புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
36 Posts - 47%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
2 Posts - 3%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
2 Posts - 3%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
1 Post - 1%
M. Priya
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
21 Posts - 5%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 30 of 37 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 33 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 8:56 pm

இல்லை உங்களை காணததின் காரணமாக இன்று தான் துவங்கினேன்
எனக்கு முன்பே தனி திரி துங்கலாம் என்று இருந்தேன்
அதை நமது இனியவரின் ஆலோசனைப்படி இன்று துவங்கினேன்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Tசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Uசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Oசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Hசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Aசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Mசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Eசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 9:35 pm

Muthumohamed wrote:இல்லை உங்களை காணததின் காரணமாக இன்று தான் துவங்கினேன்
எனக்கு முன்பே தனி திரி துங்கலாம் என்று இருந்தேன்
அதை நமது இனியவரின் ஆலோசனைப்படி இன்று துவங்கினேன்
வாழ்த்துக்கள்.தொடருங்கள் உங்கள் நல்ல ஆக்கங்களை.. மகிழ்ச்சி



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 10:17 pm

மூன்று கி.மீ., தூரத்திற்குள் தொலைந்த சுற்றுச்சூழல் : மதுரை மாணவர்கள் ஆய்வு
மதுரை: "மூன்று கி.மீ., தூரத்திற்குள் தொலைந்த சுற்றுச்சூழல், விவசாயம்'குறித்து, மதுரைக் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு சர்வதேச அளவில் சிறந்தவற்றுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

விப்ரோ நிறுவனம் நடத்திய "எர்த் என் 2012' சர்வதேசப் போட்டிக்கு, பள்ளி, கல்லூரிகளில் இருந்து 1200 ஆய்வுகள் அனுப்பப்பட்டன. சிறந்த 40 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இத்திட்டத்தை தயாரித்த உதவிப்பேராசிரியர் பாலகிருஷ்ணன், மாணவர்கள் ஆறுமுகதாஸ், ஆனந்தசீனிவாசன், நாகராமிகா, அனுஸ்ரீ கூறியதாவது: சிறப்பு படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறியியல் மாணவர்கள். நகரமயமாதலில் ஏற்படும் விளைவுகள், தண்ணீர் பற்றாக்குறை, தட்ப வெப்பநிலை மாற்றம், பல்லுயிர் பரவல் தலைப்புகளில் ஒன்றைப் பற்றி திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். ஆனால், நான்கு தலைப்புகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி, அறிக்கை தயாரித்தோம். இதற்காக மதுரை நாகமலை-துவரிமான் மூன்று கி.மீ., நெடுஞ்சாலையை ஆய்வு செய்தோம். 200 மீட்டர் அகலம், மூன்று கி.மீ., தூரத்திற்கு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன. ஆண்டுக்கு 3200 நெல்மூடைகளை இழந்துள்ளோம். அங்கிருந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான ஏழு கிணறுகளை மூடியதால், 65 ஏக்கரில் விவசாயம் நின்றது. விளைநிலங்கள் மனைகளாக மாறின. 20 ஆண்டுகளாக இருந்த 15 மரங்கள் வெட்டப்பட்டன. இதன் மூலம் பசுமையின் பரப்பும், ஆக்ஸிஜன் அளவும் குறைந்தது. நிறைய இடங்களில் நெடுஞ்சாலையுடன் கிராமத்து குறுக்குத் தெருக்கள் இணைகின்றன. சாதாரண ரோடுகளைப் போல, கிராமத்தினர், கால்நடைகள் கடப்பதால், உயிரிழப்பு ஏற்படுகிறது. மூன்று கி.மீ.,தூரத்திற்குள், சுற்றுச்சூழலில் இவ்வளவு பிரச்னைகளை தெரிய முடிந்தது. காஷ்மீர்-கன்னியாகுமரி வரை, எத்தனை ஆயிரம் கி.மீட்டரில் விளைநிலங்கள், மரங்கள் அழிந்திருக்கும். இதை விளக்குவதே நோக்கம். ஆய்வு செய்த தூரத்திற்கு, மரக்கன்றுகள் வழங்கினால், நடத் தயாராக இருக்கிறோம். மீண்டும் பசுமையை ஏற்படுத்த வேண்டும். விளைநிலங்களை மனைநிலங்களாக மாற்றக்கூடாதென, துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம், என்றனர்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 10:26 pm

போலீ்ஸ் பலியான சம்பவம்: மருத்துவ அதிகாரிக்கு நோட்டீஸ்

புதுடில்லி: டில்லியில் நடந்து வரும் போராட்டத்தின் போது பலியான போலீஸ் குறித்து , மருத்துவ அதிகாரிக்கு டில்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிவீசப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து டில்லியில் கடந்த 8 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதில் போலீஸ் சுபாஷ் தாமேதர் (45) பலியானதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் மாரடைப்பால் பலியானதாக கூறப்படுகிறது. இது குறித்து டில்லி போலீசார் டில்லி ராம் ‌ம‌னோகர் லோகியா மருத்துவமனை, மருத்துவ கண்காணிப்பாளர் டி.எஸ்.சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் வெள்ளியன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளனர்.

-தினமலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 10:27 pm

பாக். சொகுசு மாளிகையில் பதுங்க பின்லாடன் கொடுத்த ரூ. 50 ஆயிரம் லஞ்சம்

இஸ்லாமாபாத்: அமெரிக்கப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்லாடன், பாகிஸ்தானில் அபோதாபாத் கிராமத்தில் உள்ள சொகுசு பங்களாவில் குடியேற அங்குள்ள வருவாய்த்துறை அதிகாரிக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாகவும், தன்னை பாதுகாக்க சொகுசு பங்களாவினை சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைத்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் (54) கடந்த 2011-ம் ஆண்டு மே 1-ம் தேதியன்று அதிகாலை, அமெரி்க்காவின் நேவிசீல் படையினரால் , பாகிஸ்தானில் அபோதாபாத் கிராமத்தில் உள்ள சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டான். முன்னதாக சொகு பங்களாவில் குடியேற வருவாய் அதிகாரிக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுத்து, பங்களாவினை சுற்றி 14 அடுக்கு தடுப்புச்சுவர்கள், இரும்பு வேலிகளை அமைத்து பதுங்கியிருந்துள்ளதாக உருது பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 10:28 pm

வி.கே.சிங்க்கு வழங்கப்பட்ட இசட்பிளஸ் பாதுகாப்பு வாபஸ்

புதுடில்லி: முன்னாள் ராணுவ தலைமை தளபதி வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டது. முன்னாள் ‌ராணுவ தலைமை தளபதி வி.‌கே.சிங், தனது பதவி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். ராணுவத்திற்கு டாட்ரா வாகனம் வழங்கியதில் ஊழல் நடந்ததாகவும், பின்னர் தனது வயது சர்ச்சை குறித்து மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்றார். ஓய்வு பெற்ற பின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் டில்லியில் மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய ஆலோசனைக்குப்பின்னர், சிங்கிற்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 10:30 pm

தமிழக அனல் மின்நிலைய உற்பத்தி: முழுமையாக வழங்க முதல்வர் கடிதம்

சென்னை :"ஆந்திராவில், மத்திய அனல் மின்நிலைய உற்பத்தி முழுமையும், அம்மாநிலத்துக்கு வழங்குவதை போல், தமிழகத்தில் உள்ள மத்திய மின் உற்பத்தி முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் எழுதியுள்ள கடித விவரம்:தமிழகம், முன், எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் மின் பற்றாக்குறையில் தவித்து வருகிறது. மின் தேவை, தற்போது, 12 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கும் போது, பல உற்பத்தி பிரிவுகளிலும் இருந்து, 8,000 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது; பற்றாக்குறை, 4,000 மெகாவாட்டாக உள்ளது.தமிழகத்திற்கு, கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற, எங்கள் கோரிக்கைக்கு, எதிர்மறையாக, மத்திய அரசு நடந்து கொள்வது ஏமாற்றத்தை அளிக்கிறது.கடந்தாண்டு, ஜூன், 6ம் தேதி, 1,000 மெ.வா., கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, மிகக் குறைந்த அளவாக, 100 மெ.வா., மட்டுமே ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தாண்டு அக்., 23ம் தேதி ஒரு கடிதம் எழுதினேன்.

பாதக செயல்பாடு:

அக்கடிதத்தில், டில்லி அரசு திருப்பியளித்த, மத்திய மின் உற்பத்தி நிலைய மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். மின் பரிமாற்ற விஷயத்தை காட்டி, தொடர்ந்து, மத்திய அரசு பாதகமாகவே செயல்பட்டு வருகிறது.எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய மின் உற்பத்தி நிலையங்களான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், கல்பாக்கம் அணுமின் நிலையம், மற்றும் சமீபத்தில் உற்பத்தி துவக்கப்பட்ட, வல்லூர் அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும், 2,830 மெ.வா., மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.தமிழகத்திற்குள், மின் பரிமாற்ற கட்டுப்பாடுகள் இல்லை. எனவே, புதிய மின் திட்டங்களில், முழுமையான மின் உற்பத்தி துவக்கப்படும் வரை, தமிழக மக்கள் எதிர்கொள்ளும், கடுமையான மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், இடைக்கால ஏற்பாடாக, இதை வழங்க வேண்டும்.கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, தங்களுக்கு தெரியும்.

2,000 மெகாவாட்:

எனவே, கூடங்குளம் திட்டத்தில், முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் போது, அங்கிருந்து கிடைக்கும், 2,000 மெகவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். ஆந்திராவில், தேசிய அனல் மின் கழகத்தால், சிம்ஹாத்ரியில் நிறுவப்பட்டுள்ள, மத்திய மின் உற்பத்தி நிலையத்தில், உற்பத்தி செய்யப்படும், 1,000 மெகவாட் மின்சாரம் முழுமையும், அம்மாநிலத்திற்கே வழங்கப்படுகிறது.எனவே, மத்திய அரசு அதே அளவுகோலில், கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுமையையும், மின் பற்றாக்குறையில் தவித்து வரும் தமிழகத்திற்கு, வழங்கவேண்டும்.மேலும், இடைக்கால நிவாரணமாக, தமிழகத்தில் உள்ள மத்திய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 10:31 pm

திரிணமுல் அதிருப்தியாளர்களை வளைக்க காங்., அதிரடி திட்டம்

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், விரைவில் நடக்கவுள்ள, ஊராட்சி தேர்தலில், திரிணமுல் காங்கிரசை வீழ்த்த, காங்கிரஸ் கட்சியினர், அதிரடி வியூகம் வகுத்துள்ளனர். திரிணமுல் கட்சியில், சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை, அதிகாரப்பூர்வ திரிணமுல் வேட்பாளர்களுக்கு எதிராக, களமிறக்கவும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில், ஆளும் கட்சியாக உள்ள, மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ், மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, சமீபத்தில் வெளியேறியது.இதனால், இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே, மோதல் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில், ஆளும் கட்சியினரால், காங்., நிர்வாகிகள், தாக்கப்படுவது, தொடருகிறது.இந்நிலையில், மேற்கு வங்கத்தில், விரைவில் ஊராட்சி தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில், திரிணமுல் காங்கிரஸ் பலமாகவுள்ள, மாவட்டங்களில், காங்கிரஸ் சார்பில், போட்டியிடுவதற்கு ஆளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே இருந்தாலும், திரிணமுல் காங்கிரசின் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என்பதால், காங்கிரசார் மறுத்து வருகின்றனர்.இந்த பிரச்னையை சமாளிப்பதற்கும், மம்தாவுக்கு பாடம் புகட்டுவதற்கும், மேற்கு வங்க மாநில காங்., தலைவர்கள் அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மேற்கு வங்க மாநில, காங்., தலைவர், பிரதீப் பட்டாச்சார்யா கூறியதாவது: திரிணமுல் காங்கிரஸ், ஆளும் கட்சியாக உள்ளதால், அந்த கட்சி சார்பில், போட்டியிடுவதற்கு, ஒரே தொகுதியில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள், வாய்ப்பு கேட்பர். ஆனால், ஒருவருக்கு மட்டுமே, திரிணமுல் மேலிடம், வாய்ப்பு கொடுக்கும்.இதனால், சீட் கிடைக்காத பலர், அதிருப்தி அடைவர். இவர்களின் அதிருப்தியை, எங்களுக்கு சாதகமாக பயன்படுத்த, முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு போட்டியிட, ஆள் கிடைக்காத இடங்களில், திரிணமுல் அதிருப்தியாளர்களை, திரிணமுல் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, களமிறக்க முடிவு செய்துள்ளோம். திரிணமுல் தான், எங்கள் முதல் எதிரி. எங்களின் இந்த புதிய நடவடிக்கை, திரிணமுல் மேலிடத்துக்கு, கடும் நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. திரிணமுல் கட்சியினரின் கொட்டத்தை அடக்குவதற்கு, எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.இவ்வாறு, பிரதீப் பட்டாச்சார்யா கூறினார்.

மத்திய நகர்ப்புற மேம்பாட்டு இணை அமைச்சரும், மேற்கு வங்க காங்கிரஸ் பிரமுகருமான, தீபா தாஸ் முன்ஷி கூறுகையில்,""திரிணமுல் காங்கிரஸ் அதிருப்தியாளர்கள், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பாவிட்டாலும், அவர்களுக்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்,''என்றார்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 10:33 pm

நாம ஏன் தோற்றோம்? 10 மாதங்களுக்குப்பிறகு காரணத்தை கண்டுபிடித்தார் திக்விஜய்

லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலின் போது வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததால் தான் காங்கிரஸ் தோல்வியடைந்ததாகவும், அதனால் வரும் 2014ம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்காக, ஓராண்டிற்கு முன்பாகவே வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலம் லக்னோவில் நடந்த கட்சி கூட்டம் ஒன்றில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உ.பி.,யில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிரான மனநிலையை காங்கிரஸ் ஏற்படுத்தி வைத்திருந்ததாகவும், ஆனால் ஆட்சியமைப்பது குறித்து உறுதிமொழி அளிக்காததும், வேட்பாளர்களை தாமதமாக அறிவித்ததுமே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் லோக்சபா தேர்தலில் அவ்வாறு இல்லாமல், ஓராண்டிற்கு முன்பாகவே வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிடப்படும் என்றும், யார் யாருக்கு சீட் வழங்குவது என்பது குறித்த பரிசீலனை தற்போது நடந்து வருவதாகவும், அது முடிந்த பின் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் திக்விஜய் சிங் தெரிவித்தார். கடந்த 2004ம் ஆண்டு தேர்தலுக்குப்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு உ.பி.,யில் ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்த அவர், கூடுதலாக 10 முதல் 12 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் பட்சத்தில் உ.பி.,யில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

திக்விஜய் சிங் பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட கட்சித்தொண்டர் ஒருவர், சிலிண்டர்கள் கட்டுப்பாடு கட்சியின் இமேஜை கடுமையாக பாதிக்கும் என கருத்து தெரிவித்தார். அதை ஆமோதிப்பதாக கூறிய திக்விஜய் சிங், சிலிண்டர்களின் எண்ணிக்கை 9 ஆக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறினார். 2ஜி பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த அவர், சி.ஏ.ஜி., உள்ளிட்ட நாட்டிலுள்ள அரசியலமைப்பு குழுக்களை தான் மதிப்பதாகவும், சில சமயங்களில் அந்த அமைப்புகளின் அறிக்கை வெளியாகி விடும் போது அதன் மீது சந்தேகம் ஏற்படுகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.



-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 10:33 pm

தாக்கப்பட்டாரா; மயங்கி விழுந்து இறந்தாரா? போலீஸ் கான்ஸ்டபிள் மரணத்தில் சர்ச்சை

புதுடில்லி: மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு, டில்லியில் நடந்த போராட்டத்தில், போலீஸ்காரர் ஒருவர் இறந்தது தொடர்பாக தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.
டில்லியில் ஓடும் பஸ்சில் கும்பல் ஒன்றால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட மருத்துவ மாணவி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக டில்லியில் மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியா கேட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் சுபாஷ் சந்த் தோமர் என்ற போலீஸ்காரர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, போராட்டக்காரர்கள் 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த விவகாரத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. போராட்டத்தின் போது அப்பகுதியில் இருந்த யோகேந்திரா என்ற மாணவர், போராட்டக்காரர்கள் தாக்கியதில் தோமர் இறக்கவில்லை என்றும், அவர் நடந்து செல்லும் போது மயங்கி விழுந்து காயமடைந்தார் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோமரை தான் போய் பார்த்ததாகவும், அவருக்கு உடலில் காயங்கள் ஏதுமில்லை என்றும், ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தனக்கு ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் தாக்கியதாலேயே தோமர் இறந்ததாக டில்லி போலீசார் கூறி வரும் நிலையில், யோகேந்திராவின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தோமர் மயங்கி விழுந்ததை டி.வி., நிறுவனம் ஒன்று எடுத்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், "யோகேந்திரா ஒரு ஜெர்னலிசம் மாணவர். தோமர் மரணத்தில் ஒரு நேரடி சாட்சி. அவரின் கருத்து போலீசார் கூறியதற்கு எதிராக உள்ளது. அப்படியென்றால் போலீசார் பொய் சொல்கிறார்களா" என கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா கூறுகையில், போலீசார் உண்மையை மூடி மறைத்து அதை அரசியலாக்கப்பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் டில்லி போலீசார் சதி செய்வதாகவும், கமிஷனர் நீரஜ் குமார் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் எனவும் சிசோடியா கோரிக்கை விடுத்தார். இது ஒருபுறமிருக்க, தோமரின் வயிற்றுப்பகுதி, மார்பு மற்றும் கழுத்துப்பகுதியில் காயங்கள் இருப்பதாகவும், போஸ்ட் மார்டம் அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

-தினமலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 30 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 30 of 37 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 33 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக