புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
2 Posts - 2%
prajai
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
401 Posts - 48%
heezulia
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
28 Posts - 3%
prajai
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_m10வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ??? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ???


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Dec 06, 2012 8:40 pm

வால்மீகி கொள்ளை தொழில் செய்பவர் ! கானகம் சென்று அங்கு தனித்து வரும் மனிதர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது அவரது வாடிக்கை ! அந்த பணத்தை அவரது மனைவியிடம் கொடுத்து தனது வயதான தாய்தகப்பன் மனைவி பிள்ளைகளை வளர்த்து வந்தார் ! தனது குடும்பத்தை பராமரிக்கவே இந்த தொழிலை செய்வதாக சுய நியாயத்தை தேடிக்கொள்வார் ! மிரட்டுவாரே தவிற யாரையும் கொண்றதில்லை ! தன்னைப்பார்த்து பயப்படும்படியாக உருவத்தில் பயங்கரத்தை அமைத்துக்கொள்ளுவார் ! இந்த கதை கர்ண பரம்பரையாய் பலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன் !

ஒரு நாள் அந்த கானகம் வழியாய் நாரதர் வந்தார் !

வழக்கம் போல அவரை மறித்து வால்மீகி ``உயிர் மேல் ஆசை இருந்தால் இருப்பதை கொடுத்துவிடு ``என மிரட்டினார் !

நாரதர் `` சரி கொடுத்துவிடுகிறேன் ! ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் என்றார் ``

ம்..ம்,,,

இந்த தொழிலால் உனக்கு பாவம் வரும் அது உன் பிறவியை பல பிறவிகளுக்கு கெடுத்துவிடாதா ?

இது என் குலத்தொழில் ! நான் என் குடும்பத்தை பராமரிக்கவே இதை செய்கிறேன் !

அப்ப்டியா ? நான் இதே இட்த்தை விட்டு நீ வராமல் நகர மாட்டேன் என சத்தியம் செய்கிறேன் ! இந்த வழிப்பறியால் வரும் பாவத்தை உன் குடும்பத்தினர் உன்னோடு பங்குபோட்டு அனுபவிக்க சம்மதீபார்களா என கேட்டு விட்டு வா !

நான் அவர்கள் மீது வைத்துள்ள பாசத்தை போல பல மடங்கு அவர்கள் என் மீது வைத்துள்ளனர் ! நான் ஒருவனே பாடுபட்டு அவர்களை தாங்குகிறேன் குடித்து கூத்தடிப்பதில்லை ! சுய நல வாதியாய் இல்லை !

சரி ! போய் கேட்டு வா !

வால்மீகி வீட்டிற்கு சென்று ஒவ்வொருவரிடமும் கேட்கிறார் !

சம்பாதிப்பது உனது கடமை ! நீ எப்படி சம்பாதிக்கிறாய் என்பதற்கு நீயே பொறுப்பு ! அதில் வருகிற பாவத்திற்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை என அனைவரும் சொல்லி விடுகின்றனர் !

மனம் குத்தப்பட்ட வால்மீகி நாரதரிடம் சென்று `` முனிவரே எனக்கு நல்ல வழி காட்டுங்கள் `` குடும்பத்திற்காக செய்வதால் இது பாவமில்லை என நினைத்திருந்தேன் ! அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என அவர்கள் சொல்லி விட்டனர் ! இப்போது நான் செய்த பாவங்கள் எனது மனக்கண்ணில் வந்து உருத்துகிறது ! பாவங்கள் தீர்க்க வழி சொல்ல வேண்டும் ``

மண்ணுலகில் பாவங்களை தீர்க்கும் அதிகாரம் கடவுளின் பிரதினிதியாய் வருகிற குமாரனுக்கு அருளப்பட்டுள்ளது ! ராமா ராமா என்று ஜபிக்க ஜபிக்க உன் பாவங்கள் தீரும்

வால்மீகியால் ராமா ராமா என ஜபிக்க நாக்கு வரவில்லை ஏனென்றால் அவர் தெற்று வாய ! ராமா ராமா என வராததால் ``மரா மரா `` என ஜபிக்க சொன்னார் !

அப்படி நாரதரால் உணர்த்தப்பட்ட வால்மீகி தியானத்தில் அமர்ந்து மரா மரா என ஜபிக்க அது ராமா ராமா என மாறியது ! அந்த ஜபத்தில் மூழ்கி அவரை சுற்றி புற்று வளருமளவு அவர் ஜபத்தில் மூழ்கியதால் அவருக்கு ஞானம் உண்டாகி வால்மீகி மகரிஷியாய் மாறினார் ! ராமாயணம் அக்காலங்களில் கிராமிய நாடகங்களாக மட்டுமே இருந்ததை ஞானதிருஸ்ட்டியில் உணர்ந்து ராமாயண காவியம் பாடினார் !

ராம மந்திர ஜபம் என்பது கோடி பாவம் தீர்க்கும் என்பது அணுபவத்தில் பலரால் நிரூபணமான உண்மையாகும் !

இது இந்தியரின் இதயத்தில் உறைந்த உண்மை !

இந்த உண்மை உலகம் முழுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து ! உலகிலுள்ள பல மொழிகளிலும் இந்த ராமாயணம் கிராமிய நாடகங்களக இருந்து வந்துள்ளது ! இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை !

ஆதி மனிதர்களான லெமூரியாக்கண்ட்த்து தமிழர்களே உலகம் முழுமையும் பரந்து விரிந்தனர் !

அங்கு கடவுளின் பிரதினிதியாக யுக புருஷன் ராமன் அவதரித்து தர்மத்தையும் ஏக இறைவனுக்கு மட்டுமே வழிபாடு என்பதையும் நிலைனாட்டினார் !

கடவுளை வழிபடுவதற்கு பதில் தங்களின் மூன்னோர்களை - முதல் மனிதனை கடவுளுக்கு இணை வைத்து - குல தெய்வ வழிபாட்டை மனிதர்களின் மத்தியில் அசுரர்கள் பிரபலப்படுத்தி வந்தனர் ! அசுரர்களை உபவாசித்து அவர்களின் அபிசேகம் பெற்று அரக்கர்களாக சிலர் வல்லமை பெற்று உலகை ஆண்டனர் !

இறை அச்சம் உள்ளவர்களாய் கடவுளை தேடிய வசிஸ்ட்டர் முதலான திராவிட ஞானிகளின் தபோவனங்களை தாக்கவும் செய்தனர் ! அவர்களின் வேண்டுதலின் பயனாய் கடவுளின் பிரதினிதியாக - இறைதூதராக யுக புருஷன் பூமிக்கு வந்ததே ராம அவதாரமாகும் !

ராமன் என்றால் குமாரன் - பிரதினிதி என்பது பொருள் !

இந்த பூமியையும் படைப்பினங்கள் அனைத்தையும் கடவுள் யார் மூலம் படைத்தாரோ அவரே யுக புருஷன் ! பூமியில் அதர்மம் மிகும்போதெல்லாம் யுக புருஷன் பூமிக்கு வந்து மீண்டும் தர்மத்தை நிலைனாட்டி கடவுளோடு ஒப்புறவாக்குகிறார் ! அவர் கடவுளின் பிரதினிதி --- குமாரன் ஆனால் கடவுளல்ல !

ஆதி சமூகமான திரேதா யுக தமிழர்கள் லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்தபோது பூமிக்கு வந்தவரே ராமன் !

இலங்கை ‘ ராமர் பாலம் ; சேதுக்கரை ; வாலினோக்கம் ; சபரிமலை ஆகியவற்றை நேர்கோடாக கொண்ட லெமூரியாக்கண்டத்து அயோத்தி - வட நாட்டு அயோத்தியல்ல - ராமர் அவதரித்த இடமாகும் !!

லெமூரியாக்கண்டத்து மத்தியில் உயர்ந்த மேரு மலையும் அதிலிருந்து குமரியாறு ; பஹ்ருளியாறு போன்ற வற்றாத ஜீவனதிகள் பாய்ந்த பூமி !

ராமரின் அவதார மஹிமை அறிந்த வசிஸ்ட்டர் அவர் சிறுவனாய் இருந்தபோதே அவரை அழைத்து சென்று தபோவனத்தை தாக்க வந்த அரக்கர்களை அழிக்க ஊக்குவித்தார் ! ராவணேசுரனை வதை செய்த வரை ராமரால் பல அரக்கர்கள் அழிக்கபட்டனர் !

வால்மீகி காலம் வரை ராமாயணம் செவிவழி செய்தியாகவும் கிராமிய நாடகங்களாகவும் இருந்தது இவற்றையெல்லாம் ஞான திருஸ்ட்டியுடன் உணர்ந்து வால்மீகி ராமாயணம் வடித்தார் ! அதில் ராமன் யுக புருஷனாக - சற்குருவாக ; மனிதனுக்கும் கடவுளுக்கும் பாலமாக சித்தரிக்கபட்டாரே தவிற கம்ப ராமாயணத்தில் கதானாயகனை உயர்த்திக்காட்டுகிற கவிப்புலமையால் கடவுளுக்கு இணை வைத்ததைப்போல வால்மீகி இணை வைக்கவில்லை ! ஏனென்றால் வால்மீகி மகரிஷி என்ற யோகிக்கும் கவிப்புலமையால் காவியம் பாடிய கம்பனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது !

வால்மீகி ராமாயணத்தில் வராத பல சம்பவங்கள் கிராமிய ராமாயண நாடகங்களாக தமிழகத்தில் இன்றும் உள்ளன ! தமிழகத்தில் மட்டுமல்ல பல நாடுகளிலும் ராமாயண நாடகங்கள் உள்ளன ! உலகம் முழுமையும் அதிக மொழிகளில் உள்ள நாடகம் ராமாயணம் மட்டுமே ! இது எதனாலென்றால் ஆதிமனித சமூகமான லெமூரியாக்கண்டத்து தமிழ் சமூகமே பல நாடுகளுக்கும் பரவி ஆதி ஐந்து அடிப்படை மொழிகளாய் மறுவியது ! ஆதி ஐந்து அடிப்படை இனங்களும் தமிழ் இனத்திலிருந்து பரிணமித்ததே !

இனம்---------- மொழி

தமிழ்---------- தமிழ் முதலான தென்னிந்திய மொழிகள்

சமஸ்கிரதம்-------------- இந்தி முதலான வட இந்திய மொழிகள்

லத்தீன்---------------- ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகள்

ஆரியம்---------------- அரேமிய பெர்சிய யூத அரேபிய ஆப்ரிக்க

------------ -------------- --------------மொழிகள்

மங்கோலியம்---------------- சீன ஜப்பானிய மொழிகள்


லெமூரியாக்கண்டம் என்பது குமரிக்கு தெற்கே ஐந்து கண்டங்களையும் தொட்ட நிலப்பரப்பாய் இருந்ததால் மனிதர்கள் பரவி சென்று வாழ்ந்தனர் ! ஆகவே ராமாயணம் சிலசில மாற்றங்களுடன் பல நாடுகளிலும் உள்ளது !

இந்த ராமாயணத்தின் அடிப்படை பூமியில் மனிதர்கள் சுயபெருமை பாராட்டி தங்கள் முன்னோர்களை கடவுளுக்கு இனை வைத்து அசுரர்களின் உபதேசங்களுக்கு ஆட்பட்டு இச்சைகளின் வழி வாழ்ந்து அதர்மம் மிகும் போதெல்லாம் யுக புருஷனானவர் பூமியில் அவதரித்து மீண்டும் இறைபேரரசை நிலை நாட்டுவார் என்பதாகும் ! கடவுளின் பிரதினிதியான அவரை சற்குருவாய் ஏற்று கடவுளுக்கு மட்டும் வழிபடுபவர்களாய் மனிதர்கள் மாறவேண்டும் என்பதே !

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆண்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன் !!

யுகங்கள் தோறும் பூமிக்கு வருகிற - இதுவரை வந்த ராமன் மூவரே ! -மூவரும் ஒருவரே !


திரேதா யுகத்தில் ராமன் !

துவாபர யுகத்தில் கிருஷ்ணர் !

கலியுகத்தில் இயேசு !

கலியுகம் பிறக்க போவதைப்பற்றி பாண்டவர்களுக்கு முதல் முதலில் உபதேசித்தவர் கிருஷ்ணரே ! கலியுக முடிவில் நியாயத்தீர்ப்பு செய்து சத்திய யுகத்தை நிறுவ கல்கியாக தாம் வானத்தின் வழியாக வரப்போவதாகவும் அறிவித்தார் !

இயேசுவும் யுக முடிவில் நியாயத்தீப்பு செய்ய தாமே இரங்கி வரப்போவதாக சொல்லிவிட்டு பரமேறி சென்றார் !

யானையை தடவிய குருடர்கள் போன்ற மதவாதிகள் இருவரையும் வேறுவேறு நபர் என எடுத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டுள்ளனர் !

யுக புருஷனானவர் கலியுகத்தில் இயேசுவாக வந்து தன் மூலமாக உண்டாகி தனக்குள் நிலைபெற்றுள்ள மனித குலத்தின் பாவங்கள் அனைத்திற்கும் பாவ பரிகாரம் செய்தார் என்பது உண்மை !

யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

தன்னை உணர்ந்து மனம் திருந்தி கடவுளை தேடுகிற ஆத்துமாக்கள் யாரோ அவர்களுக்கு சற்குருவான யுக புருஷன் அவர்களின் பழம்பாவங்கள் அவர்களை பிடித்து பின்னோக்கி இழுத்து இம்சை செய்யாதபடி - அல்லது ஆயிரம் தீமைகள் செய்தாலும் அடுத்தவர் குறைகளை குற்றமாக சுமத்தி மனிதனை மட்டம் தட்டுகிற அசுர ஆவிகள் முன்னேறுகிற சாதகனை குற்றப்படுத்தாத படியாக சற்குருவான யுகபுருஷன் பவப்பரிகாரம் செய்தாயிற்று !

கடவுளைத்தேடுகிற எல்லோருக்கும் இயேசுவின் பரிகாரம் பக்கபலம் அளிக்கிறது ! மதவாதிகள் மிகைப்படுத்துவது போல மதம் மாறி வெள்ளைக்காரர்கள் பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் ; பாடத்தெறிந்ததால் பாஸ்ட்டராகிய ஒருவருக்கு அடிமையாகி கானிக்கை கொடுத்து தண்ணீரில் மூழ்க வேண்டும் ; அப்போது மட்டுமே இயேசுவின் பாவப்பரிகாரத்தின் பலன் ஒருவருக்கு கிடைக்கும் என்பது அவசியமேயில்லை !

மனம் கடவுளை நோக்கி திரும்பினாலே போதுமானது ! இயேசுவின் பாவப்பரிகாரம் அவர்களுக்கு பக்கபலம் கொடுக்கும் ! ஒவ்வொரு மனிதனும் பதிலுக்கு பதில் அனுபவித்துதான் தீர்க்கவேண்டும் என்றால் அதற்கு பல பிறவிகள் போதாது ; அந்தளவு மனித இனம் பாவங்களுக்கு அசுர்ர்களால் வழினடத்தப்படுகிறது !

இப்போது பாரம் தூக்க வண்டிகள் உள்ளன ! பார வண்டிகள் இல்லாத காலங்களில் மனிதர்களே பாரம் சுமந்தார்கள் ! அந்த நாட்களில் வழியெங்கும் ஆங்காங்கே ``சுமைதாங்கிகல்லை`` நட்டு வைத்திருப்பார்கள் ! அறுப்பு திருவிழாவின் போது கிராமத்தினர் அதற்கு சந்தனம் வைத்து தீபம் காட்டுவார்கள் ! அந்த கல் இயேசுவுக்கு அடையாளமானது !

பாவம் அதிகம் செய்யாத ஆத்துமா ஓடியாடி சம்பாதிக்கும் ; அழும்பும் செய்யும் பிறரை அடக்கி ஒடுக்கும் !காலமும் ஓடும் ; பல பிறவிகளில் பாவம் முற்றிய ஆத்துமாக்களோ அடிஉதை படும் ! தொட்டதெல்லாம் துயறம் தரும் ! அந்த ஆத்துமாக்கள் யுகபுருஷனை குருவாக வைத்து கடவுளை தொழதொடங்கினால் போதும் அவர்களின் பாரம் குறையும் ! விடுதலை உண்டாகும் ! பாவங்கள் உணர்த்தப்பட்டு தன்னை உணர்வதால் ஞானமாக பக்குவமடையும் ! !

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

நீண்ட நாளாக வாத நோயால் படுத்தபடுக்கையாய் இருந்த ஒருவரை இயேசு குணப்படுத்திய ஒரு சம்பவம் சித்தரிக்கபடுகிறது :

மத்தேயு: 9
2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

3. அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.

4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?

5. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ எது எளிது?

6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

7. உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப்போனான்.


இங்கு குணமாக்குவது என்பது சித்தர்கள் ஆற்றல் அல்ல ! மந்திரதந்திரமுமல்ல ! பாவங்கள் மண்ணிக்கபட்டால் மட்டுமே அந்த பாவத்தால் உண்டான நோயை குணப்படுத்தமுடியும் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார் ! பல நாள் தவம் செய்து சித்தர்களின் அருள் பெற்று மூலிகைகளை கண்டறிந்து சித்தராக மாறுவது என்பதாக இப்போது அறிவு ஜீவிகளின் மத்தியில் நவீன நாத்திகவாதம் கலைகட்டிக்கொண்டுள்ளது ! சித்தர்கள் ஆற்றல் என்பது தற்காலிகமானது ! நிரந்தரமானது தன்னை உணர்ந்து யுகபுருஷன் மூலமாக கடவுளிடம் பாவமண்ணிப்பு பெற்று ஞானமடைவது மட்டுமே !

மண்ணுலகிற்கு கடவுளின் பிரதினிதியானவரும் (குமாரன்) இந்த லோகம் யார் மூலமாக படைக்கபட்டு யாருக்குள் சகலமும் நின்றும் இயங்கியும் அழிந்தும் வருகிறதோ அந்த யுகபுருஷன் மூலமாகவே கடவுளிடம் பாவபரிகாரம் பெற முடியும் ! அதற்கு பிரயச்சித்தம் செய்யவே கலியுகத்தில் குமாரனாகிய ராமன் இயேசுவாக அவதரித்தார் !

யோவான் 6:40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

யோவான் 8:36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.


நாரதர் வால்மீகிக்கு ``மரா மரா `` என்ற மந்திரத்தை ஜபிக்கும்படியாக உபதேசித்ததன் மறைபொருள் இதுவே ! மறைபொருளை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் அதற்கு சப்பைகட்டாக ஒரு கதையை கட்டிவிட்டனர் ! வால்மீகிக்கு தெற்று வாய் ! ராமா ராமா என உச்சரிக்க வரவில்லை அதனால் மரா மரா என உச்சரிக்க சொன்னார் என்று ! மரா மரா என உச்சரிக்க முடிந்தால் ராமா ராமா என உச்சரிக்க முடியாதா என்ன ?

மறைபொருளாவது :

மரா மரா என்றால் மரத்திலே தூக்கபடுகிற ராமா மரத்திலே துக்கப்படுகிற ராமா என்பதாகும் ! மரத்திலே தூக்கபடுகிற ராமனால் மனிதர்களுக்கு பாவபரிகாரம் உண்டாகும் என்பதுவே நாரதரின் உபதேசமாகும் ! மரத்திலே தூக்கபட்ட ராமா என்ற ஜபமே கொள்ளையன் வால்மீகியை பரிசுத்தமாக்கி வால்மீகி மஹரிஷியாய் மாற்றியது !

இந்த மறைபொருள் உணர்த்தப்பட்ட்தால் அடியேனும் அதை நீண்ட நாளாக பயன்படுத்தி வருகிறேன் !

ராமர் நாமத்தினால் கடவுளே !

கிருஷ்ணர் நாமத்தினால் கடவுளே !

இயேசு நாமத்தினால் கடவுளே ! உம்மை துதிக்கிறேன் !

என வேண்டி உயிரில் ஒன்றி தியானத்தில் மூழ்கி விடுவேன் ! தியான முடிவில் ராமர் கிருஷ்ணர் இயேசு நாமத்தால் கடவுளிடம் எனது பிரார்த்தனைகளை வைத்து முடித்து கொள்வேன் !

ராம நாமமே பாவத்தை போக்கவல்லது ! அந்த ராம நாமத்தின் மூலமாக கடவுளை வேண்டுவதே மனிதர்கள் உய்வடையும் வழி !

ஏக இறைவன் நம் மனக்கண்ணை திறந்தருளுவாராக !!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக