புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
19 Posts - 3%
prajai
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
விளையாட்டு அரசியல்! Poll_c10விளையாட்டு அரசியல்! Poll_m10விளையாட்டு அரசியல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டு அரசியல்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Dec 07, 2012 4:37 pm

சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.சி.), இந்திய ஒலிம்பிக் சங்கத்தை (ஐ.ஓ.ஏ.) இடைநீக்கம் செய்திருப்பது சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அவமானம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நடவடிக்கைக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் ரந்தீர் சிங்கையோ அல்லது ஐ.ஓ.ஏ. நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் முன்பாகவே இத்தகைய முடிவை ஐ.ஓ.சி. எடுத்துள்ளதையோ குறை சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

ஐ.ஓ.சி. கடந்த நவம்பர் மாதம் 23-ஆம் தேதியே இதற்கான எச்சரிக்கையைக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டது.

""ஒலிம்பிக் கவுன்சில் விதிமுறைகளின்படிதான் ஐ.ஓ.ஏ. தேர்தல் நடத்தப்பட வேண்டுமே தவிர, இந்திய அரசு உருவாக்கி இருக்கும் விளையாட்டுச் சட்டத்திட்டத்தின்படி நடைபெறக்கூடாது. அவ்வாறு நடைபெற்றால் உங்களை ஐ.ஓ.சி.யிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் நேரும்'' என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டும், இதற்கான பதிலை நவம்பர் 30-க்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். ஆனால் இந்த எச்சரிக்கையை மதிக்காமல் வெகு அலட்சியமாக நடந்துகொண்டதன் விளைவுதான் இப்போது ஐ.ஓ.ஏ. இடைநீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஐ.ஓ.சி.க்கு கடிதம் எழுதினோம் என்று சொல்வதும், ஐ.ஓ.சி.யைச் சமாதானப்படுத்த இரு நபர் தூதுக்குழுவை அனுப்பியுள்ளோம் என்று சொல்வதும் ஒருபுறம் இருக்கட்டும். குறைந்தபட்சம், டிசம்பர் 5-ஆம் தேதி தேர்தலை தள்ளி வைத்திருக்க வேண்டாமா? திட்டமிட்டபடி நடத்தியே ஆக வேண்டிய தேர்தலா இது? இந்தத் தேர்தலை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து, ஐ.ஓ.சி. தங்கள் கருத்துகளை, ஆலோசனையை ஏற்ற பிறகு இந்தத் தேர்தலை நடத்துவதுதானே முறை! இச்செயல் ஐ.ஓ.சி.யைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதை உறுதிப்படுத்துவதாக அமையாதா?

இந்தத் தேர்தலை எந்த விதிமுறைகளின்படி நடத்துவது என்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகத்தான் தேர்தலை நவம்பர் 25-லிருந்து டிசம்பர் 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள். அப்போதாகிலும், ஐ.ஓ.சி.யிடம் இது குறித்து ஆலோசனை பெற்று தேர்தலை நடத்தியிருக்க வேண்டாமா? எதையுமே செய்யாமல் இருந்தது இந்திய அரசு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், ஐ.ஓ.ஏ. ஆகியவற்றின் தவறுதான்.

2009-ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐ.ஓ.சி. மாநாட்டுத் தீர்மானத்தின்படி, அந்தந்த நாட்டின் விதிமுறைகளுக்கு உள்பட்டு தேர்தலை நடத்தலாம் என்று இப்போது சொல்கிறார்கள். இதையெல்லாம் நவம்பர் 30-ஆம் தேதியே ஐ.ஓ.சி.க்கு புரிய வைத்திருக்க வேண்டாமா? இவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்றால் இதற்கான முயற்சியை வேகமாக எடுத்திருக்க மாட்டார்களா?

ஒலிம்பிக் கவுன்சில் விதிமுறைப்படிதான் தேர்தல் நடத்த வேண்டும் என்பதன் அடிப்படை நோக்கமே, இந்த அமைப்பில் அரசியல் புகுந்துவிடக்கூடாது என்பதுதான். இந்த அமைப்பில் விளையாட்டுக்குத் தொடர்பே இல்லாதவர்கள் நுழைந்து, ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதுதான். இல்லையென்றால் ஐ.ஓ.சி.க்கு இங்கே இந்தியாவில் யார் ஐ.ஓ.ஏ. தலைவர், செயலர் என்பதைப் பற்றி என்ன கவலை இருக்க முடியும்?

இந்தியாவில் விளையாட்டிலும் ஊழல் விளையாடுகிறது என்பது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்தான் அம்பலமானது. இத்தகைய விளையாட்டு ஊழலில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் நிச்சயம் என்கின்ற அளவில் சுரேஷ் கல்மாடி குழுவினரின் செயல்பாடுகள் இருந்தன. இதன் தலைமைச் செயலர் லலித் பனோட் மீதும் முறைகேடுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்குக் காரணம் அரசியல் பின்னணி உள்ளவர்கள் இந்த அமைப்புகளில் பொறுப்பு ஏற்பதுதான்.

காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா என்ற கேள்விக்குறியும், அரங்குகள் தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் நமக்கு தந்த அவமானங்கள் கொஞ்சமல்ல. அப்போதாகிலும் இந்திய அரசு புரிந்துகொண்டு, விளையாட்டு வீரர்கள் வசமே இத்துறையை விட்டிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து இது அரசியல்வாதிகளின் நிழலிலேயே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆகவேதான், இந்திய விதிமுறைகளின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தவும், அதற்காக நீதிமன்றத் தீர்ப்பை சாதகமாக சொல்லிக்கொள்ளவும் செய்கிறது. ஒருவேளை, உண்மையாகவே விளையாட்டில் அக்கறை உள்ள நபர்கள் இந்த அமைப்புக்குத் தலைவராக, செயலராக வந்துவிட்டால், இதுவரை நடைபெற்ற ஊழல்கள் குறித்து கேள்வி எழுப்புவார்களோ, எல்லாவற்றையும் கிளறிப்பார்ப்பார்களோ என்ற அச்சத்தால்தான் ஒலிம்பிக் விதிமுறைப்படி தேர்தலை நடத்தத் தயங்குகிறார்கள் என்று கருதவும் தோன்றுகிறது.

இந்த இடைநீக்கம் இறுதியான முடிவு அல்ல. சரியான விளக்கமும், அல்லது அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் சமரசங்களும் இந்த இடைநீக்கத்தை விலக்கிக்கொள்ள உதவும். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் ஒதுக்கிவிட முடியாது. ஆகவே இந்த இடைநீக்கம் தாற்காலிகமானது என்றாலும், இந்தியாவுக்கு இத்தகைய குட்டு தேவைதான்.

இதுமட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட் சங்கத்திலிருந்து பி.சி.சி.ஐ. நீக்கப்படும் நிலையும் ஏற்படும் என்ற எச்சரிக்கையும் இந்த சம்பவத்தில் இருக்கிறது. அது ஒலிம்பிக் சங்கமாக இருந்தாலும், கிரிக்கெட் சங்கமாக இருந்தாலும், ஏன் கராத்தே, கேரம் போட்டி என்று எதுவாக இருந்தாலும் அதிலெல்லாம் அரசியல்வாதிகளின் ஆதிக்கம்தான் கோலோச்சுகிறது. இவர்களது "அநாகரி'கமான அரசியல் விளையாட்டுகள் போதாது என்று விளையாட்டுத் துறையையும் ஊழலுக்கு உள்படுத்திவிடுகிறார்கள். அரசியல் அகற்றப்படாத வரையில் விளையாட்டிலும் ஊழல் விளையாடத்தான் செய்யும். சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவிப்பதற்கு பதிலாக அவமானங்களை வாங்கிக் குவித்துக் கொண்டுதான் இருப்போம்!
(நன்றி - தினமணி)

avatar
Guest
Guest

PostGuest Fri Dec 07, 2012 5:55 pm

பொம்மைகள் ஆடும் அரசியல் விளையாட்டு .. என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 07, 2012 6:05 pm

அரசியல் எப்போதும் சறுக்குமர விளையாட்டுதானே?...
அப்புறம் எப்படி அவர்கள் விளையாட்டில் அரசியல் பண்ணாமல் இருப்பார்கள்?...



விளையாட்டு அரசியல்! 224747944

விளையாட்டு அரசியல்! Rவிளையாட்டு அரசியல்! Aவிளையாட்டு அரசியல்! Emptyவிளையாட்டு அரசியல்! Rவிளையாட்டு அரசியல்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக