புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_lcapதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_voting_barதொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 19 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 19 of 84 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 51 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Sep 17, 2013 8:59 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (129)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் சில ‘அக்கு’ச் சாரியை பெறுவதையும் (‘குன்றக் கூகை’ , குற்றியலு. 13) , சில ‘அன்’ சாரியை பெறுவதையும் ( ‘ஒன்றன் காலம்’ , குற்றியலு. 14) முன் கட்டுரைகளில்  ஆய்ந்தோம் !

சில மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் , ‘இன்’ சாரியை பெறுதலை அடுத்துக் கூறுகிறார் தொல்காப்பியர் ! :-

“வண்டு பெண்டு மின்னொடு சிவணும்” (குற்றியலு. 15)

இதற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகள் !:-

வண்டு + கால் = வண்டின் சாரியை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)
பெண்டு + கால் = பெண்டின் கால் (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பெண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)
‘வண்டின் கால்’ என்றால் வண்டது கால்தானே ? அப்போது ‘இன்’ என்பது வேற்றுமை உருபு ஆகாதா ?
நல்ல கேள்வி !
இங்கு ‘இன்’ வேற்றுமை உருபா சாரியையா என்பதை அறிய ஒரு சூட்சுமம் உள்ளது !
அஃதாவது , ‘அது’ எனும் ஒரு வேற்றுமை உருபை எடுத்துக்கொள்ளுங்கள் ! ‘வண்டினது கால்’ ஆகும் ; பொருளிலும் குழப்பமில்லை ! ‘அது’ எனும் வேற்றுமை உருபை ‘இன்’ ஏற்றுள்ளதால் , அந்த ‘இன்’னானது சாரியைதான் என முடிவுகட்டுங்கள் ! அந்த ‘இன்’ உருபாக இருந்தால் , இன்னொரு வேற்றுமை உருபை ( ‘அது’வை)  ஏற்காதல்லவா?

‘அவரின் பண்புகள்’ – இங்கே ‘இன்’ வேற்றுமை உருபு ! சாரியை அல்ல ! ஏனெனில் , ‘அவரினது பண்புகள்’ என வராது !

‘பெண்டு’ என்பது ‘இன்’ சாரியை பெறும் ; ஆனால் , இது ‘அன்’ சாரியையும் பெறும்  என அடுத்துக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! :-

“பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்”  (குற்றியலு. 16)

அஃதாவது ,  பெண்டு + கை = பெண்டன் கை (அன் - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் நூற்பாவில் ‘அன்’னும் என்பதிலுள்ள உம்மை எச்ச உம்மை !
‘உம்’மையை , மொழியியலில் ‘Particles’ என்ற பிரிவில் பேசுவர் !
‘பெண்டென் கிளவி’ – என நூற்பாவில் வந்ததல்லவா ?
இதிலுள்ள  ‘என்’னை ‘Referential Particle’ என்று மொழியியலில் குறிப்பர் ! தமிழ் மரபிலக்கணத்தில் ‘என்ற எனும் பொருளில் வரும் ஓர் இடைச் சொல்’ !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 20, 2013 10:27 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (130)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

யாது – நெடில்தொடர்க் குற்றியலுகரம் !
அஃது – ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் !
- இரண்டும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் எப்படிப் புணருமாம் ?

தொல்காப்பியம் கூறுகிறது !:-

“யாதெ னிறுதியுஞ் சுட்டு முதலாகிய
ஆய்த விறுதியு முருபிய  னிலையும்”  (குற்றியலு. 17)

‘யாதென் இறுதியும்’ – ‘யாது’ எனும் குற்றியலுகர ஈற்றுச் சொல்லும் ,

‘சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும்’ – ‘அஃது’ என்ற ஆய்தத் தொடர்க் குற்றியலுகரச் சொல்லும் ,

‘உருபியல் நிலையும்’ – உருபியலில் (குற்றியலு. 26) கூறியபடி , ‘அன்’ சாரியை பெறும் !

இந் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகள் ! :-

யாது + கோடு = யாதன் கோடு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + செவி = யாதன் செவி  (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + தலை = யாதன் தலை  (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

யாது + புறம் = யாதன் புறம்  (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

அஃது + கோடு = அஃதன் கோடு ×
    = அஃது கோடு ×
   = அதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + செவி = அதன் செவி √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + தலை  = அதன் தலை √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + புறம் = அதன் புறம் √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இஃது + கோடு = இதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + செவி = இதன் செவி √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + தலை  = இதன் தலை √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + புறம் = இதன் புறம் √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

உஃது + கோடு = உதன் கோடு √ (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + செவி = உதன் செவி √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + தலை  = உதன் தலை √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + புறம் = உதன் புறம் √    (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இத் தொல்காப்பிய நூற்பா (குற்றியலு. 17) ஆழ்ந்து எண்ணற் குரியது !

‘அதன்’ என்ற சொல்லைப் பார்த்த மாத்திரத்தில் அதற்குள் ‘அஃது’ இருப்பதை ஊகிக்க முடியாது ! தொல்காப்பியர் காலத்திற்குப் போனால்தான் உண்மை தெரிய வருகிறது !

‘அது’ என்ற சொல் இருக்கும்போது ‘அஃது’ ஏன் வருகிறது ?

புணர்ச்சிதான் காரணம் !
  ‘அது + ஆவது = அதுவாவது ’ என வந்தால் ஒரு உடம்படு மெய் வருகிறது ! உடம்படுமெய்யைத் தவிர்க்க ,  ஆய்தத்தைப் போட்டு ‘அஃதாவது’ ஆகிக்கொள்கிறது ! ‘அது’ எனும் முற்றியலுகரச் சொல் தன்னைக் குற்றியலுகரச் சொல்லாக –  ‘அஃது’வாக – ஆக்கிக் கொண்டால்தான்  இப் புணர்ச்சி சாத்தியமாகும் ! திருக்குறளில் ‘அஃதொருவன்’ என்று வருகிறதல்லவா? இதை ‘அதுவொருவன்’ என மாற்றிப் பாருங்கள் ! வெண்பாவிற்குரிய ஓசையே கவிழ்ந்துவிடும் ! எனவே புணர்ச்சி நோக்கில்தான் ‘அது’ , ‘அஃது’வாக மாறுகிறது என்பது புலனாகிறது !
‘அதன்’ என்ற சொல்லில்  , ‘அன்’ என்பது வேற்றுமை உருபு போலத் தோன்றலாம் ! ஆனால் தொல்காப்பியர்  அந்த ‘அன்’ என்பது , சாரியைதான் என்று தெளிவாக்கியுள்ளார் !

சாரியையை மொழியியலில்  ‘Augment ’என்றும் எழுதுவர் .
யாது – Interrogative pronoun .
‘யாது’ என்பதில் , யா – Proclitic எனப்படும்.
Clitic என்பதைப்  ‘பிந்து ஒட்டு ’ என்பர் !
 ‘வந்ததுவோ’ – என்பதில் ‘அது’ , விகுதி ; ஓ , ‘பிந்து ஒட்டு’ ; சொல்லின் ஈற்றில் வந்துள்ளதால் , இது Enclitic எனப்படும்!

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 21, 2013 4:43 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (131)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அஃது , இஃது, உஃது – சுட்டுப் பெயர்கள் ! ஆய்தத் தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே கொண்ட  சொற்கள் !

இவற்றின்  வேற்றுமைப் புணர்சிகளை முன் கட்டுரையில் பார்த்தோம் !

அல்வழிப் புணர்ச்சியில் இவை எப்படிப் புணரும் ?

தொல்காப்பியர் விடை கூறுகிறார் ! :-

“முன்னுயிர் வருமிடத்  தாய்தப்  புள்ளி
மன்னல் வேண்டு மல்வழி யான”      (குற்றியலு .18)

‘முன்னுயிர் வருமிடத்து’  - புணர்வதற்கு வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் ,

‘ஆய்தப் புள்ளி மன்னல் வேண்டும்’  - அஃது, இஃது, உஃது ஆகிய சொற்களின் இடையே உள்ள ஆஃத எழுத்து கெடாது நிற்க வேண்டும் ;
‘அல்வழி யான’ – அல்வழிப் புணர்ச்சியில் !
ஆய்த எழுத்தை , ‘ஆய்தப் புள்ளி’ என்று தொல்காப்பியர் எழுதினார் பாருங்கள் ! ‘புள்ளி’ என்ற சொல் தொல்காப்பியர் நாளையில் எழுத்தையும் குறித்திருக்கிறது !
ஆய்தப் புள்ளி – இருபெயரொட்டுப் பண்புத் தொகை  ;  ஆய்தமாகிய புள்ளி என விரியுங்கள் , உங்களுக்கு விளங்கும் !

நச்சினார்க்கினியர் இதற்குத் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்தெழுதலாம் ! :-

அஃது + அடை = அதனடை ×
  = அஃதடை √ (அல்வழிப் புணர்ச்சி)

அஃது + ஆடை = அஃதாடை √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + இலை = அஃதிலை √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஈயம் = அஃதீயம் √         (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + உரம் = அஃதுரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஊர்தி = அஃதூர்தி √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + எழு = அஃதெழு √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஏணி = அஃதேணி √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஐயம் = அஃதையம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஒடுக்கம் = அஃதொடுக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஓக்கம் = அஃதோக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + ஔவியம் = அஃதௌவியம் √ (அல்வழிப் புணர்ச்சி)

எழு – தூண் ; ஓக்கம் – உயரம் ; ஔவியம் – வஞ்சகம் (fraud) .

‘அஃது’ என்ற ஆய்தத் தொடர்க் குற்றியலுகரச் சொல், அ முதல் ஔ வரையான 12 உயிர் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் வந்து புணர்ந்த முறையை மேலே பார்த்தோம் !

     சிறு வயதில் நாம் படித்த ‘அணில் , ஆமை’ப் பாடம் நமக்கு நினைவுக்கு வரவேண்டும் !

     ‘ஔ’வை முதலாகக் கொண்ட சொல்லுக்கு நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டைப் பார்த்தீர்களா? – ஔவியம் !

       ‘அவ்வியம்’ என  இதனை எழுதக் கூடாது என்பது நச்சினார்க்கினியரின் ஆணை !

    ‘ஔ’வும் ‘அவ்’வும் ஒன்றல்ல !

      ‘ஔ’வை உச்சரித்துப் பாருங்கள் ; உங்கள் அழகிய இதழ்கள் எப்படி அமைகின்றன? பிறகு ‘அவ்’ என்று சொல்லிப்பாருங்கள் ; இதழ் அமைவது வேறுமாதிரியாக இருக்கும் ! ஒலிப்பு முறையிலேயே வேறுபாடு இருக்கும்போது ‘ஔ’வை ‘அவ்’வென்று எழுதலாமா? நுண்ணிய ஒலி நுட்பத்தைத்  தமிழ் உலகுக்கு அறிவித்திருக்கும்போது , ‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லப் போகிறீர்களா?

‘அஃது’ புணர்ந்ததை மேலே பார்த்தோம் ! அதே முறையில் ‘இஃது’ ,‘ உஃது’ புணர்வதைக் கீழே கண்போம் ! : -

    இஃது + அடை = இதனடை ×
  = இஃதடை √ (அல்வழிப் புணர்ச்சி)

இஃது + ஆடை = இஃதாடை √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + இலை = இஃதிலை √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஈயம் = இஃதீயம் √         (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + உரம் = இஃதுரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஊர்தி = இஃதூர்தி √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + எழு = இஃதெழு √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஏணி = இஃதேணி √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஐயம் = இஃதையம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஒடுக்கம் = இஃதொடுக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஓக்கம் = இஃதோக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + ஔவியம் = இஃதௌவியம் √ (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + அடை = உதனடை ×
  = உஃதடை √ (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + ஆடை = உஃதாடை √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + இலை = உஃதிலை √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஈயம் = உஃதீயம் √         (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + உரம் = உஃதுரம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஊர்தி = உஃதூர்தி √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + எழு = உஃதெழு √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஏணி = உஃதேணி √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஐயம் = உஃதையம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஒடுக்கம் = உஃதொடுக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஓக்கம் = உஃதோக்கம் √ (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + ஔவியம் = உஃதௌவியம் √ (அல்வழிப் புணர்ச்சி)

மேல் நூற்பாவுக்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஒரு விதி விலக்கைத் தருகிறார்கள் !

  உயிர் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது , அல்வழிப் புணர்ச்சியில் மட்டுமல்லாது , வேற்றுமைப் புணர்ச்சியிலும், சிலபோது ,அஃது , இஃது , உஃது ஆகியவற்றின் நடுவே உள்ள ஆய்தம் கெடாது நிற்கும் ! – இதுதான் அந்த உரையாசிரியர்கள் தரும் விதிவிலக்கு !
இதற்கு நச்சினார்க்கினியர் தரும் சான்றுகளை வருமாறு தரலாம் ! :-

அஃது + அடைவு = அதனடைவு ×
= அஃதடைவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
அஃது + ஒட்டம் = அஃதொட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

இஃது + அடைவு = இஃதடைவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
இஃது + ஒட்டம் = இஃதொட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

உஃது + அடைவு = உஃதடைவு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உஃது + ஒட்டம் = உஃதொட்டம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)

அஃதடைவு(இரண்டாம் வேற்றுமைத் தொகை) – அதனை அடைதல் .
அஃதொட்டம் (இரண்டாம் வேற்றுமைத் தொகை) – அதனை ஒட்டுதல் .

    ஒட்டுதல் - பந்தையப் பொருளாக வைத்தல் . 1950 களில் இச்சொல் வழக்கில் இருந்தது ! இன்று அருஞ்சொல்லாகிவிட்டது !நாங்கள் விளையாடியபோது ‘நான் பத்துத் தீப்பெட்டிப் படம் ஒட்டியுள்ளேன்; நீ எவ்வளவு ஒட்டுகிறாய் ?’ என்று கேட்டது என் நினைவுக்கு வருகிறது ! தீப்பெட்டிப் படம்தான் பந்தயப் பொருள் !

நூற்பா இறுதியில் ,  ‘அல்வழி யான’ என்று இரு சீர்கள் வந்ததைப் பாருங்கள் !  

‘அல்வழிக்கு’ என வரவேண்டியதுதான் ‘அல்வழியான’ என்று வந்துள்ளது !

அஃதவது , ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில் , ‘ஆன்’ எனும் மூன்றாம் வேற்றுமை உருபு வந்துள்ளது ! இதுதான் ‘வேற்றுமை மயக்கம்’ (Antiptosis)!

‘ஆன’ என்ற சீரை , ‘ஆன் + அ’ எனப் பிரிக்க வேண்டும் !
‘ஆன்’ என்பதற்கு விளக்கம் மேலே பார்த்துவிட்டோம் !
ஈற்று  ‘அ’ ?

ஈற்று ‘அ’வைச் சாரியை எனல் வேண்டும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 21, 2013 9:23 pm

விளக்கங்கள் அருமை ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 22, 2013 10:00 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (132)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அஃது , இஃது , உஃது – ஆகிய சொற்கள் , அல்வழிப் புணர்ச்சியில் , ஆய்தத்தை இழக்காமல் புணரும் என்பதை முன் கட்டுரையில் பார்த்தோம் !

நாம் பார்த்த எடுத்துக்காட்டுகள் , உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் ( ‘அடை’முதலானவை) வந்து புணர்ந்ததற்கே !

அப்படியனால் , மெல்லின , இடையின , வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ?

தொல்காப்பியரின் விடை ! :-

“ஏனைமுன்  வரினே  தானிலை  யின்றே” (குற்றியலு.19)

‘ஏனைமுன் வரினே’ – உயிர் எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் தவிர , ஏனைய , மெல்லின , இடையின , வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தால் ?

‘தான் நிலையின்றே’ – அஃது ,இஃது , உஃது ஆகியவற்றின் இடையிலே உள்ள ஆய்தம் நிலைக்காது !

இதற்கு இளம்பூரணர் காட்டிய எடுத்துக்காட்டுகளை வருமாறு பட்டியலிடலாம் ! :-

அஃது + கடிது = அது கடிது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + சிறிது = அது சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + தீது = அது தீது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + பெரிது = அது பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

மேல் நான்கும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததற்குச் சான்றுகள் ! கீழே , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்குச் சான்றுகள் !:-
அஃது + ஞான்றது = அது ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + நீண்டது = அது நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + மாண்டது = அது மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

இனி , இடையெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்குச் சான்றுகள் !:-

அஃது + யாது = அது யாது (அல்வழிப் புணர்ச்சி)
அஃது + வலிது = அது வலிது (அல்வழிப் புணர்ச்சி)

மேல் ஒன்பது சான்றுகள் ‘அஃது’க்கு வந்தது போல ‘இஃது’க்கும் , ‘உஃது’க்கும் வருமாறு முறையே காட்டியுள்ளார் இளம்பூரணர் ! : -

இஃது + கடிது = இது கடிது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + சிறிது = இது சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + தீது = இது தீது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + பெரிது = இது பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

இஃது + ஞான்றது = இது ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + நீண்டது = இது நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + மாண்டது = இது மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

இஃது + யாது = இது யாது (அல்வழிப் புணர்ச்சி)
இஃது + வலிது = இது வலிது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + கடிது = உது கடிது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + சிறிது = உது சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + தீது = உது தீது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + பெரிது = உது பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + ஞான்றது = உது ஞான்றது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + நீண்டது = உது நீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + மாண்டது = உது மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது + யாது = உது யாது (அல்வழிப் புணர்ச்சி)
உஃது + வலிது = உது வலிது (அல்வழிப் புணர்ச்சி)

உஃது – இந்த வடிவம் இப்போது இல்லை !
தொல்காப்பியம் மிகப் பழமையான நூல் என்பதற்கு இதுவே சான்று ! ‘அஃது’ம் ‘இஃது’ம் இறக்கும் தருவாயில் மருத்துவ மனையில் உள்ளன ! நம் கண் முன்னே பழஞ் சொற்கள் மறைவதைப் பார்த்தீர்களா ?

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Sep 22, 2013 1:23 pm

பயனுள்ள பதிவு,,,, அருமையான விளக்கங்கள்...... தொடருங்கள் அய்யா
வி.பொ.பா ..



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 22, 2013 4:11 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (133)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் நங்கூரம் பாய்ச்சியுள்ளோம் !

இப்போது நாம் காணப்போகும் நூற்பா ! :-

“அல்லது கிளப்பி னெல்லா மொழியும்
சொல்லிய பண்பி னியற்கை யாகும்”!    (குற்றியலு. 20)  

‘அல்லது கிளப்பின்’ – அல்வழிப் புணர்ச்சியில்,

‘எல்லா மொழியும்’ – வன்றொடர்க் குற்றியலுகரம் நீங்கலாகப் பிற நெடில்தொடர்க் குற்றியலுகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் , ஆய்தத்தொடர்க் குற்றியலுகரச் சொற்களும்,

‘சொல்லிய பண்பின்’ -  முன் (குற்றியலு.19) சொன்னவாறு,

‘இயற்கை யாகும்’ – சந்தியாகப் புதிய எந்த எழுத்தும் தோன்றாது முடியும் !

இதற்கு இளம்பூரணர் தரும் சான்றுகள் ! :-

நாகு + கடிது = நாகு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(நாகு – ஈற்று உகரம், நெடில்தொடர்க் குற்றியலுகரம்)

நாகு + சிறிது = நாகு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
நாகு + தீது = நாகு தீது (அல்வழிப் புணர்ச்சி)
நாகு + பெரிது = நாகு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

வரகு + கடிது = வரகு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(வரகு – ஈற்று உகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

வரகு + சிறிது = வரகு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
வரகு + தீது = வரகு தீது (அல்வழிப் புணர்ச்சி)
வரகு + பெரிது = வரகு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

தெள்கு + கடிது = தெள்கு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(தெள்கு – ஈற்று உகரம், இடைத்தொடர்க் குற்றியலுகரம்)

தெள்கு + சிறிது = தெள்கு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
தெள்கு + தீது = தெள்கு தீது (அல்வழிப் புணர்ச்சி)
தெள்கு + பெரிது = தெள்கு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

எஃகு + கடிது = எஃகு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(எஃகு – ஈற்று உகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்)

எஃகு + சிறிது = எஃகு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
எஃகு + தீது = எஃகு தீது (அல்வழிப் புணர்ச்சி)
எஃகு + பெரிது = எஃகு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

குரங்கு + கடிது = குரங்கு கடிது (அல்வழிப் புணர்ச்சி) (சந்தி வரவில்லை!)
(குரங்கு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

குரங்கு + சிறிது = குரங்கு சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
குரங்கு + தீது = குரங்கு தீது (அல்வழிப் புணர்ச்சி)
குரங்கு + பெரிது = குரங்கு பெரிது (அல்வழிப் புணர்ச்சி)

இவற்றின் பின் தொல்காப்பியர் சொல்லாமல் விட்ட சில இலக்கணக் கூறுகளை மொழிகிறார் இளம்பூரணர் ! :-


1 . “வினைச் சொல்லும் , வினைக் குறிப்புச் சொல்லும் இயல்பாய் முடிந்தன கொள்க”.
இளம்பூரணரின் இக்கருத்துக்கு அவரே சில சான்றுகளைத் தருகிறார் :-

கிடந்தது + குதிரை = கிடந்தது குதிரை (அல்வழிப் புணர்ச்சி)
(கிடந்தது – வினைச் சொல் ; ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

கரிது + குதிரை = கரிது குதிரை (அல்வழிப் புணர்ச்சி)
(கரிது – வினைக்குறிப்புச் சொல் ; ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)

2 . “இருபெயரொட்டுப் பண்புத்தொகை முடிபு கொள்க”.

இளம்பூரணரின் இக் கருத்திற்கு நச்சினார்க்கினியர் சிறு விளக்கம் தருகிறார் ! – “இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணத்துக்கண் இனவெழுத்து மிக்கு , வல்லெழுத்துப் பெற்று முடிதலும் , இயல்புக் கணத்துக்கண் இனவொற்று மிக்கு முடிதலும் கொள்க !”
நச்சினார்க்கினியர் அவரது கருத்திற்கு ஏதுவான சான்றுகளையும் தருகிறார் !:-

கரடு + கானம் = கரட்டுக் கானம் (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
(கரடு – பெயர்ச் சொல்; ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்)
( ‘கரடாகிய கானம்’ என விரித்தால் , ‘இருபெயரொட்டுப் பண்புத்தொகை’ ஆவதைச் சுகமாகக் காண்பீர் !)
‘கரடு’ என்பது, ‘கரட்டு’ ஆனதில்  ‘ட்’ இரட்டித்துள்ளதைக் காண்கிறோமல்லவா? இதைத்தான் நச்சினார்க்கினியர் ‘இனவெழுத்து மிக்கு’ , ‘இனவொற்று மிக்கு’ என்றார் !வேறு ஒன்றும் அஞ்ச வேண்டாம் !

இதே முறையில் கீழ்வரும் நச்சினார்க்கினியரின் காட்டுகளையும் நோக்குக :-

குருடு + கோழி = குருட்டுக் கோழி (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
திருடு + புலையன் = திருட்டுப் புலையன் (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
களிறு + பன்றி = களிற்றுப்  பன்றி (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
வெளிறு + பனை = வெளிற்றுப்  பனை (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
எயிறு + பல் = எயிற்றுப் பல் (வல்லெழுத்து மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

வறடு + ஆடு = வறட்டாடு (வல்லெழுத்து மிகவில்லை)(அல்வழிப் புணர்ச்சி)
குருடு + எருது = குருட்டெருது (வல்லெழுத்து மிகவில்லை)(அல்வழிப் புணர்ச்சி)

3 . “ ஐ என்னும் சாரியை பெற்று வரும் அல்வழி முடிபும் கொள்க”!

இதற்கு அவரே , இளம்பூரணரே , காட்டும் சான்றுகளை வருமாறு விரிக்கலாம் ! :-

அன்று + கூத்தன் = அற்றைக் கூத்தன் ( ஐ - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(அன்று – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

பண்டு + சான்றார் = பண்டைச் சான்றார் ( ஐ - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(பண்டு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

ஓர் யாண்டு + யனை = ஓர் யாட்டை யானை ( ஐ - சாரியை) (அல்வழிப்
புணர்ச்சி)
(யாண்டு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

மற்று + யானை = மற்றை யானை ( ஐ - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(மற்று – ஈற்று உகரம், வன்றொடர்க் குற்றியலுகரம்)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 28, 2013 11:51 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (134)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

அல்வழிப் புணர்ச்சியில், நெடில்தொடர்க் குற்றியலுகரம் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் , இடைத்தொடர்க் குற்றியலுகரம் , ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் , இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களோடு புணரின் , இயல்பாய் ( ‘நாகு கடிது’) முடியும் என்று கண்டோம்  (குற்றியலு. 20)!

மேல் பட்டியலில் , வன்றொடர்க் குற்றியலுகரம் விடுபட்டதை நீங்கள் பார்க்கவேண்டும் !

அல்வழிப் புணர்ச்சியில் , விடுபட்ட வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் எவ்வாறு முடியும் என்பதை விளக்குகிறார் தொல்காப்பியர் ! :-

“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே” (குற்றியலு. 21)

‘வல்லொற்றுத் தொடர்மொழி’ – வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் ,

‘வல்லெழுத்து மிகுமே’ – வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொல்லுடன் புணரும்போது , வல்லெழுத்து மிக்கு முடியும் ! :-

கொக்கு + கடிது = கொக்குக் கடிது  (க்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

கொக்கு + சிறிது = கொக்குச் சிறிது  (ச்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

கொக்கு + தீது = கொக்குத் தீது  (த்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

கொக்கு + பெரிது = கொக்குப்  பெரிது  (ப்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)

‘நாகு கடிது’ என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான்; ‘கொக்குக் கடிது’ என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் ! இப்படி இருக்க , ஒன்றில் வல்லெழுத்து மிகவில்லை ; மற்றதில் மிகுகிறது ! என்ன இரகசியம் ?

வெல்லப் பாகு காய்ச்சுகிறீர்கள் ! அது கெட்டியாக உள்ளது ; அதை  எப்படிச் சொல்வீர்கள் ?

‘பாகு கடிது’ – எனக் கூறலாம் ! ‘பாகு கெட்டியாக உள்ளது’ – என்றுதான் கூறுவர் ! ஒற்று வரவில்லை இடையே ! தொல்காப்பியர் இதைத்தானே கூறினார் ?

ஆனால் , ‘கொக்கு’ என்ற வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் வரும்போது மட்டும் , அந்தக் கொக்கானது சிறிதாக இருந்தால், ‘கொக்குச் சிறிது’ என்று கூறவேண்டும் !

இது நமக்குக் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது !

ஆனால் , கிராமங்களில் நம் தமிழர்கள் எப்படிப் பேசுகிறார்கள் ?

‘மூக்குப் பெரிசு அவளுக்கு’ !

‘சாக்குச் சின்னதா இருக்கு’ !

‘வாக்குச் சுத்தம் அவருக்கு’! – இந்த மூன்றும் அல்வழிப் புணர்ச்சிதான் ! மூக்கு , சாக்கு, வாக்கு மூன்றுமே வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள்தாம் !  

தமிழர்கள் நாவில் இயல்பாகப் புழங்குவதற்கு மதிப்பளிப்பது தொல்காப்பியம் !

தொல்காப்பியத்திற்கு முந்தைய அகத்தியமும் இப்படித்தான் இருந்திருக்கும் !

ஒலிப்புமுறை (Articulation) அடிப்படையிலும்  இதனை ஆராய்வோம் !

‘குரங்கு ’ என்று கூறிவிட்டுச் சிறிது இடைவெளி கொடுத்துச் ‘சிறிது’ என்று கூறும்போது, ‘குரங்கு சிறிது’ ஆகிக் கருத்தும் தெளிவாகிறது !

ஆனால் , அதே பிராணியான குரங்கைக்  ‘குரக்கு’ என்று எழுதினால் , அப்போதும் ‘குரக்கு’ என்று சொல்லிவிட்டு ஓர் இடைவெளியைத் தர உந்துதல் (Urge) ஏற்படுகிறது ! அதைச் செய்துமுடிப்பதற்குத்தான், ஒரு ‘க்’கை அண்டக்கொடுக்கிறோம் ! நாம் எதிர்பர்த்த இடைவெளி கிடைத்துவிடுகிறது !

‘பாகு கடிது’ , உதாரணத்தில், ஈற்று எழுத்துக்கு( ‘கு’விற்கு) முன் (இடப்புறம்) உயிர் எழுத்தாகிய  ‘ஆ’உள்ளது;  இந்த உயிருடன் ஈற்றுக் ‘கு’வை உச்சரிக்கும்போது , வேகம் குறைந்து , ஓர் இடைவெளி உண்டாகிறது ! இந்தக் காரணத்தால்தான் , இங்கு வல்லெழுத்து மிகவில்லை !

இந்த ஒலிப்பு முறையோடு , நாம் மேலே பார்த்த தமிழர்தம் இயல்புப் பேச்சும் ஒத்துவரக் காணலாம் !

இப்போது , ‘கொக்குக் கடிது’ என்பதில் ஏன் சந்தியாக ‘க்’ வருகிறது என்ற இரகசியம் விளங்கியதா ?
நீங்கள் வாழ்க !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 28, 2013 5:07 pm

தமிழர்கள் நாவில் இயல்பாகப் புழங்குவதற்கு மதிப்பளிப்பது தொல்காப்பியம் !
புணர்ச்சி விதிகள் பற்றிய விளக்கங்கள் அருமை புன்னகை தொடர்கிறோம்  



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 29, 2013 5:21 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (135)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஆங்கு சென்றான்’

‘ஆங்குச் சென்றான்’

- இவற்றில் எது சரி ?
தொல்காப்பியத்தில் விதி இருக்கிறதா?


இருக்கிறது ! :-

“சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்
யாவினா முதலிய மென்றொடர் மொழியும்
ஆயிய றிரியா வல்லெழுத் தியற்கை”       (குற்றியலு. 22)

‘சுட்டுச் சினை’ – ‘சினை’ என்றால் ‘உறுப்பு’;சொல்லுக்கு உறுப்பாகச் சுட்டெழுத்து நிற்பதால், சுட்டெழுத்தைக் குறிக்கச் ‘சுட்டுச் சினை’ என்கிறார் தொல்காப்பியர் ! ‘அ இ உ  அம்மூன்றும் சுட்டு’ (நூன் மரபு.31) என ஏற்கனவே அவர் கூறியுள்ளதை நினைக்க !

‘நீடிய’ – ‘அ’ நீண்டால் ‘ஆ’ ; ‘இ’  நீண்டா  ‘ஈ’ ; ‘உ’  நீண்டால் ‘ஊ’ !

‘மென்றொடர் மொழியும்’ -  ‘ஆ’வைக் கொண்ட மென்றொடர்க் குற்றியலுகரச் சொல் ‘ஆங்கு’ ; இதே போல  ‘ஈ’யைக் கொண்டது  ‘ஈங்கு’ ; ‘ஊ’வைக் கொண்டது ‘ஊங்கு’ ! இம் மூன்றும் ,

‘யா வினா முதலிய மென்றொடர் மொழி’ -  வினாப் பொருள் தரும் ‘யா’ என்ற எழுத்தை அடியாகக் கொண்ட ஒரு மென்றொடர்க் குற்றியலுகரச் சொல் ‘யாங்கு’ம் ,

‘ஆயியல்’ -  முன் நூற்பாவில் (குற்றியலு.21) கூறிய இயல்பு – ‘கொக்குக் கடிது’; அல்வழிப் புணர்ச்சியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வரும்போது , வல்லொற்று மிகும் இயல்பு ,
‘திரியா வல்லெழுத்து இயற்கை’ – ‘கொக்குக் கடிது’ – என்பதில் வல்லொற்றுச் சந்தி வந்ததுபோலப் புணரும் !

இதன்படி நடக்கும் புணர்ச்சிகளை இளம்பூரணர் காட்டும் எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் வருமாறு தரலாம் ! :-

ஆங்கு + கொண்டான் = ஆங்குக் கொண்டான் (க் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஈங்கு + கொண்டான் = ஈங்குக் கொண்டான் (க் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஊங்கு + கொண்டான் = ஊங்குக் கொண்டான் (க் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
யாங்கு + கொண்டான் = யாங்குக் கொண்டான் (க் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)


ஆங்கு + சென்றான் = ஆங்குச் சென்றான் (ச் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஈங்கு + சென்றான் = ஈங்குச் சென்றான் (ச் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஊங்கு + சென்றான் = ஊங்குச் சென்றான் (ச் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான் (ச் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)


ஆங்கு + தந்தான் = ஆங்குத் தந்தான் (த் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஈங்கு + தந்தான் = ஈங்குத் தந்தான் (த் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஊங்கு + தந்தான் = ஊங்குத் தந்தான் (த் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
யாங்கு + தந்தான் = யாங்குத் தந்தான் (த் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)

ஆங்கு + போயினான் =ஆங்குப் போயினான் (ப் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஈங்கு + போயினான் =ஈங்குப் போயினான் (ப் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
ஊங்கு + போயினான் =ஊங்குப் போயினான் (ப் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)
யாங்கு + போயினான் =யாங்குப் போயினான் (ப் - சந்தி) (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆங்கு’ என்பதை  “ஏழாம் வேற்றுமை இடப் பொருளுணர  நின்ற இடைச் சொல்’’ எனக் குறிக்கிறார் இளம்பூரணர் !

இஃது இன்றியமையாத குறிப்பு !

‘அங்கு’ வேறு ; ‘ஆங்கு’ வேறு !

அங்கு – சுட்டுப் பெயர் (Demonstrative pronoun) !
ஆங்கு –  ‘அவ்விடத்து’ எனும் பொருளில் வரும் ஓர் இடைச் சொல் (Particle) !
சுட்டிக் கூறும் பொருள் கொண்டது , ‘அங்கு’!
இடப் பொருள் கொண்டது , ‘ஆங்கு’ !
காரைக்குடி நல்ல ஊர் ; ஆங்குப் பெறும் கல்வி சிறந்தது ! √
காரைக்குடி நல்ல ஊர் ; அங்குப் பெறும் கல்வி சிறந்தது ! ×

காரைக்குடி நல்ல ஊர் ; அங்குச்  சென்றேன் ! √
காரைக்குடி நல்ல ஊர் ; ஆங்குச்  சென்றேன் !  ×

இப்போது , ‘அங்கு’ , ‘ஆங்கு’களுக்குள்ள வேறுபாடு விளங்கியிருக்கலாம் !

இந் நூற்பா உரையில் , இளம்பூரணர் தரும் கூடுதல் இலக்கணம் – “அக் குற்றுகர ஈற்று வினையெச்ச முடிபு கொள்க !” .

இதற்கு விளக்கம் , அவரது எடுத்துக்காட்டுகளில் உளது ! :-

செத்து + கிடந்தான் = செத்துக் கிடந்தான் ( க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இருந்து + கொண்டான் = இருந்து கொண்டான் ( க்- மிகாது) (அல்வழிப் புணர்ச்சி)

செத்து – வன்றொடர்க் குற்றியலுகரம் பெற்ற வினையெச்சச் சொல் !
இருந்து – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்ற வினையெச்சச் சொல் !

பலருக்கும் வினையெச்சத் தொடர்கள் எழுதுவதில் தகராறு ! ஒற்றுப் போட வேண்டுமா ? வேண்டாமா?
இங்கே இளம்பூரணர் தீர்த்துவைத்துள்ளார் !

‘யாங்குக் கொண்டான்’ எனும் வடிவத்தை மேலே பார்த்தோம் !

‘யாங்கு கொண்டான்’ – என்பதுதானே சரி ? – நீங்கள் தலையைச் சொறிகிறீர்கள் !

உங்கள் ஐயம் நியாயமானதுதான் !

‘யாங்கு கொண்டான்’ √
‘யாங்குக்  கொண்டான்’√   -   இரண்டுமே சரிதான் !

சொல்பவர் தொல்காப்பியர் ! :-

“யாவினா மொழியே யியல்பு மாகும்”  (குற்றிய . 23)

‘யாவினா மொழி’ – ‘யாங்கு’

‘இயல்பு மாகும் ’ – முன் சொன்னதுபோல ஒற்றுப் பெற்றும் வரும் , பெறாதும் வரும் !

இதற்கு இளம்பூரணர் தந்த சான்றுகள் ! :-

யாங்கு + கொண்டான் = யாங்குக் கொண்டான் √ (க்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
= யாங்கு  கொண்டான் √ (க்- மிகவில்லை) )(அல்வழிப் புணர்ச்சி)

யாங்கு + சென்றான் = யாங்குச் சென்றான் √ (ச்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
= யாங்கு  சென்றான் √ (ச்- மிகவில்லை) )(அல்வழிப் புணர்ச்சி)

யாங்கு + தந்தான் = யாங்குத் தந்தான் √ (த்- மிகுந்தது)(அல்வழிப் புணர்ச்சி)
= யாங்கு  தந்தான் √ (த்- மிகவில்லை) )(அல்வழிப் புணர்ச்சி)

மேல் ‘யாங்கு’ என்ற சொல்லுக்குப் பொருள் – ‘எப்படி’ என்கிறார் நச்சினார்க்கினியர் ! (குற்றியலு . 23 நச். உரை)
அப்படியானால் , குற்றியலு . 22 இன் கீழ் வந்த ‘யாங்கு’க்கு வேறு பொருளா ?

நமக்குப் பொறி தட்டுகிறது !

ஆம் !
‘யாங்கு’  =  எங்கே ? (குற்றியலு. 22)
‘யாங்கு’  =  எப்படி ? (குற்றியலு . 23)

‘எங்கே?’ என்ற பொருளில் ‘யாங்கு’ வந்தால் , ஒற்று மிகும் ! – ‘யாங்குச் சென்றாள் ?’ = ‘எங்கே சென்றள் ?’

‘எப்படி ?’ என்ற பொருளில் ‘யாங்கு’ வந்தால் , ஒற்று மிகாது ! – ‘யாங்கு சென்றாள் ?’ = ‘எப்படிச் சென்றாள் ?’
ஆகவே ‘யாங்கு’ என்ற வடிவத்தைப் பயன்படுத்தும்போது , இந்த வேறுபாட்டை அறிந்து பயன்படுத்துவோமாக !

ஆளைக் காணவில்லையே , யாங்கு சென்றாள் ? ×
ஆளைக் காணவில்லையே , யாங்குச் சென்றாள் ? √

வண்டி ஓட்டத்தெரியாதே ,   யாங்கு சென்றாள் ? √
வண்டி ஓட்டத்தெரியாதே ,   யாங்குச்  சென்றாள் ? ×

‘யாங்கு’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘எப்படி’ என்ற பொருளைக் காட்டியதால் நமக்கு மேலைக் கருத்துகள் தெளிவாயின !

நமக்கு முன்பும் இதனைத் தொட்டுக் காட்டியுள்ளார் ச . பாலசுந்தரனார் – “யாங்ஙனம் எனப் பண்புப் பொருட்டாக வருங்காலையே இயல்பாம்; இடப் பொருளாயின் மிகுமென அறிக !”.

இவற்றை அடுத்த நூற்பா ! :-

       “அந்நான் மொழியும் தந்நிலை திரியா !”  (குற்றியலு . 24)

‘அந் நான் மொழி’ – எந்நான் மொழி ?

விளக்கம் எந்த உரையாசிரியர்களிடமும் காணப்படவில்லை !

உரையாசிரியர்கள் தந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து நாம் பொருளை வருவிக்க வேண்டும் !

தொல்காப்பிய ஆய்வில் குறிப்பிடத்தக்கது இது !

இளம்பூரணர் இந்த நூற்பாவிற்கு (குற்றியலு. 24), ‘அங்குக் கொண்டான்’ , ‘எங்குக் கொண்டான்’ என்றெல்லாம் தந்த சான்றுகளைக் கொண்டு கீழ் வரும் விளக்கத்தை நாம் எட்டலாம் !
அஃதாவது , குற்றியலு.22இல் வந்த ‘சுட்டுச் சினை நீடிய’ ,  ‘யா வினா’ முதலியன நிலை திரிந்தவை என்பதைக் கவனிக்க வேண்டும் !
அப்படியனால் , சுட்டுச் சினை (சுட்டெழுத்து) நீடாது வருகின்றதையும் ,  ‘யா’வை முதலாகக் கொள்ளாத ,அதற்கு முந்தைய வடிவத்தையும் நாம் கொள்ள வேண்டும் ! அவை – அங்கு ,இங்கு , உங்கு, எங்கு !
மேல் நூற்பாவில்  (குற்றியலு. 24), வந்த  ‘அந் நான் மொழி’ – அங்கு , இங்கு . உங்கு , எங்கு !

‘தந்நிலை திரியா’ – அங்கு , இங்கு , உங்கு , எங்கு என்று இதே நிலை திரியாது ( அக்கு , இக்கு என்றெல்லாம் ஆகாது), வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது , வல்லொற்றைச் சந்தியாகப் பெறும் !

இதற்கு இளம்பூரணரின் சான்றுகள் ! :-

அங்கு + கொண்டான் = அங்குக் கொண்டான் (க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு + கொண்டான் = இங்குக் கொண்டான் (க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
உங்கு + கொண்டான் = உங்குக் கொண்டான் (க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எங்கு + கொண்டான் = எங்குக் கொண்டான் (க்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அங்கு + சென்றான் = அங்குச் சென்றான் (ச்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு + சென்றான் = இங்குச் சென்றான் (ச்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
உங்கு + சென்றான் = உங்குச் சென்றான் (ச்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எங்கு + சென்றான் = எங்குச் சென்றான் (ச்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அங்கு + தந்தான் = அங்குத்  தந்தான் (த்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு + தந்தான் = இங்குத் தந்தான் (த்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
உங்கு + தந்தான் = உங்குத் தந்தான் (த்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எங்கு + தந்தான் = எங்குத் தந்தான் (த்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

அங்கு + போயினான் = அங்குப் போயினான் (ப்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
இங்கு + போயினான் = இங்குப் போயினான் (ப்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
உங்கு + போயினான் = உங்குப் போயினான் (ப்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)
எங்கு + போயினான் = எங்குப் போயினான் (ப்- மிகுந்தது) (அல்வழிப் புணர்ச்சி)

‘ஆங்குக் கொண்டான்’ , ‘அங்குக் கொண்டான்’ என்று மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள்  புணரும் இதே முறையில்தான் எல்லா மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்களும் புணருமா ?

‘அல்ல !’ என்பவர் இளம்பூரணர் !

வல்லொற்றுச் சந்தி பெறாது , இயல்பாய் முடியும் மென்றொடர்க் குற்றியலுகரச்  சொற்களை இளம்பூரணர் காட்டுகிறார் ! :-

முந்து + கொண்டான் = முந்துக் கொண்டான் ×
முந்து + கொண்டான் = முந்து கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி )

பண்டு + கொண்டான் = பண்டுக் கொண்டான் ×
பண்டு + கொண்டான் = பண்டு கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி )

இன்று + கொண்டான் = இன்றுக் கொண்டான் ×
இன்று + கொண்டான் = இன்று கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி )

அன்று + கொண்டான் = அன்றுக் கொண்டான் ×
அன்று + கொண்டான் = அன்று கொண்டான் √  (அல்வழிப் புணர்ச்சி )

மேலே கண்ட முந்து , பண்டு , அன்று , இன்று ஆகிய நான்கும் பெயர்ச் சொற்களே (Nouns)
இவற்றை நச்சினார்க்கினியர் எப்படிக் கூறினார் ?

“எழாவதன் காலப் பொருட்டாய சொற்கள்”!

அஃதாவது , ஏழாம் வேற்றுமை உருபாகிய ‘கண்’ என்பதற்கு இடப் பொருளும் உண்டு , காலப் பொருளும் உண்டு !
வீட்டின்கண் அது காணப்பட்டது ! ( கண் – இடப் பொருள்)
சென்ற மாதத்தின்கண் அது  நடந்தது ! ( கண் – காலப் பொருள்)

இதன் அடிப்படையில் ,
முந்து  - முற்காலத்தின்கண் (கண் – காலப் பொருளில்)
பண்டு  - பண்டைக் காலத்தின்கண் (கண் – காலப் பொருளில்)
இன்று  - இற்றைநாளின்கண் (கண் – காலப் பொருளில்)
அன்று  - அற்றைநாளின்கண் (கண் – காலப் பொருளில்)

நச்சினார்க்கினியர் கணக்கு நேர் !

இந்த ஆய்வில் பெறும் ஒரு மொழியியல் உண்மையை (Linguistic truth) நாம் குறித்தாக வேண்டும் !
‘அங்கு’ என்பதிலிருந்தே ‘ ஆங்கு’ வந்தது !
‘எங்கு’ என்பதிலிருந்தே  ‘யாங்கு’ வந்தது !

அங்கு >  ஆங்கு
எங்கு > யாங்கு

ஓலைச் சுவடிகளிலிருந்து செவ்வியல் (Classical) நூற்களைப் பதிப்பிக்கும் முயற்சிகள் அண்மைக்காலத்தில் எழுந்துள்ளதால் , அப் பணிக்கும் இம் முடிபு பயனாகும் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 19 of 84 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 51 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக