புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
26 Posts - 38%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
3 Posts - 4%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
3 Posts - 4%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
7 Posts - 6%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
5 Posts - 4%
Jenila
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
4 Posts - 3%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
2 Posts - 2%
viyasan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 18 of 84 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 51 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Fri Sep 06, 2013 7:43 am

அருமையான விளக்கம் , நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Sep 06, 2013 11:12 am

புணர்ச்சிகள் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி ஐய்யா



[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 07, 2013 1:57 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (125)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குரங்கு + கால் = குரங்குக் கால் √
குரங்கு + கால் = குரக்குக் கால் √

இஃதெப்படி ? இரண்டுமா சரி ? தொல்காப்பிய விதி  இதற்கு உள்ளதா?

இதோ உள்ளது !:-

“வன்தொடர் மொழியும் மென்தொடர் மொழியும்
வந்த வல்லெழுத்து ஒற்றிடை மிகுமே
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்று எல்லாம்
வல்லொற்று இறுதிக் கிளையொற்று ஆகும் ”  (குற்றியலு. 9)


‘வன்தொடர் மொழியும்’ – வன்றொடர்க் குற்றியலுகரமும்

‘மென்தொடர் மொழியும்’ – மென்றொடர்க் குற்றியலுகரமும்

‘வந்த வல்லெழுத்து’ – வரு சொல்லின் முதலெழுத்து வல்லின எழுத்தாகும்போது

‘ஒற்றிடை மிகுமே’ – நின்ற சொல்லுக்கும் , வரு சொல்லுக்கும் இடையே , வருசொல்லின் முதல் வல்லின எழுத்தின் மெய்யானது தோன்றும்

‘மெல்லொற்றுத் தொடர்மொழி’ – மென்றொடர்க் குற்றியலுகரம்

‘மெல்லொற்று எல்லாம்’ – இதிலுள்ள (மென்றொடர்க் குற்றியலுகரத்திலுள்ள) மெல்லின மெய் எல்லாம்

‘வல்லொற்று இறுதி ‘ – நிலைமொழி இறுதியில் வல்லொற்றுப் பெறும்

‘கிளையொற்று ஆகும்’ – அந்த மெல்லெழுத்தானது அதன் கிளையெழுத்து (இன எழுத்து) ஆகும் !

இவ்வுரைக் கேற்ப இளம்பூரணர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் !:-

(1) கொக்கு + கால்  =  கொக்குக் கால் (வல்லெழுத்து  ‘க்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(கொக்கு – ஈற்று உகரம், வன்றொடர்க் குற்றியலுகரம்)

கொக்கு + சிறகு  =  கொக்குச் சிறகு (வல்லெழுத்து  ‘ச்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

கொக்கு + தலை  =  கொக்குத் தலை (வல்லெழுத்து  ‘த்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

கொக்கு + புறம்  =  கொக்குப் புறம் (வல்லெழுத்து  ‘ப்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

மேல் நான்கும் வன்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சிகள் !

இனி , மென்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சிகள் !:-

(2)குரங்கு + கால்  =  குரங்குக் கால் (வல்லெழுத்து  ‘க்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)
(குரங்கு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

குரங்கு + செவி  =  குரங்குச் செவி (வல்லெழுத்து  ‘ச்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + தலை  =  குரங்குத் தலை (வல்லெழுத்து  ‘த்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + புறம்  =  குரங்குப் புறம் (வல்லெழுத்து  ‘ப்’ இடை மிகுந்தது)
(வேற்றுமைப் புணர்ச்சி)

(3)குரங்கு + கால்  =  குரக்குக் கால் (  ‘ங்’கின் கிளையான ‘க்’ வந்தது;வல்லெழுத்து  ‘க்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
(குரங்கு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

குரங்கு + செவி  =  குரக்குச் செவி(  ‘ங்’கின் கிளையான ‘க்’ வந்தது;வல்லெழுத்து  ‘ச்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + தலை  =  குரக்குத் தலை (  ‘ங்’கின் கிளையான ‘க்’ வந்தது;வல்லெழுத்து  ‘த்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + புறம்  =  குரக்குப் புறம் (  ‘ங்’கின் கிளையான ‘க்’ வந்தது;வல்லெழுத்து  ‘ப்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)


எண்கு + குட்டி  =  எட்குக் குட்டி (‘ண்’ணின் கிளையான ‘ட்’ வந்தது;வல்லெழுத்து  ‘க்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
(எண்கு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

எண்கு + செவி  =  எட்குச் செவி (‘ண்’ணின் கிளை ‘ட்’ வந்தது;வல்லெழுத்து  ‘ச்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

எண்கு + தலை  =  எட்குத் தலை (‘ண்’ணின் கிளை ‘ட்’ வந்தது;வல்லெழுத்து  ‘த்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)
எண்கு + புறம்  =  எட்குப் புறம் (‘ண்’ணின் கிளை ‘ட்’ வந்தது;வல்லெழுத்து  ‘ப்’ இடை மிகுந்தது) (வேற்றுமைப் புணர்ச்சி)

எண்கு – கரடி .

கொக்கை விடமுடியவில்லை இளம்பூரணரால் ! மேலும் தொடர்கிறார் பாருங்கள் ! :-
“இவ்விரண்டு ஈற்றிற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கு எய்திய வழி , இயைபு வல்லெழுத்து வீழ்க்க !”

தொல்காப்பிய மூலம் நமக்கு விளங்கினாலும் விளங்கும் , உரையாசிரியர்களின் உரை விளங்காது !

‘இவ்விரண்டு ஈற்றிற்கும்’ – ‘கொக்கு’ , ‘குரங்கு’ ஆகிய இரு சொற்களின் இறுதிக்கும்

‘உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கு எய்திய வழி’ – ‘கொக்கினது’ என்பதில் உள்ள ‘இன்’ சாரியை எதற்கு வந்தது ?  ‘அது’ என்ற வேற்றுமை உருபிற்காக வந்தது ! (இதுதான் ‘உருபிற்குச் சென்ற சாரியை’) ; அவ்வாறு வந்த ‘இன்’சாரியை , தானே வேற்றுமைப் பொருளைத் தந்து  ‘அது’வைத் தேவையற்றதாக்கிக்  ‘கொக்கினது’ என்பதற்குப் பதில் , ‘கொக்கின்’ என்று அதே பொருளில் நின்றுகொள்கிறது! (இதுவே ‘பொருட்கு எய்திய வழி’)

‘இயைபு வல்லெழுத்து வீழ்க்க’ – ‘கொக்குக் கால்’ என்றுதானே சற்றுமுன் பார்த்தோம் ? இதிலுள்ள இரண்டாம் ‘க்’கை நீக்குக !

இதன்படி ?

இதன்படி ! :-

(4) கொக்கு + கால் = கொக்கின் கால் (இன் சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு + கால்  =  குரங்கின் கால் (இன் சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே ,மென்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சியில் ,   ‘குரங்கு + கால் = குரக்குக் கால் ’ என வந்ததைப் பார்த்தோமல்லவா ? இதற்கு ஒரு விதிவிலக்கைக் கூறுகிறார் இளம்பூரணர் ! :-

(5) பரம்பு  + பாரி = பரப்புப் பாரி ×
= பரம்பிற் பாரி √ (இன் சாரியை வந்துள்ளது)(வேற்றுமைப் புணர்ச்சி)
(பரம்பு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்)

‘குரங்கு + கால் = குரக்குக் கால்’ என்பதில் , வருமொழியானது, வல்லெழுத்தை முதலாகக் கொண்டது ( ‘கால்’ என்பதன் முதல் எழுத்து ‘க்’) ; இப்படியின்றி , வருமொழியானது, உயிரெழுத்தை , மெல்லெழுத்தை , இடையெழுத்தை முதலாகக் கொண்டாலும் ‘குரங்கு’ என்பது ‘குரக்கு’ என ஆகும் என்றொரு செய்தியைக் கூடுதலாகத் தருகிறார் இளம்பூரணர் ! :-

(6) குரங்கு  + ஞாற்சி  = குரக்கு ஞாற்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + நீட்சி  = குரக்கு நீட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + மாட்சி  = குரக்கு மாட்சி (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + யாப்பு  = குரக்கி யாப்பு (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + வலிமை  = குரக்கு வலிமை (வேற்றுமைப் புணர்ச்சி)

குரங்கு  + அடைவு  = குரக்கடைவு (வேற்றுமைப் புணர்ச்சி)
குரங்கு  + ஆட்டம்  = குரக்காட்டம் (வேற்றுமைப் புணர்ச்சி)

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்  (வேற்றுமைப் புணர்ச்சி)

மேலே கண்ட சில புணர்ச்சிகள் நமக்கு அந்நியம்போலத் தோன்றும் ! ஆனால் அந்நியமல்ல !

கரும்பு + கட்டி = கருப்புக் கட்டி (வேற்றுமைப் புணர்ச்சி) ; இதுதான் ‘கருப்பட்டி’ ஆனது !  (கரும்பு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்).

ஈச்சம் பழம் நீங்கள் சாப்பிட்டதுதானே ? வாருங்கள் இதிலொரு வாணவேடிக்கை !

ஈந்து + பழம் = ஈத்தம் பழம் (வேற்றுமைப் புணர்ச்சி) (மெல்லின ‘ந்’ , கிளை எழுத்தாகிய ‘த்’ ஆனது ; அம் சாரியை தோன்றியது ; ஈந்து – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம் ).

ஈஞ்சு + பழம் = ஈச்சம் பழம்  (வேற்றுமைப் புணர்ச்சி) (மெல்லின ‘ஞ்’ , தன் கிளை எழுத்தாகிய ‘ச்’ ஆனது ; அம் சாரியை தோன்றியது ; ஈஞ்சு – ஈற்று உகரம், மென்றொடர்க் குற்றியலுகரம் ).
(ஈஞ்சம் பாக்கம் என்ற சென்னைப் பகுதியை இங்கு நினைவு கூர்க)

‘ஈந்துப் பழம்’ , ‘ஈஞ்சுப் பழம்’ என்றெல்லாம் வரவில்லை என்பதைப் பார்த்து மகிழ்க !

மொழியியலில் ,  ‘குரங்குக் கால் ’ என்பதை ‘Noun Dative + Noun ’ எனக் குறிப்பர் ! மொத்தத்தில் , NP (Noun Phrase) என்பர் ; மெய் (Consonant) , உயிர் (Vowel) அமைப்பில் , ‘CVCVCCVC  CVC ’ என எழுதுவர் (C- Consonant, V- Vowel; ‘கு’ என்பதில்  ‘க் + உ’ உள்ளதால் ,  ‘CV ’ எனக் குறிக்கவேண்டும் !)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 07, 2013 2:08 pm

சிலப்பதிகாரம், கருப்பட்டி, ஈச்சம் பழம் பற்றிய புணர்ச்சி விளக்கங்கள் அருமை அய்யா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 08, 2013 5:39 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (126)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

குற்றியலுகரப் புணரியலில் நாம் நின்று விளையாடுகிறோம் !

குருந்து – மென்றொடர்க் குற்றியலுகரச் சொல் !

வல்லெழுத்தை முதலாகக் கொண்ட  சொற்களுடன் ‘குருந்து’  புணரும்போது , எப்படிப் புணரும் ?

குருந்து + கோடு = குருந்துக் கோடு ×
   = குருத்துக் கோடு ×
  = குருந்தங் கோடு √(அம்- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(குருந்து – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

பார்த்தீர்களா?  ‘குரங்கு’ என்பதும் மென்றொடர்க் குற்றியலுகரச் சொல்தான் ! ஆனால் அஃது , ‘குரங்குக் கால்’ , ‘குரக்குக் கால்’ எனப் புணர்ந்தது போலக் ‘குருந்து’ புணரவில்லை !  

ஏன் ?

எனெனில் ‘குருந்து’ ஒரு மரம் !

மரத்தின் பெயராதலால் , மென்றொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வேறு விதி தேவைப்படுகிறது , புணர்ச்சிக்கு!

அதைத்தான் தருகிறார் தொல்காப்பியர் ! :-

“மரப்பெயர்க்  கிளவிக் கம்மே சாரியை”  (குற்றியலு. 10)

அஃதாவது, வேற்றுமைப் புணர்ச்சியில், வன்றொடர் , மென்றொடர் இருவகைக் குற்றியலுகரங்களை ஈற்றிலே கொண்ட  மரப்பெயர்கள்  ‘அம்’ சாரியை பெற்றே  வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும் ! :-

தேக்கு + கோடு = தேக்குக் கோடு  ×
  =  தேக்கங் கோடு √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தேக்கு- ஈற்று உகரம் , வன்றொடர்க் குற்றியலுகரம்)

தேக்கு + செதிள் = தேக்கஞ் செதிள் (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

தேக்கு + தோல் = தேக்கந் தோல் (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

தேக்கு + பூ = தேக்கம் பூ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

- மேல் நான்கும் வன்றொடர்க் குற்றியலுகர மரப்பெயர்ச் சொற்புணர்ச்சிகள் !

இனி, மென்றொடர்க் குற்றியலுகர மரப்பெயர்ச்  சொற்புணர்ச்சிகள் !:-

வேம்பு + கோடு = வேம்புக் கோடு ×
  = வேப்புக் கோடு ×
  = வேப்பங் கோடு √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேம்பு- ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

வேம்பு + செதிள் = வேப்பஞ் செதிள் √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

வேம்பு + தோல் = வேப்பந் தோல் √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

வேம்பு + பூ = வேப்பம் பூ √ (அம்- சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

அது சரி ! ஏன் மரப்பெயருக்குத் தனி விதி ?

இதில் என்ன மொழி நுட்பம் ?

இருக்கிறது !

புளிய மரத்தைப் பிடித்து ஆட்டினால் உண்மை தன்னைப் போல விழும் !

புளிய மரத்தின் தண்டைப் (இதுதான் ‘கோடு’) , ‘புளிக்கோடு’ என்று கூறினால் என்ன ஆகும் ?  ‘அந்தத் தண்டு புளிப்புச் சுவை உடையது’ என்றல்லவா ஆகும் ? எனவே , புணர்ச்சியை மாற்றவேண்டும் ! அங்கே கை கொடுப்பது சாரியை ! ‘அம்’சாரியை சேர்த்துப் ‘புளியங் கோடு’ என்றால் , ‘புளிய மரத்தின் தண்டு’ என்ற தெளிவான பொருள் வந்துவிடுகிறது !

இதுதான் மரப்பெயர்ப் புணர்ச்சிகளுக்கு ‘அம்’ சாரியை வந்த இரகசியம் !  

‘சாரியைகளுக்கு நுட்பப் பொருள் உண்டு ’ (Subtle Semantic value) என்ற மொழியியல் உண்மை இங்கு பெறப்படுகிறது !

எனவே சாரியைகளை ‘Euphonic extention’ (ஒலி நீட்டிப்பான்) என்று மொழியியலார் குறிப்பது பொருத்தமில்லை !

ஒரு மரத்து எடுத்துக் காட்டைக் கூறினீர்கள் ! அதைக்கொண்டு எல்லா மரப்பெயர்களுக்கும் விதி கூறிவிடுவதா ?

- நல்ல கேள்வி !
தமிழ்ச் சொற்களின் அமைப்பு அடிப்படைகளில்  (Basic principles of Tamil word making) இது  குறிப்பிடத் தக்கது! அஃதாவது , ஒரு புணர்ச்சி எனில் , அது எல்லாச் சொற்களுக்கும் பொருந்திவரவேண்டும் ! இதுதான் தமிழ்ச் சொற்களின் சட்டம் ! ‘புளியங் கோடு’ என ‘அம்’ சாரியை போட்டுக் கூறவேண்டும் என்ற விதியைக்  ‘குருந்து’ என்ற மரப் பெயருக்குப் பயன்படுத்தினால் கேடு ஒன்றும் இல்லை  என்பதை நோக்குவீர் ! எனவேதான் ‘அம்’சாரியை போட்டு மரப் பெயர்களைப் புணர்க்கலாம் என்ற விதி ஏற்பட்டது !

இப்படி ஏற்படும் விதிகளுக்குக் கட்டுப்படாமல் , அங்கு மிங்குமாகச் சில புணர்ச்சிகள் நெருடும்போது , அதற்கு விதிவிலக்குத் தரவேண்டியுள்ளது ! தொல்காப்பியத்தில் நாம் பார்க்கும் பல விதிவிலக்குகளின் இரகசியம் இதுதான் !

மேலே பார்த்த எடுத்துக்காட்டில் , ‘வேம்பு’ எனபது ,  ‘வேப்பு’ என வந்ததைக் கவனித்தீர்களா?

மென்றொடக் குற்றியலுகரச் சொல் ‘வேம்பு’ , ‘வேப்பு’ ஆனதுபோல எல்லா மென்றொடர்க் குற்றியலுகர மரப்பெயர்ச்  சொற்களிலும் மெல்லெழுத்து வல்லெழுத்தாகுமா?

ஆகாது என்கிறார் தொல்காப்பியர் !:-

“மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே” (குற்றியலு.11 )

இதற்கு எடுத்துக்காட்டுகள் ! :-

புன்கு + கோடு = புற்குக் கோடு ×
= புன்கங் கோடு √  (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(புன்கு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

புன்கு + செதிள் = புன்கஞ் செதிள்   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

புன்கு + தோல் = புன்கந் தோல்   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

புன்கு + பூ = புன்கம் பூ   (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

இங்கு இளம்பூரணர் விளக்கக்(?) குறிப்பு ஒன்றைத் தருகிறார் ! :-


“மற்று , இது நிலைமொழித் தொழிலை நிலைமொழி விலக்குமாதலின் சாரியை வகுப்பவே முடியும் பிற எனின் , இது நிலைமொழியின் உள் தொழிலாதலின் அவ்வாறு விலக்குண்ணா தென்பது கருத்து .”

எதாவது விளங்குகிறதா ?

கீழ்வருமாறு விளக்கலாம் ! :-

முதல் நிலைமொழித் தொழில் – ‘அம்’ சாரியை வருவதை ஏற்றல் .
இரண்டாம் நிலைமொழித் தொழில் –  ‘வேம்பு’ , ‘வேப்பு’ஆதல் .
‘நிலைமொழித் தொழிலை நிலைமொழி விலக்குதல்’ – முதல் நிலைமொழித் தொழிலை இரண்டாம் நிலைமொழித்தொழில் விலக்குதல் ; அஃதாவது,சாரியை ‘அம்’மின் தாக்கத்தை ‘வேம்பு’, ‘வேப்பு’ஆன செய்கை  விலக்கும் .
ஏனெனில் , இது நிலை மொழியின் உள் தொழில் – அஃதாவது, ‘வேம்பு’ , ‘வேப்பு’ ஆன செய்கை .
ஆதலின் விலக்குண்ணா – அதனால் (உள் தொழிலின் செயலால்) , ‘அம்’ வருவது நீங்காது !

சுருக்கமாக?

சுருக்கமாக – சாரியை வருவதால்தான் மரப்பெயரின் மெல்லெழுத்து , வல்லெழுத்தாக ஆகிறது என எண்ணவேண்டாம் ; நிலைமொழியின் உள் தொழிலைப் பொறுத்தே அது நடக்கிறது !
இதுதான் இளம்பூரணர் கூறவந்தது ! அந்தக்கால நடையில் , அதுவும் ஓலைச் சுவடியில் , கி.பி.11ஆம் நூற்றாண்டில் அவர் எழுதிய உரைநடை அது !

சரி !  ‘உள் தொழில்’ என்றாரே , ஏன் ‘புன்கு’ , ‘புற்கு’ஆகவில்லை , ‘குருந்து’ , ‘குருத்து’ஆகவில்லை ?

‘புன்கு + கோடு = புற்குக் கோடு’ என்று வருகிறது என வைத்துக்கொள்வோம் ! ‘புற்கு’ என்பது ஓர் ஒலிக்குறிப்புச் சொல் ! ‘புற்கென்று’ என்றெல்லாம் இஃது எழுதப்படும் ; மரப்பெயரில் ஒலிக்குறிப்பு வருவது பொருந்தாது ; எனவேதான் ‘புன்கம்’ ஆகிறது !

இதைப்போலவே ‘குருத்துக் கோடு’ என்று புணர்ச்சி வந்தால் , ‘குருத்து’ என்பது இளம் (tender) என்ற பொருளைத் தந்துவிடும் !

இதுவே  ‘புற்குக் கோடு’ , ‘குருத்துக் கோடு’ என்றெல்லாம் வராததன் இரகசியம் !

இளம்பூரணர் குறித்த குருந்த  மரத்தைப் பார்க்க ஆசையா ?

[You must be registered and logged in to see this link.]
  Courtesy - [You must be registered and logged in to see this link.]
இதுதான் குருந்தமரம் ! கண்ணன் சிறுவயதில் விளையாடிய மரம் இதுதான் !
இதன் தாவரவியல் பெயர்- Atalantia monophylla ; பொதுப்பெயர் -: Wild Lime;தமிழில் ‘காட்டு எலுமிச்சை’ , ‘காட்டு நாரங்கம்’ என்றெல்லாம் அறியப்படுவது;நாள்பட்ட மூட்டு வலிகளுக்கு இதன் எண்ணெய் மருந்தாகிறது; பழங்கள் ஊறுகாய்க்கும் பயன்படுகிறது.

கீழே குருந்தங்காய்கள் ! :-
[You must be registered and logged in to see this link.]
 Courtesy - opendata.keystone-foundation.org

கீழே குருந்தம் பூக்கள் !:-
[You must be registered and logged in to see this link.]

Courtesy - pitchandikulamforest.org -

இளம்பூரணர் குறித்த புன்க மரத்தைப் பார்க்க ஆசையா ?
[You must be registered and logged in to see this link.]
 
Courtesy-bioweb. uvlax.edu
இதுதான் புன்க மரம் ! புங்க மரம் என்பதும் இதுவே ! ‘தேவடியாள் வீடும் புங்க மரத்து நிழலும் ஒன்று’ என்று ஒரு பழமொழியே உண்டு ! குழந்தை இடுப்பில் கட்டிவிவார்களே ஒரு காய் அது புன்கங் காய்தான் !இதன் தாவரவியல் பெயர் - Pongamia glabra ; நெல் மூட்டைகளை அடுக்கிப் பூச்சி வராமல் இருக்கப் புன்கம் இலைகளைப் போட்டுவைப்பார்கள் !புன்கம் எண்ணைதான் Karanja oil !  இது சிறந்த கிருமிக்கொல்லி !  ‘Leucoderma’ எனப்படும் தோல் நிற மாறுபாட்டிற்கு இது மருந்தாகிறது.
கீழே உள்ளது புன்கம் பூ ! :-
[You must be registered and logged in to see this link.]

Courtesy -hcms.org.in
      ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 7:32 am

நன்றி அய்யா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 13, 2013 10:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (127)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

“மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை” (குற்றியலு.10)
என்ற தொல்காப்பியர் ஆணையை முன்பே கேட்டோம் !

ஒரு மாணவன் அப்போது தொல்காப்பியரைக் கேட்டான் – “மரப்பெயருக்கு மட்டும்தான் அம் சாரியை வருமா?”.

அப்போது சொன்னார் தொல்காப்பியர் ! :-

“ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும்
அம்மிடை வரற்கு முரியவை யுளவே
அம்மர பொழுகு மொழிவயி னான”       (குற்றியலு . 12)

அஃதாவது , ஈறெழுத்து ஒரு மொழியான ‘ஏறு’ போன்ற நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்களும், ‘வட்டு’ போன்ற வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களும்கூட ‘அம்’ சாரியை பெறலாம் !

ஏறு + கோள் = ஏறங்கோள் (அம் - சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏறு – உகரம் , நெடில்தொடர்க் குற்றியலுகரம்)
ஏறு – காளை ; ஏறு கோள் – சல்லிக்கட்டு .
வட்டு + போர் = வட்டம் போர் (அம் - சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
(வட்டு – ஈற்று உகரம் ,வன்றொடர்க் குற்றியலுகரம்)

வட்டு – சூதாடு கருவி ; வட்டம் போர் – சூதாட்டத்தால் வரும் போர் ; மகாபாரதம் காண்க.

பின்னாளில் ,இவற்றை ஓலைச் சுவடியில் படித்த மாணவன் ஒருவன் இளம்பூரணரைக் கேட்டான் – “அப்படியானால் , நெடில்தொடர்,வன்றொடர் அல்லாத வேறு குற்றியலுகரச் சொற்களுக்கு ‘அம்’ வரவே வராதா ?”

“அப்படியில்லை ! மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கும் , உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்கும்கூட  அம் சாரியை வரலாம் !” என்றார் இளம்பூரணர் ! :-

தெங்கு + காய்  =  தெங்கங் காய்  (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(தெங்கு – ஈற்று உகரம் , மென்றொடர்க்  குற்றியலுகரம் )

தெங்கங் காய் – தேங்காய்.


பயறு + காய்  =  பயற்றங் காய்  (அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பயறு – ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க்  குற்றியலுகரம் )

“இன்னும் கேளப்பா , ‘அத்து’ச் சாரியை வரும் குற்றியலுகரப் புணர்ச்சிகளும் உள” – தொடர்ந்தார் இளம்பூரணர் ! :-

இருட்டு + கொண்டான் = இருட்டத்துக் கொண்டான் (அத்து - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(இருட்டு – ஈற்று உகரம் , வன்றொடர்க்  குற்றியலுகரம் )

“ அன் சாரியை பெறும் குற்றியலுகரச் சொல்லைக் காட்டவா ?” – அடுக்கினார் இளம்பூரணர் ! :-

கரியது + அன்  + கோடு = கரியதன் கோடு(அன் - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(கரியது – ஈற்று உகரம் , உயிர்த்தொடர்க்  குற்றியலுகரம் )

மேல் நூற்பாவில் (குற்றியலு . 12) , கடைசியாக வன்றொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி பற்றிக் கூறி , அது ‘அம்’சாரியை பெறும் என்றும் தெரிவித்தாரல்லவா தொல்காப்பியர்?

இப்போது ,  “வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் மட்டுமல்ல  மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்களும்கூட ஏற்ற சாரியைகளைப் பெறும்! ” என்று நுவல்கிறார் ! :-

“ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம்
அக்கிளை மொழியும் உளவென மொழிப”  (குற்றியலு. 13)

‘ஒற்றுநிலை திரியா’ – ‘வேம்பு’ என்பது ‘வேப்பு’ ஆனதில் ஒற்றுநிலை ( ‘ம்’) , திரிந்தது (’ப்’ஆனது) ; அப்படித் திரியாது,

‘அக்கொடு வரும் ’ – ‘அக்கு’ எனும் சாரியை பெறும்;

‘அக்கிளை மொழியும்’ – வன்றொடருக்குக் கிளை மென்றொடர் ; எனவே , மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள்,

‘உளவென மொழிப ’ – உள்ளன என்று கூறுவர் !

இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் ! :-

குன்று + கூகை = குன்றுக் கூகை ×
= குற்றக் கூகை ×
= குன்றக் கூகை √ (அக்கு - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(குன்று – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் ; இதன் நடுவிலுள்ள ‘ன்’ , ‘ற்’ஆகத் திரியவில்லை )


கூகை – கோட்டான் ; ஆந்தை . குன்றக் கூகை – மலையிலே இருக்கும் ஆந்தை .

மன்று + பெண்ணை = மன்றப் பெண்ணை (அக்கு - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

பெண்ணை – பனை மரம் ; மன்றப் பெண்ணை – ஊர்ப் பொது மன்றத்தில் இருக்கும் பனை மரம்.

நூற்பாவின் (குற்றியலு . 13) நேர் பொருள் முடிந்தது !

ஆனால் இளம்பூரணர் , மேலும் சில புணர்ச்சி நுட்பங்களைக் காட்டுகிறார் ! :-

(1) கொங்கு + அத்து + உழவு = கொங்கத் துழவு (அத்து - சாரியை) (வேற்றுமைப்
                                                                                                                                புணர்ச்சி)
(கொங்கு- ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

கொங்கத்து உழவு  – கொங்கு நாட்டு உழவாக இருக்கலாம்.

வங்கு + அத்து + வாணிகம் = வங்கத்து வாணிகம் (அத்து - சாரியை) (வேற்றுமைப்
                                                                                                                                புணர்ச்சி)
(வங்கு- ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம்)

வங்கம் – கப்பல் ; வங்கத்து வாணிகம் – கப்பல் வாணிகம் ;தமிழ் நாட்டு வாணிகம்தான் ; வங்காள தேசத்து வாணிகம் அல்ல !

(2) இளம்பூரணர் , “நிலை என்றதனான் , ஒற்றுநிலை திரியா அதிகாரத்துக்கண் இயைபு வல்லெழுத்து வீழ்க்க” என்கிறார் !  ஆனால் எடுத்துக்காட்டுகள் தரவில்லை !

இதன் பொருளை உணரச் சரசுவதிமகால் நூலகப் பதிப்பு உதவியது!

‘ஒற்றுநிலை திரியா’ என்பதற்குக் குற்றியலுகரப்புணரியல் நூற்பா 11ஐப் புரட்டவேண்டும் ! அங்கு ‘அன்’ சேர்ந்தது போல இங்கு ‘இன்’ சேர்க்கவேண்டும் !

அஃதாவது ,

புன்கு + இன் + கோடு = புன்கின் கோடு
( ‘புன்கு’ ஆனது, ‘புற்கு’ என  ஒற்றுநிலை  திரியவில்லை; ‘புன்கிற் கோடு’என அமைக்காமல், இயைபு வல்லெழுத்தை வீழ்த்தியுள்ளது !)

இயைபு வல்லெழுத்து – சந்தியாக வரும் வல்லெழுத்து.

(3) பார்ப்பு + அன் + அக்கு + கன்னி = பார்ப்பனக் கன்னி (அன் , அக்கு - சாரியைகள்)
                                                                                       (வேற்றுமைப் புணர்ச்சி)


சாரியைகளை மொழியியலார் , பொதுவாகப்  ‘ Particles ’ என்ற பிரிவில்  குறிப்பர்.

மேலே ‘அக்கு’ச் சாரியை பார்த்தோமல்லவா?

இது தொல்காப்பியர் நாளைய சாரியை !

 ‘மன்று + அக்கு + பெண்ணை = மன்றப் பெண்ணை ’ ஆனதல்லவா ? இதிலே , ‘க்கு’ எங்கே போயின ?

மண்டை காய்ந்தது பலருக்கு !

அதனால் என்ன செய்தார்கள்?

‘அக்கு’ச் சாரியை எனக் கொள்ளவேண்டாம் ; ‘அ’வை மட்டும் சாரியையாகக் கொள்ளலாமே என்று முடிவெடுத்தனர் !

அதனால்தான் , நன்னூலில் , ‘அக்கு’ இடம்பெறாமல் , அகரச் சாரியை மட்டும் (உருபுப் புணரியல் 5) இடம் பிடித்தது!

தமிழ்ப் புணர்ச்சி வரலாற்றில் (History of Tamil Morphophonemic rules) இது குறிப்பிடத் தக்கது !

தொல்காப்பியர் நாளையில் ‘அக்கு’ போட்டுத்தான் சில சொற்களை மாணவர்களுக்கு விளக்க வேண்டியிருந்தது ! தமிழ்ச் சொற்களஞ்சியம் பெருகப் பெருக அதற்குத் தேவை இல்லாது, ‘அ’வே போதும் என்ற நிலை ஏற்பட்டது !

இலக்கணத்திற்கு ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு என்ற மெய்ம்மை இங்கு திரளுதல் காணலாம் !

இளம்பூரணர் குறித்த வட்டைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy – history.chess.free.fr

இவைதாம்  வட்டுகள் !  ‘வட்டு’ என்பதும் , ‘வல்’ என்பதும் ஒன்றுதான் ! படத்தில் உள்ளவை தாயக்கட்டத்துக் காய்கள்தாம் ! வேறு ஒன்றுமில்லை ! கருப்பட்டி வட்டைப் படத்தில் உள்ள ஒரு வடிவில் ஒப்பிடுங்கள்!  ‘வட்டு’ விளங்கும் ! படத்தில் காணும் வடிவங்களை ஒத்த வேறு வடிவங்களிலும் ‘வல்’ அல்லது ‘வட்டு’ இருந்துளது ! படத்தில் உள்ளவை கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ! மண்ணால் ஆனவை !பர்மாவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளவை; ஆர்.பொஸ்ஸி (R.Pozzi) என்பாரது சேகரிப்பு !

இளம்பூரணர் பேசிய கூகையைக் காண ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy -  tolweb . org
இதுதான் கூகை ! ‘ஆக்கங் கெட்ட கூகை’ என்பார்களே, அந்தக் கூகைதான் ! கோட்டான் என்பதும் கூகை என்பதும் ஒன்றுதான் ! கோடு – கிளை ;கோட்டில் வசிப்பதால்,  ‘கோட்டான்’ ! மரக் கிளையில்தான் இது எப்போதும் வசிக்கும் !ஏனென்றால் இதற்குக் கூடு கட்டத் தெரியாது ! முட்டையைக் கூடத் தரையில்தான் இடும் ! ‘ஆந்தை’ என்பதும் இதுதான் ! இதன் விலங்கியல் பெயர் – Bubo  bengalensis ; ஆங்கிலப் பொதுப்பெயர் – Rock horned owl .பல மூடக் கதைகள் கூகையைச் சுற்றி உள்ளன! ஒரு மாநிலத்து மூடக் கதை – “ஆந்தையைச் சில நாட்கள் பட்டினி போட்டு அடித்தால் , அது மனிதன் குரலில் பேச ஆரம்பிக்கும் ! அப்போது அடித்தவனின் எதிர்காலத்தைப் புட்டு புட்டு வைக்கும் !” மூடக் கதைகளுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லையப்பா!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 14, 2013 1:55 pm

நல்ல தொடர் பதிவு ...

தொல்காப்பியம் பற்றி தெரிந்து கொள்ள சிறப்பான வழிகாட்டல் பதிவு .

பகிர்வுக்கு நன்றி தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 103459460 தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 18 1571444738 



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 14, 2013 6:17 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (128)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ஒன்று’ , ‘இரண்டு’ என்பன எண்ணுப் பெயர்கள் (Count nouns) !

இவற்றின் ஈற்றிலே நிற்கும் உகரம் – குற்றியலுகரம் !

ஒன்று – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் !

இரண்டு – ஈற்று உகரம் , மென்றொடர்க் குற்றியலுகரம் !

இவை எப்படிப் பிற சொற்களுடன் புணரும் ?

இதற்கு ஒரு சூத்திரம் ! :-

“எண்ணுப்பெயர்க் கிளவி  உருபியல் நிலையும் !” (குற்றியலு. 14)

அஃதாவது , உருபியலில் எண்ணுப் பெயர்ச் சொற்களுக்கு என்ன புணர்ச்சி முறை கூறப்பட்டதோ அதே முறைதான் இங்கும் என்கிறார் தொல்காப்பியர் !

உருபியலில் எங்கே என்ன கூறினார் ?

உருபியல் நூற்பா 26இல்  ( “எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் ”) , ஒன்றுமுதல் உள்ள எண்ணுப் பெயர்கள் வேற்றுமை உருபுகளுடன் புணரும்போது ,  ‘அன்’ சாரியை பெறும் என்றார் !

அங்கு வேற்றுமை உருபுகள் புணர்ந்ததைக் கூறினார் ! இங்கு அதே ‘அன்’னுடன்
பொருட் பெயர்கள் புணர்வதைக் கூறுகிறார் !

‘அன்’ கொடுத்து இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு காட்டலாம் ! :-

ஒன்று + காயம் = ஒன்றன் காயம் (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + சுக்கு = ஒன்றன் சுக்கு (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + தோரை = ஒன்றன் தோரை (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + பயறு = ஒன்றன் பயறு (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)


இரண்டு + காயம் = இரண்டன் காயம் (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

இரண்டு + சுக்கு = இரண்டன் சுக்கு (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)
இரண்டு + தோரை = இரண்டன் தோரை (அன் – சாரியை ) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘காயம்’ முதலான சொற்கள்  பொருள்களைத்தானே குறிக்கின்றன ? எனவேதான் இவை பெறும் புணர்ச்சிகள் , பொருட்புணர்ச்சிகள் !

இளம்பூரணர் காட்டிய ‘காயம்’ முதலான சொற்கள் யாவும் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் !  

“அப்படியானால் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால்தான் , ‘ஒன்று’ முதலிய குற்றியலுகர எண்ணுப் பெயர்கள் ‘அன்’ பெறுமா? – ஒரு மாணவன் நச்சினார்க்கினியரைக் கேட்டான் ! ”

அதற்கு நச்சினார்க்கினியர் , “அப்படியில்லை ! தொல்காப்பியர் வருமொழி முதல் எழுத்து பற்றிக் கூறினாரா? இல்லையல்லவா? எனவே , மெல்லின , இடையின எழுத்துகளைக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்தாலும் , ‘அன்’ சாரியை வருவது உண்டு !” என விளக்கம் தந்தார் !
நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகள் !:-

ஒன்று + ஞாண் = ஒன்றன் ஞாண் (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + நூல் = ஒன்றன் நூல் (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + மணி = ஒன்றன் மணி (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + யாழ் = ஒன்றன் யாழ் (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

ஒன்று + வட்டு = ஒன்றன் வட்டு (அன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)

‘ஒன்றன் காயம்’ , ‘ஒன்றன் மணி’ என்றால் என்ன பொருள் ?

‘ஒன்றனால் கொண்ட பொருள்’ என்று நச்சினார்க்கினியர் பொருள் எழுதுகிறார் !

அஃதாவது, ஒரு குறிப்பிட்ட நாணயம் அல்லது பண்டத்தைக் கொடுத்துப் பெறும் காயம் ‘ஒன்றன் காயம்’.
காயம் – மிளகு.
நூற்பாவில் ‘நிலையும்’ என்று வந்ததல்லவா ? வினை முற்றான இது , பயனிலையாகத் தொடரில் வந்துள்ளது ! இதனால் , இம்மாதிரியான சொற்களை மொழியியலார் Predicatives
என்று குறிக்கலாயினர் (Predicate – பயனிலை) !

தொல்காப்பியர் தன் நூற்பாவில் (குற்றியலு. 14) , ‘உருபியல்’ என அவர் வகுத்த இயலின் பெயரையே குறிப்பிட்டார் பாருங்கள் !

இதிலிருந்து ?

இதிலிருந்து , அவர் ஒரு வரிசைப்படிதான் இலக்கணம் எழுதிவருகிறார் ; தான் எழுதியது என்ன , பின் எழுதுவது என்ன என்ற திட்டத்தோடுதான் செல்கிறார் என்பது புலனாகிறது அல்லவா ?

தொல்காப்பிய அமைப்புமுறை (Structure of Tholkappiyam) ஆய்வில் இது குறிப்பிடத் தக்கது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Sep 14, 2013 9:25 pm

தெளிவான தொல்காப்பிய விளக்கம்...
தொடருங்கள் ஐயா!



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 18 of 84 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 51 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக