புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_m10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_m10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_m10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_m10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_m10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_m10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_m10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_m10இந்துக் கோயில்... ஆகம விதி ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துக் கோயில்... ஆகம விதி !


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 12:56 am

இந்துக் கோயில்... ஆகம விதி ! Periyakovil3
இன்றைய இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால், அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்பட்டும், நிருவகிக்கப்பட்டும் வந்தன என்பது வரலாற்று உண்மையாகும். மதுரைக் கோயிலுக்குப் பல கிராமங்கள் சொந்தமாயிருந்தன. இந்தக் கிராமங்களையயல்லாம் முகமதிய அரசாங்கம் தனது சொந்தப் பொறுப்பில் 1790 வரையில் தக்க வைத்துக் கொண்டு இருந்தது. இக்கோயிலுக் குள்ள கட்டளைகள் 1704 இல் இருந்து 1735 காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன. பின்னர் மெட்ராஸ் அரசாங்கம் மதுரை மாவட்டத்தைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது. 1801 இல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி இக்கிராமங் களைத் தன் வசமாக்கிக் கொண்டது. 1849 வரை கிழக்கிந்தியக் கம்பெனி இக்கிராமங்களைத் தன் பொறுப்பில் வைத்திருந்தது.

முகமதிய அரசாங்கம் இந்தக் கிராமங்களிலிருந்து வந்த வருவாயின் ஒரு பகுதியை மதுரைக் கோயிலின் அறக்கட்டளை யின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத் தியது. மீதி வருமானத்தைத் தன் தேவைக்குச் செலவழித்துக் கொண்டது. 1790 இல் இருந்து 1801 வரை என்ன நடந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

பழைய ஸ்மிருதிகளில் அரசன் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டச் சொத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், கோயில்களை இந்திய அரசர்கள் வியாபார மையமாக நடத்தி வந்தனர் என்பது நடைமுறை உண்மை. இஸ்லாமி யர்களையோ, கிருத்துவர்களையோ இந்த ஸ்மிருதிகள் கட்டுப்படுத்தவில்லை.

1810 இல் வங்க மாநிலத்திலும் 1817 இல் சென்னை மாநிலத்திலும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து இஸ்லாமிய நிறுவனங் களைக் கையகப்படுத்தி Board of Revenue விடம் ஒப்படைத்து விட்டன.

1863 இல், ஆங்கில அரசாங்கம் அந்தந்த மத நம்பிக்கை உள்ளவர்களிடமே இச்சொத்துகளை நிருவகிக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட முடிவு செய்தது. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு Act XX1863 சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி இஸ்லாமியரும், இந்துக்களும் கோயில் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு அறக்கட்டளை களை நிருவகிக்க சட்டப்பூர்வமாக அதிகாரம் பெற்றனர். இக்கோயில் குழுக்கள் அறங்காவலர் களையும், கண்காணிப்பாளர்களையும் நியமிக்கும் உரிமையைப் பெற்றன.

இங்கு இரண்டு முக்கிய நிகழ்வுளைக் கவனிக்க வேண்டும்.

1.எவ்வகையான செல்வாக்குகள் இந்த அதிகார மாற்றத்திற்கு அடிப்படையாக இருந்தன?

2. அந்தந்த மதத்தைச் சார்ந்த, அதாவது இந்து, இஸ்லாமிய சமயத்தவர்களுக்கு அதிகாரப் பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

ஆங்கில அரசாங்கம் சமய நிறுவனங்களை நிருவகிக்கும் அதிகாரத்தை, அந்தந்த மதங்களைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ, வகுப்புக்கோ, ஒரு பிரிவினருக்கோ, ஒரு குழுவுக்கோ மாற்றம் செய்யவில்லை. அதற்கு மாறாக இந்து மதத்தைச் சார்ந்த அனைத்து இந்துக்களுக்கும் மத நிறுவனங்களை நிருவகிக்கும் அதிகாரம் உண்டு என்று தெரிவித்தது. இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். குறிப்பிடத்தக்க செயலுமாகும். அடுத்து, பிரிவி கவுன்சில் தனது நீதிமன்ற மொழியில் மிகப் பாதுகாப்பாகக் கூறியது என்னவென்றால், இஸ்லாமிய, இந்து சமய நம்பிக்கை உள்ளவர்களிடமே அந்நிறுவனங்களை நிருவகிக்கும் பொறுப்பை ஆங்கில அரசாங்கம் ஒப்படைக்கிறது என்பதாகும்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1817 இல் Regulation VII of 1817 சட்டத்தின்படி, வருவாய் போர்டு மாவட்ட கலெக்டர்கள் மூலமாக இந்திய நிருவாகம் நடைபெற்றது. 1814 இல் Court of Directors, ஆங்கில அரசு அதிகாரிகள் கோயில்களின் முக்கிய தலங்களை நிருவகிப்பதிலிருந்து தங்களது அதிகாரத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றது.

கோயில்களை மேலாண்மை செய்யும் கட்டுப்பாடு Board of Revenue வசம் இருந்தது. இதை இந்துக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் கிருத்துவ மினரிகள் இந்துக் கோயில்களை ஆங்கில கிருத்துவ அரசாங்கம் நிருவகிப்பது கூடாது என்று எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு வலுவாக இருந்ததால் மாவட்ட ஆடசியாளர்களிடம் இருந்து இது குறித்து அறிக்கை கேட்டனர். ( 1814) Act XX1863 சட்டத்தின்படி Board of Revenue கோயில்களையும், ஏனைய சமய நிறுவனங்களை யும் நிருவகிக்கும் அதிகாரத்திலிருந்து விடுவிக்கப் பட்டது. கோயில் சொத்துக்களை நிருவகிக்கும் அதிகாரம் நிர்வாகக் குழுக்களிடம் ஒப்படைக் கப்பட்டது.

இந்த அதிகார மாற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று, இந்துச் சட்டத்தின் மிகச்சிறந்த வல்லுநராக Privy Council ஆல் அங்கீகரிக்கப்பட்ட கோஸ் அவர்கள் கூறுவது மிக முக்கியமானதாகும். இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மாற்றத்திற்கு, பிராமணர்களுடைய ஸ்மிருதியோ, சைவர்களு டைய ஆகமமோ, வேறெந்த புனித நூலோ அல்லது மரபோ அல்லது வர்ணாசிரம பழக்கமோ, எந்த ஒரு இந்துவோ காரணகர்த்தாவாகவில்லை. இன்று காணப்படும் தேவஸ்தான குழு, அறங்காவலர்கள் ஆகியவை தோன்றுவதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்தது கிருத்துவ மி­னரியே ஆகும். கிருத்துவ ஆங்கில அராசங்கம், இந்து சமய நிறுவனங்களை நிருவகிக்கக் கூடாது என்று இங்கிலாந்து கிருத்துவ மி­னரியே எதிர்த்ததால் விளைந்ததே இந்த அதிகாரப் பரிமாற்றம்.

ஆக 1810 இல் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இந்துக் கோயில்கள் 1863 இல் கிருத்துவ மி­னரிகளின் எதிர்ப்பால், அதிகார மாற்றம் செய்யப்பட்டு, இந்துக் கோயில்கள் விடுதலையடைந்தன. வங்காளத்தில் 1810 லும் மெட்ராசில் 1817 லும், பம்பாயில் 1827 லும் சமய நிறுவனங்களை நிருவகிக்கும் அதிகாரத்தைப் போர்டு ஆப் ரெவின்யூவிடம் ஆங்கலக் கிழக்கிந்தி யக் கம்பெனி ஒப்படைத்தது. அந்நிறுவனங்கள் அனைத்தும் 1863 இல் முழு விடுதலையடைந்தன.

அபுதுபே என்ற பிரெஞ்சு பாதிரியார் கூறுவதாவது, “ ஆங்கில அரசாங்கத்திடம் இருந்து இந்து சமய நிறுவனங்கள் ஏனைய அறக்கட்ட ளைகள் ஆகியவற்றின் நிருவாகப் பொறுப்பு பிராமணர்களிடம் நேரிடையாக மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்டதும், பிராமணர்கள் வர்ணாசிரம முறையை வேதகால அடிப்படை யாகக் கொண்டு நிலைநிறுத்தத் தலைப்பட்டனர். பிராமணர்கள் பழைய சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்திற்கும், திராவிடச் சாதியினரை அடிமைப்படுத்திச் சுரண்டுகிற வகையில் விளக்கம் அளித்தனர். ”

வேதம் படித்த பிராமணர்கள் ஆகம சமயத்தில் இணைந்து கொள்வற்குத் “ தீட்சை ” பெற வேண்டும் என்பது முக்கியமாகும். எவன் ஒருவன் தான் பிறந்த சாதியின் அடிப்படையில் ஸ்மிருதிகள், புராணங்கள் படிப்பதற்குத் தகுதியற்றவன் என ஒதுக்கப்படுகிறானோ, அவன் படிப்பதற்குள்ளதே ஆகமங்கள் ஆகும். ஆகமங்கள் என்பது திராவிடக் கடவுள்களான சிவனையும், சக்தியையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கூறுவதேயாகும்.

ஆக, ஆகமங்கள் திராவிடர் களுக்கும் ‡ ஸ்மிருதிகள், புராணங்கள் பிராமணர்களுக்கு மட்டும் என்பதே சனாதன மதம் செய்துள்ள விதியாகும்.

தென்னிந்தியாவில் பல பெரிய கோயில்களில் பூசாரிகளாக இருப்பவர்கள் யாவரும் சூத்திரர்கள் ஆவர். இதையயல்லாம் ஆய்வு செய்துதான், சே­கிரி அய்யர், சிதம்பரம் கோயிலில் உள்ள பூசாரிகள் பிராமணர்கள் அல்லாதவர்களே என்பதைக் காட்டி, பூசாரியாக இருப்பதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பிலோ, சாதியிலோ பிறந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

கோயில் கர்ப்பகிரஹத்தில் ஒரு சூத்திரர் நுழைந்து விடலாம். ஆனால் ஒரு பிராமணர் நுழைய முடியாது. அதுமட்டுமன்று, சங்கராச் சாரியாரே கர்ப்பக்கிரஹத்தினுள் நுழையக் கூடாது. காரணம் ஆகம விதிப்படி தீட்சைப் பெறவில்லை. ஆகம விதிப்படி தீட்சைபெற்ற ஒரு சூத்திரர், கர்ப்பக்கிரஹத்தினுள் நின்று பூசை செய்வது இறைவனைத் திருப்தியடையச் செய்கிறது. ஒரு பிராமணன் கர்ப்பக்கிரஹத்தினுள் நுழைந்தால் அக்கோயில் புனிதத் தன்மையை இழந்து விடுகிறது. அக்கோயில் அசுத்தமடைந்து விடுகிறது என்பதே ஆகமம் கூறும் விதியாகும்.

நன்றி:கீற்று...



இந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:41 pm

தகவலுக்கு நன்றி

தற்போதைய நிலையில் இந்த அறக்கட்டளைகள் அறமாக செயல்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:20 am

கரூர் கவியன்பன் wrote:தகவலுக்கு நன்றி

தற்போதைய நிலையில் இந்த அறக்கட்டளைகள் அறமாக செயல்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது
நன்றிகள் உங்கள் பதிலுக்கு,,. :வணக்கம்:



இந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xzஇந்துக் கோயில்... ஆகம விதி ! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக