புதிய பதிவுகள்
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
100 Posts - 49%
heezulia
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
24 Posts - 12%
mohamed nizamudeen
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
227 Posts - 52%
heezulia
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
24 Posts - 5%
T.N.Balasubramanian
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_m10ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்)


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 5:27 am

First topic message reminder :

ஆரோக்கியமான உறவுகள் - (தொடர்கதை ஞாயிறுதோரும்)

அனைத்து ஈகரை உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள். நான் இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் படித்து இன்புறும் வகையில் "ஆரோக்கியமான உறவுகள்" என்ற பெயரில் தொடர்கதை ஒன்றை உங்கள் ஆசீர்வாதத்தோடு எழுத உள்ளேன். இக்கதையில் நான் கூற விழைவது உறவுகளுக்குள்ளே உள்ள அன்பின் ஆழம் பற்றித்தான்". தங்கள் நல்லாதரவுடன் இதோ தொடங்குகிறேன்.

அது யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி. மகேஷ் அதைக் கேட்டதும், நிலைகுலைந்து விட்டார். இறந்தவர் மகேஷின் தங்கை சீதாவின் கணவர். வயது வெறும் 47தான். தன் ஒரே தங்கை சீதாவுக்கு இப்போது 38 வயது தான் ஆகிறது. பண வசதி நன்றாக இருந்த போதும் இந்த சிறிய வயதில் தன் தங்கை 15 வயது மகனுடன் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறாள்? என்ற கேள்விதான் மகேஷை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது. அப்படியே, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன.

ஒருநாள் சீதா தன் அண்ணன் மகேஷ் வீட்டுக்கு வந்திருந்தாள். மகேஷ் தங்கை இளைத்து முகம் வாடி இருப்பதைக் கண்டு மிக வருத்தத்துடன் சீதாவிடம் "எப்படிம்மா இருக்க? உன் மகன் வைத்யா எப்படி இருக்கிறான்?" என கேட்க,
சீதா கண்ணில் வழிந்த நீரை தன் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டு மெதுவாக சொல்லத் தொடங்கினாள். " அண்ணா, என்னவென்று சொல்வது? வைத்யா மிகவும் வாடிவிட்டான். எப்போதும் தன் அப்பா இல்லாத வெறுமையை தாங்க மாட்டாமல் தவிக்கிறான். அவனை தேற்ற என்னால் முடியவே இல்லை. அவனை எப்படி ஆளாக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை." என கண்ணீர் மல்கக் கூறினாள். மகேஷும் கண்கள் குளமாக, அவளை மனதளவில் தேற்றி விடை கொடுத்தான்.

மகேஷ் ஒருநாள் தன் வீட்டில் இருந்தபோது, அவரின் சகலை (சகலபாடி) சந்திரன் வந்தார். வந்தவர் மெல்ல சீதாவின் குடும்ப சூழ்நிலை குறித்து மகேஷிடம் விசாரிக்க, மகேஷ் தன் தங்கை பையன் வைத்யாவின் நிலையையும் அப்பாவின் நினைவால் அவன் வாடும் துயர் பற்றியும் சந்திரனிடம் சொன்னார். சந்திரன் மகேஷிடம் "மகேஷ், உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும்? இப்போதே பேசலாமா?" எனக் கேட்க, மகேஷும் தலையாட்ட, சங்கரன் சொல்ல ஆரம்பித்தார்.
"மகேஷ், நீங்கள் என் சகலை (சகலபாடி), எனில் உங்கள் தங்கை சீதா எனக்கும் தங்கைதானே?" என்று கூற, மகேஷும் ஆம் என்பதுபோல் தலையாட்ட, சங்கரன் தொடர்ந்தார். - "என் கடைசி அக்கா, கீதாவைப்போலவே சிறு வயதில் கணவனை இழந்தவர். கணவன் இறந்தபின், தன் ஒரே மகளை வளர்க்க மிகவும் பாடுபட்டார். தம்பியாக நானும் என் அண்ணனும் பண உதவிகள் செய்தபோதிலும், எங்களால், அக்கா மகளுக்கு ஒரு அப்பா ஸ்தானத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. அக்காவுக்கும் ஒரு கணவன் இல்லாது பட்ட துயரங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் இருந்தோம். எப்படியோ, அக்காவிற்கு அடைக்கலம் தந்து, குழந்தையை வளர்த்து அவளுக்கு ஒரு கல்யாணமும் செய்து முடித்தோம். ஆனால், எங்களால் என் அக்காவிற்கு உதவ முடிந்ததே தவிர, அவருக்கு கணவரின் இழப்பையும், அக்காவின் மகளுக்கு அப்பாவின் இடத்தையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது." எனக் கூற
மகேஷ் "அண்ணா, நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?" எனக் கேட்க

சந்திரன் தொடர்ந்தார் - " மகேஷ், நான் சொல்லப் போவது உங்களுக்கு புதுமையாக இருக்கும். ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கும். ஆனால் உங்கள் தங்கை சீதா மற்றும் அவள் மகன் வைத்யா ஆகிய இருவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, நான் சொல்லப் போவது கண்டிப்பாக நல்லதாக இருக்கும். என்ன விஷயம் என்பதை நாளை நீங்கள் என்னோடு என் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தீர்களானால் அவரின் வீட்டில் வைத்து சொல்லுவேன்? என்று கூறினார். மகேஷ் ஒன்றும் விளங்காதவராக, சரியென தலையாட்டினார்.

மறுநாள் காலையில் சந்திரன் மகேஷை கூட்டிக்கொண்டு, தன் உறவுக்காரரான அசோக் வீட்டுக்குச் சென்றார். அங்கு வீடே களையிழந்து வருத்தத்தோடு இருந்தது. அசோக் இருவரையும் வரவேற்று தேநீர் அளித்தார். வீடு வசதியாக இருந்தது. அசோக் தன் அம்மாவை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அசோக்குக்கு கிட்டத்தட்ட 45 வயது இருக்கும். அவருக்கு இரு குழந்தைகள். பெரியவன் இந்த வருடம்தான் கல்லூரி சேர்ந்திருந்தான். இரண்டாவது மகள். அவள் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அசோக் ஒரு வண்டி பாகங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனத்தில் சார்ஜ்மேனாக இருந்தார். நல்ல சம்பளம். ஆனால், சமீபத்தில் தன் மனைவியை விபத்தில் இழந்திருந்தார். மகேஷ் சந்திரனிடம் வந்த விவரம் குறித்து தனியாகக் கேட்க, சந்திரன் வீட்டுக்குச் சென்று சொல்கிறேன் எனக் கூற, மகேஷ் ஓரளவு யூகித்தவராக இருவரும் சந்திரனின் வீட்டுக்குத் திரும்பினர்.

சந்திரன் மகேஷிடம் "அசோக் குடும்பம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்க, மகேஷும் "நல்ல குடும்பம்" என்றார்.
சந்திரன் " மகேஷ், இப்போது அசோக் குடும்பத்தில் இரு குழந்தைகள் அம்மாவிற்காக ஏங்குகின்றன. அதுபோல் உன் தங்கையின் மகன் அப்பாவிற்காக ஏங்குகிறான். ஆனால் நீங்கள் மனது வைத்தால் மூன்று குழந்தைகளின் ஏக்கத்தையும் போக்க முடியும். அதாவது, அசோக்கிற்கு உங்கள் தங்கை சீதாவை ஏன் மனைவியாக்கக் கூடாது? இது மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து நான் எடுத்த முடிவாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என கேட்டு, ஆவலோடு மகேஷின் முகத்தை பார்த்தார்.
மகேஷ் "அண்ணா, நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால், அதற்கு அசோக் சீதா மற்றும் மூன்று குழந்தைகளின் சம்மதம் மட்டுமில்லாமல், இரு குடும்பத்தாரின் சம்மதம் வேண்டுமே" எனக் கூற,
சந்திரன் " மகேஷ், நான் அசோக்கின் குடும்பத்தில் இது பற்றி ஏற்கனவே கூறி, அசோக்கின் அம்மாவின் சம்மதம் பெற்றுவிட்டேன். நீங்கள், சீதாவிடம் மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்து சம்மதம் பெற்றால், குழந்தைகளை ஒன்றாக சந்திக்க வைத்து, பரஸ்பரம் புரிய வைத்து, அவர்களின் சம்மதத்தை நான் பெற்று விடுகிறேன்." எனக் கூற,
மகேஷுக்கு அப்போதே கல்யாணம் நடந்ததைப் போல நம்பிக்கை கிளைவிடத் தொடங்கியது. உடனே போய், தங்கையிடம் முழுதும் விளக்கி சம்மதம் பெற்றார்.
சந்திரன், மூன்று குழந்தைகளையும் ஒரு பூங்காவில் சந்திக்கச் செய்து பரஸ்பரம், இந்த கல்யாணத்தால் கிடைக்கப் போகும் நல்ல எதிர்காலத்தை விளக்கினார். குழந்தைகளும் அந்த "ஆரோக்கியமான உறவு" பற்றி புரிந்து சம்மதிக்க,
வடபழனி முருகன் கோவிலில் மூன்று குழந்தைகளும் முன்னின்று தங்கள் பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் நெருங்கிய உறவுகள் சம்மதிக்கவில்லை என்றாலும், போகப் போக, அனைவரும் அந்த உறவை ஆரோக்கியமாக உணர்ந்தனர்.

அசோக்கும் சீதாவும் ஆனந்தமாய் சந்திரனை நன்றிப் பெருக்கோடு ஆண்டவனாய் பார்த்தனர்.

(தொடரும்)








ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 425716_444270338969161_1637635055_n

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 09, 2012 9:53 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-2 வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு இன்று மாலை இதுகுறித்துப் பேச உள்ளார்.

மனைவி மித்ராவுடன் இதுபற்றி பேச அழைக்கும் போது அழைப்பு மணி ஒலிக்கிறது.

இனி ......//


சந்திரன் ஓடிச்சென்று கதவைத் திறக்க, வாசலில் பக்கத்து வீட்டுப் பையன் பாலன் நிற்கிறான். சந்திரன் "என்னப்பா, என்ன விஷயம்?" எனக்கேட்க
அந்தப் பையன் "அங்கிள், அப்பா நீங்க டுடே ஆர் டுமாரோ ப்ரீயா இருந்தா உங்ககிட்டே ஒரு விஷயம் பேசனுமாம். நீங்க இன்னைக்கு ஈவினிங் ப்ரீயா அங்கிள்?" எனக் கேட்டான்.
சந்திரன், "இல்லப்பா, இன்னைக்கு ஒரு வேலை இருக்கு. நாளைக்கு ஈவினிங் பார்க்கலாம்னு சொல்லு" எனக் கூறிவிட்டு கதவை மூடப் போனார். அதற்குள் கையில் தேநீரோடு வந்த மித்ரா "பாலன், இந்த டீய குடிச்சிட்டு போடா எனக்கூறி, அந்த டீயை நல்ல பக்குவமாக ஆற்றி பாலனிடம் கொடுத்தாள்.
சந்திரன் மித்ராவிடம், "ஏம்மா, நான் அனுபவிக்கிறது பத்தாதா? அவனும் நீ குடுக்கற சுடுத்தன்னிய டீனு குடிக்கணுமா?" என கேளிக்கையாக கேட்க, மித்ரா "பாரு, பாலன், நான் குடுத்த டீ சுடுத்தண்ணி மாதிரியா இருக்கு?" என ஆவலோடு கேட்க,
பாலன் முதலில் மறுத்து, பின் டீயை வாங்கிக்குடித்துவிட்டு "இல்ல...ஆனால் ஆமாம்" என வடிவேலு டயலாக் பேசிவிட்டு "தாங்க்ஸ், ஆண்ட்டி" என்று கூறிவிட்டு சிட்டாய்ப் பறந்தான்.
சந்திரன் சிரித்துக்கொண்டே, "மித்ரா, இப்படி வந்து உட்கார். உன்கிட்ட சீதாவைப் பற்றி பேசணும்" என்றார்.
மித்ரா "ஆமாங்க, நானே கேட்கனும்னு இருந்தேன், சீதா எப்படி இருக்காங்க? வைத்யா அப்பா இறந்த சோகம் குறைந்து, ஸ்கூலுக்கு போறானா? " என ஆவலாய்க் கேட்க,
சந்திரன், "உன்னுடைய இந்த குணம்தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பொதுவா பெண்கள், தன் வீடு, குடும்பம், கணவர், குழந்தைகள் என எப்போதும் ஒரு வட்டத்திலேயே இருக்க நீ மட்டும், அடுத்தவங்க துக்கத்துல பங்கெடுத்துக்கிட்டு ஆர்வமா விசாரிக்கிற பாரு. நீ எனக்கு மனைவியா கிடைச்சதுக்கு நான் ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கணும்" என நெகிழ
மித்ராவோ "இதிலே என்னங்க இருக்கு, ஒரு பொண்ணு மனசு மற்றொரு பொண்ணுக்குத்தானே தெரியும்" என பதிலளித்தாள்.
சந்திரன் தனது திட்டம் பற்றி சுருக்கமாக மித்ராவிடம் கூறிவிட்டு, இன்று மாலை நண்பன் வெங்கியை சந்திப்பது பற்றியும் கூறினார்.

அதே நேரம், சீதா வீட்டில்,
சீதா தன் மகன் வைத்யாவை பள்ளிக்குச் செல்வதற்காக எழுப்பினாள். எழுந்த மகனின் கண்கள் சிவந்து களைப்பாக உள்ளதை கண்டு சீதா "என்னப்பா நேற்று சரியா தூங்கலையா?" எனக் கேட்க,
வைத்யா "இல்லம்மா, அடுத்த வாரம் எனக்கு ப்ரீ போர்டு எக்ஸாம் வருது. அப்பாவின் கடைசி ஆசைப்படி நான் நல்ல மார்க் எடுக்கணும்னு, நேத்து ராத்திரி ஒரு மணி வரை படித்தேன். அதாம்மா" எனக் கூற,
சீதா "போய் குளிச்சிட்டு வந்து சாமிய வேண்டிக்க. அப்பா தெய்வமா இருந்து உனக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சு தருவாரு" என கண்ணில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே சொன்னாள்.

இரவு எட்டு மணி இருக்கும். சந்திரன் வெங்கி வீட்டிற்க்குச் சென்றார். வெங்கியின் மனைவி சுமதி இருவருக்கும் தேநீர் கொடுத்துக்கொண்டே "எப்படி இருக்கீங்க, வீட்டிலே மித்ரா எப்படி இருக்காங்க? பெரியவன் பிளஸ் டூ வாச்சே, எப்படிப் படிக்கிறான்?" எனக் கேட்க,
சந்திரன் "அதை ஏன் கேக்கறீங்க, எப்போதும் கம்ப்யூட்டர் முன்னாடி தான் இருக்கான், ஏதோ 'மெட்டின் டூ'-னு ஒரு கம்ப்யூட்டர் கேம்ஸ். அதத்தான் விளையாடிக்கிட்டு இருக்கான். வித விதமான மிருகங்களோட சண்டை போட்டுக்கிட்டு இருக்கான். அந்த மிருகங்கள பார்த்தாலே எனக்கு குமுட்டிக்கிட்டு வருது. பத்தாததுக்கு, அவன் தம்பியையும் கூட உட்கார வச்சிக்கிட்டு கெடுக்கறான்" என புலம்ப,
வெங்கி "விடுடா, எல்லாம் நல்லா வருவான். நீ அப்போ எப்படி இருந்த, நீ ஆடாத ஆட்டமா? இப்போ நல்லபடியாத்தானே இருக்கே! அவனும் சரியாயிடுவான்" எனச் சொல்ல
சந்திரன், "நான் கில்லி, கோலி, காத்தாடி, பம்பரம், கிரிக்கெட் எல்லாம் விளையாடினாலும் மனதிற்குள் படிக்க வேண்டுமே என்ற பயம் இருக்கும். ஆனால் அந்த பயம் இந்த கால பசங்க கிட்ட இல்லையே." என ஆதங்கப்பட
வெங்கி, "இந்த காலப் பசங்க விவரமானவங்க. அதனால பயப்படுரதில்லே. எல்லாம் நல்லா வருவான். கவலைப்படாமே நீ வந்த விஷயத்தை சொல்லு" என்றான்.
சந்திரன் திட்டம் பற்றி சுருக்கமாக கூறி, அசோக்கை சந்திப்பதைப் பற்றிக் கூற, அசோக்கை சந்திப்பதற்காக எப்போது வரலாம் எனக்கேட்க அசோக்கிற்கு டெலிபோன் செய்தார். மறுமுனையில், அசோக்கின் மகள் ரேணுகா ரிசிவரை எடுத்து "ஹலோ" என்று கூற,
சந்திரன் "அப்பா இல்லையாம்மா?" எனக் கேட்க, ரேணுகா தன் அப்பாவிடம் ரிசிவரைக் கொடுத்தாள்.
அசோக் "என்ன சந்திரன், எப்படி இருக்கிறீங்க, வீட்டிலே எல்லோரும் சுகமா?" எனக் கேட்க,
சந்திரன் தன் விருப்பங்களை சுருக்கமாக விளக்கிகொண்டிருந்தார். பின்னணியில்,

"மெழுகுவர்த்தி எரிகின்றது, எதிர்காலம் தெரிகின்றது,
புதிய பாதை வருகின்றது ...................................................."

பழைய சிவாஜி பாடல் சூழ்நிலைக்கேற்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)





ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 2:15 pm

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
அருமை..
இனி அடுத்த வாரம் தான் தருவீர்கள்..



ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Paard105xzஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Paard105xzஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Paard105xzஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 09, 2012 2:51 pm

அச்சலா wrote:
ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-3) (தொடர்கதை ஞாயிறுதோறும்)
அருமை..
இனி அடுத்த வாரம் தான் தருவீர்கள்..
உங்கள் 'அருமை'க்கு நன்றிகள். அடுத்த வாரம் இன்னும் சில இனிய நிகழ்வுகளோடு சந்திப்போம்.



ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Dec 09, 2012 6:28 pm

அருமை,
என்ன அடுத்த வாரம் வரை பொறுத்திருக்க வேண்டும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 09, 2012 6:37 pm

றினா wrote:அருமை,
என்ன அடுத்த வாரம் வரை பொறுத்திருக்க வேண்டும்.
நீங்களுமா..
அப்ப எல்லோரும் காத்திருக்க வைத்துவிட்டாரே...



ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Paard105xzஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Paard105xzஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Paard105xzஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 09, 2012 8:19 pm

றினா wrote:அருமை,
என்ன அடுத்த வாரம் வரை பொறுத்திருக்க வேண்டும்.
நன்(றி)னா. தங்கள் ஆர்வம் மற்றும் பொறுமைக்கு நன்றிகள். அடுத்த வாரம் சந்திப்போம்.



ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 7:55 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-4) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-3 வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அடுத்த ஞாயிறன்று அசோக் வீட்டுக்குச் செல்வதற்காக, அசோக்கிடம் அனுமதி வாங்குகிறார்.

இனி ......//


சந்திரனின் வீடு. ஞாயிற்றுக்கிழமை. அருமையான காலைப்பொழுது. நேரம் 8.40 மணி. சன் டி.வியில் "டாப்-10" நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்க, கடந்த வாரம் திரைக்கு வந்த "நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" திரைப்படம் எந்த இடத்தை பிடிக்கும் என ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்த மித்ராவிடம் சந்திரன் "ஏம்மா, நான் கிளம்பவா?" எனக் கேட்க,
"கிளம்புங்க, காத்து வரட்டும்" என தொலைக்காட்சியிலிருந்து கண்களை அகற்றாமல் மித்ரா கூற,
"என் முகத்த பார்த்து சொல்லக் கூடாதா?" என சந்திரன் ஏக்கத்தோடு கேட்க,
"போங்க நானே 'நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் டாப்-10ல எந்த இடத்த பிடிக்கப் போகுதுன்னு ஆவலாப் பாத்துக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு சாப்பிடக் கொடுத்தாச்சு. கிளம்ப வேண்டியதுதானே?" என்ற மித்ராவை நோக்கி
"பாத்தும்மா, நீ டி.வியையே பாத்துக்கிட்டிருந்தா 'நடுவுல கொஞ்சநேரம் பையனக் காணோம்'னு சொல்லி அப்புறம் அவன் ஸ்கூல்ல டாப்-10ல வரலன்னு என்னை கோபிக்கக் கூடாது" என கிண்டலாகக் கூற,
"அவன் 'நீர்ப் பறவை' எங்கப் போனாலும் இங்கதான் வந்தாவணும். நாங்க பாத்துக்கறோம். நீங்க போயிட்டு வாங்க, போய் நல்லபடியா பேசி நல்ல முடிவோடு வாங்க " என வழி அனுப்பி வைத்தாள்.

அசோக்கின் வீடு. நேரம் காலை 10.10 மணி. சந்திரனும் வெங்கியும் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, அசோக்கின் அம்மா இருவருக்கும் குளிர்பானம் வழங்கிக் கொண்டிருந்தார். அசோக் வீட்டில் இல்லை. ஏதோ அவசரமாக செல்வதாகவும், ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவதாகவும் சொல்லிச் சென்றிருந்தார். சந்திரன் வெங்கியை தன் குடும்ப நண்பன் என அசோக்கின் அம்மாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், மெல்ல சந்திரன் பேச்சை தொடங்கினார். " என்னம்மா, அசோக் எப்படி இருக்கிறார். பசங்க எப்படி இருக்கறாங்க?" எனக் கேட்க,
அசோக்கின் அம்மா கண்கள் கலங்க "இந்த நடுத்தர வயதில், மனைவியை இழந்து இந்த குழந்தைகளோடு அவன் படும் வேதனையைக் காண, என்னால் முடியவில்லை. மனைவி இறந்தது முதல் ஏதோ பித்து பிடித்தவன் போல் இருக்கிறான். எல்லா வகையிலும் அவனுக்கு உறுதுணையா இருந்தவ போய் சேர்ந்துட்டா. இப்ப அவன் தன்னையோ குழந்தைகளையோ பராமரிக்கும் நிலையில இல்லை. ஏதோ போறான், வரான். எனக்கு அவன பாக்க பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி. அவன்தான் கண்ணத் தொறக்கணும்" எனக் கூறிக் கொண்டே அழத் தொடங்கினார்.
உடனே வெங்கி, "அம்மா அழாதீங்கம்மா. நீங்கதான் இருக்கறீங்களே. பாத்துக்க மாட்டீங்களா? எனத் தேற்ற,
"ஒரு அம்மாவா நான் அவனுக்கு ஒரு குறையும் வைக்கலை. அன்பை கொட்டி வளத்துட்டேன். நல்லவனா வளத்து, படிக்க வச்சு, ஆளாக்கி ஒரு நல்ல வேலையில் அமர்த்தி, கல்யாணமும் பண்ணி வெச்சேன். ஆனா, ஒரு மனைவியோட ஸ்தானத்த, வேறு யாராலயும் பூர்த்தி செய்ய முடியாது. ஏன்னா, மனைவி சில நேரங்களில், தேவைப் பட்டா, தாயாகக் கூட மாறி அன்பைக் கொடுக்க முடியும். ஆனா, ஒரு அம்மாவால மகனின் மனைவியோட ஸ்தானத்த ஒருபோதும் ஈடுகட்ட முடியாது. ஆனால், நிறைய பேருக்கு மனைவியின் அருமை புரிவதில்லை. ஒரு மனைவி கணவனுக்கு மனைவியா, மந்திரியா, ஆலோசகரா, சோர்ந்து போகும்போது ஆறுதல் சொல்பவளா, வேலையிலிருந்து வந்தா, தன் அன்பான உபசரிப்பால வேலைக் களைப்பை போக்குபவளா, குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயா, இப்படி எல்லா பொறுப்புகளையும் சுமக்கறவளாத்தான் அசோக்கின் மனைவி இருந்தா. இப்போ அவ இல்ல. அவளின் இழப்பு அவனை ரொம்ப பாதிச்சிருச்சு. குழந்தைகளும் ரொம்ப பாதிச்சிருக்காங்க. இதை ஈடுகட்ட நான் என்ன செய்யப் போறேன்னே தெரியல" எனக் கூறி அழுதார்.
வெங்கி உடனே, "நீங்க, ஏன் அசோக்கிற்கு மீண்டும் ஒரு திருமணம் செய்து வைக்கக் கூடாது?" எனக் கேட்க,
"அவனுக்கு இப்போ 43 வயசுக்கு மேல இருக்கும். இரண்டு வளர்ந்த குழந்தைங்க. யார் பொண்ணு கொடுப்பாங்க? யாராவது, தன் பொண்ணு வாழ்க்கைய இந்த கல்யாணம் மூலமா பாழடிப்பாங்களா? நானே, எனக்கு ஒரு மகள் இருந்தா, அசோக்கைப் போல உள்ள ஆளுக்கு கட்டிக் கொடுப்பேனா? நீங்களே சொல்லுங்க?" எனக் கேட்டார்.
இதுதான் சரியான தருணம் எனப் புரிந்துகொண்டு சந்திரன் "அம்மா, அசோக் கல்யாணமானவர். இரு குழந்தைகளின் அப்பா. நாம ஏன் அதேநிலையில் உள்ள ஒரு விதவையை அசோக்கிற்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது?" என மெல்ல தன் கருத்தை முன் வைக்க,
இதை சற்றும் எதிர்பார்க்காத அசோக்கின் அம்மா, "விதவையையா?" என அதிர்ச்சியுடன் கேட்க,
"விதவை மட்டுமல்ல, ஒரு குழந்தைக்கும் தாயான ஒரு விதவைக்குத்தான். அதாவது, அசோக்கின் குழந்தைகளுக்கு, அவர் தாயாகவும் அதே நேரம் அவருடைய குழந்தைக்கு அசோக் தந்தையாகவும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்குமே" என தான் வந்த விஷயத்தை போட்டு உடைத்தார் சந்திரன்.
அசோக்கின் தாய்க்கு இந்த விஷயம் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தும் மெல்ல இதுபற்றி யோசிக்கத் தொடங்கினார்.

(தொடரும் )




ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 16, 2012 1:41 pm

படித்தவர்கள் விமர்சிக்கலாமே?



ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 23, 2012 7:28 am

ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-5) (தொடர்கதை ஞாயிறுதோறும்)

போன வாரம்-4 வரை நடந்தது

//கணவரை இழந்து +2 படிக்கும் மகன் வைத்யாவுடன் வாடும் மகேஷின் தங்கை சீதா.

மனைவியை இழந்து கல்லூரியில் படிக்கும் மகன் அபிஷேக் மற்றும் பத்தாவது படிக்கும் மகள் ரேணுகா ஆகியோருடன் வாடிக்கொண்டிருக்கும் அசோக்.

இந்த இருவருக்கும் சந்திரன் தன் மனைவி மித்ரா மற்றும் நண்பன் வெங்கியின் உதவியோடு திருமணம் செய்து முடிக்க திட்டமிடுகிறார்.

நண்பன் வெங்கியோடு அசோக் வீட்டுக்குச் சென்று அசோக்கின் அம்மாவிடம் தன் திட்டத்தை கூறுகிறார்.

இனி ......//


அசோக்கின் அம்மாவுக்கு சந்திரனின் இந்த கல்யாணத் திட்டம் ஆரம்பத்தில் ஒரு குழப்பத்தையே கொடுத்தது. இருப்பினும், மகன் படும் அவஸ்தை மற்றும் குழந்தைகள் படும் அவஸ்தை முதலியவற்றை நினைத்துப் பார்த்த போது மறுமணம் வேண்டும் என்கிற ஒரு முடிவுக்கு வந்தவராய் சந்திரனிடம் "ஏம்பா, ஒரு கல்யாணமாகாத சின்னப் பொண்ணாப் பாத்து கட்டி வெச்சா என்ன?" எனக் கேட்டார்.
அதற்குச் சந்திரன் "அம்மா, கல்யாணமாகாத சின்னப் பொண்ணு யாரும் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான ஒருவரை கல்யாணம் செய்ய ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மேலும், ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தாலும், கொஞ்சநாள் வசதியை அனுபவித்து சலித்துவிட்ட பின்னர், தன் வாழ்க்கை இப்படி ஒரு வயதானவரை மணந்து வீணாகிவிட்டதே என்கிற எண்ணம் தான் மேலோங்கும். அது மட்டுமில்லாது, தன்னை விட 4-5 வயதே குறைந்த ஒருவரை தன் மகனாக ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் அந்தப் பெண்ணுக்கு இருக்காது. தன் தங்கையைப் போல் உள்ள ஒரு பெண்ணை மகளாக ஒருபோதும் அவளின் மனம் ஏற்காது. மொத்தத்தில் ஏன் இந்த கல்யாணம் நடத்தினோம் என நாம் வருந்தும் அளவிற்கு விளைவுகள் விபரீதமாகிவிடும்" என விளக்கமாகக் கூற,
அசோக்கின் அம்மா, "நீ சொல்வது முற்றிலும் சரி. நான் அசோக் வந்ததும் நீங்கள் வந்த விஷயம் பற்றி கூறுகிறேன். கூறி சம்மதம் வாங்கிவிட்டு அசோக்கையே உங்களிடம் பேசச் சொல்கிறேன்" என்று கூறியதும் சந்திரனும் வெங்கியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்களாக அங்கிருந்து கிளம்பினர்.

நேரம் மதியம் 1.35 மணி. சந்திரனின் வீடு. சன் டிவியில் 'கும்கி' பட வெற்றியைக் குறித்து இயக்குனர் பிரபு சாலமன் பேட்டிகொடுத்துக் கொண்டிருந்தார். சந்திரனின் பெரிய மகன் தம்பி நவீனை கேலி செய்வதற்காக "நவீன், கும்கி படத்துல அந்த யானைக்கு பதிலா உன்னை போட்டு படம் எடுத்திருந்தா தயாரிப்பாளர் இந்நேரம் உனக்கு தீனி போட்டே போண்டி ஆயிருப்பார்" என்று தம்பியின் சிறிது பூசிய உருவத்தை கேலி செய்வது போல கூற, நவீன் பதிலுக்கு "நேத்து, அவரோட அடுத்த படத்துல சில குரங்குக் காட்சிகளை ஷூட்டிங் பண்ண குரங்கு கிடைக்கலையாம், உன்னை வைத்து எடுக்கலாமான்னு வந்து உன் கால்ஷீட் கேட்க வந்திருந்தார்" நிறைய வாழைப்பழம் தருவாங்க போறியா?" என பதிலுக்கு கிண்டலடிக்க,
மித்ராவும் கிண்டலாக "zoo ஓனர் வந்தா ரெண்டு மிருகத்தையும் பிடிச்சு கூண்டுல அடைக்கச் சொல்லிடுவேன். ரெண்டு பெரும் சும்மா இருங்க" என்று கூறும் போதே, சந்திரனும் வெங்கியும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வெங்கி "என்னம்மா, எப்படி இருக்கிறீங்க?" என்று கேட்க,
மித்ரா "வாங்கண்ணா, இவங்கள மேய்க்கவே சரியா இருக்கு. வீட்டில் எல்லோரும் சுகமா?" எனக் கேட்டாள்.
"எல்லோரும் சௌக்கியம், சிக்கன் வாசனை வீடு முழுக்க மணக்குதே?" என்று வெங்கி ஆவலாய்க் கேட்க,
"ஆமாமாம்" என்று மித்ரா கூற,
"சந்திரன், அசைவம் சாப்பிட ஆரம்பிச்சிட்டானா?" என்று வெங்கி சந்தேகத்தோடு கேட்க,
"அவர் தொடறதே இல்லை. வெறும் மரக்கறி தான்" என்று மித்ரா கூற,
"அதுதானே பார்த்தேன். ஒரு முறை அவன் சைவம் பத்திப் பேசின பேச்சில நானே அடுத்த ரெண்டு நாள் அசைவம் சாப்பிடறத நிறுத்தியிருந்தேன். அப்படி ஒரு லெக்சர் கொடுத்தான்". என்று வெங்கி கூறினார்.
"சண்டே ஆனா, எனக்கு டபுள் வேல. எங்களுக்கு அசைவம். அவருக்கு சைவம். சரி வாங்கண்ணா, சமையல் ரெடியாயிடுச்சு" என்று கூறிக் கொண்டே மித்ரா இலை போட்டு இருவருக்கும் பரிமாறிக்கொண்டிருந்தாள். இருவரும் பக்கத்து பக்கத்து இலையில் சைவமும் அசைவமுமாக சாபிடுவது காண்போருக்கு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது.
"போன வேலை என்னங்க ஆச்சி. காயா, பழமா? என மித்ரா கேட்க ,
"உங்க வீட்டுக்காரர் போனா பழம்தானே எப்போதும்" என தன் நண்பனை பெருமையோடு பார்த்துக்கொண்டே வெங்கி கூற
"என்ன, அசோக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரா?" என மித்ரா ஆவலாய் கேட்டாள்.
அதற்கு சந்திரன் "அசோக் வீட்டில் இல்லை. அவருடைய அம்மாவிடம் பேசி ஒப்புக் கொள்ள வைத்துவிட்டோம். அவரே அசோக்கிடம் பேசி சம்மதம் வாங்குவதாகக் கூறியுள்ளார்" என சந்திரன், மொத்த கதையையும் விளக்கமாக மனைவியிடம் கூறினார். அதேநேரம், சன் டிவியில் பிரபு சாலமனும் 'கும்கி' வெற்றி பற்றி கூறி முடித்தார்.

இரவு சரியாக 9.15 மணி. விஜய் டிவியில் 'நீயா நானா'வில் கோபிநாத் "ஒரு மனிதன் சூழ்நிலைக்கேற்ப தன் சுபாவத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என இருவேறு குழுக்களோடு கார சாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். மித்ரா சந்திரனிடம், "உங்கள் திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன?" எனக் கேட்க,
சந்திரன் "நீயா, நானா பார்க்கும்போது, தொந்தரவு செய்யாதே என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்?" என்று எரிந்து விழ,
மித்ரா சுருங்கிய முகத்துடன் போய் படுத்துக் கொண்டாள்.
சந்திரன், அடுத்த விளம்பர இடைவேளை வந்தவுடன், ஓடிச் சென்று, மித்ராவை சமாதானப் படுத்தி "அசோக்கிடம் இருந்து நல்ல பதில் வந்த பிறகு தான் நமது அடுத்தக் கட்ட வேலை" என்று கூறிவிட்டு, மீண்டும் விஜய் டிவியில் மூழ்கிவிட்டார்.

இரண்டு தினங்களுக்குப் பிறகு, சந்திரன் அலுவலகத்தில் இருந்த போது கைப்பேசியில் அழைப்பு வந்தது. சந்திரனை அசோக் அழைத்துக் கொண்டிருந்தார்.

(தொடரும்)


கதையை படித்தால் மட்டும் போதுமா? விமர்சிக்க வேண்டாமா?



ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Dec 28, 2012 11:48 am

றினா wrote:அருமை,
என்ன அடுத்த வாரம் வரை பொறுத்திருக்க வேண்டும்.
இந்த 5ஆவது வாரம் கதையை படித்துவிட்டீர்களா?



ஆரோக்கியமான உறவுகள் - (வாரம்-19) (தொடர்கதை ஞாயிறுதோரும்) - Page 2 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக