புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10அகிம்சை கற்பித்த குறள்! Poll_m10அகிம்சை கற்பித்த குறள்! Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகிம்சை கற்பித்த குறள்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:16 am

அகிம்சை கற்பித்த குறள்!

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். இவரை மகாத்மா காந்தியடிகள் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்' அகிம்சை தத்துவத்தின் பிரதிபலிப்பே. அத்துடன் அவர் எழுதிய "அன்னா கரீனா' என்ற நூலும் அகிம்சைத் தத்துவத்தின் விளக்கமே.
காந்தியடிகள் ஒருமுறை டால்ஸ்டாயைச் சந்தித்தபோது, ""அகிம்சையை மையப்படுத்தி நவீனங்கள் படைத்துள்ளீர்களே, அது எப்படி?'' என்று வினவினார்.
அதற்கு டால்ஸ்டாய் சொன்ன பதில் -
""உங்கள் நாட்டில் தோன்றிய திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துத்தான் அகிம்சை பற்றி நான் தெரிந்து கொண்டேன்!''

- அ.சா.குருசாமி, செவல்குளம்.




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:16 am

முதல் வந்த நினைவு

பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாக்டர் பி.சி.ராய், தம்முடைய எண்பதாவது பிறந்த நாளின்போது தம்மை வாழ்த்த வந்த பற்பல அரசியல் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நிருபர் டாக்டர் ராய் அவர்களிடம், ""இந்தப் பிறந்த நாளின்போது யாருடைய நினைவு முதலில் வந்தது?'' என்று கேட்டார்.
அதற்கு ராய் அவர்கள், ""சுதந்திரப் போராட்ட காலங்கள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் காந்தி அடிகள், பண்டித நேரு, வல்லபாய் படேல், அபுல்கலாம் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். அவர்களுடைய நினைவுகள் எல்லாம் எனக்கு வராமல், எளிய உருவமுடன் ஏழை மக்களின் நலனில் அக்கறையும் கொண்டு சதாசர்வகாலமும் தொண்டுசெய்துவரும் அன்னை தெரசா அவர்களின் கருணை நிரம்பிய முகம்தான் என் நினைவில் வருகிறது...'' என்று ஒளிவுமறைவின்றிக் கூறியது, அனைவருடைய நெஞ்சத்தையும் நெகிழவைத்தது.

- ஜி.பென்னி, விழுப்புரம்.




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:17 am

நேர்மைக்கு இலக்கணம்!

காமராசர் முதலமைச்சராக இருந்த நேரம். ராஜாஜி எதிரணியில் இருக்கிறார். மாம்பலம் சி.ஐ.டி. நகரில் "ராஜாஜி சேவா சங்கம்' என்ற அமைப்பைச் சார்ந்த கட்டடம் கட்டியிருந்தார்கள். ஆனால் சி.ஐ.டி. நிறுவனத்தினர் அந்தக் கட்டடம் தங்களுடைய விதிமுறைகளுக்கு முரணாக கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டார்கள். இந்த விஷயம் பெருந்தலைவருக்குத் தெரியவந்தது. ராஜாஜி எதிரணி என்பதால் பெருந்தலைவர் இதைக் கண்டுகொள்ளமாட்டார் என்று எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் காமராசர், சி.ஐ.டி. நிறுவனத்தினரை அழைத்து விசாரித்து அவர்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் பண்ணியிருப்பதைச் சுட்டிக்காட்டி, அவர்கள் செலவிலேயே உடனடியாக அந்தக் கட்டடத்தைப் புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அறிக்கையோடு உத்தரவு பிறப்பித்தார். அதேபோல சி.ஐ.டி. நிறுவனத்தினர் புதிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தனர். இப்போதும் அந்தக் கட்டடம் மாம்பலம் சி.ஐ.டி. நகரில் இருக்கிறது. பெருந்தலைவரின் நேர்மைக்கு இதுவும் ஒரு சான்றாகும்.
(ஆதாரம்: இளசை சுந்தரம் எழுதிய "காமராஜ் - நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' என்ற நூலிலிருந்து.)

- என். கணேசன், வேலூர்.
சிறுவர் மணி




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:18 am

தமி​ழால் அடிப்​பேன்...​

பரி​தி​மாற் கலை​ஞர்,​​ சிறந்த தமிழ்ப் பேரா​சி​ரி​யர்.​ ஒரு​முறை அவர் பாடம் நடத்​திக் கொண்​டி​ருந்​த​போது,​​ குறும்​புக்​கார மாண​வர் ஒரு​வர் எழுந்து,​​ ""ஆசி​ரி​யப் பெரும!​ எழுத்து,​​ அசை,​​ சீர்,​​ தளை,​​ அடி,​​ தொடை என்​ப​ன​வற்​றைப் பற்றி விரி​வா​க​வும்,​​ விளங்​கு​மா​றும்​ தாங்​கள் எடுத்​துக் கூறி​னீர்​கள்.​ அடி​க​ளை​யும்,​​ தொடை​க​ளை​யும் பற்றி விரித்த பின்​னர் மேலே விவ​ரிப்​ப​தற்கு யாது உளது?​'' என்று கேட்​டார்.​

÷அ​தற்​குப் பரி​தி​மாற் கலை​ஞர்,​​ ""அன்பு சால் மாணவ!​ யாப்​பி​லக்​க​ணத்தை யாம் விளங்​கு​மாறு எடுத்​து​ரைத்​த​தா​கத் தாம் கூறு​வ​தற்கு யாம் வந்​த​னம்...​ தந்​த​னம்...!​ தொடை இலக்​க​ணத்​திற்​குப் பிறகு எவ்​வி​லக்​க​ணம் கூறப்​ப​டும் என்று ஐயுற்ற நுமக்கு,​​ யாம் மற்​றொரு நாள் "விளக்​கு​மாற்​றால்'​ விளக்​கு​தும்!​'' என்​றார்.​

÷பே​ரா​சி​ரி​ய​ரின் பதி​லைக் கேட்ட மாண​வர் வாய​டைத்​துப்​போய் தலை​கு​னிந்​த​படி அமர்ந்​தா​ராம்!​ ​

சிறுவர் மணி




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 1:21 am

வள்ளுவரின் புகழ் ரஷ்ஷிய அறிஞர் வழி இந்தியர் அறிந்தது அருமை.

இத்தாலியில் இருந்து வந்த அன்னை தெரசா எங்கே அதே இத்தாலியில் இருந்து வந்த காங்கிரசின் சோனியா அன்னை எங்கே?

காமராஜரின் எளிமையும் பண்பும் இன்று அரசாளும் ஒருவருக்காவது இருக்கா?

நல்ல பகிர்வு முகம்மத்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:23 am

யினியவன் wrote:வள்ளுவரின் புகழ் ரஷ்ஷிய அறிஞர் வழி இந்தியர் அறிந்தது அருமை.

இத்தாலியில் இருந்து வந்த அன்னை தெரசா எங்கே அதே இத்தாலியில் இருந்து வந்த காங்கிரசின் சோனியா அன்னை எங்கே?

காமராஜரின் எளிமையும் பண்பும் இன்று அரசாளும் ஒருவருக்காவது இருக்கா?

நல்ல பகிர்வு முகம்மத்


நன்றி மகிழ்ச்சி




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 11:59 pm

அலுவலகத்தைப் பெருக்கிய நாயுடு

ஜி.டி.நாயுடு ஒருநாள் காலை நேரத்தில் தனது தொழிலகத்தின் தலைமை நிர்வாகி அறைக்குள் சென்றார். அறையில் மேஜை நாற்காலிகள் தாறுமாறாகக் கிடந்தன. அறை எங்கும் குப்பையும் கூளமுமாகக் காணப்பட்டது. ஜி.டி.நாயுடு தானே அறையை ஒழுங்குபடுத்தினார். குப்பைக் கூளங்களை அகற்றினார். பிறகு ஒரு கடிதம் எழுதி கையெழுத்திட்டு மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
தாமதமாக அலுவலகம் வந்த தலைமை நிர்வாகி, ஜி.டி.நாயுடுவின் கடிதத்தைப் படித்துவிட்டு பதறினார்.
அதில்,"உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க ஒரு சந்தர்ப்பமளித்ததற்கு மிகவும் நன்றி' என்று எழுதியிருந்தது.
ஓடோடிச் சென்று நாயுடுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்த தலைமை நிர்வாகி.
""உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இப்போது என்னிடம் மன்னிப்புக் கேட்க வர வேண்டிய
திருக்காதல்லவா?'' என்றார் நாயுடு.

ஞாயிறு கொண்டாட்டம்




அகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Tஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Uஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Oஅகிம்சை கற்பித்த குறள்! Hஅகிம்சை கற்பித்த குறள்! Aஅகிம்சை கற்பித்த குறள்! Mஅகிம்சை கற்பித்த குறள்! Eஅகிம்சை கற்பித்த குறள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக