புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
25 Posts - 40%
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
18 Posts - 29%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
1 Post - 2%
Barushree
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
1 Post - 2%
M. Priya
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
154 Posts - 42%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
7 Posts - 2%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 19 of 37 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:32 pm

2 ரன்களுக்கு சச்சின் அவுட்

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 2 ரன்களுக்கு ஆன்டர்சன் பந்தில் போல்டாகி மீண்டும் ஏமாற்றம் அளித்தார். இந்த தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக விளையாட வில்லை. இதையடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார் என பி.சி.சி.ஐ., தெரிவித்தது. இந்நிலையில், இன்று மீண்டும் வெறும் 2 ரன்களுக்கு அவுட்டாகி விமர்சகர்களின் கருத்துக்கு தீனியளித்துள்ளார்.
-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:33 pm

ஸ்பெக்ட்ரம் 2ம் கட்ட ஏலத்தில் ரூ.20 ஆயிரம் கோடி எதிர்பார்ப்பு

புதுடில்லி :"இரண்டாம் கட்டமாக நடைபெறும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் , 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்' என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, சமீபத்தில் நடந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு, 9,400 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. டில்லி, மும்பை, கர்நாடகா, ராஜஸ்தான், ஆகிய மண்டலங்களுக்கான, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான அடிப்படை விலை, அதிகமாக இருந்தது. இதை காரணம் காட்டி, ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.ஏலம் கோரப்படாத, அனைத்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும், புதிதாக அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, நிதியாண்டின் இறுதிக்குக்குள், மறு ஏலம் விடப்படும் என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏலம் கோரப்படாத டில்லி, ராஜஸ்தான், மும்பை, கர்நாடக ஆகிய மண்டலங்களுக்கான, அடிப்படை விலையை, 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

டில்லியில் நடைபெறும், தொலை தொடர்பு கருத்தரங்கில் பங்கேற்ற, தொலை தொடர்புத் துறையின் செயலர் சந்திரசேகர், நிருபர்களிடம் கூறியதாவது:விடுபட்ட, ஏலம் கோரப்படாத மண்டலங்களுக்கான அடிப்படை விலையில், 30 சதவீதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ஏலம் நடத்தி முடிக்கப்படும். மீண்டும் நடக்கும், இரண்டாம் கட்ட ஏலத்தின் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே நடந்த ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் தான், இரண்டாவது ஏலத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

கடந்த முறை நடந்த ஏலத்தில், டில்லி மண்டலத்திற்கு, 693 கோடி ரூபாயும்; மும்பைக்கு, 678 கோடி ரூபாயும்; கர்நாடகாவுக்கு, 330 கோடி ரூபாயும்; ராஜஸ்தானுக்கு, 67 கோடியும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டணத்தில் இருந்து, 30 சதவீதம் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

-தினமலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:34 pm

கிறிஸ்துமஸ்சுக்கு விட்டு விடுங்களேன்., பிளீஸ் ., கேரளாவில் வாடும் இத்தாலி வீரர்கள் மனு பதிவு

புதுடில்லி: வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்கென எங்களை இத்தாலிக்கு அனுப்பி விடுங்களேன் என கேரளாவில் வாடும் இத்தாலிய படைவீரர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அபிடவிட்டில் கூறியுள்ளனர்.
கடந்த பிப்., மாதம் 19 ம்தேதி கேரள கடலோர பகுதியில் சரக்கு கப்பலில் வந்த இத்தாலிய படை வீரர்கள் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 மீனவர்களை சுட்டு கொன்றனர். மீனவர்கள் கடற்கொள்ளையர் போல இருந்தனர் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய படையினர் லத்தோர் மாசிமிலியானோ, சல்வோடர் கிரோன் கைது செய்யப்பட்டு பின்னர் பல மாதங்களுக்கு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் ஜாமின் நிபந்தனைகளை நீக்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுவில்; வரவிருக்கும் கிறிஸ்துமஸ் விழா எங்களது சொந்த ஊரில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கென 2 வாரம் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது. இந்த சிறப்பான நிகழ்வில் நாங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய சட்டம் குறித்து வியப்பு :

இது தொடர்பாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு அந்நாடு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இதில் கோர்ட்டுக்கு வெளியே மீனவர்கள் குடும்பத்தினருடன் பேசி தீர்க்கப்பட்டு , முழு அளவில் விசாரணை முடிந்த பின்னரும் இன்னும் அவர்களை விடுவிப்பதில் காலம் தாமதிப்பது ஏன்? இது என்ன சட்ட நடைமுறை என்று வியப்பு தெரிவித்துள்ளது.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:36 pm

வாக்காளர் அடையாள அட்டை பெற அதிகாரிகளை கண்டறிய புது வசதி

தமிழகம் முழுவதும் உள்ள, ஓட்டு சாவடி மைய அதிகாரிகளுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டு, தொகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டு சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக, இந்த மையங்களுக்கான தற்காலிக அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன், வாக்காளர் பட்டியல் சம்பந்தமான பணி என்றால், அந்தந்த தொகுதி தேர்தல் பிரிவு அலுவலகங்களை நாடும் நிலைமை உள்ளது. சில தொகுதிகளில், தாசில்தார் அலுவலகத்தை அடைய, பல கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், சிரமமின்றி, வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெற வசதியாக, நிரந்த ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை நியமிக்க, இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.

அரசியல் சார்பற்றோர், அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள், பொது துறை நிறுவன ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுநல சங்கத்தினர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தற்போது, பல தொகுதிகளில், நிரந்தர ஓட்டு சாவடி மைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். சில தொகுதிகளில் அவர்களை நியமிக்கும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. ஓட்டுசாவடி மைய அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையத்துடன் நேரிடையான தொடர்பு ஏற்படுவதோடு, பொதுமக்களும் அலைய வேண்டியதில்லை. இந்நிலையில், ஓட்டு சாவடி மைய அதிகாரிகளை, பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க, தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த அடையாள அட்டையில், புகைப்படம், தொகுதியின் பெயர், நபரின் பெயர், பகுதி எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகளை தயார் செய்யும் பணி, விரைவாக நடந்து வருகிறது.

- நமது நிருபர் --தினமலர்







சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:42 pm

அரசியலுக்கு வருவதாக பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன்: ரஜினி

சென்னை:""அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது,'' என நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:கடந்த, 1996ம் ஆண்டு, சட்டசபை பொதுத்தேர்தலின்போது, சில கருத்துக்களை நான் தெரிவித்தேன். அது தீயாக பற்றிக் கொண்டு, ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. தமிழகம் மற்றும் தேசிய தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால், நான் தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டேன். அதன்பின், நான் அரசியலுக்கு வரவில்லை.எனது படம் ஒன்றை குறித்து, அரசியல் தலைவர் ஒருவர் விமர்சித்ததால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது.

பதில் சொல்லாமல் இருந்தால், என்னை கோழை என்று நினைத்து விடுவார்கள். நான் என்றும் கோழையாக இருக்க விரும்பவில்லை. அதனால், எதிர்கருத்தை பதிவு செய்தேன்.இதன் பின், எந்த அரசியல் நடவடிக்கைகளிலும், நான் பங்கேற்கவில்லை. காமராஜர் போன்ற ஒரு தலைவர் தோற்கடிக்கப்பட்டார் என்றால், அதற்காக அவர், நேர்மையற்றவர் என சொல்ல முடியாது. அவருக்கு நேரம் கூடிவரவில்லை. அதனால், தோற்கடிக்கப்பட்டார்.

அரசியலை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அரசியலுக்கு வருவேன் என பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் தயாராக இல்லை. அரசியல் என்பது பெரிய கடல்; அது குறித்து, இப்போது என்னால், எதுவும் கூற முடியாது.பொதுவாக, அரசியல் கட்சி நடத்துபவர்கள் யாரும் நிம்மதியாக இல்லை. அரசியல் கட்சி தலைவர்களை வாழ வைப்பதும், வீழ்த்துவதும் அவர்களது தொண்டர்கள்தான். எனது ரசிகர்கள் என்னை வாழவைத்துக் கொண்டு உள்ளார்கள்.

என்னைப் பொறுத்தவரை, எனது ரசிகர்கள் நிம்மதியாக வாழ வேண்டும்; அவர்களது வீட்டை, அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்தான், மற்றவையெல்லாம்.நான் எல்லா கட்சிக்கும் பொதுவானவன். எனது பிறந்த நாளுக்கு செல்ல வேண்டுமென, இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைமையிடம் அனுமதி கேட்டிருந்தாலும், அனுமதித்திருப்பார்கள்.


கோபாலபுரத்திற்கும், போயஸ்கார்டனுக்கும் நான் பொதுவானவன்.நாட்டின் தலையெழுத்து என்று ஒன்று உள்ளது. தெய்வசக்திதான் முக்கியமான முடிவுகளை நம் வாழ்க்கையில் நிர்ணயிக்கிறது.இதற்கு மேல், நான் அரசியல் பேச விரும்பவில்லை. எனது ரசிகர்கள், நலமுடன் இருக்கவே, நான் விரும்புகிறேன். நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, எனக்காக பிரார்த்தனை செய்த உள்ளங்கள்தான், என் மறுவாழ்வுக்கு காரணம். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

"மது, சிகரெட்டை விட்டு விடுங்கள்':மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை.

கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள் என ரஜினி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.


தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:45 pm

தொலைந்த தூக்கம்... வேட்டையாடிய கொசுக்கள்... *முதல்வர் விழாவில் தவித்த ஆசிரியைகள்

சென்னையில், 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமனம் வழங்கப்பட்டது சாதனையாக இருந்தாலும், அதை வாங்க ஆசிரியர்கள், கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கு, இம்மாதம் 9, 10, 11ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே, 650 பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு, சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில், பெரிய தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு, சிறிது நேர ஓய்வு கூட அளிக்கப்படவில்லை. உடனடியாக, குளித்து தயாராக அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, இரவு இரண்டு மணி முதலே, அவர்கள் நந்தனம் விழா அரங்கிற்கு, பஸ்கள் மூலம் அழைத்துச் வரப்பட்டு, அரங்கில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைக்கப்பட்டனர். 50 பேருக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் மூலமே, உணவு வழங்கப்பட்டது. எங்கு செல்வதாக இருந்தாலும், அவர்கள் அனுமதியின்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. தேர்வுசெய்யப்பட்டவர்களில், பெண்களே அதிகம் இருந்த நிலையில், அவர்களுக்கு @பாதுமான கழிப்பிட வசதிகள் இல்லை.
ஆங்காங்@க இருந்த, மொபைல் கழிப்பிடங்களில், தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு மொபைல் கழிப்பிடத்திற்கும், 20க்கும் மேற்பட்டவர்கள், வரிசையில் நின்றே, சென்று வந்தனர்.

முதல் நாள் இரவு முதலே அவர்கள், அங்கு அமர வைக்கப்பட்டதால், பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். கொ”க்கடியால், பெரிதும் பாதிக்கப்பட்டதாக பயனாளிகள்
புலம்பினர்.
ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், 36 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதில், நான்கு மாற்றுத் திறனாளிகளும் அடக்கம். மற்றவர்களுக்கு, அவர்கள் சார்ந்த மாவட்ட அமைச்சர்கள் வழங்கினர்.

அரை மணி நேரத்தில்,20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, நியமன ஆணைகளை அவர்கள் வழங்கினர்.நிகழ்ச்சி முடிந்ததும், அனைவருக்கும் பணி குறித்த, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அதன் பின், வந்தது போல், ஒவ்வொரு பஸ்சிலும் ஏற்றி, அவர்கள் அனுப்பப்படுவர் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும், நியமன ஆணை பெற்றவர்கள் செல்ல விரும்பினால், தங்கள் உறவினர்களுடன் செல்லலாம் என அறிவிக்கப்பட்டதால், அனைவரும் நிம்மதியடைந்து சென்றனர்.


---தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Fri Dec 14, 2012 11:46 pm

ரயிலில் அய்யப்ப பக்தர்கள் தீபாராதனை செய்ய தடை

சென்னை:ரயிலில் பயணிக்கும் அய்யப்ப பக்தர்கள், இருமுடிக்கு, தீபாராதனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில், விழிப்புணர்வு விளம்பர பிரதிகள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நாடு முழுவதில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

இவர்கள், தாங்கள் கொண்டு செல்லும் இருமுடிக்கு, ரயில் பயணத்தின் போது, காலை மற்றும் மாலை வேளைகளில், கற்பூரம் கொளுத்தி தீபாராதனை செய்கின்றனர்.

புகையால் பாதிப்பு:தீபாராதனை செய்யும்@பாது, ரயில்களில் தீ விபத்து நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது; "ஏசி' பெட்டிகளில், தீபாராதனை செய்யும்@பாது, ஏற்படும் புகை, இதர பயணிகளுக்கு, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இத்துடன், காலை மற்றும் மாலை நேரங்களில், பக்தர்கள், ரயில்களில் குளிக்கின்றனர். தண்ணீரை அதிகமாக செலவு செய்யும் போது, மற்ற பயணிகள், கழிவறை பயன்படுத்துவதற்கு தண்ணீர் இல்லாமல், திண்டாடும் நிலையும் உள்ளது.

இதனால், "அய்யப்ப பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள்' என்ற பெயரில், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது. பாதுகாப்பு குறித்த விளம்பர பிரதிகளும் வழங்கப்பட்டன."ரயிலில் பயணம் செய்யும் போது, அய்யப்ப பக்தர்கள், இருமுடிக்கு கற்பூரம் ஏற்றி, தீபாராதனை செய்யக்கூடாது; தீபாராதனை செய்யும் போது, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கழிவறையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும்' என, ரயில்வே பாதுகாப்பு படை துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---தினமலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:01 am

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தென்மேற்கு கடலோர பகுதியில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் கலிபோர்னியா நகரில் இருந்து 142 கி.மீ. தொலைவில், 11 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஏற்படட சேதம் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:03 am

மோடியின் பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு சென்று திரும்பிய போலீஸ் வேன் கிணற்றில் விழுந்தது: 10 காவலர்கள் பலி

குஜராத் மாநிலம், ஜாலோத் தாலுகா, சபோய் கிராமத்தில் கிணற்றுக்குள் வேன் விழுந்ததில் 6 பெண்கள் உள்பட 10 போலீசார் பலியானார்கள்.

ஜாலோத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்ற போலீசார், பணி முடிந்ததும் தாகோத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சபோய் கிராமத்தில் வந்தபோது, போலீஸ் வேனை ஓட்டி வந்த டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன், சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதில், 6 பெண் போலீசார் உட்பட 10 போலீசார் உயிரிழந்தனர் என்று ஜாலோத் போலீஸ் இன்ஸ்பெக்டர் நகோரி தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 12:04 am

காலாவதியான 2 விண்வெளி ஓடங்கள் 17-ந்தேதி நிலவில் மோதுகின்றன

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவில் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதா? என கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வந்தது.

இதற்காக சிறிய வாஷிங் மிஷின் அளவிலான 2 விண்வெளி ஓடங்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு நடத்தின.

கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடந்த ஆய்வில் நிலவின் ஆழமான பகுதியில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உடைந்த திடப்பொருட்களின் கழிவுகள் படிந்துள்ளதாக தெரிய வந்தது.

சில துணை கோள்கள் மோதியதால் சந்திரனில் வெடிப்பு ஏற்பட்டு, இந்த திடக்கழிவுகள் படிந்திருக்கக்கூடும் என இதை ஆய்வு செய்த குழுவின் தலைவர் மரியா ஜுபேர் கூறியுள்ளார்.

இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 2 விண்வெளி ஓடங்களில் உள்ள எரிபொருள் தீர்ந்து விட்டதால், அவற்றை நிலவின் மீது மோதவிட்டு அழித்துவிட நாசா முடிவு செய்துள்ளது.

தற்போது சந்திரனின் ஈர்ப்பு விசையில் இருந்து 11 கி.மீ தூரத்தில் சுற்றிவரும், சிறிய 2 விண்வெளி ஓடங்களின் இயக்கமும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

வரும் 17ம் தேதி மாலை இந்த விண்வெளி ஓடங்கள், ஒன்றன் பின் ஒன்றாக சந்திரனில் மோதி வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளது.

மணிக்கு 6,120 கி.மீ. வேகத்தில் இவை சந்திரன் மீது மோதும்.

இந்த நேரத்தில் நிலவின் மேற்பரப்பு இருட்டாக இருக்கும் என்பதால், இந்த மோதலை படம் பிடிக்க இயலாது. இவற்றின் எரிபொருளும் தீர்ந்துப்போய் விட்டதால், இந்த மோதலின் போது தீப்பிழம்பு எதுவும் தோன்றாது.

எனவே பூமியில் இருந்து இந்த மோதலை காண முடியாது. எனினும், மோதலுக்கு பிறகு என்ன நடந்தது என்பதை நிலவை கண்காணித்து வரும் நாசாவின் விண்வெளி நிலையம் மதிப்பீடு செய்து படங்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 19 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 19 of 37 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக