புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட சுட செய்திகள்...அச்சலா
Page 26 of 37 •
Page 26 of 37 • 1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 37
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
-மாலைமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் 5 பேர் கடத்தல்
நைஜீரியாவின் எண்ணெய்வளம் மிக்க நைஜர் டெல்டா பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் உள்ளூர் கிளர்ச்சி இயக்கம், அவ்வப்போது வெளிநாட்டு பணியாளர்களை கடத்தி பணம் பறித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி. புருசெல்ஸ் என்ற எண்ணெய்க் கப்பல் நைஜர் டெல்டா கடற்கரையில் இருந்து 40 மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த திங்கட்கிழமை அந்த கப்பலை சுற்றி வளைத்த சிலர், துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பின்னர் கப்பலில் ஏறி, அங்கிருந்த 5 இந்திய மாலுமிகளை கடத்தினர். அங்குள்ள சில பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மீதமுள்ள ஊழியர்களுடன் அந்த கப்பல் பாதுகாப்பாக லாகோஸ் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நாளில் கட்டுமான பணிக்காக வந்திருந்த தென்கொரிய பணியாளர்கள் 4 பேரை கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
பொதுவாக, இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தை கொடுத்து பணியாளர்களை மீட்டுள்ளன வெளிநாட்டு நிறுவனங்கள். அதேபோல் இந்த முறையும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பார்கள் என தெரிகிறது.
மாலை மலர்
நைஜீரியாவின் எண்ணெய்வளம் மிக்க நைஜர் டெல்டா பகுதியில் ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் உள்ளூர் கிளர்ச்சி இயக்கம், அவ்வப்போது வெளிநாட்டு பணியாளர்களை கடத்தி பணம் பறித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி. புருசெல்ஸ் என்ற எண்ணெய்க் கப்பல் நைஜர் டெல்டா கடற்கரையில் இருந்து 40 மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த திங்கட்கிழமை அந்த கப்பலை சுற்றி வளைத்த சிலர், துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பின்னர் கப்பலில் ஏறி, அங்கிருந்த 5 இந்திய மாலுமிகளை கடத்தினர். அங்குள்ள சில பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மீதமுள்ள ஊழியர்களுடன் அந்த கப்பல் பாதுகாப்பாக லாகோஸ் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நாளில் கட்டுமான பணிக்காக வந்திருந்த தென்கொரிய பணியாளர்கள் 4 பேரை கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
பொதுவாக, இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், கடத்தல்காரர்கள் கேட்ட பணத்தை கொடுத்து பணியாளர்களை மீட்டுள்ளன வெளிநாட்டு நிறுவனங்கள். அதேபோல் இந்த முறையும் அவர்கள் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பார்கள் என தெரிகிறது.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூமியைப் போன்று மனிதன் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
பூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன. இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த கோள்களை அடைய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மாலை மலர்
பூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன. இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த கோள்களை அடைய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மக்களவையில் நாராயணசாமி தாக்கல் செய்த இடஒதுக்கீட்டு மசோதாவை கிழித்து எறிந்த சமாஜ்வாடி எம்.பி.க்கள்
பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்ற மேல்சபையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதையடுத்து இன்று மக்களவையில் அந்த மசோதாவை மந்திரி நாராயணசாமி தாக்கல் செய்து பேசினார்.
அப்போது அவரிடம் இருந்த மசோதா நகலை சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் பறித்து கிழித்து எறிந்தனர். இதனால் நாராயணசாமி அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து மசோதாவிற்கு எதிராக சமாஜ்வாடி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை முற்றிலும் முடங்கியது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாலை மலர்
பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்ற மேல்சபையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதையடுத்து இன்று மக்களவையில் அந்த மசோதாவை மந்திரி நாராயணசாமி தாக்கல் செய்து பேசினார்.
அப்போது அவரிடம் இருந்த மசோதா நகலை சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் பறித்து கிழித்து எறிந்தனர். இதனால் நாராயணசாமி அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து மசோதாவிற்கு எதிராக சமாஜ்வாடி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை முற்றிலும் முடங்கியது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஷெனாய் நகரில் இன்னும் 2 வாரத்தில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி தொடக்கம்
சென்னையில் மெட்ரோ ரெயில் பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக வேகமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் அசோக் பில்லர்வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஷெனாய் நகர், அண்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் 2 வாரத்தில் ஷெனாய்நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, சுரங்கம் தோண்டும் எந்திரத்தை பொருத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்பணி இன்னும் 2 வாரத்தில் முடிந்து விடும்.
சென்னையில் மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டுவதற்கு மொத்தம் 11 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஷெனாய் நகர், அண்ணா நகர் பகுதியில் சுரங்கம் தோண்ட 2 எந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஷெனாய் நகர் முதல் திருமங்கலம் வரை இந்த எந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டப்படும்.
அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மாலை மலர்
சென்னையில் மெட்ரோ ரெயில் பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக வேகமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் அசோக் பில்லர்வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஷெனாய் நகர், அண்ணா நகர், உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை வழியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் 2 வாரத்தில் ஷெனாய்நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, சுரங்கம் தோண்டும் எந்திரத்தை பொருத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்பணி இன்னும் 2 வாரத்தில் முடிந்து விடும்.
சென்னையில் மெட்ரோ ரெயில் சுரங்கம் தோண்டுவதற்கு மொத்தம் 11 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஷெனாய் நகர், அண்ணா நகர் பகுதியில் சுரங்கம் தோண்ட 2 எந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஷெனாய் நகர் முதல் திருமங்கலம் வரை இந்த எந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டப்படும்.
அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நாடார் சமுதாயம் பற்றிய தவறான தகவல்: அடுத்த ஆண்டு பாடப்புத்தகத்தில் இடம் பெறாது- மத்திய மந்திரி உறுதி
நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து அடுத்த ஆண்டு முதல் நீக்கப்படும் என்று நாடார்கள் அமைப்புகளிடம் மத்திய மந்திரி பல்லம் ராஜு உறுதி அளித்தார். சி.பி.எஸ்.இ. 9-வது வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பகுதியை நீக்கும்படி அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற தி.மு.க உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பல்லம் ராஜுவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து வலியுறுத்தினார். சர்ச்சைக்குரிய இந்த பாடப்பகுதியை நீக்கக் கோரி அனைத்து நாடார் அமைப்புகளின் போராட்டக்குழுவும் பெரும் போராட்டம் அறிவித்திருந்தது.
சர்ச்சைக்குரிய இந்த பாடப்பகுதியை நீக்குவதாக மத்திய மந்திரி பல்லம் ராஜூ கூறியதை தொடர்ந்து போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த பாடப்பகுதி நீக்கப்பட்டதாப என்பதை கண்டறியவும் மத்திய மந்திரி மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளவும் அனைத்து நாடார் அமைப்புகளின் போராட்டக்குழு உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்றனர். அவர்கள் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி. தலைமையில் நேற்று மந்திரி பல்லம் ராஜுவை சந்தித்தனர். அவர்கள், நாடார் சமுதாயம் பற்றிய உண்மைக்கு புறம்பான தகவலால் ஒட்டுமொத்த நாடார் சமுதாயத்தின் உணர்வுகளும் புண்பட்டு இருப்பதாகவும், இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது மந்திரி பல்லம் ராஜு கூறியதாவது:-
இந்த பிரச்சினை பற்றி நான் முழுமையாக அறிவேன். பல்வேறு தரப்பில் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த பிரச்சினை குறித்து ஆராய கல்விக்குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளேன். இந்த குழுவின் பரிந்துரையின்படி இந்த பாடத்திட்டத்தை நீக்க நடவடிக்கை எடுப்பேன். அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் இந்த பகுதி கண்டிப்பாக இடம் பெறாது. இதுதொடர்பான போராட்டங்களை தங்கள் சமுதாயத்தின் சார்பில் நடத்த வேண்டாம்.
இவ்வாறு மந்திரி பல்லம் ராஜூ தெரிவித்தார்.
மந்திரியை சந்தித்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன், நெல்லை நாடார் தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தலைவர் வி.டி.பத்ம நாபன், செயலாளர் ஜி.டி. முருகேசன், தமிழ்நாடு சத் திரிய நாடார் சமுதாய இயக்க கூடுதல் பொதுச்செயலாளர் எம்.மாரித்தங்கம், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.தங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
மாலை மலர்
நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல் இடம் பெற்றுள்ள பாடப்பகுதி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து அடுத்த ஆண்டு முதல் நீக்கப்படும் என்று நாடார்கள் அமைப்புகளிடம் மத்திய மந்திரி பல்லம் ராஜு உறுதி அளித்தார். சி.பி.எஸ்.இ. 9-வது வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பகுதியை நீக்கும்படி அனைத்து கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற தி.மு.க உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பல்லம் ராஜுவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து வலியுறுத்தினார். சர்ச்சைக்குரிய இந்த பாடப்பகுதியை நீக்கக் கோரி அனைத்து நாடார் அமைப்புகளின் போராட்டக்குழுவும் பெரும் போராட்டம் அறிவித்திருந்தது.
சர்ச்சைக்குரிய இந்த பாடப்பகுதியை நீக்குவதாக மத்திய மந்திரி பல்லம் ராஜூ கூறியதை தொடர்ந்து போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த பாடப்பகுதி நீக்கப்பட்டதாப என்பதை கண்டறியவும் மத்திய மந்திரி மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளவும் அனைத்து நாடார் அமைப்புகளின் போராட்டக்குழு உறுப்பினர்கள் டெல்லிக்கு சென்றனர். அவர்கள் எஸ்.ஆர்.ஜெயதுரை எம்.பி. தலைமையில் நேற்று மந்திரி பல்லம் ராஜுவை சந்தித்தனர். அவர்கள், நாடார் சமுதாயம் பற்றிய உண்மைக்கு புறம்பான தகவலால் ஒட்டுமொத்த நாடார் சமுதாயத்தின் உணர்வுகளும் புண்பட்டு இருப்பதாகவும், இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போது மந்திரி பல்லம் ராஜு கூறியதாவது:-
இந்த பிரச்சினை பற்றி நான் முழுமையாக அறிவேன். பல்வேறு தரப்பில் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த பிரச்சினை குறித்து ஆராய கல்விக்குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளேன். இந்த குழுவின் பரிந்துரையின்படி இந்த பாடத்திட்டத்தை நீக்க நடவடிக்கை எடுப்பேன். அடுத்த ஆண்டு பாடத்திட்டத்தில் இந்த பகுதி கண்டிப்பாக இடம் பெறாது. இதுதொடர்பான போராட்டங்களை தங்கள் சமுதாயத்தின் சார்பில் நடத்த வேண்டாம்.
இவ்வாறு மந்திரி பல்லம் ராஜூ தெரிவித்தார்.
மந்திரியை சந்தித்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன், நெல்லை நாடார் தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தலைவர் வி.டி.பத்ம நாபன், செயலாளர் ஜி.டி. முருகேசன், தமிழ்நாடு சத் திரிய நாடார் சமுதாய இயக்க கூடுதல் பொதுச்செயலாளர் எம்.மாரித்தங்கம், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.தங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
படவாய்ப்பு கேட்ட நடிகை சார்மிக்கு 'செக்ஸ் டார்ச்சர்': தெலுங்கு இயக்குனரை கன்னத்தில் அறைந்தார்
‘காதல் அழிவதில்லை‘ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. ‘ஆஹா எத்தனை அழகு’, ‘லாடம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
நாகார்ஜூனா, பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர், சித்தார்த் ரவி தேஜா போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடித்துள்ளார்.
சார்மிக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளன. எனவே இயக்குனர்களை அணுகி வாய்ப்பு கேட்டு வருகிறார். தெலுங்கு இயக்குனர் ஹரீஷ் சங்கர் தனது படத்தில் சார்மியை நடிக்க வைப்பதாக கூறினார். தனது அலுவலகத்துக்கு வந்து கதை கேட்கும்படியும் அழைத்தார். இதை நம்பி சார்மி அவரது அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு தனி அறையில் வைத்து சார்மியை இயக்குனர் ‘செக்ஸ் டார்ச்சர்’ செய்ததாக கூறப்படுகிறது. ஆசைக்கு இணங்கினால் வாய்ப்பு தருவேன் என்று கூறினாராம். இதை எதிர்பார்க்காத சார்மி அதிர்ச்சி அடைந்தார். தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இயக்குனரை ஆவேசமாக தாக்கினார். கன்னத்தில் அடித்து உதைத்தார். பின்னர் அங்கிருந்து கோபமாக வெளியேறினார். இந்த விஷயம் தெலுங்கு பட உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாலை மலர்
‘காதல் அழிவதில்லை‘ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் சார்மி. ‘ஆஹா எத்தனை அழகு’, ‘லாடம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
நாகார்ஜூனா, பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர், சித்தார்த் ரவி தேஜா போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடித்துள்ளார்.
சார்மிக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்துள்ளன. எனவே இயக்குனர்களை அணுகி வாய்ப்பு கேட்டு வருகிறார். தெலுங்கு இயக்குனர் ஹரீஷ் சங்கர் தனது படத்தில் சார்மியை நடிக்க வைப்பதாக கூறினார். தனது அலுவலகத்துக்கு வந்து கதை கேட்கும்படியும் அழைத்தார். இதை நம்பி சார்மி அவரது அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு தனி அறையில் வைத்து சார்மியை இயக்குனர் ‘செக்ஸ் டார்ச்சர்’ செய்ததாக கூறப்படுகிறது. ஆசைக்கு இணங்கினால் வாய்ப்பு தருவேன் என்று கூறினாராம். இதை எதிர்பார்க்காத சார்மி அதிர்ச்சி அடைந்தார். தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இயக்குனரை ஆவேசமாக தாக்கினார். கன்னத்தில் அடித்து உதைத்தார். பின்னர் அங்கிருந்து கோபமாக வெளியேறினார். இந்த விஷயம் தெலுங்கு பட உலகில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
திருப்பதி கோவிலுக்கு தினமும் 1 லட்சம் பேர் வருவதால் 2 ஆயிரம் டன் குப்பை தேக்கம்: அகற்ற முடியாமல் ஊழியர்கள் திணறல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். இதனால் திருப்பதி கோவிலைச் சுற்றி 2 ஆயிரம் டன் குப்பை தேங்கி உள்ளது. அதனை அகற்ற முடியாமல் தேவஸ்தான துப்புரவு ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.
இதையடுத்து இந்த குப்பைகளை அகற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை தேவஸ்தானம் நாடி உள்ளது. திருமலை பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கூடுதல் லாரிகள் வரவழைக்கப்பட்டு குப்பை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறும்போது, திருப்பதி கோவிலில் குப்பை ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் கோவிலின் சுற்றுப்புற சூழல் மாசு அடைந்துள்ளது. இதை தடுக்க ஆந்திர அரசின் உதவியை நாடி உள்ளோம். குப்பையை அகற்ற கூடுதல் லாரிகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மாலை மலர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். இதனால் திருப்பதி கோவிலைச் சுற்றி 2 ஆயிரம் டன் குப்பை தேங்கி உள்ளது. அதனை அகற்ற முடியாமல் தேவஸ்தான துப்புரவு ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.
இதையடுத்து இந்த குப்பைகளை அகற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை தேவஸ்தானம் நாடி உள்ளது. திருமலை பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கூடுதல் லாரிகள் வரவழைக்கப்பட்டு குப்பை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறும்போது, திருப்பதி கோவிலில் குப்பை ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் கோவிலின் சுற்றுப்புற சூழல் மாசு அடைந்துள்ளது. இதை தடுக்க ஆந்திர அரசின் உதவியை நாடி உள்ளோம். குப்பையை அகற்ற கூடுதல் லாரிகள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மாலை மலர்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
தவிர்க்க முடியாத சூழலில் ஈரானுடன் போர்: அமெரிக்கா ...
அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் தீர்மானித்திருப்பது, அந்நாட்டுக்கு ஆபத்தானதாக அது இருக்கும். அதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடைசித் தெரிவாகத்தான் போர் நடவடிக்கை இருக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இதுபற்றி,அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் லியோன் பானெட்டா கூறியதாவது: ஈரான் விஷயமாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குறிக்கோளுடன் கூடிய ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை இரு நாடுகளுமே விரும்பவில்லை. அமெரிக்கா ஏற்கெனவே தனது நிலையை தெளிவுபடுத்தி விட்டது. அதேபோல, இஸ்ரேலும் தனது நிலைப்பாட்டை விளக்கிவிட்டது. தற்போதுள்ள கேள்வி என்னவெனில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட வேண்டாமென்று ஈரானை இரு நாடுகளும் எப்படி வலியுறுத்துவது என்பது தான்.
இந்த விஷயத்தில், சர்வதேச சமுதாயமும் ஒன்று சேர்ந்துள்ளன. ஈரான் தனது அணுசக்தி திறனை வளர்க்கும் முயற்சியை தொடருமானால், அதற்கு தண்டனையாக பொருளாதார நெருக்கடி, தூதரக ரீதியிலான, ராஜரீதியிலான நெருக்கடிகளை அளிக்க சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. ஈரான் விஷயத்தை கையாளும்போது, அந்நாட்டின் மீது போர் தொடுப்பதை கடைசி முயற்சியாகத் தான் வைத்துக்கொள்ள வேண்டும்; தொடக்கத்திலேயே சண்டை கூடாது என்று இஸ்ரேல் பிரதமர் கூட கூறியுள்ளார்.
எனவே, ஈரான் விஷயத்தில் அனைத்து வகையான வாய்ப்புகளும் அந்நாட்டுக்கு அளிக்கப்படும். எந்தவொரு முயற்சியும் கைவிடப்படமாட்டாது. இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வு ஏற்படும் என்றே நம்புகிறோம். அதே சமயத்தில்,அணுஆயுதங்கள் தயாரிப்பதை ஈரான் நிறுத்திக்கொள்ளவில்லை எனில், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என்பதையும் தெரிவிக்கிறேன் என்றார், லியோன்.................
தினமணி
அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் தீர்மானித்திருப்பது, அந்நாட்டுக்கு ஆபத்தானதாக அது இருக்கும். அதை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடைசித் தெரிவாகத்தான் போர் நடவடிக்கை இருக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இதுபற்றி,அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் லியோன் பானெட்டா கூறியதாவது: ஈரான் விஷயமாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குறிக்கோளுடன் கூடிய ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை இரு நாடுகளுமே விரும்பவில்லை. அமெரிக்கா ஏற்கெனவே தனது நிலையை தெளிவுபடுத்தி விட்டது. அதேபோல, இஸ்ரேலும் தனது நிலைப்பாட்டை விளக்கிவிட்டது. தற்போதுள்ள கேள்வி என்னவெனில், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட வேண்டாமென்று ஈரானை இரு நாடுகளும் எப்படி வலியுறுத்துவது என்பது தான்.
இந்த விஷயத்தில், சர்வதேச சமுதாயமும் ஒன்று சேர்ந்துள்ளன. ஈரான் தனது அணுசக்தி திறனை வளர்க்கும் முயற்சியை தொடருமானால், அதற்கு தண்டனையாக பொருளாதார நெருக்கடி, தூதரக ரீதியிலான, ராஜரீதியிலான நெருக்கடிகளை அளிக்க சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. ஈரான் விஷயத்தை கையாளும்போது, அந்நாட்டின் மீது போர் தொடுப்பதை கடைசி முயற்சியாகத் தான் வைத்துக்கொள்ள வேண்டும்; தொடக்கத்திலேயே சண்டை கூடாது என்று இஸ்ரேல் பிரதமர் கூட கூறியுள்ளார்.
எனவே, ஈரான் விஷயத்தில் அனைத்து வகையான வாய்ப்புகளும் அந்நாட்டுக்கு அளிக்கப்படும். எந்தவொரு முயற்சியும் கைவிடப்படமாட்டாது. இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வு ஏற்படும் என்றே நம்புகிறோம். அதே சமயத்தில்,அணுஆயுதங்கள் தயாரிப்பதை ஈரான் நிறுத்திக்கொள்ளவில்லை எனில், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என்பதையும் தெரிவிக்கிறேன் என்றார், லியோன்.................
தினமணி
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மிஸ் யூனிவர்ஸாக அமெரிக்க அழகி ஒலிவியா கல்போ தேர்வு.........
2012ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை அமெரிக்காவின் ஒலிவியா கல்போ தட்டிச் சென்றார்.
லாஸ் வேகாஸில் நேற்று இரவு நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் பட்டப் போட்டியில், அமெரிக்காவின் ஒலிவியா மிஸ் யூனிவர்ஸுக்கான கிரீடத்தைச் சூட்டிக் கொண்டார். அடுத்ததாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜனைன் டகோனோன் இரண்டாம் இடம்பிடித்தார். வெனிசுலாவின் இர்னி எஸ்ஸெர் 3வது இடத்தைப் பிடித்தார்.
இந்திய அழகி ஷில்பா சிங் 16வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
2011ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற லெய்லா லோப்ஸ், ஒலிவியாவுக்கு யூனிவர்ஸ் கிரீடத்தை சூட்டி மகிழ்ந்தார்.
தினமணி
- Sponsored content
Page 26 of 37 • 1 ... 14 ... 25, 26, 27 ... 31 ... 37
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 37
|
|