புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
6 Posts - 46%
heezulia
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR


   
   

Page 2 of 2 Previous  1, 2

gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 12:54 am

First topic message reminder :

செங்குந்தர் எனும் கைக்கோளர் - ஒரு பார்வை
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும் கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து வழக்கத்தில் வர ஆரம்பித்தது சுமார் 1200 ஆண்டுகளாக. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு,ஆரணி,காமக்கூர்,தேவிகாபுரம், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், திருமழபாடி, தஞ்சை, சென்னை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகர்களாகவும் மற்ற தொழில்களிலும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

"கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும் நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில் உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர் என்று அறிகிறோம்.

செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,

"மூன்று கம்பீர புருசர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர்). அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."

"அது ஏன்?"

"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."

"உங்கள் படையில் எத்தனை கை? எத்தனை வீரர்கள்?"

"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."

"உங்களுடைய கோரிக்கை என்ன?"

"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்!"
"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."

"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...?"

"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."

"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்..."

"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."


அப்பப்பா! என்னவொரு அசாத்திய வீரம், சுந்தர சோழரின் மந்திரியான அநிருத்த பிரம்மராயர் சாதாரண ஆளில்லை, திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த இவர் சோழர்களின் சாணக்கியர், இவரின் செவியும், கண்ணும் சோழ நாடு முழுவதும், இவருக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது அந்நாளில். இப்பேர்பட்ட ஒருவரே கைக்கோளப் படையை புகழ்கிறார் என்றால் அவர்களின் வீரம் எந்த அளவிற்கு சிறந்ததாயிருந்திருக்க வேண்டும்.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தங்கள் குலத்தொழிலாகிய படைத் தொழிலை விட்டு முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

18ஆம் நூற்றாண்டு முதலே இவர்கள் முதலி எனும் பெயரை தங்கள் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டனர் என்பது அந்நாள் பாண்டிச்சேரியின் கவர்னருக்கு முதன்மை துபாஷியாய் இருந்த ஆனந்த ரங்கப் பிள்ளை அவர்களின் டைரி குறிப்பிலிருந்து தெரியவருகிறது.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை அளித்திருக்கின்றனர் என்றும் India before Europe by Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce: Southern India, 1500-1650, BySanjay Subrahmanyam, Textiles in Indian Ocean Societies, By Ruth Barnes ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமச் சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் முதலிய மூன்று சோழர்களிடம் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தர் செங்குந்த இனத்தைச் சேர்ந்தவர்.

இரட்டைப் புலவர்கள் என்று பெயர் பெற்ற மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர் இவர்களும் செங்குந்த மரபில் தோன்றியவர்கள். இவர்கள் பிறந்தது சோழநாட்டின் ஆமிலந்துறையில், இவர்களில் ஒருவர் குருடர் மற்றவர் முடவர், இருப்பினும் முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பல சிவாலயங்களுக்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடியை பாட மற்றவர் அடுத்த இரண்டடியை பாடி முடிப்பார். காளமேகப் புலவரின் நண்பர்களாய் இருந்த இவர்கள் அவருடைய மறைவின் போது, புலவரின் உடலை நெருப்பு தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.

'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'
என முடவர் கதற, குருடர் உடனே,
'-பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

அரசியலில் - அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில் ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் - தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும், தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

72 உட்பிரிவுகளை கொண்ட கைக்கோளர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும், இலங்கையிலும் முடியாட்சி காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு சிற்றரசர்களில் ஒரு பிரிவினரான கெட்டி முதலியார் கட்டிய தாரமங்கலம் கோவில் சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை பற்றியும் கெட்டி முதலியார்களை பற்றியும் தனியொரு பதிவில் பார்ப்போம்.


(பி.கு : இந்த கட்டுரைக்கான குறிப்புகள் தஞ்சை நூலகத்தில் இருந்தும், இணையத்தில் (குறிப்பாக மரத்தடி, முத்தமிழ் மன்றம், தினமலர்) இருந்தும் எடுக்கப்பட்டது. இரட்டையர் பாடல் ஷைலஜா அவர்களின் கட்டுரையில் இருந்து எடுப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

Labels: kaikolar, muthaliyar, sengunthar, கைகோளர், கைக்கோளர், செங்குந்தம், செங்குந்தர், முதலியார்
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Devikapuramperiyanayagi



A.பாலமுருகன் காமக்கூர்

gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 11:24 am

செங்குந்தர் துகில்விடு தூது.
இத்தமிழகம் நிலப் பிரிவுக்குரிய மக்கட் பகுதியே யன்றிக் குலப்பிரிவான மக்கட் பகுதியை நெடுங்காலத்திற்கு முன் எய்தி யிருந்ததில்லை என்பதை அறிஞர் அறிவர். ஆயினும் பலவற்றாற் பரந்துள்ள சாதிகளைப் பற்றிப் புலவர் பலர் சாதி நூல்கள் பலவற்றைப் பாடிவைத்தனர். அவற்றில் உயர்வு நவிற்சியான போலிக் கதைகள் காணப்படினும், சில சாதியாருடைய பண்டைக்கால வழக்க வொழுக்கங்களும் வேறு சில செய்திகளும் கிடைப்பதனால், சாதி நூல்கள் அறவே கடியப்படத் தக்கன அல்ல. இத்தகைய பயன் கருதியும் சாதியைப் பற்றிக் கூறும் நூல்களை வெளியிடலாம். ஆதலின், இந்நூல் செங்குந்தர் என்னும் ஒரு மரபினரைப் பற்றிக் கூறுகின்றது.

இந்நூல், முதலில் காப்புச் செய்யுள் ஒன்றும், இடையில் 271 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுளோடு நேரிசை வெண்பா வொன்றினையும் பெற்றுத் திகழ்கிறது. இஃது, ஆண்பால் பெண்பால்மீது விடுத்த தூதின்பாற் படும்.

ஆசிரியர் வரலாறு.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சேலம்-வெண்ணந்தூர் என்னும் ஊரில் வீரசைவாசாரம் பொருந்திய செங்குந்தர் குலத்தில் உதித்த பரமானந்த நாவலர் என்பார் இதன் ஆசிரியர் ஆவர். இவர் இளமைப் பருவ முதற்கொண்டே முருகக் கடவுளின் கருணை நோக்கம் பெற்று, இலக்கண இலக்கியங்களை நன்கு தெளிவுபடக் கற்றுணர்ந்து, விருதுகவி பாடும் திறமை எய்தி, எண் திக்கிலும் விருதுகவி பாடி வெற்றி முழக்கம் செய்தவர் ஆவர். இச் செய்திகள், இந் நூலின் இடையே காணப்படும் பின்வரும் அடிகளால் அறியக் கிடக்கின்றன.

'- சேர்கொங்கில்
சேலம் வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்
வேலரரு ளாலே விருதுகவி-நாலுதிக்கும்
நாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்
பூட்டுமன்பா லிட்டலிங்கப் பூசைசெய்து-கூட்டருள்சேர்
வீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல
தீரனென்று சேதியெல்லாஞ் செப்பினேன்”

பேரரசர்களாலும், சிற்றரசர்களாலும், கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல் பெருமக்களாலும் தமது செங்குந்த குலவதிபர்களாலும் நன்கு ஆதரிக்கப்பெற்றுப் புகழ் பெற்றவர். முருகன் எழுந்தருளாநின்ற சைவத் தலங்களில் எல்லாம் சென்று அவரைப் புகழ்ந்து பாடி தரிசித்தவர் என்பது இந்நூலால் அறியக் கிடக்கின்றது. இவர் கவி பாடுந் திறமையே யன்றி,

“செய்யுந் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்குங்கால்
நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை-வையகத்தில்”

என்று அவ்வையாரால் சிறப்பித்துப் பாடப்பெற்றதும் பாவம் அல்லாததும் என்று கருதப்படும் தறிநெய்தற்றொழிலை குலத் தொழிலாகக் கொண்டவர். இவர்
"முன்னோர் மொழிபொருளேயன்றி,
யவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்"
என்பதற்குச் சான்றாக, இந்நூலில் பலவிடங்களில் முன்னோர் மொழிந்த மொழிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார். மற்றும், செங்குந்தரின் அருமை பெருமை உயர்வுகளையும், கடவுள் பற்று, குணந்தொழில் முதலிய இயல்புகளையும் விளக்கியுள்ளார். செங்குந்தர் வீரவாகு தேவரின் வழிவந்தோர் எனவும், ஈகை, வாய்மை, ஒப்புரவு, கொல்லாமை முதலிய அருங்குணங்களையும் உடையவர் எனவும் கூறியுள்ளமை காணத்தக்கது.

உலகத்து மக்கட்கு மானத்தைக் காப்பதற்கு உறுதியாவன ஆடை முதலிய உடுக்கைகளே, அவற்றை முற்காலங்களில் நூல் நூற்கும் பொறி இல்லாத போழ்தத்துப், பெண்டிரும் ஆடவரும் தங்களது கையாலும் சிறு கருவிகளினாலும் பஞ்சுகளைக் கொண்டு நூல் நூற்று ஆடை முதலிய வமைத்து மானத்தை நீக்கி வைத்தவர்கள் தமிழ்நாட்டுச் செங்குந்தார் என்னும் பெரும் பிரிவினரே யாவர்.

உமாதேவியின் பாதச் சிலம்பில் உதிர்ந்த நவமணிகளில் அப் பார்ப்பதியார் திருவுருவத்தைக் கண்ணுற்றுச் சிவமெருமான் கொண்டருளிய இச்சையால் கருவுற்ற ஒளியுடைய நவரத்தினப் பெயர்கொண்ட மகளிர்களிடத்தில் அதிமேம்பாடடைந்த வீரத் தன்மையுடன் உதித்த பெரிய தவத்தினை யுடைய வீரவாகுதேவர் முதலிய நவவீரர்களின் வழித்தோன்றினவார் இச் செங்குந்தர் என்பதாம். இச்செய்தி, புராண பிரசித்தமாம் ஞானப்பிரகாச முனிவரால் செய்யப்பட்ட பிள்ளைத்தமிழில்,

"மயில்வா கனத்தோன் துணையாக வந்தோர்
தாலோ தாலேலோ"
தேவியுமை பாகச் சிலம்பில்வரு வீரியர்கள்
சிறுதே ருருட்டி யருளே"

என்ற அடிகளால் இனிதுணரலாம். குந்தம் என்னும் வீரப் படைக்கு உரியார் செங்க்குந்தர் என்பது பொருள். ( குந்த மெனினும் ஈட்டி எனினும் ஒக்கும்) இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்னர் சேந்தனார் தனது திவாகர நிகண்டினுள்,

"செங்குந்தப் படையர் சேனைத் தலைவர்
தந்து வாயர் காருகர் கைக்கோளர்"

என்று செங்குந்தரைச் சிறப்பிக்கின்றார். இதினின்று செங்குந்தப்படையர் முதலிய ஐந்து பெயர்களும் செங்குந்தர்களையே குறிக்கின்றன என்று அறிகிறோம். ஆயினும், அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரத்து இந்திரவிழவூரெடுத்த காதையுள்,

"பட்டினு மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருக ரியற்கையும்"

என்னுமிடத்துச் சாலியரையே குறிப்பிட்டுக், கைக்கோளர் என்கின்ற சாதியாரைக் காட்டாமல் விட்டார். இஃது செங்குந்தர்கள் சேனைத் தலைவர்களாகவும், தொண்டைமான் முதலியோர்களாற் பெரும் பட்டங்களும் அரசச் செல்வங்களும் அடையப் பெற்று சிறப்புற்றிருந்த பண்டைய பெருங்குடிகளாய் அமைந்ததால் போலும்.

இவர்களது சிறப்புக்களைப் பிரபந்தங்கள் பலவும்* புகழ்ந்து கூறும். நாகை முத்துக் குமாரதேசிகராற் செய்யப்பட்டக் கலித்துறையந்தாதியில்,

"தப்பில் புராணம் பரணி உலா பிள்ளைத் தண்டமிழ்முன்
செப்பும் பிரபந்தம் எண்ணில பெற்றவர் செங்குந்தரே"

-என்று வருவனவற்றால் இவர்கள் பிரபந்தங்களால் புகழப் பெற்றவர்கள் எனவறியலாம்.

செங்குந்தர்கள் சிறந்த வீரர்கள் என்பது:-

"சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர்
செங்குந்தரே"

"சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே"
என்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும்.

சீலமுடையவர் என்பது:-

"தேவாரமுற்றும் படிப்பாரும் அங்கையிற் செங்குந்தரே"

"திருவாசகஞ் சொல் ஒருவா சகத்தரும் செங்குந்தரே"

"நிதம் அந்திசந்தி சிவசிந்தனை மறவாதவ ராவரிச் செங்குந்தரே"

என்று, வரும் பழைய நூலடிகளால் அறியலாம்.

சொன்ன சொல் தவறாதவர்:-
"தேவே விலகினும் நாவிலங் காதவர் செங்குந்தரே"

என்று வரும் நூலடியால் உணரலாம். செங்குந்தரைப்பற்றி எழுத வேண்டுமென்றால் மிகவிரியும். பழைய காலத்துக் கல் வெட்டுக்களில் கண்ட விசயாலயன், பராந்தகன், கோப்பரகேசரி, இராஜேந்திரன், திரிபுவன தேவன், இராசராசன், விக்கிரம சோழன், அநபாயன், சுந்தர பாண்டியன், வல்லாள தேவன் முதலிய அரசர்களது ஆணையில், இப் பெரும் பிரிவினர்களைப் புகழாத இடங்கள் கிடையா. திருவண்ணாமலையில் வல்லாள தேவரால் ஏற்படுத்தப்பட்ட கோபுரத்தின் தென்பாகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு அரிய கல்வெட்டொன்றில், இவர்களது சிறப்புக்கள் கூறப்பட்டிருக்கின்றன.

இவர்களின் பெருமைகளையும் பண்டைய நாட்களின் பல சிறப்புக்களையும் குறித்துப் பலவிடங்களில் எழுதியிருந்தாலும், பல்குன்றக் கோட்டத்துச் சிங்கபுர நாட்டு அண்ணமங்கலயப்பற்று தேவனூர்க் கோயில் கல்வெட்டுக்களிலும், வெண்ணிக் கோட்டத்து கோலிய நல்லூரிலும், பையூர்க் கோட்டத்துக் கீழ்பட்டைய நாட்டின் திருவான்பூ ரென்னும் தமிழ் முருகவேளாரது கோயிலுள்ளும் எழுதப்பட்டுள்ள அரிய கல்வெட்டுகளுள்,இவர்களது பெருமைப் பாடுகள் குறித்து மிகச் சிறப்பிக்கப்படுகின்றன். இக் கல்வெட்டுக்களால் பல கோயில்கள் எழுப்பித்தும் பல கோயில்களுக்கு நித்தியக் கட்டளைகள், திருவிழாக்கள் முதலிய தான தருமங்கள் செய்வித்தும் வாழ்ந்தவர் செங்குந்தர் என்பது விளங்கும்.
இவர்களது வரலாற்றைத் தொண்டை மண்டல வரலாறு என்னும் நூலிலும், இம்மரபில் தோன்றி திக்கெங்கணும் வெற்றிக்கொடி நாட்டிய ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பெற்ற, "ஈட்டி எழுபது" என்ற நூலினும், கடம்பவன புராணத்தில் வீர சிங்காதனச் சருக்கத்திலும், ஸ்ரீகந்தபுராணம், செங்குந்தர் பரணி, சேனைத்தலைவர் உலா, பிரமாண்ட புராணம், கந்தபுராணம், திருவாரூர் லீலை, ஏழாயிரப் பிரபந்தம், வல்லான் காவியம் முதலிய நூல்களிலும் சோழ மண்டல முதலிகள் என்னும் காரணப் பெயரையும், வீர தீரத் தன்மைகளையும் கூறப்பட்டிருக்கின்றன.

இந்நூல் பாடிய பரமானந்த நாவலரும் இந்நூலினுள் செங்குந்தகுல மரபினரைப் பற்றிய பிறப்பு, தொழில், கடவுள்பற்று, குணங்கள், அவர்களின் ஊராளும் நாட்டாண்மை சபை, அதன் இயல்புகள் முதலியன யாவற்றையும் குறிப்பாகவும், தெளிவு படவும் கூறிச் சென்றிருக்கின்றார்.

நூலின் போக்கு

1-8 கண்ணிகளில், திருமால், பிரமர், முனிவர், இந்திரர் முதலியோர்களின் துயரத்திற்குச் சிவபெருமான் இரங்குதலும், உமையைச் சிவன் மணத்தலும், கந்தப் பெருமான் திருவவதார நிகழ்ச்சியும் கூறப்பட்டுள்ளன.

9-13 கண்ணிகளில், உமையின் பாதச் சிலம்பின் நவரத்தினங்களிலிருந்து நவசத்திகளுண்டாய், அவர்களனைவரும் நவ வீரர்களைப் பெற்ற வரலாற்றுக் குறிப்பும் அவர்களிடத்திலிருந்து தோன்றிய வியர்வையிலிருந்து நூறாயிரவர் தோன்றிய குறிப்பும் கூறப்பட்டுள்ளன.

14-15 கண்ணிகளில், முருகன் பிரமனின் செருக்கை யடக்கிய வரலாறும், தான் சிருஷ்டித் தொழில் செய்ததும் கூறப்பட்டுள்ளன.

16-17 கண்ணிகளில், சிவனால் பிரமன் சிறை மீண்டது, முருகன் சிவனுக்கு பிரணவப் பொருளை குருமூர்த்தமாக நின்று உபதேசித்தது ஆகிய வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.

18-வது கண்ணியில், முருகன் சக்திவேல் பெற்றதையும்,

19-22 கண்ணிகளில், முருகன் தன் தந்தையின் ஆணைப்படி சூரபதுமன் முதலானோரை வென்ற செய்தியும்,

23-வது கண்ணியில், முருகன், இந்திரன்மகள் தெய்வயானையை மணந்தக் குறிப்பும்,

24-25 கண்ணிகளில், செங்குந்தர் வீரவாகுதேவரின் பரம்பரையினர் என்பதும்,

26-28 கண்ணிகளில், செங்குந்தரின் கடவுள்பற்றும், அவர் செய்யும் திருவிழாவின் குறிப்பும் அவரது பண்பாடு ஆகியவைகளைப் பற்றியும்,

29-வது கண்ணியில், செங்குந்தர் ஆண்ட மண்டலங்களின் பெயர்களையும்,

30-44 கண்ணிகளில், செங்குந்தரின் குணாதிசயங்கள், அவரது தொழில் நுட்பங்கள், தமது குலப் புலவரான ஒட்டக் கூத்தரைப்
புரந்து தாம் பெற்ற பேறுகள், அவர்கள் பெற்ற வரிசைகள், பல கொடைவள்ளல்களால் புகழப்பெற்றவை ஆகிய செய்திகளையும் கூறப்பட்டிருக்கின்றன.

45-46 கண்ணிகளில், புலவர் தாம் சென்று போற்றி வந்த முருகன் ஊர்களைப் பற்றிக் கூறுகின்றார்.

47-53 கண்ணிகளில், திருவேரகத்தில் புலவர் தாம் தரிசித்த முருகன் கோலத்தைப் பற்றியும், அச்சந்நிதியில் முனிவர்கள் வணங்கும் காட்சி, நடனமாது ஆடும் காட்சி முதலியவைகளைப் பற்றியும்,

54-வது கண்ணியில், புலவர் முருகனைப்பற்றிப் பாடிப் பணிந்து பாமாலை செய்ததையும்,

55-57 கண்ணிகளில், முருகன் சந்நிதியில் வணங்குவோரின் மெய்ப்பாட்டின் தன்மையையும்,

58-80 கண்ணிகளில், புலவர், முருகன் புகழினைச் சொல்மலர்களால் அருணகிரியார் திருப்புகழ் முதலியன கொண்டு போற்றிப்பாடுகின்றார்.

81-82 கண்ணிகளில், புலவர், திருவேரக முருகனைப் போற்றி செய்து, "தன்னைக் காத்தல் நின்கடன்" எனக்கூறி, தலவாசம் செய்ததாகக் கூறுகின்றார்.

83-89 கண்ணிகளில், முருகன் புலவர் கனவில் தேசிகராய்த் தோன்றி, "யாது வேண்டும் உமக்கு" என வினவினதையும், அதற்குப் புலவர், "கனவினும் உன் புகழைப் பாட, வுனையே வணங்க, பொன் பொலியும் வாழ்வு புகழீகை இன்பம் தவிரா திகபரமும் தந்தருள் ஐயா", எனக் கூறி வேண்டினதையும், முருகன், "பாளைய சீமைக்குள் வளர் செங்குந்த சபையோரின் மூலமாக நீ நினைத்த செல்வமெல்லாம் தந்தருள்வோம்" என்று கூறி மறைந்த செய்தியும் கூறப்பட்டுள்ளன.

90-100 கண்ணிகளில், புலவர் கும்பகோணம், திருநாகேஸ்வரம் முதலிய சிவத் தலங்களைத் தரிசித்துப், பின்னர், பெரிய தம்பி மன்னன் அன்பினால் ஆதரிக்கப்பட்டிருந்த செய்தி கூறுகின்றார்.

101-134 கண்ணிகளில், பாளையஞ் சீமைக்குள் இருக்கும் பல நாட்டு செங்குந்தர்களும் கூடி, பலப்பல தீர்ப்பு வழங்குதலின் நேர்மையும், அந்நாட்டாண்மை சபையின் இலக்கணமும் நேர்மையும் பொதுவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டிருக்கின்றன.

135-144 கண்ணிகளில், புலவர் செங்குந்த சபையினிடத்துச் சென்றதும், அச்சபையோர் தன்னை வரவேற்று வினாவியதையும், அதற்குத் தான் பதிலளித்ததையும் கூறுகின்றார்.

145-வது கண்ணியில், அச்சபையோர் தனக்கு ஈந்த வரிசையின் சிறப்பினைக் கூறுகின்றார்.

146-249 கண்ணிகளில், துகிலின் பரியாயப் பெயர்களைக் கொண்டும், அது பயன்படும் இடத்தின் தன்மையைக் கொண்டும், அது இல்லாததால் ஏற்படும் தன்மையும் இருந்தால் ஏற்படும் பெருமையைக் கொண்டும் துகிலின் பெருமையை உயர்வு நவிற்சி படப் புகழ்ந்து கூறுகின்றார்.

250-253 கண்ணிகளில், தன்னை வருத்திய பரத நாட்டியம் கற்றாடிய பெண்ணின் தன்மையையும், தன்னை யவள் வருத்திய விதத்தையும் கூறுகின்றார்,

254-258 கண்ணிகளில், புலவர் பரதவிதத்தாலாடிய பெண்ணைப் புகழ்ந்து கூறுகின்றார்,

259-261 கண்ணிகளில், புலவர் தன் ஊழ்வினையின் வலியை எடுத்துரைக்கின்றார்.

262-வது கண்ணியில், இவையிவை பொல்லாதது ‍என்று கூறுகின்றார்.

263-271 கண்ணிகளில், புலவர், தான் அவளை நினைத்து வருந்தி வாடிய தன்மையையும், அவளையடைய அவளிடத்துத் தூது சென்று அவளை யழைத்துவா, என்று துகிலைத் தூது விடுத்தலோடும் முடிகிறது இந்நூல்.

இந்நூலின் காணும் சிறப்புகள்

இந்நூல் ஆசிரியர், சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் அழகுபட முதல் இருபத்தைந்து கண்ணிகளில். கந்த புராண வரலாற்றைத் தொகுத்துக் கூறுகின்றார். இந்நூலால், செங்குந்த மரபினர் பண்டு தமிழகம் முழுவதும் பரவி வாழ்ந்தனர்
என்பதும், அக்காலத்திய அரசர்களாலும் வள்ளல்களாலும் அறிஞர் பெருமக்களாலும் சிறப்புப் பட்டங்கள் பெற்றும், அரச காரியங்கள் செய்வோர் என்பதும், தங்களுக்குள் நாட்டாண்மை பொதுச் சபை ஏற்படுத்திக்கொண்டு, எப்படிப்பட்ட சிக்கலான வழக்குகளாய் இருந்தாலும், பண்டு மரியாதை ராமன் தீர்த்து வைத்தது போன்று சாதுரியத்தினால் தீர்த்துக் கொண்டும், வள்ளுவர் வாய்மொழியில் கூறிய,

"உரைப்பார் உரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.

நல்லா றெனினுங் கொளறீதே மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்று.

தோன்றிற்புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

என்னும் இலக்கணத்திற்கு தாங்கள் இலக்கணமாகத் திகழ்ந்திருந்தும், முருகர் கோயிலில் ஆண்டாண்டுதோறும், "சூரசங்காரத் திருவிழா" செய்பவர் என்றும், முதலாய செய்திகள் அறியக் கிடக்கின்றன. மேலும், ஆசிரியர், கருத்தினுட்பொருளை, விளக்கும் சொற்களை அழகுபட எடுத்தாளுவதிலும், அணி வகைகள் பொருந்தப் பாடுவதிலும் வல்லவர் என்பதற்குக் கீழ் வரும் கண்ணிகள் சான்றாகும்:-

"கற்பிருக்கு மங்கையர்க்குக் காவல் நீ! கற்பில்லா
துர்ப்புணர்ச்சி கன்னியர்க்குந் தோழமை நீ !"

"-செங்குந்தர்
வாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப்
பூசலிட்டு மேன்மேலும் போட்டுவைத்து-"

"ஞானகலை யோகியர்க்கும் நங்கையர்மா லேத்துவிக்கும்
ஆனகலை யான வசீகரமே!"

"பெண்ணுக்குப் பெண்ணிச்சை பெண்ணமுதுக் காசை கொண்டு
கண்ணுக்குக் கண்ணிச்சைக் கட்டழகை"

உலகத்து மக்கள் அறிவுடைய பெரியோர்களை ஆடம்பர ஆடையின்றேல் உடன் மதிக்கமாட்டார்கள். நல்ல ஆடம்பரமும், அழகும் உள்ள ஆடைகளை அணிந்துள்ளவர்கள் அறிவில் சிறியவர்களேயானாலும் உடன் வரவேற்று மதிப்புக் கொடுப்பர். இது உலகத்து இயற்கை. இக்கருத்தை ஆசிரியர்

"- நூல் விதியால்
பஞ்சலட் சணந்தெரிந்து பாடிப் படித்தனந்தம்
விஞ்சப் பிரசங்கம் விதித்தாலுஞ்-செஞ்சொலினால்
வல்லகலை யைமதித்து உதவார் மேல்விளங்கும்
நல்லகலையே! உனக்கே நல்குவார் !"

என்று எடுத்துக் கூறும் சிறப்பு, நமக்கு அறிவுக்கு விருந்தாக விளங்கும். மற்றும்,

இன்பச்சுவை பொருந்தப் பாடியதில் சில கண்ணிகள் வருமாறு:-

"-சரசகுண
மங்கையர்மே லாசைகொண்டு மாப்பிளைமார்
செங்கையினாற் றொட்டிழுக்கும் செல்வமே !

“- கொங்கை
குடத்தினிழல் காட்டிக் கூடிளைஞர்க் கல்குல்
படத்தினிழல் காட்டும் படமே! – வடத்திரள்சேர்
ஏகாச மாக விளமுலையி லெந்நேரம்
வாகா யணைந்திருக்கும் வங்கணமே!”

இக்காலத்து, நெய்தல் தொழில் செய்வோர் இல்லங்களில், நெய்தற்றொழிலை ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியுடன் செய்வர் என்பது கண்கூடாகப் பார்ப்பவருக்கு விளங்கும். இம்முறை அக்காலத்தும் உண்டு என்பதனை

“வையகத்தில்
சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்
காரிகையார் தாரால் கலைசெய்யும்”

என்று எடுத்துக் கூறுகிறார்.

இந்நூலில் காணும் கதைக்குறிப்புக்கள் :- தாருகாவனத்து ரிஷிகள், மரியாதை ராமன் கதை, திருவண்ணாமலையில் அரன் முடியை மால்பிரமன் தேடியது, தில்லை நடராசன் அம்பலத்தாடுவது, அதுபொழுது பதஞ்சலி வியாக்கிரபாதர் அருகே நின்றிலங்குவது. அருணகிரிநாதரின் வாக்கின் திறம், சோழர்கள் கலிங்க நாட்டை வென்றது முதலாய கதைக் குறிப்புக்கள் அறியப்படுகின்றன. உலகில் ஐம்புல நுகர்வும் ஒருங்கே அடையப்பெறுவது பெண்களிடத்தில் என்பதை, திருக்குறளின் சான்றோடு எடுத்துக் கூறுகிறார். அஃதாவது,

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்”

எனவும்,

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைப்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள”

- எனவும் சுறுகிறார். இவை யிவை துன்பத்தைப் பயக்கும் என்று, கல்லார் பெருங்கூட்டம், கற்றார் பிரிவு, பொருளில்லார் இளமை, இடார் செல்வம் பொல்லாதவை என எடுத்துக்கூறுவது வாழ்க்கைக்கு இன்றியமையாதததாகும்.

இங்ஙனம், கற்பனைத் திறமும், எளிமையில் கருத்துக்களைச் செஞ்சொற்களால் எடுத்துக் கூறும் இந்நூல், இந்நூல் நிலையத் தமிழ் ஓலைச் சுவடி R. 1756-ஆம் எண்ணிலிருந்து எடுத்து ஒல்லும் வகையான் திருத்திச் செப்பம் செய்து அச்சிடப்பட்டிருக்கிறது. இந்நூலை, சென்னை, திருவல்லிக்கேணி, சிங்காரத்தெரு, 35-ஆம், எண்ணுள்ள வீட்டிலிருக்கும் திருவாளர். எஸ்.வி. துரைராசன் என்பாரிடமிருந்து அரசியலாரால் 1948-ம் ஆண்டு, இந்நூல்நிலையச் சார்பாக விலைக்கு வாங்கப் பட்டதாகும்.
-------------
செங்குந்தர் துகில் விடு தூது.

காப்பு.

தேடுந் தமிழ்க்குதவும் செங்குந்தர் மீதுபுகழ்
சூடுந் துகில்விடு தூதுக்குக்-கூடுஞ்சத்
தைம்முகனும் நான்முகனு மாயர்பெண்கள் காமுகனுங்
கைம்முகனும் சண்முகனுங் காப்பு.

நூல்.
(முருகன்பிறப்பு)

திருமன்னு மால்பிரமர் தேவர் முனிவர்பலர்
சூர்மன்னன் வாதைத் துயர்க்கிரங்கிப்-பேர்மன்னு
வானிமைய மானை மணந்துகயி லைப்பெருமான்
ஆனனங்க ளாறா யணிநுதலின்-நீள்நயனம்
......ஆறிற்கெம.......பலவர்க்கச்
சீறு மழற்பெருக்காய்த் தேவரஞ்சி-ஊறுறுங்கால்
அஞ்சலென்று.......பொறியை வானதியில்
அஞ்சா வணத்துள் மாவுசெய்யச்-செஞ்சுடர்கள்
ஆறுமகவ.......ங்கா......க்
கூறுநறு முலைப்பா லுண்டிருப்ப-ஏறின்மிசை
அம்மையர னுடன்வந் தாறு குழந்தையையுஞ்
செம்மையுட னொன்றாகச் சேர்ந்தெடுப்பச்-செம்முகங்கள்
ஆறுடனே யாறுசெவ்வா யாறிருதோ ளாறிருகை
கூறுமழ காங்குழந் தைக்கு-மீறுந்
திருமுலைப்பா லூட்டித் திகழ்கயிலை மேவி
இருவர் மகிழ்வாகியிருப்ப-நெருநலுமை
.......ந்தப் பொறிப்பயத்தால் பயந்தோடச்
சந்தப் பதச்சிலம்பு தாக்குதலால்-சிந்தும்
நவரத்தி னங்களினும் நங்கையுமை சாய்கை
நவசத் திகளாய் நணுகச்-சிவனுற்றுப் 10
பார்த்தளவிற் கர்ப்பம் படைத்துப் படைக்கரமுஞ்
சேர்த்திடுமே யம்மீகைத் திறலோடும்-ஆர்த்து

.........த்தலைவன் முதலாய் நவவீர
ரோடிலக்கம் நல்லோர் அவதரிக்க .........
.........யருந் தானுந் தழைக்கவிளை யாடியநாள்
உம்பர் பணிந்தேற்ற உட்செருக்காம் .........

(முருகன், பிரமனின் செருக்கை அடக்கியது)

ஓம்மருவு மெய்ப்பொருளை யோதென்ன வோதறியாத்
தீமையினாற் குட்டிச் சிறையிலிட்டுத் - தாமருளால்

(முருகன், சிருட்டித் தொழில் செய்தது)

எவ்வுலகுஞ் சிருட்டித் தினிதிருக்க மால்முதலோர்
அவ்வரனுக்கோத வவர்வந்து - வவ்வுசிறை 15
(சிவனால். பிரமன் சிறை மீண்டது)
விட்டருள வேண்டுமென வேண்ட விடுத்தபின்பு
மட்டறியாத் தாரகத்தின் வான்பொருளைச்-சுட்டியுரை

(முருகன். தகப்பன்சாமி ஆகியது)

என்றுரைக்க வப்போ திறைதகப்பன் சாமியாய்
அன்றுரைக்க முத்தையனா மென்று-நன்றுரைத்துத்

(முருகன், சக்திவேல் பெற்றது)

தந்தைதா யும்மகிழ்ந்து சக்திவடி வேலுதவிப்
பைந்தடந்தேர் பூதப் படைகூட்டி-வந்துததித்த

(முருகன், சூரபதுமனை வென்றது)

.........நீயுமே சூர்முடித்துத் தேவர்சிறை
யாதரவாய் மீட்டுவா வையவென - ஓதலினால்
மாயக் கிரியில்வளர் தாருகன் கிரியும்
மாயவே லேவி மயேந்திரத்தைப்-போயடர்க்க 20
கந்தருக்கு மந்திரிகள் கர்த்தர்துணை தூதாகி
செந்நிதங்கிச் சூர்பதுமுன் சிங்கமுகன்-மைந்தர்பலர்
பானுகோபன் முதலாம் பற்றலர்கள் நாற்படையின்
ஊனுடல்போய்ப் புள்விலங்குண் டோடவே-வானவர்க்காய்

(முருகன்,தெய்வானையை மணந்தது)

சங்காரஞ் செய்து சதமகத்தோன் கன்னிமணச்
சிங்காரங் கண்டு தினமகிழுஞ்-சங்கிராம

(செங்குந்தர் பரம்பரை இதுவென்றல்)

வீரவாகுப் பெருமான் மெய்ப்பான சந்ததியாந்
தீரவாகைப் புயத்துச் செங்குந்தர்- பாராட்டி
ஓலைவிட்டுச் சூர்முடித்த வீரன் மெச்சக்
காலனுக்கு மோலைவிட்டு நாற்றிசைக்கு-மோலைவிட்டோர் 25
(செங்குந்தரின் கடவுள்பற்று)

கயிலைமலை காவலரைக் காவலுங் கைக்கொள்வோர்
மயிலவன்பொற் பாதமறவார்- இயல்பறிய
தோராமலாண்டுதொறுஞ் சூரசங்கா ரத்திருநாள்
சீராய் நடாத்துந் திறலினார்- ஓரெழுத்தும்
அஞ்செழுத்து நீறுமணி யன்பர் குருநேயர்
அஞ்சலர்கள் கொட்ட மடக்குவோர்- ரஞ்சிதமாய்

(செங்குந்தரின் குணஞ் செயல்களைக் கூறுதல்)

தொண்டைமண் டலம்பாண்டி சோழமண்ட லங்கொங்கு
மண்டலம் நாடாளு மரபினார்- கொண்டிடுநூல்
மேவநிறை கண்டுகொண்டு விற்கநிறுக் காதோருயிர்
நோவவருத் தாப்பொய் நுவலாதார்- பாவமின்றிச் 30
செய்யுந் தொழிலாய்ச் சிவசுப்பிர மண்ணியர்தாம்
நெய்யுந் தொழிலின் நிலைபெற்றோர்- வையகத்தில்
சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்
காரிகையார் தாரால் கலைசெய்யும்-நேரிலொட்டக்
கூத்தரெனப் பேர்பெறுசெங்குந்தப் புலவர்தமிழ்
சாத்திமுடிச் சிங்காதனங் கொடுத்தோர்- ஆத்திபுனை
சொல்லா லுயர்ந்தபுகழ்ச் சோழன் சாயாகன
வல்லானை வென்று வரிசைபெற்றோர்- நல்லநவாப்
பட்டணமாற் காடுமுதல் பாரமுமலைத் தான்மகிழ்
அட்டலட்சு மீகரனா மாண்சிங்கம்- பட்டமுள்ள 35
கந்தர்துணை வன்னியகுல கச்சியுப ரங்கேந்திரன்
சந்ததியில் வந்த தளவீரன்-சந்ததமும்

தேசப்பிர காசஞ்செய் பாளையந் துரையும்
வாசற்பிர தானிமெச்ச வாழுவோர்-வாசபுகழ்

கற்பகமாங் கல்விசெல்வன் கர்த்த மகிபாலன்
சொற்பெரிய தம்பித் துரைமகிழ்வோர்-நற்பரமாம்

முத்திதரு முத்தநதி முக்கியதலம் விரதகிரி
நத்திரைசு வேத நதியுளார்-எத்திசைக்கும்

கோலப் பெருமைமன்னார் கோயில்முதல் நாடுகுரு
வாலப்பன் கோயில்முதல் வாழுநகர்-மாலைப்பூஞ் 40
சீர்க்கடம்பு பாமாலை சேவல்முத லானகொடி
மூர்க்கமத யானை முனைப்புரவி-யார்க்கும்

முரசுதிற லானை முறையால் நாட்டாண்மை
அரசுசெய்து வாழு மதிபர்-வரிசை

பதலிமசொல் லாலெடுத்துப் பாடரிய கீர்த்தி
முதலியர்க ளாகவந்த முன்னோர்-கதலிகள்சூழ்

சோழமண் டலம்பாண்டித் தொண்டைமண் டலங்கொங்கில்
வாழருள்செங் குந்தர்மெச்ச வாழ்ந்திடுநாள்-ஏழையேன்

கொங்கிருந்து ரங்கம்வந்து கூடச் சிராமலையும்
பங்குமையா ணானைக்காப் பஞ்சநதி-பொங்குபுகழ் 45
சாற்றுதிருப் பூந்துருத்தி தஞ்சை பவநாசம்
ஏற்றவலஞ் சுழிப்பட் டீச்சுரமும்-போற்றி

திருவேரகத்தில் முருகன் திருக்கோலக்காட்சி

திருவேரகமுந் தெரிசித்துச் செவ்வேள்
உருவே ரகசிவத்தி லுன்னிக்-குருவாழ்

மலைமேல் பொற்கோயில் வலமாக வந்து
தலைமேல் குவிகரமுஞ் சாற்றி-கொலுமேவும்

சுக்கிர வாரத்தில் சுடர்மகுட மும்முகமும்
விக்கிரமப் பிரகாசவடி வேல்கரமும்-உக்கிரமயில்

வாகனமுந் தெய்வானை வள்ளிமகிழ்ந் தணையும்
மோகன விநோத முதிரழகுங்-கோகனகத் 50
தாளிலணி யுஞ்சிலம்புந் தண்டைகளும் பூங்களபத்
தோளின் மணிமாலைத் துகிலழகும்-வேளிடத்தில்

சோடசோப சாரஞ் சுரர்முனிவர் வந்திக்கும்
ஆடகப்பூம் பாதத்தி லர்ச்சனையும்-நாடகத்தில்
கன்னியர்க ளாடுவதுங் கந்தர்முன்(பு) கைகுவித்து
சென்னியர்க ளாடுவதுஞ் சேவைசெய்தேன்-என்னிதயங்
கண்குளிர்ந்தேன் துன்பவினை காய்ந்தேன் சுகானந்தம்
பண்குளிர்ந்த பாமாலை பாடினேன்-தண்கமல
பாதம் பணிவாரும் பாடித் தொழுவாரும்
வேதம் புகல்வாரும் வேண்டுவாரும்-போதமுடன் 55
ஆனந்தக் கண்ணீர் அருவி சொரிவாரும்
ஞானந்தழைக்க நவில்வாரும்-மோனமே
கொண்டு தொழுவாருங் குமரகுரு பரன்முன்
கண்டுதொழுதேன் களிப்பானேன்-பண்டருள்சேர்
நாவா லருணகிரி நாதர்முத லோருரைத்த
பாவால் துதித்துப் பதம்பணிந்து-தேவா!
சரவணபவா! சாந்த னேகந்தா!
குரவணியு நீபா! குமரா!-குரவா
முருகா! குழகா! முதல்வா! திருமால்
மருகா! விரகா! மதுரா!-பெருகும்
அருணகிரி நாத ரருந்தமிழ் விநோதா!
கருணைபுரி பாத கமலா!-பிரணவனே!
செந்தி பரங்குன்றந் திருவாவி னன்குடியும்
இந்துலவு காவரையு மேரகமுங்-கந்தமுதல்
குன்றுதோ றாடல்செயுங் கோவே! உயர்தேவே!
மன்றுதோ ராடியுமை மைந்தனே!- நன்றருள்கூர்
ஐந்துகர நான்குபுயத் தாறான மும்மதத்துத்
தொந்தி வயிற்றானைத் துணைவனே!-விந்தைமதி
ஆறுமுக மாறிருதோ ளாறிருகை சேரழகா!
ஆறெழுத்தி னுட்பொருளா மையனே!-பேறுதவும் 65
பைங்கொன்றை யான்கிரிசேர் பாய்பரியா னுக்கினிய
செங்குன்ற மேமுதலாந் தெய்வதலங்-கொங்கில்
நிலையான சேல நெடுநாட்டிற் செம்பொன்
அலையா கிரியி லடியேன்-தலைமீதில்
வைத்தபத மலரென் வன்மனத்தில் வைத்தருளி
மெய்த்தபதச் சொல்லுணர்த்தும் வித்தகனே!-கைத்தலத்தால்

வேதப் பிரமன்முடி மேல்தட்டிக் குட்டியவர்
தாதைக் குபதேச சற்குருவே!-நாதன்முதல்
மூவர் புகழுமுனைச் சூரசங் காரா!
தேவர்சிறை மீட்ட சேவகனே!-சேவலுயுர் 70
துள்ளு மயில்வீரா!சுடர்வேற் கரகமலா!
வள்ளி தெய்வானை மணவாளா!-தெள்ளுதமிழ்
கும்பமுனிக் குரைத்த கோமானே! நக்கீரன்
வெம்புசிறை விடுத்த வீரியனே!-அம்புவியில்
சம்பந்த ராகிச் சமண்நீக்கித் தெய்வசைவ
விம்பந் தழைக்கவந்த வேதியனே!-நம்புஞ்சீர்
நித்தனே! நிமலனே! நிட்களனே! சற்குணனே!
சுத்தனே! அத்துவித சூக்குமனே!-வித்தகனே!
ஆதித்தி யானந்த அதீதபர மானந்த
சோதியா! ஞானச் சொரூபமே!-நீதியருள் 75
காரணமே! இன்பமே! காமியமே! சோபனமே!
பூரணமே! அண்ட புவனமே!-ஆரணமே!
பூதமே! கட்புலனே! புண்ணியமே! பாக்கியமே!
நாதமே! விந்துவே! நாயகமே!-கீதமே!
சத்துசித் தானந்த தற்பரமே! சிற்பரமே!
முத்திக்கு வித்தே! முழுமுதலே!-தித்திக்கும்
ஞானப் பசுந்தேனே! நல்லமுதே! கற்கண்டே!
மோனச் செழும்பாகே! முக்கனியே!-தியானிக்கும்
சற்பத்த வத்சலனே! சைதன்னிய மெய்ப்பொருளே!
கற்பித்த நீயன்னைக் காத்தல்கடன்-அற்புதனே! 80
(முருகனிடத்து வேண்டுதல்)

வேறுதுணை இல்லையுந்தன் மெய்ப்பதமே யல்லாமல்
தேறவென்னைக் காத்தருள் செய்யென்று-கூறியே

(முருகன், கனவில் குருவாய்த் தோன்றுதல்)

சன்னிதியிற் போற்றித் தலைவாசஞ் செய்திடலும்
இன்னருள்சேர் தேசிகராய் என்கனவில்-முன்னியே
அன்னைதந்தை சற்குருதே வானோன்செவ் வாய்மலர்ந்தே
என்னை வினாவ எடுத்துரைத்தேன்-முன்னே

வினையின் வலிக்கவியான் வீணர்களைப் பாடி
உனைமறந்து நாயே னுழன்றேன்-கனவினும்

(முருகனிடத்து வரம் வேண்டுதல்)

உன்புகழைப் பாட வுனையே தினம்வணங்க
பொன்பொலியும் வாழ்வு புகழீகை-இன்பம் 85
தவிரா திகபரமுந் தந்தருள்வாய் ஐயா!
புவனகர்த் தனேஎன்று! போற்ற-அவனோடு

(முருகன் அருள் கூறுதல்)

அவள்தனது முன்னிலையாய் நன்மை தீமை
எவர்கட்கு மீவ தியல்பாம்-அவையறிந்து
பைந்தமிழோர் சொல்லுடையார் பாளையஞ்சீ மைக்குள்வளர்
நந்துணைச்செங் குந்தரிடம் நண்ணினால்-முந்துமவர்
சிந்தைதனி லேயிருந்து செல்வம் நினைத்ததெல்லாந்
தந்தருள்வோ மென்றிறைவன் தானனுப்ப-வந்துடனே

(கும்பகோணம் வணங்கல்)

கும்பகோ ணத்தில் கும்பலிங்கர் மங்கையம்மன்
சம்புவளர் கின்றமற்றத் தானங்கள்-நம்பனருள் 90
மாமகதீர்த் தக்கரையில் வாழும்வீ ரேசருடன்
தேமகிமை சேர்வீர சிங்கவனை!-கோமுதன்மை
சாரங்க தேவகுரு சன்னிதிதா னம்பணிந்து
சேரன்பர் ரமடியார் சேவைசெய்து-பேரன்பாய்

(திருநாகேச்சுரம், தில்லை முதலியன வணங்கல்)

நாகீசு ரத்தில்வந்து நாகலிங்கர் குன்றுமுலைப்
பாகேஸ்வரி யைப்பணிந் தேற்றி-யோகீசர்
மெய்யர் மடமும் விளங்கும்புக ழேகாம்பர்
அய்யர் மடமுங்கண் டடிவணங்கி-துய்யபுகழ்
முந்தியசெங் குந்தர் முதலிமா ரன்புபெற்றுச்
செந்திருவா ரூர்நாகை தில்லைநகர்-பந்தர்வளர் 95
காழிமா யூரங் கடவூர்வே தாரணியம்
ஏழிசைசேர் வேளூ ரிடைமருதம்-சோழவள

நாட்டிற் பலதலமும் நாடிமுது குன்றுகண்டு
காட்டின் வழியிற் கடிதேகிக்-காட்டுகின்ற

நற்சகுனங் கண்டு நடந்துதிரு வேரகத்தான்
சிற்சரன பங்கயத்தைச் சிந்தித்துச்-சற்சனரும்

மாதவர் சொர்ண மடத்தி லகத்திய
நாதர்தன வர்த்தனியை நான்பணிந்து-நீதமுள்ள

காத்தமகீ பன்சொல் கனம்பெரிய தம்பிமன்னன்
வார்த்தை யன்பினாலே மகிழ்ந்திருந்தேன்-கூத்தர் 100
அரியசபா நாதரரு ளாற்சிவிகை பெற்ற
பெரியநா டென்றும் பெயராய்ப்-பரிவுபெறு

மன்னார் கோவில்சீர் வளநாடு பாளையநா
டின்னார் குவாகமெனு நாடு-நன்னாட்டில்

மங்களமே சேர்ந்தகுரு வாலப்பன் கோயிலுடன்
துங்கசெயங் கொண்ட சோழபுரம்-தென்கருப்பூர்

மன்றலுயர் கீர்த்திமட மன்றுளா டையர்வளர்
நன்றருள் குவாகமெனு நாட்தனிற்-றென்றலங்காப்

பொன்னுலவு பொன்பரப்பி பொங்குசிறு களத்தூர்
மன்னு கொடுக்கூர் மருதூருந்-துன்னுமலர் 105
கானகலா வாரியங் காவ லிலையூரும்
ஆனகல்லாத் தூருமிடைக் குறிச்சி-மானதிசேர்

வேண்டிய செல்வம் விளங்குபுகழ் படைக்கும்
ஆண்டிமடம் விளந்தை யாதியாய்-நீண்டபதிப்

பேரியல் நாட்டாண்மை [



A.பாலமுருகன் காமக்கூர்
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 11:32 am

செங்குந்தர்;



செங்குந்தர் என்பது இந்திய மாநிலமான தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு சாதியை குறிக்கும். இச்சமூக மக்கள் கைக்கோளர் என்கிற பெயராலும் அழைக்கப்படுவர். செங்குந்தர் முதலியார் என்னும் பட்டப் பெயரால் அழைக்கப்படும் சாதிகளில் ஒன்றாகும்


பெயர்க்காரணம்;

செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.
கற்பிதம்

செங்குந்தர் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது ஒன்பது செங்குந்த வீரர்களாய் உடையணிந்து வீரவாகுவின் தளபதிகளுடன் குமரன் சூரனை வதம் செய்வது இன்றும் நடைமுறையில் உண்டு. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.
வரலாற்றுச் சான்றுகள்

தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்தர் பிரபந்தத் திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

பிற்காலச் சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர். மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர். [2] [3]
செங்குந்தர் சிறப்பு


செய்யுந் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்குங்கால் நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை-வையகத்தில்


என்று அவ்வையாரால் சிறப்பித்துப் பாடப்பெற்றதும் பாவம் அல்லாததும் என்று கருதப்படும் தறி நெய்தல் தொழிலை குலத் தொழிலாகக் கொண்டவர்.


முன்னோர் மொழிபொருளேயன்றி, யவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்


என்பதற்குச் சான்றாக, இந்நூலில் பலவிடங்களில் முன்னோர் மொழிந்த மொழிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார். மற்றும், செங்குந்தரின் அருமை பெருமை உயர்வுகளையும், கடவுள் பற்று, குணந்தொழில் முதலிய இயல்புகளையும் விளக்கியுள்ளார். செங்குந்தர் வீரவாகு தேவரின் வழிவந்தோர் எனவும், ஈகை, வாய்மை, ஒப்புரவு, கொல்லாமை முதலிய அருங்குணங்களையும் உடையவர் எனவும் கூறியுள்ளமை காணத்தக்கது.

உலகத்து மக்கட்கு மானத்தைக் காப்பதற்கு உறுதியாவன ஆடை முதலிய உடுக்கைகளே, அவற்றை முற்காலங்களில் நூல் நூற்கும் பொறி இல்லாத போழ்தத்துப், பெண்டிரும் ஆடவரும் தங்களது கையாலும் சிறு கருவிகளினாலும் பஞ்சுகளைக் கொண்டு நூல் நூற்று ஆடை முதலிய வமைத்து மானத்தை நீக்கி வைத்தவர்கள் தமிழ்நாட்டுச் செங்குந்தார் என்னும் பெரும் பிரிவினரே யாவர்.

உமாதேவியின் பாதச் சிலம்பில் உதிர்ந்த நவமணிகளில் அப் பார்ப்பதியார் திருவுருவத்தைக் கண்ணுற்றுச் சிவமெருமான் கொண்டருளிய இச்சையால் கருவுற்ற ஒளியுடைய நவரத்தினப் பெயர்கொண்ட மகளிர்களிடத்தில் அதிமேம்பாடடைந்த வீரத் தன்மையுடன் உதித்த பெரிய தவத்தினை யுடைய வீரவாகுதேவர் முதலிய நவவீரர்களின் வழித்தோன்றினவார் இச் செங்குந்தர் என்பதாம். இச்செய்தி, புராண பிரசித்தமாம் ஞானப்பிரகாச முனிவரால் செய்யப்பட்ட பிள்ளைத்தமிழில்,


மயில்வா கனத்தோன் துணையாக வந்தோர் தாலோ தாலேலோ தேவியுமை பாகச் சிலம்பில்வரு வீரியர்கள் சிறுதே ருருட்டி யருளே


என்ற அடிகளால் இனிதுணரலாம். குந்தம் என்னும் வீரப் படைக்கு உரியார் செங்க்குந்தர் என்பது பொருள். ( குந்த மெனினும் ஈட்டி எனினும் ஒக்கும்) இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்னர் சேந்தனார் தனது திவாகர நிகண்டினுள்,


செங்குந்தப் படையர் சேனைத் தலைவர் தந்து வாயர் காருகர் கைக்கோளர்


என்று செங்குந்தரைச் சிறப்பிக்கின்றார். இதினின்று செங்குந்தப்படையர் முதலிய ஐந்து பெயர்களும் செங்குந்தர்களையே குறிக்கின்றன என்று அறிகிறோம். ஆயினும், அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரத்து இந்திரவிழவூரெடுத்த காதையுள்,


பட்டினு மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருக ரியற்கையும்


என்னுமிடத்துச் சாலியரையே குறிப்பிட்டுக், கைக்கோளர் என்கின்ற சாதியாரைக் காட்டாமல் விட்டார். இஃது செங்குந்தர்கள் சேனைத் தலைவர்களாகவும், தொண்டைமான் முதலியோர்களாற் பெரும் பட்டங்களும் அரசச் செல்வங்களும் அடையப் பெற்று சிறப்புற்றிருந்த பண்டைய பெருங்குடிகளாய் அமைந்ததால் போலும்.

இவர்களது சிறப்புக்களைப் பிரபந்தங்கள் பலவும் புகழ்ந்து கூறும். நாகை முத்துக் குமாரதேசிகரால் செய்யப்பட்டக் கலித்துறையந்தாதியில்,


"தப்பில் புராணம் பரணி உலா பிள்ளைத் தண்டமிழ்முன் செப்பும் பிரபந்தம் எண்ணில பெற்றவர் செங்குந்தரே"


-என்று வருவனவற்றால் இவர்கள் பிரபந்தங்களால் புகழப் பெற்றவர்கள் எனவறியலாம்.
செங்குந்தர்கள் சிறந்த வீரர்கள்


சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர் செங்குந்தரே



சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே


என்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும்.
சீலமுடையவர்


தேவாரமுற்றும் படிப்பாரும் அங்கையிற் செங்குந்தரே



திருவாசகஞ் சொல் ஒருவா சகத்தரும் செங்குந்தரே



நிதம் அந்திசந்தி சிவசிந்தனை மறவாதவ ராவரிச் செங்குந்தரே


என்று, வரும் பழைய நூலடிகளால் அறியலாம்.
சொன்ன சொல் தவறாதவர்


தேவே விலகினும் நாவிலங் காதவர் செங்குந்தரே


என்று வரும் நூலடியால் உணரலாம். செங்குந்தரைப் பற்றிய தகவல்கள் பல இருக்கின்றன. பழைய காலத்துக் கல் வெட்டுக்களில் கண்ட விசயாலயன், பராந்தகன், கோப்பரகேசரி, இராஜேந்திரன், திரிபுவன தேவன், இராசராசன், விக்கிரம சோழன், அநபாயன், சுந்தர பாண்டியன், வல்லாள தேவன் முதலிய அரசர்களது ஆணையில், இப்பிரிவினரை பாராட்டிக் கூறியுள்ளனர். திருவண்ணாமலையில் வல்லாள தேவரால் ஏற்படுத்தப்பட்ட கோபுரத்தின் தென்பாகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு அரிய கல்வெட்டு ஒன்றில், இவர்களது சிறப்புக்கள் கூறப்பட்டிருக்கின்றன.

பல்குன்றக் கோட்டத்துச் சிங்கபுர நாட்டு அண்ணமங்கலயப்பற்று தேவனூர்க் கோயில் கல்வெட்டுக்களிலும், வெண்ணிக் கோட்டத்து கோலிய நல்லூரிலும், பையூர்க் கோட்டத்துக் கீழ்பட்டைய நாட்டின் திருவான்பூர் என்னும் தமிழ் முருகவேளாரது கோயிலுள்ளும் எழுதப்பட்டுள்ள அரிய கல்வெட்டுகளுள், இவர்களது பெருமைப்பாடுகள் குறித்து மிகச் சிறப்பிக்கப்படுகின்றன். இக் கல்வெட்டுக்களால் பல கோயில்கள் எழுப்பித்தும் பல கோயில்களுக்கு நித்தியக் கட்டளைகள், திருவிழாக்கள் முதலிய தான தருமங்கள் செய்வித்தும் வாழ்ந்தவர் செங்குந்தர் என்பது விளங்கும்.

இவர்களது வரலாற்றைத் தொண்டை மண்டல வரலாறு என்னும் நூலிலும், இம்மரபில் தோன்றி திக்கெங்கணும் வெற்றிக்கொடி நாட்டிய ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பெற்ற, "ஈட்டி எழுபது" என்ற நூலினும், கடம்பவன புராணத்தில் வீர சிங்காதனச் சருக்கத்திலும், செங்குந்தர் பரணி, சேனைத்தலைவர் உலா, பிரமாண்ட புராணம், கந்த புராணம், திருவாரூர் லீலை, ஏழாயிரப் பிரபந்தம், வல்லான் காவியம் முதலிய நூல்களிலும் சோழ மண்டல முதலிகள் என்னும் காரணப் பெயரையும், வீரதீரத் தன்மைகளையும் கூறப்பட்டிருக்கின்றன.
மக்கள் பரப்பு

இம்மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம்,நாமக்கல், ஈரோடு, கோவை தர்மபுரி, ,தஞ்சை,திண்டுக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பிடத்தகுந்த செங்குந்த முதலியார்

கி.பி 18ம் நூற்றாண்டுக்கு முன்

புலவர்கள்;

ஒட்டக்கூத்தர்
குகநேரியப்ப முதலியார்
காங்கேயர்
பொய்யாமொழிப் புலவர்
இரட்டைப்புலவர்கள்
படிக்காசுப் புலவர்

கி.பி 19ம் நூற்றாண்டுக்குப் பின்

அரசியல்;

சி. நடேச முதலியார்[4]
அண்ணாதுரை
புலவர் கோவிந்தன்

விடுதலைப் போராட்டம்;

தில்லையாடி வள்ளியம்மை
திருப்பூர் குமரன்
டி. என். தீர்த்தகிரி

இலக்கியம்;

பாரதிதாசன்
ஆர். சண்முகசுந்தரம்
க. வெள்ளை வாரணனார்

ஆன்மீகம்;

மெய்ப்பொருள் நாயனார்
பெருமிழலைக் குறும்ப நாயனார்
நரசிங்கமுனையரைய நாயனார்
தண்டியடிகள் நாயனார்
கூற்றுவ நாயனார்
காரி நாயனார்
கணம்புல்ல நாயனார்
எறிபத்த நாயனார்
இடங்கழி நாயனார்
கிருபானந்த வாரியார்
வேதாத்திரி மகரிஷி

அறிவியல்;

மயில்சாமி அண்ணாதுரை

கலைத்துறை;

திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்
ஆர். கே. செல்வமணி
பா. விஜய்
நா. முத்துக்குமார்

மக்கள் சேவை;

எம். பி. நாச்சிமுத்து முதலியார்
[center]

செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Bloganathankamakkur



A.பாலமுருகன் காமக்கூர்
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 12:15 pm

திருமுருகன் உதித்தனன் உலகம் உய்ய!
அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!
- கந்தபுராணம்

"பிறவா யாக்கைப் பெரியோன்" என்று சிலம்பு உரைக்கும் ஈசனே, அறுமுகச் செவ்வேள் முருகனாக உதித்தனனாம். அருணகிரியார் முருகனை "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்பார். காளிதாசன் "குமார சம்பவம்" எனப் பெயரிட்டதுபோல; அந்த நிகழ்வை விளக்கும் காண்டத்தைக் கந்தபுராணத்தில் "உற்பத்திக் காண்டம்" எனப் பெயரிட்டுள்ளது போல;- உலகம் உய்வதெற்கன ஈசனே குழந்தை வடிவம் கொண்டு தோன்றிய அரும்பெரும் நிகழ்வு அஃது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதம் கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க! என்றார்.
-கந்தபுராணம்


தேவர்கள் ஈசனிடம் வந்து வேண்டுகிறார்களாம். எப்படி? "வேதங்களையும் கடந்து நின்ற விமலனே! நீ உன்னிடத்திலிருந்து, உன்னையே நிகரான ஒப்பற்ற குமரனைத் தந்திடுதல் வேண்டும்!”. நின்னையே நிகர்த்த மேனியாய் வேண்டும் என வேண்ட - அதன்படி நடந்த நிகழ்வது - திருமுருகத் தோற்றம். தந்தை இல்லாதாதோர் பரமனை தந்தையாகக் கொண்டவன் கந்தன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

முகங்கள் ஆறு:
முருகனுக்கு முகங்கள் ஏன் ஆறு?

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

ஆதி அருணாசலம் அமரும் ஈசனாகவே குமரக்கடவுள் இருப்பதால், முருகனுக்கும் ஆறு முகங்கள்.
சிவனுக்கும் அறுமுகங்களா? சிவனுக்கு ஐந்து முகங்கள் தானே என்றால், ஆம் பொதுவாக ஐந்து முகங்கள்தான்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் தவிர, உள்நோக்கி இருக்கும் 'அரோமுகம்' என்றொரு முகமும் சொல்லப்படுகிறது - அது ஞானிகளுக்கு மட்டுமே புலப்படுமாம். அந்த அரோமுகம் வெளிப்பட்ட நேரத்தில், ஆறு முகத்தின், ஆறு நெற்றிக்கண்ணில் இருந்தும் வெளிப்பட்ட ஆறு அருட்பெரும்ஜோதிகளாக வெளிப்பட்டனவாம்.
பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பானது - ஆறு ஜோதிகளாய், ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி என ஐம்பெரும் பூதங்களால் சரவணப்பொய்கைக்கு வந்து, ஆங்கே உதித்தனன் திருமுருகன்.
(தந்தையின் முகம் ஐந்து + தாயின் முகம் ஒன்று - இரண்டும் சேர்ந்து ஆறுமுகன் என்றும் சொல்வதுண்டு.)

கரங்கள் பன்னிரெண்டு, கண்கள் பதினெட்டு
சிவனுக்கு கரங்கள் பத்து. சிவனைவிடப் பெருமை வாய்ந்தது அவனது முருகப் பெருமான் தோற்றம் எனக்குறிக்கவோ அவனுக்கு பன்னிரெண்டு கரங்கள்!
சூரியன், சந்திரன், அக்னி - இவை மூன்று கண்களாக ஒவ்வொரு முகத்திலும் என, அவனுக்கு மூவாறு கண்கள்.
முன்பொரு பதிவிலும் பதினெட்டு கண்களைப் பற்றி இங்கே பார்த்திருக்கிறோம்.

அப்படியாக ஆங்கு வந்து கந்தப்பெருமான் உதித்ததன் பொருள் சூரபதுமன் வதம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் உய்யவதற்கான உக்தியினைத் தந்திடத்தான்.

அப்படிப்பட்ட கந்தபெருமாளை நாவினிக்கப் பாடும் திருப்புகழ் சொல்வது:

ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது

(ஓலமிடும் மறைகளால் 'ஒன்றென' உரைக்கப்படும் பரம்பொருள் அது. மேலைப் பெருவெளிதனில் ஒளிர்கின்ற பரஞ்சுடர் அது. ஓதும் நூல்களால் சொல்லப்படும் மூன்று வழிகளை பின்பற்றுபவர்களாலும் "இது தான் அது" என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவிற்கு துரிய நிலைதனைக் கடந்தது பரம்பொருள் அது.)

போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
(அருவம், உருவம் - இரண்டு நிலைகளிலும் இருப்பது அது.
பிரபஞ்சம், உடல், உயிர் - என எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பது அது.)
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR - Page 2 Karthigaiclipimage00100
சால வுடைய தவர்கண்டு கொண்டது
(சிவஞான சித்தி மிகுந்த தவயோகியர் கண்டுகொண்டது அது.)
மூல நிறைவு குறைவின்றி நின்றது
(மூலப் பொருளாய், குறைவு ஏதுமின்றி நின்றது அது.)
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்
(சாதி, குலம் போன்றவை அற்றது.)

சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
(அனுபவம் வாய்ந்தவர்கள் ஒடுங்கும் வீடுபேறு பரமானந்தக் கடலான,
நின் பாத மலர்களை, நான் அடையப் பெறுவேனோ.)

வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
(பாலன், குமரன், குகன், கந்தன், கிரொஞ்ச மலையைப் பிளந்தோன், மயில் வாகனன்
என்றெல்லாம் துதித்துப் போற்றிய இந்திரன் கடும் துயரத்தைக் களைந்தவனே)

வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
(சந்தனம், மங்கலம், கடகம் முதலியவற்றை அணிந்த புயங்களை உடையோனே,
சிங்கம் போன்ற கம்பீர அழகு பொருந்தியவனே,
வெற்றி சூடி போர்களத்தில் சிறந்த சிகாமணியே வயலூரா)

ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி
(ஞாலத்தின் முதல்வியும் இமவான் மகளுமான நீலி/ கௌரி,
குண்டலினி சக்தியான அம்பிகையாம்)

நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
(நாத வடிவினளாள், அகிலம் எங்கும் பரந்தவள்
அன்னை பராசக்தி தந்தருளிய பெருமாளே) [center]



A.பாலமுருகன் காமக்கூர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக