புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_m10வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதானவர்களின் செல்லப்பிள்ளை எட்வின்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Dec 30, 2012 11:49 am

சிவகாசி - நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் நிறைந்த ஊர். இந்த தேசத்தின் இன்னொரு பக்கம் கொஞ்சம் சோகமானது. சோகத்திற்கு காரணம், பராமரிக்க ஆள் இல்லாமல் சிரமப்படும் வயதானவர்கள். பென்ஷன், சேமிப்பு, வீடு, பிள்ளைகள்,பேரக்குழந்தைகள் என, எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அன்பாய் பார்க்க, பேச, கவனித்துக் கொள்ளத்தான் யாருக்கும் நேரமில்லை.
:-
"எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றேன், ஆனா, உங்கள வீட்ல வச்சு பார்த்துக்க முடியாது. ப்ளீஸ் தனியா இருந்துக்குங்க. முதியோர் இல்லத்திலும் சேரக் கூடாது; குடும்ப மானம் போயிரும். ஆகவே, எப்படியாவது சமாளிச்சுக்குங்க...' என்று,நேருக்கு நேராக சொல்லி விட்ட பிள்ளைகளால், தனித்தும், தவித்தும் போனவர்கள் இங்கே நிறைய பேர்.
:-
இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டனர். ஆனால், இந்த வயதில் பசியைத் தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நேர நேரத்திற்கு சமைக்க முடியாத தங்களுக்கு, யாராவது சாப்பாடு தர மாட்டார்களா என்று ஏங்கிப் போனார்கள். இவர்களின் ஏக்கத்தை போக்க வந்தவர்தான் எட்வின் சாலமன் ராஜ்.
:-
சென்னையில் பெரிய உத்தியோகத்தில் கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர், ஒருமுறை முடியாமல் போன தன் தாய்க்கு, உணவு தரச்சொல்லிபலரை கேட்டபோது, அவர்களில்பலரும் பல காரணங்களை சொல்லி உணவு தரத் தயங்கினர்.
:-
மனிதர்களின் சுய ரூபம் அறிந்து அதிர்ச்சியானவர், அந்த கணமே, தான் பார்த்து வந்த வேலையை தூக்கி எறிந்து விட்டு, சிவகாசிக்கு மனைவி ரோஸ்லின் மற்றும் பிள்ளைகளுடன் வந்து விட்டார். இங்கே, தன் தாயைப் போலவே, நிறைய வயதானவர்கள் பணம் இருந்தும், நேர நேரத்திற்கு நல்ல உணவு கிடைக்காமல் சிரமப்படுவதைபார்த்து, அவர்களுக்கும் உணவு வழங்க முடிவெடுத்தார்.
:-
நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன், "ரெகோபத்' என்றுஒரு அறக்கட்டளை துவங்கி, அதன் மூலம், சிவகாசியின் மூலை முடுக்கில் உள்ள தனிமையில் வாழும் வயதானவர்களுக்கு, மூன்று வேளை உணவு வழங்கி வருகிறார். அறுபது வயதிற்கு மேலானவர்களுக்கு, என்ன மாதிரியான உணவு வழங்கலாம் என்று மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு, அதன்படி காலையில் இட்லி, ராகி, சேமியாபுட்டு, மதியம் காய்கறிகள் நிறைந்த சாப்பாடு, இரவு சப்பாத்தி, தோசை, பால் சாதம் என்று, எளிதில் ஜீரணிக்கக்கூடிய, சத்தான உணவை வழங்கி வருகிறார். விருப்பம் உள்ளவர்களுக்கு, வாரத்தில் இரண்டு முறை அசைவமும் உண்டு.
:-
காலை ஏழு மணி, மதியம் ஒரு மணி, இரவு ஏழு மணி என்று சரியான நேரத்தில், "ஹாட் பாக்சில்' வைத்து சுவையான உணவை சுடச்சுட கொடுத்து வருகிறார். வருடத்தில், 365 நாளும் எவ்வளவு புயல், மழை அடித்தாலும், இந்த பணியை விடாமல், பல வருடங்களாக செய்து வருகிறார். "இது கடவுளின் காரியம், ஆகவே, உணவு வழங்க எப்போதும் காலதாமதம் செய்ய மாட்டேன்...' என்கிறார். இடைப்பட்ட நேரத்தில், இவரே காய்கறி வாங்கச் செல்கிறார். கிலோ ஐம்பது ரூபாய்க்கு விற்றாலும், பொன்னி அரிசியில்தான் சாதம். இவரது மனைவி ரோஸ்லியின் தலைமையில் தான் உணவு தயாராகிறது.
:-
இப்படி கொடுக்கப்படும் உணவிற்கு கட்டணம் உண்டு, ஆனால், பணம் தருகின்றனர் என்பதற்காக, எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்து விடுவது இல்லை. உண்மையிலேயே அவர்களை கவனிக்க ஆள் இல்லையா, அவர்களால் சமைக்க இயலாதா என்பதை எல்லாம் விசாரித்த பின்னரே உணவு வழங்குகிறார்.
:-
அவ்வப்போது இவர்களிடம் நேரில் நிறைய மனம் விட்டு பேசி, அவர்களது பிரச்னைகளைதீர்த்து வைக்கவும் வழி காண்கிறார். அந்த வகையில், இன்று சிவகாசியில் உள்ள பலவயதானவர்களின் செல்லப்பிள்ளை இந்த எட்வின்தான். வருடத்தில் ஒரு முறை இவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு இடையே பல நிகழ்ச்சிகளை நடத்தி, பாராட்டி, பரிசு வழங்கியும் மகிழ்விக்கிறார். அதன் மூலம், தானும் மகிழ்கிறார்.
எட்வினுடன் பேசி அவரது புனிதமான பணியை பாராட்ட தோன்றுகிறவர்களுக்கு, தொடர்பு எண்:9442324424.
:-

எல். முருகராஜ்
நன்றி தினமலர்-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக