புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_m10வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 26, 2012 12:07 pm

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்

1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.

abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||

अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥

*****

2. செல்வமும் மானமும்

செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.

adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||

अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥

*****


avatar
Guest
Guest

PostGuest Mon Nov 26, 2012 12:23 pm

சூப்பருங்க அருமை ... தொடருங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 1:52 pm

சமஸ்கிருதம், இந்தி அறிவு எனக்கு சிறிதும் இல்லை! ஆனால் தமிழ் அறிவுரைகள் சிறப்பாக உள்ளது! தொடருங்கள் ஐயா!



வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 4:21 pm

தமிழ் கருத்துகள் மட்டுமே எனக்கு புரிகிறது.

(அது வேறொன்னும் இல்ல மற்றவை எனக்கு படிக்க தெரியாது அதான் )

சிறந்த திரி தொடருங்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 6:12 pm

சிறப்பு. நன்றி பகிர்ந்தமைக்கு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 26, 2012 6:25 pm

3. உடல் மன ஆத்மா புத்தியின் தூய்மை

புறந்தூய்மை நீரான் அமையும் துலங்கும்
அறம்சார்ந்த உண்மையால் உள்ளம் -- மறைசார்ந்த
வித்தை தவத்தினால் ஜீவாத்மா ஞானத்தால்
புத்தியும் தூய்மை யுறும்.
---மனுஸ்மிருதி 5.109

adbhirgatrANi shudhyanti manaH satyena shudhyati |
vidyAtapobhyAM bhUtAtmA bhuddhirj~jAnena shudhyati ||

अद्भिर्गत्राणि शुध्यन्ति मनः सत्येन शुध्यति ।
विद्यातपोभ्यां भूतात्मा भुद्धिर्ज्ञानेन शुध्यति ॥

*****

4. மடிமையும் வாழ்க்கையும்

கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?

alasasya kuto vidyA avidyasya kuto dhanam |
adhanasya kuto mitram asmitrasya kutassukhaM ||

अलसस्य कुतो विद्या अविद्यस्य कुतो धनम् ।
अधनस्य कुतो मित्रम् अस्मित्रस्य कुतस्सुखं ॥

*****


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 6:34 pm

கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?


நாலடியார் போன்ற அருமையான பதிவு.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 27, 2012 6:48 am

5. கல்வி செல்வம் அறம் சாதித்தல்

இல்லை முதுமை மரணம் எனக்கருதி
கல்வியும் செல்வமும் சாதித்த(ல்) ஆற்று
மரணம் தலைமயிர் பற்றுதல்போ(ல்) எண்ணி
அறவழி நின்று ஒழுகு.

ajarA&maravat prAj~jo vidyAmarthaM cha sAdhayet |
gRuhIta iva kesheShu mRutyunA dharma mAcharet ||

अजराऽमरवत् प्राज्ञो विद्यामर्थं च साधयेत् ।
गृहीत इव केशेषु मृत्युना धर्म माचरेत् ॥

*****

6. அரிதென்பது...

இல்லையே மந்திர(ம்) ஆகா எழுத்தொலி
இல்லை மருந்தென ஆகாத மூலிகை
இல்லை தகவிலர் யாரும் அரிதென்ப(து)
எல்லாம் நிகழ்விப் பவர்.

amantram-akSharaM nAsti vanaspatir-anauShadham |
ayogya purusho nAsti yojakara-tatra durlabhaH ||

अमन्त्रमक्षरं नास्ति वनस्पतिरनौषधम् ।
अयोग्य पुरुशो नास्ति योजकरतत्र दुर्लभः ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 28, 2012 7:41 am

7. தீயோர் குணங்கள்

கருணையின்மை காரணமில் பூசல் அயலார்
பொருள்மனை வேட்கை உறவினர் நல்லார்
பொறையின்மை தீயோர்கண் தாமே அமைந்த
தறுதலைத் தன்மைக ளாம்.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம் 52
[பொறை=பொறுமை, பொறுத்தல்]

akaruNatvam-akAraNa-vigrahaH paradhane parayoShiti cha spRuhA |
sujana-bandhujaneShva-sahiShNutA prakRuti-siddhamidaM hi durAtmanAm ||
--bhartRuhari, nIti shataka, 52

अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥
--भर्तृहरि, नीति शतक, ५२

*****

8. ஆதார தர்மம்

பிறர்க்கின்னா செய்யாமல் தீயோர் தொடர்பின்றி
நற்குணத்தோர் நட்பில் இழப்பின்றி யாரும்
சிறிதளவே தர்மத்தில் நின்றாலும் அஃது
பெரிதெனவே கொள்ளப் படும்.

akRutvA parasaMtApaM agatvA khanalamratAm |
anutsRujya satAm vartma yat svalpamapi tadbahu ||

अकृत्वा परसंतापं अगत्वा खनलम्रताम् ।
अनुत्सृज्य सताम् वर्त्म यत् स्वल्पमपि तद्बहु ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 28, 2012 8:50 pm

9. நிலையுறுதி கொண்டோர்க்கு...

உலகமே தாழ்வாரம் ஆழ்கடல் பொய்கை
பிலமெனும் பாதாளம் சுற்றுலா இன்னும்
நலமிக்க மேரு எறும்புகளின் சிற்றில்
நிலையுறுதி கொண்டா(ர்) இடத்து.

a~ggaNavedI vasudhA kulyA jaladhiH sthalI cha pAtAlam |
vAlmikaH cha sumeruH kRutapratij~jasya dhIrasya ||

अङ्गणवेदी वसुधा कुल्या जलधिः स्थली च पातालम् ।
वाल्मिकः च सुमेरुः कृतप्रतिज्ञस्य धीरस्य ॥

*****

10. நான்முகனுக்கும் அரிது!

கல்லானை இன்புறுத்த(ல்) ஓரெளிய காரியம்
கற்றாரை இன்புறுத்த(ல்) இன்னும் எளிதாகும்
தானெனும் கர்வ(ம்) உடையவனை இன்புறுத்தல்
நான்முக னுக்கும் அரிது.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம்

अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥
---भर्तृहरि, नीति शतकम्

*****


Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக