புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_m10தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி - என்னுடைய 11 ,000வது பதிவு இது :)


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 2:18 pm

First topic message reminder :

என்னுடைய 11 ,000 வது பதிவு இது புன்னகை


தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 220px-Diwali_fireworks

தீபாவளி , ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும்.தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி லேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.


ஐதீகமாகவும், தத்துவார்த்த ரீதியிலும் விளங்கும் தீபாவளியானது உலகின் பல பாகங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்றோம்.
இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். வேத காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவானது மனிதர்களிடையே அன்பையும் நட்புறவையும், ஞானத்தையும் வலியுறுத்துகிறது.

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Krishna-colage


பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் ‘சந்திர தரிசனம்’ என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும். ‘சந்திர தரிசனம்’ என்றால் என்ன? ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லிய தொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை ‘கங்கா ஸ்நானம்’ என்று கூறுகிறார்கள். கங்கா ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று ஆன்றோர் கூறுவார்கள். சூரியன் உதயமாவதற்கு முன்னர் பிறைச் சந்திரன் தோன்றும் வேளையில் பூமியில் உள்ள நீர்நிலைகளில் கங்காதேவி ஆவாஹனம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில் மஹாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். ஆகையால் அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வார்கள். தீபாவளியை ஒரு நாள் கொண்டாடுவோரும், நான்கு நாள், ஐந்து நாள் கொண்டாடுவோரும் உண்டு..இந்துக்கள் மட்டுமின்றி ஜைன, பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்களும் சேர்ந்து கொண்டாடுகிற ஒரு உன்னதமான பண்டிகை தீபாவளி.
தீபாவளியின் தோற்றம் குறித்த கதையாக நரகாசுரனைக் கிருஷ்ணனும், சத்தியபாமாவும் சேர்ந்து அழித்த கதைதான் எல்லோருக்கும் தெரிந்த ரகசியக் கதை.;.

பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன். நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு சாவு…மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கிட்டோம்ங்கிற தைரியத்துல அவனை விட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.
எப்படிப்பட்ட தொல்லைன்னா இராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! இருளை நேசிக்கும் இரக்கமில்லாதவன். வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான், கொடும்பாதகன் நரகாசுரன்.

நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார். பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும் போது நரகாசுரன் விட்ட அம்பு கிருஷ்ணருக்கு மயக்கமடையும் நிலைக்கு ஆளாயிட்டார். பூமா தேவி இதைப் பாத்தாங்க. அவங்க மனசு பொறுக்கல. மிகுந்த கோபத்தோட சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டாங்க. கொடியவன் நரகாசுரனை வெட்டி வீழ்த்தினாங்க, சத்தியபாமா.

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Krishna_Narakasura%5B1%5D


போன ஜன்மத்து தாயான சத்யபாமா கையால், பூமாதேவியின் அம்சமானசத்யபாமா கையால் , நரகாசுரன் அழிந்தான் . நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் விளக்கேத்தி சந்தோஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.

பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக் கிட்டாங்க. மக்கள் அரக்கன் ஒழிஞ்சான் அப்டீங்கிற நிம்மதியோட வீட்டு வீட்டுக்குவிளக்குகளா ஏத்தி தங்களோட சந்தோஷத்தை வெளிப்படுத்தினாங்க. வீட்டுல யாரும் விளக்கு ஏத்தக் கூடாதுன்னு நரகாசுரன் போட்ட தடை நீங்கிடிச்சு இல்லையா? அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து அழிந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக… தீபவிழா…என்று தீபாவளியாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.


தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Deepavali

தவறு செய்பவர் தன் மகனேயானாலும் அவன் மகன் என்று பாராமல் தண்டிக்க வேண்டும் என்பதுதான் இதில் பொதிந்திருக்கும் உண்மை.சத்தியபாமையென்ற பெண்ணின் உதவியின்றியே கிருஷ்ணரால் நரகாசுரனை வென்றிருக்க முடியும். பின் ஏன் அப்பெண்ணின் துணையை அவன் நாடினான்?

இதில் வாழ்க்கையின் ஒரு முக்கியத் தத்துவம் அடங்கியுள்ளது. இன்ப, துன்பம் நிறைந்த வாழ்க்கையில் மனைவியென்ற ஒரு துணையின்றி வெற்றி பெற இயலாது என்பதை உணர்த்துவதற்காகவே சத்தியபாமையென்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. கணவனும், மனைவியும் இணைந்து வாழ்வதே உண்மையான வாழ்க்கையாகும்.

தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இன்னும் பல கூறப்படுகின்றன.

இராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள் என்றும், திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலியை வதம் செய்த நாள் என்றும், சிலர் அதுதான் புதிய ஆண்டும் என்றும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.


குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை முதலிலிருந்தே சுத்தப்படுத்தி, வர்ணங்கள் பூசி, லட்சுமியை வரவேற்கத் தயார் செய்து கொள்கிறார்கள். மாவிலைகள் கட்டப்படுகின்றன, கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர, பூஜை செய்யப்படுகிறது, வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்றனர், அன்று கொடுக்கல் வாங்கல் இருப்பதில்லை, பல இனிப்புக்கள் இலட்சுமிக்குப் படைக்கிறார்கள் அவளை வரவேற்க இரவு முழுவதும் கதவை அடைக்காமல் திறந்தே வைக்கின்றனர், நேரம் போக்க சீட்டும் விளையாடுகின்றனர்.

மஹாராஷ்ட்ராவில் இதை "பலிபாத்யாமா என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது. தீபாவளியின் ஒரு வாரம் முன்பே "ரங்கோலி" என்ற வண்ணங்களால் ஆன கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது. இதிலே போட்டிகளும் வைத்துப் பரிசுகளும் தரப்படுகின்றன. தீபாவளிஅன்று கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அத்னுள் விளக்குகள் பொருத்துகின்ற்னர், அதைத் தன் வீட்டு வாசல், பால்கனியில் எரியவிடுகின்றனர். நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர். தீபாவளியின் போது பசுவும் கன்றும் சேர்ந்து பூஜிக்க்கின்றனர், இவர்களது தீபாவளி ஸ்பெஷல் கராஞ்சி லாடு, சங்கர்பாலே, சேவ் சிவ்டா, அமாவாசையன்று லட்சுமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. இவர்களும் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்ற்னர். பின் "பாவுபீஜ்" என்று சகோதர நலத்திற்காகப் பிரார்த்தனை செய்கின்ற்னர், சகோதரர்களும் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர். ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் கோவர்தன பூஜையும் நடக்கிறது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தது நம் அனைவருக்கும் தெரியும் ,இதைக் குறித்து "அன்னகுட்" என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள். கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள் பெங்காலிகள் காளி பூஜை செய்கிறார்கள். சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் "பாய் போலே" என்ற பெயரில் நடக்கிறது. ( நம் தமிழ் நாட்டில் பொங்கலுக்கு அடுத்த நாள் 'கனு' அன்று கூடப்பிறந்த சகோதரர்களுக்காக 'கன்னுப்பிடி' வைப்போமே அது போல அவர்கள் இப்ப கொண்டாடுகிறார்கள் புன்னகை )

தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Images?q=tbn:ANd9GcQIVEh2omqdGpAC_Pm7LI_REkm4PvRjPtY1_RAuct8XUQE-Z1JFH16fhlJO


சீக்கியர்களும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அர்சர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார். அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை "பந்தி சோர்ரா" என்று கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் "கால்ஸா" என்ற கூட்டமும் உருவானது அத்துடன் குரு கிரந்த சாஹேப் என்ற புத்தகமும் சிறிது மாற்றங்களுடன் சீக்கியர்களின் குருவானது. ஜைனர்களுக்கும் இது மிக முக்கியமான நாள். ஜைனமத ஸ்தாபகர் குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். இன்று தீபங்கள் ஏற்றி "உத்தராத்த்யாயன் சூத்ரா"வைப் படிக்கின்றனர். இதில் மகாவீரரின் ஐந்துபிரவசங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் அக்ஞான இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.

நன்மையின் வெற்றி. தீமையின் அழிவு என்பதைத்தான் கிருஷ்ண பகவான் நரகாசுரன் கதை கூறுகிறது. தீபாவளிக்கு முன்னரே வரும் நவராத்திரியின் போதும், பின்னர் வரும் கந்த சஷ்டியின் போதும் இந்தக் கருத்துத்தான் வலியுறுத்தப்படுகிறது. இந்த இரண்டு விழாக்களிலும் அரக்கர்கள் அழிக்கப்படுகின்றனர். நன்மை வெற்றி கொள்கிறது, தீமை அழிகிறது. இந்தக் கருத்து பண்டைய இந்துக்களை ஈர்த்திருக்க வேண்டும். ஆகவேதான் ஒன்றன் பின்னர் ஒன்றாக வரும் பண்டிகைகளில் அதை வலியுறுத்தியுள்ளனர் போலும். மேற்குறிப்பிட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் அதனை சமூக ரீதியாகப் பார்ததால் என்ன? மனிதன் மகிழ்ந்திருப்பது அவனின் இயல்பு. குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மற்ற இனத்தவருடனும், சமயத்தினருடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு நாள் தீபாவளி.


தீபாவளி - என்னுடைய  11 ,000வது பதிவு இது :) - Page 2 Lord-krishna-photos_7


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 7:29 pm

ரா.ரா3275 wrote:பதினோராயிரமாவது பதிவு...கொஞ்சம் நெய்-இனிப்புத் தூக்கலா இருக்கு...
வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா அவர்களே...

நன்றி சேகரன் புன்னகை நன்றி அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 7:34 pm

றினா wrote:இந்த தீபாவளி பட்டாசு போலே என்றென்றும் சுருசுப்பாய் திகழ்ந்து நல்ல பதிவுகள் பல தந்து எம் அன்பர்கள் அனைவருக்கும் அறிவுரை வழங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.

உங்களின் அன்புக்கு ரொம்ப நன்றி றினா நன்றி அன்பு மலர்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 08, 2012 7:45 pm

பாரத தேசம் முழுதும் அலசி அலசி ,தீப ஒளி திருநாள் பதிவு ஒரே ஜொலிப்பு தான் .

மைல்கல் பதிவு

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 08, 2012 7:48 pm

T.N.Balasubramanian wrote:பாரத தேசம் முழுதும் அலசி அலசி ,தீப ஒளி திருநாள் பதிவு ஒரே ஜொலிப்பு தான் .

மைல்கல் பதிவு

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை :வணக்கம்: அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 08, 2012 9:36 pm

krishnaamma wrote:
ராஜா wrote:அருமையான 11000 ஆவது பதிவு அக்கா , வாழ்த்துக்கள்
தீபாவளியை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லியுள்ளீர்கள்

பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் ‘சந்திர தரிசனம்’ என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும். ‘சந்திர தரிசனம்’ என்றால் என்ன? ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லிய தொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்க வேண்டும்.
இது ஒரு அறிய தகவல் , இப்போது தான் நான் கேள்விபடுகிறேன்.

இது நாள் வரை , அம்மாவாசை கழிந்து மூன்றாம் நாள் தான் பிறை தெரியுமென்று கேள்விபட்டுள்ளேன். பார்த்தும் உள்ளேன்.
இப்போ தான் முதல் முறையாக தீபாவளி அன்று காலையிலும் பிறை சந்திரன் தெரியுமென்று தெரிந்துகொண்டேன். இது தீபாவளியன்று மட்டு ம்தான் தெரியுமா அல்லது ஒவ்வொரு அமாவாசை அன்றும் காலையில் தெரியுமா ?!

எனக்கும் இது புதிய தகவல் தான் ராஜா புன்னகை நானும் அமாவாசை கழித்து மூன்றாம்நாள் தான் பிறை பார்த்திருக்கேன். வேண்டுமானால் எங்க வாத்யாரை கேட்டு சொல்கிறேன் புன்னகை

வானியல் முறைப்படி எப்போதும் நிகழ்வதுதான்.இயற்கை.

ஆனால் சந்திர தர்ஷனம் புதிய செய்தி.முதல் முறையாக கேள்விபடுகிறேன்.நன்றி.

ரமணியன்




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 09, 2012 12:27 pm

11000 ஆவது மிக சிறப்பான பதிவு அக்கா , வாழ்த்துக்கள்! அறியாத சில விஷயங்களை தெரிந்து கொண்டோம்..! மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 09, 2012 4:46 pm

வாழ்த்துக்கள் அம்மா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 09, 2012 5:33 pm

வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா ....நல்லதொரு பதிவு சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக