புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
68 Posts - 41%
heezulia
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
2 Posts - 1%
manikavi
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
1 Post - 1%
Guna.D
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
319 Posts - 50%
heezulia
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
21 Posts - 3%
prajai
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
3 Posts - 0%
Barushree
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வதந் "தீ' Poll_c10வதந் "தீ' Poll_m10வதந் "தீ' Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந் "தீ'


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 1:12 am

அரண்மனையில் வேலை செய்த பணிப்பெண் ஒருத்தி இரவுப் பணி முடிந்ததும் மறுநாள் காலை தன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். அரண்மனை வாயிலை ஒட்டிய சுவரில் மறுபக்கம் ஒரு படைவீரன் மற்றொரு படை வீரனுடன் பேசுவது அவள் காதில் கேட்டது.

"நான் இன்று இரவு அரசருக்குத் தெரியாமல் பஞ்ச கல்யாணியை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் செல்லப் போகிறேன்..'' என்றான்.

அதற்கு மற்றொருவன் ""அரசனுக்குத் தெரிந்தால் உன் நிலை என்னாகும் தெரியுமா? மரண தண்டனைதான்!'' என்றான்.

அந்நாட்டு மன்னரின் அரண்மனையில் "பஞ்ச கல்யாணி' என்றொரு நடன மங்கை இருந்தாள். அவள் பேரழகியாகவும் நடனத்தில் சிறந்தவளாகவும் விளங்கினாள். அவளை அபகரித்துச் செல்லப் பல நாட்டு மன்னர்கள் முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. மன்னர் தனது அரண்மனையில் அவளுக்கு ஒரு பகுதியை அளித்து அங்கு தங்க வைத்திருந்தார். அங்கு பலத்த காவலும் போடப்பட்டிருந்தது.

இவ்வீரர்கள் பேசியதைக் கேட்ட அப்பணிப்பெண் இவ்விஷயத்தை யாரிடமாவது கூறவேண்டும் எனத் துடித்தாள். அரண்மனையில் நடைபெறும் எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என கட்டளையிட்டிருந்தார் மன்னர். பணிப்பெண்களின் தலைவியிடம் கூறினால், அவள் இதை நம்பமாட்டாள். மேலும் சரியான ஆதாரம் இல்லாமல் இத்தகைய தகவல்களை வெளியில் சொல்லவும் முடியாது.

இவ்வாறு சிந்தனை வயப்பட்டவளாய் நடந்து செல்லும் வழியில் பூ விற்கும் பெண்மணியைக் கண்டாள். அவளிடம் விரைந்து சென்று, சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, "உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். யாரிடமும் சொல்லிவிடாதே... இன்றிரவு ஆட்டக்காரி பஞ்ச கல்யாணியை ஒரு வீரன் அழைத்துச் செல்ல இருக்கிறான்!' என்றாள்.

இதைக் கேட்ட அந்தப் பூக்காரிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. யாரிடமாவது இத்தகவலைப்
பகிர்ந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. அந்த நேரம் பார்த்து அவளுக்கு நன்கு பழக்கப்பட்ட தயிர் விற்கும் பெண்மணி அங்கு வந்தாள். உடனே அவளிடம் ஓடிச்சென்று, ""கேட்டாயா... இந்த அநியாயத்தை! ஆட்டக்காரி பஞ்ச கல்யாணிக்கும் படைவீரன் ஒருவனுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால் இன்றிரவு அவர்கள் அரண்மனையை விட்டுத் தப்பித்துச் செல்ல இருக்கிறார்கள். இந்த ரகசியத்தை ஒருவரிடமும சொல்லிவிடாதே...'' என்றாள்.
இதைக் கேட்ட அந்த தயிர்க்காரி ""சத்தியமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்!'' என்று கூறி அங்கிருந்து அகன்றாள். அவள் ஊருக்குள் சென்று தயிர் விற்கும் பொழுதும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. மனம் இத்தகவலையே நினைத்துக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட பூங்கொடி என்ற பெண், ""என்னம்மா? என்னவோ போல் இருக்கிறீர்கள்? உடம்பு சரியில்லையா?'' என்று கேட்டாள்.

தயிர் விற்கும் பெண்மணி சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று, ""உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். நீ அதை யாரிடமும் கூறக்
கூடாது. அரண்மனையில் இருக்கும் ஆட்டக்காரி பஞ்ச கல்யாணி இன்று இரவு ஒரு வீரனுடன் தப்பித்துச் செல்லப் போகிறாள்! அவள் பக்கத்து நாட்டு மன்னரிடம் சென்று நம் நாட்டைப் பற்றிய ரகசியங்களைச் சொல்லிவிடுவாள் என நினைக்கிறேன்..'' என்று தனது யூகத்தையும் கலந்து கூறினாள்.

அவள் அங்கிருந்து சென்றவுடன் பூங்கொடி நேரடியாகத் தன் எஜமானியாகிய அமைச்சரின் மனைவியிடம் ஓடிச் சென்று தான் கேள்விப்பட்ட எல்லா விஷயத்தையும் அப்படியே கூறினாள். அமைச்சரின் மனைவி உடனே அமைச்சரிடம் இத்தகவலைக் கூறினாள்.

இதைக் கேள்விப்பட்ட அமைச்சர் உடனடியாக மன்னரிடம் ஓடிச்சென்று, ""மன்னா.. நமது அரண்மனையில் தங்கியிருக்கும் ஆட்டக்காரி பஞ்ச கல்யாணி, வேற்று நாட்டு மன்னனால் அனுப்பப்பட்ட உளவாளி போலும்! அவள் இங்கு நடன மங்கை போல் தங்கியிருந்து நம் நாட்டு ராணுவ ரகசியங்களை சேகரித்து இருக்கிறாள். நம் படை வீரர்களுள் யாரோ ஒருவன் அவளுக்கு உதவி செய்கிறான். இன்று இரவு அவளும் அப்படை வீரனும் இங்கிருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டியுள்ளனர். அவர்கள் இங்கிருந்து சென்றுவிட்டால், வேற்று நாட்டு மன்னன் நம்மை எளிதாக முற்றுகையிட்டு விடுவான். எனவே அவ்விருவரையும் தாங்கள்தான் தண்டிக்க வேண்டும்!'' என்றார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மன்னர், ""உங்களுக்கு இத்தகவலைக் கூறியது யாரென்று கூறும்! தீர விசாரிக்காமல் என்னால் ஒருவரையும் தண்டிக்க முடியாது!'' என்றார்.

அமைச்சர் தனது மனைவி என்று கூற அவரது மனைவியோ தன் வீட்டுப் பணிப்பெண் பூங்கொடி கூறிய தகவல் என்றாள். பூங்கொடியை அழைத்து விசாரித்ததில், அவள் தயிர்க்காரி கூறிய தகவல் என்றாள். தயிர்க்காரி, பூக்காரிதான் இவ்விஷயத்தைக் கூறினாள் என்றாள். பூக்காரி அரண்மனையில் வேலை செய்யும் பணிப்பெண் கூறியது என்றாள். இதனால் அவள் மன்னர் முன் நிறுத்தப்பட்டாள். அவள் உடல் நடுங்கியபடியே மன்னரிடம், ""மன்னா! எனக்கு அப்படை வீரனின் முகம் தெரியாது! அவன் பேசிய குரலை மட்டுமே கேட்டேன்...'' என்றாள்.

அவள் குரல் கேட்ட நேரத்தில் பணியில் இருந்தவர்களை விசாரித்ததில் அவ்வாறு பேசியவன், வீரசிம்மன் என்னும் குதிரைப்படை வீரன் என்பது தெரிந்தது. அவன் உடனே மன்னரிடம் அழைத்துவரப்பட்டான்.

"மன்னா... எனக்கும் நடன மங்கை பஞ்ச கல்யாணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை! நம் குதிரைப் படையில் உள்ள குதிரைகளுக்கு அடையாளத்திற்காக நாங்கள் செல்லப் பெயர் வைப்போம். அப்படி மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்த குதிரைக்குப் "பஞ்சகல்யாணி' என்று பெயரிட்டோம்.

நான் குதிரையில் ஏறி வேகமாக ஓட்டுவதற்கும் அதை அடக்குவதற்கும் பயிற்சி செய்துவருகிறேன். எனக்குள்ள பணி நேரத்தில் எல்லா குதிரைகளையும் என்னால் பயிற்றுவிக்க இயலவில்லை!

எனவே இன்றிரவு "பஞ்சகல்யாணி' குதிரையைக் காட்டுக்கு அருகில் உள்ள திடலுக்கு ஓட்டிச் சென்று பயிற்சி செய்யலாம் என்று நினைத்தேன். அப்படிக் குதிரையை வெளியே ஓட்டிச் செல்ல வேண்டும் என்றால் தங்களின் முன் அனுமதி தேவை. எனவே தங்களுக்குத் தெரியாமல் அவ்வாறு செய்ய விரும்பினேன். ஆனால் எப்படியோ தங்களுக்குத் தெரிந்துவிட்டது! தயவு செய்து என்னை மன்னியுங்கள்!'' என்றான்.

இதைக் கேட்ட மன்னர், அமைச்சர் மற்றும் அங்கு கூடியுள்ளோர் அனைவரும் சிரித்துவிட்டனர்.
ஆம்! கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீரவிசாரிப்பதே மெய்! ஏனெனில் வதந்தி காட்டுத் தீயை விட மிக வேகமாகப் பரவும்!

சிறுவர் மணி




வதந் "தீ' Mவதந் "தீ' Uவதந் "தீ' Tவதந் "தீ' Hவதந் "தீ' Uவதந் "தீ' Mவதந் "தீ' Oவதந் "தீ' Hவதந் "தீ' Aவதந் "தீ' Mவதந் "தீ' Eவதந் "தீ' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 1:29 am

கூடங்குளம் கதையும் இதுபோலத்தான்.

இங்கிருந்து தயாரிக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையை தீர்த்துடும்ன்னு சொல்றத நம்பிடாதீங்க மக்களே.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 9:18 pm

யினியவன் wrote:கூடங்குளம் கதையும் இதுபோலத்தான்.

இங்கிருந்து தயாரிக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையை தீர்த்துடும்ன்னு சொல்றத நம்பிடாதீங்க மக்களே.

சூப்பருங்க




வதந் "தீ' Mவதந் "தீ' Uவதந் "தீ' Tவதந் "தீ' Hவதந் "தீ' Uவதந் "தீ' Mவதந் "தீ' Oவதந் "தீ' Hவதந் "தீ' Aவதந் "தீ' Mவதந் "தீ' Eவதந் "தீ' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 09, 2013 9:24 pm

கதை அருமை .நன்றி

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 11:01 pm

நல்ல கதை. இதன் கருத்தை நாம் மனதில் வைத்து நம் வாழ்வில் ஒவ்வொரு வதந்தியையும்/விஷயத்தையும் தீர விசாரித்து முடிவுக்கு வரவேண்டும்.



வதந் "தீ' 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக