புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்ச்சொல் வேட்டை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தமிழ்ச்சொல் வேட்டை - தொடர்பதிவு
ஒன்று)
புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.
ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.
இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''
என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.
சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?
"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.
முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.
இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்...
(தொடரும்) (நன்றி-தினமணி-நீதி அரசர் வி.இராமசுப்ரமணியன்)
இதுவரை வேட்டையாடிய சொற்கள்:
ஃபோபியா = வெருளி அல்லது வெருட்சி
அடிக்ட்' = மீளா வேட்கையன்
அடிக்ஷன் = மீளா வேட்கை
டென்சன் = கொதிப்பு
பாரநோய = மனப்பிறழ்வு
அப்ஜக்டிவ் – சப்ஜக்டிவ் = புறத்தாய்வு - அகத்தாய்வு
இன்புட்-அவுட்புட் = உள்ளீடு-வெளியீடு
அக்ரோனிம் = தொகுசொல்.
அப்ரிவியேஷன் = சொற்சுருக்கம்
பங்க்சுவேஷன் மார்க்ஸ் = நிறுத்தற் குறிகள்
அல்யூஷன் = மறை பொருள்
காமன் சென்ஸ் = இயல்பறிவு.
ஆஸ்ட்ரல் = விசும்புருவான' அல்லது "விசும்புரு
தமிழ்ச்சொல் வேட்டை - தொடர்பதிவு
ஒன்று)
புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.
ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.
இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''
என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.
சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?
"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.
முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.
இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்...
(தொடரும்) (நன்றி-தினமணி-நீதி அரசர் வி.இராமசுப்ரமணியன்)
இதுவரை வேட்டையாடிய சொற்கள்:
ஃபோபியா = வெருளி அல்லது வெருட்சி
அடிக்ட்' = மீளா வேட்கையன்
அடிக்ஷன் = மீளா வேட்கை
டென்சன் = கொதிப்பு
பாரநோய = மனப்பிறழ்வு
அப்ஜக்டிவ் – சப்ஜக்டிவ் = புறத்தாய்வு - அகத்தாய்வு
இன்புட்-அவுட்புட் = உள்ளீடு-வெளியீடு
அக்ரோனிம் = தொகுசொல்.
அப்ரிவியேஷன் = சொற்சுருக்கம்
பங்க்சுவேஷன் மார்க்ஸ் = நிறுத்தற் குறிகள்
அல்யூஷன் = மறை பொருள்
காமன் சென்ஸ் = இயல்பறிவு.
ஆஸ்ட்ரல் = விசும்புருவான' அல்லது "விசும்புரு
எனது புதிய பதிவை பார்க்கவும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ஒன்பது)
நமது சொல் வேட்டையின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லை, பழைய இலக்கியங்களிலிருந்தும், மொழி ஆராய்ச்சி நூல்களிலிருந்தும் தேடித் தெரிந்து கொள்வதா? அல்லது ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து அதைப் புழக்கத்தில் விடுவதா?' என்று ஷா.கமால் அப்துல்நாசர் என்பவர் ஓர் அடிப்படை கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து புழக்கத்தில் விடுவது என்றால், அதைத் தமிழர் மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, அவ்வாசகர் ""தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்'' என்ற குறளை மேற்கோள் காட்டி, அக்குறளில் வரும் "கடிகொண்டார்' என்ற சொல்லை அடித்தளமாகப் பயன்படுத்தி, ஆங்கிலத்தில் சொல்லப்படும் "புரொஹிபிட்டரி ஆர்டர்' என்ற சொற்றொடருக்கு "கடிகொள்ளாணை' என்ற சொல் பொருத்தமாக இருப்பினும், புழக்கத்தில் "தடுப்பாணை' என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்பதைக் குறிப்பிட்டு, சொல் வேட்டையில் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.
வாசகர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட கேள்விகளும், ஐயங்களும் எழுந்திருக்கலாம். எனவே, இதைத் தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை.
இச்சொல் வேட்டையின் உண்மையான நோக்கம், புதுச் சூழ்நிலைகளுக்கும், புதுக் கருத்துகளுக்கும் பொருந்தும் புதுச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதே! ஆனால், இந்த சொல் வேட்டையைத் தொடங்கிய பிறகு, புழக்கத்திலிருக்கும் ஒருசில ஆங்கிலச் சொற்களுக்கே பெருவாரியான மக்கள் ஏற்றுக்கொள்ளும் அல்லது பழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் சொற்கள் தமிழில் இல்லையோ என்ற ஐயம் எழுந்தது. அதோடு, வாசகர்களும் இச்சொல் வேட்டைக்குப் பல்வேறு பரிமாணங்களை அளித்து, பல்வேறு கோணங்களில் இதை அணுகத் தொடங்கியதால், சொல் வேட்டையின் நோக்கமும், அது தொடங்கப்பட்ட தளமும், என்னையும் அறியாமலேயே விரிவுபடுத்தப்பட்டு, புதுச் சூழ்நிலைகளுக்கான புதுச்சொற்கள், புது அல்லது பழங்கருத்துகளுக்கான அருஞ்சொற்கள், அவ்வருஞ் சொற்களின் எளிமைப் படுத்தப்பட்ட வடிவங்கள், அவ் வடிவங்களில் எளிதில் புழக்கத்திற்கு வரக்கூடியவை என்றெல்லாம் சொல்வேட்டையின் தளம் விரிவு படுத்தப்பட்டுவிட்டது. எனவே, இதை இனியொரு சிறிய எல்லைக்குள் சிறைப்படுத்த முடியாது.
இனி இந்தவாரச் சொல் வேட்டைக்கு வருமுன், சுவையான சில செய்திகளை வாசகர்களுக்குச் சொல்ல விழைகிறேன். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், உலகின் தொன்மையான மொழிகளில் "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' எனப்படும் குறியீடுகளுக்கான தேவை பழங்காலத்தில் அமையவில்லை போல் தெரிகிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் சில குறியீடுகளை கிறிஸ்துவுக்கு முன்பே (கி.மு.) பயன்படுத்தியதாகத் தெரிந்தாலும், உலகம் முழுவதிலும் புனித விவிலியம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட காலத்தில்தான் இக் குறியீடுகளுக்கான தேவை அதிகரித்ததாகத் தெரிகிறது. பதினாறாம் நூற்றாண்டில் ஆல்டஸ் மேனுடியஸ் என்பவரால் இக்குறியீடுகள் முறைப்படுத்தப்பட்டதாக ஒரு குறிப்பும் உண்டு.
அதிகமாக நம்மிடம் புழக்கத்திலிருக்கும் பங்க்சுவேஷன் மார்க்ஸ், கமா, ஃபுல் ஸ்டாப், கோலன், பிராக்கட், எக்ஸ்க்ளமேஷன், அப்பாஸ்ட்ரஃபி, கொட்டேஷன், கொஸ்டின் மார்க் ஆகியவைதான். ஆனால், அவற்றைத் தாண்டி பல பங்க்சுவேஷன் மார்க்ஸ் இன்று ஆங்கிலத்தில் பெருவாரியாகப் பழக்கத்தில் வந்துவிட்டன. அவை: (1) டாகர் அல்லது ஓபிலிஸ்க் - கூறியது கூறும் குறையைக் களைவதற்கான குறியீடு (2) காரட் அல்லது வெட்ஜ் - சொன்ன கருத்தில் விட்டுப்போன ஒன்றைக் குறிக்கும் குறியீடு (3) சாலிடஸ் - நாணயத்தின் பல்வேறு மதிப்புகளை, அதாவது ரூபாய்க்கும், காசுக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்ட, தற்போதைய டெசிமல் முறை கொண்டுவரப்படுவதற்கு முன் பயன்படுத்தப்பட்ட குறியீடு, (4) ஆஸ்டரிக் - ஒரு சொல் அல்லது கருத்தின் விரிவாக்கத்தை வேறிடத்தில் விரித்துரைப்பதைக் காட்டும் குறியீடு, (5) கில்மெட்ஸ் - ஆங்கிலமல்லாத மொழிகளில் கொட்டேஷன் மார்க்காகப் பயன்படுத்தப்படும் குறியீடு, (6) ஷெப்ஃபர் ஸ்ட்ரோக் - கணிதத்தில் கால்குலஸ்ஸில் பயன்படுத்தப்படும் குறியீடு, (7) பிகாஸ் சைன் - காரணம் என்ற சொல்லைக் குறிக்கும் குறியீடு (இது "ஆகவே' என்ற சொல்லைக் குறிக்கும் குறியீட்டைத் தலைகீழாகப் போடும் குறியீடு), (8) செக்ன் சைன் - பொதுவாக வழக்குரைஞர்களால் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவை மாறுபடுத்திக்காட்டப் பயன்படுத்தப்படும் குறியீடு, (9) எக்ஸ்க்ளமேஷன் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் ஆச்சர்யத்தைக் குறிக்கும் குறியீடு, (10) கொஸ்டின் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் வினாவைக் குறிக்கும் குறியீடு, (11) இன்ட்டெர்ரோபாங்க் - வியப்பையும், வினாவையும் ஒருசேரக் குறிக்கும் குறியீடு, (12) ஹீடரா அல்லது பில்க்ரோ - ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கும் குறியீடு, (13) ஸ்னார்க் - சொன்ன சொல்லுக்குக் கிண்டலாக இன்னொரு பொருள் உண்டு என்பதைக் குறிக்கும் குறியீடு.
கணினியின் தாக்கம் அதிகரித்த பிறகு, இன்னும் பல குறியீடுகள் இளைய தலைமுறையிடம் வந்துவிட்டன. தங்களுடைய மகிழ்ச்சி, துயரம், அழுகை, வியப்பு போன்ற உணர்ச்சிகளைக் காட்டும் குறியீடுகள் இன்று கைபேசியிலும், கணினியிலும் வந்துவிட்டன. இனி இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.
பங்க்சுவேஷன் மார்க்ஸ், மேலை நாட்டு மொழிகளின் வரவால் தமிழ் மொழியில் பயனாக்கம் பெற்றன என்றும், ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியைக் கொண்டு எழுதப்பட்ட காலங்களில், சுவடிகள் கிழிந்துவிடும் வாய்ப்பு இருந்தமையால் இக்குறியீடுகள் பயன் படுத்தப்படாமல் இருந்தன என்றும் குறிப்பிட்டுவிட்டு, புலவர் அரு.சுந்தரேசன், அச்சொல்லுக்கு "நிறுத்தற்குறிகள்' என்றச் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். மேலும் அனைத்து நிறுத்தற்குறிகளையும் வரிசைப்படுத்தியுள்ளார்.
வி.ந.ஸ்ரீதரன், "வாக்கியக்குறியீடு' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார். பாபாராஜ் என்பவர், சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தை மேற்கோள்காட்டி பங்க்சுவேஷன் மார்க்ஸ் என்றச் சொல்லுக்கு நிறுத்தக்குறியீடு, முத்திரைகள் என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்.
செ.சத்தியசீலன், நிறுத்தற்குறிகள், எழுத்துக்கள் அன்று என்றும், அவை பொருள் தரும் அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டு, "பொருள்குறிகள்' என்பது கூடப் பொருத்தமாக இருக்கும் என்கிறார். டி.வி.கிருஷ்ணசாமி, "குறியீட்டியல்' என்றச் சொல்லைப் பரிந்துரைக்கிறார்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்குங்கால், "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' என்றச் சொல்லுக்கு "நிறுத்தற் குறிகள்' என்பதே புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தினாலும், அச்சொல் அனைத்துக் குறியீடுகளையும் உள்ளடக்கிய காரணத்தினாலும், அதுவே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
அடுத்த வார சொல்:
மறைமுகமாக ஒரு மனிதனையோ ஓர் இடத்தையோ, ஒரு நிகழ்வையோ சுட்டிக்காட்டும் முறைக்கு ஆங்கிலத்தில் 'அல்யூசன்' என்று பெயர். இதன் தமிழாக்கம் அல்லது தமிழ் இணைச்சொல் என்ன?
நமது சொல் வேட்டையின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லை, பழைய இலக்கியங்களிலிருந்தும், மொழி ஆராய்ச்சி நூல்களிலிருந்தும் தேடித் தெரிந்து கொள்வதா? அல்லது ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து அதைப் புழக்கத்தில் விடுவதா?' என்று ஷா.கமால் அப்துல்நாசர் என்பவர் ஓர் அடிப்படை கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து புழக்கத்தில் விடுவது என்றால், அதைத் தமிழர் மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, அவ்வாசகர் ""தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்'' என்ற குறளை மேற்கோள் காட்டி, அக்குறளில் வரும் "கடிகொண்டார்' என்ற சொல்லை அடித்தளமாகப் பயன்படுத்தி, ஆங்கிலத்தில் சொல்லப்படும் "புரொஹிபிட்டரி ஆர்டர்' என்ற சொற்றொடருக்கு "கடிகொள்ளாணை' என்ற சொல் பொருத்தமாக இருப்பினும், புழக்கத்தில் "தடுப்பாணை' என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்பதைக் குறிப்பிட்டு, சொல் வேட்டையில் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.
வாசகர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட கேள்விகளும், ஐயங்களும் எழுந்திருக்கலாம். எனவே, இதைத் தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை.
இச்சொல் வேட்டையின் உண்மையான நோக்கம், புதுச் சூழ்நிலைகளுக்கும், புதுக் கருத்துகளுக்கும் பொருந்தும் புதுச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதே! ஆனால், இந்த சொல் வேட்டையைத் தொடங்கிய பிறகு, புழக்கத்திலிருக்கும் ஒருசில ஆங்கிலச் சொற்களுக்கே பெருவாரியான மக்கள் ஏற்றுக்கொள்ளும் அல்லது பழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் சொற்கள் தமிழில் இல்லையோ என்ற ஐயம் எழுந்தது. அதோடு, வாசகர்களும் இச்சொல் வேட்டைக்குப் பல்வேறு பரிமாணங்களை அளித்து, பல்வேறு கோணங்களில் இதை அணுகத் தொடங்கியதால், சொல் வேட்டையின் நோக்கமும், அது தொடங்கப்பட்ட தளமும், என்னையும் அறியாமலேயே விரிவுபடுத்தப்பட்டு, புதுச் சூழ்நிலைகளுக்கான புதுச்சொற்கள், புது அல்லது பழங்கருத்துகளுக்கான அருஞ்சொற்கள், அவ்வருஞ் சொற்களின் எளிமைப் படுத்தப்பட்ட வடிவங்கள், அவ் வடிவங்களில் எளிதில் புழக்கத்திற்கு வரக்கூடியவை என்றெல்லாம் சொல்வேட்டையின் தளம் விரிவு படுத்தப்பட்டுவிட்டது. எனவே, இதை இனியொரு சிறிய எல்லைக்குள் சிறைப்படுத்த முடியாது.
இனி இந்தவாரச் சொல் வேட்டைக்கு வருமுன், சுவையான சில செய்திகளை வாசகர்களுக்குச் சொல்ல விழைகிறேன். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், உலகின் தொன்மையான மொழிகளில் "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' எனப்படும் குறியீடுகளுக்கான தேவை பழங்காலத்தில் அமையவில்லை போல் தெரிகிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் சில குறியீடுகளை கிறிஸ்துவுக்கு முன்பே (கி.மு.) பயன்படுத்தியதாகத் தெரிந்தாலும், உலகம் முழுவதிலும் புனித விவிலியம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட காலத்தில்தான் இக் குறியீடுகளுக்கான தேவை அதிகரித்ததாகத் தெரிகிறது. பதினாறாம் நூற்றாண்டில் ஆல்டஸ் மேனுடியஸ் என்பவரால் இக்குறியீடுகள் முறைப்படுத்தப்பட்டதாக ஒரு குறிப்பும் உண்டு.
அதிகமாக நம்மிடம் புழக்கத்திலிருக்கும் பங்க்சுவேஷன் மார்க்ஸ், கமா, ஃபுல் ஸ்டாப், கோலன், பிராக்கட், எக்ஸ்க்ளமேஷன், அப்பாஸ்ட்ரஃபி, கொட்டேஷன், கொஸ்டின் மார்க் ஆகியவைதான். ஆனால், அவற்றைத் தாண்டி பல பங்க்சுவேஷன் மார்க்ஸ் இன்று ஆங்கிலத்தில் பெருவாரியாகப் பழக்கத்தில் வந்துவிட்டன. அவை: (1) டாகர் அல்லது ஓபிலிஸ்க் - கூறியது கூறும் குறையைக் களைவதற்கான குறியீடு (2) காரட் அல்லது வெட்ஜ் - சொன்ன கருத்தில் விட்டுப்போன ஒன்றைக் குறிக்கும் குறியீடு (3) சாலிடஸ் - நாணயத்தின் பல்வேறு மதிப்புகளை, அதாவது ரூபாய்க்கும், காசுக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்ட, தற்போதைய டெசிமல் முறை கொண்டுவரப்படுவதற்கு முன் பயன்படுத்தப்பட்ட குறியீடு, (4) ஆஸ்டரிக் - ஒரு சொல் அல்லது கருத்தின் விரிவாக்கத்தை வேறிடத்தில் விரித்துரைப்பதைக் காட்டும் குறியீடு, (5) கில்மெட்ஸ் - ஆங்கிலமல்லாத மொழிகளில் கொட்டேஷன் மார்க்காகப் பயன்படுத்தப்படும் குறியீடு, (6) ஷெப்ஃபர் ஸ்ட்ரோக் - கணிதத்தில் கால்குலஸ்ஸில் பயன்படுத்தப்படும் குறியீடு, (7) பிகாஸ் சைன் - காரணம் என்ற சொல்லைக் குறிக்கும் குறியீடு (இது "ஆகவே' என்ற சொல்லைக் குறிக்கும் குறியீட்டைத் தலைகீழாகப் போடும் குறியீடு), (8) செக்ன் சைன் - பொதுவாக வழக்குரைஞர்களால் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவை மாறுபடுத்திக்காட்டப் பயன்படுத்தப்படும் குறியீடு, (9) எக்ஸ்க்ளமேஷன் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் ஆச்சர்யத்தைக் குறிக்கும் குறியீடு, (10) கொஸ்டின் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் வினாவைக் குறிக்கும் குறியீடு, (11) இன்ட்டெர்ரோபாங்க் - வியப்பையும், வினாவையும் ஒருசேரக் குறிக்கும் குறியீடு, (12) ஹீடரா அல்லது பில்க்ரோ - ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கும் குறியீடு, (13) ஸ்னார்க் - சொன்ன சொல்லுக்குக் கிண்டலாக இன்னொரு பொருள் உண்டு என்பதைக் குறிக்கும் குறியீடு.
கணினியின் தாக்கம் அதிகரித்த பிறகு, இன்னும் பல குறியீடுகள் இளைய தலைமுறையிடம் வந்துவிட்டன. தங்களுடைய மகிழ்ச்சி, துயரம், அழுகை, வியப்பு போன்ற உணர்ச்சிகளைக் காட்டும் குறியீடுகள் இன்று கைபேசியிலும், கணினியிலும் வந்துவிட்டன. இனி இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.
பங்க்சுவேஷன் மார்க்ஸ், மேலை நாட்டு மொழிகளின் வரவால் தமிழ் மொழியில் பயனாக்கம் பெற்றன என்றும், ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியைக் கொண்டு எழுதப்பட்ட காலங்களில், சுவடிகள் கிழிந்துவிடும் வாய்ப்பு இருந்தமையால் இக்குறியீடுகள் பயன் படுத்தப்படாமல் இருந்தன என்றும் குறிப்பிட்டுவிட்டு, புலவர் அரு.சுந்தரேசன், அச்சொல்லுக்கு "நிறுத்தற்குறிகள்' என்றச் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். மேலும் அனைத்து நிறுத்தற்குறிகளையும் வரிசைப்படுத்தியுள்ளார்.
வி.ந.ஸ்ரீதரன், "வாக்கியக்குறியீடு' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார். பாபாராஜ் என்பவர், சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தை மேற்கோள்காட்டி பங்க்சுவேஷன் மார்க்ஸ் என்றச் சொல்லுக்கு நிறுத்தக்குறியீடு, முத்திரைகள் என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்.
செ.சத்தியசீலன், நிறுத்தற்குறிகள், எழுத்துக்கள் அன்று என்றும், அவை பொருள் தரும் அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டு, "பொருள்குறிகள்' என்பது கூடப் பொருத்தமாக இருக்கும் என்கிறார். டி.வி.கிருஷ்ணசாமி, "குறியீட்டியல்' என்றச் சொல்லைப் பரிந்துரைக்கிறார்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்குங்கால், "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' என்றச் சொல்லுக்கு "நிறுத்தற் குறிகள்' என்பதே புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தினாலும், அச்சொல் அனைத்துக் குறியீடுகளையும் உள்ளடக்கிய காரணத்தினாலும், அதுவே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
அடுத்த வார சொல்:
மறைமுகமாக ஒரு மனிதனையோ ஓர் இடத்தையோ, ஒரு நிகழ்வையோ சுட்டிக்காட்டும் முறைக்கு ஆங்கிலத்தில் 'அல்யூசன்' என்று பெயர். இதன் தமிழாக்கம் அல்லது தமிழ் இணைச்சொல் என்ன?
பத்து)
இங்கிலத்தில் உள்ள பல சொற்கள் இலத்தீன் மொழியிலிருந்து உருவானவை என்பதை அறிவோம். "அல்யூசியோ' என்ற இலத்தீன் சொல்லுக்கு "சொல் விளையாட்டு' என்பது பொருள். "அல்யூசியோ' என்ற சொல்லை வேர்ச்சொல்லாகப் பயன்படுத்தி "அல்யூடியர்' என்ற சொல் இலத்தீன் மொழியிலேயே உருவானது. அச்சொல்லுக்கு "கிண்டலாகக் குறிப்பிடுவது' அல்லது "விளையாட்டாகக் குறிப்பிடுவது' என்ற பொருளுண்டு. அந்த இலத்தீன் சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆங்கிலச் சொல்தான் "அல்யூஷன்'.
அச்சொல்லுக்குரிய பொருளை மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், "ஒருவரை நேரில் பார்க்காமலேயே, அவரிடம் நேரிடையாகப் பாடம் படிக்காமலேயே அவரை மானசீக குருவாக எண்ணி, ஒருவன் கற்றுத்தேர்ந்தான் என்றால், அதனை நாம் "இவன் ஒரு ஏகலைவன்' என்கிறோம். அப்படி நாம் குறிப்பிடும் முறை அல்யூஷன்.
கண்ணெதிரே அக்கிரமம் நடப்பதைக் கண்டும் காணாதது போல் இருப்பவனை, "இவன் ஒரு திருதராட்டிரன்' என்கிறோம். இது ஓர் அல்யூஷன். ஒரு கட்சிக்குள் அல்லது ஒரு குழுவுக்குள் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர விரும்பும் உறுப்பினரை "இளம் துருக்கியர்' என்றழைப்பதும் அல்யூஷன் ஆகும். இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டு, இந்தவார சொல் வேட்டைக்கு வருவோம்.
"அல்யூஷன்' என்ற ஆங்கிலச் சொல் பொதுவாக எதிர்மறைப் பொருளிலேயே கையாளப்படும் காரணத்தால், அச்சொல்லுக்கு "உட்குறிப்பு' அல்லது "மறைகுறிப்பு' என்னும் சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்று ஷா.கமால் அப்துல் நாசர் எழுதி, திருக்குறள் 128ஆவது அதிகாரத்தின் தலைப்பு "குறிப்பு அறிவுறுத்தல்' என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலவர் இரா.இராமமூர்த்தி, தொல்.செய்யுளியல் 122ஆவது நூற்பாவை மேற்கோள்காட்டி, ""மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு'' ஆகும் என்பதனால், "கரப்பு மொழி' அல்லது "மொழி கரப்பு' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்றும், "பிறிது மொழிதல்' என்பதும் பொருத்தமாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் செ.சத்தியசீலன், மறைமுகமாக ஒருவரையோ, ஓரிடத்தையோ, ஒரு நிகழ்வையோ உணர்த்தும் சொற்கள் "குறிப்புச் சொற்கள்' என்று கூறப்படுவதாலும், சில சமயம் சில குழுக்களிலுள்ள மக்கள் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய சொற்களைப் பயன்படுத்திக் கொள்வதை தமிழிலக்கணம் "குழூஉக்குறி' என்று குறிப்பதால், "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு "பொருள்மறை சொல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
டி.வி.கிருஷ்ணசாமி, "மறைவாகக் குறித்தல்' அல்லது "குறிப்பால் உணர்த்துதல்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்குமென்கிறார். தி.அன்பழகன், "மறைபொருள்' அல்லது "தொகைசொல்' ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
புலவர் அடியன் மணிவாசகன், பண்டைத் தமிழில் "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு உள்ளுறைப்பொருள், இறைச்சிப்பொருள், குழூஉக்குறி ஆகிய சொற்கள் பொருந்தும் என்று கூறிவிட்டு, அதற்குச் சான்றாக தொல்.பொருள். 994ஆவது சூத்திரத்தைக் மேற்கோள் காட்டியுள்ளார். அதே சமயம், பொதுவாக ஒருவரிடம் மறைமுகமாகப் பேச நேரும்போது, அதைச் சான்றோர் "முன்னிலைப் புறமொழி' என்பர் என்றும், அது இறைச்சிப்பொருள் போன்றதே என்றும், இவற்றுள் "முன்னிலைப் புறமொழி' என்னும் சொல் எளிமையாகவும், பொருத்தமாகவும் இருக்குமென்கிறார்.
வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஒரு சொல் நேராகக் குறிக்கும் பொருள் ஒன்றாயினும், அது பயன்படுத்தப்படும் இடம், பொருள் ஆகியவற்றைப் பொறுத்து, அது வேறொன்றைக் குறிப்பதாக அமையலாம் என்றும், அதற்குத் தமிழ் மொழியில் பல சான்றுகள் (இடக்கரடக்கல், தற்குறிப்பேற்றல், வஞ்சப் புகழ்ச்சி, பிறிது மொழிதல்) உள்ளன என்பதை எடுத்துக்காட்டி "அல்யூஷன்' என்பதைப் "பிறிதொன்றுரைத்தல்' என்று சொல்லலாம் என்கிறார். தற்போது சாதாரணமாக "பிக் ப்ரதர் ஈஸ் வாட்சிங்' என்ற சொற்றொடர் அமெரிக்கக் கண்காணிப்பைக் குறிக்கப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டி, "அல்யூஷன்' என்பது உருபும் பயனும் தொக்கி நிற்பதாலும், அதில் உட்பொருள் மறைந்து நிற்பதாலும் "மறைபொருள் உவமை' என்பது அதற்கு இணைச் சொல்லாகும் என்கிறார்.
இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, பெருவாரியான வாசகர்கள் "பொருள் மறை' அல்லது "மறை பொருள்' என்பதை அதிகமாகச் சுட்டிக்காட்டி இருப்பதால், "மறை பொருள்' என்பதே பொருத்தமாக இருக்கும்.
இங்கிலத்தில் உள்ள பல சொற்கள் இலத்தீன் மொழியிலிருந்து உருவானவை என்பதை அறிவோம். "அல்யூசியோ' என்ற இலத்தீன் சொல்லுக்கு "சொல் விளையாட்டு' என்பது பொருள். "அல்யூசியோ' என்ற சொல்லை வேர்ச்சொல்லாகப் பயன்படுத்தி "அல்யூடியர்' என்ற சொல் இலத்தீன் மொழியிலேயே உருவானது. அச்சொல்லுக்கு "கிண்டலாகக் குறிப்பிடுவது' அல்லது "விளையாட்டாகக் குறிப்பிடுவது' என்ற பொருளுண்டு. அந்த இலத்தீன் சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆங்கிலச் சொல்தான் "அல்யூஷன்'.
அச்சொல்லுக்குரிய பொருளை மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், "ஒருவரை நேரில் பார்க்காமலேயே, அவரிடம் நேரிடையாகப் பாடம் படிக்காமலேயே அவரை மானசீக குருவாக எண்ணி, ஒருவன் கற்றுத்தேர்ந்தான் என்றால், அதனை நாம் "இவன் ஒரு ஏகலைவன்' என்கிறோம். அப்படி நாம் குறிப்பிடும் முறை அல்யூஷன்.
கண்ணெதிரே அக்கிரமம் நடப்பதைக் கண்டும் காணாதது போல் இருப்பவனை, "இவன் ஒரு திருதராட்டிரன்' என்கிறோம். இது ஓர் அல்யூஷன். ஒரு கட்சிக்குள் அல்லது ஒரு குழுவுக்குள் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர விரும்பும் உறுப்பினரை "இளம் துருக்கியர்' என்றழைப்பதும் அல்யூஷன் ஆகும். இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டு, இந்தவார சொல் வேட்டைக்கு வருவோம்.
"அல்யூஷன்' என்ற ஆங்கிலச் சொல் பொதுவாக எதிர்மறைப் பொருளிலேயே கையாளப்படும் காரணத்தால், அச்சொல்லுக்கு "உட்குறிப்பு' அல்லது "மறைகுறிப்பு' என்னும் சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்று ஷா.கமால் அப்துல் நாசர் எழுதி, திருக்குறள் 128ஆவது அதிகாரத்தின் தலைப்பு "குறிப்பு அறிவுறுத்தல்' என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலவர் இரா.இராமமூர்த்தி, தொல்.செய்யுளியல் 122ஆவது நூற்பாவை மேற்கோள்காட்டி, ""மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு'' ஆகும் என்பதனால், "கரப்பு மொழி' அல்லது "மொழி கரப்பு' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்றும், "பிறிது மொழிதல்' என்பதும் பொருத்தமாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புலவர் செ.சத்தியசீலன், மறைமுகமாக ஒருவரையோ, ஓரிடத்தையோ, ஒரு நிகழ்வையோ உணர்த்தும் சொற்கள் "குறிப்புச் சொற்கள்' என்று கூறப்படுவதாலும், சில சமயம் சில குழுக்களிலுள்ள மக்கள் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய சொற்களைப் பயன்படுத்திக் கொள்வதை தமிழிலக்கணம் "குழூஉக்குறி' என்று குறிப்பதால், "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு "பொருள்மறை சொல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
டி.வி.கிருஷ்ணசாமி, "மறைவாகக் குறித்தல்' அல்லது "குறிப்பால் உணர்த்துதல்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்குமென்கிறார். தி.அன்பழகன், "மறைபொருள்' அல்லது "தொகைசொல்' ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
புலவர் அடியன் மணிவாசகன், பண்டைத் தமிழில் "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு உள்ளுறைப்பொருள், இறைச்சிப்பொருள், குழூஉக்குறி ஆகிய சொற்கள் பொருந்தும் என்று கூறிவிட்டு, அதற்குச் சான்றாக தொல்.பொருள். 994ஆவது சூத்திரத்தைக் மேற்கோள் காட்டியுள்ளார். அதே சமயம், பொதுவாக ஒருவரிடம் மறைமுகமாகப் பேச நேரும்போது, அதைச் சான்றோர் "முன்னிலைப் புறமொழி' என்பர் என்றும், அது இறைச்சிப்பொருள் போன்றதே என்றும், இவற்றுள் "முன்னிலைப் புறமொழி' என்னும் சொல் எளிமையாகவும், பொருத்தமாகவும் இருக்குமென்கிறார்.
வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஒரு சொல் நேராகக் குறிக்கும் பொருள் ஒன்றாயினும், அது பயன்படுத்தப்படும் இடம், பொருள் ஆகியவற்றைப் பொறுத்து, அது வேறொன்றைக் குறிப்பதாக அமையலாம் என்றும், அதற்குத் தமிழ் மொழியில் பல சான்றுகள் (இடக்கரடக்கல், தற்குறிப்பேற்றல், வஞ்சப் புகழ்ச்சி, பிறிது மொழிதல்) உள்ளன என்பதை எடுத்துக்காட்டி "அல்யூஷன்' என்பதைப் "பிறிதொன்றுரைத்தல்' என்று சொல்லலாம் என்கிறார். தற்போது சாதாரணமாக "பிக் ப்ரதர் ஈஸ் வாட்சிங்' என்ற சொற்றொடர் அமெரிக்கக் கண்காணிப்பைக் குறிக்கப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டி, "அல்யூஷன்' என்பது உருபும் பயனும் தொக்கி நிற்பதாலும், அதில் உட்பொருள் மறைந்து நிற்பதாலும் "மறைபொருள் உவமை' என்பது அதற்கு இணைச் சொல்லாகும் என்கிறார்.
இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, பெருவாரியான வாசகர்கள் "பொருள் மறை' அல்லது "மறை பொருள்' என்பதை அதிகமாகச் சுட்டிக்காட்டி இருப்பதால், "மறை பொருள்' என்பதே பொருத்தமாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பதினொன்று)
""காமன் சென்ஸ் ஈஸ் தி மோஸ்ட் அன்காமன் திங் இன் தி வோர்ல்டு'' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. அமெரிக்க வரலாற்றை அடியோடு மாற்றிப்போட்ட 48-பக்கங்கள் கொண்ட ஒரு துண்டுப் பிரசுரத்திற்கு, தாமஸ் பெயின் இட்ட பெயர் "காமன் சென்ஸ்'. இன்றைக்குச் சரியாக 237 ஆண்டுகளுக்கு முன் (ஜனவரி,1776-இல்) ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாமல் மொட்டையாகப் பிரசுரிக்கப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரம்தான், காலனி ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா விடுதலைபெறக் காரணமாக அமைந்தது. அப்பிரசுரம், அமெரிக்க அரசியலில் மட்டுமன்றி, துண்டுப் பிரசுர விற்பனையிலும் 1776-இல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. முதல் மூன்று மாதங்களில் 1,20,000 பிரதிகளும், முதலாண்டிலேயே 5 லட்சம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். இச்செய்தியை புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில் நினைவில் நிறுத்தி, நாம் இந்தவார வேட்டைக்கு வருவோம்.
÷அமெரிக்கா - கலிபோர்னியாவிலிருந்து புலவர், பொறிஞர். சி.செந்தமிழ்ச்சேய், ""கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள'' என்ற குறளை மேற்கோள் காட்டி, "சென்ஸ்' என்ற சொல்லுக்குப் புலன், புலன் உணர்வு, அறிவு நலம் என்பது பொருளாகும் என்றும், ஆகவே, "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு இயல்பாகிய புலனுணர்வு, இயல்பாகிய புலனறிவு என்பவை பொருந்தக் கூடும் என்றும் குறிப்பிட்டுவிட்டு, கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை பதிப்பித்துள்ள ஆட்சிச் சொற்கள் அகர முதலியில் "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, "இயல்பறிவு' என்று பொருள் கொண்டுள்ளனர் என்றும் எழுதியுள்ளார்.
÷முனைவர் பா.ஜம்புலிங்கம், "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, (1) பகுத்தறிந்து பார்ப்பதால் பகுத்தறிவு, (2) விவேகத்தோடு சிந்திப்பதால் விவேக அறிவு, (3) பொதுப்படையாக இருப்பதால் பொதுப்படை அறிவு, (4) சிந்தனையை சரிநிகராகப் பயன்படுத்துவதால் சிந்தையறிவு ஆகிய நான்கு சொற்களைப் பரிந்துரைக்கிறார்.
÷பேராசிரியர் மருத்துவர் பி.ஞானசேகரன், "விவேகம்' என்ற சொல்லையும், கவிக்கோ. ஞானச்செல்வன், "ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்' என்பதனால், "ஒப்புரவறிவு' என்பதே பொருந்தும் என்றும் எழுதியிருக்கிறார்கள்.
÷ஏ.ஸ்ரீதரன் பூங்கொடி, 355-ஆவது குறளையொட்டி "மெய்யறிவு' என்ற சொல்லையும், "நெஞ்சே தெளிந்து' என்ற ஈற்றில் முடியும் திருவாய்மொழியை அடியொற்றி "தெள்ளறிவு' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார்.
÷வி.ந.ஸ்ரீதரன், "காமன் சென்ஸ்' என்பது அனைவர்க்கும் அடிப்படையில் இருக்க வேண்டிய ஒன்றாகும் என்றும், "நெருப்பு சுடும்' என்பது அறிந்திருக்க வேண்டிய ஒன்றாக இருப்பதுபோல் தாமாக அறிந்திருக்க வேண்டிய காமன் சென்ûஸ, "தன்னறிவு' என்பதே சரியாகும் என்றும் கூறுகிறார்.
÷வி.என்.ராமராஜ், காணல், கேட்டல், தொடுதல் ஆகியவை மக்களுக்கும், மாக்களுக்கும் இயல்பானவையாயினும், மனிதன் கற்றும், கேட்டும், பட்டும், படித்தும் பெறும் அறிவினால் அகத்திற்கும், புறத்திற்கும் எது நல்லது, எது கெட்டது என்ற மதிநுட்பம் பெறும் காரணத்தால், "காமன் சென்ஸ்' என்ற வார்த்தைக்கு "புத்தி' என்ற ஒரு வார்த்தையையோ, அல்லது நுட்ப அறிவு - மதிநுட்பம் என்னும் இரு சொற்களையோ பயன்படுத்தலாம் என்கிறார். சான்றாக, மதி அல்லது மதிநுட்பம் ஆகிய சொற்களை திருவள்ளுவர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பயன்படுத்திய பாக்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
÷புலவர் உ.தேவதாசு, காமன், ஜெனரல் ஆகிய இரு சொற்களுமே "பொது' என்ற பொருளைக் குறித்தாலும், ஜெனரல் ஆஸ்பிடல், இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் போன்ற சொற்களில் பயன்படுத்தப்படும்போது "ஜெனரல்' என்ற சொல்லுக்கு "தலைமை' என்ற பொருளும் வரக்கூடிய காரணத்தால், "பொது ஒழுங்கு', "நடைமுறை அறிவு' ஆகிய சொற்கள் பொருந்தலாம் என்கிறார். நடைமுறை அறிவும் நடைமுறை ஒழுக்கமும் தனி மனித வாழ்வையும், அறிவையும் தாண்டி, சமூக அளவில் செயல்படும் காரணத்தாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகலின் அவசியத்தை வள்ளுவம் உணர்த்துவதாலும், "ஒட்ட ஒழுகல்' என்ற இலக்கிய வடிவத்தை "பொது ஒழுங்கு', "நடைமுறை அறிவு' ஆகிய இவ்விரு சொற்களால் குறிக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.
÷இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, மெரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகரமுதலி "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, ""ஒரு பொருண்மை அல்லது நிகழ்வைச் சாதாரணமாகப் புரிந்து கொண்டு அதன் விளைவாக நாம் அதைப்பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் முறையான கருத்தாக்கம் அல்லது முடிவு'' என்று பொருள் கூறுகிறது. கேம்பிரிட்ஜ் அகரமுதலி, அதே சொல்லுக்கு ""ஒரு மனிதனுக்குச் சரியாக மற்றும் பாதுகாப்பாக வாழத் தேவையான நடைமுறை அறிவும் கருத்தாக்கமும்'' என்று பொருளுரைக்கிறது. இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அரிஸ்டாட்டில், ஜான் லாக் போன்ற சிந்தனையாளர்கள், நமது புலன்களால் தனித்தனியாக அறியப்படும் ஒன்றுக்கு, நம் உள்ளம் அல்லது உள்ளுணர்வு கொடுக்கும் முழு வடிவம் அல்லது ஒட்டு மொத்த உருவகம் "காமன் சென்ஸ்' என்றார்கள்.
÷இதை வைத்துப் பார்க்கும் போது, புலன்களாலும், மனத்தாலும் அவற்றைத் தாண்டிய உள்ளுணர்வாலும் மனித உயிர்கள் இயல்பாக அறிந்து கொள்ளும் ஒன்றே காமன் சென்ஸ் ஆவதால், அதற்கு இணைச் சொல் "இயல்பறிவு' என்பதே பொருத்தமாகும்.
காமன் சென்ஸ் என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச் சொல் இயல்பறிவு.
அடுத்த சொல் வேட்டை: வானியல் தொடர்பானவற்றிலும், மனித உடலைப் பற்றிய ஆன்மிக அல்லது தத்துவ விசாரத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். அதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?
""காமன் சென்ஸ் ஈஸ் தி மோஸ்ட் அன்காமன் திங் இன் தி வோர்ல்டு'' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. அமெரிக்க வரலாற்றை அடியோடு மாற்றிப்போட்ட 48-பக்கங்கள் கொண்ட ஒரு துண்டுப் பிரசுரத்திற்கு, தாமஸ் பெயின் இட்ட பெயர் "காமன் சென்ஸ்'. இன்றைக்குச் சரியாக 237 ஆண்டுகளுக்கு முன் (ஜனவரி,1776-இல்) ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாமல் மொட்டையாகப் பிரசுரிக்கப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரம்தான், காலனி ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா விடுதலைபெறக் காரணமாக அமைந்தது. அப்பிரசுரம், அமெரிக்க அரசியலில் மட்டுமன்றி, துண்டுப் பிரசுர விற்பனையிலும் 1776-இல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. முதல் மூன்று மாதங்களில் 1,20,000 பிரதிகளும், முதலாண்டிலேயே 5 லட்சம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். இச்செய்தியை புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில் நினைவில் நிறுத்தி, நாம் இந்தவார வேட்டைக்கு வருவோம்.
÷அமெரிக்கா - கலிபோர்னியாவிலிருந்து புலவர், பொறிஞர். சி.செந்தமிழ்ச்சேய், ""கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள'' என்ற குறளை மேற்கோள் காட்டி, "சென்ஸ்' என்ற சொல்லுக்குப் புலன், புலன் உணர்வு, அறிவு நலம் என்பது பொருளாகும் என்றும், ஆகவே, "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு இயல்பாகிய புலனுணர்வு, இயல்பாகிய புலனறிவு என்பவை பொருந்தக் கூடும் என்றும் குறிப்பிட்டுவிட்டு, கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை பதிப்பித்துள்ள ஆட்சிச் சொற்கள் அகர முதலியில் "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, "இயல்பறிவு' என்று பொருள் கொண்டுள்ளனர் என்றும் எழுதியுள்ளார்.
÷முனைவர் பா.ஜம்புலிங்கம், "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, (1) பகுத்தறிந்து பார்ப்பதால் பகுத்தறிவு, (2) விவேகத்தோடு சிந்திப்பதால் விவேக அறிவு, (3) பொதுப்படையாக இருப்பதால் பொதுப்படை அறிவு, (4) சிந்தனையை சரிநிகராகப் பயன்படுத்துவதால் சிந்தையறிவு ஆகிய நான்கு சொற்களைப் பரிந்துரைக்கிறார்.
÷பேராசிரியர் மருத்துவர் பி.ஞானசேகரன், "விவேகம்' என்ற சொல்லையும், கவிக்கோ. ஞானச்செல்வன், "ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்' என்பதனால், "ஒப்புரவறிவு' என்பதே பொருந்தும் என்றும் எழுதியிருக்கிறார்கள்.
÷ஏ.ஸ்ரீதரன் பூங்கொடி, 355-ஆவது குறளையொட்டி "மெய்யறிவு' என்ற சொல்லையும், "நெஞ்சே தெளிந்து' என்ற ஈற்றில் முடியும் திருவாய்மொழியை அடியொற்றி "தெள்ளறிவு' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார்.
÷வி.ந.ஸ்ரீதரன், "காமன் சென்ஸ்' என்பது அனைவர்க்கும் அடிப்படையில் இருக்க வேண்டிய ஒன்றாகும் என்றும், "நெருப்பு சுடும்' என்பது அறிந்திருக்க வேண்டிய ஒன்றாக இருப்பதுபோல் தாமாக அறிந்திருக்க வேண்டிய காமன் சென்ûஸ, "தன்னறிவு' என்பதே சரியாகும் என்றும் கூறுகிறார்.
÷வி.என்.ராமராஜ், காணல், கேட்டல், தொடுதல் ஆகியவை மக்களுக்கும், மாக்களுக்கும் இயல்பானவையாயினும், மனிதன் கற்றும், கேட்டும், பட்டும், படித்தும் பெறும் அறிவினால் அகத்திற்கும், புறத்திற்கும் எது நல்லது, எது கெட்டது என்ற மதிநுட்பம் பெறும் காரணத்தால், "காமன் சென்ஸ்' என்ற வார்த்தைக்கு "புத்தி' என்ற ஒரு வார்த்தையையோ, அல்லது நுட்ப அறிவு - மதிநுட்பம் என்னும் இரு சொற்களையோ பயன்படுத்தலாம் என்கிறார். சான்றாக, மதி அல்லது மதிநுட்பம் ஆகிய சொற்களை திருவள்ளுவர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பயன்படுத்திய பாக்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
÷புலவர் உ.தேவதாசு, காமன், ஜெனரல் ஆகிய இரு சொற்களுமே "பொது' என்ற பொருளைக் குறித்தாலும், ஜெனரல் ஆஸ்பிடல், இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் போன்ற சொற்களில் பயன்படுத்தப்படும்போது "ஜெனரல்' என்ற சொல்லுக்கு "தலைமை' என்ற பொருளும் வரக்கூடிய காரணத்தால், "பொது ஒழுங்கு', "நடைமுறை அறிவு' ஆகிய சொற்கள் பொருந்தலாம் என்கிறார். நடைமுறை அறிவும் நடைமுறை ஒழுக்கமும் தனி மனித வாழ்வையும், அறிவையும் தாண்டி, சமூக அளவில் செயல்படும் காரணத்தாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகலின் அவசியத்தை வள்ளுவம் உணர்த்துவதாலும், "ஒட்ட ஒழுகல்' என்ற இலக்கிய வடிவத்தை "பொது ஒழுங்கு', "நடைமுறை அறிவு' ஆகிய இவ்விரு சொற்களால் குறிக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.
÷இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, மெரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகரமுதலி "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, ""ஒரு பொருண்மை அல்லது நிகழ்வைச் சாதாரணமாகப் புரிந்து கொண்டு அதன் விளைவாக நாம் அதைப்பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் முறையான கருத்தாக்கம் அல்லது முடிவு'' என்று பொருள் கூறுகிறது. கேம்பிரிட்ஜ் அகரமுதலி, அதே சொல்லுக்கு ""ஒரு மனிதனுக்குச் சரியாக மற்றும் பாதுகாப்பாக வாழத் தேவையான நடைமுறை அறிவும் கருத்தாக்கமும்'' என்று பொருளுரைக்கிறது. இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அரிஸ்டாட்டில், ஜான் லாக் போன்ற சிந்தனையாளர்கள், நமது புலன்களால் தனித்தனியாக அறியப்படும் ஒன்றுக்கு, நம் உள்ளம் அல்லது உள்ளுணர்வு கொடுக்கும் முழு வடிவம் அல்லது ஒட்டு மொத்த உருவகம் "காமன் சென்ஸ்' என்றார்கள்.
÷இதை வைத்துப் பார்க்கும் போது, புலன்களாலும், மனத்தாலும் அவற்றைத் தாண்டிய உள்ளுணர்வாலும் மனித உயிர்கள் இயல்பாக அறிந்து கொள்ளும் ஒன்றே காமன் சென்ஸ் ஆவதால், அதற்கு இணைச் சொல் "இயல்பறிவு' என்பதே பொருத்தமாகும்.
காமன் சென்ஸ் என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச் சொல் இயல்பறிவு.
அடுத்த சொல் வேட்டை: வானியல் தொடர்பானவற்றிலும், மனித உடலைப் பற்றிய ஆன்மிக அல்லது தத்துவ விசாரத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். அதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பனிரெண்டு :-
ஸ்ட்ராலிஸ்' அல்லது "ஆஸ்ட்ரம் ஸ்டார்' என்ற இலத்தீன் மொழிச் சொற்களிலிருந்தும், "ஆஸ்ட்ரோன்' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்பட்டு, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் 1605-ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்ததாகக் கருதப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். இந்தச் சொல்லுக்குப் பொதுவான பொருள் விண்மீன்களிலிருந்து வரும் அல்லது விண்மீன்கள் தொடர்பான என்று மெரியம்-வெப்ஸ்டர் அகர முதலி குறிக்கிறது. அதே சமயம், புறப்புலன்களால் அறியப்படும் உலகைத் தாண்டி கண்ணுக்குப் புலனாகாமல் விளங்கும் ஒன்றையும் இச்சொல் குறிப்பதாக அதே அகர முதலி சுட்டிக்காட்டுகிறது. தொடக்க காலத்தில் மேற்கூறிய பொருள்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டாலும், பின்னாளில், இறப்பிற்குப் பின் நடப்பதென்ன என்பதைப் பற்றிய ஆராய்ச்சியும், இறப்பின் விளிம்பிற்குப் போய்த் திரும்பி வந்தவர்கள் தங்களது பூதவுடலை விட்டு வெளியேறி, பின் உடம்பிற்குள் புகுந்ததாகச் சொல்லப்படும் (அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ்) நிகழ்வுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதுதான், மிக அதிகமான முறையில் இச்சொல் பயன்பாட்டிற்கு வந்தது.
ஆனால், இந்திய தத்துவவியல் குறிப்பாகத் தமிழர்களின் சைவ சித்தாந்தத் தத்துவவியல் அல்லது மெய்யியல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுவிட்ட காரணத்தால், இச்சொல் தொடர்பான பயன்பாடு ஏற்கெனவே இருந்திருப்பது போல் தெரிகிறது.
இந்திய தத்துவவியல் ஒரு மனிதனை 3 உடல்கள், 5 கோசங்கள் மற்றும் 3 நிலைகள் கொண்டதாக விரித்துரைக்கிறது. அம்மூன்று உடல்கள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண சரீரங்கள் ஆகும். வடமொழியில் சூக்ஷ்ம என்றும், தமிழில் சில நேரங்களில் சூக்கும அல்லது சூட்சும என்றும் அறியப்படும் சரீரமே ஆங்கிலத்தில் "ஆஸ்ட்ரல் பாடி' என்றழைக்கப்படுகிறது. மனம், புத்தி இந்த இரண்டும் வசிக்கும் கண்ணுக்குப் புலனாகாத உடலே "ஆஸ்ட்ரல் பாடி' என்றும், இப்பூதவுடலைச் சுற்றி சக்தி வடிவில் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஒளி என்றும் இது பொதுவாக அறியப்படுகிறது. இவற்றை முன்னிறுத்தி, இந்த வார மடல்களைக் காண்போம்.
இலக்கியன் என்ற வாசகர், "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "உடுவெளி' அல்லது "விண்மீன்வெளி' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். சோலை கருப்பையா, அண்டமும், பிண்டமும் ஒன்றே என்பது சித்தர் வாக்கு என்பதாலும், நமது மெய்யியல் அண்டத்தையும், பிண்டத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்திருந்த காரணத்தால், அச்சொல்லுக்கு "அண்ட பிண்டவியல்' என்ற சொல்லையோ, அல்லது மெய்யியல் பற்றிய வெளிப்பாடாக இருக்கும் காரணத்தால், "மெய்ம்மை' என்ற சொல்லையோ பயன்படுத்தலாம் என்கிறார்.
பாபாராஜ், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியத்தில் "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "விசும்புருவான' என்ற சொல் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். தி.அன்பழகன், "ஆஸ்ட்ரல் வொர்ஷிப்' என்பது விண்மீன்களியலில் "உடு' என்னும் கூட்டத்தை வழிபடுதலைக் குறிப்பதால் "உடுவெளி' என்ற சொல் பொருத்தமாகும் என்கிறார். மேலும், சூரிய வழிபாடு போன்றவை வானியல் வழிபாடு ஆகும் காரணத்தால், "ஆஸ்ட்ரல்' என்பதற்கு வான் + இறை = வானிறை அல்லது வானாலயம் என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.
தமிழாகரர் தெ.முருகசாமி, "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி "ஆவியுரு' என்ற சொல்லை இணைச்சொல்லாகக் குறிப்பிட்டிருக்கிறது என்கிறார். இருப்பினும், உடல் என்பது சரீரமாகவும், உடலைத் தாங்கியவன் சரீரியாகவும், உருவத்திற்கப்பால் ஒலியாக அறியப்படுபவன் அசரீரியாகவும் குறிப்பிடப்படுவதால், "அசரீரி' என்ற சொல்லையும் பரிசீலிக்கலாம் என்கிறார்.
÷டி.வி.கிருஷ்ணசாமி, ஆஸ்ட்ரல் என்ற சொல்லிலிருந்து ஆஸ்ட்ராலஜி, ஆஸ்ட்ரானமி போன்ற சொற்கள் ஏற்பட்டிருக்கும் காரணத்தால் வானத்திற்கும், மனிதனுக்கும் இருக்கும் இயற்கையின் தொடர்பைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் "வான்விதி' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
வாசகர்கள் அனுப்பியிருக்கும் சொற்களில் உடு, ஆவியுரு போன்ற சொற்கள் கிட்டத்தட்ட பொருத்தமாக அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் "ஸ்டெல்லர்' என்ற பொருளையும் குறிக்கின்றன. "ஸ்டெல்லர்' என்ற சொல்லுக்கு "உடு' அல்லது "உடுவெளி' என்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால், மனிதவுடல், மனம் அல்லது ஆன்மா தொடர்பான செய்திகளில் அச்சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. "ஆவியுரு' என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது, அது கோள்களோடு தொடர்புள்ள பொருளைத் தராது. எனவே, "விசும்புருவான' அல்லது "விசும்புரு' என்ற சொல்லே பொதுவாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.
அடுத்த சொல் வேட்டை:
நாகரிகமான நடத்தையை, இடம், பொருள் மற்றும் பயன்படுத்தப்படும் நிகழ்வு சார்ந்து 'டெகோரம்' என்றும் 'எடிக்வேட்' என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம்.
இவ்விரண்டையும் அவற்றின் தன்மை மாறாமல் குறிப்பிடுவதற்குரிய சொற்கள் உண்டா?
ஸ்ட்ராலிஸ்' அல்லது "ஆஸ்ட்ரம் ஸ்டார்' என்ற இலத்தீன் மொழிச் சொற்களிலிருந்தும், "ஆஸ்ட்ரோன்' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்பட்டு, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் 1605-ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்ததாகக் கருதப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். இந்தச் சொல்லுக்குப் பொதுவான பொருள் விண்மீன்களிலிருந்து வரும் அல்லது விண்மீன்கள் தொடர்பான என்று மெரியம்-வெப்ஸ்டர் அகர முதலி குறிக்கிறது. அதே சமயம், புறப்புலன்களால் அறியப்படும் உலகைத் தாண்டி கண்ணுக்குப் புலனாகாமல் விளங்கும் ஒன்றையும் இச்சொல் குறிப்பதாக அதே அகர முதலி சுட்டிக்காட்டுகிறது. தொடக்க காலத்தில் மேற்கூறிய பொருள்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டாலும், பின்னாளில், இறப்பிற்குப் பின் நடப்பதென்ன என்பதைப் பற்றிய ஆராய்ச்சியும், இறப்பின் விளிம்பிற்குப் போய்த் திரும்பி வந்தவர்கள் தங்களது பூதவுடலை விட்டு வெளியேறி, பின் உடம்பிற்குள் புகுந்ததாகச் சொல்லப்படும் (அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ்) நிகழ்வுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதுதான், மிக அதிகமான முறையில் இச்சொல் பயன்பாட்டிற்கு வந்தது.
ஆனால், இந்திய தத்துவவியல் குறிப்பாகத் தமிழர்களின் சைவ சித்தாந்தத் தத்துவவியல் அல்லது மெய்யியல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுவிட்ட காரணத்தால், இச்சொல் தொடர்பான பயன்பாடு ஏற்கெனவே இருந்திருப்பது போல் தெரிகிறது.
இந்திய தத்துவவியல் ஒரு மனிதனை 3 உடல்கள், 5 கோசங்கள் மற்றும் 3 நிலைகள் கொண்டதாக விரித்துரைக்கிறது. அம்மூன்று உடல்கள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண சரீரங்கள் ஆகும். வடமொழியில் சூக்ஷ்ம என்றும், தமிழில் சில நேரங்களில் சூக்கும அல்லது சூட்சும என்றும் அறியப்படும் சரீரமே ஆங்கிலத்தில் "ஆஸ்ட்ரல் பாடி' என்றழைக்கப்படுகிறது. மனம், புத்தி இந்த இரண்டும் வசிக்கும் கண்ணுக்குப் புலனாகாத உடலே "ஆஸ்ட்ரல் பாடி' என்றும், இப்பூதவுடலைச் சுற்றி சக்தி வடிவில் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஒளி என்றும் இது பொதுவாக அறியப்படுகிறது. இவற்றை முன்னிறுத்தி, இந்த வார மடல்களைக் காண்போம்.
இலக்கியன் என்ற வாசகர், "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "உடுவெளி' அல்லது "விண்மீன்வெளி' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். சோலை கருப்பையா, அண்டமும், பிண்டமும் ஒன்றே என்பது சித்தர் வாக்கு என்பதாலும், நமது மெய்யியல் அண்டத்தையும், பிண்டத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்திருந்த காரணத்தால், அச்சொல்லுக்கு "அண்ட பிண்டவியல்' என்ற சொல்லையோ, அல்லது மெய்யியல் பற்றிய வெளிப்பாடாக இருக்கும் காரணத்தால், "மெய்ம்மை' என்ற சொல்லையோ பயன்படுத்தலாம் என்கிறார்.
பாபாராஜ், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியத்தில் "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "விசும்புருவான' என்ற சொல் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். தி.அன்பழகன், "ஆஸ்ட்ரல் வொர்ஷிப்' என்பது விண்மீன்களியலில் "உடு' என்னும் கூட்டத்தை வழிபடுதலைக் குறிப்பதால் "உடுவெளி' என்ற சொல் பொருத்தமாகும் என்கிறார். மேலும், சூரிய வழிபாடு போன்றவை வானியல் வழிபாடு ஆகும் காரணத்தால், "ஆஸ்ட்ரல்' என்பதற்கு வான் + இறை = வானிறை அல்லது வானாலயம் என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.
தமிழாகரர் தெ.முருகசாமி, "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி "ஆவியுரு' என்ற சொல்லை இணைச்சொல்லாகக் குறிப்பிட்டிருக்கிறது என்கிறார். இருப்பினும், உடல் என்பது சரீரமாகவும், உடலைத் தாங்கியவன் சரீரியாகவும், உருவத்திற்கப்பால் ஒலியாக அறியப்படுபவன் அசரீரியாகவும் குறிப்பிடப்படுவதால், "அசரீரி' என்ற சொல்லையும் பரிசீலிக்கலாம் என்கிறார்.
÷டி.வி.கிருஷ்ணசாமி, ஆஸ்ட்ரல் என்ற சொல்லிலிருந்து ஆஸ்ட்ராலஜி, ஆஸ்ட்ரானமி போன்ற சொற்கள் ஏற்பட்டிருக்கும் காரணத்தால் வானத்திற்கும், மனிதனுக்கும் இருக்கும் இயற்கையின் தொடர்பைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் "வான்விதி' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
வாசகர்கள் அனுப்பியிருக்கும் சொற்களில் உடு, ஆவியுரு போன்ற சொற்கள் கிட்டத்தட்ட பொருத்தமாக அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் "ஸ்டெல்லர்' என்ற பொருளையும் குறிக்கின்றன. "ஸ்டெல்லர்' என்ற சொல்லுக்கு "உடு' அல்லது "உடுவெளி' என்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால், மனிதவுடல், மனம் அல்லது ஆன்மா தொடர்பான செய்திகளில் அச்சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. "ஆவியுரு' என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது, அது கோள்களோடு தொடர்புள்ள பொருளைத் தராது. எனவே, "விசும்புருவான' அல்லது "விசும்புரு' என்ற சொல்லே பொதுவாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.
அடுத்த சொல் வேட்டை:
நாகரிகமான நடத்தையை, இடம், பொருள் மற்றும் பயன்படுத்தப்படும் நிகழ்வு சார்ந்து 'டெகோரம்' என்றும் 'எடிக்வேட்' என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம்.
இவ்விரண்டையும் அவற்றின் தன்மை மாறாமல் குறிப்பிடுவதற்குரிய சொற்கள் உண்டா?
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
’இயல்பறி’வோடு ’விசும்புரு’ அறிவு பெற்றிருந்த பண்டைத் தமிழர்களைச் சாமி அவர்கள் துலக்கியிருக்கிறார்கள்! பாராட்டுகள்!
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பதிமூன்று )
கலிபோர்னியாவிலிருந்து புலவர்-பொறிஞர் சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு "நன்னடத்தை', "சீரொழுக்கம்' என்று பொருள் கொண்டுள்ளதாகவும், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு ஒழுக்கமுறை, நடத்தை நெறி, ஒழுக்க நெறி என்று பொருள் கொண்டுள்ளதாகவும், ஒரு சொல் நீர்மைத்தாய், வினைத்தொகையாக வேண்டுமானால் ஒழுகாறு, ஒழுகுநெறி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.
முனைவர் சு.மாதவன், அகராதிகள் "நல்லொழுக்கம்' எனப் பொருள் குறித்தாலும், தமிழ்ச் சொல்லாக்கமாக "பண்பாட்டுத் தகவு நிலை' அல்லது "தகவு நிலைப் பண்பாடு' என்று கொள்ளலாம் என்கிறார். புலவர் உ.தேவதாசு, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகரமுதலி மரபமைதி, சீரொழுங்கு, நயநாகரிக அமைதி என்று பல பொருள்களைக் குறித்துள்ளதாகக் குறிப்பிட்டுவிட்டு, டெகோரம், எடிக்வெட் என்னும் சொற்களுக்கு "நனிநாகரிகம்', "நயன்மை' அல்லது "பற்றன்மை' என்னும் சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்கிறார்.
முனைவர் ஜி.ரமேஷ் "அவையறிதல்' அல்லது "அவைப் பண்பு' ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார். புதுச்சேரி இலக்கியன் டெகோரம், எடிக்வெட் ஆகிய சொற்களுக்குப் பொதுவாக மதிப்பு, மரியாதை, ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆசாரம், சடங்கு, தகுதி ஆகிய பல பொருள்கள் இருந்தாலும், இவற்றுக்கிடையே பல வேறுபாடுகள் உண்டு என்றும்; டெகோரம் - "புற ஒழுங்கு' அல்லது "புறநிலை ஒழுங்கு'; எடிக்வெட் - "அக ஒழுங்கு' அல்லது "அகநிலை ஒழுங்கு' என்னும் சொற்களையும் கொள்ளலாம் என்கிறார்.
ஆனந்த கிருஷ்ணன் டெகோரம், எடிக்வெட் ஆகியவை நவநாகரிகத் தன்மை பற்றியதாகும் என்று தொடங்கி, இச்சொற்களின் பொருள்களாகப் பல்வேறு சொற்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவையடக்கம் என்பது நன்னடத்தை, வெளிமதிப்பு, மெய்ப்பு, மதிப்பு, வரம்பு குறிப்பாக மரபொழுங்கு மீறாமல் செயல்படுதலாகும் என்றும், நிறைநலம், நிறை நடத்தை-பேச்சு, நன்மதிப்பும் நிறைநலமும் அடங்கிய நன்னடிக்கை முறை, நவநாகரிகத் தன்மை, ஒழுங்கு, ஆசாரம் ஆகியவை அவையறிதலில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும், மரியாதை, கண்ணோட்டம், சாதுர்யம், பண்பாடு ஆகியவை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கையுடன் ஒட்டி இருக்க வேண்டும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, நடை, உடை, பாவனை, உணவு, நல்லொழுக்கம் முதலியவைகளில் நேர்த்தியான தன்மை வெளிப்பட வேண்டும் என்றும், இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, "மரபொழுங்கு' என்ற சொல்லே இச்சொற்களுக்கு சரியான இணைச்சொற்களாகும் என்றும் எழுதியுள்ளார்.
ஷா.கமால் அப்துல் நாசர், "நாகரிகம்' என்ற சொல் "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லாகவும், "டெகோரம்' என்ற சொல்லுக்கு "மாண்பு' என்ற சொல் இசைவான தமிழ்ச் சொல்லாகவும் கருதப்படலாம் என்றும் கூறுகிறார். மேலும், சட்டமன்றத்தின் மற்றும் நீதிமன்றத்தின் பாரம்பரியங்களைப் பற்றிப் பேசும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் சொற்றொடர்கள், அவைத்தலைவர் மற்றும் நீதிமன்ற ஆணைகளில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணையாகக் கையாளப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை மட்டுமல்லாது, நன்னெறிக் கோவையில் வரும் நன்னெறி, "நன்றிக்கு வித்தாகும்' எனத் தொடங்கும் குறளில் வரும் "நல்லொழுக்கம்' ஆகிய சொற்களையும் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.
முனைவர் வே.குழந்தைசாமி, "டெகோரம்' மற்றும் "எடிக்வெட்' என்னும் சொற்கள் ஒருவர் மற்றவர்களுடன் பழகும் பாங்கு, நடந்து கொள்ளும் விதம் சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றன என்றும், இதனையே திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம் எனக் குறிப்பிடுகிறார் என்றும், எனவே, டெகோரம் - நயத்தகு பண்பு; எடிக்வெட் - நயத்தகு நடத்தை ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.
முனைவர் பா. ஜம்புலிங்கம் "டெகோரம்' - கண்ணியம் காத்தல்'; "எடிக்வெட்' - "கண்ணிய நெறி' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார்.
எடிக்வெட் என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து 1750-இல் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், பிரெஞ்சு மொழியில் அதன் பொதுவான பொருள் "அனுமதிச் சீட்டு' என்று காணப்பட்டாலும், ஆங்கிலத்தில் அதன் பொருள் நற்குடிப்பிறப்பின் காரணமாக வரும் "நடத்தை' அல்லது "நடைமுறை' என்பதாகும் என்றும், அதற்கு இன்னொரு பொருள் சமூக அல்லது தாம் கொண்ட அலுவல் தொடர்பான வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டிருக்கும் நடத்தை அல்லது நடைமுறை என்றும் மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.
அதே சமயம், "டெகோரம்' என்ற வினைச்சொல் "டெகோரஸ்' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து 1568-இல் பிறந்ததாகவும், அச்சொல்லுக்கு (1) இலக்கிய மற்றும் நாடகப்பாங்கிற்கு வரையறுக்கப்பட்ட முறைமை; (2) நடத்தையிலும், தோற்றத்திலும் நற்சுவையும், ஒழுங்குமுறையும் கொள்ளும் பாங்கு; (3) பணிவான நடத்தைக்கு ஏற்படுத்தப்பட்ட வரையறை என்று மூன்றுவிதமான பொருள்களை அதே மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.
ஆனால், அந்த வினைச்சொல் லத்தீன் மொழியில் பயன்படுத்தப்பட்ட முதுமொழித் தொடர் "துல் சி எட் டெகோரம் எஸ்ட் ப்ரோ பாட்ரியா மோரி' ஆகும். அத்தொடரின் பொருள் ஒருவரது நாட்டிற்காக உயிர் துறப்பது இனிமை மற்றும் அழகானது என்பதாகும்.
இவற்றை வைத்துப்பார்க்கும் போது, "டெகோரம்' என்ற சொல் நற்சுவை, நடத்தை, ஒழுங்குமுறை ஆகியவற்றைச் சுற்றி வருவதாகவும், "எடிக்வெட்' என்ற சொல் பொதுவிடங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், ஒரு மனிதனிடம் வெளிப்படும் தோற்றம், பொலிவு, பேச்சு, செயல்பாடு ஆகியவற்றைக் குறிக்க முற்படுவதாகவும் தெரிகிறது.
இந்த அடிப்படையில் அணுகும் போது, "டெகோரம்' - "கண்ணியம்'; "எடிக்வெட்' - "நனிநாகரிகம்' என்னும் சொற்கள்தான் பொருத்தமாகும். காரணம், வழக்கு மன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் "டெகோரம்' காக்கப் படவேண்டும் என்ற வரைமுறை "கண்ணியம்' என்ற பொருளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல், ""முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்'' என்று நற்றிணையில் குறிக்கப்படும் "நாகரிகம்' என்ற சொல்லும், "பெயக்கண்டும்' என்ற குறளில் வரும் "நாகரிகம்' என்ற சொல்லும், "கண்ணோட்டம்' என்பதன் அடிப்படையில் அமைவதாகப் பெரியவர்கள் கருதுவதால், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு "நனிநாகரிகம்' சாலப்பொருந்தும்.
வாசகர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இணைச்சொற்கள்:
டெகோரம் - கண்ணியம்; எடிக்வெட் - நனிநாகரிகம்.
அடுத்த சொல் வேட்டை: ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றை அதன் காரணமாக அடியொற்றிப்பின்தொடர்ந்து வரும் இன்னொன்றுக்கு ஆங்கிலத்தில் "கொரோலரி' என்று பெயர். இதற்கிணையான தமிழ்ச்சொல் என்ன?
கலிபோர்னியாவிலிருந்து புலவர்-பொறிஞர் சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு "நன்னடத்தை', "சீரொழுக்கம்' என்று பொருள் கொண்டுள்ளதாகவும், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு ஒழுக்கமுறை, நடத்தை நெறி, ஒழுக்க நெறி என்று பொருள் கொண்டுள்ளதாகவும், ஒரு சொல் நீர்மைத்தாய், வினைத்தொகையாக வேண்டுமானால் ஒழுகாறு, ஒழுகுநெறி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.
முனைவர் சு.மாதவன், அகராதிகள் "நல்லொழுக்கம்' எனப் பொருள் குறித்தாலும், தமிழ்ச் சொல்லாக்கமாக "பண்பாட்டுத் தகவு நிலை' அல்லது "தகவு நிலைப் பண்பாடு' என்று கொள்ளலாம் என்கிறார். புலவர் உ.தேவதாசு, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகரமுதலி மரபமைதி, சீரொழுங்கு, நயநாகரிக அமைதி என்று பல பொருள்களைக் குறித்துள்ளதாகக் குறிப்பிட்டுவிட்டு, டெகோரம், எடிக்வெட் என்னும் சொற்களுக்கு "நனிநாகரிகம்', "நயன்மை' அல்லது "பற்றன்மை' என்னும் சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்கிறார்.
முனைவர் ஜி.ரமேஷ் "அவையறிதல்' அல்லது "அவைப் பண்பு' ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார். புதுச்சேரி இலக்கியன் டெகோரம், எடிக்வெட் ஆகிய சொற்களுக்குப் பொதுவாக மதிப்பு, மரியாதை, ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆசாரம், சடங்கு, தகுதி ஆகிய பல பொருள்கள் இருந்தாலும், இவற்றுக்கிடையே பல வேறுபாடுகள் உண்டு என்றும்; டெகோரம் - "புற ஒழுங்கு' அல்லது "புறநிலை ஒழுங்கு'; எடிக்வெட் - "அக ஒழுங்கு' அல்லது "அகநிலை ஒழுங்கு' என்னும் சொற்களையும் கொள்ளலாம் என்கிறார்.
ஆனந்த கிருஷ்ணன் டெகோரம், எடிக்வெட் ஆகியவை நவநாகரிகத் தன்மை பற்றியதாகும் என்று தொடங்கி, இச்சொற்களின் பொருள்களாகப் பல்வேறு சொற்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவையடக்கம் என்பது நன்னடத்தை, வெளிமதிப்பு, மெய்ப்பு, மதிப்பு, வரம்பு குறிப்பாக மரபொழுங்கு மீறாமல் செயல்படுதலாகும் என்றும், நிறைநலம், நிறை நடத்தை-பேச்சு, நன்மதிப்பும் நிறைநலமும் அடங்கிய நன்னடிக்கை முறை, நவநாகரிகத் தன்மை, ஒழுங்கு, ஆசாரம் ஆகியவை அவையறிதலில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும், மரியாதை, கண்ணோட்டம், சாதுர்யம், பண்பாடு ஆகியவை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கையுடன் ஒட்டி இருக்க வேண்டும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, நடை, உடை, பாவனை, உணவு, நல்லொழுக்கம் முதலியவைகளில் நேர்த்தியான தன்மை வெளிப்பட வேண்டும் என்றும், இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, "மரபொழுங்கு' என்ற சொல்லே இச்சொற்களுக்கு சரியான இணைச்சொற்களாகும் என்றும் எழுதியுள்ளார்.
ஷா.கமால் அப்துல் நாசர், "நாகரிகம்' என்ற சொல் "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லாகவும், "டெகோரம்' என்ற சொல்லுக்கு "மாண்பு' என்ற சொல் இசைவான தமிழ்ச் சொல்லாகவும் கருதப்படலாம் என்றும் கூறுகிறார். மேலும், சட்டமன்றத்தின் மற்றும் நீதிமன்றத்தின் பாரம்பரியங்களைப் பற்றிப் பேசும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் சொற்றொடர்கள், அவைத்தலைவர் மற்றும் நீதிமன்ற ஆணைகளில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணையாகக் கையாளப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை மட்டுமல்லாது, நன்னெறிக் கோவையில் வரும் நன்னெறி, "நன்றிக்கு வித்தாகும்' எனத் தொடங்கும் குறளில் வரும் "நல்லொழுக்கம்' ஆகிய சொற்களையும் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.
முனைவர் வே.குழந்தைசாமி, "டெகோரம்' மற்றும் "எடிக்வெட்' என்னும் சொற்கள் ஒருவர் மற்றவர்களுடன் பழகும் பாங்கு, நடந்து கொள்ளும் விதம் சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றன என்றும், இதனையே திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம் எனக் குறிப்பிடுகிறார் என்றும், எனவே, டெகோரம் - நயத்தகு பண்பு; எடிக்வெட் - நயத்தகு நடத்தை ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.
முனைவர் பா. ஜம்புலிங்கம் "டெகோரம்' - கண்ணியம் காத்தல்'; "எடிக்வெட்' - "கண்ணிய நெறி' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார்.
எடிக்வெட் என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து 1750-இல் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், பிரெஞ்சு மொழியில் அதன் பொதுவான பொருள் "அனுமதிச் சீட்டு' என்று காணப்பட்டாலும், ஆங்கிலத்தில் அதன் பொருள் நற்குடிப்பிறப்பின் காரணமாக வரும் "நடத்தை' அல்லது "நடைமுறை' என்பதாகும் என்றும், அதற்கு இன்னொரு பொருள் சமூக அல்லது தாம் கொண்ட அலுவல் தொடர்பான வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டிருக்கும் நடத்தை அல்லது நடைமுறை என்றும் மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.
அதே சமயம், "டெகோரம்' என்ற வினைச்சொல் "டெகோரஸ்' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து 1568-இல் பிறந்ததாகவும், அச்சொல்லுக்கு (1) இலக்கிய மற்றும் நாடகப்பாங்கிற்கு வரையறுக்கப்பட்ட முறைமை; (2) நடத்தையிலும், தோற்றத்திலும் நற்சுவையும், ஒழுங்குமுறையும் கொள்ளும் பாங்கு; (3) பணிவான நடத்தைக்கு ஏற்படுத்தப்பட்ட வரையறை என்று மூன்றுவிதமான பொருள்களை அதே மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.
ஆனால், அந்த வினைச்சொல் லத்தீன் மொழியில் பயன்படுத்தப்பட்ட முதுமொழித் தொடர் "துல் சி எட் டெகோரம் எஸ்ட் ப்ரோ பாட்ரியா மோரி' ஆகும். அத்தொடரின் பொருள் ஒருவரது நாட்டிற்காக உயிர் துறப்பது இனிமை மற்றும் அழகானது என்பதாகும்.
இவற்றை வைத்துப்பார்க்கும் போது, "டெகோரம்' என்ற சொல் நற்சுவை, நடத்தை, ஒழுங்குமுறை ஆகியவற்றைச் சுற்றி வருவதாகவும், "எடிக்வெட்' என்ற சொல் பொதுவிடங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், ஒரு மனிதனிடம் வெளிப்படும் தோற்றம், பொலிவு, பேச்சு, செயல்பாடு ஆகியவற்றைக் குறிக்க முற்படுவதாகவும் தெரிகிறது.
இந்த அடிப்படையில் அணுகும் போது, "டெகோரம்' - "கண்ணியம்'; "எடிக்வெட்' - "நனிநாகரிகம்' என்னும் சொற்கள்தான் பொருத்தமாகும். காரணம், வழக்கு மன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் "டெகோரம்' காக்கப் படவேண்டும் என்ற வரைமுறை "கண்ணியம்' என்ற பொருளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல், ""முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்'' என்று நற்றிணையில் குறிக்கப்படும் "நாகரிகம்' என்ற சொல்லும், "பெயக்கண்டும்' என்ற குறளில் வரும் "நாகரிகம்' என்ற சொல்லும், "கண்ணோட்டம்' என்பதன் அடிப்படையில் அமைவதாகப் பெரியவர்கள் கருதுவதால், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு "நனிநாகரிகம்' சாலப்பொருந்தும்.
வாசகர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இணைச்சொற்கள்:
டெகோரம் - கண்ணியம்; எடிக்வெட் - நனிநாகரிகம்.
அடுத்த சொல் வேட்டை: ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றை அதன் காரணமாக அடியொற்றிப்பின்தொடர்ந்து வரும் இன்னொன்றுக்கு ஆங்கிலத்தில் "கொரோலரி' என்று பெயர். இதற்கிணையான தமிழ்ச்சொல் என்ன?
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பதினான்கு
தொன்மையான லத்தீன் மொழியில் "விளைவு' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "கொரோலேரியம்' என்ற சொல் பிற்கால லத்தீன் மொழியில் "மாலைக்குக் கொடுக்கப்பட்ட பணம்' அல்லது "அன்பளிப்பு' போன்ற பொருள்களைக் குறிக்கும் சொல்லாக மாறி, 14-ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிக்கு இறக்குமதி செய்யப்பட்டு, "கொரோலரி' (இர்ழ்ர்ப்ப்ஹழ்ஹ்) என்ற சொல்லானது.
ஆங்கிலத்தில் "கொரோலரி' என்ற சொல் கணிதம் அல்லது தர்க்கவியல் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் போது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக, அதை அடியொற்றி தாமாகவே நிரூபிக்கப்பட்டுவிடும் இன்னொரு கோட்பாடு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் "விளைவு' அல்லது "எளிதாக' அல்லது "இயல்பாகத் தீர்மானிக்கப்படும் முடிவு' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு, இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.
÷ஷா.கமால் அப்துல் நாசர், "பொதுவாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையை ஒட்டிவரும் அனுமானத்தை அல்லது விளைவை "கொரோலரி' என்று குறிப்பதாலும், சிலப்பதிகாரத்தில் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று சொல்லப்படுவதாலும், "உருத்துவிளைவு' அல்லது "தொடர் விளைவு' என்னும் சொற்களைப் பரிசீலிக்கலாம்' என்கிறார்.
÷ஆனந்தக்கிருஷ்ணன், "கொரோலரி என்ற சொல்லுக்கு தொடர் முடிவு, பின் தொடர்பு, துணை முடிவு, கிளைத்தேற்றம், பின் நிகழ்ச்சி, தொடர்ந்தேற்றி ஆகிய சொற்களையும், பழைய லத்தீன் மொழி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு முடிவு, முடிபு, இறுதி, வரிசை, செறிவு, பூங்கொத்து' ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கிறார்.
÷டி.வி.கிருஷ்ணசாமி, "கண்ணாடியில் காணப்படும் பிரதிபிம்பத்தைப் போன்றது கொரோலரி என்பதால், "நிஜப்பிரதி' அல்லது "இணைப்போலி' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்' என்கிறார்.
÷டி.சிவா, "ஒரு செயலையோ, சொல்லையோ, நடைமுறையையோ, நிகழ்வையோ அடியொற்றி அதேபோல இருப்பதுதான் "கொரோலரி' என்றழைக்கப்படுகிறது' என்றும், இதை "ஒத்திசைவுச் செயல்', சொல், நடைமுறை, நிகழ்வு எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அதனால் "ஒத்திசைவு' எனக் கூறலாம்' என்கிறார்.
÷ஏற்கெனவே குறிப்பிட்டது போல், "கொரோலரி' என்ற சொல் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக அல்லது அதன் பிரதிபிம்பமாக நிரூபணம் தேவையற்றதாகப் போய்விடும் இன்னொரு கோட்பாட்டை குறிப்பதால், நாம் உருவாக்கும் சொல் நிரூபணம், கோட்பாடு என்ற இவ்விரு பொருளையும் உள்ளடக்கியதாக இருந்தால் பொருத்தமாக இருக்கும். எனவே, "கொரோலரி' என்ற சொல்லுக்கு "வினைவிளைக் கோட்பாடு' என்பது பொருத்தமாக இருக்கும்.
தொன்மையான லத்தீன் மொழியில் "விளைவு' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "கொரோலேரியம்' என்ற சொல் பிற்கால லத்தீன் மொழியில் "மாலைக்குக் கொடுக்கப்பட்ட பணம்' அல்லது "அன்பளிப்பு' போன்ற பொருள்களைக் குறிக்கும் சொல்லாக மாறி, 14-ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிக்கு இறக்குமதி செய்யப்பட்டு, "கொரோலரி' (இர்ழ்ர்ப்ப்ஹழ்ஹ்) என்ற சொல்லானது.
ஆங்கிலத்தில் "கொரோலரி' என்ற சொல் கணிதம் அல்லது தர்க்கவியல் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் போது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக, அதை அடியொற்றி தாமாகவே நிரூபிக்கப்பட்டுவிடும் இன்னொரு கோட்பாடு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் "விளைவு' அல்லது "எளிதாக' அல்லது "இயல்பாகத் தீர்மானிக்கப்படும் முடிவு' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு, இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.
÷ஷா.கமால் அப்துல் நாசர், "பொதுவாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையை ஒட்டிவரும் அனுமானத்தை அல்லது விளைவை "கொரோலரி' என்று குறிப்பதாலும், சிலப்பதிகாரத்தில் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று சொல்லப்படுவதாலும், "உருத்துவிளைவு' அல்லது "தொடர் விளைவு' என்னும் சொற்களைப் பரிசீலிக்கலாம்' என்கிறார்.
÷ஆனந்தக்கிருஷ்ணன், "கொரோலரி என்ற சொல்லுக்கு தொடர் முடிவு, பின் தொடர்பு, துணை முடிவு, கிளைத்தேற்றம், பின் நிகழ்ச்சி, தொடர்ந்தேற்றி ஆகிய சொற்களையும், பழைய லத்தீன் மொழி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு முடிவு, முடிபு, இறுதி, வரிசை, செறிவு, பூங்கொத்து' ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கிறார்.
÷டி.வி.கிருஷ்ணசாமி, "கண்ணாடியில் காணப்படும் பிரதிபிம்பத்தைப் போன்றது கொரோலரி என்பதால், "நிஜப்பிரதி' அல்லது "இணைப்போலி' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்' என்கிறார்.
÷டி.சிவா, "ஒரு செயலையோ, சொல்லையோ, நடைமுறையையோ, நிகழ்வையோ அடியொற்றி அதேபோல இருப்பதுதான் "கொரோலரி' என்றழைக்கப்படுகிறது' என்றும், இதை "ஒத்திசைவுச் செயல்', சொல், நடைமுறை, நிகழ்வு எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அதனால் "ஒத்திசைவு' எனக் கூறலாம்' என்கிறார்.
÷ஏற்கெனவே குறிப்பிட்டது போல், "கொரோலரி' என்ற சொல் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக அல்லது அதன் பிரதிபிம்பமாக நிரூபணம் தேவையற்றதாகப் போய்விடும் இன்னொரு கோட்பாட்டை குறிப்பதால், நாம் உருவாக்கும் சொல் நிரூபணம், கோட்பாடு என்ற இவ்விரு பொருளையும் உள்ளடக்கியதாக இருந்தால் பொருத்தமாக இருக்கும். எனவே, "கொரோலரி' என்ற சொல்லுக்கு "வினைவிளைக் கோட்பாடு' என்பது பொருத்தமாக இருக்கும்.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பதினைந்து
"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு, ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற அகரமுதலிகள், இரண்டு விதமான பொருள்களைத் தருகின்றன. ஒன்று உடற்கூறைச் சார்ந்தது; இன்னொன்று மனப்பாங்கைச் சார்ந்தது. ஒரே சமயத்தில் தொடர்ந்து வெளிப்படும் குறிப்பிட்ட அறிகுறிகளின் தொகுப்பு அல்லது கருத்துகள், உணர்ச்சிகள், நடத்தை போன்றவை ஒரு குறிப்பிட்ட தொடர்போடு கூட்டாகத் தோன்றும் தொகுப்பு என்பதே இவ்விரு பொருள்களாகும்.
மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி கிட்டத்தட்ட 48 வகையான சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியுள்ளது. 1540-ஆம் ஆண்டுக்குப்பின், "அடையாளங்களின் ஒன்று சேர்ந்த வெளிப்பாடு' என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோம்' என்ற சொல்லில் இருந்தும், ஒன்றாகத் தோன்றும் என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோமோஸ்' என்ற சொல்லில் இருந்தும், ஆங்கிலச் சொல்லான "சின்ட்ரோம்' உருவாக்கப்பட்டது.
இந்திய மருத்துவ அகரமுதலி (மெட் இண்டியா) ஆங்கிலத்தில் ஏ முதல் இசட் வரை உள்ள 26 எழுத்துகளில் ஒவ்வொன்றையும் முதல் எழுத்துகளாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டு இன்று பெருமளவில் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 124 சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியிருக்கிறது. எய்ட்ஸ் நோய் என்பது "அக்வயர்ட் இம்யுனோ டெஃபிசியன்சி சின்ட்ரோம்' என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நம் அடி வயிற்றைக் கலக்கும் சில வித்தியாசமான சின்ட்ரோம்கள் பின் வருமாறு:
(1) 8 மில்லியன் குழந்தைகளில் ஒருவரைத் தாக்கும் "ப்ரோஜெரியா சின்ட்ரோம்' (progeria syndrome) மிக வேகமாக அக்குழந்தையை மூப்படையச் செய்து, 12-13 வயதிற்குள் அக்
குழந்தையை மரணமடையச் செய்துவிடும்.
(2) "வேர்வுல்ஃப் சின்ட்ரோம்' (Werewolf syndrome)உடல் முழுவதும் (உள்ளங்கை உள்பட) ஓநாயைப் போல் முடி வளரச் செய்யும் குறைபாடு.
(3) "லெஷ்-நைஹன் சின்ட்ரோம்' (Lesch-nyhan syndrom) என்பது ஒரு மனிதனைத் தனது உடலின் சில பாகங்களைத் தானே கடிக்க அல்லது சிதைக்கத் தூண்டும் மனநலக் குறைபாடு.
(4) "லாக்ட்-இன் சின்ட்ரோம்' (Locked-in syndrome) என்பது கண், செவி, மூக்கு போன்ற புலன் உணர்வுகள் அப்படியே இருக்கும்போதும், உடல் முழுவதும் மொத்தமாக செயல் இழந்து முடங்கிப் போகும் முடக்குவாதம் அல்லது பக்கவாதத்தைக் குறிப்பதாகும்.
(5) "லாசரஸ் சின்ட்ரோம்' (Lazarus syndrome) என்பது மருத்துவர்களால் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், திடீரென்று உயிர்த்தெழும் நிலையைக் குறிப்பதாகும். அமெரிக்காவில் டெலவர் நகரத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் பிணவறை ஊழியரால் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 61 வயதுப் பெண்மணியின் கதை இந்த வகை சின்ட்ரோமை அறிமுகப்படுத்தக் காரணமாக அமைந்தது.
இத்தகைய சுவையானத் தகவல்களோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம். "சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு நோய்க்குறியம் அல்லது நிலைமை காட்டி என்ற சொற்களை ஆனந்த கிருஷ்ணன் பரிந்துரைக்கிறார். தெ.முருகசாமி ஒத்தறிதல், ஒழுகுதல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுவதால் "ஒத்துணர்வு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.
வெவ்வேறு பொருள்களில் நிகழும் தொடர்புடைய செயல்களால் ஒரு பொதுமை எண்ணம் ஏற்படுவது சின்ட்ரோம் எனப்படுவதால் "ஒத்தமைவு' என்ற சொல் பொருந்தும் என்று புலவர் செ.சத்தியசீலன் எழுதியுள்ளார்.
சோலை.கருப்பையா, டவுன் சின்ட்ரோம் போன்ற பல சொற்களால் ஒரு வெளிக்காரியத்தின் உடன் விளைவாக ஏற்படும் நிகழ்வு குறிப்பிடப்படுவதால் உடன் விளைவு, உடன் குறைபாடு போன்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.
முனைவர் ஜி.ரமேஷ், தொடர்புடைய பல சம்பவங்களைக் குறிக்கும் போது இணைப் போக்கு, ஒத்திசைந்திருத்தல் என்று குறிப்பிடலாம் என்றும், இவையன்றி ஒன்றுபடுத்து முறை, ஒத்த சம்பவங்கள் ஆகிய சொற்களாலும் குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.
ஷா.கமால் அப்துல் நாசர், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மனதில் தோன்றும் சிந்தனை அப்படியே தொடர்ந்து நிலைத்து நிற்பது சின்ட்ரோம் ஆகும் என்றும், குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய பின் தாய்க்கு ஏற்படும் மனோ நிலை "எம்ப்டி நெஸ்ட் சின்ட்ரோம்' (empty nest syndrome) என்று அழைக்கப்படுவதால், மனப்போக்கு அல்லது சிந்தைப்போக்கு என்னும் சொற்களே பொருந்தும் என்கிறார். ஆனால், நாம் ஏற்கெனவே கண்டது போல், சின்ட்ரோம் என்பது, ஒருவரது உடற்கூறிலோ, அல்லது மனப்பாங்கிலோ ஏற்படும் நோய், மாறுபாடு, தனித்தன்மை அல்லது குறைபாடு ஆகியவற்றை, எளிதில் அடையாளம் காண உதவும் சில அறிகுறிகளின் கூட்டு வெளிப்பாடு அல்லது தோற்றம் ஆகும். எளிமையாகச் சொல்லப் போனால், சின்ட்ரோம் என்பதை "அடையாளங்களின் அணிவகுப்பு' என்று சொல்லலாம். ஆனால், அப்படிச் சொல்லுவது ஒரு குறைபாட்டோடு தொடர்புடையதாக இருந்தால்தான் அடையாளங்களின் அணிவகுப்பு என்பது சின்ட்ரோம் என்ற சொல்லுக்குப் பொருத்தமாக வரும்.
எனவே, "குறைபாட்டு அறிகுறிகள்' என்ற சொல் பொருத்தமாக அமையலாம்.
"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "குறைபாட்டு அறிகுறிகள்'.
"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு, ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற அகரமுதலிகள், இரண்டு விதமான பொருள்களைத் தருகின்றன. ஒன்று உடற்கூறைச் சார்ந்தது; இன்னொன்று மனப்பாங்கைச் சார்ந்தது. ஒரே சமயத்தில் தொடர்ந்து வெளிப்படும் குறிப்பிட்ட அறிகுறிகளின் தொகுப்பு அல்லது கருத்துகள், உணர்ச்சிகள், நடத்தை போன்றவை ஒரு குறிப்பிட்ட தொடர்போடு கூட்டாகத் தோன்றும் தொகுப்பு என்பதே இவ்விரு பொருள்களாகும்.
மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி கிட்டத்தட்ட 48 வகையான சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியுள்ளது. 1540-ஆம் ஆண்டுக்குப்பின், "அடையாளங்களின் ஒன்று சேர்ந்த வெளிப்பாடு' என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோம்' என்ற சொல்லில் இருந்தும், ஒன்றாகத் தோன்றும் என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோமோஸ்' என்ற சொல்லில் இருந்தும், ஆங்கிலச் சொல்லான "சின்ட்ரோம்' உருவாக்கப்பட்டது.
இந்திய மருத்துவ அகரமுதலி (மெட் இண்டியா) ஆங்கிலத்தில் ஏ முதல் இசட் வரை உள்ள 26 எழுத்துகளில் ஒவ்வொன்றையும் முதல் எழுத்துகளாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டு இன்று பெருமளவில் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 124 சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியிருக்கிறது. எய்ட்ஸ் நோய் என்பது "அக்வயர்ட் இம்யுனோ டெஃபிசியன்சி சின்ட்ரோம்' என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நம் அடி வயிற்றைக் கலக்கும் சில வித்தியாசமான சின்ட்ரோம்கள் பின் வருமாறு:
(1) 8 மில்லியன் குழந்தைகளில் ஒருவரைத் தாக்கும் "ப்ரோஜெரியா சின்ட்ரோம்' (progeria syndrome) மிக வேகமாக அக்குழந்தையை மூப்படையச் செய்து, 12-13 வயதிற்குள் அக்
குழந்தையை மரணமடையச் செய்துவிடும்.
(2) "வேர்வுல்ஃப் சின்ட்ரோம்' (Werewolf syndrome)உடல் முழுவதும் (உள்ளங்கை உள்பட) ஓநாயைப் போல் முடி வளரச் செய்யும் குறைபாடு.
(3) "லெஷ்-நைஹன் சின்ட்ரோம்' (Lesch-nyhan syndrom) என்பது ஒரு மனிதனைத் தனது உடலின் சில பாகங்களைத் தானே கடிக்க அல்லது சிதைக்கத் தூண்டும் மனநலக் குறைபாடு.
(4) "லாக்ட்-இன் சின்ட்ரோம்' (Locked-in syndrome) என்பது கண், செவி, மூக்கு போன்ற புலன் உணர்வுகள் அப்படியே இருக்கும்போதும், உடல் முழுவதும் மொத்தமாக செயல் இழந்து முடங்கிப் போகும் முடக்குவாதம் அல்லது பக்கவாதத்தைக் குறிப்பதாகும்.
(5) "லாசரஸ் சின்ட்ரோம்' (Lazarus syndrome) என்பது மருத்துவர்களால் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், திடீரென்று உயிர்த்தெழும் நிலையைக் குறிப்பதாகும். அமெரிக்காவில் டெலவர் நகரத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் பிணவறை ஊழியரால் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 61 வயதுப் பெண்மணியின் கதை இந்த வகை சின்ட்ரோமை அறிமுகப்படுத்தக் காரணமாக அமைந்தது.
இத்தகைய சுவையானத் தகவல்களோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம். "சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு நோய்க்குறியம் அல்லது நிலைமை காட்டி என்ற சொற்களை ஆனந்த கிருஷ்ணன் பரிந்துரைக்கிறார். தெ.முருகசாமி ஒத்தறிதல், ஒழுகுதல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுவதால் "ஒத்துணர்வு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.
வெவ்வேறு பொருள்களில் நிகழும் தொடர்புடைய செயல்களால் ஒரு பொதுமை எண்ணம் ஏற்படுவது சின்ட்ரோம் எனப்படுவதால் "ஒத்தமைவு' என்ற சொல் பொருந்தும் என்று புலவர் செ.சத்தியசீலன் எழுதியுள்ளார்.
சோலை.கருப்பையா, டவுன் சின்ட்ரோம் போன்ற பல சொற்களால் ஒரு வெளிக்காரியத்தின் உடன் விளைவாக ஏற்படும் நிகழ்வு குறிப்பிடப்படுவதால் உடன் விளைவு, உடன் குறைபாடு போன்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.
முனைவர் ஜி.ரமேஷ், தொடர்புடைய பல சம்பவங்களைக் குறிக்கும் போது இணைப் போக்கு, ஒத்திசைந்திருத்தல் என்று குறிப்பிடலாம் என்றும், இவையன்றி ஒன்றுபடுத்து முறை, ஒத்த சம்பவங்கள் ஆகிய சொற்களாலும் குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.
ஷா.கமால் அப்துல் நாசர், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மனதில் தோன்றும் சிந்தனை அப்படியே தொடர்ந்து நிலைத்து நிற்பது சின்ட்ரோம் ஆகும் என்றும், குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய பின் தாய்க்கு ஏற்படும் மனோ நிலை "எம்ப்டி நெஸ்ட் சின்ட்ரோம்' (empty nest syndrome) என்று அழைக்கப்படுவதால், மனப்போக்கு அல்லது சிந்தைப்போக்கு என்னும் சொற்களே பொருந்தும் என்கிறார். ஆனால், நாம் ஏற்கெனவே கண்டது போல், சின்ட்ரோம் என்பது, ஒருவரது உடற்கூறிலோ, அல்லது மனப்பாங்கிலோ ஏற்படும் நோய், மாறுபாடு, தனித்தன்மை அல்லது குறைபாடு ஆகியவற்றை, எளிதில் அடையாளம் காண உதவும் சில அறிகுறிகளின் கூட்டு வெளிப்பாடு அல்லது தோற்றம் ஆகும். எளிமையாகச் சொல்லப் போனால், சின்ட்ரோம் என்பதை "அடையாளங்களின் அணிவகுப்பு' என்று சொல்லலாம். ஆனால், அப்படிச் சொல்லுவது ஒரு குறைபாட்டோடு தொடர்புடையதாக இருந்தால்தான் அடையாளங்களின் அணிவகுப்பு என்பது சின்ட்ரோம் என்ற சொல்லுக்குப் பொருத்தமாக வரும்.
எனவே, "குறைபாட்டு அறிகுறிகள்' என்ற சொல் பொருத்தமாக அமையலாம்.
"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "குறைபாட்டு அறிகுறிகள்'.
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|