புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலையுலக இமயம் சிவாஜி கணேசன்
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
இயற் பெயர்: விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்
பிறப்பு: அக்டோபர் 1 1927 தமிழ்நாடு, சீர்காழி, இந்தியா
இறப்பு: ஜூலை 21 2001 (வயது 74) சென்னை
தாய்: ராஜாமணி அம்மாள்
தந்தை: சின்னையா மன்றாயர்
துணைவியார்: கமலா அம்மாள்
குழந்தைகள்: சாந்தி, தேன்மொழி, ராம்குமார், பிரபு.
அண்ணன்: வி.சி.தங்கவேலு
தம்பி: வி.சி.சண்முகம்
இயற் பெயர்: விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்
பிறப்பு: அக்டோபர் 1 1927 தமிழ்நாடு, சீர்காழி, இந்தியா
இறப்பு: ஜூலை 21 2001 (வயது 74) சென்னை
தாய்: ராஜாமணி அம்மாள்
தந்தை: சின்னையா மன்றாயர்
துணைவியார்: கமலா அம்மாள்
குழந்தைகள்: சாந்தி, தேன்மொழி, ராம்குமார், பிரபு.
அண்ணன்: வி.சி.தங்கவேலு
தம்பி: வி.சி.சண்முகம்
சிம்மக்குரலோனின் இறுதி கணங்கள்
சிவாஜி தனது கடைசி நாளில் தனித்து விடப்பட்டது போன்று உணர்ந்து இருக்கிறார். எத்தனை நாட்களுக்கு உன் முகத்தையும், அம்மாவின் (கமலா) முகத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பது என்று நர்சை பார்த்து கேட்டு உள்ளார்.
சிங்கப்பூரில் சிவாஜிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை டாக்டர்களும், அமெரிக்காவில் இருக்கும் டாக்டர் ஜவஹர் பழனியப்பனும் தொடர்ந்து தொலை பேசி மூலமாக அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளை சிவாஜிக்கு வழங்கிய வண்ணம் இருந்தனர். அத்துடன் அப்பல்லோ விலும் தேவைப்படும் போதெல்லாம் செக்- அப் செய்து கொண்டு வந்தார் சிவாஜி.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அதிகம் பேசக் கூடாது என சிவாஜிக்கு டாக்டர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனால் மனம் விட்டுப் பேச முடியாத சிவாஜி, தனித்துவிடப்பட்ட மாதிரி ரொம்பவே நினைத் திருக்கிறார்.
மிடில்கிளாஸ் மாதவன் படத்திற்காக பிரபுவிடம் கதை சொல்லப் போனவர்கள் சிவாஜியை பார்த்து ரொம்பவே வேதனை அடைந்திருக் கிறார்கள். ஒரு குழந்தையைப் போல் குறுகிச் சுருண்டு படுத்திருக்கிறாரே. என வேதனை பட்டிருக்கிறார்கள்.
சிவாஜிக்கு பணிவிடை செய்வதற்காக சிவாஜியின் வீட்டுக்கே நர்ஸ் ஒருவரை நியமித்திருந்தது அப்பல்லோ நிர்வாகம். ஒருநாள் அந்த நர்சிடம், உன் முகத்தையும் அம்மா முகத்தையும் (கமலா அம்மாள்) மட்டுமே பார்த்துப் பார்த்து போரடிச்சுப் போச்சி என சிவாஜி விரக்தியாய் சொன்னார். இந்த தகவல் கமலா அம்மாவுக்கு
எட்டியதும் கலங்கிப் போய்விட்டார்.
இதையடுத்து சிவாஜியின் ஆத்மார்த்த நண்பர்கள் சிலரிடம் தொலைபேசியில் பேசிய கமலாஅம்மாள், நீங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாள் வந்து அவரோட பேசிவிட்டு போனீங்கன்னா நல்லா இருக்கும் என கேட்டுக் கொண்டார். அப்பல்லோ நிர்வாகமும் மூன்று ஷிப்டுகளாகப் பிரித்து மூன்று நர்சுகளை சிவாஜிக்கு பணி விடை செய்ய அனுப்பி வைத்தது. கமலா அம்மாள் கேட்டுக் கொண்டதை அடுத்து சிவாஜியின் நண்பர்கள் ஒரு நாளைக்கு ஒருவராக வந்தார்கள்.
சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.சிதம்பரம் வந்து சிவாஜியோடு பேசிக்கொண்டிருந்த போது சாப்பாடு விஷயத்தை பற்றி சொல்லியிருக்கிறார். சிவாஜி ஒரு அசைவப்பிரியர். காடை, கவுதாரி, புறாக் கறிகளை விரும்பி சாப்பிடுவார். ஆனால் உடல்நலத்தைக் கருதி டாக்டர்கள் வெறும் கஞ்சியை மட்டுமே சாப்பிடச் சொல்லியதால்... அன்னிக்கு நல்லா பசிச்சது, ஆனா என்னால சாப்பிட முடியலை. ஏன்னா வறுமை. நல்லா சம்பாதிச்சப்போ என்னால திருப்தியா சாப்பிட முடியலை. ஏன்னா நான் நடிகனாச்சே... கண்டபடி சாப்பிட்டா உடம்பு போட்டுடும்னு இமேஜ் பார்த்து சாப்பிட முடியலை. இன்னிக்கு தேவையான பணமும் இருக்கு. தேவைக்கு அதிகமா ஓய்வும் இருக்கு. ஆனாலும் சாப்பிட முடியலை. டாக்டர் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டார் என வி.என்.சிதம்பரத்திடம் சொல்லி இருக்கிறார்.
சாப்பாடு மட்டுமல்ல, தாகத்துக்கு தண்ணீர் குடிக்கக்கூட அவரால் முடியவில்லை. சமீபகாலமாகவே சாப்பிடும் கஞ்சி நெஞ்சிலேயே நிற்பது மாதிரி ஒரு உணர்வு சிவாஜிக்கு. இதனால் அடிக்கடி தண்ணீர் கேட்பார். ஆனால் நாளொன்றுக்கு 350 மில்லிக்கு மேல் தண்ணீர் குடிக்கக்கூடாது என டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
தனது நெருங்கிய நண்பரான நடிகர் பாலாஜி தன்னை சந்திக்க வந்தபோது அவரின் உடல்நலம் குறித்து விசாரித்த சிவாஜி, கூட
யாரும் வரலையா? என்று கேட்டார்.
இல்லையே, நானாதான் கார் ஓட்டிட்டு வந்தேன்
அடப்பாவி, டயாலிசிஸ் பண்ணிட்டிருக்கிற நீ கார் ஓட்டிட்டா வந்த? என கடிந்துகொண்டார்.
உடனே பாலாஜி சிரித்த படி, இதுல என்ன இருக்கு பயப்பட? டயாலிசிஸ் பண்ணிக்கிறது இப்பெல்லாம் சர்வசாதாரணம். நீங்களும் டயாலிசிஸ் பண்ணிக்கங்க. பயப்பட ஒண்ணுமே இல்லை. தைரியமா இருங்க என சொல்லியிருக்கிறார்.
சிவாஜி தனது கடைசி நாளில் தனித்து விடப்பட்டது போன்று உணர்ந்து இருக்கிறார். எத்தனை நாட்களுக்கு உன் முகத்தையும், அம்மாவின் (கமலா) முகத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பது என்று நர்சை பார்த்து கேட்டு உள்ளார்.
சிங்கப்பூரில் சிவாஜிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை டாக்டர்களும், அமெரிக்காவில் இருக்கும் டாக்டர் ஜவஹர் பழனியப்பனும் தொடர்ந்து தொலை பேசி மூலமாக அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளை சிவாஜிக்கு வழங்கிய வண்ணம் இருந்தனர். அத்துடன் அப்பல்லோ விலும் தேவைப்படும் போதெல்லாம் செக்- அப் செய்து கொண்டு வந்தார் சிவாஜி.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அதிகம் பேசக் கூடாது என சிவாஜிக்கு டாக்டர்கள் ஆலோசனை சொன்னார்கள். இதனால் மனம் விட்டுப் பேச முடியாத சிவாஜி, தனித்துவிடப்பட்ட மாதிரி ரொம்பவே நினைத் திருக்கிறார்.
மிடில்கிளாஸ் மாதவன் படத்திற்காக பிரபுவிடம் கதை சொல்லப் போனவர்கள் சிவாஜியை பார்த்து ரொம்பவே வேதனை அடைந்திருக் கிறார்கள். ஒரு குழந்தையைப் போல் குறுகிச் சுருண்டு படுத்திருக்கிறாரே. என வேதனை பட்டிருக்கிறார்கள்.
சிவாஜிக்கு பணிவிடை செய்வதற்காக சிவாஜியின் வீட்டுக்கே நர்ஸ் ஒருவரை நியமித்திருந்தது அப்பல்லோ நிர்வாகம். ஒருநாள் அந்த நர்சிடம், உன் முகத்தையும் அம்மா முகத்தையும் (கமலா அம்மாள்) மட்டுமே பார்த்துப் பார்த்து போரடிச்சுப் போச்சி என சிவாஜி விரக்தியாய் சொன்னார். இந்த தகவல் கமலா அம்மாவுக்கு
எட்டியதும் கலங்கிப் போய்விட்டார்.
இதையடுத்து சிவாஜியின் ஆத்மார்த்த நண்பர்கள் சிலரிடம் தொலைபேசியில் பேசிய கமலாஅம்மாள், நீங்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாள் வந்து அவரோட பேசிவிட்டு போனீங்கன்னா நல்லா இருக்கும் என கேட்டுக் கொண்டார். அப்பல்லோ நிர்வாகமும் மூன்று ஷிப்டுகளாகப் பிரித்து மூன்று நர்சுகளை சிவாஜிக்கு பணி விடை செய்ய அனுப்பி வைத்தது. கமலா அம்மாள் கேட்டுக் கொண்டதை அடுத்து சிவாஜியின் நண்பர்கள் ஒரு நாளைக்கு ஒருவராக வந்தார்கள்.
சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.சிதம்பரம் வந்து சிவாஜியோடு பேசிக்கொண்டிருந்த போது சாப்பாடு விஷயத்தை பற்றி சொல்லியிருக்கிறார். சிவாஜி ஒரு அசைவப்பிரியர். காடை, கவுதாரி, புறாக் கறிகளை விரும்பி சாப்பிடுவார். ஆனால் உடல்நலத்தைக் கருதி டாக்டர்கள் வெறும் கஞ்சியை மட்டுமே சாப்பிடச் சொல்லியதால்... அன்னிக்கு நல்லா பசிச்சது, ஆனா என்னால சாப்பிட முடியலை. ஏன்னா வறுமை. நல்லா சம்பாதிச்சப்போ என்னால திருப்தியா சாப்பிட முடியலை. ஏன்னா நான் நடிகனாச்சே... கண்டபடி சாப்பிட்டா உடம்பு போட்டுடும்னு இமேஜ் பார்த்து சாப்பிட முடியலை. இன்னிக்கு தேவையான பணமும் இருக்கு. தேவைக்கு அதிகமா ஓய்வும் இருக்கு. ஆனாலும் சாப்பிட முடியலை. டாக்டர் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டார் என வி.என்.சிதம்பரத்திடம் சொல்லி இருக்கிறார்.
சாப்பாடு மட்டுமல்ல, தாகத்துக்கு தண்ணீர் குடிக்கக்கூட அவரால் முடியவில்லை. சமீபகாலமாகவே சாப்பிடும் கஞ்சி நெஞ்சிலேயே நிற்பது மாதிரி ஒரு உணர்வு சிவாஜிக்கு. இதனால் அடிக்கடி தண்ணீர் கேட்பார். ஆனால் நாளொன்றுக்கு 350 மில்லிக்கு மேல் தண்ணீர் குடிக்கக்கூடாது என டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
தனது நெருங்கிய நண்பரான நடிகர் பாலாஜி தன்னை சந்திக்க வந்தபோது அவரின் உடல்நலம் குறித்து விசாரித்த சிவாஜி, கூட
யாரும் வரலையா? என்று கேட்டார்.
இல்லையே, நானாதான் கார் ஓட்டிட்டு வந்தேன்
அடப்பாவி, டயாலிசிஸ் பண்ணிட்டிருக்கிற நீ கார் ஓட்டிட்டா வந்த? என கடிந்துகொண்டார்.
உடனே பாலாஜி சிரித்த படி, இதுல என்ன இருக்கு பயப்பட? டயாலிசிஸ் பண்ணிக்கிறது இப்பெல்லாம் சர்வசாதாரணம். நீங்களும் டயாலிசிஸ் பண்ணிக்கங்க. பயப்பட ஒண்ணுமே இல்லை. தைரியமா இருங்க என சொல்லியிருக்கிறார்.
ஸ்பெஷல் பாசம்
இந்த உடல் வருத்தம் ஒருபுறமிருக்க, தன் பாசமுள்ள பேத்திக்கு ஏற்பட்ட கஷ்டம் சிவாஜியை ரொம்பவே துயரப்படுத்தியிருக்கிறது.
ஒரு வீட்டில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் முதன் முதலாக புதிய ஜிவனாய் பிறக்கும் மூத்த குழந்தை மீது பெற்றோர்களுக்கு ரொம்பவே பாசம் இருக்கும். அப்படித்தான் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி மீது ரொம்ப பிரியமாக இருந்தார். அந்த மகளின் மகளான சத்தியலட்சுமி மீது சிவாஜிக்கு ரொம்பவே அன்பு. ஏகப்பட்ட பேரன் பேத்திகள் இருந்தாலும் எல்லோரிடமும் ஒரு குழந்தையைபோல் குதூகலமாகப் பழகினாலும் சத்திய லட்சுமி மீது ஸ்பெஷல் பாசம் சிவாஜிக்கு.
வி.என்.சுதாகரனுக்கு சத்திய லட்சுமியை திருமணம் செய்து வைக்கிற பேச்சு அடிபட்டபோது, அரசியல் சம்பந்தப்பட்ட சம்பந்தம் வேண்டாம் என சிவாஜி மறுத்த போது சத்தியலட்சுமியின் தந்தை நாராயணசாமி, உங்களுக்கு மட்டும்தான் ஸ்டேட்டஸ் இருக்கணுமா? எங்களுக்கு இருக்கக்கூடாதா? என சண்டையிட்ட பிறகே கல்யாணம் நடந்தது.
சிவாஜி பிசியாக இருந்த காலங்களில் அவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே முக்கியமான விஷயங்களை தவிர மற்ற விஷயங்களை சிவாஜியின் கவனத்திற்கு கொண்டுசெல்ல மாட்டார்கள்.
மனவேதனை
ஒருமுறை சத்தியலட்சுமி உடல்நலமில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு படப் பிடிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு வந்த சிவாஜி அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். அப்படிப்பட்ட பேத்தியின் கணவரான சுதாகரன் மீது ஹெராயின் வழக்கு, பாளையங்கோட்டை சிறை என்றிருப்பதால் பேத்திக்காக பரிதாபப்பட்டு மிகுந்த மன வேதனை அடைந்திருக்கிறார்.
ஜெ.யிடம் பேச மறுப்பு
ஜெயலலிதாகிட்ட நீங்க பேசினா, சுதாகரன் மேல் எந்த கெடுபிடியும் இருக்காது. போய் பேசிவிட்டு வாங்க என்று குடும்பத்தினர் சொன்னபோது மறுத்து விட்டார் சிவாஜி. தொலைபேசி மூல மாகவாவது பேசுங்கள் என்று சொல்லியும் நிராகரித்து விட்டார். பேத்தியின் நலனுக்காக ஜெ.விடம் பேசவும் தயக்கம். அதே சமயம் பேத்தியின் எதிர்காலத்தை நினைத்து வருத்தம் என சிரமப்பட்டு விட்டார் சிவாஜி.
நாளாக நாளாக உடல் பலகீனப்பட்டுக் கொண்டே வந்தது. புதுக்கோட்டையை அடுத்த குமாரவயல் பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமத்துரையும் ஒளிந்திருந்தார்களாம். அதன் அடையாளமாக இங்கே ஊமத்துரைக்கு ஒரு கோவில் உள்ளது. அவ்வப்போது இங்கே வந்து செல்வது சிவாஜியின் வழக்கம். சிவாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை கேள்விப்பட்ட குமார வயல் மக்கள் ஊமத்துரை கோவில் வாசலில் மண்ணை எடுத்து பிரசாதமாக அனுப்பியிருக்கிறார்கள். இந்த மண்ணை சிவாஜியின் நெற்றியில் பூசச் சொல்லியிருக்கிறார்கள்.
சிறுநீர் பிரியவில்லை
இந்நிலையில் சிறுநீர் பிரியாமல் சிவாஜி ரொம்பவே அவஸ்தைப்பட கடந்த 12-ந்தேதி அப்பல்லோ மருத் துவமனையில் சேர்த்தனர். உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த, சிவாஜியோ மறுத்துவிட்டார். ஏற்கனவே டயாலிசிஸ் சிகிச்சை பற்றி பாலாஜி தைரியப் படுத்தியும், டாக்டர்கள் சொல்லியும்கூட சிவாஜி சிகிச்சைக்கு மறுத்தாரென்றால், வலிக்குப் பயந்து மறுத்தாரா? அவருக்கா பயம்? மன வேதனையி லிருந்த சிவாஜி இனிமே இருந்து என்னாகப் போகுது? என்கிற சலிப்பில்தான் மறுத்திருக்கிறார்.
மாத்திரை, மருந்து மூலமாக ஏதாவது பண்ணுங்கள் என சிவாஜி சொல்லிவிட்டார். அவரின் விருப்பப்படியே சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.
வாழைப்பழத்துக்கு ஆசை
20-ந்தேதியன்று, நர்சிடம் எனக்கு வாழைப்பழம் வேணும் என கேட்டிருக்கிறார் சிவாஜி. வாழைப்பழம் சாப்பிடக்கூடாதே என நர்ஸ் மறுத்துவிடவே நர்சிடம் கோபித்து சண்டை போட்டிருக்கிறார். அவரை சமாதானப் படுத்துவதற்காக இரண்டு பிஸ்கட்டுகளை கொடுத்திருக்கிறார் நர்ஸ். ஆனால் வாழைப்பழம்தான் வேணும் என குழந்தை மாதிரி முரண்டு பண்ணி விட்டு பிஸ்கெட்டை சாப்பிடவேயில்லை.
மூச்சு நின்றது
21-ந்தேதி உடல்நிலை ரொம்பவே மோசமாக... சுவிட்சர்லாந்தில் ஆயிரம் பொய்சொல்லி படப்பிடிப்பில் இருந்த பிரபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், கமலா அம்மாள், மகள் சாந்தி ஆகியோர் மருத்துவமனையில் ரொம்பவே பதட்டத்தோடு இருந்தனர். தன் மகள் சாந்தியிடம் உடம்பு ரொம்ப வலிக்குதும்மா எனச் சொல்லிவிட்டு தூக்கத்தில் ஆழ்ந்தார். அதோடு உயிர் பிரிந்தது.
இந்த உடல் வருத்தம் ஒருபுறமிருக்க, தன் பாசமுள்ள பேத்திக்கு ஏற்பட்ட கஷ்டம் சிவாஜியை ரொம்பவே துயரப்படுத்தியிருக்கிறது.
ஒரு வீட்டில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் முதன் முதலாக புதிய ஜிவனாய் பிறக்கும் மூத்த குழந்தை மீது பெற்றோர்களுக்கு ரொம்பவே பாசம் இருக்கும். அப்படித்தான் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி மீது ரொம்ப பிரியமாக இருந்தார். அந்த மகளின் மகளான சத்தியலட்சுமி மீது சிவாஜிக்கு ரொம்பவே அன்பு. ஏகப்பட்ட பேரன் பேத்திகள் இருந்தாலும் எல்லோரிடமும் ஒரு குழந்தையைபோல் குதூகலமாகப் பழகினாலும் சத்திய லட்சுமி மீது ஸ்பெஷல் பாசம் சிவாஜிக்கு.
வி.என்.சுதாகரனுக்கு சத்திய லட்சுமியை திருமணம் செய்து வைக்கிற பேச்சு அடிபட்டபோது, அரசியல் சம்பந்தப்பட்ட சம்பந்தம் வேண்டாம் என சிவாஜி மறுத்த போது சத்தியலட்சுமியின் தந்தை நாராயணசாமி, உங்களுக்கு மட்டும்தான் ஸ்டேட்டஸ் இருக்கணுமா? எங்களுக்கு இருக்கக்கூடாதா? என சண்டையிட்ட பிறகே கல்யாணம் நடந்தது.
சிவாஜி பிசியாக இருந்த காலங்களில் அவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே முக்கியமான விஷயங்களை தவிர மற்ற விஷயங்களை சிவாஜியின் கவனத்திற்கு கொண்டுசெல்ல மாட்டார்கள்.
மனவேதனை
ஒருமுறை சத்தியலட்சுமி உடல்நலமில்லாமல் இருப்பதை கேள்விப்பட்டு படப் பிடிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு வந்த சிவாஜி அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். அப்படிப்பட்ட பேத்தியின் கணவரான சுதாகரன் மீது ஹெராயின் வழக்கு, பாளையங்கோட்டை சிறை என்றிருப்பதால் பேத்திக்காக பரிதாபப்பட்டு மிகுந்த மன வேதனை அடைந்திருக்கிறார்.
ஜெ.யிடம் பேச மறுப்பு
ஜெயலலிதாகிட்ட நீங்க பேசினா, சுதாகரன் மேல் எந்த கெடுபிடியும் இருக்காது. போய் பேசிவிட்டு வாங்க என்று குடும்பத்தினர் சொன்னபோது மறுத்து விட்டார் சிவாஜி. தொலைபேசி மூல மாகவாவது பேசுங்கள் என்று சொல்லியும் நிராகரித்து விட்டார். பேத்தியின் நலனுக்காக ஜெ.விடம் பேசவும் தயக்கம். அதே சமயம் பேத்தியின் எதிர்காலத்தை நினைத்து வருத்தம் என சிரமப்பட்டு விட்டார் சிவாஜி.
நாளாக நாளாக உடல் பலகீனப்பட்டுக் கொண்டே வந்தது. புதுக்கோட்டையை அடுத்த குமாரவயல் பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமத்துரையும் ஒளிந்திருந்தார்களாம். அதன் அடையாளமாக இங்கே ஊமத்துரைக்கு ஒரு கோவில் உள்ளது. அவ்வப்போது இங்கே வந்து செல்வது சிவாஜியின் வழக்கம். சிவாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை கேள்விப்பட்ட குமார வயல் மக்கள் ஊமத்துரை கோவில் வாசலில் மண்ணை எடுத்து பிரசாதமாக அனுப்பியிருக்கிறார்கள். இந்த மண்ணை சிவாஜியின் நெற்றியில் பூசச் சொல்லியிருக்கிறார்கள்.
சிறுநீர் பிரியவில்லை
இந்நிலையில் சிறுநீர் பிரியாமல் சிவாஜி ரொம்பவே அவஸ்தைப்பட கடந்த 12-ந்தேதி அப்பல்லோ மருத் துவமனையில் சேர்த்தனர். உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த, சிவாஜியோ மறுத்துவிட்டார். ஏற்கனவே டயாலிசிஸ் சிகிச்சை பற்றி பாலாஜி தைரியப் படுத்தியும், டாக்டர்கள் சொல்லியும்கூட சிவாஜி சிகிச்சைக்கு மறுத்தாரென்றால், வலிக்குப் பயந்து மறுத்தாரா? அவருக்கா பயம்? மன வேதனையி லிருந்த சிவாஜி இனிமே இருந்து என்னாகப் போகுது? என்கிற சலிப்பில்தான் மறுத்திருக்கிறார்.
மாத்திரை, மருந்து மூலமாக ஏதாவது பண்ணுங்கள் என சிவாஜி சொல்லிவிட்டார். அவரின் விருப்பப்படியே சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.
வாழைப்பழத்துக்கு ஆசை
20-ந்தேதியன்று, நர்சிடம் எனக்கு வாழைப்பழம் வேணும் என கேட்டிருக்கிறார் சிவாஜி. வாழைப்பழம் சாப்பிடக்கூடாதே என நர்ஸ் மறுத்துவிடவே நர்சிடம் கோபித்து சண்டை போட்டிருக்கிறார். அவரை சமாதானப் படுத்துவதற்காக இரண்டு பிஸ்கட்டுகளை கொடுத்திருக்கிறார் நர்ஸ். ஆனால் வாழைப்பழம்தான் வேணும் என குழந்தை மாதிரி முரண்டு பண்ணி விட்டு பிஸ்கெட்டை சாப்பிடவேயில்லை.
மூச்சு நின்றது
21-ந்தேதி உடல்நிலை ரொம்பவே மோசமாக... சுவிட்சர்லாந்தில் ஆயிரம் பொய்சொல்லி படப்பிடிப்பில் இருந்த பிரபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், கமலா அம்மாள், மகள் சாந்தி ஆகியோர் மருத்துவமனையில் ரொம்பவே பதட்டத்தோடு இருந்தனர். தன் மகள் சாந்தியிடம் உடம்பு ரொம்ப வலிக்குதும்மா எனச் சொல்லிவிட்டு தூக்கத்தில் ஆழ்ந்தார். அதோடு உயிர் பிரிந்தது.
நினைவலைகள் (இமயம் பற்றி பிரபலங்கள்)
நேரு„- பாரதத்தின் புகழுக்காக பாடுபட்டவர்.
இந்திராகாந்தி„-கலையுலக கல்தூண்.
காமராஜர்„- கப்பலோட்டிய தமிழனையும் கட்டபொம்மனையும் நம் கண் முன் மீண்டும் காண வைத்தவர் தம்பி கணேசன்.
ராஜாஜி = ராமாயணத்தில் பரதனைபற்றி படித்திருக்கிறேன். ஆனால் சிவாஜி சம்பூர்ண ராமாயணத்தில் பரதனாகவே மாறி விட்டார்.
பெரியார்„-சிவாஜி தம்பி, வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசி பாத்திரத்துடன் இணைந்து விடும் நடிகர் திலகம் கணேசன் சிவாஜி கணேசன் என்ற பெயரோடு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
அண்ணா„- கணேசன் அரும்பாக இருக்கும்போதே அது நல்ல மலராகும் என்று சொன்னவன் நான். திறமையால் புகழ் உச்சியில் இருப்பவர் தம்பி கணேசன்.
கலைஞர்„- சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் 20 பக்க வசனத்தையும் (ராஜாராணி) படத்தில் ஒரே மூச்சில் ஒரே டேக்கில் நடிக்கும் சிம்மகுரல் கொண்ட ஒரே நடிகர் தம்பி கணேசன்
கிருபானந்த வாரியார்„ = வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் அள்ளித்தருவதில் உண்மை கொடை வள்ளல் சிவாஜி.
வி.கே.ராமசாமி„ தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் நடிப்பை பாராட்டுவதில் சிவாஜிக்கு ஈடு இணையே கிடையாது. அதுதான் சிவாஜியிடம் காணப்பட்ட சிறப்பு அம்சம்.
ஜெமினி கணேசன்„ = சிவாஜி நடித்த பராசக்தி படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்தேன். அவருடன் இணைந்து பெண்ணின் பெருமை என்ற படத்தில் முதன் முதலாக நடித்தேன். மொத்தம் பத்து பன்னிரெண்டு படங்களில் அவருடன் இணைந்து நடித்து இருக்கிறேன். அவரது நடிப்பை நானும், என்னுடைய நடிப்பை அவரும் பாராட்டி இருக்கிறோம்.
பாலசந்தர்„= சிவாஜியுடன் ஒரு படம் பண்ணும் வாய்ப்புதான் எனக்கு கிடைத்தது. அவர் டைரக்டர்களுக்கு மரியாதை கொடுப்பவர். காட்சி என்ன என்பதை சொல்- நடிக்கிறேன் என்பார். அப்படி பெரிய மரியாதை கொடுப்பார். பசும்பொன் பொன்முத்துராமலிங்க தேவரும் தேசியமும்- தெய்வீகமும் இரு கண் என்பார். அதை சிவாஜி கடைபிடித்து வந்தார்.
பாரதிராஜா„ முதல் மரியாதை படத்தில் நடித்தவருக்கு இறுதி மரியாதை செய்யும் துர்ப்பாக்கிய நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். மண்ணின் மக்களோடு, கலாச்சாரத்தோடு 50 ஆண்டுகளுக்கு மேல் சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்த நிகரில்லா இமயம். அவர் கலை உலக மாமேதை. இந்தியாவுக்கு 2 இமயம் என்றால் ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது. இன்று நாங்கள் உண்ணுகின்ற உணவு, சுவாசிக்கின்ற காற்று சிவாஜி தந்தது. அவரது இழப்பு தமிழுக்கு ஏற்பட்ட இழப்பு. உலக கலைஞர்களுக்கு ஏற்பட்ட இழப்பு. அவர் விழுதுவிட்டு பரந்த ஒரே ஆலமரம். அது சாய்ந்துவிட்டது.
வைரமுத்து„- சூரியனின் கதிர்வீச்சு உலகில் விழுவதுபோல, சிவாஜியின் கதிர்வீச்சு திரையுலகில் விழுந்து உள்ளது. அவர் நடித்த முதல்மரியாதை படத்துக்கு நான் பாட்டு எழுதினேன். அதற்கு எனக்கு முதன்முதலாக தேசிய விருது கிடைத்தது. அதை அவருக்கே சமர்ப்பணம் செய்வதாக அப்போதே கூறினேன். சிங்கத்தின் பாலை தங்க கிண்ணத்தில்தான் வைப்பார்கள். சிவாஜியே ஒரு சிங்கம். அந்த சிங்கத்துக்கு என்ன செய்யப் போகிறோம்? அவருக்கு தனி இடம் ஒதுக்கி இறுதி சடங்கு செய்ய வேண்டும்.
ரஜினி„-1952-ல் பராசக்தியில் தூங்கி எழுவது போல் (முதல் காட்சி) ஒரு சிங்கம் எழுந்தது. அதன் கர்ஜனை இன்னும் கேட்கிறது. என்றும் கேட்கும்.
கமல்„- சரித்திரத்துக்கு கி.மு. கி.பி. என்பது போல் சினிமா உலக சரித்திரத்திற்கு சிவாஜிக்கு முன் பின் என்று சொல்லும் அளவிற்கு ஒப்பற்ற நடிகர்.
விஜயகாந்த்„- சிவாஜி சார் நடிப்பின் இமயம். அவரைப்போல் ஒரு நடிகர் இனிமேல் பிறக்கப் போவதில்லை. நாடே போற்றும் ஒரு நல்ல கலைஞன் என்பதற்கு இன்றைக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய கூட்டமே சான்று.
சரத்குமார்„- நவரசங்களையும் நடிப்பில் கொண்டு வந்த ஒரே நடிகர் சிவாஜி. அவர்களின் புகழ் இந்த பூவுலகம் இருக்கும் மட்டும் வாழும். அவரது புகழை ஒப்பிட்டுக்கூற வார்த்தைகளே இல்லை.
கன்னட நடிகர் ராஜ;குமார்„- இப்போது நடப்பது கலியுகம். இனி நடக்கப்போவது சிவாஜி யுகம். நடிகர் திலகமான அவர் நம் நெஞ்சில் எல்லாம் திலகம் வைத்திருக்கிறார். அந்த திலகம் என்றும் அழியாது.
சத்யராஜ;„ சினிமாவில் நான் நடிக்க வந்ததற்கு காரணமே சிவாஜிதான். நான் இன்று நடிக்கிறேன் என்றால் அதெல்லாம் சிவாஜியை பார்த்து கற்றுக்கொண்டதுதான். சிவாஜியுடன் சேர்ந்து சில படங்களில் வில்லனாகவும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறேன். அவர் ஒரு உலக மகா நடிகர். அவரது நடிப்புக்கு ஈடு இணையே கிடையாது
சிவகுமார்„ நான் 1957-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். ஒரு ஓவியனாக வந்த நான் நடிகராக ஆனேன். சிவாஜியை நான் கடைசியாக மலேசியா வாசுதேவன் இல்ல திருமணத் தில் சந்தித்தேன். அவரை பார்த்ததும் இருந்த இருக்கையைவிட்டு எழுந்து அடுத்த இருக் கையில் அமர்ந்தேன். அதை கவனித்த சிவாஜி டேய் எங்கே போறே, சும்மா உட்காருடா என்று கூறினார். நடிப்பில் அவர் இமயம்.
பாக்யராஜ;„ சிவாஜி காலத்தில் நாம் வாழ்ந்ததே பெரிய விஷயம். அவர் தொழில் பக்தி, அக்கறை கொண்டவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தாவணி கனவுகள் படப்பிடிப்புக்கு காலை 7.30 மணிக்கு வரச் சொல்லி இருந்தேன். அவர் வருவதற்கு முன் காமிராவை ஸ்டார்ட் செய்து வேறு சில காட்சி எடுத்தேன். 7.30 மணிக்கு வந்த சிவாஜி அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 7.30 மணிக்குத்தானே வரச்சொன்னீர்கள். அதற்கு முன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால் நான் தாமதமாக வந்ததாகிவிடாதா? என்றார். மறுநாள் எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று கேட்டார். காலை 7.30 மணிக்கு வாருங்கள் என்றேன். அவர் 7.15 மணிக்கே வந்துவிட்டார். எனக்கு முன்னால் வந்திருந்த அவரை பார்த்தேன். அவர் என்னிடம் இன்று நீ தாமதமாகி வந்தாய் என்றாகிவிடும் என்றார்.
பார்த்திபன்„ சினிமாவை நேசிப்பதன் மூலமாகவே அவரது ஆத்மா சாந்தி அடையும். அந்த ஆத்மா சாந்தி அடையட்டும்.
ஸ்ரீகாந்த்„ மற்றவர்கள் நடிக்கும்போது சிவாஜி எதிரே இருந்து கவனிப்பார். அவர் களை ஊக்கப்படுத்துவார். உடன் நடிப்பவர்கள் தவறு செய்து விடக்கூடாது என்பதில் சிவாஜி கவனமாக இருப்பார். அவரிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது. சிவாஜியுடன் நான் அவரது மகன்போல பழகி இருக்கிறேன். சினிமாவை சீர்திருத்த
இதே சிவாஜி மீண்டும் சிவாஜியாக பிறக்க வேண்டும்.
சோ„-சிவாஜிக்கு எம்.பி. பதவி கொடுத்தற்காக இந்திராகாந்தியை பாராட்டினார்கள். அது அவசியம் இல்லை. பரீட்சையில் 100 மார்க் பெற்றால் மாணவனை பாராட்டுகிறோம். ஆசிரியை பாராட்ட வேண்டியது தேவையில்லை.
நேரு„- பாரதத்தின் புகழுக்காக பாடுபட்டவர்.
இந்திராகாந்தி„-கலையுலக கல்தூண்.
காமராஜர்„- கப்பலோட்டிய தமிழனையும் கட்டபொம்மனையும் நம் கண் முன் மீண்டும் காண வைத்தவர் தம்பி கணேசன்.
ராஜாஜி = ராமாயணத்தில் பரதனைபற்றி படித்திருக்கிறேன். ஆனால் சிவாஜி சம்பூர்ண ராமாயணத்தில் பரதனாகவே மாறி விட்டார்.
பெரியார்„-சிவாஜி தம்பி, வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசி பாத்திரத்துடன் இணைந்து விடும் நடிகர் திலகம் கணேசன் சிவாஜி கணேசன் என்ற பெயரோடு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.
அண்ணா„- கணேசன் அரும்பாக இருக்கும்போதே அது நல்ல மலராகும் என்று சொன்னவன் நான். திறமையால் புகழ் உச்சியில் இருப்பவர் தம்பி கணேசன்.
கலைஞர்„- சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன் 20 பக்க வசனத்தையும் (ராஜாராணி) படத்தில் ஒரே மூச்சில் ஒரே டேக்கில் நடிக்கும் சிம்மகுரல் கொண்ட ஒரே நடிகர் தம்பி கணேசன்
கிருபானந்த வாரியார்„ = வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் அள்ளித்தருவதில் உண்மை கொடை வள்ளல் சிவாஜி.
வி.கே.ராமசாமி„ தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்களின் நடிப்பை பாராட்டுவதில் சிவாஜிக்கு ஈடு இணையே கிடையாது. அதுதான் சிவாஜியிடம் காணப்பட்ட சிறப்பு அம்சம்.
ஜெமினி கணேசன்„ = சிவாஜி நடித்த பராசக்தி படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்தேன். அவருடன் இணைந்து பெண்ணின் பெருமை என்ற படத்தில் முதன் முதலாக நடித்தேன். மொத்தம் பத்து பன்னிரெண்டு படங்களில் அவருடன் இணைந்து நடித்து இருக்கிறேன். அவரது நடிப்பை நானும், என்னுடைய நடிப்பை அவரும் பாராட்டி இருக்கிறோம்.
பாலசந்தர்„= சிவாஜியுடன் ஒரு படம் பண்ணும் வாய்ப்புதான் எனக்கு கிடைத்தது. அவர் டைரக்டர்களுக்கு மரியாதை கொடுப்பவர். காட்சி என்ன என்பதை சொல்- நடிக்கிறேன் என்பார். அப்படி பெரிய மரியாதை கொடுப்பார். பசும்பொன் பொன்முத்துராமலிங்க தேவரும் தேசியமும்- தெய்வீகமும் இரு கண் என்பார். அதை சிவாஜி கடைபிடித்து வந்தார்.
பாரதிராஜா„ முதல் மரியாதை படத்தில் நடித்தவருக்கு இறுதி மரியாதை செய்யும் துர்ப்பாக்கிய நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். மண்ணின் மக்களோடு, கலாச்சாரத்தோடு 50 ஆண்டுகளுக்கு மேல் சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்த நிகரில்லா இமயம். அவர் கலை உலக மாமேதை. இந்தியாவுக்கு 2 இமயம் என்றால் ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது. இன்று நாங்கள் உண்ணுகின்ற உணவு, சுவாசிக்கின்ற காற்று சிவாஜி தந்தது. அவரது இழப்பு தமிழுக்கு ஏற்பட்ட இழப்பு. உலக கலைஞர்களுக்கு ஏற்பட்ட இழப்பு. அவர் விழுதுவிட்டு பரந்த ஒரே ஆலமரம். அது சாய்ந்துவிட்டது.
வைரமுத்து„- சூரியனின் கதிர்வீச்சு உலகில் விழுவதுபோல, சிவாஜியின் கதிர்வீச்சு திரையுலகில் விழுந்து உள்ளது. அவர் நடித்த முதல்மரியாதை படத்துக்கு நான் பாட்டு எழுதினேன். அதற்கு எனக்கு முதன்முதலாக தேசிய விருது கிடைத்தது. அதை அவருக்கே சமர்ப்பணம் செய்வதாக அப்போதே கூறினேன். சிங்கத்தின் பாலை தங்க கிண்ணத்தில்தான் வைப்பார்கள். சிவாஜியே ஒரு சிங்கம். அந்த சிங்கத்துக்கு என்ன செய்யப் போகிறோம்? அவருக்கு தனி இடம் ஒதுக்கி இறுதி சடங்கு செய்ய வேண்டும்.
ரஜினி„-1952-ல் பராசக்தியில் தூங்கி எழுவது போல் (முதல் காட்சி) ஒரு சிங்கம் எழுந்தது. அதன் கர்ஜனை இன்னும் கேட்கிறது. என்றும் கேட்கும்.
கமல்„- சரித்திரத்துக்கு கி.மு. கி.பி. என்பது போல் சினிமா உலக சரித்திரத்திற்கு சிவாஜிக்கு முன் பின் என்று சொல்லும் அளவிற்கு ஒப்பற்ற நடிகர்.
விஜயகாந்த்„- சிவாஜி சார் நடிப்பின் இமயம். அவரைப்போல் ஒரு நடிகர் இனிமேல் பிறக்கப் போவதில்லை. நாடே போற்றும் ஒரு நல்ல கலைஞன் என்பதற்கு இன்றைக்கு திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய கூட்டமே சான்று.
சரத்குமார்„- நவரசங்களையும் நடிப்பில் கொண்டு வந்த ஒரே நடிகர் சிவாஜி. அவர்களின் புகழ் இந்த பூவுலகம் இருக்கும் மட்டும் வாழும். அவரது புகழை ஒப்பிட்டுக்கூற வார்த்தைகளே இல்லை.
கன்னட நடிகர் ராஜ;குமார்„- இப்போது நடப்பது கலியுகம். இனி நடக்கப்போவது சிவாஜி யுகம். நடிகர் திலகமான அவர் நம் நெஞ்சில் எல்லாம் திலகம் வைத்திருக்கிறார். அந்த திலகம் என்றும் அழியாது.
சத்யராஜ;„ சினிமாவில் நான் நடிக்க வந்ததற்கு காரணமே சிவாஜிதான். நான் இன்று நடிக்கிறேன் என்றால் அதெல்லாம் சிவாஜியை பார்த்து கற்றுக்கொண்டதுதான். சிவாஜியுடன் சேர்ந்து சில படங்களில் வில்லனாகவும், சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறேன். அவர் ஒரு உலக மகா நடிகர். அவரது நடிப்புக்கு ஈடு இணையே கிடையாது
சிவகுமார்„ நான் 1957-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். ஒரு ஓவியனாக வந்த நான் நடிகராக ஆனேன். சிவாஜியை நான் கடைசியாக மலேசியா வாசுதேவன் இல்ல திருமணத் தில் சந்தித்தேன். அவரை பார்த்ததும் இருந்த இருக்கையைவிட்டு எழுந்து அடுத்த இருக் கையில் அமர்ந்தேன். அதை கவனித்த சிவாஜி டேய் எங்கே போறே, சும்மா உட்காருடா என்று கூறினார். நடிப்பில் அவர் இமயம்.
பாக்யராஜ;„ சிவாஜி காலத்தில் நாம் வாழ்ந்ததே பெரிய விஷயம். அவர் தொழில் பக்தி, அக்கறை கொண்டவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தாவணி கனவுகள் படப்பிடிப்புக்கு காலை 7.30 மணிக்கு வரச் சொல்லி இருந்தேன். அவர் வருவதற்கு முன் காமிராவை ஸ்டார்ட் செய்து வேறு சில காட்சி எடுத்தேன். 7.30 மணிக்கு வந்த சிவாஜி அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 7.30 மணிக்குத்தானே வரச்சொன்னீர்கள். அதற்கு முன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால் நான் தாமதமாக வந்ததாகிவிடாதா? என்றார். மறுநாள் எத்தனை மணிக்கு வரவேண்டும் என்று கேட்டார். காலை 7.30 மணிக்கு வாருங்கள் என்றேன். அவர் 7.15 மணிக்கே வந்துவிட்டார். எனக்கு முன்னால் வந்திருந்த அவரை பார்த்தேன். அவர் என்னிடம் இன்று நீ தாமதமாகி வந்தாய் என்றாகிவிடும் என்றார்.
பார்த்திபன்„ சினிமாவை நேசிப்பதன் மூலமாகவே அவரது ஆத்மா சாந்தி அடையும். அந்த ஆத்மா சாந்தி அடையட்டும்.
ஸ்ரீகாந்த்„ மற்றவர்கள் நடிக்கும்போது சிவாஜி எதிரே இருந்து கவனிப்பார். அவர் களை ஊக்கப்படுத்துவார். உடன் நடிப்பவர்கள் தவறு செய்து விடக்கூடாது என்பதில் சிவாஜி கவனமாக இருப்பார். அவரிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது. சிவாஜியுடன் நான் அவரது மகன்போல பழகி இருக்கிறேன். சினிமாவை சீர்திருத்த
இதே சிவாஜி மீண்டும் சிவாஜியாக பிறக்க வேண்டும்.
சோ„-சிவாஜிக்கு எம்.பி. பதவி கொடுத்தற்காக இந்திராகாந்தியை பாராட்டினார்கள். அது அவசியம் இல்லை. பரீட்சையில் 100 மார்க் பெற்றால் மாணவனை பாராட்டுகிறோம். ஆசிரியை பாராட்ட வேண்டியது தேவையில்லை.
திருச்சியும் சிவாஜியும்
சிவாஜி சிறுவயதில் நாடக நடிகராக இருந்தபோது திருச்சியில் தங்கி இருந்து தான் தனது கலையுலக பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் பெருந்தலைவர் காமராஜர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை சிவாஜியால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி நகராட்சியாக இருந்த போது மா.பாலகிருஷ்ணன் நகராட்சி தலைவராக 1986 முதல் 90 வரை இருந்தார். இந்த கால கட்டத்தில் தான் மேல்சபை எம்.பியாக இருந்த சிவாஜிக்கு திருச்சி நகராட்சி சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது தான் சிவாஜி திருச்சிக்கு வந்து மன்றம் அளித்த வரவேற்பில் கலந்து கொண்டு காமராஜர் சிலையை திறந்து வைத்தார். சிவாஜி திறந்த இந்த சிலை தான் திருச்சியின் முதல் காமராஜர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
மலரும் நினைவுகள்
தினகரன் நிறுவனர் முன்னாள் அமைச்சர் அமரர் கே.பி.கந்தசாமி அவர்களை நடிகர் திலகம் சிவாஜி மாப்பிள்ளை என்றுதான் அன்புடன் அழைப்பார். மாப்பிள்ளை தங்ககம்பி என்று சிவாஜி மகிழ்ச்சியுடன் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்.
தனது மன்ற ரசிகர்களை சிவாஜி பிள்ளைகளே என்று தான் அழைப்பார். மன்ற ரசிகர்கள் கை கொடுங்கள் என்ற கையை நீட்டினால் சிவாஜி சிரித்து கொண்டே என் கையை எப்படியப்பா தரமுடியும்
என்று கேட்பார்.
பெருந்தலைவர் காமராஜர் மீது அபார பக்தி கொண்டிருந்த சிவாஜி தனது பேச்சை தொடங்கும் முன் வாழ்க நாடு, வாழ்க மக்கள் வாழ்க என் அருமை தலைவர் காமராஜர் நாமம் என்றுதான் ஆரம்பிப்பார்.
சிவாஜி திருச்சியில் அதிகம் தங்கிய ஓட்டல் ஆஷ்பி ஓட்டல் ஆகும் (இங்குதான் காமராஜர், தங்குவார்)
வீரபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்றால் இன்றைய இளைஞர்களுக்கு சிவாஜி முகம்தான் பளிச்சென தெரியும். அந்த அளவு கதாபாத்திரத்துடன் ஒன்றிபோய் விடுவார் சிவாஜி.
தனக்கு ஆங்கிலத்தில் அதிக புலமை இல்லையே, (அதிகம் படிக்க முடியாமற் போய்விட்டதே) என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொள்வார்.
போளூரில் சிவாஜி
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி, கடந்த 1948-ம் ஆண்டில் போளூரில் தங்கியிருந்து நாடகங்களில் நடித்து உள்ளார். சக்தி நாடகசபா மூலம் நடைபெற்ற நாடகங்களில் நடித்த அவர்தினமும் இங்குள்ள சம்பத்கிரி மலையில் உள்ள நரசிம்ம சாமி கோவி லுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவார். 1978-ல் சம்பத்கிரி மலையில் கோவில் திருப்பணிக்காக வியாட்நாம் வீடு நாடகம் மூலம் வசூலான தொகை ரூ.10ஆயிரத்தை கொடுத்தார். சிவாஜிக்கு முதலில் மாரடைப்பு ஏற்பட்டு மலேசியாவில் சிகிச்சை பெற்றபோது இக்கோவில் பிரசாதம் அவருக்கு அனுப்பப்பட்டதாக அவருடைய போளூர் நண்பர்கள் தெரிவித்தனர்.
சிவாஜி சிறுவயதில் நாடக நடிகராக இருந்தபோது திருச்சியில் தங்கி இருந்து தான் தனது கலையுலக பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் பெருந்தலைவர் காமராஜர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை சிவாஜியால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி நகராட்சியாக இருந்த போது மா.பாலகிருஷ்ணன் நகராட்சி தலைவராக 1986 முதல் 90 வரை இருந்தார். இந்த கால கட்டத்தில் தான் மேல்சபை எம்.பியாக இருந்த சிவாஜிக்கு திருச்சி நகராட்சி சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது தான் சிவாஜி திருச்சிக்கு வந்து மன்றம் அளித்த வரவேற்பில் கலந்து கொண்டு காமராஜர் சிலையை திறந்து வைத்தார். சிவாஜி திறந்த இந்த சிலை தான் திருச்சியின் முதல் காமராஜர் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
மலரும் நினைவுகள்
தினகரன் நிறுவனர் முன்னாள் அமைச்சர் அமரர் கே.பி.கந்தசாமி அவர்களை நடிகர் திலகம் சிவாஜி மாப்பிள்ளை என்றுதான் அன்புடன் அழைப்பார். மாப்பிள்ளை தங்ககம்பி என்று சிவாஜி மகிழ்ச்சியுடன் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்.
தனது மன்ற ரசிகர்களை சிவாஜி பிள்ளைகளே என்று தான் அழைப்பார். மன்ற ரசிகர்கள் கை கொடுங்கள் என்ற கையை நீட்டினால் சிவாஜி சிரித்து கொண்டே என் கையை எப்படியப்பா தரமுடியும்
என்று கேட்பார்.
பெருந்தலைவர் காமராஜர் மீது அபார பக்தி கொண்டிருந்த சிவாஜி தனது பேச்சை தொடங்கும் முன் வாழ்க நாடு, வாழ்க மக்கள் வாழ்க என் அருமை தலைவர் காமராஜர் நாமம் என்றுதான் ஆரம்பிப்பார்.
சிவாஜி திருச்சியில் அதிகம் தங்கிய ஓட்டல் ஆஷ்பி ஓட்டல் ஆகும் (இங்குதான் காமராஜர், தங்குவார்)
வீரபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்றால் இன்றைய இளைஞர்களுக்கு சிவாஜி முகம்தான் பளிச்சென தெரியும். அந்த அளவு கதாபாத்திரத்துடன் ஒன்றிபோய் விடுவார் சிவாஜி.
தனக்கு ஆங்கிலத்தில் அதிக புலமை இல்லையே, (அதிகம் படிக்க முடியாமற் போய்விட்டதே) என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டுக் கொள்வார்.
போளூரில் சிவாஜி
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி, கடந்த 1948-ம் ஆண்டில் போளூரில் தங்கியிருந்து நாடகங்களில் நடித்து உள்ளார். சக்தி நாடகசபா மூலம் நடைபெற்ற நாடகங்களில் நடித்த அவர்தினமும் இங்குள்ள சம்பத்கிரி மலையில் உள்ள நரசிம்ம சாமி கோவி லுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவார். 1978-ல் சம்பத்கிரி மலையில் கோவில் திருப்பணிக்காக வியாட்நாம் வீடு நாடகம் மூலம் வசூலான தொகை ரூ.10ஆயிரத்தை கொடுத்தார். சிவாஜிக்கு முதலில் மாரடைப்பு ஏற்பட்டு மலேசியாவில் சிகிச்சை பெற்றபோது இக்கோவில் பிரசாதம் அவருக்கு அனுப்பப்பட்டதாக அவருடைய போளூர் நண்பர்கள் தெரிவித்தனர்.
நடிகர் திலகத்துக்கு பாராளுமன்றம் அஞ்சலி
பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் 24ந்தேதி கூடியது. பிரதமர் வாஜ்பாய், மூத்த காபினட் மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவி சோனியா உள்படபலர் அதில் பங்கேற்றனர். அவை நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு 15 நிமிடம் முன்னதாக வாஜ்பாய் வந்தார். அவருக்கு மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். அவை தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக சோனியா வந்தார்.
சிவாஜிக்கு அஞ்சலி
மாநிலங்களவை கூடியதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்கள் அவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். மாநிலங்களவையிலும் நேபாள மன்னர் பீரேந்திரா நினைவு கூறப்பட்டார். மாநிலங்களவை தலைவர் கிருஷ்ண காந்த், மறைந்த மன்னர் பீரேந்திராவுக்கு புகழாரம் சூட்டினார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் மற்றும் 4 பேரின் மறைவுக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புகழாரம்
நடிகர் திலகம் சிவாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசிய கிருஷ்ணகாந்த் (துணை ஜனாதிபதி) கூறியதாவது„-
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல்வேறு விருதுகளை பெற்றவர். நாட்டு முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் காரணமாக பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். 1984-ம் ஆண்டு பத்மபூஷண் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.
முதல் நடிகர்
அரசின் கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின் மூலமாக முதன்முதலாக அமெரிக்கா சென்று வந்த இந்தியக் கலைஞர் சிவாஜி கணேசன் தான். இளம் வயதில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் அவர் நடித்ததை பாராட்டி அவருக்கு சிவாஜி என்று பெயர் சூட்டியவர் தந்தை பெரியார் ஆவார்.
இவ்வாறு அவர் புகழாரம் சூட்டினார்.
சிவாஜி கணேசன் 1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக
இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் 24ந்தேதி கூடியது. பிரதமர் வாஜ்பாய், மூத்த காபினட் மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவி சோனியா உள்படபலர் அதில் பங்கேற்றனர். அவை நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு 15 நிமிடம் முன்னதாக வாஜ்பாய் வந்தார். அவருக்கு மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். அவை தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக சோனியா வந்தார்.
சிவாஜிக்கு அஞ்சலி
மாநிலங்களவை கூடியதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்கள் அவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். மாநிலங்களவையிலும் நேபாள மன்னர் பீரேந்திரா நினைவு கூறப்பட்டார். மாநிலங்களவை தலைவர் கிருஷ்ண காந்த், மறைந்த மன்னர் பீரேந்திராவுக்கு புகழாரம் சூட்டினார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் மற்றும் 4 பேரின் மறைவுக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
புகழாரம்
நடிகர் திலகம் சிவாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசிய கிருஷ்ணகாந்த் (துணை ஜனாதிபதி) கூறியதாவது„-
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல்வேறு விருதுகளை பெற்றவர். நாட்டு முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் காரணமாக பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். 1984-ம் ஆண்டு பத்மபூஷண் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.
முதல் நடிகர்
அரசின் கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின் மூலமாக முதன்முதலாக அமெரிக்கா சென்று வந்த இந்தியக் கலைஞர் சிவாஜி கணேசன் தான். இளம் வயதில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் அவர் நடித்ததை பாராட்டி அவருக்கு சிவாஜி என்று பெயர் சூட்டியவர் தந்தை பெரியார் ஆவார்.
இவ்வாறு அவர் புகழாரம் சூட்டினார்.
சிவாஜி கணேசன் 1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக
இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|