொ ளெச்சமும் வினாவு மெண்ணும்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்” (உயிர்மயங். 73)
“மாறுகொள் எச்சமும்’ – எதிர்மறைப் பொருளை விடையாகத் தரக்கூடிய, எச்ச இடைச் சொல்லும் ,
‘வினாவும்’ – வினாப்பொருளைத் தரும் இடைச் சொல்லும் ,
‘எண்ணும்’ – எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொல்லும் ,
‘கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்’ – முன் நூற்பாவில் கூறியதுபோன்ற வல்லெழுத்துச் சந்தி பெறாது புணரும் !
1. யானே + கொண்டேன் = யானேக் கொண்டேன் ×
யானே + கொண்டேன் = யானே கொண்டேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
(யானே கொண்டேன் ? : ‘யானே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ எதிர்மறை ஏகாரம் ! ‘யான்
கொள்ளவில்லை’ என்ற எதிர்மறை எச்சப் பொருளைதருவது ! இதுவே ‘மாறுகொள் எச்சம்’)
2. யானே + சென்றேன் = யானேச் சென்றேன் ×
யானே + சென்றேன் = யானே சென்றேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
3. யானே + தந்தேன் = யானேத் தந்தேன் ×
யானே + தந்தேன் = யானே தந்தேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
4. யானே + போயினேன் = யானேப் போயினேன் ×
யானே + போயினேன் = யானே போயினேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
5. நீயே + கொண்டாய் = நீயேக் கொண்டாய் ×
நீயே + கொண்டாய் = நீயே கொண்டாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீயே கொண்டாய் ? : ‘நீயே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ வினா ஏகாரம் ! ‘நீதானா
கொண்டது ?’ என்ற வினாப் பொருளைதருவது !)
6. நீயே + சென்றாய் = நீயேச் சென்றாய் ×
நீயே + சென்றாய் = நீயே சென்றாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
7. நீயே + தந்தாய் = நீயேத் தந்தாய் ×
நீயே + தந்தாய் = நீயே தந்தாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
8. நீயே + போயினாய் = நீயேப் போயினாய் ×
நீயே + போயினாய் = நீயே போயினாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
9. கொற்றனே , சாத்தனே , தேவனே , பூதனே – இவ்வாறு அடுக்கிவரும்போது , ஒவ்வொரு சொல்லின் ஈற்றிலும் உள்ள ‘ஏ’ என்பது , எண்ணேகாரம் எனப்படும் !
10. அவனே + கொண்டான் = அவனேக் கொண்டான் ×
அவனே + கொண்டான் = அவனே கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(அவனே கொண்டான் : ‘அவனே’ என்பதிலுள்ள ‘ஏ’, பிரிநிலை ஏகாரம் ! ‘அவன்தான் ; வேறு எவரும் கொள்ளவில்லை’ என்ற பொருளைத் தருவது ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)
11. கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலேப் பாடெழுந் திசைக்கும் ×
கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலே பாடெழுந் திசைக்கும் √ (அல்வழிப் புணர்ச்சி)
(கடலே : இதிலுள்ள ‘ஏ’, பொருளற்ற அசை ; ‘ஈற்றசை’எனப்படும் ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ – இந்த இடைச் சொல் புணரும் வகை தொடர்கிறது ! –
“மாறுகொ ளெச்சமும் வினாவு மெண்ணும்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்” (உயிர்மயங். 73)
“மாறுகொள் எச்சமும்’ – எதிர்மறைப் பொருளை விடையாகத் தரக்கூடிய, எச்ச இடைச் சொல்லும் ,
‘வினாவும்’ – வினாப்பொருளைத் தரும் இடைச் சொல்லும் ,
‘எண்ணும்’ – எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொல்லும் ,
‘கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்’ – முன் நூற்பாவில் கூறியதுபோன்ற வல்லெழுத்துச் சந்தி பெறாது புணரும் !
1. யானே + கொண்டேன் = யானேக் கொண்டேன் ×
யானே + கொண்டேன் = யானே கொண்டேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
(யானே கொண்டேன் ? : ‘யானே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ எதிர்மறை ஏகாரம் ! ‘யான்
கொள்ளவில்லை’ என்ற எதிர்மறை எச்சப் பொருளைதருவது ! இதுவே ‘மாறுகொள் எச்சம்’)
2. யானே + சென்றேன் = யானேச் சென்றேன் ×
யானே + சென்றேன் = யானே சென்றேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
3. யானே + தந்தேன் = யானேத் தந்தேன் ×
யானே + தந்தேன் = யானே தந்தேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
4. யானே + போயினேன் = யானேப் போயினேன் ×
யானே + போயினேன் = யானே போயினேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
5. நீயே + கொண்டாய் = நீயேக் கொண்டாய் ×
நீயே + கொண்டாய் = நீயே கொண்டாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீயே கொண்டாய் ? : ‘நீயே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ வினா ஏகாரம் ! ‘நீதானா
கொண்டது ?’ என்ற வினாப் பொருளைதருவது !)
6. நீயே + சென்றாய் = நீயேச் சென்றாய் ×
நீயே + சென்றாய் = நீயே சென்றாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
7. நீயே + தந்தாய் = நீயேத் தந்தாய் ×
நீயே + தந்தாய் = நீயே தந்தாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
8. நீயே + போயினாய் = நீயேப் போயினாய் ×
நீயே + போயினாய் = நீயே போயினாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
9. கொற்றனே , சாத்தனே , தேவனே , பூதனே – இவ்வாறு அடுக்கிவரும்போது , ஒவ்வொரு சொல்லின் ஈற்றிலும் உள்ள ‘ஏ’ என்பது , எண்ணேகாரம் எனப்படும் !
10. அவனே + கொண்டான் = அவனேக் கொண்டான் ×
அவனே + கொண்டான் = அவனே கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(அவனே கொண்டான் : ‘அவனே’ என்பதிலுள்ள ‘ஏ’, பிரிநிலை ஏகாரம் ! ‘அவன்தான் ; வேறு எவரும் கொள்ளவில்லை’ என்ற பொருளைத் தருவது ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)
11. கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலேப் பாடெழுந் திசைக்கும் ×
கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலே பாடெழுந் திசைக்கும் √ (அல்வழிப் புணர்ச்சி)
(கடலே : இதிலுள்ள ‘ஏ’, பொருளற்ற அசை ; ‘ஈற்றசை’எனப்படும் ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (309)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ ஈறு தொடர்கிறது ! –
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 74)
‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும்,
‘அதனோர் அற்றே’ – முன்பு ‘ஊ’ ஈற்றுச் சொல் ,அல்வழியில், வல்லெழுத்துச் சந்தி பெற்றதுபோல இங்கும் வல்லெழுத்துச் சந்தியே பெறும் !
‘கொண்மூ’ என்ற ‘ஊ’ ஈற்றுப் பெயர்ச்சொல் , அல்வழியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருசொல் வந்து புணரும்போது, ‘க்’ பெற்றுக், ‘கொண்மூக் கடிது’ (உயிர்மயங்.62)ஆனதல்லவா? அதே புணர்ச்சிமுறைதான் ‘ஏ’ ஈற்று வேற்றுமைப் புனர்ச்சிக்கும் !
1. வே + குடம் = வேங்குடம் ×
வே + குடம் = வேக்குடம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேக்குடம் – வேதலையுடைய குடம்; பச்சைமண் குடமல்ல , சுட்ட குடம் என்பது பொருள்.)
2. வே + சாடி = வேஞ்சாடி ×
வே + சாடி = வேச்சாடி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேச்சாடி – வேதலையுடைய சாடி)
3. வே + தூதை = வேந்தூதை ×
வே + தூதை = வேத்தூதை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதை – சிறு மண் பாண்டம்;வேத்தூதை – வேதலையுடைய சிறு மண்பாண்டம்)
4. வே + பானை = வேம்பானை ×
வே + பானை = வேப்பானை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேப்பானை – வேதலையுடைய பானை)
5. ஏ + கடுமை = ஏகடுமை ×
ஏ+ கடுமை = ஏக்கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏக்கடுமை – அம்பினது கடுமை)
6. ஏ + சிறுமை = ஏசிறுமை ×
ஏ+ சிறுமை = ஏச்சிறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏச்சிறுமை – அம்பினது சிறுமை)
7. ஏ + தீமை = ஏதீமை ×
ஏ+ தீமை = ஏத்தீமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏத்தீமை – அம்பினது தீமை)
8. ஏ + பெருமை = ஏபெருமை ×
ஏ+ பெருமை = ஏப்பெருமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏப்பெருமை – அம்பினது பெருமை)
மேல் இளம்பூரணர் எடுத்துக்காட்டில் , ‘சாடி’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !
ஆம் ! ‘சாடி’ தமிழ்ச் சொல்தான் ! வடசொல் அல்ல ! ‘ஜாடி’ என்று ஒலி மாற்றம்
பெற்றது ; அவ்வளவுதன் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ ஈறு தொடர்கிறது ! –
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 74)
‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும்,
‘அதனோர் அற்றே’ – முன்பு ‘ஊ’ ஈற்றுச் சொல் ,அல்வழியில், வல்லெழுத்துச் சந்தி பெற்றதுபோல இங்கும் வல்லெழுத்துச் சந்தியே பெறும் !
‘கொண்மூ’ என்ற ‘ஊ’ ஈற்றுப் பெயர்ச்சொல் , அல்வழியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருசொல் வந்து புணரும்போது, ‘க்’ பெற்றுக், ‘கொண்மூக் கடிது’ (உயிர்மயங்.62)ஆனதல்லவா? அதே புணர்ச்சிமுறைதான் ‘ஏ’ ஈற்று வேற்றுமைப் புனர்ச்சிக்கும் !
1. வே + குடம் = வேங்குடம் ×
வே + குடம் = வேக்குடம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேக்குடம் – வேதலையுடைய குடம்; பச்சைமண் குடமல்ல , சுட்ட குடம் என்பது பொருள்.)
2. வே + சாடி = வேஞ்சாடி ×
வே + சாடி = வேச்சாடி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேச்சாடி – வேதலையுடைய சாடி)
3. வே + தூதை = வேந்தூதை ×
வே + தூதை = வேத்தூதை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதை – சிறு மண் பாண்டம்;வேத்தூதை – வேதலையுடைய சிறு மண்பாண்டம்)
4. வே + பானை = வேம்பானை ×
வே + பானை = வேப்பானை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேப்பானை – வேதலையுடைய பானை)
5. ஏ + கடுமை = ஏகடுமை ×
ஏ+ கடுமை = ஏக்கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏக்கடுமை – அம்பினது கடுமை)
6. ஏ + சிறுமை = ஏசிறுமை ×
ஏ+ சிறுமை = ஏச்சிறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏச்சிறுமை – அம்பினது சிறுமை)
7. ஏ + தீமை = ஏதீமை ×
ஏ+ தீமை = ஏத்தீமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏத்தீமை – அம்பினது தீமை)
8. ஏ + பெருமை = ஏபெருமை ×
ஏ+ பெருமை = ஏப்பெருமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏப்பெருமை – அம்பினது பெருமை)
மேல் இளம்பூரணர் எடுத்துக்காட்டில் , ‘சாடி’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !
ஆம் ! ‘சாடி’ தமிழ்ச் சொல்தான் ! வடசொல் அல்ல ! ‘ஜாடி’ என்று ஒலி மாற்றம்
பெற்றது ; அவ்வளவுதன் !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (310)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ ஈற்றுச் சொல் , வேற்றுமையில் , வல்லொற்றுப் பெற்றுப் முடிவதைச் சற்றுமுன் பார்த்தோம் !
அந்த விதிக்குச் சிறப்பு விதியை அடுத்து நுவல்கிறார்! –
“ஏயெ னிறுதிக் கெகரம் வருமே” (உயிர்மயங். 75)
‘ஏ என் இறுதிக்கு’ – ‘ஏ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கு
‘எகரம் வருமே’ – புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தியுடன் ‘எ’ என்ற எழுத்தும் தோன்றும் !
1. ஏ + கொட்டில் = ஏக்கொட்டில் ×
ஏ + கொட்டில் = ஏஎக்கொட்டில் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎக்கொட்டில் – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)
2. ஏ + சாலை = ஏச்சாலை ×
ஏ + சாலை = ஏஎச்சாலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎச்சாலை – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)
3. ஏ + துளை = ஏத்துளை ×
ஏ + துளை = ஏஎத்துளை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎத்துளை – அம்பினால் ஏற்பட்ட துளை)
4. ஏ + புழை = ஏப்புழை ×
ஏ + புழை = ஏஎப்புழை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎப்புழை – அம்பு ஏற்படுத்திய துளை)
நச்சினார்க்கினியர் உரைப்படிக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகளையும் தரலாம் !-
5. ஏ + நெகிழ்ச்சி = ஏநெகிழ்ச்சி ×
ஏ + நெகிழ்ச்சி = ஏஎநெகிழ்ச்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎநெகிழ்ச்சி – அம்பின் நெகிழ்ச்சி)
6. ஏ + நேர்மை = ஏநேர்மை ×
ஏ + நேர்மை = ஏஎநேர்மை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏநேர்மை – அம்பின் நேரிய தன்மை)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ ஈற்றுச் சொல் , வேற்றுமையில் , வல்லொற்றுப் பெற்றுப் முடிவதைச் சற்றுமுன் பார்த்தோம் !
அந்த விதிக்குச் சிறப்பு விதியை அடுத்து நுவல்கிறார்! –
“ஏயெ னிறுதிக் கெகரம் வருமே” (உயிர்மயங். 75)
‘ஏ என் இறுதிக்கு’ – ‘ஏ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கு
‘எகரம் வருமே’ – புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தியுடன் ‘எ’ என்ற எழுத்தும் தோன்றும் !
1. ஏ + கொட்டில் = ஏக்கொட்டில் ×
ஏ + கொட்டில் = ஏஎக்கொட்டில் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎக்கொட்டில் – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)
2. ஏ + சாலை = ஏச்சாலை ×
ஏ + சாலை = ஏஎச்சாலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎச்சாலை – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)
3. ஏ + துளை = ஏத்துளை ×
ஏ + துளை = ஏஎத்துளை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎத்துளை – அம்பினால் ஏற்பட்ட துளை)
4. ஏ + புழை = ஏப்புழை ×
ஏ + புழை = ஏஎப்புழை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎப்புழை – அம்பு ஏற்படுத்திய துளை)
நச்சினார்க்கினியர் உரைப்படிக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகளையும் தரலாம் !-
5. ஏ + நெகிழ்ச்சி = ஏநெகிழ்ச்சி ×
ஏ + நெகிழ்ச்சி = ஏஎநெகிழ்ச்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎநெகிழ்ச்சி – அம்பின் நெகிழ்ச்சி)
6. ஏ + நேர்மை = ஏநேர்மை ×
ஏ + நேர்மை = ஏஎநேர்மை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏநேர்மை – அம்பின் நேரிய தன்மை)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (311)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சில ‘ஏ’ஈற்றுச் சொற்கள் , வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்ததை முந்தைய இரு ஆய்வுகளில் பார்த்தோம் !
இங்கு ஒரு வினா எழுகிறது !
அப்படியானால் , எல்லா ‘ஏ’ ஈற்றுப் பெயர்களுமே வல்லெழுத்துச் சந்தி பெற்றுத்தான் புணருமா?
இதற்கு விடைதான் அடுத்த நூற்பா ! –
“சேவென் மரப்பெய ரொடுமர வியற்றே” (உயிர்மயங். 76)
‘சே என் மரப்பெயர் ’ - ‘சே’ எனும் மரத்தைக் குறிக்கும் பெயர்,
‘ஒடுமர இயற்றே’ - ‘ஒடு’ எனும் மரப்பெயர் புணர்ந்ததுபோலப் புணரும் !
‘ஒடு’ எப்படிப் புணர்ந்தது ?
ஒடு + கோடு = ஒடுங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 60)
இதைப்போலச் ‘சே’ புணர்வதைப் பார்ப்போம் ! –
1. சே + கோடு = சேக்கோடு ×
சே + கோடு = சேங்கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
2. சே + செதிள் = சேச்செதிள் ×
சே + செதிள் = சேஞ்செதிள் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
3. சே + தோல் = சேத்தோல் ×
சே + தோல் = சேந்தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
4. சே + பூ = சேப்பூ ×
சே + பூ = சேம்பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சில ‘ஏ’ஈற்றுச் சொற்கள் , வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்ததை முந்தைய இரு ஆய்வுகளில் பார்த்தோம் !
இங்கு ஒரு வினா எழுகிறது !
அப்படியானால் , எல்லா ‘ஏ’ ஈற்றுப் பெயர்களுமே வல்லெழுத்துச் சந்தி பெற்றுத்தான் புணருமா?
இதற்கு விடைதான் அடுத்த நூற்பா ! –
“சேவென் மரப்பெய ரொடுமர வியற்றே” (உயிர்மயங். 76)
‘சே என் மரப்பெயர் ’ - ‘சே’ எனும் மரத்தைக் குறிக்கும் பெயர்,
‘ஒடுமர இயற்றே’ - ‘ஒடு’ எனும் மரப்பெயர் புணர்ந்ததுபோலப் புணரும் !
‘ஒடு’ எப்படிப் புணர்ந்தது ?
ஒடு + கோடு = ஒடுங் கோடு (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 60)
இதைப்போலச் ‘சே’ புணர்வதைப் பார்ப்போம் ! –
1. சே + கோடு = சேக்கோடு ×
சே + கோடு = சேங்கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
2. சே + செதிள் = சேச்செதிள் ×
சே + செதிள் = சேஞ்செதிள் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
3. சே + தோல் = சேத்தோல் ×
சே + தோல் = சேந்தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
4. சே + பூ = சேப்பூ ×
சே + பூ = சேம்பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (312)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முன் ஆய்வில் ‘அடச் சே’ என்று விட்டுவிடாமல் , மரத்தைக் குறிக்கும் சொல்லான ‘சே’ , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘சேங்கோடு’ எனப் புணரும் என்று பார்த்தோம் !
அதே ‘சே’ என்ற சொல் பெற்றத்தைக் குறித்தால்?
விடைதான் கீழ்வரும் விதி –
“ பெற்ற மாயின் முற்றவின் வேண்டும்” (உயிர்மயங். 77)
(பெற்றம் – பசு, காளை , எருமை மூன்றுக்கும் பொதுவான பெயர் )
‘பெற்றம் ஆயின்’ – ‘சே’ என்ற சொல் பெற்றத்தைக் குறித்தால் ,
‘முற்ற இன் வேண்டும்’ – வேற்றுமைப் புணர்ச்சியில் ‘இன்’ , சாரியையாக வரும் !
1. சே + கோடு = சேங்கோடு ×
சே + கோடு = சேவின்கோடு √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்கோடு – எருமையின் கொம்பு)
2. சே + செவி = சேஞ்செவி ×
சே + செவி = சேவின்செவி √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்செவி – எருமையின் காது)
3. சே + தலை = சேந்தலை ×
சே + தலை = சேவின்தலை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்தலை – எருமையின் தலை)
4. சே + புறம் = சேம்புறம் ×
சே + புறம் = சேவின்புறம் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்புறம் – எருமையின் முதுகு)
இளம்பூரணர் உரையால் , ‘சே’ என்பது மரத்தைக் குறித்தாலும் ‘இன்’ சாரியை
வரும் ; அம்பைக்குறிக்கும் ‘ஏ’ யும் ‘இன்’சாரியை பெறும் என்று அறியவருகிறோம் !-
5 . சே + கோடு = சேவின் கோடு √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் கோடு – சே மரத்தின் கிளை)
6 . சே + செதிள் = சேவின் செதிள் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் செதிள் – சே மரத்தின் வெட்டுத்துண்டு)
7 . சே + தோல் = சேவின் தோல் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் தோல் – சே மரத்தின் பட்டை)
8 . சே + பூ = சேவின் பூ √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் பூ – சே மரத்தின் பூ)
9 . ஏ + கடுமை = ஏவின் கடுமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் கடுமை – அம்பின் கடிய தன்மை)
10 . ஏ + சிறுமை = ஏவின் சிறுமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் சிறுமை – அம்பின் சிறிய தன்மை)
11 . ஏ + தீமை = ஏவின் தீமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் தீமை – அம்பின் தீமை)
12 . ஏ + பெருமை = ஏவின் பெருமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் பெருமை – அம்பின் பெருமை)
‘ஏ’ , வகர உடம்படுமெய் பெற்று , இன் சாரியையுடன், ‘ஏவின்’ என வந்துள்ளது காண்க !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முன் ஆய்வில் ‘அடச் சே’ என்று விட்டுவிடாமல் , மரத்தைக் குறிக்கும் சொல்லான ‘சே’ , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘சேங்கோடு’ எனப் புணரும் என்று பார்த்தோம் !
அதே ‘சே’ என்ற சொல் பெற்றத்தைக் குறித்தால்?
விடைதான் கீழ்வரும் விதி –
“ பெற்ற மாயின் முற்றவின் வேண்டும்” (உயிர்மயங். 77)
(பெற்றம் – பசு, காளை , எருமை மூன்றுக்கும் பொதுவான பெயர் )
‘பெற்றம் ஆயின்’ – ‘சே’ என்ற சொல் பெற்றத்தைக் குறித்தால் ,
‘முற்ற இன் வேண்டும்’ – வேற்றுமைப் புணர்ச்சியில் ‘இன்’ , சாரியையாக வரும் !
1. சே + கோடு = சேங்கோடு ×
சே + கோடு = சேவின்கோடு √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்கோடு – எருமையின் கொம்பு)
2. சே + செவி = சேஞ்செவி ×
சே + செவி = சேவின்செவி √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்செவி – எருமையின் காது)
3. சே + தலை = சேந்தலை ×
சே + தலை = சேவின்தலை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்தலை – எருமையின் தலை)
4. சே + புறம் = சேம்புறம் ×
சே + புறம் = சேவின்புறம் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின்புறம் – எருமையின் முதுகு)
இளம்பூரணர் உரையால் , ‘சே’ என்பது மரத்தைக் குறித்தாலும் ‘இன்’ சாரியை
வரும் ; அம்பைக்குறிக்கும் ‘ஏ’ யும் ‘இன்’சாரியை பெறும் என்று அறியவருகிறோம் !-
5 . சே + கோடு = சேவின் கோடு √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் கோடு – சே மரத்தின் கிளை)
6 . சே + செதிள் = சேவின் செதிள் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் செதிள் – சே மரத்தின் வெட்டுத்துண்டு)
7 . சே + தோல் = சேவின் தோல் √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் தோல் – சே மரத்தின் பட்டை)
8 . சே + பூ = சேவின் பூ √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சேவின் பூ – சே மரத்தின் பூ)
9 . ஏ + கடுமை = ஏவின் கடுமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் கடுமை – அம்பின் கடிய தன்மை)
10 . ஏ + சிறுமை = ஏவின் சிறுமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் சிறுமை – அம்பின் சிறிய தன்மை)
11 . ஏ + தீமை = ஏவின் தீமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் தீமை – அம்பின் தீமை)
12 . ஏ + பெருமை = ஏவின் பெருமை √ (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏவின் பெருமை – அம்பின் பெருமை)
‘ஏ’ , வகர உடம்படுமெய் பெற்று , இன் சாரியையுடன், ‘ஏவின்’ என வந்துள்ளது காண்க !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (313)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர்மயங்கியலில் ‘ஏ’ ஈற்றுச் சொற்களின் புணர்சிகளை முடித்தோம் !
இப்போது , ‘ஐ’ ஈறு !
‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , அல்வழிப் புணர்ச்சியில், எப்படிப் புணரும் எனத் தொகைமரபு ஆய்வில் நாம் முன்பே பார்த்துள்ளோம் ! அதை நினைவுக்குக் கொணர்க !
தொகை மரபு நூற்பா 16இல் , ‘தினை + குறிது = தினை குறிது’என்ற அல்வழிப் புணர்ச்சியைப் பார்த்தோம் !
இப்போது அதே ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொல் , வேற்றுமைப் புணர்ச்சியில் எப்படிப் புணரும் எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் !-
“ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங். 78)
‘ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்’ – ‘ஐ’யை ஈற்றிலே கொண்ட பெயர்ச்சொற்களின் முன்பாக ,
‘வேற்றுமை ஆயின்’ – வேற்றுமைப் புணர்ச்சி எனில்,
‘வல்லெழுத்து மிகுமே’ – சந்தியாக வல்லொற்றுத் தோன்றும் !
1. யானை + கோடு = யானை கோடு ×
யானை + கோடு = யானைக் கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
[யானைக் கோடு – யானையின் கொம்பு (தந்தம்)]
2. யானை + செவி = யானை செவி ×
யானை + செவி = யானைச் செவி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(யானைச் செவி – யானையின் காது)
3. யானை + தலை = யானை தலை ×
யானை + தலை = யானைத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(யானைத் தலை – யானையின் தலை)
4. யானை + புறம் = யானை புறம் ×
யானை + புறம் = யானைப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(யானைப் புறம் – யானையின் முதுகு)
மேலை எடுத்துக்காட்டுகளில் , வருமொழி எல்லாம் வல்லெழுத்தை முதலாகக் கொண்டவை
என்பதைக் கவனிக்க !
நச்சினார்க்கினியர் கூடுதல் இலக்கணம் ஒன்றை இங்கே நமக்குத் தருகிறார் !
மேல் நான்கு எடுத்துக்காட்டுகளிலும் , வேற்றுமைப் புணர்ச்சியே எனினும், அவை யாவும் , உருபற்ற பொருள் புணர்ச்சிகளே என்பதையும் கவனிக்க!
அப்படியனால், வேற்றுமை உருபு சேர்ந்த ‘ஐ’ ஈற்றுப் பெயர் எப்படிப் புணரும் ?
இதுதான் நச்சரின் கூடுதல் இலக்கணம் !
அதன்படி –
5. யானையை + கொணர்ந்தான் = யானையை கொணர்ந்தான் ×
யானையை + கொணர்ந்தான் = யானையைக் கொணர்ந்தான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
6. யானையை + தேய்த்தான் = யானையை தேய்த்தான் ×
யானையை + தேய்த்தான் = யானையைத் தேய்த்தான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
7. யானையை + கண்டான் = யானையை கண்டான் ×
யானையை + கண்டான் = யானையைக் கண்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர்மயங்கியலில் ‘ஏ’ ஈற்றுச் சொற்களின் புணர்சிகளை முடித்தோம் !
இப்போது , ‘ஐ’ ஈறு !
‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , அல்வழிப் புணர்ச்சியில், எப்படிப் புணரும் எனத் தொகைமரபு ஆய்வில் நாம் முன்பே பார்த்துள்ளோம் ! அதை நினைவுக்குக் கொணர்க !
தொகை மரபு நூற்பா 16இல் , ‘தினை + குறிது = தினை குறிது’என்ற அல்வழிப் புணர்ச்சியைப் பார்த்தோம் !
இப்போது அதே ‘ஐ’ ஈற்றுப் பெயர்ச்சொல் , வேற்றுமைப் புணர்ச்சியில் எப்படிப் புணரும் எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் !-
“ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங். 78)
‘ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்’ – ‘ஐ’யை ஈற்றிலே கொண்ட பெயர்ச்சொற்களின் முன்பாக ,
‘வேற்றுமை ஆயின்’ – வேற்றுமைப் புணர்ச்சி எனில்,
‘வல்லெழுத்து மிகுமே’ – சந்தியாக வல்லொற்றுத் தோன்றும் !
1. யானை + கோடு = யானை கோடு ×
யானை + கோடு = யானைக் கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
[யானைக் கோடு – யானையின் கொம்பு (தந்தம்)]
2. யானை + செவி = யானை செவி ×
யானை + செவி = யானைச் செவி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(யானைச் செவி – யானையின் காது)
3. யானை + தலை = யானை தலை ×
யானை + தலை = யானைத் தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(யானைத் தலை – யானையின் தலை)
4. யானை + புறம் = யானை புறம் ×
யானை + புறம் = யானைப் புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(யானைப் புறம் – யானையின் முதுகு)
மேலை எடுத்துக்காட்டுகளில் , வருமொழி எல்லாம் வல்லெழுத்தை முதலாகக் கொண்டவை
என்பதைக் கவனிக்க !
நச்சினார்க்கினியர் கூடுதல் இலக்கணம் ஒன்றை இங்கே நமக்குத் தருகிறார் !
மேல் நான்கு எடுத்துக்காட்டுகளிலும் , வேற்றுமைப் புணர்ச்சியே எனினும், அவை யாவும் , உருபற்ற பொருள் புணர்ச்சிகளே என்பதையும் கவனிக்க!
அப்படியனால், வேற்றுமை உருபு சேர்ந்த ‘ஐ’ ஈற்றுப் பெயர் எப்படிப் புணரும் ?
இதுதான் நச்சரின் கூடுதல் இலக்கணம் !
அதன்படி –
5. யானையை + கொணர்ந்தான் = யானையை கொணர்ந்தான் ×
யானையை + கொணர்ந்தான் = யானையைக் கொணர்ந்தான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
6. யானையை + தேய்த்தான் = யானையை தேய்த்தான் ×
யானையை + தேய்த்தான் = யானையைத் தேய்த்தான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
7. யானையை + கண்டான் = யானையை கண்டான் ×
யானையை + கண்டான் = யானையைக் கண்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (314)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உருபியல் ஆய்வில் (நூற்பா 5) , ‘அவை’ என்ற சுட்டுப் பெயர் , ‘ஐ’உருபுடன் சேர்ந்து , ‘அவையற்றை’ , ‘அவற்றை’ என ‘வற்று’ச் சாரியை பெற்றுப் புணரும் என்று பார்த்தோம் !
இப்போது , அதே ‘அவை’ வேற்றுமைப் பொருள் புணர்ச்சியில் எப்படிப் புணரும் என்று கட்டுகிறார் –
“சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும்” ( உயிர்மயங். 79)
‘சுட்டுமுதல் இறுதி’ – சுட்டெழுத்து ‘அ’வை முதலாகக் கொண்ட ‘ஐ’ ஈற்றுச் சொல்லான ‘அவை’ என்ற பெயர்ச்சொல் ,
‘உருபியல் நிலையும்’ – உருபியல் நூற்பா 5இல் கூறியவாறு , ஈற்று ‘ஐ’ கெட்டும் கெடாதும் ,‘வற்று’ச் சாரியை பெற்று முடியும் !
நிலைமொழி ஈற்று ‘ஐ’ கெடாமல் , ‘வற்று’ப் பெற்றதற்கு எடுத்துக்காட்டுகள் !-
1. அவை + கோடு = அவைக் கோடு ×
அவை + கோடு = அவை + வற்று + கோடு = அவையற்றுக் கோடு √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுக் கோடு – அவைகளின் கிளை )
2. அவை + செவி = அவைச் செவி ×
அவை + செவி = அவை + வற்று + செவி = அவையற்றுச் செவி √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுச் செவி – அவைகளின் காது )
3. அவை + தலை = அவைத் தலை ×
அவை + தலை = அவை + வற்று + தலை = அவையற்றுத் தலை √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுத் தலை – அவைகளின் தலை )
4. அவை + புறம் = அவைப் புறம் ×
அவை + புறம் = அவை + வற்று + புறம் = அவையற்றுப் புறம் √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுப் புறம் – அவைகளின் புறப்பகுதி )
5. இவை + கோடு = இவைக் கோடு ×
இவை + கோடு = இவை + வற்று + கோடு = இவையற்றுக் கோடு √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுக் கோடு – இவைகளின் கிளை )
6. இவை + செவி = இவைச் செவி ×
இவை + செவி = இவை + வற்று + செவி = இவையற்றுச் செவி √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுச் செவி – இவைகளின் காது )
7. இவை + தலை = இவைத் தலை ×
இவை + தலை = இவை + வற்று + தலை = இவையற்றுத் தலை √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுத் தலை – இவைகளின் தலை )
8. இவை + புறம் = இவைப் புறம் ×
இவை + புறம் = இவை + வற்று + புறம் = இவையற்றுப் புறம் √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுப் புறம் – இவைகளின் புறப்பகுதி )
9. உவை + கோடு = உவைக் கோடு ×
உவை + கோடு = உவை + வற்று + கோடு = உவையற்றுக் கோடு √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுக் கோடு – உவைகளின் கிளை )
10. உவை + செவி = உவைச் செவி ×
உவை + செவி = உவை + வற்று + செவி = உவையற்றுச் செவி √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுச் செவி – உவைகளின் காது )
11. உவை + தலை = உவைத் தலை ×
உவை + தலை = உவை + வற்று + தலை = உவையற்றுத் தலை √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுத் தலை – உவைகளின் தலை )
12. உவை + புறம் = உவைப் புறம் ×
உவை + புறம் = உவை + வற்று + புறம் = உவையற்றுப் புறம் √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுப் புறம் – உவைகளின் புறப்பகுதி )
இனி , நிலைமொழி ஈற்று ‘ஐ’ கெட்டு , ‘வற்று’ப் பெற்றதற்கு எடுத்துக்காட்டுகள் ! -
13. அவை + கோடு = அவைக் கோடு ×
அவை + கோடு = அவை + வற்று + கோடு = அவற்றுக் கோடு √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுக் கோடு – அவைகளின் கிளை )
14. அவை + செவி = அவைச் செவி ×
அவை + செவி = அவை + வற்று + செவி = அவற்றுச் செவி √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுச் செவி – அவைகளின் காது )
15. அவை + தலை = அவைத் தலை ×
அவை + தலை = அவை + வற்று + தலை = அவற்றுத் தலை √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுத் தலை – அவைகளின் தலை )
16. அவை + புறம் = அவைப் புறம் ×
அவை + புறம் = அவை + வற்று + புறம் = அவற்றுப் புறம் √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுப் புறம் – அவைகளின் புறப்பகுதி )
17. இவை + கோடு = இவைக் கோடு ×
இவை + கோடு = இவை + வற்று + கோடு = இவற்றுக் கோடு √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுக் கோடு – இவைகளின் கிளை )
18. இவை + செவி = இவைச் செவி ×
இவை + செவி = இவை + வற்று + செவி = இவற்றுச் செவி √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுச் செவி – இவைகளின் காது )
19. இவை + தலை = இவைத் தலை ×
இவை + தலை = இவை + வற்று + தலை = இவற்றுத் தலை √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுத் தலை – இவைகளின் தலை )
20. இவை + புறம் = இவைப் புறம் ×
இவை + புறம் = இவை + வற்று + புறம் = இவற்றுப் புறம் √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுப் புறம் – இவைகளின் புறப்பகுதி )
21. உவை + கோடு = உவைக் கோடு ×
உவை + கோடு = உவை + வற்று + கோடு = உவற்றுக் கோடு √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுக் கோடு – உவைகளின் கோடு )
22. உவை + செவி = உவைச் செவி ×
உவை + செவி = உவை + வற்று + செவி = உவற்றுச் செவி √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுச் செவி – உவைகளின் செவி )
23. உவை + தலை = உவைத் தலை ×
உவை + தலை = உவை + வற்று + தலை = உவற்றுத் தலை √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுத் தலை – உவைகளின் தலை )
24. உவை + புறம் = உவைப் புறம் ×
உவை + புறம் = உவை + வற்று + புறம் = உவற்றுப் புறம் √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுப் புறம் – உவைகளின் புறப்பகுதி )
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உருபியல் ஆய்வில் (நூற்பா 5) , ‘அவை’ என்ற சுட்டுப் பெயர் , ‘ஐ’உருபுடன் சேர்ந்து , ‘அவையற்றை’ , ‘அவற்றை’ என ‘வற்று’ச் சாரியை பெற்றுப் புணரும் என்று பார்த்தோம் !
இப்போது , அதே ‘அவை’ வேற்றுமைப் பொருள் புணர்ச்சியில் எப்படிப் புணரும் என்று கட்டுகிறார் –
“சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும்” ( உயிர்மயங். 79)
‘சுட்டுமுதல் இறுதி’ – சுட்டெழுத்து ‘அ’வை முதலாகக் கொண்ட ‘ஐ’ ஈற்றுச் சொல்லான ‘அவை’ என்ற பெயர்ச்சொல் ,
‘உருபியல் நிலையும்’ – உருபியல் நூற்பா 5இல் கூறியவாறு , ஈற்று ‘ஐ’ கெட்டும் கெடாதும் ,‘வற்று’ச் சாரியை பெற்று முடியும் !
நிலைமொழி ஈற்று ‘ஐ’ கெடாமல் , ‘வற்று’ப் பெற்றதற்கு எடுத்துக்காட்டுகள் !-
1. அவை + கோடு = அவைக் கோடு ×
அவை + கோடு = அவை + வற்று + கோடு = அவையற்றுக் கோடு √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுக் கோடு – அவைகளின் கிளை )
2. அவை + செவி = அவைச் செவி ×
அவை + செவி = அவை + வற்று + செவி = அவையற்றுச் செவி √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுச் செவி – அவைகளின் காது )
3. அவை + தலை = அவைத் தலை ×
அவை + தலை = அவை + வற்று + தலை = அவையற்றுத் தலை √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுத் தலை – அவைகளின் தலை )
4. அவை + புறம் = அவைப் புறம் ×
அவை + புறம் = அவை + வற்று + புறம் = அவையற்றுப் புறம் √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(அவையற்றுப் புறம் – அவைகளின் புறப்பகுதி )
5. இவை + கோடு = இவைக் கோடு ×
இவை + கோடு = இவை + வற்று + கோடு = இவையற்றுக் கோடு √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுக் கோடு – இவைகளின் கிளை )
6. இவை + செவி = இவைச் செவி ×
இவை + செவி = இவை + வற்று + செவி = இவையற்றுச் செவி √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுச் செவி – இவைகளின் காது )
7. இவை + தலை = இவைத் தலை ×
இவை + தலை = இவை + வற்று + தலை = இவையற்றுத் தலை √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுத் தலை – இவைகளின் தலை )
8. இவை + புறம் = இவைப் புறம் ×
இவை + புறம் = இவை + வற்று + புறம் = இவையற்றுப் புறம் √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(இவையற்றுப் புறம் – இவைகளின் புறப்பகுதி )
9. உவை + கோடு = உவைக் கோடு ×
உவை + கோடு = உவை + வற்று + கோடு = உவையற்றுக் கோடு √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுக் கோடு – உவைகளின் கிளை )
10. உவை + செவி = உவைச் செவி ×
உவை + செவி = உவை + வற்று + செவி = உவையற்றுச் செவி √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுச் செவி – உவைகளின் காது )
11. உவை + தலை = உவைத் தலை ×
உவை + தலை = உவை + வற்று + தலை = உவையற்றுத் தலை √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுத் தலை – உவைகளின் தலை )
12. உவை + புறம் = உவைப் புறம் ×
உவை + புறம் = உவை + வற்று + புறம் = உவையற்றுப் புறம் √ (வற்று – சரியை; ய் – உடம்படு
மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உவையற்றுப் புறம் – உவைகளின் புறப்பகுதி )
இனி , நிலைமொழி ஈற்று ‘ஐ’ கெட்டு , ‘வற்று’ப் பெற்றதற்கு எடுத்துக்காட்டுகள் ! -
13. அவை + கோடு = அவைக் கோடு ×
அவை + கோடு = அவை + வற்று + கோடு = அவற்றுக் கோடு √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுக் கோடு – அவைகளின் கிளை )
14. அவை + செவி = அவைச் செவி ×
அவை + செவி = அவை + வற்று + செவி = அவற்றுச் செவி √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுச் செவி – அவைகளின் காது )
15. அவை + தலை = அவைத் தலை ×
அவை + தலை = அவை + வற்று + தலை = அவற்றுத் தலை √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுத் தலை – அவைகளின் தலை )
16. அவை + புறம் = அவைப் புறம் ×
அவை + புறம் = அவை + வற்று + புறம் = அவற்றுப் புறம் √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(அவற்றுப் புறம் – அவைகளின் புறப்பகுதி )
17. இவை + கோடு = இவைக் கோடு ×
இவை + கோடு = இவை + வற்று + கோடு = இவற்றுக் கோடு √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுக் கோடு – இவைகளின் கிளை )
18. இவை + செவி = இவைச் செவி ×
இவை + செவி = இவை + வற்று + செவி = இவற்றுச் செவி √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுச் செவி – இவைகளின் காது )
19. இவை + தலை = இவைத் தலை ×
இவை + தலை = இவை + வற்று + தலை = இவற்றுத் தலை √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுத் தலை – இவைகளின் தலை )
20. இவை + புறம் = இவைப் புறம் ×
இவை + புறம் = இவை + வற்று + புறம் = இவற்றுப் புறம் √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(இவற்றுப் புறம் – இவைகளின் புறப்பகுதி )
21. உவை + கோடு = உவைக் கோடு ×
உவை + கோடு = உவை + வற்று + கோடு = உவற்றுக் கோடு √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுக் கோடு – உவைகளின் கோடு )
22. உவை + செவி = உவைச் செவி ×
உவை + செவி = உவை + வற்று + செவி = உவற்றுச் செவி √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுச் செவி – உவைகளின் செவி )
23. உவை + தலை = உவைத் தலை ×
உவை + தலை = உவை + வற்று + தலை = உவற்றுத் தலை √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுத் தலை – உவைகளின் தலை )
24. உவை + புறம் = உவைப் புறம் ×
உவை + புறம் = உவை + வற்று + புறம் = உவற்றுப் புறம் √ (வற்று – சரியை; ஐ – கெட்டது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(உவற்றுப் புறம் – உவைகளின் புறப்பகுதி )
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (315)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஐ’ ஈற்றுச் சொற்களில் இப்போது , மூன்று மரப் பெயர்களை எடுத்துக்கொள்கிறார் !
அவை – விசை , ஞெமை , நமை !
இந்த மூன்று பெயர்ச்சொற்களும் ,வேற்றுமைப் புணர்ச்சியில் , எப்படிப் புணரும் ? இதுதான் வினா!
விடை !:-
“விசைமரக் கிளவியு ஞெமையு நமையும்
அவைமுப் பெயருஞ் சேமர வியல” (உயிர்மயங். 80)
என்ன சொல்கிறார் தொல்காப்பியர் ?
‘சே’ மரம் எப்படிப் புணர்ந்த்தோ அப்படிப் புணரும் ! அதற்குமேல் பேச்சில்லை என்கிறார் !
‘சே’ மரம் எங்கே புணர்ந்தது ?எப்படிப் புணர்ந்தது ?
‘சே’ மரம் , உயிர்மயங்கியல் நூற்பா 76இல் புணர்ந்தது !
அங்கே , ‘சே + கோடு = சேங் கோடு ’ , என மெல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்தது !
அதன்படி –
1. விசை + கோடு = விசைக் கோடு ×
விசை + கோடு = விசைங் கோடு√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(விசைங் கோடு – விசை மரத்தின் கிளை )
2. விசை + செதிள் = விசைச் செதிள் ×
விசை + செதிள் = விசைஞ் செதிள்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(விசைஞ் செதிள் – விசை மரத்தின் வெட்டுத் துண்டு )
3. விசை + தோல் = விசைத் தோல் ×
விசை + தோல் = விசைந் தோல்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(விசைந் தோல் – விசை மரத்தின் பட்டை )
4. விசை + பூ = விசைப் பூ ×
விசை + பூ = விசைம் பூ√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(விசைம் பூ – விசை மரத்தின் பூ )
5. ஞெமை + கோடு = ஞெமைக் கோடு ×
ஞெமை + கோடு = ஞெமைங் கோடு√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஞெமைங் கோடு – ஞெமை மரத்தின் கிளை )
6. ஞெமை + செதிள் = ஞெமைச் செதிள் ×
ஞெமை + செதிள் = ஞெமைஞ் செதிள்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஞெமைஞ் செதிள் – ஞெமை மரத்தின் வெட்டுத் துண்டு )
7. ஞெமை + தோல் = ஞெமைத் தோல் ×
ஞெமை + தோல் = ஞெமைந் தோல்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஞெமைந் தோல் – ஞெமை மரத்தின் பட்டை )
8. ஞெமை + பூ = ஞெமைப் பூ ×
ஞெமை + பூ = ஞெமைம் பூ√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஞெமைம் பூ – ஞெமை மரத்தின் பூ )
9. நமை + கோடு = நமைக் கோடு ×
நமை + கோடு = நமைங் கோடு√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(நமைங் கோடு – நனை மரத்தின் கிளை )
10. நமை + செதிள் = நமைச் செதிள் ×
நமை + செதிள் = நமைஞ் செதிள்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(நமைஞ் செதிள் –நமை மரத்தின் வெட்டுத் துண்டு )
11. நமை + தோல் = நமைத் தோல் ×
நமை + தோல் = நமைந் தோல்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(நமைந் தோல் – நமை மரத்தின் பட்டை )
12. நமை + பூ = நமைப் பூ ×
நமை + பூ = நமைம் பூ√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(நமைம் பூ – நமை மரத்தின் பூ )
மேல் புணர்ச்சிகள் யாவற்றிலும் , வருமொழியானது , வல்லெழுத்தை முதலாக உடையன
என்பதைக் கவனிக்க !
மேல் மரங்களில் , ‘விசை’ ஆய்வுக்குரியதாக உள்ளது !
‘ஞெமை’ , ‘நமை’ இரண்டும் ஒன்றுதான் என எழுதியுள்ளனர் !
ஞெமை , நமை , ஓமை மூன்றுமே ஒரே மரத்தைத்தான் குறிக்கின்றன எனவும் அதன்
தாவரவியல் பெயர் ‘Anogeissus latifolia’என்றும் குறித்துளர் !
நமை என்பதற்கு இன்னொரு பெயராக ‘வெக்காலி’ என்பதையும் தந்துளர் !
இப்போது , ஞெமை , நமை , ஓமை என்ற பெயர்களால் குறிக்கப்படும் அந்த மரத்தைக் காண்போமா?
(1)
[You must be registered and logged in to see this image.]
Courtesy – Flowers of India
(2)
[You must be registered and logged in to see this image.]
Courtesy – Wikipedia
(3)
[You must be registered and logged in to see this image.]
Courtesy – Wikipedia
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 39 of 84 • 1 ... 21 ... 38, 39, 40 ... 61 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 84
|
|