புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
19 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 28 of 84 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 56 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 07, 2014 10:24 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (211)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முந்தைய ஆய்வில் ‘அ’ ஈற்றில் முடியக்கூடிய பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபோடு புணரவேண்டுமானால் ‘இன்’சாரியை இடையே வரும் என்று தொல்காப்பியர் கூறினார் !
(உருபு . 1)

ஒரு மாணவன் , “அப்படியானால் எல்லா அகர ஈற்றுப் பெயர்களுமே இப்படித்தான் இன் சாரியை பெறவேண்டுமா?” எனக் கேட்டான் !

அதற்குத் தொல்காப்பியர் எழுதிய நூற்பா! :-

“பல்லவை நுதலிய  வகர விறுபெயர்
 வற்றொடு சிவண லெச்ச மின்றே” (உருபு . 2)

‘பல்லவை நுதலிய  வகர விறுபெயர்’ – பன்மைப் பொருளை உடைய அகர ஈற்றுப் பெயர்ச்சொற்கள் ,

 ‘வற்றொடு சிவண லெச்ச மின்றே ’ –  ‘வற்று ’ச்  சாரியை கொள்வதில் தவறா !

1 . பல்ல + ஐ = பல்லவற்றை (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
    பல்ல – அகர ஈற்றுப் பெயர்ச் சொல் (Noun) ; ‘பல’ என்பது பொருள் .
   ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு .

2 . பல்ல + ஒடு = பல்லவற்றொடு (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
       ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு .


3 . உள்ள + ஐ = உள்ளவற்றை (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
உள்ள- உள்ளவை என்பது பொருள்; பெயர்ச்சொல்.

4 . உள்ள + ஒடு = உள்ளவற்றொடு (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)

5 . இல்ல + ஐ = இல்லவற்றை (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
இல்ல- இல்லாதவை என்பது பொருள்; பெயர்ச்சொல்.

6 . இல்ல + ஒடு = இல்லவற்றொடு (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)

7 . சில + ஐ = சிலவற்றை (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)
சில - பெயர்ச்சொல்.

8 . சில + ஒடு = சிலவற்றொடு (வற்று – சாரியை ; ) (வேற்றுமைப் புணர்ச்சி)

இந்த இடத்தில் இளம்பூரணர் முதல் நூற்பாவுக்கு ஒரு விதிவிலக்கை எழுதுகிறார் !

அஃதாவது , அகர , ஆகார  ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கு ‘இன்’ சாரியை வரும்
என்றுதானே பார்த்தோம் ?  

சில இடங்களில் இன் சாரியையும் வரும் ,வேறு சாரியையும்
வரும் என்கிறார் இளம்பூரணர் ! –

1 . மக + ஐ = மகத்தை (அத்து - சாரியை) (ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)

2 . நிலா + ஐ = நிலாத்தை (அத்து - சாரியை) (,,)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 08, 2014 10:30 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (212)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

முன் ஆய்வு ஒன்றில் (உருபியல்) ,  ‘பலா’ என்ற பெயர்ச்சொல் ‘இன்’ சாரியை
பெற்றுப் ‘பலாவினை’ என்று ஆனதைப் பார்த்தோம் !

ஆனால் எல்லா ஆகார ஈற்றுச் சொற்களும் இவ் விதிக்குள் அடங்கா என்று
தெளிவுபடுத்துகிறார் தொல்காப்பியர் ! :-

“யாவென்  வினாவு  மாயிய  றிரியாது” (உருபு . 3)

யா – ஆகார ஈற்றுப் பெயர்ச்சொல்; வினாப் பெயர்.

இந்த ‘யா’வும்  ‘ஆயியல் ’ படி நடக்கும் !

‘ஆயியல் ’ – வற்றுச் சாரியை பெறுதல் (உருபு . 2இன் படி) .

யா + ஐ = யாவற்றை (வற்று - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு.

யா + ஒடு = யாவற்றொடு (வற்று - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஒடு – மூன்றாம் வேற்றுமை  உருபு.

முதலில் பொதுவான இலக்கணத்தைச் சொல்லுவது; பிறகு அப் பொது இலக்கணத்திற்கு அடங்காத இடங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு , அவற்றுக்குத் தனி இலக்கணம் வகுப்பது !  ஆனால் எல்லாப் புணர்ச்சிகளுக்குமே இலக்கியத்தில் அல்லது வழக்கில் சான்று இருக்கவேண்டும் ! – இதுதான்
தொல்காப்பிய விதிகளின் கட்டமைப்பு (Structure of Tholkappiyam) !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sat Feb 08, 2014 10:31 am

நல்ல பதிவுகள்..



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 09, 2014 8:46 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (213)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அதனை , இதனை – இந்தச் சொற்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் சொற்கள்!

இவற்றைப்பற்றியே இப்போது பார்க்கப்போகிறோம்!

முன் நூற்பாவில் (உருபு .1) , உகர ஈற்றுப் பெயர்ச் சொல்லானது வேற்றுமை உருபோடு புணரும்போது இன் சாரியை இடையே வருவதைக் காட்டினார் !

அப்படியானால் எல்லா உகர ஈற்றுச் சொற்களுமே இதே முறையில் புணருமா?- கேள்வி

தொல்காப்பியரின் விடை! :-

“சுட்டுமுத  லுகர மன்னொடு சிவணி
ஒட்டிய  மெய்யொழித்  துகரங் கெடுமே ”  (உருபு . 4)

‘சுட்டுமுதல் உகரம்’ -  ‘அது’ , ‘இது’ , ‘உது’ ஆகிய சொற்கள் ,

‘அன்னொடு சிவணி’ – அன் சாரியை பெறும்போது,

 ‘ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடுமே’ – ஈற்று உகரமானது ,தான் நின்ற மெய்யை அங்கேயே விட்டுவிட்டுத் தான் மட்டும் கெடும் !


அது + ஐ = அதனை (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

அது + ஒடு = அதனொடு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இது + ஐ = இதனை (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இது + ஒடு = இதனொடு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

உது + ஐ = உதனை (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

உது + ஒடு = உதனொடு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இவற்றில் ‘உது’ என்ற சொல் நமக்குப் பழக்கமில்லாதது ! மறைந்துபோன
தமிழ்ச் சொற்களில் ( Obsolete words in Tamil ) இதுவும் ஒன்று !


‘உதுக்காண்’ என ஐங்குறுநூற்றிலும் , ‘உப்பக்கம்’ என்று திருக்குறளிலும்
உகரம் இடைமைச் சுட்டாக வந்துள்ளது ! இது இந்த இரு நூற்களின் பழமைக்குச்
சான்று !


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 09, 2014 3:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (214)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 ‘அது’ , ‘இது’ ஆகிய சொற்களோடு எப்படி வேற்றுமை உருபுகள் சேரும் என்பதைச்
சற்று முன்பு பார்த்தோம் !

இதைப் போன்றே , ‘அவை’ , ‘இவை’ புணர்வதை அடுத்துக் காட்டுகிறார்
தொல்காப்பியர் ! :-

“சுட்டுமுத லாகிய வையெ னிறுதி
வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே” (உருபு . 5)

‘சுட்டுமுதல்  ஆகிய ஐ என்  இறுதி ’ -  ‘அவை’ , ‘இவை’ , ‘உவை’ ஆகிய சொற்கள் ,

‘வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே’ – ‘வற்று’ச் சாரியை பெற்றுப் புணரும்போது
ஈற்று ஐகாரம் நிற்றலும் உரித்து , நில்லாமையும் உரித்து!

நிற்றலும் – உம்மை எதிர்மறை உம்மை !

உருபியல் முதல் நூற்பாவில் என்ன சொன்னார்?

ஐகார ஈற்றுப் பெயர்ச்சொற்கள் வேற்றுமை உருபுகளோடு சேரவேண்டுமானால் ‘இன்’சாரியை வரும் என்றாரல்லவா?

அதற்கு விதிவிலக்குத்தான் இப்போது நாம் பார்க்கும் நூற்பா!

இங்கே இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம் ! :-

1 . அவை + ஐ =  அவை + வற்று +ஐ =  அவையற்றை (வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கே யகர உடம்படுமெய் எப்படி வந்தது ?

புணரியல் நூற்பா 20இல் ( ‘வஃகான் மெய்கெட ...’ )  ஐகார ஈற்றின்முன்னர் வரும் ‘வ்’
கெடும் எனச் சொல்லியுள்ளார் தொல்காப்பியர் !

அதன்படி -  அவை + வற்று + ஐ = அவை + ய் + அற்று + ஐ = அவையற்றை √ (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

இதே முறையில்தான் –
2 . அவை +ஒடு = அவை + வற்று + ஒடு = அவை + ய் + அற்று + ஒடு =அவையற்றொடு
(வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

இம் முறைப்படியே -

3 .  இவை + ஐ =  இவை + வற்று +ஐ = இவை + ய் + அற்று + ஐ = இவையற்றை
(வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

4 . இவை + ஒடு =  இவை + வற்று +ஒடு = இவை +  ய்+ அற்று + ஒடு = இவையற்றொடு (வற்று – சாரியை;
ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)


5 . உவை + ஐ =  உவை + வற்று +ஐ =  உவை +ய் + அற்று +ஐ =உவையற்றை
(வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

6 . உவை + ஒடு =  உவை + வற்று +ஒடு =  உவை + ய் + அற்று + ஒடு =உவையற்றொடு (வற்று – சாரியை; ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)

 இவ்விடத்தில்  இளம்பூரணர் , நிலைமொழி ஈற்று ‘ஐ’ கெட்டு , ‘வற்று’ச் சாரியை
கொண்டு புணர்தலும் உண்டு என எடுத்துக்காட்டுகளை முன் வைக்கிறார் ! : -

1 . அவை + ஐ = அவை + வற்று + ஐ =அ + வற்று + ஐ =  அவற்றை (வற்று - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கே ‘அவை’ என்பது ‘அ’ஆனது எப்படி ? அதற்கு விதி உண்டா?
உண்டு !

புணரியல் நூற்பா 31இல் ( ‘அத்தே வற்றே …’), ‘அவை’ எனபதன் முன் ‘வற்று’ வந்தால் ,
‘வை’ கெடும் என்பதற்கு விதி உள்ளது ! அதனை இங்கு கொள்ளவேண்டும் !

இதே முறைப்படி-

2 . அவை + ஒடு = அவை + வற்று + ஒடு = அ + வற்று + ஒடு =அவற்றொடு √

3 . இவை + ஐ = இவை + வற்று + ஐ = இ + வற்று + ஐ = இவற்றை √

4 .  இவை + ஒடு = இவை + வற்று + ஒடு = இ + வற்று + ஒடு =இவற்றொடு √

5 . உவை + ஐ = உவை + வற்று + ஐ = உ + வற்று + ஐ =உவற்றை √

6 . உவை + ஒடு = உவை + வற்று + ஒடு = உ + வற்று + ஒடு =உவற்றொடு √

இவற்றில் , ‘அவையற்றை’ , ‘இவையற்றை’ , ‘உவையற்றை’ ஆகியன வழக்கிழந்த
(Obsolete) சொற்களாகிவிட்டன!


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 13, 2014 8:36 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (215)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘யாவை’ – இது வினாப் பெயர் !

இது வேற்றுமை உருபை எப்படி ஏற்கும்? –

“யாவென் வினாவி  னையெ னிறுதியும்
ஆயிய றிரியா தென்மனார் புலவர்
ஆவயின் வகரம் மையொடுங் கெடுமே ” (உருபு . 6)

‘யாவென் வினாவின் ஐ என் இறுதியும் ’ -  ‘யாவை’ என்ற சொல்லின் ஈற்று ஐ ,வேர்றுமை உருபோடு புணரும்போது ,

‘ஆயியல் திரியாது’ -  ‘வற்று’ச் சாரியை தப்பாது வரும் !

‘ஆவயின் வகரம் ஐயொடும் கெடும்’ – அப்போது ‘வ்’ , ‘ஐ’யுடன் கெடும் !

யாவை + ஐ = யா + வ் + ஐ  + வற்று + ஐ = யாவற்றை  (முதல் ‘ஐ’ , ‘வை’யின் ஐ , இரண்டாம் ‘ஐ’ , இரண்டாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கு ,  ‘வகரம் ஐயொடுங் கெடுமே ’ என்பதற்கு ஏற்ப , ‘வ்’, ‘ஐ’ இரண்டும் கெட்டுள்ளதைக் காண்க !

யாவை + ஒடு = யா + வ் + ஐ  + வற்று + ஒடு = யாவற்றொடு  ( ‘ஐ’ , ‘வை’யின் ஐ ; ஒடு-  மூன்றாம் வேற்றுமை உருபு) (வேற்றுமைப் புணர்ச்சி)

  ‘யா’வை அடுத்த  ‘ஐ’யென் இறுதிக்குத்தானே தொல்காப்பியர் விதி கூறினார்?  அப்படியானால் ‘யாவை’ என்ற அந்த ஒரு சொல்லுக்குத்தான் அவர் விதி பொருந்துமா?

 ‘அப்படி நினைக்காதீர்கள்’ என்கிறார் இளம்பூரணர் !

  ‘கரியவை ’, ‘செய்யவை’ – என  ‘ஐ’யை ஈற்றிலே கொண்ட பிற சொற்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்கிறார் இளம்பூரணர் !

கரியவை + ஐ = கரியவை + வற்று + ஐ = கரியவற்றை (வேற்றுமைப் புணர்ச்சி)

கரியவை + ஒடு = கரியவை + வற்று + ஒடு = கரியவற்றொடு (வேற்றுமைப் புணர்ச்சி)

செய்யவை + ஐ = செய்யவை + வற்று + ஐ = செய்யவற்றை (வற்று- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

செய்யவை + ஒடு = செய்யவை + வற்று + ஒடு = செய்யவற்றொடு (வற்று- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)

மேலைப் புணர்ச்சிகள் – ‘கரியவையை’ , ‘செய்யவையை’ என்றெல்லாம்  ‘வற்று’ச் சாரியை இல்லாமற் புணர்ந்தால் , பொருள் தெளிவு இருக்குமா?

இராது !

எனவேதான் சாரியை தமிழ்ப் புணர்ச்சிகளுக்குத் தேவையாகிறது !

சில வேற்றுமை உருபுகளுக்குக் கட்டாயம் சாரியை தேவை என ஆகும்போது , அதே விதிக்கட்டு (Formula) பிற வேற்றுமை உருபுகளுக்கும் பொருத்தப்படுகிறது !

இதுதான் சாரியை இரகசியம்(Secret of Euphonic extention) !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2014 8:40 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 28 103459460 
-


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 15, 2014 7:37 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (216)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘நின்னை’ – இச் சொல்லை நாம் அறிவோம் !

இவ்வடிவம் எப்படி ஏற்பட்டது?

இதற்குத் தொல்காப்பிய விதி உள்ளதா?

உள்ளது ! : -

“நீயெ  னொருபெயர் நெடுமுதல் குறுகும்
ஆவயி  னகர மொற்றா கும்மெ ”  (உருபு . 7)

‘நீ என் ஒரு பெயர்’ – ‘நீ’ என்ற பெயர்ச்சொல் ,

‘நெடுமுதல் குறுகும்’ – ‘நீ’ , என்பது ‘நி’ எனக் குறுகும் !

‘ஆவயின் னகரம் ஒற்றா கும்மே’ – அந்த இடத்தில் , ‘ன்’ வரும் !

நீ + ஐ = நி + ன் + ஐ = நின் + ஐ (நீ- குறுகியது ;ன் - எழுத்துப்பேறு) = நின் + ன் + ஐ =நின்னை (ன் - இரட்டித்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)

நீ + ஒடு = நி + ன் + ஒடு = நின் + ஒடு (  நீ- குறுகியது ;ன் – எழுத்துப்பேறு வந்தது) = நின் + ன் + ஒடு =நின்னொடு (ன் - இரட்டித்தது ) (வேற்றுமைப் புணர்ச்சி)

அது சரி ! ‘இன்’சாரியை , ‘வற்று’ச் சாரியை கூறிவந்தவர் , எழுத்துப்பேற்றுக்கு வருவானேன்?

மூன்றாம் வேற்றுமைதான் காரணம் !

அஃதாவது-
‘நீ + ஆல் ’ என்ற புணர்ச்சிக்கு ‘இன்’ சாரியை சேர்த்து  ‘நீயினால்’ என எழுத முடியுமா?
முடியாதல்லவா?

எனவேதான் ‘ன்’ எழுத்துப்பேறு ! ‘நின்னால்’ என அப்போது ஆகும் !

எழுத்துப்பேறு வந்த இரகசியம் இதுதான் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 16, 2014 10:54 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (217)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘இன்’ சாரியை  ‘வற்று’ச் சாரியை முதலியவற்றை நாம் அறிவோம் !

இவை நமக்குப் பழக்கமானவை ! இவற்றைப் பெற்ற சொற்களும் நமக்குப் பழக்கமானவையே !

ஆனால் ‘ஒன்’என்று ஒரு சாரியையைத் தொல்காப்பியர் காட்டுகிறார் ! (அவர் புதிதாகக் காட்டுவது இது one தானா?)

தொல்காப்பிய நூற்பா ! :-

“ஓகார விறுதிக் கொன்னே சாரியை” (உருபு . 8)

 ‘ஓகார இறுதிக்கு’ – ‘ஓ’வை ஈறாகக் கொண்ட சொற்கள் ,

‘ஒன்னே சாரியை’ -  வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது, ‘ஒன்’என்ற சாரியையைப் பெறும் !

1 .கோ + ஐ = கோ + ஒன் + ஐ = கோஒனை (ஒன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)(வேற்றுமைப் புணர்ச்சி)

2 . கோ + ஐ = கோ + ஒன் + ஒடு = கோஒனொடு (ஒன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)(வேற்றுமைப் புணர்ச்சி)


‘கோஒனை’ , ‘கோஒனொடு’ – இச் சொற்களை உச்சரிப்பதற்கே நாம் பெரு முயற்சி எடுக்க வேண்டுமே !

இந்தக் காரணத்தால் , நடுவே உள்ள ‘ஒ’ , பிற்காலத்தில் மறையலாயிற்று !

நேரடியாகவே ‘கோனை’ , ‘கோனொடு’ என்று கூறும் மரபு தோன்றிவிட்டது !

இம் மரபு தோன்றவே , நன்னூலார் அதற்கேற்ப விதியை எழுதிவிட்டார் !

நன்னூலில் , “ஆமா  கோனவ்  வணையவும்  பெறுமே” (248) என்றுளது.

‘ஆ , மா , கோ    னவ் அணையவும் பெறுமே’ -  ஆ , மா , கோ  ஆகிய    எழுத்துகளில் முடியும் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது ,  ‘ஒன்’ சாரியையின்  ‘ஒ’ மறைந்து, ‘ன்’மட்டும்  பெறுதலும் உண்டு !

நன்னூலின் இக்கருத்துப்படி –

கோ + ன் + ஐ = கோனை (ன் –  ‘ஒன்’னின்  ‘ஒ’கெட்டதால் வந்தது)

இந்த ‘ஒன்’சாரியை, நமக்குத் தொல்காப்பியத்தின் பழமையைத் தெளிவாகக் காட்டுகிறதல்லவா?


இங்கே ஒரு சுவடியியல் (Manuscriptology) நுட்பத்தை நான் கூறவேண்டும் !

அஃதாவது , ஓலைச் சுவடிகளில் , ‘கோ’வை அடுத்து எழுத வேண்டிய  ‘ஒ’வை எழுதமாட்டார்கள் ! அது ‘தெரிந்ததுதான்’ (understood) என்று விட்டுவிடுவார்கள் ! அவ்வாறு விட்டுவிடவே ‘கோஒனை’ என்பது நாளடைவில்  ‘கோனை’என்றே நின்றுவிட்டது !

ஆக , ஒலிப்புத் துன்பம் , ஓலை எழுத்து மரபு ஆகியவற்றால் ‘ஒன்’சாரியை மறைந்தது !

இதுதான் ‘ஒன்’சாரியை மறைந்த இரகசியம் !


இங்கே நச்சினார்க்கினிய
ர் ,அவர் கால மரபை ஒத்துக்கொண்டு,  ‘ஓகார இறுதிக்கு இன் சாரியையும் வரும்’ஒரு விதி விலக்கை அளிக்கிறார் ! :-

அவ் விதி விலக்கின்படி-

1 .கோ + ஐ = கோ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= கோ + வ் + இன் + ஐ = கோவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

2 .சோ + ஐ = சோ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= சோ + வ் + இன் + ஐ = சோவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

3 . ஓ + ஐ = ஓ + இன் + ஐ (இன் – சாரியை; ஐ – இரண்டாம் வேற்றுமை உருபு)= ஓ + வ் + இன் + ஐ = ஓவினை (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப்
புணர்ச்சி)

4 . கோ + ஒடு = கோ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= கோ + வ் + இன் + ஒடு = கோவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

5 .சோ + ஒடு = சோ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= சோ + வ் + இன் + ஒடு = சோவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

6. ஓ + ஒடு = ஓ + இன் + ஒடு (இன் – சாரியை; ஒடு – மூன்றாம் வேற்றுமை உருபு)= ஓ + வ் + இன் + ஒடு = ஓவினொடு (வ் – உடம்படு மெய்)(வேற்றுமைப் புணர்ச்சி)

கோ – அரசன்(பெயர்ச் சொல்)

சோ - அரண்(பெயர்ச் சொல்)

ஓ – மதகு நீரைத் தாங்கும் பலகை (பெயர்ச் சொல்)      

                                                          ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 18, 2014 9:26 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (218)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 ‘அ’, ‘ஆ’க்களில் முடியும் பெயர்சொற்கள் , வேற்றுமை உருபுகளை ஏற்கவேண்டுமாயின்
‘இன்’சாரியை வரும் என்று தொல்காப்பியர் சொல்லியுள்ளார் ! (உருபு .1)

அதற்கு ஒரு சிறப்பு விதியை இப்போது கூறுகிறார் ! : -

“அஆ  வென்னு  மரப்பெயர்க்  கிளவிக்
கத்தொடுஞ்  சிவணு  மேழ  னுருபே  ” (உருபு . 9)

விள + கண் = விள + அத்து + கண் = விளவத்துக் கண் (அத்து – சாரியை ; வ் – உடம்படு மெய் ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)

பலா + கண் = பலா + அத்து + கண் = பலாவத்துக் கண் (அத்து – சாரியை ; வ் – உடம்படு மெய் ; கண் – ஏழாம் வேற்றுமை உருபு)

எந்த விதியானாலும் மரங்களின் பெயர்களோடு பொருத்தி விதி சொல்வது தொல்காப்பியக் கோட்படு !

பழந்தமிழர் வாழ்வு இயற்கையோடு இயைந்தது ! எனவே பழந்தமிழ் இலக்கணமும் இயற்கைக்குச் சிறப்பிடம் தந்துள்ளது !

மரங்களின் பெயர்களோடு ‘அத்து’ , ‘கண்’ எல்லாம் சேர்த்துக் கூறும் மரபு தொல்காப்பியர் காலத்துத் தமிழில் மிகுதியாக இருந்திருக்கவேண்டும் !

இப்போது இவ்வழக்கு பெரும்பாலும் மறைந்துவிட்டது !

இப்படிப்பட்ட ஆய்வுகள் , மீண்டும் மீண்டும் தொல்காப்பியத்தின் பழமையைத்தான் நமக்குக் காட்டுகிறது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 28 of 84 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 56 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக