புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!
ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.
இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அரசு நிலம் ஆக்கிரமிப்பு புகார்
நடிகர் வடிவேலு உள்பட 19 பேருக்கு நோட்டீஸ்
ஸ்ரீபெரும்புதூர் மணிமங்கலம் அடுத்த புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிலத்தில் நடிகர் வடிவேலு உள்ளிட்ட 19 பேர் ஆக்கிரமித்து, வீடு மற்றும் பண்ணை வீடுகள் கட்டியிருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மணிமங்கலம் வருவாய் ஆய்வாளர் சின்னதுரை, கிராம நிர்வாக அதிகாரி மாலினி உள்ளிட்ட வருவாய் துறை ஊழியர்கள் நேற்று அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இடங்களை அகற்றுவதற்கான எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதில், 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தினகரன்
நடிகர் வடிவேலு உள்பட 19 பேருக்கு நோட்டீஸ்
ஸ்ரீபெரும்புதூர் மணிமங்கலம் அடுத்த புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிலத்தில் நடிகர் வடிவேலு உள்ளிட்ட 19 பேர் ஆக்கிரமித்து, வீடு மற்றும் பண்ணை வீடுகள் கட்டியிருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மணிமங்கலம் வருவாய் ஆய்வாளர் சின்னதுரை, கிராம நிர்வாக அதிகாரி மாலினி உள்ளிட்ட வருவாய் துறை ஊழியர்கள் நேற்று அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இடங்களை அகற்றுவதற்கான எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதில், 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளும்வரை
பிரசன்னா வீடு முன் தர்ணா செய்வேன் : சஹானாஸ்
என்னை மனைவியாக ஏற்க கோரி பிரசன்னா வீட்டில் தர்ணா போராட்டம் நடத்துவேன் என்று சஹானாஸ் அறிவித்துள்ளார். சஹானாஸ் பலரை திருமணம் செய்துள்ளார். எனவே அவரை மனைவியாக ஏற்க முடியாது என்று பிரசன்னா கூறியுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் சஹானாஸ். இவர் தங்களை ஏமாற்றி லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்ததாக, சென்னை முகலிவாக்கம் மணிகண்டன், சினிமா இயக்குனர் ராகுல், புளியந்தோப்பு கால்பந்து வீரர் பிரசன்னா உள்பட 8 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவர் தலைமறைவானார். சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தனிப்படைபெங்களூரில் அவரை கைது செய்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 18ம் தேதி ஜாமீனில் வந்தார். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திடீரென வந்த சஹானாஸ், Ôபிரசன்னாதான் எனது கணவர். அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். அவருடைய பெற்றோர் என்னை மிரட்டுகின்றனர்Õ என்று புகார் அளித்தார்.
இதுகுறித்து சஹானாஸ் கூறியதாவது: எனது கணவர் பிரசன்னாதான். அவருடைய குழந்தை எனது வயிற்றில் வளர்கிறது. சாஸ்திரி நகர் போலீசார் என்னை கைது செய்த போது, ஜாமீனில் எடுப்பதாக பிரசன்னா உறுதி அளித்தார். பிரசன்னா என்னுடன் சேர்வதற்கு தடையாக இருப்பது அவரது பெற்றோர்தான். . எனது உயிருக்கும், வயிற்றில் வளரும் குழந்தை உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பிரசன்னாவின் பெற்றோரே காரணம்.
இன்று பிரசன்னா வீடு செல்ல இருக்கிறேன். அவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அவர் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவேன். அவர் என்னை ஏற்றுக் கொள்ளும்வரை போராட்டம் தொடரும். இதில், எனது உயிர் போனால் கூட கவலை இல்லை என்றார்.
இதற்கிடையில், கடந்த 7 நாட்களாக பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று தற்போது வீடு திரும்பி உள்ள பிரசன்னா சஹானாஸின் குற்றச்சாட்டு குறித்து கூறியதாவது:
சஹானாஸ் குடும்ப பெண் என்று நினைத்து காதலித்தேன். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தேன். ஆனால், என்னைப்போல் பலரை அவர் ஏமாற்றி திருமணம் செய்தது கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் மீது அளிக்கப்பட்ட தொடர் புகாரை தொடர்ந்து சஹானாஸை பிரிந்து வாழ முடிவு செய்தேன். அதன்படி இருவரும் பிரிந்தோம். இந்த நிலையில்தான் சஹானாஸால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தனர். நானும் புகார் அளித்தேன். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜெயிலுக்கு போகும்போது, உன்னை ஜாமீனில் எடுக்கிறேன் என்று நான் கூறவில்லை.
அவரது வயிற்றில் வளரும் குழந்தையை ஏற்றுக்கொள்வதாகவும், அவரை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும் அவர் கூறி வருவது உண்மைக்கு புறம்பானது. அவர் மீது நான் புகார் அளித்ததை தொடர்ந்து அவருடன் நான் போனில் பேசியதே கிடையாது. சில தினங்களாக அவர்தான் என்னை தொடர்பு கொண்டு ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார்.
பலரை மணந்த அவரை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. சஹானாஸுடன் செய்து கொண்ட திருமணம் செல்லாத திருமணம். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றார்.
தினகரன்
பிரசன்னா வீடு முன் தர்ணா செய்வேன் : சஹானாஸ்
என்னை மனைவியாக ஏற்க கோரி பிரசன்னா வீட்டில் தர்ணா போராட்டம் நடத்துவேன் என்று சஹானாஸ் அறிவித்துள்ளார். சஹானாஸ் பலரை திருமணம் செய்துள்ளார். எனவே அவரை மனைவியாக ஏற்க முடியாது என்று பிரசன்னா கூறியுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் சஹானாஸ். இவர் தங்களை ஏமாற்றி லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்ததாக, சென்னை முகலிவாக்கம் மணிகண்டன், சினிமா இயக்குனர் ராகுல், புளியந்தோப்பு கால்பந்து வீரர் பிரசன்னா உள்பட 8 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து அவர் தலைமறைவானார். சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தனிப்படைபெங்களூரில் அவரை கைது செய்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 18ம் தேதி ஜாமீனில் வந்தார். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திடீரென வந்த சஹானாஸ், Ôபிரசன்னாதான் எனது கணவர். அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். அவருடைய பெற்றோர் என்னை மிரட்டுகின்றனர்Õ என்று புகார் அளித்தார்.
இதுகுறித்து சஹானாஸ் கூறியதாவது: எனது கணவர் பிரசன்னாதான். அவருடைய குழந்தை எனது வயிற்றில் வளர்கிறது. சாஸ்திரி நகர் போலீசார் என்னை கைது செய்த போது, ஜாமீனில் எடுப்பதாக பிரசன்னா உறுதி அளித்தார். பிரசன்னா என்னுடன் சேர்வதற்கு தடையாக இருப்பது அவரது பெற்றோர்தான். . எனது உயிருக்கும், வயிற்றில் வளரும் குழந்தை உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பிரசன்னாவின் பெற்றோரே காரணம்.
இன்று பிரசன்னா வீடு செல்ல இருக்கிறேன். அவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறேன். அவர் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவேன். அவர் என்னை ஏற்றுக் கொள்ளும்வரை போராட்டம் தொடரும். இதில், எனது உயிர் போனால் கூட கவலை இல்லை என்றார்.
இதற்கிடையில், கடந்த 7 நாட்களாக பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று தற்போது வீடு திரும்பி உள்ள பிரசன்னா சஹானாஸின் குற்றச்சாட்டு குறித்து கூறியதாவது:
சஹானாஸ் குடும்ப பெண் என்று நினைத்து காதலித்தேன். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தேன். ஆனால், என்னைப்போல் பலரை அவர் ஏமாற்றி திருமணம் செய்தது கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் மீது அளிக்கப்பட்ட தொடர் புகாரை தொடர்ந்து சஹானாஸை பிரிந்து வாழ முடிவு செய்தேன். அதன்படி இருவரும் பிரிந்தோம். இந்த நிலையில்தான் சஹானாஸால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்பட பல இடங்களில் புகார் அளித்தனர். நானும் புகார் அளித்தேன். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜெயிலுக்கு போகும்போது, உன்னை ஜாமீனில் எடுக்கிறேன் என்று நான் கூறவில்லை.
அவரது வயிற்றில் வளரும் குழந்தையை ஏற்றுக்கொள்வதாகவும், அவரை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும் அவர் கூறி வருவது உண்மைக்கு புறம்பானது. அவர் மீது நான் புகார் அளித்ததை தொடர்ந்து அவருடன் நான் போனில் பேசியதே கிடையாது. சில தினங்களாக அவர்தான் என்னை தொடர்பு கொண்டு ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார்.
பலரை மணந்த அவரை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. சஹானாஸுடன் செய்து கொண்ட திருமணம் செல்லாத திருமணம். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றார்.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாலிசியில் முறைகேடு
இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 20,000 அபராதம் விதிப்பு
டெல்லியில் வசித்து வருபவர் கிஷன்லால் நாக்பால். இவரை, மாக்ஸ் நியூயார்க் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் ஒருவர் சந்தித்து, தங்களது நிறுவனத்தில் ளிக்கப்படும பல்வேறு பாலிசிகள் பற்றி தெரிவித்து அதன் பயன்களையும் விதிகளையும் தெரிவித்தார். இதை ஏற்று, தனது பேரன் பெயரில் 5 ஆண்டுகளுக்கு பாலிசி ஒன்றை நாக்பால் எடுத்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய பாலிசி சான்றிதழில் அது 10 ஆண்டுக்குட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பாலிசியை ரத்து செய்ய கோரி, நிறுவனத்திடம் நாக்பால் புகார் செய்தார். பலமுறை நாக்பால் அலைந்து திரிந்தும் எந்த பலனும் இல்லை. இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் நாக்பால் புகார் செய்தார். இந்த புகார் மீதான விசாரணை நீதிபதி பி.பி.சவுத்ரி தலைமையிலான பெஞ்ச் முன் நடந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டது. ஆனால், இன்சூர ன்ஸ் நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. எனினும், பிரிமியம் தொகையை மட்டும் நாக் பாலுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் தந்தது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘ நாக்பால் அவரது பேரன் பெயருக்கு 5 ஆண்டுக்கு பாலிசில் எடுத்துள்ளார். ஆனால், 10 ஆண்டுக்கு பாலிசி வழங்கி, விதிமுறைகளையும் பயன்களையும் மாற்றியுள்ளனர். நுகர்வோம் நீதிமன்றத்தில் புகார் செய்தபின்தான் நாக்பாலுக்கு பிரிமியம் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் திருப்பி தந்துள்ளது. எனவே, பாலிசி ஆண்டை மாற்றியதற்காகவும், பலமுறை அலைக்கழித்தபின்னரே பிரிமியம் தொகையை வழங்கியதற்காகவும், நாக் பாலுக்கு நஷ்டஈடாக 15,000 மற்றும் வழக்கு செலவுக்காக 5,000த்தையும் சேர்த்து, மொத்தம் 20,000த்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.
தினகரன்
இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 20,000 அபராதம் விதிப்பு
டெல்லியில் வசித்து வருபவர் கிஷன்லால் நாக்பால். இவரை, மாக்ஸ் நியூயார்க் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் ஒருவர் சந்தித்து, தங்களது நிறுவனத்தில் ளிக்கப்படும பல்வேறு பாலிசிகள் பற்றி தெரிவித்து அதன் பயன்களையும் விதிகளையும் தெரிவித்தார். இதை ஏற்று, தனது பேரன் பெயரில் 5 ஆண்டுகளுக்கு பாலிசி ஒன்றை நாக்பால் எடுத்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிய பாலிசி சான்றிதழில் அது 10 ஆண்டுக்குட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பாலிசியை ரத்து செய்ய கோரி, நிறுவனத்திடம் நாக்பால் புகார் செய்தார். பலமுறை நாக்பால் அலைந்து திரிந்தும் எந்த பலனும் இல்லை. இன்சூரன்ஸ் நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் நாக்பால் புகார் செய்தார். இந்த புகார் மீதான விசாரணை நீதிபதி பி.பி.சவுத்ரி தலைமையிலான பெஞ்ச் முன் நடந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டது. ஆனால், இன்சூர ன்ஸ் நிறுவனத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. எனினும், பிரிமியம் தொகையை மட்டும் நாக் பாலுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் தந்தது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘ நாக்பால் அவரது பேரன் பெயருக்கு 5 ஆண்டுக்கு பாலிசில் எடுத்துள்ளார். ஆனால், 10 ஆண்டுக்கு பாலிசி வழங்கி, விதிமுறைகளையும் பயன்களையும் மாற்றியுள்ளனர். நுகர்வோம் நீதிமன்றத்தில் புகார் செய்தபின்தான் நாக்பாலுக்கு பிரிமியம் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் திருப்பி தந்துள்ளது. எனவே, பாலிசி ஆண்டை மாற்றியதற்காகவும், பலமுறை அலைக்கழித்தபின்னரே பிரிமியம் தொகையை வழங்கியதற்காகவும், நாக் பாலுக்கு நஷ்டஈடாக 15,000 மற்றும் வழக்கு செலவுக்காக 5,000த்தையும் சேர்த்து, மொத்தம் 20,000த்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
திருப்பதியில் 4-வது உலக தெலுங்கு மாநாடு ஜனாதிபதி தொடங்கி வைத்தார்
நான்காவது உலக தெலுங்கு மாநாடு, திருப்பதியில் இன்று தொடங்கியது. தொடக்க விழாவையொட்டி திருப்பதி பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்ட தெலுங்கு தாய் சிலையை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று காலை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மாநாட்டு பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார். இதில் மாநில முழுவதும் இருந்து கலைஞர்கள், அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். பேரணியில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
மாநில அமைச்சர்கள் பார்த்தசாரதி, கல்ல அருணகுமாரி, வட்டி வசந்த்குமார், சைலஜாநாத், திருப்பதி எம்.பி. சிந்தாமோகன், திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை செயல் அலுவலர் வெங்கட்டராம ரெட்டி மற்றும் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். முக்கிய சாலைகள் வழியாக வந்த பேரணி, மாநாடு நடக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு மாநாட்டை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக, மாநாட்டுக்கு வந்த ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாடு தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.
தினகரன்
நான்காவது உலக தெலுங்கு மாநாடு, திருப்பதியில் இன்று தொடங்கியது. தொடக்க விழாவையொட்டி திருப்பதி பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்ட தெலுங்கு தாய் சிலையை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று காலை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து மாநாட்டு பேரணியையும் அவர் தொடங்கி வைத்தார். இதில் மாநில முழுவதும் இருந்து கலைஞர்கள், அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். பேரணியில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
மாநில அமைச்சர்கள் பார்த்தசாரதி, கல்ல அருணகுமாரி, வட்டி வசந்த்குமார், சைலஜாநாத், திருப்பதி எம்.பி. சிந்தாமோகன், திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சுப்பிரமணியம், இணை செயல் அலுவலர் வெங்கட்டராம ரெட்டி மற்றும் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். முக்கிய சாலைகள் வழியாக வந்த பேரணி, மாநாடு நடக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு மாநாட்டை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக, மாநாட்டுக்கு வந்த ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாடு தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது.
தினகரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உலகின் மிக நீளமான ஆற்றுக்குள் அதிவேக ரயில் பாதை!
உலகின் 3வது நீளமான ஆறாகவும், ஆசியாவின் முதல் நீளமான ஆறாகவும் உள்ள யாங்ட்சே ஆற்றின் அடியில் 27 கி.மீ நீளத்துக்கு சுரங்கம் அமைத்து, உச்சாங் – ஹங்கு நகரங்களுக்கிடையே சீனா புதிய சுரங்க ரெயில் சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரெயில் சேவையின் மூலம் மூன்றே நிமிடங்களில் 27 கிமீ தூரத்தைக் கடந்து விடலாம் என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
சீனாவில் 6300 கிமீ நீளமுள்ள யாங்சே ஆறு பாய்கின்றது. வடமேற்கு சீனாவின் க்விங்ஹாய் மாகாணத்தில் உற்பத்தியாகும் இந்த ஆறு, 10 மாகாணங்களை கடந்து கிழக்கு சீனாவில் கடலில் கலக்கின்றது.
ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் வீதம், ஒரு நாளைக்கு 26 ரயில்கள் இயக்கப்படும். நாளொன்றுக்கு 5 லட்சம் மக்கள் இந்த ரயில் சேவையின் மூலம் பயனடைவார்கள் என சீன அரசு தெரிவித்துள்ளது.
பீஜிங்-குவாங்ஷோ இடையில் 2298 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான பாதையில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவையை வெற்றிகரமாக சீனா தொடங்கி வைத்துள்ளது.
அன்சார் ஹயாத்
உலகின் 3வது நீளமான ஆறாகவும், ஆசியாவின் முதல் நீளமான ஆறாகவும் உள்ள யாங்ட்சே ஆற்றின் அடியில் 27 கி.மீ நீளத்துக்கு சுரங்கம் அமைத்து, உச்சாங் – ஹங்கு நகரங்களுக்கிடையே சீனா புதிய சுரங்க ரெயில் சேவையை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ரெயில் சேவையின் மூலம் மூன்றே நிமிடங்களில் 27 கிமீ தூரத்தைக் கடந்து விடலாம் என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
சீனாவில் 6300 கிமீ நீளமுள்ள யாங்சே ஆறு பாய்கின்றது. வடமேற்கு சீனாவின் க்விங்ஹாய் மாகாணத்தில் உற்பத்தியாகும் இந்த ஆறு, 10 மாகாணங்களை கடந்து கிழக்கு சீனாவில் கடலில் கலக்கின்றது.
ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் வீதம், ஒரு நாளைக்கு 26 ரயில்கள் இயக்கப்படும். நாளொன்றுக்கு 5 லட்சம் மக்கள் இந்த ரயில் சேவையின் மூலம் பயனடைவார்கள் என சீன அரசு தெரிவித்துள்ளது.
பீஜிங்-குவாங்ஷோ இடையில் 2298 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான பாதையில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவையை வெற்றிகரமாக சீனா தொடங்கி வைத்துள்ளது.
அன்சார் ஹயாத்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புவனேஸ்வரி உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ.5000 கேட்டார்...
உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன்.
கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள்.
அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை. அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை.
இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார்.
இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர். அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது. அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். ‘நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்’, என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார். மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.
அன்சார் ஹயாத்
உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன்.
கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள்.
அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை. அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை.
இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார்.
இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர். அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது. அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். ‘நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்’, என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார். மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது.
அன்சார் ஹயாத்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பொறுப்புகளை ஏற்றார் புதிய தலைமைச் செயலாளர்
தலைமைச் செயலாளர் பொறுப்புகளை திங்கள்கிழமை மாலை ஏற்றுக் கொண்டார், ஷீலா பாலகிருஷ்ணன். முன்னதாக, தலைமைச் செயலகத்துக்கு பிற்பகலில் வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் அவர்.
இதன் பிறகு முதல்வர் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆய்வுக் கூட்டங்களில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியுடன், ஷீலா பாலகிருஷ்ணனும் கலந்து கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு மாலையில் தலைமைச் செயலாளர் அறையில் நடந்த நிகழ்வில், தனது பொறுப்புகளை ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்றார் தேவேந்திர நாத் சாரங்கி.
தினமணி
தலைமைச் செயலாளர் பொறுப்புகளை திங்கள்கிழமை மாலை ஏற்றுக் கொண்டார், ஷீலா பாலகிருஷ்ணன். முன்னதாக, தலைமைச் செயலகத்துக்கு பிற்பகலில் வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் அவர்.
இதன் பிறகு முதல்வர் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆய்வுக் கூட்டங்களில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியுடன், ஷீலா பாலகிருஷ்ணனும் கலந்து கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு மாலையில் தலைமைச் செயலாளர் அறையில் நடந்த நிகழ்வில், தனது பொறுப்புகளை ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்து விட்டு விடைபெற்றார் தேவேந்திர நாத் சாரங்கி.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சுரங்க தொழில் தடையால் அரசுக்கு ரூ.2500 கோடி இழப்பு: முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர்
சுரங்க தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ. 2500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுரங்க தொழில் மூலம் அரசுக்கு 14 சதம் வருவாய் கிடைத்து வந்தது. சுரங்க தொழிலில் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி தடை விதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு கிடைத்து வந்த வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுரங்க தொழில் 2 சதம் மட்டுமே நடைபெறுகிறது. சுரங்க தொழிலுக்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ.2500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சுரங்க முறைகேட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து வருவாய்துறை பரிசீலனை செய்து வருகிறது. சிபிஐயும் பரிசீலித்து வருகிறது.என்று கூறினார்.
தினமணி
சுரங்க தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ. 2500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுரங்க தொழில் மூலம் அரசுக்கு 14 சதம் வருவாய் கிடைத்து வந்தது. சுரங்க தொழிலில் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி தடை விதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு கிடைத்து வந்த வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுரங்க தொழில் 2 சதம் மட்டுமே நடைபெறுகிறது. சுரங்க தொழிலுக்கு விதிக்கப்பட்ட தடையால் ரூ.2500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சுரங்க முறைகேட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து வருவாய்துறை பரிசீலனை செய்து வருகிறது. சிபிஐயும் பரிசீலித்து வருகிறது.என்று கூறினார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
"விஸ்வரூபம்' படத்தை தடுப்பது சட்ட விரோதம்: நடிகர் கமல்ஹாசன் பேட்டி
விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.சில் வெளியிடுவதைத் தடுப்பது சட்ட விரோதம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
விஸ்வரூபம் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்னதாக டி.டி.எச்.சில் வெளியிடுவதை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்த்து வருகிறது.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:
விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என என்னை வாழவைத்த சூழலை நான் கெடுக்கவில்லை.
நான் விவரம் தெரிந்த விவசாயி. விஞ்ஞான மாற்றத்துக்கு ஏற்ப விவசாயம் செய்வேன். காளை மாட்டை மட்டும் வைத்து உழவு செய்யும் விவசாயியாக இருந்துவிடமாட்டேன். விஞ்ஞான மாற்றத்தைப் பயன்படுத்துவது பிழையல்ல, குற்றமல்ல.
திரையரங்க உரிமையாளருக்கென முதலீடு இருக்கிறது; சொத்து இருக்கிறது. திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். சற்று கவனித்துப் பார்த்தால் பராமரிக்கப்படாத திரையரங்குகள்தான் மூடப்பட்டு வருகின்றன. நல்ல சூழலை ஏற்படுத்தி பராமரிக்கப்படும் திரையரங்குகள் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நானும் நன்றாக நடிக்கவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
தொழில் செய்யும் உரிமையை இந்த அரசு எனக்குக் கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்ட விரோதம். சன் டி.டி.எச்., ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட 6 டி.டி.எச். சேவைகள் இந்தப் படத்தை ஒளிபரப்ப முன்வந்துள்ளன.
இந்த டி.டி.எச் ஒளிபரப்பை இந்தியாவிலேயே முதல்முறை என்கிறார்கள். ஆனால், இதுதான் உலகத்திலேயே முதல் முறை.
பாரதிராஜா, பாலசந்தர், ஷோலே படத்தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி மூவரும் இந்த படத்தைப் பார்த்தார்கள். மூவருக்கும்தான் படத்தைக் காட்டினேன்.
படம் முடிந்த பிறகு அவர்களின் கண்களைப் பார்த்து இந்தப் படத்தின் வெற்றியைத் தெரிந்துகொண்டேன். நிச்சயம் இந்தப் படம் சினிமாவின் அடுத்த மாற்றமாக இருக்கும். அதை ஆதரிக்காதவர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள் என்றார் அவர்.
தினமணி
விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.எச்.சில் வெளியிடுவதைத் தடுப்பது சட்ட விரோதம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
விஸ்வரூபம் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்னதாக டி.டி.எச்.சில் வெளியிடுவதை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எதிர்த்து வருகிறது.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:
விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என என்னை வாழவைத்த சூழலை நான் கெடுக்கவில்லை.
நான் விவரம் தெரிந்த விவசாயி. விஞ்ஞான மாற்றத்துக்கு ஏற்ப விவசாயம் செய்வேன். காளை மாட்டை மட்டும் வைத்து உழவு செய்யும் விவசாயியாக இருந்துவிடமாட்டேன். விஞ்ஞான மாற்றத்தைப் பயன்படுத்துவது பிழையல்ல, குற்றமல்ல.
திரையரங்க உரிமையாளருக்கென முதலீடு இருக்கிறது; சொத்து இருக்கிறது. திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். சற்று கவனித்துப் பார்த்தால் பராமரிக்கப்படாத திரையரங்குகள்தான் மூடப்பட்டு வருகின்றன. நல்ல சூழலை ஏற்படுத்தி பராமரிக்கப்படும் திரையரங்குகள் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நானும் நன்றாக நடிக்கவில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
தொழில் செய்யும் உரிமையை இந்த அரசு எனக்குக் கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்ட விரோதம். சன் டி.டி.எச்., ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட 6 டி.டி.எச். சேவைகள் இந்தப் படத்தை ஒளிபரப்ப முன்வந்துள்ளன.
இந்த டி.டி.எச் ஒளிபரப்பை இந்தியாவிலேயே முதல்முறை என்கிறார்கள். ஆனால், இதுதான் உலகத்திலேயே முதல் முறை.
பாரதிராஜா, பாலசந்தர், ஷோலே படத்தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி மூவரும் இந்த படத்தைப் பார்த்தார்கள். மூவருக்கும்தான் படத்தைக் காட்டினேன்.
படம் முடிந்த பிறகு அவர்களின் கண்களைப் பார்த்து இந்தப் படத்தின் வெற்றியைத் தெரிந்துகொண்டேன். நிச்சயம் இந்தப் படம் சினிமாவின் அடுத்த மாற்றமாக இருக்கும். அதை ஆதரிக்காதவர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள் என்றார் அவர்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தமிழகத்தில் எந்தத் திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படம் திரையிட மாட்டோம்: திரையரங்க உரிமையாளர் சங்கம் மிரட்டல்
விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பும் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்ட முடிவுகள் குறித்து
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலர் ஆர். பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியது:
நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மூலம் தமிழ்நாடு சினிமாவில் இப்போது புதிதாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. வரும் ஜன. 10-ல் டி.டி.ஹெச். மூலம் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பிவிட்டு ஜன. 11-ஆம் தேதி திரையரங்குகளின் மூலம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பிவிட்டு அடுத்த நாள் திரையரங்குகளில் வெளியிட்டால் ரசிகர்கள் வரமாட்டார்கள். புதிய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாலும் திருட்டு சி.டி. அதிகமாக இருப்பதாலும் திரையரங்குகளுக்குக் கூட்டம் வருவதில்லை.
தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள்தான் உள்ளன. இந்த நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளே இல்லாமல் போகும்.
விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் வெளியிடும் தன் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி.ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்தத் திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படம் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்.ல் வெளியிட்ட பின் வெளியிடும் சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்குத் தொழில் தொடர்பாக எந்த ஒத்துழைப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திடம் இருந்து கிடைக்காது என்றார்.
தினமணி
விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பும் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்ட முடிவுகள் குறித்து
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலர் ஆர். பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியது:
நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மூலம் தமிழ்நாடு சினிமாவில் இப்போது புதிதாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. வரும் ஜன. 10-ல் டி.டி.ஹெச். மூலம் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பிவிட்டு ஜன. 11-ஆம் தேதி திரையரங்குகளின் மூலம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் டி.டி.ஹெச். மூலம் ஒளிபரப்பிவிட்டு அடுத்த நாள் திரையரங்குகளில் வெளியிட்டால் ரசிகர்கள் வரமாட்டார்கள். புதிய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதாலும் திருட்டு சி.டி. அதிகமாக இருப்பதாலும் திரையரங்குகளுக்குக் கூட்டம் வருவதில்லை.
தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள்தான் உள்ளன. இந்த நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளே இல்லாமல் போகும்.
விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் வெளியிடும் தன் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி.ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்தத் திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படம் திரையிட அனுமதிக்க மாட்டோம்.
விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்.ல் வெளியிட்ட பின் வெளியிடும் சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்குத் தொழில் தொடர்பாக எந்த ஒத்துழைப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திடம் இருந்து கிடைக்காது என்றார்.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|