புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு'


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 02, 2012 8:51 am


உடம்பில் தெம்பு இருக்கும் வரைக்கும் உழைத்து விட்டு, இறுதி காலத்தில் பிள்ளைகளை நம்பி இருக்கும், பல பெற்றோருக்கு, காப்பகங்களே உறைவிடமாகின்றன. காலத்தின் வேகத்திற்கும், நவீனத்தின் சாயலுக்கும் பழகி விட்ட நமக்கு, கலாசார மாற்றங்கள் மட்டும் பரிசாக கிடைக்கவில்லை, மாறாக, கலாசார சீரழிவுகளும் பெரும் சுமையாக கிடைத்துள்ளன.அந்த தாக்கத்தில் உருவானவை தான் காப்பகங்கள். பெரம்பூர், மாநகராட்சி நகர்ப்புற பெற்றோருக்கான காப்பகத்தில் வசித்து வரும் சாந்தி, 68, என்பவரோடு உரையாடியதில் இருந்து...

எவ்வளவு நாளா இந்த காப்பகத்தில் இருக்கீங்க?

மூணு வருஷமாச்சு. நானும், என் கணவரும் சேர்ந்தே தங்கியுள்ளோம். ஐந்து மகன்கள் இருந்தும் ஆதரவு இல்லாததால், காப்பகத்துக்கு வந்து விட்டோம். கடைசி காலத்தில், நான் ஒரு பையன் வீட்டில், கணவர் ஒரு பையன் வீட்டில் என்று, பராமரிப்பு என்ற பெயரில், வேலையாட்களாக பணிபுரிந்தோம். மாதத்திற்கு ஒருமுறை தான், சேர்ந்து பார்க்க முடியும். அவரை விட்டு தனியாக இருக்க முடியல. வீட்டு வேலை செய்ய அவருக்கு தெரியாது. நான் வீட்டை துடைக்கலாம். அவரால் முடியுமா? அதனால் தான் வந்து விட்டோம்.

மகன்கள் என்ன வேலை செய்றாங்க?

எல்லாரும் நல்ல வேலையில தான் இருக்காங்க. சொந்த வீடு, கார் என, எல்லாம் இருக்கு. ஐந்து பேரின் திருமணத்திற்கு பின், சொத்தை பிரித்து கொடுத்தோம்.எல்லாம் பிள்ளைகளுக்கு தானே என, கபடமில்லாமல் கழுத்தில் போட்டிருந்தது முதல், கணக்கு வைத்து பிரித்து கொடுத்தேன். இன்று, காப்பகத்தில் கிடக்கிறோம்.

பேர குழந்தைகளை பார்த்து எவ்வளவு நாளாச்சு?

எனக்கு, மூன்று பேரன், ஐந்து பேத்திகள். என் பேர குழந்தைகளுக்கு தாத்தா என்றால், ரொம்ப பிடிக்கும். அவர் நிறைய கதை சொல்வார். நான் தான் சாப்பாடு ஊட்டுவேன்.எந்த குழந்தையை பார்த்தாலும், பேர குழந்தைகளின் நினைப்பு தான் வரும். நான் அவருகிட்ட சொல்றதில்ல. காலம் கடந்து போயிடுச்சு. இனி, யார் மீதும் குற்றம் சுமத்த விருப்பம் இல்ல.என் பிள்ளைகளும் பேர குழந்தைகளும் நல்லா இருக்கணும். அதை தான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.

காப்பகங்கள் அதிகரிக்க காரணம் என்னன்னு நினைக்கிறீங்க?

அந்த காலத்துல, என் மாமியார், 75 வயசுல தான் இறந்தாங்க. அவங்க இருந்த வரைக்கும், வீட்டு பொறுப்பை எடுத்து செய்றது, பண விவகாரம் எல்லாம் அவங்க தான்.அப்போ, மூத்தவங்கள மதிச்சோம். இப்போ வயசாயிட்டா, பெத்தவங்க கூட பாரமாகிடுறாங்க. நாளைக்கு அவங்களுக்கும் வயசாகிடும்கிறது தெரியல.எங்கள மாதிரி, பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கற வரைக்கும், காப்பகங்கள் இருக்கணும். இல்லாட்டி, பிளாட்பாரம் தான் வீடாகிடும்.

உங்கள் எதிர்பார்ப்பு?


வயிறு நிறைய மூணு வேளையும் சாப்பிட்டே, ரொம்ப நாளாகிடுச்சி. வயிறும் பசிக்கல. பசி அதிகமாயிட்டா, கதவுக்கு பக்கத்துல வந்து நின்னு, தெருவுல போற வர்ற குழந்தைகளை பாத்துக்கிட்டே இருப்பேன்.பேர குழந்தைகளை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அவங்களோட, ஒரு நாள் முழுவதும் இருந்தா, அந்த நாளை நினைத்து... (அழுகிறார்)அப்போது, அவரது கணவர் வந்து, "புலம்பாதம்மா' என சொல்லி, அழைத்து சென்றார். அவரிடம் பேசிவிட்டு நகர்ந்த போது, மனம் கனத்தது.

தினமலர்



"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 1:25 am

மனம் பதைக்கிறது படிக்கையிலே

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுதான் போலிருக்கு




அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 1:25 am

அருமை சிவா.... :வணக்கம்:



"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' Paard105xz"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' Paard105xz"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' Paard105xz"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 03, 2012 8:05 am

இனி வரும் காலங்களில் இது போல் காட்சிகள் அதிகம் கண்ணுக்கு தெரியும்.காதில் விழும்.
சீர்கேடு , நம்ப முடியாத அளவு ,வெளிப்படும்.
சுயநலம் ஆட்கொல்லியாக மாறும். மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். அநியாயம்
ரமணியன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 03, 2012 8:14 am

வேறை மறந்த விழுதுகளாக
பெற்ற பிள்ளைகள்...
காப்பகத்தில் பெற்றோர் !

இந்த அவல நிலைக்கு பிள்ளைகள் தங்களின் எதிர்கால வாழ்வை என்னிப்பார்க்காததுதான்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Dec 03, 2012 10:27 am

படிக்கும் போதே மனம் கனக்கிறது.... சோகம்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 03, 2012 2:11 pm

வார்த்தைகள் கண்ணீராய் வெளிவருகின்றன
மௌனமே மொழி ஆகிறது
வாழையடி வாழையாய் வாழ வாழ்த்துகிறோம்
எந்த மரமும் வளர்ந்தபின்னும் வேரை பிரிவதில்லை
ஆனால் இந்த மனிதன் மட்டும் மனிதம் இழந்து
இறகு முளைத்த பறவையாக பிரிந்து பறக்கிறான்
அழிவை நோக்கி !!!


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 03, 2012 2:54 pm

தன் காரிய புலிகளாக அனைத்து பேரும் (கல்நெஞ்சக்காரர்கள் ) இருக்கிறார்கள்




"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' M"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' U"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' T"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' H"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' U"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' M"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' O"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' H"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' A"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' M"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' E"மூணு வேளையும் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு' D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 3:47 pm

வயிறு நிறைய மூணு வேளையும் சாப்பிட்டே, ரொம்ப நாளாகிடுச்சி. வயிறும் பசிக்கல. பசி அதிகமாயிட்டா, கதவுக்கு பக்கத்துல வந்து நின்னு, தெருவுல போற வர்ற குழந்தைகளை பாத்துக்கிட்டே இருப்பேன்.பேர குழந்தைகளை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அவங்களோட, ஒரு நாள் முழுவதும் இருந்தா, அந்த நாளை நினைத்து... (அழுகிறார்)
மனதில் ஏனோ ஈட்டி பாய்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக