புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
First topic message reminder :
ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)
அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.
அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.
ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.
மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க
சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.
மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.
சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.
அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.
(தொடரும்)
ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)
அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.
அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.
ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.
மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க
சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.
மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.
சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.
அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.
(தொடரும்)
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
ச. சந்திரசேகரன் wrote:தாமதத்திற்கு மன்னிக்கவும். மகன் +2 படிப்பதால் அவனுக்கே இன்டர்நெட் உபயோகிக்க முதலுரிமை.slmkarthi wrote:இந்த வாரம் கதை தாமதமாகிவிட்டதா??
.
ஆல் தி பெஸ்ட் டு யுவர் சன்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உங்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றிகள்.கார்த்தி wrote:ச. சந்திரசேகரன் wrote:தாமதத்திற்கு மன்னிக்கவும். மகன் +2 படிப்பதால் அவனுக்கே இன்டர்நெட் உபயோகிக்க முதலுரிமை.slmkarthi wrote:இந்த வாரம் கதை தாமதமாகிவிட்டதா??
.
ஆல் தி பெஸ்ட் டு யுவர் சன்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-14) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
சந்திரன் மற்றும் சகலை மகேஷின் உரையாடல் தொடர்கிறது.
சந்திரன்: சீதா கோபப்பட்டது குறித்து, நீங்கள் கவலைப் பட வேண்டாம் மகேஷ். உங்கள் சூழ்நிலை காரணமாகத் தானே நீங்கள் பேசவில்லை. இதில் உங்கள் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், உங்கள் சூழ்நிலை சீதாவிற்கு தெரியாது. தெரிந்தால், தெரியப்படுத்தினால் கோபம் சரியாகிவிடும். அதேபோல்தான், சீதாவின் சூழ்நிலை உங்களுக்குத் தெரியாது. சீதா உங்கள் குழந்தையின் அழுகைக்கு நடுவிலும், உங்களிடம் பேச நினைத்ததன் காரணத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதாவது, நம்முடைய திட்டப்படி என் அக்கா கலா சீதாவிடம் நேற்று இரவு பேசியதன் விளைவுதான் சீதா உடனே உங்களை தொடர்பு கொள்ள நினைத்ததன் காரணம். (என்று கூறிய சந்திரன் கலா அக்கா சீதாவிடம் பேசிய மொத்த விவரத்தையும் கூறி விளக்கினார்).
மகேஷ்: ஓஹோ, இதுதான் என் தங்கையின் கோபத்துக்குக் காரணமா? கலா அக்கா பேசிய விஷயமும், உடனே, நான் என் தங்கையிடம் பேசாமல் அலைகழித்ததும் சேர்ந்து, கலா அக்கா கூறியது சரிதானோ? என்பது போல் சீதாவின் மனதில் தோன்றியதும் தான் கோபத்திற்குக் காரணமோ?
சந்திரன்: அதே தான். என்னுடைய எண்ணம் என்னவென்றால் இந்தக் கோபம் தொடர வேண்டும். தொடர்ந்தால் தான் சீதாவிற்கு ஒரு பாதுகாப்பற்ற எண்ணம் மனதில் தோன்றும். அதுவே, அவளின் மனதில் தனக்கு ஒரு பாதுகாப்பு தேவை என்ற சூழலை உருவாக்கும்.
மகேஷ்: அப்படியென்றால், நான் இப்போது முதல் என் தங்கையை அலட்சியப்படுத்த வேண்டும் என்று சொல்கிறீர்களா?
சந்திரன்: ஆம். அதுதான் இப்போதைக்கு சரியான வழி.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, மகேஷின் கைப்பேசியில் சீதாவின் அழைப்பு. மகேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சந்திரனிடம்
மகேஷ்: சீதாவின் அழைப்பு இது. இப்போது நான் என்ன செய்யட்டும்?
சந்திரன்: நான் சொன்னதை மனதில் வைத்து சமாளியுங்கள், சீக்கிரம் சீக்கிரமாக எடுத்துப் பேசுங்கள்.
மகேஷ்: (சீதாவிடம்) ஹலோ.
சீதா: அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா. இப்போதுதான் மித்ரா அண்ணி என்னை அழைத்து, குழந்தையின் உடல்நிலை பற்றி விளக்கமாகக் கூறினார்கள். உங்கள் சூழ்நிலையை முற்றிலும் உணராமல் உங்களிடம் கோபித்துக் கொண்டது தவறு என புரிந்துவிட்டது.
(சீதாவின் சமாதானமான பேச்சு மகேஷை குழப்பியது. இருப்பினும் கோபத்தை காட்டவேண்டுமே என்பதற்காக)
மகேஷ்: பின்னே என்னத்தை சொல்ல? நேற்று குழந்தை ஒரு பக்கம் படுத்திட்டா? உன் அண்ணி ஒரு பக்கம்? பத்தாததற்கு நீ ஒரு பக்கம்? ஒரு மனுஷனா நான் என்னத்தைத்தான் செய்யறது? யாரும் என்னை புரிஞ்சிக்கவே இல்லை. இப்போ விளக்கமா சொல்லலாம்னு போன் செய்தா நீ கோபத்துல எடுக்கவே மாட்டேங்கிறாய்? உனக்கு அண்ணன் என்ற மரியாதை கொஞ்சமாவது இருக்கா? இருந்திருந்தா இப்படி மரியாதை இல்லாம நடந்துப்பியா?
சீதா: நான்தான் சொல்றனே, உன் நிலைமை எனக்குத் தெரியாது. மித்ரா அண்ணி சொன்னப்புறம்தான் தெரியும்னு.
மகேஷ்: அப்போ, கோபப்படுவீங்களோ? போனைக்கூட எடுக்க மாட்டீங்களோ?
சீதா: என்னண்ணா, நான் சொன்னா புரிஞ்சிக்க மாட்டேன்கிறீங்க.
மகேஷ்: என்ன வேணுன்னா சொல்லு, நீ போன் எடுக்காதது தப்புதான்?
சீதா: சரின்னா. தப்புதான். மன்னிச்சிடுங்க. இனி அப்படி நடக்காம பாத்துக்கறேன்.
மகேஷ்: மன்னிப்பு கேட்டா, செஞ்ச தப்பு சரியாயிடுமா?
சீதா: இப்ப என்ன என்னத்தான் செய்யச் சொல்றீங்க.
மகேஷ்: முதல்ல போன வை.
இவ்வாறு கூறிக்கொண்டே கைப்பேசியை துண்டித்தார் மகேஷ். சந்திரனும் மகேஷும் வெற்றிபெற்றதைப்போல் சிரித்துக் கொண்டனர்.
(தொடரும்)
போன வாரம்-13 வரை நடந்தது
//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.
மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.
இந்த இருவருக்கும் மகேஷின் சகலை சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.
நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.
மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூறுகிறார்.
கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்து கைப்பேசியில் பேசுகிறார். கலா தன் அனுபவங்களின் கசப்பைக் கூறக்கூற கோபத்தில் சீதா கைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டு உடனே, தன் அண்ணன் மகேஷிடம் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்க்க எண்ணிய சீதா மகேஷை அழைக்க, மகேஷ் தன் குழந்தை சுகமில்லாத காரணத்தால் மறுநாள் பேசுவதாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், மறுநாள் காலையிலும் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றதால் மகேஷ் சீதாவை கைப்பேசியில் அழைக்கவில்லை. மகேஷின் சூழல் அறியாத சீதா மகேஷின் மேல் கோபம் கொள்கிறார்.
இந்நிலையில் சந்திரனின் அக்கா கலா சந்திரன் வீட்டுக்கு வந்து சீதாவிடம் பேசியதையும் சீதா கோபத்தில் கைப்பேசி இணைப்பை துண்டித்ததையும் விளக்கமாக கூறுகிறார். மித்ரா தான் சீதாவிடம் பேசுவதாகக் கூறி கைப்பேசியில் பேச முற்பட, சீதா வேலையாக இருந்ததால் 2 மணிநேரத்தில் தானே அழைப்பதாகக் கூறுகிறார்.
அடுத்த 1 மணிநேரத்தில் மகேஷ் தன் சகலையை சந்தித்து தங்கை சீதா தன்னுடைய கைப்பேசி அழைப்பை ஏற்காது பேச மறுத்ததைக் கூறி சங்கடப்படுகிறார்.
இனி ......//
சந்திரன் மற்றும் சகலை மகேஷின் உரையாடல் தொடர்கிறது.
சந்திரன்: சீதா கோபப்பட்டது குறித்து, நீங்கள் கவலைப் பட வேண்டாம் மகேஷ். உங்கள் சூழ்நிலை காரணமாகத் தானே நீங்கள் பேசவில்லை. இதில் உங்கள் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், உங்கள் சூழ்நிலை சீதாவிற்கு தெரியாது. தெரிந்தால், தெரியப்படுத்தினால் கோபம் சரியாகிவிடும். அதேபோல்தான், சீதாவின் சூழ்நிலை உங்களுக்குத் தெரியாது. சீதா உங்கள் குழந்தையின் அழுகைக்கு நடுவிலும், உங்களிடம் பேச நினைத்ததன் காரணத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதாவது, நம்முடைய திட்டப்படி என் அக்கா கலா சீதாவிடம் நேற்று இரவு பேசியதன் விளைவுதான் சீதா உடனே உங்களை தொடர்பு கொள்ள நினைத்ததன் காரணம். (என்று கூறிய சந்திரன் கலா அக்கா சீதாவிடம் பேசிய மொத்த விவரத்தையும் கூறி விளக்கினார்).
மகேஷ்: ஓஹோ, இதுதான் என் தங்கையின் கோபத்துக்குக் காரணமா? கலா அக்கா பேசிய விஷயமும், உடனே, நான் என் தங்கையிடம் பேசாமல் அலைகழித்ததும் சேர்ந்து, கலா அக்கா கூறியது சரிதானோ? என்பது போல் சீதாவின் மனதில் தோன்றியதும் தான் கோபத்திற்குக் காரணமோ?
சந்திரன்: அதே தான். என்னுடைய எண்ணம் என்னவென்றால் இந்தக் கோபம் தொடர வேண்டும். தொடர்ந்தால் தான் சீதாவிற்கு ஒரு பாதுகாப்பற்ற எண்ணம் மனதில் தோன்றும். அதுவே, அவளின் மனதில் தனக்கு ஒரு பாதுகாப்பு தேவை என்ற சூழலை உருவாக்கும்.
மகேஷ்: அப்படியென்றால், நான் இப்போது முதல் என் தங்கையை அலட்சியப்படுத்த வேண்டும் என்று சொல்கிறீர்களா?
சந்திரன்: ஆம். அதுதான் இப்போதைக்கு சரியான வழி.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது, மகேஷின் கைப்பேசியில் சீதாவின் அழைப்பு. மகேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சந்திரனிடம்
மகேஷ்: சீதாவின் அழைப்பு இது. இப்போது நான் என்ன செய்யட்டும்?
சந்திரன்: நான் சொன்னதை மனதில் வைத்து சமாளியுங்கள், சீக்கிரம் சீக்கிரமாக எடுத்துப் பேசுங்கள்.
மகேஷ்: (சீதாவிடம்) ஹலோ.
சீதா: அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா. இப்போதுதான் மித்ரா அண்ணி என்னை அழைத்து, குழந்தையின் உடல்நிலை பற்றி விளக்கமாகக் கூறினார்கள். உங்கள் சூழ்நிலையை முற்றிலும் உணராமல் உங்களிடம் கோபித்துக் கொண்டது தவறு என புரிந்துவிட்டது.
(சீதாவின் சமாதானமான பேச்சு மகேஷை குழப்பியது. இருப்பினும் கோபத்தை காட்டவேண்டுமே என்பதற்காக)
மகேஷ்: பின்னே என்னத்தை சொல்ல? நேற்று குழந்தை ஒரு பக்கம் படுத்திட்டா? உன் அண்ணி ஒரு பக்கம்? பத்தாததற்கு நீ ஒரு பக்கம்? ஒரு மனுஷனா நான் என்னத்தைத்தான் செய்யறது? யாரும் என்னை புரிஞ்சிக்கவே இல்லை. இப்போ விளக்கமா சொல்லலாம்னு போன் செய்தா நீ கோபத்துல எடுக்கவே மாட்டேங்கிறாய்? உனக்கு அண்ணன் என்ற மரியாதை கொஞ்சமாவது இருக்கா? இருந்திருந்தா இப்படி மரியாதை இல்லாம நடந்துப்பியா?
சீதா: நான்தான் சொல்றனே, உன் நிலைமை எனக்குத் தெரியாது. மித்ரா அண்ணி சொன்னப்புறம்தான் தெரியும்னு.
மகேஷ்: அப்போ, கோபப்படுவீங்களோ? போனைக்கூட எடுக்க மாட்டீங்களோ?
சீதா: என்னண்ணா, நான் சொன்னா புரிஞ்சிக்க மாட்டேன்கிறீங்க.
மகேஷ்: என்ன வேணுன்னா சொல்லு, நீ போன் எடுக்காதது தப்புதான்?
சீதா: சரின்னா. தப்புதான். மன்னிச்சிடுங்க. இனி அப்படி நடக்காம பாத்துக்கறேன்.
மகேஷ்: மன்னிப்பு கேட்டா, செஞ்ச தப்பு சரியாயிடுமா?
சீதா: இப்ப என்ன என்னத்தான் செய்யச் சொல்றீங்க.
மகேஷ்: முதல்ல போன வை.
இவ்வாறு கூறிக்கொண்டே கைப்பேசியை துண்டித்தார் மகேஷ். சந்திரனும் மகேஷும் வெற்றிபெற்றதைப்போல் சிரித்துக் கொண்டனர்.
(தொடரும்)
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உதயசுதா wrote:நல்ல கதை, அருமையா போய்ட்டு இருக்கு சந்திரசேகரன். யாரும் பின்னுட்டம் போடலையே, என்று கவலைபடாமல் நீங்க வாராவாராம் கதைய போட்டுட்டே வாங்க.
கதையோட முடிவுல நாங்க எல்லாரும் கொடுக்கும் பின்னுட்டங்கள் சந்தோசத்தில் உங்களை முழ்கடித்துவிடும்.
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
கார்த்தி wrote:
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-15) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
தங்கையிடம் கடிந்து பேசி கைப்பேசியை வைத்துவிட்டு சிரித்த மகேஷின் கண்களில் இருந்து அவரை அறியாமல் வழிந்த அந்த கண்ணீர் சந்திரனை சங்கடப்படுத்தியது.
சந்திரன்: என்ன மகேஷ். ஏன் அழறீங்க?
மகேஷ்: என்ன தான் நீங்கள் சொன்னது போல் கோபமாகப் பேசினாலும், சீதாவின் மனதை இப்படி நோகடிக்க வேண்டி வந்துவிட்டதே என நினைக்கும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. (என்று சொல்லிக்கொண்டே கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்).
சந்திரன்: எல்லாம் சீதாவின் எதிர்காலம் நன்றாக அமைவதற்குத்தானே.
மகேஷ்: அந்த ஒரு நம்பிக்கைதான் மனதுக்கு ஆறுதலாக உள்ளது. எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும். முடிந்ததும் என் தங்கையிடம் நான் இன்று கோபமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்.
சந்திரன்: அந்த நாள் விரைவில் வந்துவிடும். கவலைப் படாமல் சென்று வாருங்கள்.
சீதாவின் வீடு. நேரம் மதியம் 01.30 மணி. சீதா கண்கள் சிவந்திருக்க அழுது அழுது ஓய்ந்தவளாக அமர்ந்திருக்க, அழைப்பு மணி அழைத்தது. கதவைத் திறந்தாள். மகன் வைத்யா கையில் +2 ஹால் டிக்கெட்டோடு உள்ளே வந்தான். வந்தவன் அம்மாவின் கண்கள் சிவந்திருந்ததைப் பார்த்து,
வைத்யா: அம்மா அழுதீங்களா?
சீதா: இல்லப்பா.
வைத்யா: ஏம்மா மறைக்கிறீங்க. அப்பாவை நினைத்துத் தானே அழறீங்க. (என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வித்யாவின் கண்களிலும் கண்ணீர் பொங்க)
சீதா: (அண்ணன் மகேஷின் கோபம் தான் தன் அழுகையின் காரணம் என்பதை மகனிடம் மறைத்து) அழாதேப்பா. இனி நான் அழல்ல. (என்று கூறி மகனை தேற்றினாள்).
வைத்யா: ஹால் டிக்கெட் கொடுத்துட்டாங்கம்மா. அப்பாவின் எண்ணப்படி நான் ஒரு டாக்டரா ஆகணும்மா.
சீதா: கண்டிப்பா அப்பாவோட ஆசீர்வாதத்தோட நீ டாக்டரா ஆவாய். ஹால் டிக்கெட்ட அப்பா படத்தாண்ட வச்சு நல்லா வேண்டிக்கப்பா. நமக்கு யார் ஆதரவுயில்லையென்றாலும் நான் உன்னை படிக்க வைக்கிறேன்.
வைத்யா: ஏம்மா, யார் ஆதரவும் யில்லேன்னாலும்னு சொல்றீங்க. நம்ம சொந்தக் காரர்கள் இருக்காங்களே.
சீதா; அவங்கவங்களுக்கு ஆயிரம் குடும்பப் பிரச்சனை இருக்கும். நம்ம பிரச்னையை நாம்தான் பார்த்துக்கணும்பா. அதுக்கு நீயும் உன்னை தயார்படுத்திக்கணும்.
வைத்யா: நீ சொல்றது சரிதாம்மா. நீ சொல்றதுபோல நடந்துக்கறேன்.
மகேஷின் வீடு. நேரம் மாலை 04.00 மணி. மகேஷுக்கு இன்னும் தான் தங்கை சீதாவிடம் நடந்துகொண்ட விதம் கண்முன்னால் வந்துகொண்டே இருந்தது. தங்கை மனநிலை இப்போது எப்படி இருக்கும்? யாரும் ஆதரவுக்கு இல்லை என்று ஏதும் தவறான முடிவுக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்துக் குழம்பிக்கொண்டிருக்க,
மகேஷின் மனைவி பார்கவி வந்தாள்.
பார்கவி: என்னங்க. ஒரு மாதிரி இருக்கீங்க?
மகேஷ் நடந்த விவரங்களைக் கூற, பார்கவி முழுவதையும் விவரமாகக் கேட்டபின்,
பார்கவி: இப்போ, உங்க தங்கை எந்த தவறான முடிவுக்கும் போகாமல் இருக்க அவருக்கு ஒரு நெருங்கிய தோழமை வேண்டும். தன் கவலையை அந்த தோழியிடம் கொட்டித் தீர்க்கவேண்டும். எனவே, எனக்கு ஒரு யோசனை.
மகேஷ்: என்ன யோசனை?
பார்கவி: உங்கள் தங்கை ஊருக்கு லீவுக்கு வரும்போதெல்லாம், அவருடைய நெருங்கிய தோழி சரிதா வந்து பாப்பாங்களே. அவங்களுக்கு இப்ப சீதாவோட கணவர் இறந்தது தெரியுமா?
மகேஷ்: தெரியும். சாவிற்கு கூட வந்து ஒரு நாள் முழுக்க இருந்தாங்களே.
பார்கவி: அவங்களோட கைப்பேசி என்னை எனக்குக் கொடுங்க. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
மகேஷ்: என்ன பேசப்போகிறாய்?
பார்கவி: உங்களோட மொத்தத் திட்டத்தையும் அவங்களுக்கு விளக்கமா சொல்லி, சீதாவிற்கு ஆதரவா நாலு வார்த்தை பேசச் சொல்றேன்.
மகேஷ்: ரொம்ப நேரமா என்ன பண்றதுன்னே தெரியாம இருந்தேன். நல்ல ஐடியா கொடுத்தாய். சரி, இந்தா என் கைப்பேசியிலிருந்தே சரிதாவை கூப்பிட்டு இப்பவே பேசு.
பார்கவி சீதாவின் நெருங்கிய தோழி சரிதாவை கைப்பேசியில் அழைக்கிறார்.
சரிதா (சீதாவின் தோழி) : ஹலோ.
பார்கவி: ஹலோ, நாந்தாங்க உங்க தோழி சீதாவோட அண்ணி பார்கவி பேசுறேன்.
சரிதா: மகேஷ் அண்ணனோட மனைவியா, சொல்லுங்க.
பார்கவி: ஆமாங்க. நாங்க சீதாவுக்கு மறுமணம் செய்து வைக்கும் முயற்சியில் இருக்கிறோம் (என்று கூறி மொத்த திட்டத்தையும் விளக்கி, சீதாவிற்கு ஆறுதல் சொல்லும்படி சொல்ல)
சரிதா: சீதாவிற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவளிடம் இப்பவே பேசுறேன். அவளுக்கு ஒரு நல்லது நடந்தா அதைப் பார்த்து சந்தோஷப்படற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். (என்று கூறிக் கொண்டே சீதாவை கைப்பேசியில் தொடர்பு கொண்டார் சரிதா).
(தொடரும்)
கடந்த வாரம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கதையை தொடர முடியாமைக்கு வருந்துகிறேன்.
போன வாரம்-14 வரை நடந்தது
//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.
மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.
இந்த இருவருக்கும் மகேஷின் சகலை சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.
நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்று, அசோக்கின் அம்மாவே அசோக்கிடம் சம்மதம் பெறுகிறார்.
மகேஷ் சீதா வீட்டில் சீதாவிடம் மெல்ல அவளின் மறுமணம் பற்றி சொல்ல சீதா முற்றிலும் மறுமணத்தை மறுக்க, சீதாவிடம் பேச சரியான நபர் சந்திரனின் விதவை அக்கா கலாவை மித்ரா தேர்ந்தெடுத்து கூற, கலாவும் சீதாவிடம் மறுமணம் குறித்து கைப்பேசியில் பேசுகிறார். கலா தன் அனுபவங்களின் கசப்பைக் கூறக்கூற கோபத்தில் சீதா கைப்பேசி இணைப்பை துண்டித்துவிட்டு உடனே, தன் அண்ணன் மகேஷிடம் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்க்க எண்ணிய சீதா மகேஷை அழைக்க, மகேஷ் தன் குழந்தை சுகமில்லாத காரணத்தால் மறுநாள் பேசுவதாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், மறுநாள் காலையிலும் குழந்தையை மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றதால் மகேஷ் சீதாவை கைப்பேசியில் அழைக்கவில்லை. மகேஷின் சூழல் அறியாத சீதா மகேஷின் மேல் கோபம் கொள்கிறார்.
இந்நிலையில் சந்திரனின் அக்கா கலா சந்திரன் வீட்டுக்கு வந்து சீதாவிடம் பேசியதையும் சீதா கோபத்தில் கைப்பேசி இணைப்பை துண்டித்ததையும் விளக்கமாக கூறுகிறார். மித்ரா சீதாவிடம் மகேஷின் சூழ்நிலையை விளக்கமாகக் கூற, சீதா அண்ணனிடம் மன்னிப்புக் கேட்க கைப்பேசியில் அழைக்கிறார். ஆனால், மகேஷ் தன் சகலை சந்திரனின் ஆலோசனைப்படி தங்கையிடம் கைப்பேசியில் கடிந்து பேசி அவரை உதாசீனப் படுத்துகிறார்.
இனி ......//
தங்கையிடம் கடிந்து பேசி கைப்பேசியை வைத்துவிட்டு சிரித்த மகேஷின் கண்களில் இருந்து அவரை அறியாமல் வழிந்த அந்த கண்ணீர் சந்திரனை சங்கடப்படுத்தியது.
சந்திரன்: என்ன மகேஷ். ஏன் அழறீங்க?
மகேஷ்: என்ன தான் நீங்கள் சொன்னது போல் கோபமாகப் பேசினாலும், சீதாவின் மனதை இப்படி நோகடிக்க வேண்டி வந்துவிட்டதே என நினைக்கும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. (என்று சொல்லிக்கொண்டே கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்).
சந்திரன்: எல்லாம் சீதாவின் எதிர்காலம் நன்றாக அமைவதற்குத்தானே.
மகேஷ்: அந்த ஒரு நம்பிக்கைதான் மனதுக்கு ஆறுதலாக உள்ளது. எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும். முடிந்ததும் என் தங்கையிடம் நான் இன்று கோபமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்.
சந்திரன்: அந்த நாள் விரைவில் வந்துவிடும். கவலைப் படாமல் சென்று வாருங்கள்.
சீதாவின் வீடு. நேரம் மதியம் 01.30 மணி. சீதா கண்கள் சிவந்திருக்க அழுது அழுது ஓய்ந்தவளாக அமர்ந்திருக்க, அழைப்பு மணி அழைத்தது. கதவைத் திறந்தாள். மகன் வைத்யா கையில் +2 ஹால் டிக்கெட்டோடு உள்ளே வந்தான். வந்தவன் அம்மாவின் கண்கள் சிவந்திருந்ததைப் பார்த்து,
வைத்யா: அம்மா அழுதீங்களா?
சீதா: இல்லப்பா.
வைத்யா: ஏம்மா மறைக்கிறீங்க. அப்பாவை நினைத்துத் தானே அழறீங்க. (என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே வித்யாவின் கண்களிலும் கண்ணீர் பொங்க)
சீதா: (அண்ணன் மகேஷின் கோபம் தான் தன் அழுகையின் காரணம் என்பதை மகனிடம் மறைத்து) அழாதேப்பா. இனி நான் அழல்ல. (என்று கூறி மகனை தேற்றினாள்).
வைத்யா: ஹால் டிக்கெட் கொடுத்துட்டாங்கம்மா. அப்பாவின் எண்ணப்படி நான் ஒரு டாக்டரா ஆகணும்மா.
சீதா: கண்டிப்பா அப்பாவோட ஆசீர்வாதத்தோட நீ டாக்டரா ஆவாய். ஹால் டிக்கெட்ட அப்பா படத்தாண்ட வச்சு நல்லா வேண்டிக்கப்பா. நமக்கு யார் ஆதரவுயில்லையென்றாலும் நான் உன்னை படிக்க வைக்கிறேன்.
வைத்யா: ஏம்மா, யார் ஆதரவும் யில்லேன்னாலும்னு சொல்றீங்க. நம்ம சொந்தக் காரர்கள் இருக்காங்களே.
சீதா; அவங்கவங்களுக்கு ஆயிரம் குடும்பப் பிரச்சனை இருக்கும். நம்ம பிரச்னையை நாம்தான் பார்த்துக்கணும்பா. அதுக்கு நீயும் உன்னை தயார்படுத்திக்கணும்.
வைத்யா: நீ சொல்றது சரிதாம்மா. நீ சொல்றதுபோல நடந்துக்கறேன்.
மகேஷின் வீடு. நேரம் மாலை 04.00 மணி. மகேஷுக்கு இன்னும் தான் தங்கை சீதாவிடம் நடந்துகொண்ட விதம் கண்முன்னால் வந்துகொண்டே இருந்தது. தங்கை மனநிலை இப்போது எப்படி இருக்கும்? யாரும் ஆதரவுக்கு இல்லை என்று ஏதும் தவறான முடிவுக்குச் செல்லாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்துக் குழம்பிக்கொண்டிருக்க,
மகேஷின் மனைவி பார்கவி வந்தாள்.
பார்கவி: என்னங்க. ஒரு மாதிரி இருக்கீங்க?
மகேஷ் நடந்த விவரங்களைக் கூற, பார்கவி முழுவதையும் விவரமாகக் கேட்டபின்,
பார்கவி: இப்போ, உங்க தங்கை எந்த தவறான முடிவுக்கும் போகாமல் இருக்க அவருக்கு ஒரு நெருங்கிய தோழமை வேண்டும். தன் கவலையை அந்த தோழியிடம் கொட்டித் தீர்க்கவேண்டும். எனவே, எனக்கு ஒரு யோசனை.
மகேஷ்: என்ன யோசனை?
பார்கவி: உங்கள் தங்கை ஊருக்கு லீவுக்கு வரும்போதெல்லாம், அவருடைய நெருங்கிய தோழி சரிதா வந்து பாப்பாங்களே. அவங்களுக்கு இப்ப சீதாவோட கணவர் இறந்தது தெரியுமா?
மகேஷ்: தெரியும். சாவிற்கு கூட வந்து ஒரு நாள் முழுக்க இருந்தாங்களே.
பார்கவி: அவங்களோட கைப்பேசி என்னை எனக்குக் கொடுங்க. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
மகேஷ்: என்ன பேசப்போகிறாய்?
பார்கவி: உங்களோட மொத்தத் திட்டத்தையும் அவங்களுக்கு விளக்கமா சொல்லி, சீதாவிற்கு ஆதரவா நாலு வார்த்தை பேசச் சொல்றேன்.
மகேஷ்: ரொம்ப நேரமா என்ன பண்றதுன்னே தெரியாம இருந்தேன். நல்ல ஐடியா கொடுத்தாய். சரி, இந்தா என் கைப்பேசியிலிருந்தே சரிதாவை கூப்பிட்டு இப்பவே பேசு.
பார்கவி சீதாவின் நெருங்கிய தோழி சரிதாவை கைப்பேசியில் அழைக்கிறார்.
சரிதா (சீதாவின் தோழி) : ஹலோ.
பார்கவி: ஹலோ, நாந்தாங்க உங்க தோழி சீதாவோட அண்ணி பார்கவி பேசுறேன்.
சரிதா: மகேஷ் அண்ணனோட மனைவியா, சொல்லுங்க.
பார்கவி: ஆமாங்க. நாங்க சீதாவுக்கு மறுமணம் செய்து வைக்கும் முயற்சியில் இருக்கிறோம் (என்று கூறி மொத்த திட்டத்தையும் விளக்கி, சீதாவிற்கு ஆறுதல் சொல்லும்படி சொல்ல)
சரிதா: சீதாவிற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அவளிடம் இப்பவே பேசுறேன். அவளுக்கு ஒரு நல்லது நடந்தா அதைப் பார்த்து சந்தோஷப்படற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். (என்று கூறிக் கொண்டே சீதாவை கைப்பேசியில் தொடர்பு கொண்டார் சரிதா).
(தொடரும்)
கடந்த வாரம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கதையை தொடர முடியாமைக்கு வருந்துகிறேன்.
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
தொடருங்கள்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
நன்றிகள்.கார்த்தி wrote: தொடருங்கள்
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|