புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
25 Posts - 50%
heezulia
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
7 Posts - 2%
prajai
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_m10வெளுத்ததெல்லாம் பால் அல்ல! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளுத்ததெல்லாம் பால் அல்ல!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Nov 29, 2012 7:53 am

பாலில் 68 சதவிகிதம் கலப்படம் உள்ளது என்று மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ள தகவல் இந்தியாவையே அதிரவைத்துள்ளது.உலகின் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நாட்டு மக்களின் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக்கூடிய காரணிகளில் ஒன்றாக பால் உற்பத்தி உள்ளது. ஆனால், அந்தப் பாலில் 68 சதவிகிதம்கலப்படம் உள்ளது என்கிற செய்தி மக்களை பதற வைத்துள்ளது.

இந்திய உணவு மற்றும் தர நிர்ணய அமைப்பு, பாலில் கலப்படம் குறித்து தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நுகர்வோரிடம் சென்றடையும் பாலில் 68 சதவிகிதம் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டது. 33 மாநிலங்களில் 1,791 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில், 1,228 மாதிரிகள் இந்திய தர நிர்ணய மதிப்பீடுகளுக்கு ஒப்பாக இல்லை.

மிசோரம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் விற்கப்படும்பாலில் நூறு சதவிகித கலப்படம் உள்ளது என்ற செய்தி அம்மாநில மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தமிழகம் கொஞ்சம் பரவாயில்லை. இங்கு உற்பத்தியாகும் பாலில் 12 சதவிகிதம் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆந்திரா பாலில் 6 சதவிகிதமும், டெல்லியில் 76சதவிகிதமும் கலப்படம் உள்ளதாம். புதுச்சேரி மற்றும் கோவா மக்களுக்கு மட்டும்தான் சந்தோஷமான செய்தி. அந்த இரு மாநிலங்களிலும் நூறு சதவிகித தூய்மையான பால் தயாராகிறது என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

பாலில் உள்ள நடுநிலைக் காரணிகள், அமிலத் தன்மையின்சதவிகிதம், ஹைட்ரஜன் பெராக்சைடு, கார்பனேட்டர், சர்க்கரை, ஸ்டார்ச், யூரியா,உப்பு, சோப்பு, தண்ணீர், கொழுப்பு, கொழுப்பு அல்லாத திடப்பொருட்கள் (Solid Not Fat – SNF), பதப்படுத்தப்பட்ட பால் பவுடர், பார்மலின் மற்றும் தாவரக் கொழுப்பு ஆகியவை கலந்திருக்கும் விகித அடிப்படை போன்றவை கலப்படத்தை அறியும் காரணிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

கிராமப்புறங்களில் 83.2 சதவிகித மாதிரிகளும், நகர்ப்புறங்களில் 68.6 சதவிகித மாதிரிகளும், நேரடியாக விற்பனை செய்யப்படும் பாலில் இருந்து எடுக்கப்பட்டவை. பால் மாதிரிகளில் அரசு மற்றும் தனியார் பால் இரண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்திய அளவில் 31.5 சதவிகிதம் தூய்மையும், 68.5 சதவிகிதம் கலப்படமும் பாலில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 74 மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில், ஒன்பது மாதிரிகளில் கலப்படம் இருந்துள்ளது.
கலப்படத்துக்கு என்ன காரணம்?

பாக்கெட்டாக அல்லாமல், நேரடியாக விற்கப்படும் பாலில்தான் அதிகக் கலப்படம் உள்ளதென்று தெரியவந்துள்ளது. குளம், குட்டை, ஆறு, ஏரி, போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்து பாலில் கலக்கப்படுவதால், அதில் சோப்பு கலந்துள்ளது. பால் கெட்டியாக தெரியவேண்டும் என்று குளுக்கோஸ், பால் பவுடர், மாவுப் பொருட்கள் ஆகியவை கலக்கப்படுகின்றன. மாட்டுத் தீவனத்திற்கு பற்றாக்குறையும், அதில் கலப்படமும் அதிகரித்துள்ளன.

இதனால் மாடுகள் குறைவாக பால் சுரக்கின்றன. அதிகமாகப் பால் தர வேண்டும்என்பதற்காக மாடுகளின் மடியில் ஆக்சிடோசின் எனப்படும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. இதுவும் கலப்படங்களுக்கான காரணிகளில் முக்கியமானதாகும். கலப்படப்பாலில் இருந்து தயாரிக்கப்படுகிற பால்கோவா, சீஸ், ஐஸ்க்ரீம், தயிர், மோர், மைசூர்பா, லெஸ்ஸி, பன்னீர், குலோப்ஜாமூன், பால் பவுடர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் கலப்படம் மிகுந்ததாகவே உள்ளன.

கலப்படப் பால் பலவிதமான நோய்களையும் உருவாக்குகிறது.கலப்படப் பால் அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வாந்தி உள்ளிட்ட கோளாறுகள் உண்டாகின்றன. செரிமானக் கோளாறு, இதயக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய நோய்கள் வருகின்றன. புற்றுநோய் போன்ற அபாயத்திற்கும் வித்தாகிவிடக் கூடிய ஆபத்தும் உள்ளது” என்று எச்சரிக்கிறார், மருத்துவர் செந்தில்குமார்.

இப்பிரச்சினை குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தியிடம் கேட்டோம்:
தமிழக அரசின் நிறுவனமான ஆவின் உற்பத்தி செய்யும் பால் மிகவும் சுத்தமானது. அதில், கலப்படம் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த ஆய்வைப் பார்க்கும்போது, பாக்கெட்டாக அல்லாமல் நேரடியாக விற்பனையாகிற பாலில்தான் அதிகக் கலப்படம் இருக்கிறது என்று தெரிகிறது. ஆவின் பால் பல நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுத்தான் மக்களிடம் வருகிறது. ஆகவே அதன் தரமும், அதன் மீதான நம்பிக்கையும் என்றுமே குறைவதில்லை. அதனால்தான், தனியார் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களையும் மீறி இன்றுவரை மக்களின் ஏகோபித்த ஆதரவு ஆவின் பாலுக்கு இருந்து வருகிறது” என்றார் அமைச்சர் மூர்த்தி.


பாலில் கலப்படத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
*. பாலில் தண்ணீர் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க வழவழப்பான செங்குத்தான தரையில் பாலைஒரு சோட்டுவிட்டால் எந்த அடையாளமும் இல்லாமல் வழிந்தோடும். இதுவே தண்ணீர் கலக்காத பால் என்றால், வெள்ளைக் கோடிட்டதுபோல் வழியும் அல்லது லேக்டோ மீட்டர் மூலம் கண்டறியலாம். லேக்டோ மீட்டர் 1.026 எண்ணுக்குக் கீழே காட்டினால் அந்தப் பாலில்தண்ணீர்க் கலப்படம் உறுதி.

*. பாலைக் காயவைத்து ஆற்றும்போது அதிகமாக நுரைபொங்கி வழிந்தால் சோப்புக் கலக்கப்பட்டிருக்கும்.
120 நாள் பால் நல்லதா?

120 நாள் வரை கெடாத பால் ஒன்று புதிதாக விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த பாக்கெட் பாலை ஃப்ரிஜ்ஜில் வைக்க அவசியமில்லை, காய்ச்சாமல் அப்படியே குடிக்கலாம். இந்த வகைப் பால் பாக்கெட்டை திறந்துவிட்டால் உடனே பயன்படுத்திவிட வேண்டும். ஆனால் இவ்வகையான பால் நெடுந்தூரப் பயணத்தில் செல்பவர்களுக்கும், பால்வரத்து இல்லாத நீண்டதூரக் கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் வசிப்போருக்குமே பயன்படும்.

ஏனெனில் பால் கிடைக்காத சமயங்களில் அவர்களுக்கு பாலின் மூலம் கிடைக்கக்கூடிய சத்துக்கள்சிறிதளவாவது கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் தயாரிக்கப்பட்டது. சாதாரண இடங்களில் மக்கள் இதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.


avatar
Guest
Guest

PostGuest Thu Nov 29, 2012 12:11 pm

பத்திகளுக்கு இடையே இடைவெளி தேவை .. படிக்க எளிதாக இருக்கும் ..

புரிந்து கொண்டமைக்கு நன்றி புன்னகை


jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Nov 29, 2012 1:51 pm

பாலின் பால்
உள்ள கலப்பால்
மிக வருத்தம் !
அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக