புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... I_vote_lcapவிஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... I_voting_barவிஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... I_vote_lcapவிஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... I_voting_barவிஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... I_vote_lcapவிஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... I_voting_barவிஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்...


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Oct 13, 2009 12:44 pm

முதல்வர் கலைஞர் இருந்த வேலையெல்லாம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்துவிட்டு ‘ஹாயாய்’ கவிதை எழுதிக்கொண்டு இருந்வர், அதுவும் போரடிக்க என்ன செய்வது? சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சோம்பலில் நெளிந்து நெட்டி முறித்தபோது ஸ்டாலின் மகன் உதயநிதி உள்ளே வருகிறார்.)



உதயநிதி : என்ன தாத்தா ரொம்பவும் போரடிக்குதா..?

கலைஞர் : அலைகடல் ஆர்ப்பரிப்பை நிறுத்தும் வரை.. சூரியன் சுட்டெரிப்பை நிறுத்தும்வரை இவனுக்கேது ஓய்வு? ஆமாம் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

உதயநிதி : அடுத்து விஜய்-அஜித் ரெண்டு பேரையும் ஹீரோ-வில்லனா வெச்சி ஐநூத்தி அறுபது கோடியில ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன்.

கலைஞர் : இவ்வளவு சின்ன பட்ஜெட்லய்யா! நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆவது.. குறைந்தது ஆயிரம் கோடியாவது செலவு பண்ண வேண்டாமா?

உதயநிதி : பணம் பத்தியில்லை தாத்தா... படம் ரொம்ப ‘யூத்’ சப்ஜெக்ட், அதனால வசனம் எழுத நல்ல டயலாக் ரைட்டர் வேணும். நானும் தேடிக்கிட்டே இருக்கேன். யாரும் கெடைக்கல.

கலைஞர் : கையிலே உப்பை வைத்துக்கொண்டு போர்வெல் வாட்டருக்கு அலைவானேன்? இது புதுசா இருக்கில்ல.. பேசாம நானே வசனம் எழுதிடறனே.

உதயநிதி : ரொம்ப இளமையா, புதுசா பள்ளி-கல்லூரி பசங்களை தரத்தரன்னு தியேட்டருக்கு இழுத்துட்டு வர்ற மாதிரி இருக்கனும்.

கலைஞர் : அவ்வளவுதானே.. மா, பலா, வாழை எனும் முக்கனி சுவையும் இருக்கும்.

உதயநிதி : அதுக்காக ஜுஸ் போட்டு கைல கொடுத்துடாதீங்க (என சொல்லிவிட்டு உதயநிதி போனதும், அமைச்சர் துரைமுருகன், ஆற்வாடு வீராசாமி, டி.ஆர்.பாலு, வாலி, வைரமுத்து ஆகியோர் உள்ளே வருகின்றனர் வசனம் எழுதுவதற்கான விவாதம் தொடங்குகிறது.

துரைமுருகன் : தலைவா... முதல் சீனே அஜித்தும்-விஜய்யும் சவால் விட்டுக்கிறாங்க. நல்ல ‘பஞ்ச்’ டயலாக் வேணும்.

கலைஞர் : நான் அடிக்காத பஞ்சா.. விஜய் சொல்றார் கேட்டுக்கோ. சீறும் சிங்கத்தை கண்ட சிறுநரியே.. வேல் அம்பு கொண்டு பரணிபாடும் மறவர் கூட்டம்..

டீ.ஆர். பாலு : என்ன தலைவரே.. சிங்கம், சிறுத்தை, வரிக்குதிரைன்னு வண்டலூர் ஜு அயிட்டமா சொல்றீங்க.. புதுசா சொல்லுங்க..

கலைஞர் : உண்மையா சொல்றியா.. இல்ல மத்திய மந்திரி பதவி வாங்கித்தராத கடுப்புல பேசுறியா..? வைரமுத்து நீ எதாச்சும் சொல்லு.

வைரமுத்து : என் கண்ணில் நெருப்பு குழம்பு.. உன் கண்ணில் பருப்பு குழம்பு.. ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம், உனக்கு

வீராசாமி : அட.. என்னப்பா இவரு.. குழம்பு, ரசம், மோர்ன்னுட்டு எதுவும் எனக்குப் பிடிக்கலை.

கலைஞர் : அப்போ நீதான் சொல்லேன்.

வீராசாமி : அஜித் சவால் விடுறார்.. நான் கரெண்ட் மாதிரி அப்பப்ப வந்துட்டுப் போவேன்.. ஆனா எலக்ஷன் நேரத்துல வருவேன் போகமாட்டேன்.

கலைஞர் : ஐயய்யோ.. வேணாம். மக்கள் மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்தி.. சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிற மாதிரி இருக்கு

வாலி : (தசாவதாரம் ‘கல்லை மட்டும் கண்டால்’ ஸ்டைலில்) அஜித் மட்டும் நின்றால் அடுத்தது தெரியாது, விஜயோ எந்தன் எதிரில் நிற்கவே முடியாது.

கலைஞர் : படத்துல மோதவிடறதை விட்டுட்டு நிஜத்துலயே ரெண்டு பேரும் சண்டை போட்டுகக தூண்டிவிடற மாதிரி இருக்கு.

டீ.ஆர். பாலு : அப்புறம் தலைவரே.. நயன்தாராவையும், அஜித்தும் டூயட் பாடறதுக்கு லீடு கொடுக்குற மாதிரி நல்ல மூடுல டயலாக் வைக்கனும்.

கலைஞர் : கேட்டுக்கோ.. அன்பே இந்த பூஞ்சோலையெங்கும் பூத்துக் குலுங்கும் அல்லி, அனிச்சை, ஆம்பல் மலர்களைக் காண என்னரு கருவண்டு விழிகளும்..

துரைமுருகன் : நல்லாத்தான் இருக்கு, ஆனாலும் பழைய தீஞ்ச வாடை வரதே.

கலைஞர் : (கடுப்புடன்) அட என்னங்கைய்யா.. எது சொன்னாலும் குறை சொல்லிக்கிட்டே இருக்கிங்க.. அடுத்த தமிழகத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம்தான் இருக்கு. அதை மனசுல வெச்சிட்டு பேசுங்க.

வீராசாமி : சூப்பர்.. தலைவா.. இதுவரைக்கும் தமிழ்சினிமாவுல இப்படியொரு டயலாக்கை யாரும் எழுதினதில்ல. ஆம்பல்.. அனிச்சை.. அடடா.. அடடா.

டீ.ஆர். பாலு : இதே மாதிரி.. க்ளைமாக்ஸ்ல மோதிக்கிற வசனமும் எழுதிடுங்க..

துரைமுருகன் : அஜித் ஜோடியான நயன்தாராகிட்ட விஜய்யும், விஜய் ஜோடியான த்ரிஷாகிட்ட அஜித்தும் பேசணும்.

கலைஞர் : (குஷியுடன்) விஜய் பேசுறார்.. வட்டமிடும் கழுகே.. வாய் பிளந்து நிற்கும் ஓநாயே.. இன்னலை அனுபவிக்கும் எம் இன மக்கள் இலங்கையில்.. உனக்கிங்கே குளு குளு பங்களா.. நெடல்லி கனவு தலைமட்டமானதைப் புரிந்துகொள். அடுத்து நாற்பதுக்கு நாற்பது நாங்கள்தான்.

வாலி : (வைரமுத்துவிடம்) ஏம்பா தம்பி.. தலைவரை வசனம் எழுதச் சொன்ன யாருக்கோ அறிக்கை விடற மாதிரியில்ல இருக்கு..

வைரமுத்து : நமக்கெதுக்கு வம்பு. வழக்கம்போல வாழ்த்து ஜால்ராவை வாசிப்போம் கம்முனு இருங்க.

கலைஞர் : அப்படியே பாட்டு ஒண்ணும் தோணுது அதையும் சேர்த்துக்கங்க.

வைரமுத்து : (வாலியிடம்) அண்ணே தலைவர் எழுதப்போறது பாட்டில்ல நமக்கு வெக்கப்போற ஆப்பு.

பாலு : அடிச்சி தூள் கௌப்புங்க தலைவா..

கலைஞர் : (பாடியபடி) அதிமதுரமேனி சிலையோ? செப்பு குவளை ஒத்த இடையோ..? வஞ்சியின் ஆதாரம் அழியில் உதித்த சிற்பியோ..?

துரைமுருகன். : கொன்னுட்டீங்க தலைவா.. ஆமா.. இந்த பாட்டுக்கான விளக்கத்தை சப் டைட்லா போடப் போறோமா..?

வீராசாமி : யோப் சப் டைட்டில் போட்ட என்ன.. போடாட்டி என்ன அதான் முன்னாடியே சொல்லிட்டாரே எலக்ஷன் வருதுன்னு.

துரைமுருகன் : ஐயோ சாமி.. நல்ல வேளை காப்பாத்திட்டீங்க (கலைஞரிடம்) தலைவா இன்னும் நீங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களக்கு தலைவராகவும், சினிமா டயலாக் ரைட்டராகவுமேப் பொறக்கனும் (அப்போது கதவு திறந்துகொண்டு உதயநிதி வருகிறார்)

கலைஞர் : உதயா.. டயலாக் ரெடி, பாட்டு ரெடி.

உதயநிதி : எதுக்கு..?

கலைஞர் : நிதானப்பா.. சொன்னே. அஜித்-விஜய் படத்துக்கு வசனம் எழுத ஆளில்லாம அலைமோதறேன்னு அதுக்குத்தான் ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சி ரெடி பணிணினோம்.

உதயநிதி : சரியாப்போச்சி போங்க. படம் ஸ்டார்ட் பண்ணி பாதிபடமே முடியப்போவுது. அப்படின்னா பத்து நாளா யாரும் ரூமை விட்டு வெளியே வரவேயில்லையா..? (அனைவரும் அதிர்ந்து போய் ‘பத்து நாளா!’ என்றபடி திகைப்புடன் காலண்டரைப் பார்த்து வெளித்தபடி நிற்கின்றனர். )

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 13, 2009 12:48 pm

விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... 705463



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 13, 2009 12:56 pm

கதை வசனம் பற்றிய வாக்குவாதத்திலேயே முழு படம் பார்த்த திருப்தி.....

பழமையும் புதுமையும் கலந்த ஒரு கலவை.

நன்றி செரின். நன்றி



விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... Eegaraitkmkhan
விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்... Logo12
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Tue Oct 13, 2009 12:58 pm

இங்கு மக்கள் விலை வாசி, பண நெருக்கடி இதனால் படாது பாடு படுகின்றனர் இவர்களுக்கு போட்டி போட்டு படம் எடுத்துவிட்டு வெட்டி பேசுவேறு



என்ன கொடுமைடா சரவணா? இது ?



யமுனா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக