புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
68 Posts - 45%
heezulia
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
5 Posts - 3%
prajai
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
4 Posts - 3%
Jenila
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
jairam
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
M. Priya
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%
kargan86
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
9 Posts - 4%
prajai
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
6 Posts - 3%
Jenila
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
4 Posts - 2%
Rutu
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
jairam
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
2 Posts - 1%
manikavi
மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_m10மயில் வதை  தடுக்க என்ன வழி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயில் வதை தடுக்க என்ன வழி?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 1:00 pm

திருச்சி அருகே மயில்களைச் சிலர் திருட்டுத்தனமாக வேட்டையாடினர் எனும் செய்தியைச் சமீபத்தில் படித்ததும் அதிர்ச்சியடைந்தேன். வனத்துறையினர் மயில்களைக் கொன்றவர்களை கைது செய்தனர் என்பதை அறிந்த போது நிம்மதிஏற்பட்டாலும், மறுபுறம் கவலையாகவும், கோபமாகவும் இருந்தது.
:-
மேலும், திருச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் ஒரு விவசாயி தான் விதைத்த நெல்லை மயில்கள் சாப்பிட்டு விடுவதால், அந்தநெல்லிலேயே நஞ்சு கலந்து அவற்றை சாகடித்திருக்கிறார். மற்றுமொரு செய்தியில் மயில்களைக் கொன்று அவற்றின் கறியிலிருந்து எண்ணெய் தயாரித்தற்காக சிலர் கைதாகியுள்ளனர்.
:-
மயில் கறியைச் சுவைப்பதற்காகவும் அவற்றின் தோகைக்காகவும் கொல்லும் திருட்டு வேட்டையாடிகள், மயில் கறியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மருத்துவ குணமிருப்பதாக நம்பி அவற்றைக் கொல்பவர்கள், பயிர்களை தின்று அழிப்பதால் பாதிக்கப்பட்டு மயில்களை நஞ்சிட்டுக் கொல்லும் விவசாயிகள் என பல விதங்களில் மயில்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளன.
:-
மயில் கறி, எண்ணெய் மூட்டு வலியையும் உடல் வலியையும் போக்கும் என்பது மூட நம்பிக்கை. இதற்கு அறிவியல்பூர்வமாக ஆதாரம் ஏதும் கிடையாது என்பதை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சமீப காலங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு கொண்டு வந்த ஈமு பறவையின் உடலிலிருந்தே எண்ணெய் எடுத்து அதற்கு பல நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொன்னதையும் நம்பியவர்கள் நாம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, வியாபாரம் செய்ய எந்தவித உத்தியையும் கையாள, பல வித காரணங்களைச் சொல்ல பலர் தயாராக இருப்பார்கள் என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.
:-
மயில்கள் விவசாயிகளின் நிலத்திலுள்ள விதை நெற்களையோ, நாற்றையோ, கடலையையோ, கோதுமையையோ அதிக அளவில் கொத்தித் தின்கின்றன. அவர்களது பயிர்களை அதிகம் சேதம் செய்யும் எந்த ஓர் உயிரினத்தையும் வெறுக்கவே செய்வார்கள். அதற்காக அவற்றை நஞ்சிட்டு கொல்வது சரியல்ல. அதுவே அவர்கள் பிரச்னைக்கு முடிவும் அல்ல.அப்படிச் செய்வது இந்திய வனச்சட்டம் 1972ன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றம். கொய்யாத் தோப்பிலோ, மாந்தோப்பிலோ காவலாளிக்குத் தெரியாமல் நுழைந்து சில பழங்களை கல்லெறிந்து விழச் செய்து எடுத்துச் செல்லும் சிறுவர்களை நஞ்சிட்டா கொல்வோம்?
:-
வீட்டுக்குள் கொசு அதிகம் வந்தால் அவற்றினை விரட்டும் ஏற்பாடுகளைச் செய்கிறோம், அந்திவேளையில் கதவு, ஜன்னலை அடைக்கிறோம், அதோடு கொசுவலைக்குள் சென்று நம்மை பாதுகாத்துக் கொள்கிறோம். வீட்டினருகில் நீர் தேங்கிக் கிடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இருந்தாலும் ஒரு கொசு கூட இல்லாமல் செய்துவிட முடிகிறதா? நம்மைக் கடிக்கும் போது அதை அடித்துகொன்று விடலாம். ஆனால் அதுவே யானையாகவோ, சிறுத்தையாகவோ, புலியாகவோ, விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றி, மயில் முதலிய உயிரினங்களையோ கொல்ல முடியாது. மனித உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது எனும் போது (ஆட்கொல்லிகள்) அவற்றை பிடிப்பது தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் மயில் நம் உயிருக்கு பங்கம்விளைவிப்பதில்லை. மாறாக தேள், சிறிய பாம்பு, பூச்சிகள் போன்றவற்றை உட்கொண்டு அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
:-
மயிலினால் விளைநிலங்களில் சேதம் ஏற்படுவதும், அவற்றிற்கு நஞ்சு வைத்துக் கொல்வதும் வடமாநிலங்களிலும் நடக்கும்ஒன்று. காட்டுப்பூனை, கீரிப்பிள்ளை, குள்ள நரி, நரி முதலிய இரைக்கொல்லி உயிரிகளும் இவற்றில் அடக்கம்.
:-
மயில்களால் தொந்தரவு ஏற்படும் பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க வேண்டும், அந்தப் பகுதிகளில் விளையும் பயிர்களின் விவரங்களைச் சேகரித்தல் அவசியம். இதனால், எந்த இடத்தில், எவ்வளவு சேதம் ஏற்படுகிறது என்பதை சரியான அளவில் துல்லியமாக மதிப்பிட முடியும். எந்த வகையான பயிர்களை, எந்த நிலையில் (விதைகளையா, நாற்றையா) மயில்கள் எங்ஙனம்சேதப்படுத்துகின்றன என்பதையும் அறியவேண்டும். இந்த ஆராய்ச்சியின் மூலம் பிரச்னையின் தீவிரம் எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து, அதை சமாளிக்க வேண்டிய நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். இப்பகுதிகளில் மயில்களை இரையாகக் கொள்ளும் உயிரினங்களின் எண்ணிக்கையையும், பரவலையும் கணக்கிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் அவசியம்.
:-
மேலை நாடுகளில் பறவைகளை விரட்ட அவற்றுக்கு எரிச்சலூட்டும் ஒலியை ஏற்படுத்தும் கருவிகளையும், இரைகொல்லிப் பறவைகளின் குரல்களையும், இரைக்கொல்லிகள் போன்ற பொம்மைகளையும், பலூன்களையும் பயன்படுத்துகின்றனர். எனினும் சில காலங்களில் இவற்றிற்கெல்லாம் பறவைகள் பழகிவிடுவதால் இந்த முயற்சிகள் தோல்வியடையலாம்.பறவைகளை விரட்ட ஏற்படுத்தும் ஒலியினால் அருகிலுள்ள பொதுமக்களுக்கும் அது தொந்தரவாக அமையும்.
:-
மயில்கள் விளைநிலங்களுக்கு ஆண்டு தோறும் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. அவை அதிகம் சேதம் விளைவிக்கும் காலம் எப்போது என்பதை அறிந்து, அந்த வேளையில் பாதுகாப்பை, அவற்றை விரட்டும் முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும். இந்தியாவில் பறவைகளை விரட்ட காலம் காலமாக பலவித உத்திகளை கையாள்கின்றனர். சோளக்கொல்லை பொம்மைகளை வைப்பது, பளபளக்கும் ரிப்பன்களைக் கட்டிவிடுவது, பழைய வண்ண வண்ண சேலைகளைக் கட்டித் தொங்கவிடுவது... அவற்றில் சில. ஆனால் சங்ககாலத்திலிருந்து செய்து வருவது புள்ளோப்புதல். அதாவது பறவைகளை விளைநிலங்களிலிருந்து விரட்டிவிடுதல். இது சங்ககால மகளிரின் விளையாட்டாகவும் இருந்தது.
:-
மயில்களைப் பற்றியும் அவற்றினால் விளைநிலங்களில்ஏற்படும் சேதம், அதைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்தவர் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முனைவர் சத்யநாராயணா கூறுகையில்..

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 1:06 pm

இவர் மயில்களை விரட்ட சிறந்த உத்தி, "நீளமான பளபளப்பான ஜிகினா தாள்களை விளைநிலங்களைச் சுற்றி கொடியில் கட்டிவிடுவதே...' என்கிறார். இவை ஏற்படுத்தும் சலசலக்கும் ஒலியினாலும், பளபளக்கும் தன்மையினாலும் மயில்கள் அப்பகுதிகளுக்கு வருவதை வெகுவாகத் தவிர்க்கும் என்கிறார். இதைப் போன்ற முறைகளைப் பின்பற்றி இதன் செயல்திறனை அறிவது அவசியம்.மயில் பகலில் திரிவது. இரவில் வந்து பயிர்களை சேதம் செய்யும் விலங்காக இருப்பின் இரவு முழுவதும் விழித்திருந்து வேலை செய்ய வேண்டும். அந்த சிரமம் மயில்களைப் பொருத்தவரையில்கிடையாது. ஆகவே, மயில்கள் வரும் இடத்தையும், காலத்தையும் கண்டறிந்த பின் விளைநில உரிமையாளர்கள் மயில்களை விரட்டுவதற்கென்றே ஒருவரை நியமிக்கலாம்.
:-
மயில் போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் சேதம் அதிக அளவில் இருப்பின், அதை உறுதி செய்து கொண்ட பின்னர், வனத்துறையினர் இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். விவசாயிகளும் அவர்கள் பங்கிற்கு பயிர்களை காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தல் அவசியம்.
:-
நஞ்சு வைப்பதால் மட்டுமே மயில்கள் சாவதில்லை. அவற்றின் தோகைக்காக கொல்வதாலும் மயில்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. மயிலை பாதுகாக்கதுணை போக வேண்டும் என எண்ணுபவர்கள் மயில் எண்ணெய் வாங்குவதையும் அவற்றின் தோகையால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களை வாங்குவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பிறருக்கும் இதைப் பற்றி எடுத்துச் சொல்வது அவசியம். மற்றுமொருமுக்கியமான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மயில்கள் திரியும் புதர்காடுகளையும், பரந்த வெளிகளையும் நாம் ஆக்கிரமித்து விட்டோம். மயில்களின் வாழிடங்கள் அருகி வருகின்றன. எஞ்சியிருக்கும் பாதுகாக்கப்பட்ட காடுகளிலும், விளைநிலங்களில் மட்டுமே அவை தென்படுகின்றன. இங்கும்அவைகளுக்கு நஞ்சிட்டு, தோகைக்காக கொல்லுதல், ரசாயனஉரங்களால் பாதிக்கப்பட்டு, சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறத்தல் முதலிய காரணங்களால் எண்ணிக்கையில்குறைந்து வருகின்றன.
:-
மயில் நமது தேசியப் பறவை, அழகான பறவை என்பதால் மட்டுமே அல்ல அதை ஓர் உயிரினமாக மதித்துப் போற்ற வேண்டும். அப்போதுதான் அவை தோகை விரித்து ஆடுவதை நீண்டகாலம் நாம் பார்த்து ரசிக்கமுடியும்!
:-
நன்றி- ப. ஜெகநாதன்
காட்டுயிர் விஞ்ஞானி,
இயற்கை பாதுகாப்பு நிறுவனம், மைசூர்.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jan 12, 2013 2:57 pm

மயில் இறகு கிலோ 2500 ரூபாய்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மயில் வதை  தடுக்க என்ன வழி? 1357389மயில் வதை  தடுக்க என்ன வழி? 59010615மயில் வதை  தடுக்க என்ன வழி? Images3ijfமயில் வதை  தடுக்க என்ன வழி? Images4px
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 3:01 pm

கேசவன் wrote:மயில் இறகு கிலோ 2500 ரூபாய்

இது வேற நடக்குதா ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Jan 12, 2013 3:09 pm

பூவன் wrote:
கேசவன் wrote:மயில் இறகு கிலோ 2500 ரூபாய்

இது வேற நடக்குதா ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
இறைச்சிக்காகவும், தொகைக்காகவும் பெருமளவில் மயில்கள் வேட்டையாடப்படுகின்றன.
கஷ்டகாலம் சோகம் என்ன கொடுமை சார் இது





அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 12, 2013 9:42 pm

எங்கள் ஊரின் அருகே உள்ள ஆற்றங்கரையோரத்தில் காடுகள் வளர்க்கப்பட்டு பின் அரசாங்கம் அழித்தது (கரிக்கட்டைக்காக).அங்கு பல வருடங்களாக பல மயில்கள் வாழ்ந்து வந்தன.ஆனால் காடுகளை அழித்ததன் விளைவினால் அங்கிருந்த நூற்றுக்கணக்கான மயில்கள் தற்போது விவசாய நிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளது அவைகளின் நளினன்களைப் பார்க்கவே தினமும் வயலுக்கு சென்று விடுவேன்.எங்கள் நெல்வயலிளும் அவைகளின் தாக்கம் இருக்கிறது ,ஆனால் நாங்கள் பெரிது படுத்துவது இல்லை.நாங்கள் மட்டுமில்லை அனைவரும் இங்கு அதனை துன்புறுத்துவதில்லை.

மீண்டும் சிறு கன்றுகள் தற்போது கரையோரங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றன

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக