புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது சிவபெருமானையே!
Page 1 of 1 •
திருமால் வழிபாடு, அம்மை, மூத்த பிள்ளையார், திருமுருகன் வழிபாடு போலப் பண்டு நந்தமிழகத்துச் சிவவழிபாட்டில் அடங்கி நின்றதேயாம். அது பிற்காலத்து, ஆரிய மொழிச் சார்பும் ஆரிய வழக்குச் சார்பும் பெற்றதன் பின்னரே, வைணவம் எனச் சிவநெறியின் வேறுபட வழங்குவதாயிற்று. ‘இறைமாட்சி’ என்னும் அதிகாரப் பெயர் விளக்கத்தினும், சில குறட்பாக்களின் உரைகளினும் பரிமேலழகர் குறிப்பாக உரைப்பன சில கொண்டு, இக்காலத்துச் சிலர் திருவள்ளுவர் இறைவன் எனக் கொண்டது திருமாலையே எனச் சாதிப்பர். அன்னோர் கூற்றும் விளக்குதற்கு உரியது.
அவர்தம் கூற்றுக்குச் சிறந்த ஆதாரமாகக் காட்டுவன:
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”
என்பதும்,
“தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு”
என்பதும் ஆம்.
இக்குறட்பாக்கள் முறையே திருமாலின் லீலா விபூதி, நித்திய விபூதி என்பவற்றை உணர்த்தித் திருமாலின் முதன்மை தேற்றுவன் என்பர். நுண்ணுணர்வு உடையார்க்கு இரண்டு பாக்களிலும் இகழ்ச்சிக் குறிப்பு இருத்தல் விளங்கும்.
இவற்றுள் முன்னையது “மாயோன் மாவலியால் குறளாகக் கரந்து சென்று, மூவடி மண் இரந்து, பின் நெடியனாய் நீண்டு,தாவி அளந்த பரப்பு முழுவதும் மடியில்லாத அரசன் (தன் தாளாண்மையானே) ஒருங்கே எய்துவன்” என்கின்றது. இதனால் மாயோன்பால் கரந்து சேறலாகிய முறை செய்யாமையும், இரத்தலாகிய இளிவரவும் குறிப்பிக்கப்பட்டு, முயற்சியுடைய மன்னவன் தன் செல்வம் பெருக்கற்கு அவ்விரண்டையும் மேற்கொள்ள வேண்டுவதின்று என மடியின்மையின் பயன் உணர்த்தப்படுகின்றது.
இதனானே,
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்”
என்னும் குறட்பாவால் குறிப்பிக்கப்படும் இறை இயல்பு அடியளந்தான் மேற்செல்லாமைப் பொருட்டு முறை செய்து என்னும் அடைபெய்து வைக்கப்பட்டது என்பது உய்த்துணரப்படும். திருமால் நெறியினர், மாயோன் செய்த வஞ்சனை பற்றியே அவற்கு முதன்மை கூறுவதை மரபாகக் கொள்வர். சிவபிரான் பசுக்கள் எனப்படும் உயிர்களைப் பாசத்தின் நீக்கிக் காக்கும் இயல்பு பற்றிப் பசுபதி எனப்படுதலின், திருவள்ளுவர் குறிப்பிக்கும் இறையியல்பு அவர்க்கே உரிய சிறப்பியல்பாய் முடிதல் காண்க. பதி=காக்கிறவன், பா=காத்தல், தி=வினை முதற்பொருண்மை உணர்த்தும் விகுதி)
இனி திருமாலின் நித்திய விபூதி உணர்த்துவது எனப்படும் மற்றையதும் பரமபதம் என்னும் தாமரைக்கண்ணான் உலகிற்பெறும் இன்பம் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோள்மேல் துயிலுதலாற் பிறக்கும் இன்பத்திற் சிறந்தது கொல்லோ? எனப்புணர்ச்சி மகிழுந் தலைவன் கூற்றாக வருதலின், அஃது அவன் மாயோன் உலகவின்பத்தைச் சிறப்பின்மை கூறிப் பொருட்படுத்தாது இகழும் இகழ்ச்சிக்குறிப்பினையே உடையதாதல் காண்க. இக்கருத்தே பற்றியன்றே கமலை வெள்ளியம்பலவாண முனிவர், முதுமொழிமேல் வைப்பில்,
“அரன்அடியார் அல்லார் அடைபதந் தானும்
இருநிலஇன் பத்திழிவாம் என்று-வருவதிது
தம்வீழ்வார் மென்றோட் டியிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு”
என்பாராயினர்!
செம்புலச்செல்வர்கள் நிரதிசய வின்பமாகிய வீட்டின்பத்தைக் குறிக்கவரும் இடத்து, இக்குறட்பாவிற்போலச் சிற்றின்பத்தை அதனோடு உறழ்ந்து கூறாது, பொருவியே கூறுவர் என்பதை,
“உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே”
என்னும் திருச்சிற்றம்பலக் கோவையான் உணர்க.
இன்னும் திருக்குறளில், சிவபெருமானது இறைமையைக் குறிப்பான் உணர்த்தி வரும்
“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு”
என்பதினும்
“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்”
என்பதினும் இகழ்ச்சிக் குறிப்புச் சிறிதும் இன்மை காண்க.
இவற்றுள் முன்னையது மார்க்கண்டேயனார் வரலாற்றைச் சுட்டி (மணக்குடவர் உரையைக் காண்க). தன்னைத் தவத்தோன் வழிபடுவோரை இறப்பு அச்சத்தின் நீக்கி உய்யக் கொள்ளும் இறைவனது பேராற்றலைக் குறிப்பிக்கின்றது; பின்னையது இறைவன், முன் தன்னை எண்ணாது இகழ்ந்த தேவர்கள் பின் சரண்புகுந்தபோது, அவர்கள்மாட்டுக் கண்ணோடி, நஞ்சுண்டு உய்வித்து அமுதீந்த வரலாற்றைச் சுட்டிக் குற்றமுடையோரையும் நெறிபடக் காப்பாற்றி அருளும் அவனது ஒப்பற்ற பேரருளைக் குறிக்கின்றது. இவை இரண்டும் இறைமைக் குணங்களாதல் காண்க.
(நன்றி: சித்தாந்த வித்தகர் க.வச்சிரவேல் முதலியார் எழுதிய “திருக்குறளின் உட்கிடை சைவசித்தாந்தமே” புத்தகம்)
அவர்தம் கூற்றுக்குச் சிறந்த ஆதாரமாகக் காட்டுவன:
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”
என்பதும்,
“தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு”
என்பதும் ஆம்.
இக்குறட்பாக்கள் முறையே திருமாலின் லீலா விபூதி, நித்திய விபூதி என்பவற்றை உணர்த்தித் திருமாலின் முதன்மை தேற்றுவன் என்பர். நுண்ணுணர்வு உடையார்க்கு இரண்டு பாக்களிலும் இகழ்ச்சிக் குறிப்பு இருத்தல் விளங்கும்.
இவற்றுள் முன்னையது “மாயோன் மாவலியால் குறளாகக் கரந்து சென்று, மூவடி மண் இரந்து, பின் நெடியனாய் நீண்டு,தாவி அளந்த பரப்பு முழுவதும் மடியில்லாத அரசன் (தன் தாளாண்மையானே) ஒருங்கே எய்துவன்” என்கின்றது. இதனால் மாயோன்பால் கரந்து சேறலாகிய முறை செய்யாமையும், இரத்தலாகிய இளிவரவும் குறிப்பிக்கப்பட்டு, முயற்சியுடைய மன்னவன் தன் செல்வம் பெருக்கற்கு அவ்விரண்டையும் மேற்கொள்ள வேண்டுவதின்று என மடியின்மையின் பயன் உணர்த்தப்படுகின்றது.
இதனானே,
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்”
என்னும் குறட்பாவால் குறிப்பிக்கப்படும் இறை இயல்பு அடியளந்தான் மேற்செல்லாமைப் பொருட்டு முறை செய்து என்னும் அடைபெய்து வைக்கப்பட்டது என்பது உய்த்துணரப்படும். திருமால் நெறியினர், மாயோன் செய்த வஞ்சனை பற்றியே அவற்கு முதன்மை கூறுவதை மரபாகக் கொள்வர். சிவபிரான் பசுக்கள் எனப்படும் உயிர்களைப் பாசத்தின் நீக்கிக் காக்கும் இயல்பு பற்றிப் பசுபதி எனப்படுதலின், திருவள்ளுவர் குறிப்பிக்கும் இறையியல்பு அவர்க்கே உரிய சிறப்பியல்பாய் முடிதல் காண்க. பதி=காக்கிறவன், பா=காத்தல், தி=வினை முதற்பொருண்மை உணர்த்தும் விகுதி)
இனி திருமாலின் நித்திய விபூதி உணர்த்துவது எனப்படும் மற்றையதும் பரமபதம் என்னும் தாமரைக்கண்ணான் உலகிற்பெறும் இன்பம் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோள்மேல் துயிலுதலாற் பிறக்கும் இன்பத்திற் சிறந்தது கொல்லோ? எனப்புணர்ச்சி மகிழுந் தலைவன் கூற்றாக வருதலின், அஃது அவன் மாயோன் உலகவின்பத்தைச் சிறப்பின்மை கூறிப் பொருட்படுத்தாது இகழும் இகழ்ச்சிக்குறிப்பினையே உடையதாதல் காண்க. இக்கருத்தே பற்றியன்றே கமலை வெள்ளியம்பலவாண முனிவர், முதுமொழிமேல் வைப்பில்,
“அரன்அடியார் அல்லார் அடைபதந் தானும்
இருநிலஇன் பத்திழிவாம் என்று-வருவதிது
தம்வீழ்வார் மென்றோட் டியிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு”
என்பாராயினர்!
செம்புலச்செல்வர்கள் நிரதிசய வின்பமாகிய வீட்டின்பத்தைக் குறிக்கவரும் இடத்து, இக்குறட்பாவிற்போலச் சிற்றின்பத்தை அதனோடு உறழ்ந்து கூறாது, பொருவியே கூறுவர் என்பதை,
“உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்
குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ் வாயிக் கொடியிடைதோள்
புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய்
மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே”
என்னும் திருச்சிற்றம்பலக் கோவையான் உணர்க.
இன்னும் திருக்குறளில், சிவபெருமானது இறைமையைக் குறிப்பான் உணர்த்தி வரும்
“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு”
என்பதினும்
“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்”
என்பதினும் இகழ்ச்சிக் குறிப்புச் சிறிதும் இன்மை காண்க.
இவற்றுள் முன்னையது மார்க்கண்டேயனார் வரலாற்றைச் சுட்டி (மணக்குடவர் உரையைக் காண்க). தன்னைத் தவத்தோன் வழிபடுவோரை இறப்பு அச்சத்தின் நீக்கி உய்யக் கொள்ளும் இறைவனது பேராற்றலைக் குறிப்பிக்கின்றது; பின்னையது இறைவன், முன் தன்னை எண்ணாது இகழ்ந்த தேவர்கள் பின் சரண்புகுந்தபோது, அவர்கள்மாட்டுக் கண்ணோடி, நஞ்சுண்டு உய்வித்து அமுதீந்த வரலாற்றைச் சுட்டிக் குற்றமுடையோரையும் நெறிபடக் காப்பாற்றி அருளும் அவனது ஒப்பற்ற பேரருளைக் குறிக்கின்றது. இவை இரண்டும் இறைமைக் குணங்களாதல் காண்க.
(நன்றி: சித்தாந்த வித்தகர் க.வச்சிரவேல் முதலியார் எழுதிய “திருக்குறளின் உட்கிடை சைவசித்தாந்தமே” புத்தகம்)
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
நல்ல தகவல். நன்றி சாமி !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|