உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?
பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?
[You must be registered and logged in to see this image.]
பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா தற்கொலைகளும் ஒன்றுபோலவே நடைபெறுவதில்லை. மனிதர்கள் ஒரு சமூக விலங்குகள். மனிதர்களின் அகமும் சமூகம் என்னும் புறமும் கொண்டுள்ள உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் கைமீறும் நிலையில், மனது தற்கொலைக்கு முடிவெடுக்கிறது.
சில தற்கொலைகளில் அகக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். தீவிர மனநோய்கள், குறிப்பாக மூளையில் ஏற்படும் ரசாயனக் குறைபாடுகளால் வரும் மனநோய்களால் நிகழலாம். உதாரணமாக, மனச்சிதைவு நோயில் சிலருக்குக் காதினில் யாரோ இறந்துபோகக் கட்டளையிடுவதுபோல் தோன்றும். சில தற்கொலைகளில் புறக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக, விவசாயம் பொய்த்துப் போவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது.
பதின்மவயதுப் பிரச்சினைகள்
சமீபகாலத்தில் அதிகரிக்கும் பதின்மவயது மாணவத் தற்கொலைகளில் அக மற்றும் புறக் காரணி கள் பின்னிப் பிணைந்திருப்பதை உணர முடிகிறது. மாணவர்களின் மனநிலையைத் தாண்டி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், கல்வி முறை, ஊடகங்கள் எனப் பல பரிமாணங்களும் கோணங்களும் உள்ள பிரச்சினை இது.
நன்றி
தி இந்து
பள்ளி மாணவன் தற்கொலை, மாணவிகள் கூட்டாகத் தற்கொலை போன்ற செய்திகள் சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. தற்கொலைகள் அதிகரிப்பதற்கு இதுதான் காரணம் என ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது. எல்லா தற்கொலைகளும் ஒன்றுபோலவே நடைபெறுவதில்லை. மனிதர்கள் ஒரு சமூக விலங்குகள். மனிதர்களின் அகமும் சமூகம் என்னும் புறமும் கொண்டுள்ள உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் கைமீறும் நிலையில், மனது தற்கொலைக்கு முடிவெடுக்கிறது.
சில தற்கொலைகளில் அகக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். தீவிர மனநோய்கள், குறிப்பாக மூளையில் ஏற்படும் ரசாயனக் குறைபாடுகளால் வரும் மனநோய்களால் நிகழலாம். உதாரணமாக, மனச்சிதைவு நோயில் சிலருக்குக் காதினில் யாரோ இறந்துபோகக் கட்டளையிடுவதுபோல் தோன்றும். சில தற்கொலைகளில் புறக் காரணிகளின் பங்கு அதிகமாக இருக்கும். உதாரணமாக, விவசாயம் பொய்த்துப் போவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது.
பதின்மவயதுப் பிரச்சினைகள்
சமீபகாலத்தில் அதிகரிக்கும் பதின்மவயது மாணவத் தற்கொலைகளில் அக மற்றும் புறக் காரணி கள் பின்னிப் பிணைந்திருப்பதை உணர முடிகிறது. மாணவர்களின் மனநிலையைத் தாண்டி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், கல்வி முறை, ஊடகங்கள் எனப் பல பரிமாணங்களும் கோணங்களும் உள்ள பிரச்சினை இது.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?
தற்போதைய இளம் தலைமுறையினரிடம் சில ஆளுமைக் கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, ஈகோ எனப்படும் தன்னைப் பற்றிய முனைப்பு அதிகமாகவே காணப்படுகிறது என்பதைப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. கூட்டுக் குடும்பங்களில் வேறு பல பிரச்சினைகள் இருந்தாலும் குழந்தைகளைப் பொறுத்தவரை பகிர்ந்துகொள்ளல் இருந்தது. பொருட்களை மட்டுமல்ல உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள கூட்டுக் கும்பத்தில் வழியிருந்தது.
இப்போது பலரும் ஒரு குழந்தையுடன் நிறுத்திவிடுவதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கவனம் அதிகமாகி ஈகோ பெரிதாக வளர்கிறது. தன்னையும் தனது தேவைகளையும் பூர்த்திசெய்யவே எல்லோரும் உள்ளனர் என்ற குறுகிய பார்வை தோன்றுகிறது. அதனால், தன்னை யாரும் ஒன்றுமே சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் வளர்கிறது. முகம்திரிந்து நோக்கினால்கூட வாடிவிடும் அனிச்சமலர் போல் ஒரு சுடு சொல்கூட அவர்களை வாடச்செய்துவிடுகிறது.
மேலும், கல்வி முறையால் ஏற்பட்டிருக்கும் சுமையை இறக்குவதற்கும் இறுக்கத்தைக் குறைப்பதற்கும் எந்தவித ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளும் குறைவு. மன அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவை அறவே இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, பெண் குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம். வெளியே சென்று விளையாடுவதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை என்பது மிக முக்கியமான பிரச்சினை. சமீபத்தில் மாணவியரே அதிகம் தற்கொலை செய்துகொண்டதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்பது ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’, ‘கேண்டி கிரஷ்’ போன்ற செல்பேசி விளையாட்டுகள்தான்.
இப்போது பலரும் ஒரு குழந்தையுடன் நிறுத்திவிடுவதால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கவனம் அதிகமாகி ஈகோ பெரிதாக வளர்கிறது. தன்னையும் தனது தேவைகளையும் பூர்த்திசெய்யவே எல்லோரும் உள்ளனர் என்ற குறுகிய பார்வை தோன்றுகிறது. அதனால், தன்னை யாரும் ஒன்றுமே சொல்லிவிடக் கூடாது என்ற எண்ணம் வளர்கிறது. முகம்திரிந்து நோக்கினால்கூட வாடிவிடும் அனிச்சமலர் போல் ஒரு சுடு சொல்கூட அவர்களை வாடச்செய்துவிடுகிறது.
மேலும், கல்வி முறையால் ஏற்பட்டிருக்கும் சுமையை இறக்குவதற்கும் இறுக்கத்தைக் குறைப்பதற்கும் எந்தவித ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளும் குறைவு. மன அழுத்தத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி, விளையாட்டுகள் போன்றவை அறவே இல்லை என்றே சொல்லலாம். குறிப்பாக, பெண் குழந்தைகள் நிலைமை இன்னும் மோசம். வெளியே சென்று விளையாடுவதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை என்பது மிக முக்கியமான பிரச்சினை. சமீபத்தில் மாணவியரே அதிகம் தற்கொலை செய்துகொண்டதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்பது ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’, ‘கேண்டி கிரஷ்’ போன்ற செல்பேசி விளையாட்டுகள்தான்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?
பெற்றோர்களின் கடமை
தனியார்மயம், உலகமயமாக்கலால் போட்டிமய மான சூழலில் பெற்றோர்கள் மிகையான எதிர்பார்ப்பு களை வைத்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாவதுடன், குழந்தைகளிடமும் அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறார்கள். பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும் அதிகம் நடக்கிறது. குழந்தைகள் தனித்தன்மை கொண்ட ஆளுமைகள் என்று பார்ப்பதில்லை.
குழந்தைகளின் தனித்தன்மை மிளிரும் வகையில் நேர்மை, துணிச்சல், பொறுமை, பொறுப்புணர்வு, விடாமுயற்சி போன்ற ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருப்பது பெற்றோரின் கடமை. இந்தப் பண்புகள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பெரிய அளவில் உதவும். உங்கள் குழந்தைகளுக்குச் சில விஷயங்களில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வமும் திறமையும் உழைப்பும் சேர்ந்தாலே முழுமையானதாக இருக்கும். உடற்பயிற்சி, விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்வுகள் நடக்கும்போது நாள் முழுவதும் படித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது.
முன்பெல்லாம் ‘கண்ணை மட்டும் விட்டுவிட்டு எல்லா இடத்திலேயும் அடிங்க சார்!’ எனப் பெற்றோர் கள் ஆசிரியர்களிடம் கூறுவார்கள். அது போன்ற உடல்ரீதியான துன்புறுத்தலை அறிவுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதேசமயம், கொஞ்சம் கடுமையான சொற்களைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் போகும் அளவுக்குக் குழந்தைகளை உருவாக்காதீர்கள்.
சுடுசொற்களை, ஏமாற்றத்தை, வலிகளைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமை. வெற்றி அடையக் கற்றுக் கொடுப்பது முக்கியம்தான் என்றாலும், தோல்விகளை எதிர்கொண்டு முன்னேறி வரவும் கற்றுத்தர வேண்டும். தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் உணர்ச்சிவசப்படாமல் ஒப்புக்கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். யாரேனும் சீண்டினால் பயந்துபோகாமல் போராடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
தனியார்மயம், உலகமயமாக்கலால் போட்டிமய மான சூழலில் பெற்றோர்கள் மிகையான எதிர்பார்ப்பு களை வைத்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாவதுடன், குழந்தைகளிடமும் அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறார்கள். பிற மாணவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதும் அதிகம் நடக்கிறது. குழந்தைகள் தனித்தன்மை கொண்ட ஆளுமைகள் என்று பார்ப்பதில்லை.
குழந்தைகளின் தனித்தன்மை மிளிரும் வகையில் நேர்மை, துணிச்சல், பொறுமை, பொறுப்புணர்வு, விடாமுயற்சி போன்ற ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருப்பது பெற்றோரின் கடமை. இந்தப் பண்புகள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பெரிய அளவில் உதவும். உங்கள் குழந்தைகளுக்குச் சில விஷயங்களில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வமும் திறமையும் உழைப்பும் சேர்ந்தாலே முழுமையானதாக இருக்கும். உடற்பயிற்சி, விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தேர்வுகள் நடக்கும்போது நாள் முழுவதும் படித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது.
முன்பெல்லாம் ‘கண்ணை மட்டும் விட்டுவிட்டு எல்லா இடத்திலேயும் அடிங்க சார்!’ எனப் பெற்றோர் கள் ஆசிரியர்களிடம் கூறுவார்கள். அது போன்ற உடல்ரீதியான துன்புறுத்தலை அறிவுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதேசமயம், கொஞ்சம் கடுமையான சொற்களைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் போகும் அளவுக்குக் குழந்தைகளை உருவாக்காதீர்கள்.
சுடுசொற்களை, ஏமாற்றத்தை, வலிகளைத் தாங்கிக்கொள்ள குழந்தைகளைத் தயார் செய்வது பெற்றோர்களின் கடமை. வெற்றி அடையக் கற்றுக் கொடுப்பது முக்கியம்தான் என்றாலும், தோல்விகளை எதிர்கொண்டு முன்னேறி வரவும் கற்றுத்தர வேண்டும். தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் உணர்ச்சிவசப்படாமல் ஒப்புக்கொள்ளக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். யாரேனும் சீண்டினால் பயந்துபோகாமல் போராடக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: பதின்பருவத் தற்கொலைகள்: தடுக்க என்ன வழி?
ஆசிரியர்களின் பொறுப்பு
குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. பள்ளிக்கூடம் என்பது மதிப்பெண்கள் எடுக்கக்கூடியவர்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அல்ல. விளையாட்டுப் பாட வகுப்புகளில் பிற பாடங்களை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான திறமையும் வேகமும் இருக்கும். ஒரே வயது என்ற ஒரே அடிப்படை யில் வகுப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கருதுவது தவறு.
மூளை வளர்ச்சிக் குறைபாடு, அதீத துறுதுறுப்பு (ஹைப்பர் ஆக்டிவிட்டி) , கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), ஆட்டிசம் என்று குழந்தைகளிடம் காணப்படும் பாதிப்புகளைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் அறிந்திருப்பதில்லை. இந்தக் குழந்தைகளையும் மற்ற குழந்தைகள்போல் மதிப்பெண் இயந்திரமாக மாற்ற நினைப்பது தவறு. மேலும், இக்காலப் பதின்வயதினர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதால், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது மிகுந்த கவனம் தேவை. புண்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். தவறான செயலை மட்டும் கண்டிக்க வேண்டும்.
தற்கொலைகள் தொடர்பான செய்திகளைக் கையாள்வதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்குள்ளது. ஒரு நிகழ்வின் பின்புலம், நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களின் நம்பகத்தன்மை, நாம் கொடுக்கும் காட்சி, செய்திகளின் தாக்கங்கள் என்னவென்னவாக இருக்கும் என்றெல்லாம் பொறுப்புணர்வோடு ஊடகங் கள் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். பரபரப்புக்காக மிகைப்படுத்தப்படும் செய்திகள் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதைக் கணக்கில்கொள்ள வேண்டும். குழந்தைகள்தான் எதிர்காலத்தில் உலகின் போக்கைத் தீர்மானிப்பவர்கள் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைப் பெருமளவில் குறைக்கலாம்!
- ஜி.ராமானுஜம், மனநலத் துறைப் பேராசிரியர்,
நன்றி
தி இந்து
குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. பள்ளிக்கூடம் என்பது மதிப்பெண்கள் எடுக்கக்கூடியவர்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அல்ல. விளையாட்டுப் பாட வகுப்புகளில் பிற பாடங்களை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையான திறமையும் வேகமும் இருக்கும். ஒரே வயது என்ற ஒரே அடிப்படை யில் வகுப்பில் இருக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று கருதுவது தவறு.
மூளை வளர்ச்சிக் குறைபாடு, அதீத துறுதுறுப்பு (ஹைப்பர் ஆக்டிவிட்டி) , கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), ஆட்டிசம் என்று குழந்தைகளிடம் காணப்படும் பாதிப்புகளைப் பற்றி பெரும்பாலான ஆசிரியர்கள் அறிந்திருப்பதில்லை. இந்தக் குழந்தைகளையும் மற்ற குழந்தைகள்போல் மதிப்பெண் இயந்திரமாக மாற்ற நினைப்பது தவறு. மேலும், இக்காலப் பதின்வயதினர் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதால், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது மிகுந்த கவனம் தேவை. புண்படுத்தாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது, குழந்தைகளிடம் ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். தவறான செயலை மட்டும் கண்டிக்க வேண்டும்.
தற்கொலைகள் தொடர்பான செய்திகளைக் கையாள்வதில் ஊடகங்களுக்குப் பெரிய பங்குள்ளது. ஒரு நிகழ்வின் பின்புலம், நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களின் நம்பகத்தன்மை, நாம் கொடுக்கும் காட்சி, செய்திகளின் தாக்கங்கள் என்னவென்னவாக இருக்கும் என்றெல்லாம் பொறுப்புணர்வோடு ஊடகங் கள் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை ஆராய வேண்டும். பரபரப்புக்காக மிகைப்படுத்தப்படும் செய்திகள் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதைக் கணக்கில்கொள்ள வேண்டும். குழந்தைகள்தான் எதிர்காலத்தில் உலகின் போக்கைத் தீர்மானிப்பவர்கள் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைப் பெருமளவில் குறைக்கலாம்!
- ஜி.ராமானுஜம், மனநலத் துறைப் பேராசிரியர்,
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|