புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழிக்கு பழி!! Poll_c10பழிக்கு பழி!! Poll_m10பழிக்கு பழி!! Poll_c10 
32 Posts - 49%
heezulia
பழிக்கு பழி!! Poll_c10பழிக்கு பழி!! Poll_m10பழிக்கு பழி!! Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
பழிக்கு பழி!! Poll_c10பழிக்கு பழி!! Poll_m10பழிக்கு பழி!! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பழிக்கு பழி!! Poll_c10பழிக்கு பழி!! Poll_m10பழிக்கு பழி!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழிக்கு பழி!! Poll_c10பழிக்கு பழி!! Poll_m10பழிக்கு பழி!! Poll_c10 
32 Posts - 49%
heezulia
பழிக்கு பழி!! Poll_c10பழிக்கு பழி!! Poll_m10பழிக்கு பழி!! Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
பழிக்கு பழி!! Poll_c10பழிக்கு பழி!! Poll_m10பழிக்கு பழி!! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பழிக்கு பழி!! Poll_c10பழிக்கு பழி!! Poll_m10பழிக்கு பழி!! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழிக்கு பழி!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Nov 18, 2012 2:35 pm

வைரவன் பெரும் பணக்காரனாக இருந்தார். அவர் பணக்காரர்களை தனக்கு சமமாக நடத்தினார். அவர் அரண்மனையில், ஏராளமான வேலைக்காரர்கள் வேலை செய்து வந்தனர். தன்னைத் தேடி வருகின்ற பணக்காரர்களுக்கு, சுவையான உணவை கொடுத்து வந்தார்.
தனது பணக்கார நண்பர்களுக்கெல்லாம் அறுசுவை உணவினைக் கொடுத்த அவர், தன்னிடம் வேலை செய்கிற வேலையாட்களுக்கு மட்டமான உணவுகளைக் கொடுத்து, கடினமாக வேலை வாங்கினார். சம்பளமும் குறைவாக கொடுத்தார்.
இதன் காரணமாக, வேலையாட்கள் எல்லாரும் வைரவன் மீது மிகவும் வெறுப் பாகவே இருந்தனர். அவரை எந்த நேரத்தில், பழி வாங்கலாம் என்று தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் வைரவன் வெளியூர் புறப்பட முடிவு செய்தார். தனக்கு உதவியாக தனது வேலையாட்கள் நான்கு பேர்களை உடன் அழைத்துக் கொண்டார்.
வேலைக்காரர்களின் உதவியோடு, வண்டியில் பயணமானார்.
வண்டி ஓர் காட்டுப் பாதையின் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வேலைக்காரர்கள் நால்வரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர். தங்களுக்குள் மவுன பார்வை பார்த்தபடி, ஓர் முடிவுக்கு வந்தனர்.
உடனே, ஒரு வேலையாள் மெல்ல வண்டி ஓட்டுனரின் முதுகில் தட்டினான்.
உடனே வண்டி ஓட்டுனரும் நான்கு வேலைக்காரர் களின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கிற வகையில், வண்டியை நிறுத்திக் கொண்டான்.
வேலைக்காரர்கள் நால்வரும் வண்டியை விட்டுக் கீழே இறங்கினர். அவர்களோடு வண்டி ஓட்டுனரும் கீழே இறங்கினார்.
இதனைக் கண்ட வைரவன் ஆத்திரமடைந்தார்.
""வேலைக்காரர்களே! இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது. வண்டிக்காரர் ஏன் வண்டியை நிறுத்தி விட்டார். நீங்கள் எல்லாரும் எதற்காக வண்டியை விட்டு கீழே இறங்கினீர்கள்?'' என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
""ஐயா! நீங்கள் எங்கள் முதலாளிதான். ஆனால், இந்த நேரத்தில் நாங்கள் உங்களிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டால்தான் எங்கள் மனது அமைதியடையும். இதற்காகவே, காத்துக் கொண்டிருந்தோம். அது இப்போதுதான் நிறைவேற போகிறது,'' என்றான் ஒரு வேலையாள்.
அதனைக் கேட்ட வைரவன் திடுக்கிட்டார்.
""நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்கள் பேச்சு எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது?'' என்றார்.
""ஆமாம்! ஆமாம்! எங்களின் பேச்சு உங்களுக்கு வியப்பைத்தான் ஏற்படுத்தும். ஏனென்றால் நீங்கள் வாழ்க்கையிலேயே இதுவரையிலும் சந்திக்காத ஒன்றினை சந்திக்கப் போகிறீர்கள். அந்த சந்திப்பானது, நீங்கள் நினைத்துப் பார்த்திராத ஒன்றாகும்!'' என்றார் இன்னொரு வேலையாள்.
அதனைக் கேட்ட வைரவன், மேலும் திடுக்கிட்டார்.
வேலைக்காரர்களின் கண்களை உற்று நோக்கினார். அவர்களோ கொலை வெறி பிடித்தவர்கள் போன்று காணப்பட்டனர். அவர்கள் முகத்தைப் பார்த்த வேளையில், சற்று நடுங்கத் தொடங்கினார் வைரவன்.
வேலைக்காரர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்பதை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை.
வேலைக்காரர்களோ வைரவனை, வண்டியை விட்டுக் கீழே இறக்கினர். பின்னர் அருகில் இருந்த ஓர் குகையை நோக்கி இழுத்துச் சென்றனர்.
""வேலைக்காரர்களே! உங்களுக்கு என்னாயிற்று? எதற்காக என்னைக் குகையை நோக்கி இழுத்துச் செல்கிறீர்கள்?'' என்று கேட்டார் வைரவன்.
""உங்களுக்கு சரியான பாடம் புகட்டவே, நாங்கள் இந்த மாதிரி நடந்து கொள்கிறோம்! எத்தனையோ நாட்கள் எங்களைக் கொடுமைப் படுத்தியிருக்கிறீர்கள்! எங்களுக்கு மட்டமான உணவினைக் கொடுத்து விட்டு, எங்களை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கினீர்கள்! வேலைக்காரர்கள் என்றால் கேவலமானவர் கள் என்று நினைத்தீர்கள்! அதற்கெல்லாம் நீங்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவித்து, எங்கள் கஷ்டமான நிலையினை உணர வேண்டும். எனவே, உம்மை நாங்கள் குகையில் அடைத்து வைத்திருக்கப் போகிறோம். நீர் இனிமேல் இந்தக் குகையில்தான் இருக்க வேண்டும். நாங்கள் சாப்பிடுகிற உணவைத்தான் நீரும் சாப்பிட வேண்டும்,'' என்று கூறியபடி வைரவனை இழுத்துக் குகையின் உள்ளே சென்றனர் வேலைக்காரர்கள்.
அந்த நேரத்தில், அந்த பகுதியில் வசித்து வருகிற முனிவர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.
"அடடே! குகையின் உள்ளே மனிதர்களின் நட மாட்டம் இருப்பது போன்று தெரிகிறதே!' என்று மனதுக்குள் நினைத்தவராய் தன் கண்களை மூடியபடி ஆராயத் தொடங்கினார்.
சிறிது நேரத்தில், அவருக்கு எல்லாமே தெரிந்தது.
உடனே அவர் குகைவாசலில் நின்று கொண்டார்.
""அறிவில் முழுத் தேர்ச்சிப் பெறாத மனிதர்களே! நீங்கள் எல்லாரும் குகையை விட்டு வெளியே வாருங்கள்,'' என்று அழைத்தார்.
அவர் சத்தத்தைக் கேட்டதும், வேலைக் காரர்களும், வைரவனும் திடுக்கிட்டனர். பின்னர் குகையை விட்டு வெளியே வந்தனர்.
குகையின் வெளியே கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் முனிவரைப் பார்த்ததும் வியப்படைந்தனர்.
ஒரு வேலைக்காரர் அந்த முனிவரின் அருகே சென்று அடிபணிந்து நின்றார்.
""ஐயா! முனிவரே! நீங்கள் தானே எங்களை அழைத்தீர்கள்! உங்கள் கம்பீரமான குரலைக் கேட்கிற போது எங்களுக்கு அச்சமாக இருக்கிறது,'' என்றான்.
முனிவரோ அமைதியுடன் அந்த நான்கு வேலைக்காரர்களை நோக்கினார். பின்னர் வைரவனை நோக்கினார்.
""நீர் பணம் படைத்தவராகயிருக்கிறீர்! பணம் உம்மிடம் ஏராளமாக இருக்கிறது என்ற மமதையில் மற்றவர்களை மதிக்காமல் இருக்கிறீர். உமது வேலைக்காரர்களை நீர் சரியாக நடத்தாத காரணத்தினால் அவர்கள் உங்கள்மீது கோபமடைந்து விட்டனர். அவர்கள் உங்கள் மீது காட்டிய வெறுப்பானது அவர்களை இந்த அளவுக்கு தூண்டி விட்டது. இவர்கள் எல்லாரும் தாங்கள் பட்ட சித்ரவதைகளை நீயும் அனுபவிக்க வேண்டிதான் உன்னை குகையில் அடைக்க இழுத்து வந்தார்கள் என்பதை நான் என்னுடைய ஞானத்தினால் அறிந்து கொண்டேன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Nov 18, 2012 2:35 pm

"ஒரு சமயம் நானும் உன்னைப் போன்று பெரும் பணக்காரனாகயிருந்தேன். அடுத்த வரை மதிக்கிற பண்பு இல்லாமல் வாழ்ந்து வந்தேன். என்னிடம் இருக்கும் பணமே எனக்குப் பல எதிரிகளைத் தேடித் தந்தது. அதனால் நான் பல துன்பங்களையும், அவமானத்தையும் அடைந்தேன். அதன் பின்னர் பணம் இருந்தும் என் வாழ்க்கையில் நிம்மதியில்லை. நான் பட்ட அவமானங்கள் எல்லாம் என்னை வாட்டியெடுத்துக் கொண்டிருந்தன. நான் ஒவ்வொரு நாளும் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தேன். கடைசியில் என்னிடம் இருக்கிற சொத்துக் களை எல்லாம் நான் ஏழைகளுக்குப் பகிர்ந் தளித்தேன். அதில், எனக்கு பெரிய நிம்மதி ஏற்பட்டது. நாள்பட நாள்பட என்னுடைய செல்வங்களை எல்லாம் நான் தர்மம் செய்து முடித்து விட்டேன். பின்பு தனிமையில் வாழத் தொடங்கினேன். தனிமையில் வாழ்ந்ததின் பயனாக, இப்போது நான் முனிவரானேன். எதையும் உணர்ந்து அறியும் சக்தியைப் பெற்றேன்,'' என்றார் முனிவர்.
முனிவரின் பேச்சானது வைரவனுக்கு மன மாற்றத்தை ஏற்படுத்தியது.
""முனிவரே! உங்கள் பேச்சில் உள்ள உண்மையினை நான் உணர்கிறேன். உங்கள் பேச்சைக் கேட்ட பின்னர் என் மனதில் பல மாற்றங்கள் உருவாகின்றன. அவைகள் என் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. இப்போது நான் என்னை நினைத்தே வெட்கப் படுகிறேன். இத்தனைக் காலமும் நான் வாழ்ந்த வாழ்க்கையானது தவறு என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. இனிமேல் நான் இந்தத் தவறினை தொடர்ந்து செய்து கொண்டிருக்க மாட்டேன். இப்போதே நான் என்னுடைய வீட்டிற்குச் சென்று என் வேலையாட்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுநாள் வரையிலும் நான் செய்தத் தவறினை எல்லாம் அவர்கள் பொறுத்துக் கொள்ளுமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் நான் என்னிடம் இருக்கிற பணத்தைக் கொண்டு எல்லாருக்குமே உதவிகள் செய்வேன். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடெல்லாம் எனக்கு ஒரு போதுமே ஏற்படாது,'' என்று கூறினார்.
வைரவன் அவ்வாறு கூறியதைக் கேட்டதும், அந்த நான்கு வேலையாட்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
முனிவரும் மகிழ்ச்சியோடு அந்த வேலைக்காரர்களை நோக்கினார்.
""ஒருவர் தவறானச் செயல் செய்து வருகிறார் என்பதற்காக நாம் ஒருபோதும் அவரை துன்புறுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக அவர் தனது குற்றத்தை உணர்ந்து திருந்தும் படியாகச் செய்ய வேண்டும். இனிமேல் யாரையும் துன்புறுத்தும் நோக்கத் தோடு இங்கே அழைத்து வராதீர்கள். இப்போது உங்கள் முதலாளி திருந்தி விட்டார். இனிமேல் உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பணத்தின் மீதிருந்த ஆசையானது இப்போது அவருக்கில்லை. இனிமேல் அவர் உங்களுக்கு வேண்டிய வசதிகளை யெல்லாம் செய்து கொடுப்பார்!'' என்று கூறியபடி அங்கிருந்து புறப்பட்டார் முனிவர்.
""ஐயா! எங்களை மன்னித்து விடுங்கள்! அந்த முனிவர் உங்களை திருத்தியதோடு எங்களையும் திருத்தி விட்டார். நாங்கள் எங்கள் தவறை உணர்கிறோம்,'' என்றனர்.
"" தவறு செய்தவன் நான். நான் தான் வருத்தப்பட வேண்டும். நீங்கள் ஒரு போதும் வருத்தபட வேண்டாம். இப்போதே நாம் வீடு செல்லலாம். உங்கள் முதலாளியாகிய நான் இப்போது புதியவனாகி விட்டேன். வீட்டிற்குச் சென்றதும், முதல் வேலையாக உங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறேன்,'' என்றார்.
அதனைக் கேட்ட வேலையாட்களும், வண்டி ஓட்டுனரும் அளவிலா மகிழ்ச்சி யடைந்தனர். நல்லுரை வழங்கிய முனிவரை நினைத்து மனதில் வணங்கிக் கொண்டனர்.

சிறுவர் மலர்!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 7:38 pm

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக