புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
401 Posts - 48%
heezulia
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_m10அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாமலையான் அடிக்கமலம்-கண்ணார் அமுதம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 16, 2012 10:48 pm

புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர்.

÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் செய்த திருக்கோவையாரைக் கூறலாம். அடுத்து திருவாசகத்திலும் பல பாடல்கள் மகளிர் விளையாட்டுப் பாடல்களாக உள்ளன. அவைகளில் சிவபெருமானையே தலைவனாகக் கொண்டு பக்திப் பாடல்களாக இருப்பதைக் காண்கிறோம்.

÷இது முதலான சில காரணங்களால் திருவாசகம் ஓர் ஒப்பற்ற பக்தி இலக்கியம் என்பதைத் ""திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'' என்னும் பழமொழி உணர்த்துகின்றது. இம்முறையில் அமைந்த பாடல்களுள் "திருவெம்பாவை'ப் பாடல்கள் முதலிடத்தைப் பெறுகின்றன.

÷ஓர் ஆண்டில் நிகழும் பன்னிரண்டு திங்களில் மார்கழித் திங்கள் சிறப்புடையதாக நம் முன்னோரால் பாராட்டப்பட்டு வருகின்றது. அத்திங்கள் முழுவதும் இறை வழிபாட்டுத் திங்களாகவே முன்னோரால் கொள்ளப்பட்டது.

÷மக்கள் ஆண்டில் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் என்றும், அந்த நாளில் விடியற்காலை நேரம் மார்கழித் திங்கள் என்னும் மரபாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் மற்றை நாட்களிலெல்லாம் எவ்வாறு இருப்பினும், மார்கழித் திங்களில் பெரும்பாலும் எல்லா மக்களுமே விடியலில் எழுவதும், நீராடுவதும், திருக்கோயில் சென்று வழிபடுவதும் ஆகிய ஒழுக்கமுடையவர்களாய் இருப்பர். அவர்களில் மணம் ஆகாத கன்னிப் பெண்டிர் அத்திங்களில் ஒருவரையொருவர் எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கியும் வருவார்கள்.

இந் நிலைமையில் சிவநெறிச் செல்வரது மகளிர் நிலையில் வைத்து மாணிக்கவாசகர் "திருவெம்பாவை'யை அம்மகளிர் கூற்றாக அருளிச் செய்துள்ளார். இப்பகுதியில் இலக்கியச் சுவையான நவரசங்களையும் நாம் காண்பதோடு, சிவபெருமானது அளவிலா பக்திச் சிறப்பையும் காண்கிறோம். தேவர்கள் முப்பத்து மூன்று கோடியினர் என்பது ஒரு வழக்கம். எண்ணிறந்த தேவர்கள் யாவருக்கும் தலைவனாக விளங்குபவன் சிவபெருமானே என்பது சைவ சமய முடிவான கொள்கை. அத்தகைய அவனது பெருமையை திருவெம்பாவையில் மிக விளக்கமாக உணர முடிகின்றது. ÷திருவெம்பாவைப் பாடல்கள் இருபது. அவைகளில் பதினெட்டாவது பாடல் ""அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்'' எனத் தொடங்குவது. திருவெம்பாவையை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிச்செய்தார் என்பது புராணம். அதுபற்றி சிவபெருமானை "அண்ணாமலையான்' என்றே குறிப்பிடுகின்றார். அவருடைய திருவடியின் சிறப்பை இதன் இறுதிப் பாடலில் விரிவாக அருளுகின்றார்.

சிவபெருமான் திருவடிகளே உலகத்திற்கு முதலும் முடிவுமாய் உள்ளது என்பதையும்; அவைகளே ஐந்தொழில் ஆற்றுகின்றன என்பதையும் அப்பாடல் கூறும். எனவே, அவைகளிலும் மிக்க பொருள் வேறொன்று இல்லை என்பது விளங்கும். அகநிலையில் இவ்வாறு இருப்பினும், புறநிலையிலும் அவற்றின் சிறப்பை மாணிக்கவாசகர் இப்பாடலில் விளக்குகின்றார்.

அனைத்துத் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று அவனுடைய திருவடிமேல் வீழ்ந்து வணங்குகின்றார்கள். அவ்வாறு வீழ்ந்து வணங்கும் யாவரும் ஒளிமிகுந்த மணிக்கற்களால் இழைக்கப்பெற்ற முடி புனைந்தவர்களேயாவர். அம் முடிகள் எல்லாம் சிவபெருமான் திருவடியில் படும்பொழுது மணிக்கற்கள் பலவும் ஒளி வீசுகின்றன. அதே சமயத்தில் சிவபெருமான் திருவடிகளும் ஒளியை வீசுகின்றன. இவைகளில் எந்த ஒளி பேரொளி என்பதை இங்கே மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார். ÷அனைத்துத் தேவர்களுடைய முடிகளிலுள்ள மணிகளின் ஒளித்திரட்சி சிவபெருமானின் திருவடிகள் வீசும் ஒளியின் முன் வேறு காணப்படாது அதனுள் அடங்கிவிடுகின்றன. இந்தச் செய்தியை மாணிக்கவாசகர், நீராடச் சென்ற பெண்கள், "விண்மீன் ஒளிகள் கதிரவன் ஒளியால் மறைவதற்கு முன் நீராட வேண்டும்' என்பதைக் குறிக்குமிடத்தில் இடம்பெறச் செய்கிறார்.

"தோழியர்களே! பொழுது புலர்ந்துவிட்டது. கதிரவன் தோன்றிவிடப் போகின்றான்; விண்மீன்கள் மறைந்து கொண்டிருக்கின்றன'' என்று சொல்லுமிடத்தில் எப்படி மறைகின்றன என்றால், ""அண்ணாமலைப் பெருமான் அடிக்கமலத்துட் சென்று வணங்குகின்ற தேவர்களது முடிமணியின் ஒளிகள் எப்படி மறைகின்றனவோ அதுபோல் மறைகின்றன'' என்று சொல்லி, ஒவ்வொருவரும், ""பெண்ணே! (விரைவில்) இப்பூம்புனலில் பாய்ந்தாடு'' என்று சொல்லி முழுகும் காட்சியை இப்பாடல் தெளிவுபடுத்துகின்றது.

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்ப
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே! இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோ ரெம்பாவாய்!


என்பது பாட்டு. ""பெண்ணாகி ஆணாகி...'' என்று சிவபெருமான் பெருமையைப் பலவாறாகக் கூறியதும் ""கண்ணார் அமுதமுமாய் நின்றான்'' எனச் சிறப்பித்து அருளினார். அதாவது, தேவர் உண்ணும் அமுதம் வாயால் உண்ணப்படுவது; அது உடல் நலத்தையே தரும். அண்ணாமலையாகிய அமுதம் கண்ணால் பருகப்படுவது; இது உயிர் நலத்தைத் தரும் என்பது பற்றி ""கண்ணார் அமுதமுமாய்'' என்று உம்மை கொடுத்துக் கூறினார்.

"அண்ணாமலையான் அடிக்கமலம்'' என்று தொடங்கிய இப்பாடல் ""கண்ணார் அமுதத்தில்'' முடிவதைக் கண்டு நாம் மகிழ்ந்து பயன் பெறலாம்.

(மகாவித்துவான் சி. அருணைவடிவேல் முதலியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.-தினமணி )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக