புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
60 Posts - 43%
ayyasamy ram
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
57 Posts - 41%
T.N.Balasubramanian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
prajai
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
423 Posts - 48%
heezulia
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
29 Posts - 3%
prajai
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 26, 2012 12:07 pm

First topic message reminder :

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்

1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.

abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||

अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥

*****

2. செல்வமும் மானமும்

செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.

adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||

अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Dec 06, 2012 7:29 am

25. நஞ்சுள்ள அங்கம்

கொடுந்தேளின் நஞ்சு கொடுக்கிலே -- பூக்கண்
படுந்தேனீ நஞ்சு தலையிலே -- நாயகன்
தீவேள்வி தப்பிய தட்சனுக்குப் பல்லிலே
தீங்கிழைப்போர் மேனியெங்கும் நஞ்சு.
---நீதிசாரம் 11

[தட்சன்=மன்னன் பரீக்ஷித்தைக் கொன்ற நாகர் தலைவன்
நாயகன்=மன்னன், இங்கு ஜனமேஜயன்]

vRushchikasya viShaM puchChaM makShikAyAH viSham shiraH |
takShakasya viShaM dantaM sarvaMgaM durjayasya cha ||
---~nItisAraH 11

वृश्चिकस्य विषं पुच्छं मक्षिकायाः विषम् शिरः ।
तक्षकस्य विषं दन्तं सर्वंगं दुर्जयस्य च ॥
---~नीतिसारः 11

*****

26. வல்லமை எல்லை

வண்ணப் பறவைக்கு வானமே வல்லமை
தண்ணீரே மீனின் திறலாம் -- நலிவுற்று
வாடும் வறியோர்க்கு வல்லமை வேந்தனே
வாய்விட்(டு) அழுதல் சிறார்க்கு.
---நீதிசாரம் 12

पक्षीणां बलमाकाशं मत्यस्यानामुदकं बलम् ।
दुर्बलस्य बलम् राजा बालानां रॊदनं बलम् ॥
---~नीतिसारम् 11

pakShINAM balamAkAshaM matyasyAnAmudakaM balam |
durbalasya balam rAjA bAlAnAM rOdanaM balam ||
---~nItisAram 11

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Dec 07, 2012 8:00 am

27. வெல்லும் வழிகள்

உண்மையால் வெல்க உலகம் முழுவதும்
வண்மையால் வெல்க வறியாரை -- தாழ்ந்த
பணிவிடையால் வெல்க பெரியோரை -- மாற்றான்
துணிவுள்ள வில்லாண்மை யால்.
---நீதிசாரம் 20
[வண்மை=ஈகைக்குணம்]

satyena lokaM jayati dAnairjayati dInatAm |
gurUn shushrUShayA jIyAddhanuShA eva shAtravAn ||
---~nItisAraH 20

सत्येन लोकं जयति दानैर्जयति दीनताम् ।
गुरून् शुश्रूषया जीयाद्धनुषा एव शात्रवान् ॥
---~नीतिसारः 20

*****

28. தந்தையர் ஐவர்

பிள்ளையைப் பெற்றவர் தந்தையெனில் பிள்ளையைப்
பள்ளியில் சேர்ப்பவர் பாடம் பயிற்றுவோர்
அன்னமிட்டார் அச்சமறக் காப்பவர் ஐவரும்
ஆவாரே தந்தைக்கு ஒப்பு.
---நீதிசாரம் 22

janitA chopanetA cha yastu vidyAM prayachChati |
annadAtA bhayatrAtA pa~jchaitE pitarasmRutAH ||
---~nItisAraH 22

जनिता चोपनेता च यस्तु विद्यां प्रयच्छति ।
अन्नदाता भयत्राता पञ्चैतॆ पितरस्मृताः ॥
---~नीतिसारः 22

*****


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Dec 07, 2012 8:09 am

வண்ணப் பறவைக்கு வானமே வல்லமை
தண்ணீரே மீனின் திறலாம் -- நலிவுற்று
வாடும் வறியோர்க்கு வல்லமை வேந்தனே
வாய்விட்(டு) அழுதல் சிறார்க்கு.
---நீதிசாரம் 12

சிறப்பான பகிர்வு. அனைத்துமே படிக்க வேண்டியவை.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Dec 07, 2012 10:16 am

[quote="ரமணி"]23. கல்வியில் காலும் காலமும்

மாணவன் கல்வியில் கால்பங்கு ஆசானின்
மாணவன் தானே முயல்வது கால்பங்கு
மாணவத் தோழர் தருவது கால்பங்கு
காலத்தின் போக்கினில் கால்.
---நீதிசாரம் 8


நல்ல தகவல் அய்யா, இப்படி ஆசான் தரும் கால்பங்கு இன்றைக்கு அரிக்கால் ஆகிவிட்டது. ஆனால் அவருக்கு (பள்ளிக்கு) செலவு செய்யும் தொகை முழுச் சம்பளத்தையும் முழுங்குகிறது.



சதாசிவம்
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 08, 2012 6:46 am

29. தாயார் ஐவர்

பெற்றதாய் மட்டுமல்ல கற்பித்தார் இல்லாளும்
கொற்றவன் நாயகியும் மூத்தோன் மனைவியும்
தன்னில்லாள் தாயுமென் றைந்துவகை நங்கையரை
உன்னுவரே தாய்க்கு நிகர்.
---நீதிசாரம் 22

gurupatnI rAjapatnI jyeShThapatnI tathaiva cha |
patnImAtA svamAtA cha pa~jchaitE mAtarasmRutAH ||
---~nItisAraH 23

गुरुपत्नी राजपत्नी ज्येष्ठपत्नी तथैव च ।
पत्नीमाता स्वमाता च पञ्चैतॆ मातरस्मृताः ॥
---~नीतिसारः 23

*****

சம்ஸ்க்ருத அறவுரைகள் தமிழ் நீதிப் பாடல்களில்

1. விலகிச் செல்லும் வகைகள்

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்து முழம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே--வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.
--நீதிவெண்பா ௨0

’ஶகடம்’ எனும் சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ’வண்டி, வாகனம், தேர்’ என்று பொருள்.
நீதிவெண்பாப் புலவர் இங்கு ’கொம்பு’ என்று வேறு சொல்லையும் பொருளையும் பயன்படுத்தியுள்ளார்.

shakaTaM pa~jchahasteShu tashahasteShu vAjinam |
gajaM hastasahasreShu durjanaM dUratastyajet ||
---~nItisAraH 24

शकटं पञ्चहस्तेषु तशहस्तेषु वाजिनम् ।
गजं हस्तसहस्रेषु दुर्जनं दूरतस्त्यजेत् ॥
---~नीतिसारः 24

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 08, 2012 7:58 am

QUOTE

"1. விலகிச் செல்லும் வகைகள்

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்து முழம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே--வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.
--நீதிவெண்பா ௨0

’ஶகடம்’ எனும் சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ’வண்டி, வாகனம், தேர்’ என்று பொருள்.
நீதிவெண்பாப் புலவர் இங்கு ’கொம்பு’ என்று வேறு சொல்லையும் பொருளையும் பயன்படுத்தியுள்ளார்."

'கொம்பு ' உளதிற்கு கொம்பு உள்ள மாட்டிற்கு 5 முழம்,
'குதிரைக்கு' 10 முழம்
'வெம்புகரி' யானைக்கு 1000 முழம் ஒதுங்கியே இருக்கவேண்டும்.
இங்கு ,மாடு,குதிரை , யானை மிருக ஜாதி.
ஆனால் சமஸ்கிருதத்தில், உயிரில்லா (சகடம் என்று) வண்டி யை உயிருள்ள யானையுடன் ஒப்பிட்டுள்ளார். வண்டியை இழுக்கும் மாட்டை, வண்டி என உருவகப்படுத்தி இருக்கலாமோ? வாஜிதம் என்றால் என்ன என்று தெரியவில்லை. ரமணி அவர்கள் விளக்குவாரா?
சகோதரி நந்திதா அவர்களுக்கு இது பற்றி தெரிந்து இருக்கலாம். அவர்கள் தெளிவு படுத்தினால் , நன்கு விளங்கும் என நினைக்கிறேன்.

ரமணியன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 08, 2012 9:08 am

வணக்கம் நண்பர் ரமணியன்.

எனக்கு சமஸ்கிருதம் ஓரளவே தெரியும். இங்கு நான் விளக்க முனைவது ஒரு சமஸ்கிருத அகராதி மூலமே.

நான் கொடுத்த சமஸ்க்ருதச் சொல் वाजितम्--வாஜிதம் என்பது தவறு.
அது वाजिनम्--வாஜினம் என்று இருக்கவேண்டும், இப்போது என் அஞ்சலில் சரிசெய்துவிட்டேன்.
वाजिन्--வாஜின் என்ற சொல்லுக்குக் குதிரை என்று பொருள்.
எனவே वाजिनम्--வாஜினம் என்பதற்கு குதிரைக்கு உரிய என்று பொருள்.

वाजितम्--வாஜிதம் என்றால் ’வலிமையுள்ள, உணவாகும், சிறகுள்ள’ என்று பொருள்கள்.
இன்னொரு பொருள் state or nature of a horse
ஒரு குதிரையின் நிலை அல்லது இயல்பு

वाजिन्--வாஜின் என்ற சொல்லுக்கும் பறவை என்றொரு பொருளுண்டு.
எனவே காற்றினும் கடுகிப் பறக்கும் குதிரை வாஜின் ஆகிறது. தம்ழிலும் ’பாய்மா’ என்று சொல்கிறோம்.

शकटम्--ஶகடம் என்ற சொல்லுக்குத் சமஸ்கிருதத்திலும் தமிழிலும்
’வண்டி, வாகனம், தேர்’ என்றே பொருள்கள்.
மகாபாரதப் போரில் துரோணர் ’சகட வியூகம்’ என்ற முறையில் கௌரவர் படையை வகுத்ததாக உள்ளது.

சமஸ்கிருத மூலத்தில் ’ஷகட’ என்பது வண்டியை இழுக்கும் மாட்டுக்கு ஆகிவந்ததாகக் கொண்டால்
தமிழில் ’கொம்புள’ என்று சொல்லி ஆகுபெயராக ஒரு வண்டியைச் சுட்டுவதாகக் கொள்ளலாம் அல்லவா?
’கொம்புள’ என்பது பசுவானால் ஐந்து முழம் தள்ளி நின்றால் போதும்; காளையானால் போதாதே?
எனவே அது கட்டுடன் ஒரு வண்டியை இழுக்கும் காளையெனக் கொள்ளலாம்.
வண்டி நேர்கோட்டில் போவதால் நாம் ஒரு பக்கமாக ஐந்து முழம் ஒதுங்கி வழிவிட்டால் போதுமன்றோ?

அன்புடன்,
ரமணி



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 08, 2012 5:36 pm

நன்றி, திரு ரமணி , தகவலுக்கு . நன்றி ( எனது சம்ஸ்க்ருத ஞானமும் சிறிதளவே)

ரமணியன்

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 10, 2012 12:02 pm

30. கேடுகள் ஐந்து

வறுமையில் இல்லாள் இருவரும் சாலை
வரும்வழியில் வீடும் விளைநில ஊர்கள்
இருவேறும் நீதிமன்ற சாட்சிஜாமீன் ஐந்தும்
உறுவது தன்செயலால் தான்.
---நீதிசாரம் 29

daritratvE dvibhAryAtvaM pathikShetraM kRuShidvayam |
prAtibhAyya~jcha sAkShitvaM pa~jchAnarthAH svayaMkRutAH ||
---~nItisAraH 29

दरित्रत्वॆ द्विभार्यात्वं पथिक्षेत्रं कृषिद्वयम् ।
प्रातिभाय्यञ्च साक्षित्वं पञ्चानर्थाः स्वयंकृताः ॥
---~नीतिसारः 29

*****

31. முன்னிற்கும் தேவைகள்

ஆடை அலங்காரம் செய்வதில் முன்னிற்கும்
ஆவின்நெய் ஆகாரம் முன்னிற்கும் -- நங்கைக்கு
நற்குணம் முன்னிற்க வேண்டுமே -- பண்டிதர்க்குக்
கற்றறிந்த கல்வியே முன்.
---நீதிசாரம் 33

vastramukhyamalaMkAraM dhRutamukhyamantu bhOjanam |
guNamukhyamantu nArINAM vidyA mukhyastru paNDitaH ||
---~nItisAraH 33

वस्त्रमुख्यमलंकारं धृतमुख्यमन्तु भॊजनम् ।
गुणमुख्यमन्तु नारीणां विद्या मुख्यस्त्रु पण्डितः ॥
---~नीतिसारः 33

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 11, 2012 9:02 am

32. மெல்ல மெல்ல வளர்வன

எறும்புகளின் புற்றுமண்ணும் தேன்கூட்டில் தேனும்
பிறைவளர் சந்திரனும் பார்த்திபனின் சீரும்
இறைஞ்சிப் பிச்சைபுக்கு உண்ணும் உணவும்
சிறிது சிறிதே மிகும்.
---நீதிசாரம் 34
[சீர் என்ற சொல்லுக்குச் செல்வம் என்றும் பொருளுண்டு--பிங்கள நிகண்டு]

vAlmIkaM madhuhArashcha pUrvapakShE tu chaMdramA |
rAjadravya~jcha bhaikSha~jcha stOkastOkena vardhatE ||
---~nItisAraH 34

वाल्मीकं मधुहारश्च पूर्वपक्षॆ तु चंद्रमा ।
राजद्रव्यञ्च भैक्षञ्च स्तॊकस्तॊकेन वर्धतॆ ॥
---~नीतिसारः 34

*****

33. சுற்றம் ஆறு பேர்

உண்மையே அன்னை உள்ளறிவு தந்தை
வண்மை சகோதரன் காருண்யம் தோழனே
தாரமே அமைதி பொறுமை மகனென்று
ஆறு சுற்றம் எனக்கு.
---நீதிசாரம் 35

satyam mAtA pitA ~jAnaM dharmO bhrAtA dayA sakhI |
shAntiH patnIH kShamA putraH ShaDamI mama bAndhavA ||
---~nItisAraH 35

सत्यम् माता पिता ञानं धर्मॊ भ्राता दया सखी ।
शान्तिः पत्नीः क्षमा पुत्रः षडमी मम बान्धवा ॥
---~नीतिसारः 35

நேர்பொருள்:
உண்மை அன்னை தந்தை ஞானம் தர்மம் சகோதரன் தயை தோழன் |
அமைதி மனிவி பொறுமை மகன் அறுவகை எனது உறவினர் ||

*****


Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக