புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
7 Posts - 64%
heezulia
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
8 Posts - 2%
prajai
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_m10இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி என்ன செய்யபோகின்றன உலக நாடுகள்?


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 27, 2012 10:43 am

பூமியின் தென்துருவமான அன்டார்டிக், புவிக்கோளத்தின் 20% பரப்பை உள்ளடக்கிய பெரும்பரப்பு. உறைபனிப் போர்வையும், பல்லாயிரக்கணக்கில் மிதக்கும் பனிப்பாறைகளும் காணக்கிடக்கும் இந்தக் கடல்பகுதியில் தற்போது வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

1958-இல் இருந்த வெப்பத்தைக் காட்டிலும் தற்போது இருமடங்கு அதிகமாகிவிட்டது. 2.24 டிகிரி கூடியுள்ளது. இதனால் பனிப்போர்வைக்கு அடியில் பிளவுகள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

கடந்த ஜூலை மாதம், அன்டார்டிக் பனிப் போர்வைக்கு அடியில் மிகப்பெரிய பிளவு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதாவது 1.5 கிலோ மீட்டர் ஆழம், 10 கிலோ மீட்டர் அகலம், 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் பிளவு இருக்கிறது. கடலுக்குள்ளான மாற்றத்தை ராடார் உதவியுடன் ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள் இவற்றை மிகத் துல்லியமாக தெரிவித்துள்ளனர்.

இந்தப் "பெரும்பள்ளம்' அல்லது பெரும் பிளவினால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப பனிப்போர்வை கரைந்து உருகும் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், "நிச்சயமாக இதனால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படும்' என்றும், "கடல் நீர்மட்டம் உயர்ந்து பல தீவுகள் மூழ்கிப்போகலாம், சில கடலோர நகரங்களையும் கடல் விழுங்கும்' என்கிறார்கள். ஆனால், அது இப்போது நடக்காது. சில தலைமுறைகள் ஆகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பசிபிக் பெருங்கடல் மற்றும் தெற்குக் கடலில் ஏற்பட்டுள்ள வெப்பக் காற்றின் காரணமாகத்தான் அன்டார்டிக் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இந்த நிலைமைக்குக் காரணம் மனிதர்களின் தவறுகளா? என்று கேட்டால் மழுப்புகிறார்கள். அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பதுதான் அவர்களது பதில்.

இங்கே ஆராய்ச்சிக்கூடங்கள் அமைத்திருப்பதும், அதிநவீனக் கருவிகள் கொண்டு ஆய்வுகள் செய்வதும் அமெரிக்கா, ரஷியா, கனடா, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள்தான். வளர்ந்த நாடுகளின் விஞ்ஞானிகள் தங்கள் நாட்டைக் காட்டிக்கொடுப்பார்களா?

புவிவெப்பம் அதிகரிக்கக் காரணம் வளர்ந்த நாடுகளின் சுயநலத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான். புவிவெப்பம் உயர்வதை 2 சென்டிகிரேட் அளவுக்கும் கீழாக, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், வளர்ந்த நாடுகள் தங்களது கரியமிலவாயு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அவர்கள் அந்தச் சுமையை வளரும்நாடுகள் மேல் போட்டுவிட்டு, அன்டார்டிகாவில் ஆராய்ச்சி செய்கிறார்கள். நம்மை அச்சுறுத்துகிறார்கள்.

புவிப்போர்வையைப் பாதிக்கும் கரியமில வாயுவைக் காட்டிலும், மிக மோசமானது மீதேன் வாயு. இந்த மீதேன்வாயு வேளாண்மையில்தான் அதிகமாக வெளிப்படுகிறது. குறிப்பாக நெல் சாகுபடியில்! ஆகவே, வேளாண்மையில் சில கட்டுப்பாடுகளை விதித்து, புவிவெப்பத்தைக் குறைக்கலாம் என்று வளர்ந்த நாடுகள் கூறியதை உலகின் எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு இந்தியா உள்பட வளரும் நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும்கூட, இந்த முடிவைக் கைவிடாமல், அடுத்த கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள்.

இதற்கிடையில், அரிசி சாப்பிடும் ஆசிய நாடுகளின் உணவுத்தட்டுப்பாட்டை நீக்க ""அரிசிக்கு மாற்றாக உருளைக்கிழங்குதான் மிகநல்ல உணவு; இதற்குத் தண்ணீர் தேவை மிகவும் குறைவு'' என்று ஐரோப்பாவில் நடந்த உருளைக்கிழங்கு மாநாட்டில் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அடுத்த எட்டு ஆண்டுகளில் கரியமில வாயு குறைப்புக்கான எந்தவித சரியான திட்டமும் இல்லாமல், போதிய நிதியையும் ஒதுக்காமல், புதிய தொழில்நுட்பங்களையும் வழங்காமல் இன்னமும் பேசிக்கொண்டே இருக்கின்றன வளர்ந்த நாடுகள்.

இது ஒருபுறம் இருக்க நம்முடைய கவலையெல்லாம் கங்கை நதிக்கு மூலாதாரமாகிய கங்கோத்ரி வேகமாக உருகத் தொடங்கிவிட்டது; யமுனை நதிக்கு ஆதாரமான கோமுக் பனிச்சிகரம், தனது "பசுமுகத்தை' இழந்துவிடும் அளவுக்கு உருகிவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுதான். கடந்த பத்து ஆண்டுகளில் இவ்வாறு இருசிகரங்களும் வேகமாகக் கரைவது அதிகமாகிவிட்டது.

உலகளாவிய புவிவெப்பம் இமாலயத்தையும் பாதிக்கிறது. வளர்ந்த நாடுகளின் சுயநலத்துக்கு எங்கோ இருக்கும் கங்கோத்ரியும் கோமுக் சிகரமும் வேகமாகக் கரைகின்றன. அன்டார்டிக் பனிப் போர்வைக்கு அடியில் உறைந்த கடல் பாளம் பாளமாகப் பிளந்து நிற்கிறது. கடல்காற்று வெப்பமாகிறது. பருவமழையை பெரும் புயல் விரட்டுகிறது.

உலகத்தில் ஏதோ ஒரு நாடு, சுற்றுச்சூழலுக்கு எதிராக எதையோ செய்கிறது என்று சும்மா இருக்க முடியாது. அதனால் புவி முழுவதையும் பாதிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த இயற்கை மகத்தானது. தன்னைச் சீர்குலைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையை முன்வைக்கிறது. "நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே' என்று சொல்லும் சக்தி படைத்த இயற்கை மனிதருக்குச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால் மனிதனோ, ""நான்'' எனும் அகந்தையை நடத்துவோனாகவே நீடிக்கிறான்.

அனுபவிப்பதுவரை அனுபவித்துவிட்டு நாம் போய்விடுவோம், வருங்கால சந்ததியினர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று நாம் வாளாவிருந்துவிட முடியாது. நமது முன்னோர்கள் நாம் சந்தோஷமாக வாழ மாசுபடாத பூமியை விட்டுச் சென்றனர். நாமும் நமது சந்ததியினருக்கு மாசுபடாத பூமியை விட்டுச் செல்வதுதானே நியாயமாக இருக்கும். நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய இன்றியமையாத பிரச்னை இது...........

தினமணி


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 27, 2012 3:36 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 7:37 pm

தகவலுக்கு நன்றி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக