புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Poll_c10''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Poll_m10''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Poll_c10 
30 Posts - 88%
வேல்முருகன் காசி
''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Poll_c10''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Poll_m10''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Poll_c10 
2 Posts - 6%
heezulia
''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Poll_c10''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Poll_m10''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Oct 14, 2009 10:54 am

''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?''
''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Bits_verline

''இது அரசு சார்பாகச் செல்லும் குழுவல்ல... தி.மு.க. கூட்டணியின் சார்பாக சென் றிருக்கும் குழு. அக்கறையிருந்தால் எதிர்க்கட்சி எம்.பி-க்களும் செல்லலாம்!'' என்ற விளக்கங்களுக்கு இடையே ஐந்து நாள் பயணமாக இலங்கையில் இருக்கிறார்கள் நம்மூர் எம்.பி-க்கள்! 'வருவது யார் சார் பாக இருந்தாலும் சரி... வேதனைகளைக் கொட்டித் தீர்ப்போம்' என்று முகாம்களில் முடக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்கள் இவர்களுக்காகவேஆவலோடு காத்திருந்தார்கள். இலங்கையின் தமிழ் எம்.பி-க்களும் சிங்கள அரசின் திட்டமிட்ட இனவெறித் தாண்டவங் களைப் பட்டியலிடக் காத்திருந்தார்கள்.


திங்கள் கிழமையன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்திக்க இந்த எம்.பி-க்கள் குழு நேரமும் குறித்துவிட்ட நிலையில்... கோபாவேசத்தில் பொங்கத் தொடங்கிவிட்டார்கள் ஈழத் தமிழர்கள். கொழும்பில் இருக்கும் தமிழ் உணர்வாளர்கள், ''முகாம்களில் வதைபடும் தமிழ் மக்களின் வேதனைகளை அறியத்தான் தமிழக எம்.பி-க்கள் இங்கே வருகிறார்கள் என நினைத்தோம்,ஈழ விவகாரத்தில் அக்கறை கொண்ட கனிமொழியும், திருமாவளவனும் அந்தக் குழுவில் இருந்ததால், மத்திய அரசின் பார்வைக்கு மக்கள்


வேதனைகள் கொண்டு போகப்படும் என நம்பினோம். ஆனால், மாலை மேளதாள வரவேற்பு, மரியாதைகள் என திருமண விழாவுக்கு வருப வர்களைப் போல தமிழக எம்.பி-க்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து அழைத்தது சிங்கள அரசு. 'எங்கள் மக்கள் துக்கத்தில் தவிக்கும் நிலையில் ஏன் இத்தனை ஆடம்பர வரவேற்பு?' எனக் கேட்டு தமிழக எம்.பி-க்கள் அதனைத் தவிர்த்திருக்கலாம். அவர்களோ புன்முறுவல் பூத்தபடி... சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந் தார்கள்!

இலங்கையின் தமிழ் எம்.பி-க்களை ஒன்றரை மணி நேரம் சந்தித்துப் பேசிய தமிழக குழு, முகாம்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான கொடுமை களையும் குறித்துக் கொண்டது. முகாம்களில் இருக்கும் இளைஞர்கள் சித்ரவதை செய்யப் பட்டும், இளம்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டும் கொல்லப்படுகிற விஷயங்களைக் கேட்ட தமிழக எம்.பி-க்கள் ஒரு கட்டத்தில் கண்கலங்கினார்கள். ஆனால், 'அப்படியெல்லாம் நடக்கிறதா?' என பெயரளவுக்குக்கூட முகாம் மக்களிடம் ஆறுதலாக அவர்கள் விசாரிக்கவில்லை. சித்ரவதை நிகழ்த்தப்படும் முகாம்களை நேரடி ஆய்வு செய்வதற்கு பதிலாக, சிங்கள அரசு சுட்டிக் காட்டிய முகாம்களுக்கே அந்த குழு சென்றது. அங்கிருந்த மக்களிடம்கூட பெரிதாக ஏதும் விசாரிக்கவில்லை.

வவுனியாவில் உள்ள எட்டு முகாம்களுக்குச் சென்ற எம்.பி-க்கள் குழு, 'சிங்கள அரசு எங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. பூரண சுதந்திரத்தோடு நாங்கள் சுற்றிப் பார்த்தோம்' என மீடியாக்களிடம் முழங்கியது. தண்ணீரைக்கூட அளந்து கொடுக்கும் சிங்கள அரசின் சித்ரவதைகள் பற்றி எலும்பும் தோலுமாகச் சிதைந்து கிடக்கும் எங்கள் மக்களைக் கண்ணால் காணும்போதே தெரியும். அப்படியிருந்தும் சிங்கள அரசால் பயிற்று விக்கப்பட்ட சிலர் ஒப்பித்த விஷயங்களை மட்டுமே கேட்டு, தமிழக எம்.பி-க்கள் ஏமாறலாமா?

இதோடு கிழக்கு மாகாணத்தின் முதல்வரான பிள்ளையான், இலங்கை மந்திரியான டக்ளஸ் தேவானந்தா போன்றோரையும் சந்திக்க வைத்த சிங்கள அரசு, தமிழக ''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி P4எம்.பி-க்களிடத்தில்தவறான தகவல்களை அவர்கள் மூலம் பரப்பியுள்ளது.இதையெல்லாம் பார்க்கும்போது தமிழகக் குழுவால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பது எங்களுக்கு விளங்கிவிட்டது!'' என்று வேதனையைக் கொட்டித் தீர்த்தனர் இந்ததமிழ்உணர்வாளர்கள்.

இதற்கிடையில் யாழ் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற தமிழக எம்.பி-க்கள் குழுவை, அங்கிருந்த மாணவர்கள் சூழ்ந்து கொண்டு ஆவேசப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் பத்திரிகையாளர்கள் சிலர், ''ஆறுமுகம் தொண்டமானுடன் யாழ்ப்பாணம் கோட்டையில் ஹெலி காப்டரில் வந்திறங்கியது எம்.பி-க்கள் குழு. தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள், யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துப் பேசினார்கள். 'போர் நடந்த நேரத்திலெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இப்போது ஏன் வந்தீர்கள்?' என ஒரு மாணவன் கண்ணீரோடு கேள்வி எழுப்ப, அடுத்த கணமே மற்ற மாணவர்களும் ஆவேசப்பட ஆரம்பித்து விட்டார்கள். 'இந்தியாதான் போரை நடத்தியது. அதனைத் தமிழகம் தட்டிக் கேட்கவில்லை' என கோஷங்கள் கிளம்ப... சில மாணவர்கள் தி.மு.க-வின் இரண்டு முக்கிய எம்.பி-க்களை முற்றுகையிட்டு, 'ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்கள் பறிபோகக் காரணமாக இருக்கப் போகிறீர்கள்?' என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்கள். கனிமொழி, 'உங்களின் உணர்வுகளை அவசியம் மத்திய அரசுக்குத் தெரியப் படுத்துகிறேன்' என்றார்.
''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி P6b

இதற்கிடையில், 'உங்களிடம் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மக்களின் நிலையை இந்தக் கடிதத்தில் சொல்லி இருக்கிறோம். இதை இந்திய பிரதமரிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள்' எனச் சொல்லி அகதி முகாம்களின் நிலையை அவசரகதியில் எழுதி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள், தமிழக குழுவிடம் கடிதம் ஒன்றைக் கொடுத் தார்கள். அதில், 'முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழ் மக்களை தயவுசெய்து நேரில் போய்ப் பாருங்கள். அவர்களின் நிஜமான வலியை உணருங்கள். அலைந்து திரியும் எம்மக்களுக்கு வாழ்வுரிமை பெற்றுக் கொடுங்கள்' என உருக்கமாக வேண்டி இருந்தார்கள். இதற்கெல்லாம் தமிழக எம்.பி-க்கள் எந்தள வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள் என்று அவர்கள் இந்தியா திரும்பியதும் பார்க்கத்தானே போகிறோம்!'' என்றார்கள் பத்திரிகையாளர்கள்.
''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி P6a

''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி P5


தமிழக எம்.பி-க்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை தமிழ் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். ''தமிழக குழுவுக்கு போகிற இடமெங்கும் எதிர்ப்பு நிலவியது. ஈழப் போருக்கு பிரதான காரண மாக காங்கிரஸையும் தி.மு.க-வையும்தான் எங்கள் மக்கள் நினைக்கிறார்கள். அவர்களின் கோபம் இன்னும் ஆறவில்லை. வவுனியா முகாமுக்கு தமிழக எம்.பி-க்கள் சென்றபோது, அங்கிருந்த மக்கள் பலரும் பேசவே தயங்கினார்கள். ஒரு சிலர் மட்டும், 'சீக்கிரமே மழை சீஸன் வரப் போகிறது. அதற்குள் எங்களை இங்கிருந்து சொந்த இடத்துக்கு அனுப்பி வையுங்கள். இல்லையேல் மழையே எங்களின் உயிரைக் குடித்துவிடும்!' எனக் கெஞ்சினார்கள். முகாமில் இருந்த குழந்தைகளின் நிலையைக் கண்டு எம்.பி-க்கள் கண் கலங்கிப் போனார்கள். ஒரு எம்.பி. அடக்க முடியாமல் கதறி அழுதார். உலக நாடுகளின் உதவிகளை இழந்து தவிக்கும் இலங்கை அரசோ, தமிழக எம்.பி-க்கள் கொடுக்கும் அறிக்கை மூலமாகத் தங்களின் கறையைத் துடைத்து வீசிவிட முடியும் என நம்புகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்குமென்று!'' என்றார்கள்.

10 பேர் குழுவில் இடம்பெற்ற ஒரு எம்.பி-யிடம் பேசினோம். ''எக்காரணம் கொண்டும், தனிப்பட்ட முறையில் மீடியாக்களிடம் பேசக் கூடாது என எங்களுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் மீறிச் சொல்வதானால், முகாம்களில் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலையைக் கண்டு நெஞ்சே கலங்கிப் போனது. போதுமான உணவோ, மருத்துவ வசதியோ இல்லாமல் அங்கே தவிக்கிற மக்களின் நிலையைக் கண்டிப்பாக தமிழக முதல்வரிடம் எடுத்து வைப்போம்!'' என்றார் அவர்.

மூன்றுநாள் பயணம்தான் முடிந்திருக்கிறது. அடுத்த இரண்டு நாட் களில் ஏதும் அற்புதம் நடக்குமா என்று காத்திருப்போம்!

--இரா.சரவணன்
நன்றி:ஜூனியர் விகடன்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 14, 2009 11:06 am

இவர்கள் சொத்துக் கொடுத்தாலே போதும் இலங்கை தமிழர்களின் தற்போது நிலைமாற சொய்வார்களா...?



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 11:09 am

''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி Icon_eek ''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி 56667 ''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி 67637

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Oct 14, 2009 11:22 am

Tamilzhan wrote:இவர்கள் சொத்துக் கொடுத்தாலே போதும் இலங்கை தமிழர்களின் தற்போது நிலைமாற சொய்வார்களா...?

''இன்னும் எத்தனை பேரை கொல்லப் போறீங்க?'' - ஜூ.வி 806360

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக