புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்கத் தமிழ் விரிப்பு
Page 1 of 1 •
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
சங்கத் தமிழ் விரிப்பு
யாப்பருங்கலம், காரிகை இவற்றில் யாப்பிலக்கணச் சான்றுகளாக வரும் செய்யுட்கள் மற்ற பிற செய்யுட்களின் சங்கத் தமிழ் வரிகளை முழுவதும் புரிந்துகொள்ள உரைகளை நாடுகிறோம். சங்கப் பாடல் உரைகள் அநேகமாக ஒரு set forumula-வுக்குள் செய்யுள்-பதவுரை-பொழிப்புரை-விரிப்புரை-மேற்கோள் என்று சங்கத் தமிழ் மொழியிலேயே விளக்க முயல்கின்றன.
ஒரு மாறுதலாக, மனதைக் கவரும் செய்யுட்களின் அழகையும் பொருளையும் இன்றைய வழக்கில், அரும்பொருள் உரைத்துக் கூடியவரையில் பொருள் நீர்த்துப் போகாமல் அதேவகை மரபு வடிவில் கவிதையாக எழுத முயன்றால் என்ன என்று தோன்றிக் கொஞ்ச நாளாக முயல்வதன் விளைவே இந்தத் திரி/நூல். குழுமத்தின் அனுபவக் கவிஞர்கள்களும் இந்த முயற்சியில் தங்கள் கைவரிசையைக் காட்டினால் என் முயற்சியில் இருக்கும் கைவிரிசல்கள் சரிசெய்யப்பட்டுச் சங்கத் தமிழை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
செய்யுள் 1. நீரின் தண்மையும்
முதலில் காரிகை தரும் அந்தப் புகழ்பெற்ற இணைக்குறள் ஆசிரியப்பா:
(இணைக்குறள் ஆசிரியப்பா)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை,
சாரச் சாரச் சார்ந்து,
தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தலைவனின் பிரிவில் தலைவியின் சொற்களில்
அலையுறும் நெஞ்சின் ஆர்ப்பைக் காட்டும்
இந்தப் பாடலைக் கொஞ்சம் அலசுவோமே.
(இணைக்குறள் ஆசிரியப்பா)
தொட்டால் சில்லிடும் நீரின் தண்மை
விட்டால் தீர்ந்து மறையும்
அண்மையில் சூடேறும் தீயின் வெம்மை
சேய்மையில் குறைந்து மறையும்
மலைச்சாரல் நாடன் தலைவனின் நட்போ
தலைப்பட்டால் பொல்லாதது!
ஒன்ற ஒன்ற நன்றாய் வளர்ந்து
வந்தபின் பிரிந்தாலோ
தீர்வதே யில்லாமல்
தீயின் வெம்மையால்
நீரின் தண்மையாய்
நெஞ்சினில் சுட்டும் குளிர்ந்தும் நோகுமே!
தொடரும், தொடர்வார்களாக!
*****
யாப்பருங்கலம், காரிகை இவற்றில் யாப்பிலக்கணச் சான்றுகளாக வரும் செய்யுட்கள் மற்ற பிற செய்யுட்களின் சங்கத் தமிழ் வரிகளை முழுவதும் புரிந்துகொள்ள உரைகளை நாடுகிறோம். சங்கப் பாடல் உரைகள் அநேகமாக ஒரு set forumula-வுக்குள் செய்யுள்-பதவுரை-பொழிப்புரை-விரிப்புரை-மேற்கோள் என்று சங்கத் தமிழ் மொழியிலேயே விளக்க முயல்கின்றன.
ஒரு மாறுதலாக, மனதைக் கவரும் செய்யுட்களின் அழகையும் பொருளையும் இன்றைய வழக்கில், அரும்பொருள் உரைத்துக் கூடியவரையில் பொருள் நீர்த்துப் போகாமல் அதேவகை மரபு வடிவில் கவிதையாக எழுத முயன்றால் என்ன என்று தோன்றிக் கொஞ்ச நாளாக முயல்வதன் விளைவே இந்தத் திரி/நூல். குழுமத்தின் அனுபவக் கவிஞர்கள்களும் இந்த முயற்சியில் தங்கள் கைவரிசையைக் காட்டினால் என் முயற்சியில் இருக்கும் கைவிரிசல்கள் சரிசெய்யப்பட்டுச் சங்கத் தமிழை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
செய்யுள் 1. நீரின் தண்மையும்
முதலில் காரிகை தரும் அந்தப் புகழ்பெற்ற இணைக்குறள் ஆசிரியப்பா:
(இணைக்குறள் ஆசிரியப்பா)
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை,
சாரச் சாரச் சார்ந்து,
தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தலைவனின் பிரிவில் தலைவியின் சொற்களில்
அலையுறும் நெஞ்சின் ஆர்ப்பைக் காட்டும்
இந்தப் பாடலைக் கொஞ்சம் அலசுவோமே.
(இணைக்குறள் ஆசிரியப்பா)
தொட்டால் சில்லிடும் நீரின் தண்மை
விட்டால் தீர்ந்து மறையும்
அண்மையில் சூடேறும் தீயின் வெம்மை
சேய்மையில் குறைந்து மறையும்
மலைச்சாரல் நாடன் தலைவனின் நட்போ
தலைப்பட்டால் பொல்லாதது!
ஒன்ற ஒன்ற நன்றாய் வளர்ந்து
வந்தபின் பிரிந்தாலோ
தீர்வதே யில்லாமல்
தீயின் வெம்மையால்
நீரின் தண்மையாய்
நெஞ்சினில் சுட்டும் குளிர்ந்தும் நோகுமே!
தொடரும், தொடர்வார்களாக!
*****
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தொடருங்கள் அரும் சேவை
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
செய்யுள் 2. வேரல் வேலி
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18
(கலிவிருத்தம்)
தலைவனின் களவில் தலைவியின் காதல்
அலைபோ லெழுந்து உயிரை வதைக்கத்
தலைவனிடம் தோழி தலைவியை மணம்கொளத்
தலைப்படு மாறு தெளிவுரை கூறினாளே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் என்பது மலைவிளை மூங்கில்
சாரல் என்பது மலையினைக் குறிக்கும்
அறிந்திசி னோரே: யாரறி வாரே.
வேரல் மரமே வேர்ப்பலா வேலியாகும்
சாரல் நாட! செவ்விய மதியுடன்
வரைக தலைவியை மணத்தில்! ஏனெனில்
வேர்ப்பலா காம்பென அவளுயிர் சிறிது
வேர்ப்பலா போன்றவள் காதல் பெரிது
பழமது மிகவும் பழுத்து விழுந்தால்
உழன்றிடும் உயிரே நீங்கிடும் அன்றோ?
*****
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18
(கலிவிருத்தம்)
தலைவனின் களவில் தலைவியின் காதல்
அலைபோ லெழுந்து உயிரை வதைக்கத்
தலைவனிடம் தோழி தலைவியை மணம்கொளத்
தலைப்படு மாறு தெளிவுரை கூறினாளே.
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் என்பது மலைவிளை மூங்கில்
சாரல் என்பது மலையினைக் குறிக்கும்
அறிந்திசி னோரே: யாரறி வாரே.
வேரல் மரமே வேர்ப்பலா வேலியாகும்
சாரல் நாட! செவ்விய மதியுடன்
வரைக தலைவியை மணத்தில்! ஏனெனில்
வேர்ப்பலா காம்பென அவளுயிர் சிறிது
வேர்ப்பலா போன்றவள் காதல் பெரிது
பழமது மிகவும் பழுத்து விழுந்தால்
உழன்றிடும் உயிரே நீங்கிடும் அன்றோ?
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
செய்யுள் 3. நிலத்தினும் பெரிதே
(நேரிசை ஆசிரியப்பா)
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
---தேவகுலத்தார், குறுந்தொகை 3.
அன்று என்பது எதிர்மறைப் பொருளல்ல
அன்று என்பது பொருளில் அசைச்சொல்
உயர்ந்தன்று என்பது எனவே
உயர்ந்தது என்ற பொருளைத் தருமே.
ஆர என்பதோர் உவமைச் சொல்லாம்
ஆர என்றல் மிக்க எனப்பொருள்
சாரல் என்பது மலையாம்
கோலெனச் சொன்னது மரத்தின் கொம்பே.
இழைக்கும் என்னும் இன்சொல் நோக்குக.
இழைத்தல் என்றால் இரைத்தல் செய்தல்
குழைத்தல் பூசுதல் இழையாக்கல்;
இழைக்கத் தேனை உழைக்கும் வண்டுகளே.
கருங்கிளை தாங்கும் குறிஞ்சி மரத்தின்
அரும்பெரும் பூக்களில் சுரும்புகள் தேனிழைக்கும் ... ... ... [சுரும்பு=வண்டு]
மலைநிலத் தலைமகன் மீ(து)அவள் நட்பே
உலகினும் பெரியது உயர்ந்தது வானினும்
உலவிடும் கடலின் நீரினும் ஆழமே
என்பதை உணர்ந்து மணங்கொளத் தலைப்படு
என்றாள் தோழி வேலியின்
பின்புறம் நிற்கும் தலவனை நோக்கியே.
மலையினில் மலரும் குறிஞ்சி மலர்களில்
பலவகை வண்ணம் உண்டே
மலையே சிரிக்கும் மலர்கள் கீழே.
[You must be registered and logged in to see this link.]
*****
(நேரிசை ஆசிரியப்பா)
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.
---தேவகுலத்தார், குறுந்தொகை 3.
அன்று என்பது எதிர்மறைப் பொருளல்ல
அன்று என்பது பொருளில் அசைச்சொல்
உயர்ந்தன்று என்பது எனவே
உயர்ந்தது என்ற பொருளைத் தருமே.
ஆர என்பதோர் உவமைச் சொல்லாம்
ஆர என்றல் மிக்க எனப்பொருள்
சாரல் என்பது மலையாம்
கோலெனச் சொன்னது மரத்தின் கொம்பே.
இழைக்கும் என்னும் இன்சொல் நோக்குக.
இழைத்தல் என்றால் இரைத்தல் செய்தல்
குழைத்தல் பூசுதல் இழையாக்கல்;
இழைக்கத் தேனை உழைக்கும் வண்டுகளே.
கருங்கிளை தாங்கும் குறிஞ்சி மரத்தின்
அரும்பெரும் பூக்களில் சுரும்புகள் தேனிழைக்கும் ... ... ... [சுரும்பு=வண்டு]
மலைநிலத் தலைமகன் மீ(து)அவள் நட்பே
உலகினும் பெரியது உயர்ந்தது வானினும்
உலவிடும் கடலின் நீரினும் ஆழமே
என்பதை உணர்ந்து மணங்கொளத் தலைப்படு
என்றாள் தோழி வேலியின்
பின்புறம் நிற்கும் தலவனை நோக்கியே.
மலையினில் மலரும் குறிஞ்சி மலர்களில்
பலவகை வண்ணம் உண்டே
மலையே சிரிக்கும் மலர்கள் கீழே.
[You must be registered and logged in to see this link.]
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
செய்யுள் 4. எறும்பி யளையிற்
(நேரிசை ஆசிரியப்பா)
முன்னுரை:
வதுவைப் பொருளீட்டத் தலைவன் தலைவியைப்
பொதுவில் பிரிந்து சென்ற போது
அதுகண்டு ஆற்றாது அவன்சென்ற வழியின்
துன்பங்கள் குறித்துத் தோழியிடம் அஞ்சும்
தன்னெஞ் சுரைத்துத் தலைவி
ஊரின் அலட்சியம் கூறிப் புலம்பியது.
செய்யுள்:
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவவர் சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.
---ஓதலாந்தையார், குறுந்தொகை 12.
விளக்கம்:
எறும்பியளை என்றது எறும்பின் வளையே
குறும்பல் சுனையாம் குறுகிய பலசுனை
எறும்புப் புற்றுபோல் பலவாகும்
குறுகிய சுனைகள் உவமை காண்க.
எயினர் என்போர் வில்லேந்திய வேடுவர்கள்
பகழி மாய்த்தல் அம்பினைக் கூர்தீட்டல்
கவலைத் தென்பது கிளைபிரி வழிகளே
அலையும் ஆதவன் அனலில் சூடேறி
உலைக்களக் கல்போல் கொதிக்கும் பாறையில்
எயினர்தம் வில்லின் அம்புகள் கூர்தீட்டும்
வழிபல கடக்க வேண்டும்
தலைவன் பிரிந்து சென்ற பாதையிலே.
நொதுமல் என்பது அக்கம் பக்கம்
கழறுதல் என்றால் இடித்துக் கூறுதல்
அழுங்கல் என்பது இங்கு ஆரவாரம்
கவலைக் குரிய கிளைத்த வழிகளின்
அவலம் நோக்காது ஆர்ப்பரிக்கும் இவ்வூர்
தலைவன் பிரிந்தது மட்டும் கொண்டு
என்நெஞ்சு அறியாது இடித்துப் பேசுதல்
உன்நெஞ்சு அறியாதோ தோழி
என்றாள் தலைவி தன்னுயிர்த் தோழியிடம்.
*****
(நேரிசை ஆசிரியப்பா)
முன்னுரை:
வதுவைப் பொருளீட்டத் தலைவன் தலைவியைப்
பொதுவில் பிரிந்து சென்ற போது
அதுகண்டு ஆற்றாது அவன்சென்ற வழியின்
துன்பங்கள் குறித்துத் தோழியிடம் அஞ்சும்
தன்னெஞ் சுரைத்துத் தலைவி
ஊரின் அலட்சியம் கூறிப் புலம்பியது.
செய்யுள்:
எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவவர் சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.
---ஓதலாந்தையார், குறுந்தொகை 12.
விளக்கம்:
எறும்பியளை என்றது எறும்பின் வளையே
குறும்பல் சுனையாம் குறுகிய பலசுனை
எறும்புப் புற்றுபோல் பலவாகும்
குறுகிய சுனைகள் உவமை காண்க.
எயினர் என்போர் வில்லேந்திய வேடுவர்கள்
பகழி மாய்த்தல் அம்பினைக் கூர்தீட்டல்
கவலைத் தென்பது கிளைபிரி வழிகளே
அலையும் ஆதவன் அனலில் சூடேறி
உலைக்களக் கல்போல் கொதிக்கும் பாறையில்
எயினர்தம் வில்லின் அம்புகள் கூர்தீட்டும்
வழிபல கடக்க வேண்டும்
தலைவன் பிரிந்து சென்ற பாதையிலே.
நொதுமல் என்பது அக்கம் பக்கம்
கழறுதல் என்றால் இடித்துக் கூறுதல்
அழுங்கல் என்பது இங்கு ஆரவாரம்
கவலைக் குரிய கிளைத்த வழிகளின்
அவலம் நோக்காது ஆர்ப்பரிக்கும் இவ்வூர்
தலைவன் பிரிந்தது மட்டும் கொண்டு
என்நெஞ்சு அறியாது இடித்துப் பேசுதல்
உன்நெஞ்சு அறியாதோ தோழி
என்றாள் தலைவி தன்னுயிர்த் தோழியிடம்.
*****
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|