புதிய பதிவுகள்
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
30 Posts - 36%
ayyasamy ram
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
12 Posts - 14%
Rathinavelu
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
4 Posts - 5%
Sindhuja Mathankumar
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
1 Post - 1%
mruthun
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
106 Posts - 47%
ayyasamy ram
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
3 Posts - 1%
mruthun
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அதுபோலத்தான் இதுவும்! Poll_c10அதுபோலத்தான் இதுவும்! Poll_m10அதுபோலத்தான் இதுவும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுபோலத்தான் இதுவும்!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 31, 2012 6:01 pm



இறந்துபோன மருத்துவ மாணவி, தனிநபர் என்ற அடையாளத்திலிருந்து, பாலியல் வன்கொடுமைகளுக்கு இலக்காகும் இந்தியப் பெண்களின் அடையாளமாக மாறியிருக்கிறார்.

இந்த மாணவியின் சம்பவத்தில் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு புதிய, ஆரோக்கியமான நடைமுறை - அவரை "23 வயது மாணவி' என்று மட்டுமே குறிப்பிட்டதுதான். அவரது பெயர்கூட தெரிவிக்கப்படவில்லை. அவரது புகைப்படம் வெளியாகவில்லை. அவரது தாய், தந்தையர் படம், பேட்டி எதுவுமே வெளியிடப்படவில்லை. வாக்குமூலம் பத்திரிகைகளுக்குக் கசியவில்லை. அவரது அந்தரங்கம் காக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆரோக்கியமான சூழலை அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்கவில்லை. அவர் இறந்த மறுநாளே அவர் பெயர், உத்தரப்பிரதேசத்தில் அவரது ஊர், உறவினர்களின் பேட்டி என்றெல்லாம் அந்தரங்கத் தகவலைக் கசிய வைத்தன சில பத்திரிகைகள். இருப்பினும் பொதுவாக ஊடகங்களும் பத்திரிகைகளும் பாராட்டக்கூடிய வகையில் செய்திகளைக் கட்டுக்கோப்பாக வெளியிட்டன.

இந்த ஆரோக்கியமான சூழல், இதே காலகட்டத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளான மற்ற பெண்களிடம் காட்டப்படவில்லையே ஏன்?

தில்லியில் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோதே, ஒரு 45 வயதுப் பெண்மணி அதே தில்லி நகரில் 3 பேரால் பாலியல் கொடுமைக்கு ஆளானார். அவரது பெயரோடுதான் செய்திகள் வந்தன.

தமிழகத்தில் விருத்தாசலம் மணிமுத்தாறு பகுதியில் உறவினருடன் சென்ற பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவர் பெயருடன்தான் செய்திகள் வெளியாகின. தூத்துக்குடியில் 13 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டார். இந்தச் சிறுமியின் புகைப்படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியானது. சேலத்தில் வீட்டு வேலைக்காக விற்கப்பட்ட பெண் மீதான வன்முறையிலும் விவரங்கள் வெளியாகின.

கர்நாடகத்தில், வேலைவாங்கித் தருவதாக ஒரு கும்பல் ஒரு பெண்ணை ஓட்டலில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திலும் பெயர்கள், ஊர் எல்லாமும் வெளியானது. ஏனிந்த பாரபட்சம்?

பாதிக்கப்படும் பெண்கள் குறித்த புகைப்படம், முகவரி, தாய், தந்தையர் விவரங்களை ஊடகங்களும் பத்திரிகைகளும் வெளியிடாது என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் சமூக எள்ளல்களுக்கும் புறக்கணிப்புக்கும் குடும்ப கெüரவத்துக்கும் அச்சப்பட்டு தயங்கி நிற்காமல் புகார் கொடுக்க முன்வருவார்கள். வெளியில் மட்டுமன்றி வீட்டுக்குள்ளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் குற்றங்களும் குறையும். இந்த மண்ணில் உடன்கட்டை ஏறப் பெண்கள் உடன்பட்டதற்கு மிக முக்கிய காரணம், வீட்டுக்குள் இருந்த ஆண்களால் நேர்ந்த பாலியல் கொடுமைகள்தான்.

ஜேப்படி திருடர்களைப் பட்டியலிடுவதைப்போல, பாலியல் குற்றவாளிகள் பட்டியலை வெளியிடுவோம் என்கிறது மத்திய அரசு. பார்த்தவுடன் தெரிந்துகொள்ளும் விதமான தண்டனை முறை பண்டைய இந்தியாவில் இருந்தது. அதாவது, பாலியல் குற்றச்சாட்டுகள் சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்படுமேயானால், மூக்கறுப்பு தண்டனை வழங்கப்பட்டது. இத்தண்டனை பெற்ற ஆண்கள், நெற்றிச் சதையை உரித்து, அறுபட்ட மூக்கின் மேல் மடித்துவைத்து, சதைப்பதியம் இணைந்தபிறகு சில நாள்களில் நெற்றிச் சதையைத் துண்டித்த சிகிச்சை முறையை "உலகின் முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை' என்று வியக்கும் இந்தியா, தன்னை "ஏற்கும்படி' தொல்லை செய்த சூர்ப்பனகை மூக்கறுக்கப்பட்டதை மட்டுமே பரவலாக்கியது. ஆண்கள் மூக்கறுபட்டது மறைக்கப்பட்டுவிட்டது.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதாலும், ஆண்மையற்றவர்களாக்குவதாலும் மட்டுமே பெண்களைக் காப்பாற்ற முடியும் என்ற கோரிக்கை வலுவாக இருக்கிறது. இத்தகைய கடும் தண்டனைகள் புதிதல்ல. சில நாடுகளில் வல்லுறவுக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் நாடுகளில் நடிகைகளின் குறைஉடைப் படங்கள் பத்திரிகைகளில் வெளியாகாது. தொலைக்காட்சிகளில் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள நிலைமை என்ன?

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காகப் பொங்கியெழுந்த அதே புதுதில்லியில், ""புத்தாண்டு 2013'' நள்ளிரவு நடனத்துக்காக "போர்னோ' நடிகை சன்னி லியோன், ஒரு கோடி ரூபாய் சம்பளத்துடன் கவர்ச்சி நடனமாடவிருக்கிறார். புதுதில்லியின் அனைத்து ஓட்டல்களிலும் புத்தாண்டு நள்ளிரவு விருந்துக்கான அனுமதி டிக்கெட்டுக்கு நீ, நான் என்று போட்டி.

பெருநகரங்கள் மட்டுமன்றி சாதாரண நகரங்களிலும்கூட அனைத்து ஓட்டல்களிலும் கள்ளும் கவர்ச்சியும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. "வெறியூட்டு' எல்லா நகரங்களிலும் நடைபெறும். ஊடகச் சிறப்பு நிகழ்ச்சிகளும் இதில் விதிவிலக்கல்ல. புத்தாண்டு தினத்தன்று மட்டும் எத்தனை கற்பழிப்புகள் நடக்கப் போகிறதோ, யார் கண்டது? எல்லா தவறுகளும் வெளிச்சத்துக்கு வருவதோ, தண்டனை பெறுவதோ இல்லை என்பதுதானே இந்தியாவின் இன்றைய நிலைமை.

"வெறியூட்டை' அனுமதித்துக்கொண்டே சமூகத்தை நெறிப்படுத்த முடியுமா என்பதுதான் நமது கேள்வி. மதுபானக் கடைகளை தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை அனுமதித்துவிட்டு, தொலைக்காட்சிச் சேனல்களில் "மிட்-நைட்' மசாலாக்களை ஒளிபரப்பிக் கொண்டு, சட்டம் போடுவதால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்துவிட முடியும் என்று மனப்பால் குடிக்கிறார்களே, அதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

லஞ்சம் வாங்கிக்கொண்டே நேர்மையை வலியுறுத்துகிறார்கள் அரசியல்வாதிகள்! லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொண்டே, லஞ்சமற்ற சமூகம் வேண்டும் என்று கொதிக்கிறார்கள் மக்கள்! அதுபோலத்தான் இதுவும்!

தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 31, 2012 6:07 pm

சிறந்த கண்ணோட்டம் நன்றி

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Dec 31, 2012 6:29 pm

இந்த விஷயத்தை சகோதரியின் தோழிகள்/தோழர்கள் தான் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து சரியான நீதி வேண்டும் என கேட்டார்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக